Reviews with a sting

 
 
Random Article

 
328
Posted September 5, 2010 at 6:57 PM. by Rajesh Da Scorp in Copies, Tamil cinema
 
 

கமல்ஹாசன்: நிகழ மறுத்த அற்புதமா ?

Kamal Haasan1
Kamal Haasan1

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். யார் மேலும் அவதூறோ அல்லது இன்னபிறவோ சொல்லும் நோக்கம் இந்தப் பதிவுக்குக் கிடையாது. இப்பதிவு எழுதப்படும் நோக்கமே, எந்தப் படைப்புக்கும், அதற்குரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்ற ஒரே விஷயம் தான்.

தமிழ்த்திரையுலகின் ரசிகராகத் தனது கணக்கைத் துவங்கும் ஒவ்வொரு நபரும் சில படங்களின் ஊடாகவே அறிந்து கொள்ள முடிகிற ஒரு அவதானிப்பு என்னவெனில், கமல்ஹாஸனின் படங்களைத் தவிர்க்கவே முடியாது என்பதைத்தான். பொதுவாக, தமிழ்த் திரைப்படங்களைக் கவனிக்கும் யாராகினும், தமிழ்ப்படங்களில், கமலின் படங்கள் மிகவும் வித்யாசமானவை என்றும், தமிழ்ப் படங்களை, கமல்ஹாஸனின் படங்கள் அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்கின்றன என்றும் ஒரு முடிவுக்கு வருவதை வெகு எளிதாகக் காண முடியும். கமல்ஹாஸனுமே, தனது படங்கள் அப்படிப்பட்ட நோக்கில் எடுக்கப்படுபவைதான் என்று பல பேட்டிகளில் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடுவதையும் பார்க்கிறோம்.

ரசிகர்களாகிய நாமுமே, கமல்ஹாஸனின் படங்களை ஒரு கலை நோக்குடனே பாவித்து வந்திருக்கிறோம். கமல் படங்கள் என்றால், அவை முற்றிலும் வணிக நோக்குடன் எடுக்கப்படாமல், ஓரளவுக்கேனும் மாற்று சினிமாவை நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்றன என்னும் ஒரு தகவல், தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் சினிமா ரசிகர்களிடையே பரப்பப்பட்டு வரும் விஷயமாகிவிட்டது. மீடியாவுமே இப்படித்தான் கமலின் படங்களை முன்னிலைப்படுத்தி வருகிறது.

ஆனால்….. (இது ஒரு பெரிய ‘ஆனால்’)…

இவை அத்தனைக்கும் கமல் தகுதியுடையவரா?

சுற்றி வளைக்காமல், நேரடியாகவே விஷயத்துக்கு வருகிறேன். கமல்ஹாஸனின் முக்கியப் படங்கள் என்று அழைக்கப்பட்டுவரும் படங்கள் எல்லாமே, ஆங்கில மற்றும் உலகப் படங்களின் ஈயடிச்சாங்காப்பி என்பது எனது வாதம்.

இருங்கள். . . கமல் ரசிகர்கள் பொங்கியெழுமுன், ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். எனது நோக்கம், கமலைப் பழிப்பதோ அல்லது அவர் மீது அவதூறு சுமத்துவதோ இல்லை. அதற்கு எனக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. அவசியமும் இல்லை. ஆனால், சிலகாலமாகவே, தமிழ்த் திரையுலகில் காப்பி அடிப்பதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோதுதான், அதை முதன்முதலில் பெருவாரியாக ஆரம்பித்து வைத்த நபரைப் பற்றி எழுதினால்தான் பொருத்தம் என்பதால், இக்கட்டுரையை எழுதத் தீர்மானித்தேன். இதுதான் மூல காரணம்.

இன்னொரு காரணம் – சில வாரங்கள் முன், ராவணன் வெளிவந்த சமயம், மணிரத்னத்தைத் தமிழ் வலையுலகம் போட்டுத் தாளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அப்போது முன்வைக்கப்பட்ட ஒரு வாதம் – மணிரத்னம் உலகப் படங்களைச் சுடுகிறார் என்பது. அது உண்மைதான். ஆனால், கமல் அளவு காப்பியடித்தது யாரும் இல்லை என்பதே உண்மை. ஆகவேதான் இக்கட்டுரை.

நான் அவசரப்பட்டு இதைக் கூறவில்லை. இதோ கட்டுரையின் முக்கிய பாகத்தில் அந்த ஆதாரங்களைப் பார்க்கலாம்.

ராஜபார்வை – கமலின் முக்கியப் படமாகக் கருதப்படுகிறது. அவரது நூறாவது படமும் கூட. கமர்ஷியல் படங்களிலிருந்து விலகி, தரமான படங்களைக் கமல் கொடுக்க ஆரம்பித்ததற்கு இது ஒரு தொடக்கமாகக் கருதப்படுகிறது. படத்தின் கதை, ஒரு குருட்டு வயலினிஸ்ட் பற்றியது. அவனுக்கு அறிமுகமாகும் ஒரு துடிப்பான பெண், அவனது வாழ்க்கையில் கொண்டுவரும் மகிழ்ச்சி.. இப்படிச் செல்கிறது கதை. மிகப்பலரால் பாராட்டப்பெற்ற ஒரு படம் இது.

சரி. இப்பொழுது, Butterflies are Free (1972) என்ற படத்தைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். டான் பேக்கர் என்பவன், சான்ஃப்ரான்ஸிஸ்கோவில் வாழும், பிறவியிலேயே பார்வையிழந்த நபர். அவனது வீட்டு ஓனரின் மகள், அவனது வாழ்க்கையில் புத்துணர்ச்சி ஊட்டி, அதன்பின் அவனைப் பிரிந்து சென்றுவிடுகிறாள். அதன்பின், அவனுக்கு அறிமுகமாகும் மற்றொரு பெண், அவன் குருடன் என்றே அறிந்துகொள்ளாமல், அவனுடன் பழகுகிறாள். தனது சிகரெட்டின் சாம்பலை மேஜை மீது அவன் உதிர்க்கும் ஒரு தருணத்தில் தான் அவன் குருடன் என்று அறிந்துகொள்கிறாள். அதன்பின் இவர்களது வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களே இப்படம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த டான் பேக்கர், ஒரு இசைக்கலைஞனாக ஆக முயற்சிப்பதுதான்.

இரண்டு படங்களையும் சற்றே ஒப்பிட்டுப் பார்த்தால் கூட, ஆங்கிலப்படத்திலிருந்து சுடப்பட்டதுதான் ராஜபார்வை என்று புரிந்துகொள்ள முடியும். இதில் வேறு, ராஜபார்வையின் ‘கதை’ என்று கமலின் பெயர் இருக்கும்.

அதேபோல், ‘The Graduate’ (1967) படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதன் கிளைமேக்ஸை, ராஜபார்வையின் கிளைமேக்ஸுடன் சற்றே ஒப்பிட்டால்கூட, மிக எளிதாக, ராஜபார்வையின் க்ளைமேக்ஸ் காப்பியடிக்கப்பட்டதைப் புரிந்து கொள்ளலாம்.

இதில் ஆரம்பித்த கமலின் காப்பி சரித்திரம், எப்படித் தொடர்கிறது என்று பார்க்கலாம்.

எனக்குள் ஒருவன் – கமல்ஹாஸனின் குரு என்று அவராலேயே குறிப்பிடப்பெறுபவர் , கே. பாலசந்தர். இவருக்கு, ’இயக்குநர் சிகரம்’ என்று ஒரு பட்டம் இருப்பது தெரிந்ததே. ஆனால், இந்த பாலசந்தர், இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரான ரித்விக் கட்டக்கின் ‘மேகே தக்க தாரா’ படத்தை மொத்தமாக அட்டைக்காப்பி அடித்து, ‘அவள் ஒரு தொடர்கதை’ என்ற படத்தை எடுத்து, படத்தின் அத்தனை புகழையும் தனக்கே உரியதாகக் காட்டிக்கொண்டது பல நண்பர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். இதைப்பற்றிய எனது பழைய பதிவைப் படித்துப் பாருங்கள்.

பாலசந்தர் தயாரிக்க, கமல் நடித்த படமே ‘எனக்குள் ஒருவன்’. படத்தின் கதை: சென்னையில் வாழ்ந்துவரும் ஒரு டிஸ்கோ நடனக்கலைஞனுக்கு, திடீரென பூர்வஜென்ம நினைவு வந்துவிடுகிறது. அதனையடுத்து, பூர்வஜென்மத்தில் தான் வாழ்ந்த இடத்துக்குச் சென்று, தனது பூர்வஜென்ம வாழ்க்கையில் சம்மந்தப்பட்டிருப்பவர்களிடம் பேசி, தனது மரணத்துக்குக் காரணமானவர்களை வெளிப்படுத்துவதே இதன் கதை.

இப்போது, ’The Reincarnation of Peter Proud (1975)’ என்ற ஆங்கிலப்படம். இதிலும், ஹீரோவுக்கு போனஜென்ம நினைவுகள் பொங்கி வருவதால், அந்த நிகழ்வுகள் நடந்த இடத்துக்கு அவன் செல்கிறான். அங்கு அவன் சந்திக்கும் ஒரு பெண்ணின் போன ஜென்மக் கணவன் தான் இந்தப் பீட்டர் ப்ரௌட் என்பது தெரிகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதே படம்.

இதுதான் எனக்குள் ஒருவனின் கதை என்பது மேலே கொடுத்துள்ள சுருக்கத்தைப் படித்தாலேயே தெரியும்.

இந்திரன் சந்திரன் – கமல் நடித்த நகைச்சுவைப் படம். மேயராக ஆள்மாறாட்டம் செய்யும் ஒரு சாதாரண ஆளின் கதை.

’Moon Over Parador (1988)’ என்ற ஆங்கிலப்படத்தின் கதையைக் கவனியுங்கள். ஒரு ஊரில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஜாக், அந்த ஊரின் ஜனாதிபதி திடீரென்று இறந்துவிடுவதால், அந்த ஜனாதிபதியின் முக்கிய அடியாளால் அழைக்கப்பட்டு, ஜனாதிபதி போல் வேடம் போட்டு, அதன்பின் மக்களாலேயே நம்பப்பட்டு, இறந்த ஜனாதிபதியின் மனைவியே இவனை நம்பும் அளவு போய், அதன்பின் இந்த சிக்கலிலிருந்து அவன் எப்படி வெளியே வருகிறான் என்பதே படம்.

இந்திரன் சந்திரன், இந்த மூன் ஓவர் பேரடார் படத்தின் காப்பியா இல்லையா?

அதிலும், இந்த இரு படங்கள் வெளிவந்த ஆண்டுகளைக் கவனியுங்கள். சுடச்சுட காப்பியடிக்கப்பட்டது தெரியவரும்.

வெற்றிவிழா – இந்த விஷயம், நமது நண்பர்கள் பலபேருக்குத் தெரிந்திருக்கும்.. ‘Bourne Identity’ நாவலே தமிழில் வெற்றிவிழாவாக மாறியது.

குணா – இன்றும், கமலின் ரசிகர்களால் மறக்கவியலாத படம் இது. அவ்வளவு அருமையான படம். ஒரு மனநலன் குன்றிய நபர், தனக்கு இன்னொருவரால் கற்பிக்கப்பட்ட ‘அபிராமி’ என்ற கற்பனைப் பெயரின்மீது பைத்தியமாகி, பின் ஒரு பெண்ணை, அபிராமி என்றே நினைத்து, கடத்தி, பின் இருவரும் இறந்துபோவது,குணாவின் கதை.

உலக சினிமா ரசிகர்களுக்கு, பெத்ரோ அல்மதோவார் (Pedro Almodóvar) பற்றித் தெரிந்திருக்கும். மறக்கவியலாத பல அருமையான படங்களை இயக்கியவர். தற்கால உலக சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்.

இவர், 1990ல் இயக்கிய ஒரு ஸ்பானிஷ் படமே, ‘Tie me up tie me down !’. இதன் கதை, வேறொன்றுமில்லை. ’மரீனா’ என்ற ஒரு நடிகை மீது பைத்தியமாக இருக்கும் ரிக்கி என்ற மனநலம் குன்றிய இளைஞன், அவளைக் கடத்தி, சிறை வைத்து, அவளைத் திருமணம் செய்வதற்காகவே இவ்வாறு கடத்தியதாகச் சொல்ல, முதலில் அவனை வெறுத்து, அவனிடமிருந்து தப்பித்து, அதன்பின் அவனால் கவரப்பட்டு, காதலில் விழுந்து, பின் இருவரும் இணைவதே கதை.

குணா – Tie me up tie me down ! படத்தின் அப்பட்டமான காப்பி என்பது இப்போது புரிகிறதா?

மகளிர் மட்டும் – இது, கமல்ஹாஸன் தயாரித்த படம். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கம். ஜொள்ளு மேலதிகாரியால் பாதிக்கப்படும் மூன்று பெண்களைப் பற்றிய கதை.

சரி. அருமையான படம்தான். இப்போது, ‘Nine to Five (1980)’ என்ற படத்தின் கதையைப் பார்ப்போம். தங்களது ஜொள்ளு மேலதிகாரியால் பாதிக்கப்படும் மூன்று பெண்களின் கதை தான் இது. அடடே ! மேலே மகளிர் மட்டும் படத்தின் கதைச் சுருக்கத்தையே வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை ஒத்துப்போகிறதே !! (ஆச்சரியக்குறி).

நம்மவர் – இன்றும், கமலின் ரசிகர்கள், அவரை அழைக்கும் பெயர்களில் ஒன்றாகவே மாறிப்போன படம் இது. ரவுடிகள் படிக்கும் ஒரு கல்லூரிக்கு வாத்தியாராக வரும் ஒரு ஆள், அந்த மாணவர்களை மாற்றியமைப்பதே கதை.

To Sir with Love (1967)’ படத்தைப் பார்ப்போம். இது, மிகப் பிரபலமான ஹாலிவுட் கறுப்பின நடிகர் சிட்னி பாய்ட்டியர் (பல இன்னல்களைக் கடந்து வந்து சூப்பர் ஸ்டார் ஆனவர்) நடித்தது. சில ரவுடி மாணவர்கள் படிக்கும் ஒரு கல்லூரிக்கு வரும் ஒரு வாத்தியாரின் மீது கோபம் கொள்ளும் மாணவர்கள், எதிர்வினை புரிவதும், இதனால் பாதிக்கப்படும் வாத்தியார், தனது பிரத்யேக வழிமுறைகளினால் அவர்களை வழிக்குக் கொணர்வதே கதை. வாத்தியார், மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்கும் படலம் கூட இதில் உண்டு. (கேன்சர் மட்டும் கமலின் கைவண்ணம்).

சதி லீலாவதி – நகைச்சுவை நடிப்பில் கமல் முத்திரை பதித்த படம். கதை என்ன? மனைவி குண்டாக, கவர்ச்சியற்று இருப்பதால், இன்னொரு பெண்ணுடன் பழகும் ஒருவனை, அவனது நண்பன் திருத்துவதே கதை.

She – Devil (1989)’ என்ற படம், இதே கதையோடு வந்திருக்கிறது. கதை? ரூத் என்பவள், ஒரு மிகக்குண்டான பெண். தனது கணவன் பாப்பை அன்புடன் கவனித்துக் கொள்பவள். ஆனால், பாப்புக்கு மனைவி குண்டாக இருப்பது பிடிக்கவில்லை. எனவே, தான் சந்திக்கும் ஒரு எழுத்தாளினியோடு காதல் வசப்பட்டு, அவளுடனே போய்விடுகிறான். மனது நொறுங்கும் அந்த மனைவி, திட்டம் போட்டு பாப்பைத் திருத்துவதே கதை. ஆனால் இதில், நண்பன் கதாபாத்திரம் இல்லை. மூலப்படத்தில் மனைவி செய்த விஷயங்களை, தனக்காக ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, கமல் நடித்தார்.

அவ்வை சண்முகி – இப்படம், Mrs. doubtfire படத்தின் தழுவல் என்பதுதான் பலரின் எண்ணம். ஆனால், இது ‘Tootsie (1982)’ படத்தின் அட்டைக்காப்பி என்பது, ஒரு சிலருக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைக்கிறேன். முடிந்தால் டூட்ஸியின் கதையை, மேலே க்ளிக்கிப் படிக்கவும். படத்தைப் பார்த்தால், இன்னும் உத்தமம்.

பஞ்ச தந்திரம் – ஐந்து நண்பர்கள். இடையே ஒரு விலைமாது. குழப்பங்கள்.

இப்போது, ’Very bad things (1988)’ என்ற படம். ஃபிஷர், தனது நான்கு நண்பர்களுடன், திருமணத்துக்கு முந்தைய பேச்சிலர் பார்ட்டியை, லாஸ் வேகாஸில் கொண்டாடுகிறான். அப்போது, போதையில், அங்கு நடனமாடும் பெண்ணைக் கொன்றுவிடுகிறான். இதனை மறைத்து, ஹோட்டல் ரூமில் ஒளித்து வைக்கப்படும் பிணத்தை, அவனது நண்பன் பாய்ட் டிஸ்போஸ் செய்து, அதன்பின் நடக்கும் குழப்பங்களையும் சமாளிக்கிறான். இந்த நண்பர்களில் சிலருக்கு ஏற்படும் நடுக்கத்தால், மெல்ல மெல்ல விஷயம் வெளியே கசிகிறது. ஆனால், ஃபிஷர், ஹோட்டலில் ஒரு விலைமாதுவுடன் ஏற்பட்ட கசமுசாவாக ஒரு பொய்யை ஜோடித்து, அதன்மூலம் கதையைத் திசைதிருப்புகிறான். பின் நடக்கும் குழப்பங்களே கதை.

இது காப்பியா இல்லையா?

தெனாலி – இது, ‘What about Bob’ படத்தின் காப்பி. பாப் என்பவன், பல ஃபோபியாக்களைத் தனக்குள் வைத்திருக்கும் ஒரு பயந்தாங்குள்ளி. லியோ என்ற மருத்துவரிடம் வருகிறான். ஆனால், அப்போது, அவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுவிடுகிறார். பாப்பை லியோவிடம் அனுப்பியது, லியோவின் போட்டி மருத்துவர் ஃபென்ஸ்டர்வால்ட்.

சுற்றுலா சென்ற இடத்துக்கு, பாப், தனது மருத்துவரைத் தேடி வர, கடுப்பாகும் லியோ, பாப்பை ஒரு பஸ்ஸில் ஏற்றி அனுப்ப முயல்கிறார். போகும் பாப், மறுபடி மறுநாள் அங்கேயே வந்துவிடுகிறான். லியோவின் குடும்பத்துக்கு பாப்பை மிகவும் பிடித்துவிடுகிறது. ஆனால், லியோ பாப்பை வெறுக்கிறார். லியோ கொடுக்கும் தொலைக்காட்சிப் பேட்டியில் கூட, பாப் குறுக்கே வந்துவிடுவதால், பாப்பே பேசிப் பிரபலமாகிவிட, லியோவின் கடுப்பு எகிறுகிறது. அவனை இழுத்துக்கொண்டு ஒரு பைத்தியக்கார விடுதிக்குச் செல்லும் லியோ, அங்கேயே அவனை விட்டுவிட்டு வந்துவிடுகிறார். ஆனால், மறுநாள் அங்கிருந்து அவனை அழைக்கும் நிர்வாகிகள், பாப் சொல்லிய நகைச்சுவைக் கதைகளால் கவரப்பட்டு, அவனுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று சொல்லி, விடுவித்துவிடுகின்றனர். கடுப்பாகும் லியோ, பாப்பை குண்டுக்கட்டாகக் கடத்தி, காட்டில் விட்டுவிட்டு வர, அதிலிருந்தும் மீண்டுவிடுகிறான் பாப். கடைசியில், லியோவின் ஈகோ, பாப்பினால் எப்படித் திருத்தப்படுகிறது என்பதே கதை. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை, தெனாலி இந்த ஆங்கிலப்படத்தின் அப்பட்டமான ஈயடிச்சான் காப்பி.

அன்பே சிவம் – இதுவும், பல பேருக்குத் தெரிந்திருக்கும். ‘Planes, Trains and Automobiles’ என்ற ஆங்கிலப்படத்தின் புத்திசாலித்தனமான காப்பி. புத்திசாலித்தனம் என்று ஏன் சொன்னேன் எனில், மேல் பார்வைக்கு, இது அப்படித் தெரியாது. ஆனால், ஊன்றிக் கவனித்தால், காப்பியடித்தது தெரியும்.

ஹே ராம் – கமலின் மிகச்சிறந்த படமாக இன்றும் சொல்லப்படும் படம் இது (ஆனால், இப்படத்திலும், வழக்கப்படி தனது இந்துத்துவ ஈடுபாட்டையும், முஸ்லிம் வெறுப்பையும் கமல் வெளிப்படுத்தியிருப்பார் என்பது வேறு விஷயம்).

‘Barabbas (1961)’ என்று ஒரு படம். இது, ஒரு பைபிள் கதை. ஏசுவைச் சிறைபிடிக்கும் அரசு, ஏசு அல்லது பரப்பாஸ் என்ற கைதி – இருவரில் ஒருவரைத்தான் விடுவிக்க முடியும் என்று சொல்ல, மக்கள் தேர்ந்தெடுப்பது பாரப்பாஸை. விளைவாக, ஏசு சிலுவையில் அறையப்படுகிறார். ஏசுவுக்குப் பதிலாகத் தான் ஏன் விடுவிக்கப்பட்டோம் என்ற கேள்வி, பாரப்பாஸை, படம் முழுக்க அலைக்கழிக்கிறது.

இதில், பாரப்பாஸ் ஒரு குருட்டுப் பிச்சைக்காரியை எதிர்கொள்ளும் காட்சி, ஹேராமில் அப்பட்டமாகக் காப்பியடிக்கப்பட்டதைக் காணலாம். மட்டுமில்லாமல், சற்றே யோசித்துப்பார்த்தால், காந்திக்குப் பதில் ஏசு, பாரப்பாஸுக்குப் பதில் ராம் என்ற ஒற்றுமையைப் புரிந்துகொள்ளலாம்.

மற்றபடி, நாயகன், தேவர் மகன் (காட்ஃபாதர்), விருமாண்டி (திரைக்கதை உத்தி – ரஷோமோன் & படத்தின் தீம் – Life of David gale) போன்ற படங்களைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

இந்த காப்பியடித்த பட்டியலைப் பார்த்தால், கமல் ஒரிஜினலாக நடித்த படங்கள் மிகக்குறைவே என்பது தெரிகிறது. அவரது ஒரிஜினல் கதைகளுக்கு, தசாவதாரம் போன்ற குப்பைகளை உதாரணமாகக் கொள்ளலாமோ என்று தோன்றுகிறது.

இப்பொழுதும் சொல்கிறேன். கமல் எண்பதுகளில் ரஜினியுடன் போட்டிபோட்டு மசாலாப்படங்களில் நடித்தபோது, நான் அவருக்கு ரசிகன் தான். ஆனால், அவர் காப்பியடிக்க ஆரம்பித்து, அதைப்பற்றி நான் தெரிந்துகொண்டவுடன், அவர் மேல் ஒருவித அசூயை ஏற்பட்டுவிட்டது. இந்த அசூயை ஏனெனில், plagiarism என்பது மன்னிக்க முடியாத குற்றம். தன்னை ஒரு அறிவுஜீவியாக, பெரியாரின் வழித்தோன்றலாகக் காண்பித்துக் கொள்ளும் ஒரு மனிதர், இப்படி சரமாரியாகப் பிற படங்களைச் சுட்டுப் படங்கள் எடுத்து, அதனை இவரே சொந்தமாகச் செய்ததுபோல் ஜம்பம் அடித்து (இதில் ஆஸ்கர் ஆஸ்கர் என்ற கூக்குரல் வேறு) விளம்பரப்படுத்துவதைக் கண்டிப்பாக என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது.

இன்னொரு விஷயம்: பொதுவாக, S.A ராஜ்குமார், தேவா போன்றோர், பிற படங்களின் பாடல்களைக் காப்பியடித்தால், நாம் அவர்களுக்கு அளிக்கும் பட்டம் என்ன? ’ஜெராக்ஸ்’ என்பது. ஆனால், மணிரத்னம், கமல்ஹாஸன் போன்றோர் அதையே செய்தால், அதனை Inspiration என்று பூசி மெழுகும் வேலையையும் நாம் தான் செய்கிறோம். இல்லையா?

கட்டுரை நீண்டுவிட்டதால், இத்துடன் முடிக்கிறேன். மீண்டும், நேரம் கிடைத்தால், தொடருவோம்.

பி.கு 1– என்னதான் காப்பியடிப்பதைப் பற்றி நான் எழுதினாலும், நான் ரஜினி ரசிகன்; ஆகவே கமலைத் திட்டுகிறேன்.. கமல் நடிப்புக் கடவுள்.. இத்யாதி ரீதியிலான பின்னூட்டங்கள் வரத்தான் போகின்றன என்பது தெரியும். இருந்தாலும், கமல் தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் இந்தக் காப்பியடிக்கும் வேலையைச் சொல்லாமல் இருப்பது சரியாக இருக்காது என்பதனாலேயே இதனை எழுதினேன்

பி.கு 2 – இக்கட்டுரைக்குப் பெரிதும் உதவிய தளம் – Sen’s Spot. இந்தத் தளத்தில், விடியோ காட்சிகளுடன் ஆதாரங்கள் உள்ளன. நான் கமல் அல்ல என்பதால், ஒரிஜினல் பதிவை இங்கே வெளியிடுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை

பி.கு 3 – நமது சாரு, இந்தியா டுடேவில் சென்ற வருடம் கமலைப் பற்றி எழுதிய கட்டுரையின் தலைப்பு ‘நிகழ மறுத்த அற்புதம்’. அதுதான் இக்கட்டுரையின் தலைப்பும் கூட

Facebook comments

comments


328 Comments


  1.  

    யோவ்… இந்த ஆங்கில மற்றும் உலகப்படங்கள் எல்லாமே, கமல் படமெடுத்தப்புறம், அதைப் பார்த்துக் காப்பியடிச்சதுதான்… இதுகூடத் தெரியாம பதிவு எழுத வந்துட்டே… அடிங் !




  2.  

    நெகட்டிவ் குத்துகள் தொடங்கட்டும் !! யாரங்கே ;-)




  3.  

    me the firstuuuuuuuu…for நெகட்டிவ் குத்துகள் தொடங்க ;-)




  4.  

    கருந்தேள்,
    நீங்கள் விட்டு விட்ட ஒன்றை என்னுடைய பெர்சனல் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் சவுத் இந்தியாவின் நம்பர் சேனலின் பொறுப்பான பதவியில் இருந்தபோது (அதுக்காக இப்போ பொறுப்பில்லாத பதிவியில் இருக்கியா என்று கேட்கக் கூடாது – இப்போ வேற சேனல்) மும்பை எக்ஸ்பிரெஸ் படம் வர இருந்தது. அப்போதுதான் எங்கள் சேனல் சார்ந்த ரேடியோவில் அவரது நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகி இருந்தது.

    சேனல் நண்பர்கள் அவரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்கள். நிகழ்ச்சி ஆரம்பிக்க சில நிமிட இடைவெளி இருந்ததால் நாங்கள் பேச ஆரம்பித்தோம். அப்போது அவர் படத்தின் புரோமொஷனை பற்றி பேசினார். நான் சொன்னேன் ” இந்த படத்த்தின் Tag Lines அப்படியே Johnny English என்ற படத்தின் Tag Lines மாதிரியே இல்லை?” என்று. (He Knows No Fear, He Knows No Danger, In Fact, He Knows Nothing)என்பதுதான் அந்த படத்தின் Tag Line.

    அவ்வளவுதான். மனிதர் அதனை சமாளிக்க கடும் சிரமம் எடுத்த்துக்கொண்டார், பிறகு நடந்த விஷயங்கள் அவ்வளவு சுவாரச்யப்படாது.




  5.  

    பிரிச்சு பேன் பாத்துடீங்க போங்க….
    இவர பத்தி நெறைய கேள்வி பட்ருக்கேன் ஆனா ஆதாரத்தோட படிக்கும் போது காரி துப்பலாம் போல இருக்கு scorpy…..

    அதுக்கு சூப்பர் ஸ்டார் பேச்சை கேட்டீங்களா “நான் ஒரு கொழந்தை இந்த வயசுலயும் என்ன ஆட வச்சு தமிழ் நாட்டு மக்கள் ரசிக்கிறாங்க”…. Open statement…. கர்வம்னா கிலோ என்ன விலைன்னு கேப்பாரு….




  6.  

    நான் கேள்விப்பட்டிருக்கேன். இப்போ ஆதாரத்தோடு தெரிஞ்சுகிட்டேன்.




  7.  

    அக்கு வேறு ஆணி வேறா எங்க ‘தலைவர’ பிரிச்சு மேஞ்சிட்டிங்களே தல… நடு நடுவில் ‘மணி’யையும் அடிச்சு துவம்சம் பண்ணிடீங்க… நீங்க சொல்ற எல்லாம் சரிதான், கமல் ஒரு காப்பி ஜாம்பவான்னு நீங்க சொல்றது தெளிவா புத்திக்கு தெரிந்தலும், மனசு கேட்க மறுக்குது. கமல் தான் தமிழ் சினிமானு சின்ன வயசிலருந்தே ஃபார்ம் பண்ணிட்டோம். தமிழன் குணம், மாத்துறது கஷ்டம். என்னைப் பொறுத்த வரையில் கமல் செய்தால் அது இன்ஸ்பிரேஷன் மட்டும் தான்… மன்னிச்சிக்கோங்க… நாம கண்டிப்பா மீட் பண்ணனும் தல…




  8.  

    கமல் தயாரிப்பில் வெளிவந்த மாதவன் நடித்த ‘நள தமயந்தி’, Green Card (1990) படத்தோட அப்பட்ட காப்பி. நீங்க சொல்ல மறந்துட்டீங்க… :)




  9.  

    நீங்க சொன்ன படம் எதயும் நான் பார்த்தது இல்லை… படம்னா நிங்க கமல் இதுலேந்து காப்பி அடிச்சாருன்னு சொல்ற அந்த இது எதயும் நான் பார்த்ததில்ல.. அதுக்காக அவர் காப்பி அடிச்சது எதயும் நான் நியாயப்படுத்தல.. ஒரு லே மேனா எனக்கு அவரோட நடிப்பு நிச்சயமா புடிக்கும்.. அவரோட படத்த ரசிக்கிறேன்.. மே பீ நிங்க சொன்ன ஒரிஜினல் எல்லாத்தயும் நான் பார்த்தாலும் அதயும் ரசிப்பேன்.. Thanks for the Info தேளு…




  10.  

    இவ்ளோ நடந்துருக்கா.. ஆனாலும் ‘தேவர் மகன்’ ஒரு நல்ல அடாப்ஷன் -னு சொல்லலாம்.. எனக்கு ரொம்ப பிடிச்ச படம்..

    ஒரு விஷயம் என்னன்னா.. இவர் அதை பார்த்து இன்ஸ்பயர் ஆனதெல்லாம் சரி தான்.. ஆனா க்ரெடிட்ஸ் கொடுத்திருக்கணும்..

    ஆனா பல தமிழ் இயக்குனர்கள் இப்படி தான் இருக்கிறார்கள்… ‘மெமண்டோ’ பலருக்கும் புரியவில்லை. நாங்கள் கஜினியை சிறப்பாக எடுத்ததாக திரு.முருகதாஸ் சொன்னதாக நினைவு!!!!




  11.  

    மனசுக்குள்ளேயே நினைத்து நினைத்து புளுங்கி கொண்டிருந்தது கருந்தேள்,
    நமக்கு மட்டும் ஏன் ஒரு நல்ல படைப்பாளி கிடைக்கவில்லை இதுவரை என்று,
    கண்டிப்பா கமல் ஒரு நிகழ மறுக்கும் அற்புதம்,
    குருதி புனல் வந்த காலத்துல இருந்தே முகமுடிக்கு பின்னே இருக்கும் கமலினை கண்டு கொள்ளமுடியும்,
    அந்த போராளி குழுவினை பற்றிய எந்த விதமான தகவல்களும் தராமல் அவர்களை சமூகத்திற்கு எதிரானவர்களாகவே படம் முழுக்க காட்டிருப்பார்,
    வெள்ளை நிற குர்தா அணித்திருகும் பணக்கார சிறுவனை தெருவோரம் கால்சட்டை கிழிந்த சிறுவர்கள் வன்முறைக்கு அழைப்பதை போன்று மிக அபத்தமாக முடித்திருப்பார்,
    இந்த படத்தினை பார்த்துவிட்டு சில பேர் கமல் எண்ணாமா படம் எடுத்திருக்கார் பாருடா அப்படிபாங்க,
    என்னாடா அப்படி அவர் எடுத்த்துடார்ன்னு கேட்டா அதுக்கு “பாட்டுனா இல்லாமா முத்த காட்சினா தைரியமா வச்சி ஆங்கில படம் மாதிரி எடுதுருக்கார் பாரு” அப்படின்னு சொல்லுரப்ப அப்படியே ஒரு அப்பு அப்பிரலாமானு தோணும்,
    அப்ப பார்த்து கடைசியா ஒண்ணு சொல்லுவான்ங்க அங்கதான்டா கமல் நிற்கிறார்ன்னு,
    எங்கடான்னு கேட்டா கடைசியா அந்த அனாதை பசங்க அந்த நல்ல வெள்ளை சட்டை போட்ட பையனையும் வன்முறைக்கு அழைக்குறாங்கன்னு முடிச்சாறு பாரு அங்கதான்டா கமல் நிற்குறார்ன்னு சொல்லுவாண்ங்க,
    அப்படியே வரும் பாருங்க கோவம் இந்த மாதிரி படம் எடுப்பதுக்கு பதிலா கதாநாயகி தொப்புள்ல பம்பரம் விடுறமாதிரி படம் எடுத்துட்டு போயிரலாம் இவர்னு தோணும்,
    அயல்நாட்டு படங்கள் என்றாலே அந்த மாதிரியான காட்சிகள்தான் என்று நினைக்கும் சாதாரண ரசிகனுக்கு கமல் தந்து கொண்டிருக்கும் மாற்று சினிமா முத்த காட்சிகள் கொண்ட இந்த மாதிரியான படங்கள்தான்.

    தாத்தாவா ஆகியும் ரோபோவா மாறி ஐஸ்வர்யா ராய் கூட டூயட் ஆடி மக்களை மகிழ்விக்கும் ரஜினி கண்டிப்பா ஆயிரத்தில் ஒருவர்தான்.

    இன்னும் நிறைய கும்மனும் போலதான் இருக்கு கருந்தேள் கும்முனா உங்க பதிவ விட இந்த கமென்ட் பெருசா ஆகிடும்.

    பின் குறிப்பு: ஹி ஹி ஹி நானும் ஒரு கமல் ரசிகன்தான்……..:)




  12.  

    கருந்தேள் நம்ம தல ஆயிரம் கமெண்ட்கள் வாங்கிய அபூர்வ ஹாலி பாலி ஆளையே காணாம்,நானும் ஒரு வலைபூ தொடங்கி முன்பு போல் பதிவுகள் போடாத நம்ம தலைய பத்தி எழுதலாமானு இருக்கேன்,
    தலைப்பு “எழுத மறுக்கும் அற்புதம்”




  13.  

    கருந்தேள்!! மகாநதி விட்டு போச்சு. நான் என் அப்பாவுடன் சிறு வயதில் மிகவும் ரசித்த படம். லைட்டா ‘லாக்கப்’ல இருந்து உருவிட்டாங்கன்னு கேள்விபட்ட போது செம கடுப்பாக இருந்தது.

    ‘ராஜ பார்வை’ பார்த்து சிலாகித்து விட்டு, சரியா இரண்டு நாட்களுக்கு பிறகு ‘The Graduate’ பார்த்த போது அடுத்த கடுப்பு.

    ‘அவ்வை சண்முகி’யில் ‘Cramer Vs Cramer’ படத்தின் சாயலும் இருக்கும்.

    நான் மணிரத்னத்தை பற்றி எழுதிய பதிவை ஃபேஸ்புக்கில் இட்ட போது, என் நெருங்கிய நண்பர் ஒருவர் இதை காப்பி என எடுத்து கொள்ளக் கூடாது என வாதிட்டார். அவர் அதற்கு கூறிய நியாயமான உதாரணம், ‘Yojimbo’வை தழுவி எடுக்கப்பட்ட ‘Fistful of Dollars’. செர்ஜியோ லியோனி அதற்கு ஒரு க்ரெடிட்டும் தரவில்லை. அதே போல் ‘Seven Samurai’யை தழுவி எடுக்கப்பட்ட ‘The Magnificient Seven’லும், அகிரா குரசேவாவிற்கு எந்த க்ரெடிட்டும் தரவில்லை.

    அகிரா குரசேவாவின் படங்களை ‘Take it for granted’ என்று எடுத்து கொண்டிருந்த ஹாலிவுட், முதல் முறை அவருக்கு க்ரெடிட் கொடுத்தது ‘Last Man Standing’ படத்தில் தான்.

    கமல் தழுவி எடுத்த இதையெல்லாம் ஒரு வகை ட்ரிப்யூட்டாக எடுத்துக் கொள்ளலாம் என நினைத்தாலும், ட்ரிப்யூட் கொடுத்தா அதுக்கு க்ரெடிட் போடனுமே? ஒரு வேளை கமலின் ஈகோ தடுக்கிறதோ? ஏற்கனவே சசி தன்னுடைய ‘பூ’ படத்தில் ‘The Road Home’ இயக்குநர் ஷாங் ஈமூவிற்கு நன்றி தெரிவித்து இருந்தார். அதே போல் மற்ற இயக்குநர்களும், தாங்கள் தழுவி எடுத்த படங்களுக்கு க்ரெடிட் போடுவார்கள் என நம்புவோமாக…




  14.  

    நானும் மொதல்லையே சொல்லிடிறேன்.. நான் கமல் ரசிகனா என்னைக்குமே இருந்ததில்லை..
    அவர் நிறைய காப்பி அடிச்சிருக்கார் என்பதையும் ஒத்துக்கறேன்..

    நான் குணா பார்த்ததில்லை. ஆனால் Tie me up tie me down பார்த்திருக்கேன். அதனால குணா பார்த்துட்டு அது காப்பியா இல்லையான்னு சொல்றேன்..

    ஆனால் அன்பே சிவத்துக்கும், Planes Trains and Automobiles படத்துக்கும் என்ன சம்பந்தம்?? இரண்டு மாற்று கருத்து கொண்டவர்கள், ஒரு வலுகட்டாய பயணத்தை வேறுவழியின்றி இணைந்து மேற்கொள்கிறார்கள் என்பதை தவிர?




  15.  
    VSP

    ஆதாரபூர்வமான பதிவு. ஆனா தேளு, எத்தனையோ ஆங்கில படம் பார்த்தும் ஒரு வசனமும் புரிஞ்சிக்க முடியாத என்ன மாதிரி ஆளுங்களுக்காக தான் கமல் சார் தமிழ்ல எடுக்கறார்னு நினைக்கிறேன். இல்லனா அன்பே சிவம், கட்டிபுடி வைத்தியம், அபிராமி அபிராமி, எல்லாம் நம்மள பாதிசிருக்குமா. அடிப்படை திரைக்கதையை அவர் பார்த்த ஆங்கில படத்தில இருந்து எடுத்து நம்ம லோக்கல் சரக்கை சேர்த்து வச்சி வியாபாரம் பண்றாரு.
    மணிரத்னம் ‘ராவணன்’ வந்த உடனே வெங்கட் பிரபு ‘மங்காத்தா’ (மகாபாரதம் – அர்ஜுனனா அஜீத்.) பண்றதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான். பாக்கலாம் அந்த பாஞ்சாலி யாருன்னு.




  16.  

    We are taught in School for English Essays
    “I am suffering from fever” .plagiarism is taught and trained in schools so we always end up in copying from others in Project reports to Novel ( Kavya Ramakrishnan ) .. so just relax and see the movies . Let original movie makers takes care of Copywrite isses …




  17.  

    தல …. காபி அடிப்பது என்பது எம்ஜியார் சிவாஜி காலத்திலையே ஆரம்பிச்சுருச்சு …. உதரணத்துக்கு

    உத்தமபுத்திரன் – THE MAN IN THE IRON MASK ( உண்மையான சம்பவத்தை கொண்டு எழுதப்பட்ட நாவல்)

    அன்பே வா – COME SEPTEMBER

    அப்பரும் ரத்த கண்ணீர், ஞான ஒளி …..(இன்னும் நிறைய சொல்லிட்டே போகலாம் …. )

    முக்கியமா ROMAN HOLIDAY …. இதை எத்தனை படத்துல மாத்தி மாத்தி காபி அடிச்சு இருக்காங்க தெரியுமா தல …..

    - – - –

    TO SIR ,WITH LOVE ….. அதொரு நாவல்… அதை பத்தி சொல்லுவீங்கன்னு நினைச்சேன்….

    = = = =

    தமிழ் சினிமாவுல எல்லோரும் காபி தான் அடிக்குறாங்க…என்ன ஒன்னு சிலர் ஒரு படத்தை காபி அடிக்குறாங்க…

    பலர் ஒரு படத்துக்கு பல படத்துல இருந்து சீன்களை காபி அடிக்குறாங்க …..

    இப்ப மாட்டு வண்டி RACE ன்ன , ரொம்ப கஷ்ட படாம BENHUR ல இருந்து CHARIOT RACE யை காபி அடிச்சுருவாங்க (ரொம்ப பிரபலமான சீன் அது ……. வண்டி சக்கரத்துல கத்தி வைச்சு இருக்கிறதை கூட விடாம … மத்தி வைக்காம அப்படியே காபி அடிப்பாங்க)

    = = =

    சினிமான்னு மட்டுமில்லை ….. இப்ப வர நாவல் புஸ்தகங்களில் கூட CUT COPY PASTE வேலை தான் ஜாஸ்தியா நடக்குது

    முக்கியமா அந்த நாவல் ல …(ஐயோ வேண்டாம் வேண்டாம் ..இதோட நிறுத்திக்கிறேன் ..அப்பரும் இலக்கியவாதிகளோட தொல்லை தாங்கமுடியாது …. SO ME THE ESCAPE )




  18.  

    கருந்தேள் நிச்சயமா இதுக்கு ஒரு பதில் பதிவு எனது பார்வையில் போடுவேன்… ஆனால் இப்போது நேரம் இல்லை…கமல் காப்பி ஆடித்து இந்த படத்தை எடுத்தார் என்று மறுக்க யாராலும் முடியாது என்பதே உண்மை… மத்தபடி ரொம்ப நல்ல எழுதி இருக்கிங்க.. செம புள்ளி விபரம்….




  19.  

    வித விதமா காப்பி அடிக்குறத பாத்தா ஒரு காப்பி டே வச்சுரலாம் போல.




  20.  

    தமிழனையும் சினிமாவையும் பிரிக்க முடியாதுங்க,தமிழ் நாட்டின் பெருன்பான்மை’முதல்வர்கள்’சினிமாவிலிருந்து வந்தவர்கள் என்ற வெட்ககெடான விசயத்தை நாம் அனைவரும் ஒத்து கொள்ளவெண்டும்.

    இலவச T.V க்கும், அரசியல் கட்சிகள் கொடுக்கும் பிரியாணி, குவார்ட்டர் ,மற்ற இலவசங்களுக்கும் அலையும் மக்கள
    இருக்கும் வரை cut,copy,paste,inspiration எல்லாம் தொடரும்.




  21.  

    “Shanthi Nilayam” is in the base of “SOUND OF MUSIC”




  22.  

    கமல் உலக நாயகன் உலக சினிமா போல எடுக்க முடிந்த ஒரே நாயகன் ,ரீமேக் பண்ணுங்க என்று ச்லச்ச்மேட்ஸ் ரீமேக் நினைத்தாலே இனிக்கும் விழா கமல் சொன்னது ,கம்ப ராமாயணம் கூட ரீமேக் தான் என்றார்.ரஜினி அடிச்சா அமிதாப் கோப்பி படங்கள் யாரும் பார்த்த தில்லையா,பாஷா அமிதாபின் ஹம்,மாவீரன் மர்த்,டான் பில்லா ,எல்லா அமிதாப் ஹிட் பிளம்ஸ் ரஜினி செய்து உள்ளார் ,உலக சினிமாவை கமல் செய்வது போல எப்போது செய்வார் ரஜினி ,இந்திரன் கூட கோப்பி ரோபோகாப் போன்ற பல படங்கள் காபி தான்




  23.  

    கமல் நிகழ்ந்த அற்புதம் தான்




  24.  

    எனக்கு கமலின் அறிவுஜீவி பிம்பம் மட்டும்தான் உறுத்துகிறது….. மற்றபடி அவரின் கலைத்தாகம் ஆச்சர்யம்தான்… அவர் காப்பி அடித்தாரென்றே வைத்து கொண்டாலும் அது பற்றியே தெரியாத என் போன்ற பல ரசிகர்களுக்கு அது அற்புதம்தான்….

    என்ன அவரு சொல்லிவிட்டே செஞ்சிருக்கலாம்….. இது ஒண்ணும் பெரிய தப்பு இல்ல மக்கா




  25.  

    கருந்தேள், நல்ல அலசல். கமல் காப்பி அடித்திருக்கும் படங்களில் பட்டியலில் இன்னும் பல படங்கள் விடுபட்டிருக்கலாம்.

    கமலை எதற்காகப் போற்றுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வோம்.

    கமல் அரைத்த மாவையே அரைக்க மறுப்பதால்..

    கமல் படங்கள் காப்பியாக இருந்தாலும் சாமான்யனுக்குப் புது அனுபவத்தைத் தருவதால்.

    விருமாண்டியைக் கூட காப்பி என்று படித்திருக்கிறேன். ஆனால், விருமாண்டியில் இருந்த கிராமத்து வாசனையை யாராலும் மறுக்க முடியாது.

    இங்கே நமக்கு என்ன பிரச்சனை?

    கமல் உலகத்தரத்தில் படங்களில் எடுப்பதாகச் சொல்வதா?

    சொந்த சரக்கு இல்லாததாலேயே.. பேசாமல் அவர் தொப்புளில் ஆம்லேட் போடப் போகலாம் என்று கூறுவதெல்லாம் நகைப்பிற்குரியது. காப்பியாக இருந்தாலும் நல்ல அனுபவத்தைத் தந்தால் போதுமானது தானே.

    மற்ற நடிகர்கள் (?) எல்லாம் அவர்களது மசாலாக்களையே அரைக்கும் வேளையில் இது தேவலாம் தானே..

    சில வருடங்கள் முன்பு வரை கமல் படங்கள் தான் என்னைப் பொறுத்தவரையில் உலகப்படங்கள்.. (ஆனால் இப்பொழுது அல்ல..)

    கருந்தேள், உங்களைப் போல உலகப்பட ஞானம் உள்ளவர்கள் எத்தனைப் பேர்.. எத்தனைப் பேரிற்கு உலகப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது?




  26.  

    I wrote a blog post on October 2, 2006: http://greycellfiles.blogspot.com/2006/10/so-much-for-co-incidences.html

    All the movies you mentioned above has been detailed and explained in this post. This is such a co-incidence that you mentioned most of the same movies I have mentioned. I also did a research and came up with the trailers of the movies, Kamal has copied from: http://greycellfiles.blogspot.com/2008/07/panchathantiram-expose-very-bad-things.html. this I posted on July 22, 2008. I am very pleased that someone shares the same views as I do….




  27.  

    Man, I just read your Deva comment….kamal has copied alright, but it loks like you have copied my blogpost too…this is the irony of the century, I wrote this blog way back in 2006 and you have reproduced it in your own words…nobody can tamper the date on blogspot…my blog stands as testimony….a blog about copying or pagiarism has been plagarised itself….wow….




  28.  

    இந்த பதிவு ஒரு ஈயடிச்சான் காப்பி பதிவு. ஏற்கனவே பல பதிவர்கள் இது போன்று , படங்களும் அது எதிலிருந்து காப்பி அடிக்க பட்டது என்றும், கமலை பற்றியும் அவர் படங்களை பற்றியும் ஏகப்பட்ட பதிவு போட்டு விட்டார்கள். சொந்த கருவில் பதிவே போட முடியாத நமக்கு , அடுத்தவன் அடிக்குற காப்பிய பத்தி கவலை எதற்கு ?




  29.  

    நானும் கமலை நடிகனாக ரசிச்சவன் ..ரசிக்கிறவன் …ரசிக்கபோகிறவன் …. ஆனால் உங்கள் கட்டுரையின் நேர்மையும் நேர்த்தியும் அருமை … வாய்ப்பு கிடைத்தால் இந்த எல்லா படங்களை பற்றியும் தனித்தனியாக இன்னும் விரிவாக எழுதி வையுங்கள் .. ” எப்படி அழகாக அற்புதமாக நேர்த்தியாக , எல்லோரும் பாராட்டும்படி உலக படங்களை காப்பி அடிக்கலாம் என Film Institute மாணவர்களுக்கு பாட புத்தகமாக வைக்கலாம் “

    வாழ்த்துக்கள் நண்பா




  30.  

    @ விஸ்வா – உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி.. ;-)

    @ சரவனகுமரன் – இப்போதைக்கு அவ்வளவுதான் பாஸ் ;-)

    @ ஆனந்த் பாபு – ஹ்ம்ம்ம்… கமல் மேல எனக்கு எந்த grudgeஉம் இல்ல.. ஆனா காப்பியடிப்பதைப் பற்றி எழுதாமல் இருக்க முடியலை .. அதான் இது ;-)

    @ எஸ்.கே – ரைட்டு பாஸ் ;-)

    @ பேபி ஆனந்தன் – எனக்கு உங்க மனசு புரியுது.. கவலைய விடுங்க.. ஃப்ரீயா உடுங்க மாமு… மீட் பண்ணலாம் சீக்கிரமே ;-)

    @ இராமசாமி கண்னன் – ரைட்டு தல.. ;-) இந்த டீலிங் எனக்குப் புடிச்சிருக்கு ;-)

    @ கனகு – கரெக்ட். இன்ஸ்பைர் ஆகட்டும்.. தப்பே இல்ல.. ஆனா க்ரெடிட் குடுக்கணுமா வேணாமா? கட்டாயம் குடுத்தே ஆகணும் ..

    @ Keanu – உங்க பின்னூட்டத்துக்கு பதில் போடணும்னா, ஒரு பதிவே எழுதணூம்.. இருங்க.. மத்த பின்னூட்டத்துக்குப் போட்டுட்டு உங்க கிட்ட வரேன் ;-)

    @ பிரசன்னா ராஜன் – உங்க நண்பர் சொன்ன லாஜிக் என்னால ஒத்துக்க முடில.. க்ரெடிட் குடுக்கலன்றதுக்காக, அது காப்பி இல்லைன்னு ஆகிவிடாது இல்லையா? மத்தபடி, உங்க பின்னூட்டத்தை முழுமையாக வழிமொழிகிறேன் ;-)

    @ சரவணகுமார் MSK – //ஆனால் அன்பே சிவத்துக்கும், Planes Trains and Automobiles படத்துக்கும் என்ன சம்பந்தம்?? இரண்டு மாற்று கருத்து கொண்டவர்கள், ஒரு வலுகட்டாய பயணத்தை வேறுவழியின்றி இணைந்து மேற்கொள்கிறார்கள் என்பதை தவிர?//

    இதைத்தான் புத்திசாலித்தனமான காப்பி என்று சொன்னேன். நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள கதை தான் அன்பே சிவத்தின் மொத்தக் கதையும் அல்லவா? இடையே வரும் கம்யூனிஸ்ட் விஷயங்களெல்லாம் கமலின் இடைச்சொருகல்கள்.. காப்பி இல்லை என்று காண்பிப்பதற்கு..

    மற்றபடி, என்னாது நீங்க இன்னும் குணா பாக்கலையா? அதைப்போயி பார்த்துட்டு வாங்க முதல்ல தல ;-)

    @ VSP – என்னுடைய கருத்து என்னன்னா, காப்பி அடிக்கட்டும். தப்பே இல்லை. ஆனால், ஒரிஜினலுக்குக் க்ரெடிட் குடுத்துட்டு காப்பி அடிக்கட்டும்றதுதான். இப்ப என்ன ஆயிடுச்சுன்னா, இப்படி காப்பி அடிச்சிப் படங்கள் எடுத்த கமலை, அறிவுஜீவின்னு எல்லாரும் கொண்டாடி, அவரை ஒரு ஜீனியஸ் ரேஞ்சுக்குக் கொண்டுவந்தாச்சு. ஆனால், அவரோட சமுதாயப் புரிதல் எவ்வளவு மட்டம்னு அவரோட படங்களைப் பார்த்தா தெரியும். இதுதான் தப்புன்றது என்னுடைய வாதம் நண்பா..

    @ Ravindiran Chinnaswami – கரெக்ட் தான் பாஸ்…

    @ டம்பீ மேவி – உங்கள் தகவல்கள் எல்லாமே ரைட்டுதான்.. தமிழில் ஆரம்பமுதலே காப்பிகள் உள்ளன. ஆனால், கமல்தான் பெருவாரியாக, காப்பியடிப்பதே தொழிலாக செயல்படுபவர். அதான் அவரைப்பற்றிச் சொல்லலாமே என்று எழுதினேன். உங்கள் புள்ளிவிவரங்களுக்கு மிக்க நன்றிகள்..

    @ ஜாக்கி சேகர் – ரைட்டு ;-) .. உங்க பதிவுக்குக் காத்திருக்கிறேன்.. ;-) நன்றி..

    @ அலைகள் பாலா – ஹாஹ்ஹாஹ்ஹா… ;-) இதை, அரசாங்கம் பரிசீலிக்கலாமே ;-)

    @ சரவணக்குமார் – மிகச்சரி… அப்படியே ஒத்துக் கொள்கிறேன்.

    @ வாடாமல்லி – ஆமாண்ணா… சாந்தி நிலையம் சௌண்ட் ஆஃப் ம்யூஸிக்கின் அட்டைக்காப்பி தான் … நன்றி..

    @ Access – உங்கள் கோபம் புரிகிறது. காப்பி அடிப்பதில் தவறில்லை தலைவா.. ஆனால், மூலத்துக்கு உரிய க்ரெடிட் கொடுக்க வேண்டும் அல்லவா.. அதைத்தான் சொன்னேன்..

    @ கண்ணா – //என்ன அவரு சொல்லிவிட்டே செஞ்சிருக்கலாம்….. இது ஒண்ணும் பெரிய தப்பு இல்ல மக்கா//

    இதைத்தான் நானும் சொல்றேன். மூலப் பிரதிக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும் அல்லவா?

    @ க. செந்தில்வேலன் – என்னுடைய கருத்து, காப்பியடித்த மூலப்படங்களுக்கு உரிய க்ரெடிட் கொடுக்க வேண்டும் என்பதே. மட்டுமல்லாமல், பிற படங்களைக் காப்பியடித்துப் படம் எடுத்து, அதில் வரும் புகழை எப்படி எடுத்துக்கொள்ள முடிகிறது? guiltyஆக இருக்காதா?




  31.  

    @ prashanth Ramakrishnan – என்னுடைய பதிவில், கடைசியில், பி.கு – 2 கவனியுங்கள். அதில், என்னுடைய பதிவின் ஆங்கில மூலத்தைக் கொடுத்திருக்கிறேன். லின்க்கோடு. உங்கள் பதிவை நான் பார்க்கவே இல்லை. அதுதான் உண்மை. அந்த ஆங்கிலப்பதிவில், பின்னூட்டங்களைக் கவனியுங்கள். தேவா விஷயம் புலப்படும். மற்றபடி, இந்த ஆங்கிலப்பதிவு, உங்கள் பதிவுக்கு முன்னாலேயே எழுதப்பட்டுவிட்டது. And, நீங்கள் ப்ரூஃப் எல்லாம் கொடுக்கவே வேண்டியதில்லை… ;-) நன்றி..

    @ அஹோரி – //இந்த பதிவு ஒரு ஈயடிச்சான் காப்பி பதிவு. ஏற்கனவே பல பதிவர்கள் இது போன்று , படங்களும் அது எதிலிருந்து காப்பி அடிக்க பட்டது என்றும், கமலை பற்றியும் அவர் படங்களை பற்றியும் ஏகப்பட்ட பதிவு போட்டு விட்டார்கள். சொந்த கருவில் பதிவே போட முடியாத நமக்கு , அடுத்தவன் அடிக்குற காப்பிய பத்தி கவலை எதற்கு //

    இந்தப் பதிவு ஈயடிச்சான் காப்பி என்ற விஷயத்தை, பின்குறிப்பிலேயே தெளிவாகக் கொடுத்திருக்கிறேனே.. பதிவையே ஒழுங்காகப் படிக்க முடியாத நமக்கு, பெரிய லபக்குதாஸ் போன்ற இந்தப் பின்னூட்டம் எதற்கு?;-) .. காமெடி பண்னாம போயி வேலையைப் பாருங்க..

    @ தெறிக்கும் கதிர் – உங்கள் வாழ்த்துக்கு நன்றி.. அடிக்கடி வாருங்கள்..




  32.  

    உங்களுக்கெல்லாம் மற்றவர்களை குறை சொல்றது தான் வேலை, இதெல்லாம் ஒரு பொழப்பு. நீ மட்டும் சொந்தமா ஒரு ஆர்டிகல் போடு பார்க்கலாம். IMDB / wiki இல இருந்து படிச்சிட்டு மொழி மாற்றம் பண்ணாம.




  33.  

    அட…என்னப்பா DVD, Internet இல்லாத அந்த காலத்துல அண்ணன் இவ்ளோ பெரிய கலைசேவை செஞ்சிருக்காரு…அதுக்கு ஆஸ்கர் குடுக்காம இது என்ன பேச்சு….சின்ன புள்ள தனமா…




  34.  

    இந்த பதிவு ஒரு ஈயடிச்சான் காப்பி பதிவு. ஏற்கனவே பல பதிவர்கள் இது போன்று , படங்களும் அது எதிலிருந்து காப்பி அடிக்க பட்டது என்றும், கமலை பற்றியும் அவர் படங்களை பற்றியும் ஏகப்பட்ட பதிவு போட்டு விட்டார்கள். சொந்த கருவில் பதிவே போட முடியாத நமக்கு , அடுத்தவன் அடிக்குற காப்பிய பத்தி கவலை எதற்கு ?
    ////////
    இவர் கெட்டதிலும் நியாயம் இருக்கு , பதில் சொல்லுங்கக்

    உலகில் உள்ள எல்லா படைப்புகளுமே ஏதாவது ஒன்றின் சாயல் இருக்கும்
    நீங்கள் சொன்ன படங்கள் எல்லாம் ஒரிசினலா? அவையும் வேறு ஏதாவது படத்தின் சாயலில் இருக்கும்
    புத்தம் புதிதாக ஏதும் இல்லை




  35.  

    @ Gopi – //உங்களுக்கெல்லாம் மற்றவர்களை குறை சொல்றது தான் வேலை, இதெல்லாம் ஒரு பொழப்பு. நீ மட்டும் சொந்தமா ஒரு ஆர்டிகல் போடு பார்க்கலாம். IMDB / wiki இல இருந்து படிச்சிட்டு மொழி மாற்றம் பண்ணாம//

    இது பாயிண்ட்டு !! தஞ்சாவூர் கல்வெட்டுல பொறிக்கப்படவேண்டிய கருத்து இது ;-) .. மேலே சொல்லுங்க ;-) .. படா டமாஸாக்கீதுப்பா ;-)

    @ கமல் – அப்புடிப்போடுங்க ! இதுக்கு கட்டாயமா ஆஸ்கர் கொடுத்தே ஆகணும்தான் ;-)




  36.  

    @ பிரியமுடன் பிரபு – ஏங்க.. நீங்க பதிவைப் படிக்கவே இல்லையா.. இந்தப் பதிவு எங்கிருந்து எழுதினேன்னு ஆங்கில மூலத்தோட என் பதிவுலயே லின்க் குடுத்திருக்கேனே ;-)

    மேலே நான் அகோரிக்குப் போட்ட பின்னூட்டத்துலயே அவருக்குப் பதில் சொல்லியாச்சி பாஸ்..

    //உலகில் உள்ள எல்லா படைப்புகளுமே ஏதாவது ஒன்றின் சாயல் இருக்கும்
    நீங்கள் சொன்ன படங்கள் எல்லாம் ஒரிசினலா? அவையும் வேறு ஏதாவது படத்தின் சாயலில் இருக்கும்
    புத்தம் புதிதாக ஏதும் இல்லை//

    இது ஒத்துக்கவே முடியாத கருத்து பாஸ்.. பல ஒரிஜினல்களும் இருக்கவே செய்கின்றன. ஆனால், நமக்குத் தான் காப்பியடிக்காமல் படமெடுப்பது கடினமாக இருக்கிறது




  37.  

    //நீ மட்டும் சொந்தமா ஒரு ஆர்டிகல் போடு பார்க்கலாம். IMDB / wiki இல இருந்து படிச்சிட்டு மொழி மாற்றம் பண்ணாம.//

    அண்ணே!அதே தான்னே! அதுவே தான்.அந்த இழவ தான் தமிழ் சினிமா கிட்ட இருந்து கேக்குறோம்.காபி அடிக்காம நல்ல படம் கொடுங்கடானு.
    அது தப்புன்னு குதிக்கிறீங்க? ஆனா,இங்க இப்படி சொல்றீங்க? உங்க ‘நியாயம்’ எனக்குப் புரியல. ;)




  38.  

    //பொதுவாக, S.A ராஜ்குமார், தேவா போன்றோர், பிற படங்களின் பாடல்களைக் காப்பியடித்தால், நாம் அவர்களுக்கு அளிக்கும் பட்டம் என்ன? ’ஜெராக்ஸ்’ என்பது. ஆனால், மணிரத்னம், கமல்ஹாஸன் போன்றோர் அதையே செய்தால், அதனை Inspiration என்று பூசி மெழுகும் வேலையையும் நாம் தான் செய்கிறோம். இல்லையா? //

    இது மேட்டர். இதை நாம சொன்னா , ‘இது அது கிடையாது.அதுக்கும் இதுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.சும்மா கதைய மட்டும் எடுத்து கையண்டாங்க ‘ அப்டின்னு சப்பைக்கட்டு கட்டுவாங்க.




  39.  

    @ இலுமி – //இது மேட்டர். இதை நாம சொன்னா , ‘இது அது கிடையாது.அதுக்கும் இதுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.சும்மா கதைய மட்டும் எடுத்து கையண்டாங்க ‘ அப்டின்னு சப்பைக்கட்டு கட்டுவாங்க//

    அது ரைட்டு ! பின்னே.. ? காப்பியடிச்சதை ஒத்துக்கினா, அறிவுஜீவி பிம்பம் ஒடஞ்சி போயிருமே ;-)




  40.  

    அப்புறம், இன்னொரு விஷயம்.

    காபி அடிக்கிறது தமிழ்ப் படத்துல பல காலமாவே இருக்கு.கழுத,அது இருந்துட்டுப் போகட்டும்னு இருந்தாக் கூட,இந்தக் காபி அடிச்சிட்டு படம் வந்த பின்ன இவனுக பண்ணுற அலும்பு இருக்கே..
    ‘இது நானு பல வருசமா மனசுக்குள்ள பூட்டியே வைச்சுருந்த கதை.ரொம்ப வருஷம் செதுக்குனேன்.’(யோகி நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.)
    ‘memento பலருக்குப் புரியல.நான் அதை இன்னும் நல்லாக் கொடுத்தேன்.’(memento படம் பார்த்தவங்க இதுக்கு எப்படி சிரிச்சு இருப்பாங்க னு எனக்கு தெரியும்.)

    கொடுத்தது சரி,ஒரிஜினல கொடுத்த ஆளுக்கு தெரிய வச்சுக கொடுத்தியா? அது தான் கேள்வி. உங்க வேலைய ஒருத்தன் காபி அடிச்சு நல்ல பேரு வாங்கின நீங்க கோபப்படுவீங்களா,இல்ல ‘அட,பரவாயில்லை.புதுசா யோசிச்சு(??) இருக்கானே’ அப்டின்னு சொல்வீங்களா?

    அப்புறம்,தமிழ் ரசிகர்களுக்கு அவரு இதை தன் மூலமா கொடுத்தாரு அப்டின்னு ஒரு சப்பைக்கட்டு. செம காமெடி.




  41.  

    அண்ணாத்த ஈயடிச்சான் காப்பி பதிவு போட உனக்கு ஒரு Blog. இந்த பொழப்புக்கு…. நல்லா வாயில வருது.
    ஆனா ஒண்ணு உன்னோட கேப்மாறி தனத்தீலும்.. உன்னோட நேர்ம எனக்கு பிடிச்சிருக்கு. நீ இந்த பதிவ voting காக தான் போட்டிருப்ப.
    இந்த மசுரூக்கு மூடிக்கிட்டு ஏதாவது ஃபேமஸ் ஆன ஸைட் ல “. . . . . add banner”
    போல ஏதாவது லிங்க் கொடு.




  42.  

    கருந்தேள் (எ) திருட்டுத்தேளுக்கு,

    ஈயடிச்சான் காப்பின்னா என்னன்னு தெரியாதவங்க மேலே உள்ள பிரஷாந்தின் ப்ளாக படிச்சு தெரிந்ஞ்சுக்கலாம். காப்பியடிக்கறத பத்தின பதிவே அடுத்தவன பாத்து காப்பியடிக்கிறயே! தலைப்பு கூட காப்பி! கடைசி வரியான, Comments and brickbats welcome!!! கூட விடாம காப்பியடித்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.

    இதெல்லாம் எதுக்கு? சும்மா ஒரு பப்ளிசிட்டியா? ஆங்கிலத்துல ப்ளாக் எழுதறவன் இங்கே வரமாட்டன்ற தைரியத்துல இப்படியெல்லாம் காப்பியடிச்சி தமிழ் பதிவர்களுக்கே கெட்ட பெயர் உருவாக்குகறியே!

    அடுத்தவன் முதுகைப்பத்தி சொல்றதுக்கு முன்னாடி உன் முகத்தை கண்ணாடியில் பாரு!




  43.  

    அப்புறம்,”உலகப்படம் பார்க்க வாய்ப்பு உள்ளவங்க ரொம்பக் குறைவு.என்னை மாதிரி சாதாரண மக்களுக்கு அவரு இதை புரியுற மாதிரி கொடுத்தார்.”

    அப்டின்னு சொல்றவங்களுக்கு,’அண்ணே! கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்க அண்ணே! நீங்க இப்ப யூஸ் பண்றீங்களே,இதே இன்டர்நெட்,இதை வச்சு ஆயிரம் ‘நல்ல’ படங்களைப் பார்க்கலாம்.அதை விட்டுட்டு,எனக்கு வாய்ப்பு இல்ல னு சொல்லாதீங்க.உங்களுக்கு இஷ்டம் இல்லாம இருக்கலாம்.அதுக்காக அவரை ஞாயப்படுத்தாதீங்க.’




  44.  

    தப்பு பன்னிட்டேன்..நான் தப்பு பன்னிட்டேன்.. ஒனக்கு IMDB / WIKI எல்லாம் படிச்சி (படிச்சி) எழுதிர அளவுக்கு இல்ல. சும்மா ctrl+c & ctrl+v ஆளுன்னு தெரியாம சொல்லிட்டேன்.




  45.  

    @ Gopi – //அண்ணாத்த ஈயடிச்சான் காப்பி பதிவு போட உனக்கு ஒரு Blog. இந்த பொழப்புக்கு…. நல்லா வாயில வருது.
    ஆனா ஒண்ணு உன்னோட கேப்மாறி தனத்தீலும்.. உன்னோட நேர்ம எனக்கு பிடிச்சிருக்கு. நீ இந்த பதிவ voting காக தான் போட்டிருப்ப.
    இந்த மசுரூக்கு மூடிக்கிட்டு ஏதாவது ஃபேமஸ் ஆன ஸைட் ல “. . . . . add banner”
    போல ஏதாவது லிங்க் கொடு

    தப்பு பன்னிட்டேன்..நான் தப்பு பன்னிட்டேன்.. ஒனக்கு IMDB / WIKI எல்லாம் படிச்சி (படிச்சி) எழுதிர அளவுக்கு இல்ல. சும்மா ctrl+c & ctrl+v ஆளுன்னு தெரியாம சொல்லிட்டேன்//

    ;-) ஹாஹ்ஹா… இந்தப் பதிவுல காமெடியே இல்லையேன்னு நினைச்சேன்.. ;-) வாங்க வாங்க.. ;-) நீங்க இங்க எவ்வளவு வேணாலும் ஒளறலாம் ;-) .. கேரி ஆன் ;-) .. உங்க கண்டுபுடிப்புக்கு ஆஸ்கரே குடுக்கலாம் ;) .. ஹாஹ்ஹா




  46.  

    @ ஈசீஆர் என்ற அடிமுட்டாளுக்கு..

    //கருந்தேள் (எ) திருட்டுத்தேளுக்கு,

    ஈயடிச்சான் காப்பின்னா என்னன்னு தெரியாதவங்க மேலே உள்ள பிரஷாந்தின் ப்ளாக படிச்சு தெரிந்ஞ்சுக்கலாம். காப்பியடிக்கறத பத்தின பதிவே அடுத்தவன பாத்து காப்பியடிக்கிறயே! தலைப்பு கூட காப்பி! கடைசி வரியான, Comments and brickbats welcome!!! கூட விடாம காப்பியடித்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.

    இதெல்லாம் எதுக்கு? சும்மா ஒரு பப்ளிசிட்டியா? ஆங்கிலத்துல ப்ளாக் எழுதறவன் இங்கே வரமாட்டன்ற தைரியத்துல இப்படியெல்லாம் காப்பியடிச்சி தமிழ் பதிவர்களுக்கே கெட்ட பெயர் உருவாக்குகறியே!

    அடுத்தவன் முதுகைப்பத்தி சொல்றதுக்கு முன்னாடி உன் முகத்தை கண்ணாடியில் பாரு//

    நீ என்னுடைய பதிவையே படிக்கலன்னு இப்ப தெரியுது.. அதுல தான் ஆங்கில ப்ளாக்குக்கு தெளிவா லின்க் குடுத்துருக்கேனே.. ;-) நானு கமல் இல்ல.. காப்பி அடிச்சிட்டு, பேரு வாங்க ;-) ..

    தமிழ்ப் பதிவர்களைப் பத்திப் பேசுற இந்த லூசு, என்ன கிறுக்கி வெசிருக்கு பார்க்கலாம்னு போனா, அங்க ஒன்யும் காணோம் ;-) .. ஒண்ணுமே எழுதாத ஒரு தற்குறிக்கு, இங்க வந்து வாந்தியெடுக்க எந்தத் தகுதியும் இல்ல மாமே ;-) .. பட், நீ எவ்வலவு வேணாலும் ஒளறலாம் இங்க.. காமெடியும் கொஞ்சம் தேவைப்படுது இல்லையா ;-) ஹாஹ்ஹா




  47.  

    நண்பா,
    பதிவோடு அப்படியே ஒத்துப்போகிறேன்.
    இதில் அவர் களவாடிய திரைக்கதையை,திரியை மட்டுமே சொல்லியிருக்கிறீர்கள்,அவர் நடிப்பு பாணியை என்ந்த பதிவில் சொல்லப்போகிறீர்கள்,அதற்கும் ஒரு பதிவு போடுங்கள் நண்பா.

    ===

    தவிர ஹேராமில் கார் மீது கலவரக்காரர்கள் நடன்ந்து போவது காரை அடித்து உடைப்பது அப்படியே 1947 எர்த்ல் வரும்,ஏனைய காட்சிகளும் ஹேராமை பிரதிபலிக்கும். சலாம் பாம்பே பாதிப்பு மகாநதியில் நிறைய இருக்கும்.நல்ல முயற்சி,இணையத்தில் ஏற்கனவே என் நண்பன் கலையரசன் தொகுத்துள்ளான் ஆனால் நீங்கள் குறிப்பிட்ட ஏனைய படங்கள் அதிலில்லை.ஒவ்வொரு ஆறு மாதத்துக்கோ ஒரு வருடத்துக்கோ இப்படி நண்பர்கள் இது போல் அவலத்தை வெளியே கொண்டு வருவதில் தவறேதுமில்லை.

    ===
    இது முக்கியமான பதிவு,பின்னூட்டத்தையும் ஒருவர் தவறவிடக்கூடாது.
    http://kalakalkalai.blogspot.com/2009/06/blog-post_14.html

    ஒரிஜினல் உலகவுட்டும்! உல்டா கோலிவுட்டும்!!
    ===
    தவிர மணிரத்தநம் நாயகன் படத்தில் மும்பை கோர்ட் என்று சொல்லி அண்ணா யுனிவர்சிட்டியை காட்டி ஏமாற்றியுள்ளார்.அது கூட தெரியாமல் அது டைம்ஸ் மேகசினில் 100 படத்துக்குள் ஒன்று.
    ஒருவன் சம்பவம் நடன்ந்ததாக சொன்ன இடத்துக்கே சென்று தீஸீஸ் செய்து எடுத்தால் கேனை,அன்ந்த படம் மீடியாக்காரர்களால் புறக்கணிக்கப்படும்.அது தான் சினிமா.




  48.  

    இதை விட இன்ந்தியன் ஐகான் என்னும் அமிதாபின் காப்பியை நோண்டினால் எவ்வளவு கிடைக்கும் என்று பாருங்கள்?
    அவர் தயாரித்த படமான உல்லாசம்.அது அப்படியே ராபர்ட் டெநீரோ இயக்கிய ய ப்ரான்க்ஸ் டேல் என்னும் பட்த்தின் கொசுவடிச்சான் காப்பி
    http://www.imdb.com/title/tt0106489/




  49.  

    காப்பியயடிக்கிற நீ முட்டாளா? இல்ல எழுதாத நான் முட்டாளா?

    அந்த ஆங்கிலப்படங்களையெல்லாம் பார்த்து நீயே கண்டுபுடிச்ச மாதிரி எழுதிட்டு பெரிய புடுங்கியாட்டம், “இக்கட்டுரைக்குப் பெரிதும் உதவிய தளம் – Sen’s Spot. ” என்று பொய்யாய் எழுதியிருக்கியே! நான் இந்த தளத்திலிருந்து காப்பியடிச்சுருக்கேன்னு போட வேண்டியது தானே!

    “தமிழ்ப் பதிவர்களைப் பத்திப் பேசுற இந்த லூசு, என்ன கிறுக்கி வெசிருக்கு பார்க்கலாம்னு போனா, அங்க ஒன்யும் காணோம் ;-) ” கமலைப்பத்தியும் மணியைப்பத்தியும் எழுதுன நீ எத்தன படம் எடுத்திருக்கே? பின்னூட்டம் போடுறவன் எல்லாம் பதிவு எழுதணும்னு சட்டம் இருக்கா என்ன?

    நான் என்ன எழுதியிருக்கேன்னு பாக்க போனியா, இல்ல அங்க பேண்டு வைக்கலம்னு போனியா?

    லட்டு குடுத்து லவடா வாங்கதடா….




  50.  

    கலக்கிட்டீங்க போங்க…

    எனக்கு கமல் சுத்தமா புடிக்காது. நான் ஒரு ரஜினி பக்தன் (வெக்கமே இல்லாம பெருமையா சொல்லுவேன்!!! யார் கேட்டாலும்!) ஆனா கமல் மேல் ஒரு மரியாதை வந்தது கல்லூரி காலங்களில், கொஞ்சம் அறிவு வந்த்தப்புறம் மீண்டும் பார்த்த குணா, நாயகன், தேவர் மகன், மூலம்…. அன்பே சிவம் பார்த்து விட்டு கமல் மேல் ஒரு மிகப்பெரிய மதிப்பு வந்தது….ஆனா இப்போ எல்லாம் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்……..

    படு பாவி, எப்படியெல்லாம் பேட்டி குடுத்தான்…வெக்கம் இல்லாம ஆஸ்காருக்கு வேர படம் அனுப்புனாரே..என்னா தைரியம்…!




  51.  

    @ ஈசீஆர் – ஹாஹ்ஹா… இன்னும் உன்னோட காமெடி அடங்கலையா ;-) .. கமான்.. உங்கிட்ட இருந்து இன்னமும் நிறைய எதிர்பார்க்குறோம்.. ;-) .. ஓ இப்ப புரியுது.. நீ பின்னூட்டம்ன்ற பேர்ல வாந்தி மட்டும் எடுக்குறவன்னு.. ;-) அப்ப சரி…

    //நான் என்ன எழுதியிருக்கேன்னு பாக்க போனியா, இல்ல அங்க பேண்டு வைக்கலம்னு போனியா?

    லட்டு குடுத்து லவடா வாங்கதடா//

    இந்த அற்புதமான வரிகளை ஒரு கல்வெட்டுல எழுதி, பக்கத்துலயே நீயும் உக்காந்துக்க ;-) .. உன்னோட சந்ததிகளுக்கு உதவும் ;-) . . இவ்வளவு எடுக்குறியே வாந்தி… உன்னோட சொந்தப் பேர்ல வந்து கமெண்ட் போட வேண்டியதுதானே.. ;-) ஓடி ஒளிஞ்சிக்கத் தெரியுதுல்ல ஈசீஆர்ன்ற பேர்ல.. லவடா குடுக்குற அந்த மூஞ்சிய கொஞ்சம் காமி.. லவடா மாதிரியே இருக்கும்னு நினைக்குறேன் ;-) ஹாஹ்ஹா..




  52.  

    @இ.சி.ஆர்: நான் என்ன எழுதியிருக்கேன்னு பாக்க போனியா, இல்ல அங்க பேண்டு வைக்கலம்னு போனியா?

    இல்ல தல, அங்க ஏதாவது அட்டய போடலாமான்னு போயிருக்கும். வேற என்ன?




  53.  

    ஹாஹ்ஹா… இது ஒலக காமெடி.. ;-)

    //@இ.சி.ஆர்: நான் என்ன எழுதியிருக்கேன்னு பாக்க போனியா, இல்ல அங்க பேண்டு வைக்கலம்னு போனியா?

    இல்ல தல, அங்க ஏதாவது அட்டய போடலாமான்னு போயிருக்கும். வேற என்ன//

    ஒரு எழுத்தும் எழுதாத ஒரு வெட்டியான ப்ளாக்ல காப்பி வேற அடிக்கணுமா ?;-) ரெண்டுபேரும் பிரமாதமா வாந்தியெடுக்குறானுங்க ;-) .. கண்டின்ன்யூ ;-) .. செம காமெடி.. ;-)




  54.  

    என்னோட போன கருத்தை என் தல எடுத்திட்ட, ரொம்ப குத்துதோ? இல்ல உங்க கூட்டு காளவானி தானம் தெரிஞ்சி போச்சோ?
    அப்பறம் ஹாஹ்ஹா.. எத்தன முற ctrl+c ctrl+v செஞ்சிறுக்க பாரு.




  55.  

    கமெண்ட்ட கூட சொந்தமா எழுதாம சினிமா வசனத்த காப்பியடிக்கிறியே உனக்கு எல்லாம் என் முகத்த இல்ல…ஸூ…கூட காமிக்க மாட்டேன்.

    நன்றி கோபி!




  56.  

    நான் கமல் ரசிகன். ரஜினி படமும் பார்ப்பேன்.

    ஆங்கிலப்படங்கள் பார்க்க ஆரம்பித்தது சுமார் 3 வருடங்களுக்கு முன்பு.

    காட்ஃபாதர், நாயகன் காப்பி என்றதில் பெரிய வருத்தம் இல்லை. ஆனால் காட்ஃபாதர் படத்தைப் பார்த்த போது, அல் பேசி னோவின் மேனரிசம் முதற்கொண்டு, கமல் காப்பி அடித்ததைக் கண்டு வருத்தமடைந்தவன். அதனால் மனம் தாங்காமல் உடனடியாக இந்தப் பதிவை எழுதினேன்.

    http://pinnokki.blogspot.com/2009/12/blog-post_24.html

    யோகி என்ற படத்தை, காப்பி அடித்ததால் கிழித்துக் காயப் போட்டோம். ஜக்குபாயும் அதே. அப்படி, கமல் காப்பி அடித்தால் (அடித்ததால்) இன்றைய இண்டர்நெட் யுகத்தில் கண்டிப்பாக கண்டனங்களை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதனை துணிந்து செய்த உங்களுக்கு பாராட்டுக்கள்.

    அதற்காக அடுத்த கமல் படத்தைப் பார்க்காமல் இருக்க மாட்டேன் :) . ஆனால் ஆஸ்கர் அவார்ட் குடுக்கலைன்னு அழுவறதை நிறுத்திப்பேன் :) .

    குணா படத்தை மெய்மறந்து பார்த்து ரசித்தவன் :( . அதன் ஒரிஜினலைப் பார்த்து, கதை அப்படியே இருந்தால் கூட பொறுத்துக்கொள்வேன். அந்த மேனரிசங்களை காப்பி அடித்திருக்கமாட்டார் என்ற நம்பிக்கையில்… பார்க்கவேண்டும் :( . அப்படி மேனரிசங்களையும் காப்பி அடித்திருந்தால்……..




  57.  

    //அவர் மேல் ஒருவித அசூயை ஏற்பட்டுவிட்டது.//
    உங்கள் கட்டுரை சிறப்பாக உள்ளது. ஆனால் நீங்கள் கையாண்டுள்ள சில தமிழ் சொற்கள் தவறான கருத்துக்களைக் கொண்டுள்ளது என்பது என் கருத்து. உதாரணமாக அசூயை என்ற சொல்லுக்கு பொறாமை என்பது பொருள். கமலின் திறமையை பாராட்டுபவர்களுக்கு தான் அவர் மீது, அவர் நடிப்பு மீது பொறாமை வரும். நமக்கு கடுப்பு தான் வரும். கதைகளை,கருத்துகளை திருடுவது திருடுபவரின் குற்றமல்ல திருடத் தூண்டும் கருத்துக்களின் ஆழத்தின் குற்றம் என்று எங்கோ படித்த ஞாபகம். ஆனால் அந்த கருத்திற்கு நான் தான் தந்தை என சொலவது தான் நமக்கு கடுப்ப கிளப்புது. கமல் சார்.. அடுத்தவன் புள்ளைங்களுக்கு ஏன் உங்க இனிசியல வக்கிறீங்க. கருந்தேள் உங்கள் பணி தொடரட்டும்.




  58.  

    super appu!!! nobody believed me when I said he is copying from english movies. But now I can prove from your blog.

    One more important thing. Tamil Cinemavaku ippadi fans irukara varaiku atha yaaralum asaika mudiyathu.




  59.  

    சரியான கட்டுரை. இப்போ சமீபத்துல கூட சிம்ரனோட கூத்தடிக்கனுனே ரெண்டு படம் எடுத்தாரு. சீரியஸ் படங்கள்ல கூட கமல் நடிக்கும் போது, கேரக்டரவிட கமல்தான் தெரியுறாரு, அதுல அவருக்கு பெருமை வேற, இப்ப்டி நடிச்சே கமல் கெடுத்த படங்கள்தான் அதிகம். ஹிந்தியில் வந்த முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்த தமிழ்ல வசூல்ராஜ எம்பிபிஎஸ்னு எடுத்து குப்பையாக்குனாரு!..
    ஆழ்வார்பேட்டை ஆண்டவா……தாங்கமுடியலடா சாமி!




  60.  

    போங்கப்பா போங்க போய் உங்க வேலைய பாருங்கள்! ,சினிமாவில் ஈயடிச்சான் காப்பி அடிச்சு எல்லாரும் கோடி, கோடியா சேர்த்து வச்சுட்டாங்க




  61.  

    @பன்னிகுட்டிராம்சாமி
    //ஆழ்வார்பேட்டை ஆண்டவா……தாங்கமுடியலடா சாமி!//
    வெல்செட். நான் சொல்லனும்னு நினைச்சேன்.பெரிய பிம்பமாக மனதில் பதிய நினைக்கிறார்.
    யவெட்னெஸ்டேவில் கூட நஸ்ரூதின் ஷா தெரியமாட்டார்,ஒரு காமன்மேன் தான் தெரிவார்.ஆனால் இங்கே?கமல் தான் தெரிவார்.இதெல்லாம் சொன்னால் பொல்லாப்பு.மன்மதன் அம்பு எது பற்றியது என யாருக்காவது தெரியுமா?




  62.  

    @கிங் விஸ்வா
    நண்பரே,எஃப் எம் ஸ்டேஷனில் கமல் பேட்டியின் போது என்ன நடன்ந்தது ? என ஒரு பதிவை போடுங்கள்.ஆவலுடன் வெயிட்டிங்க்.




  63.  

    கமலஹாசன் என்கிற களிமண்




  64.  

    @ பின்னோக்கி – உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தால், நீங்கள் கமலின் ரசிகர் என்று தெரிகிறது. ஆனாலும் உங்களது unbiased கருத்தை வரவேற்கிறேன். குணாவின் ஒரிஜினலைப் பாருங்கள்.. பார்த்துவிட்டு வாருங்கள்.. உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.. அப்படியே, உங்கள் ஸ்டைலில் ஒரு பதிவும் போடுங்கள்..

    @ rasikan – னீங்கள் சொன்னது சரி. அசூயை என்ற வார்த்தை தவறு. கோபம், கடுப்பு என்பவைதான் வந்திருக்க வேண்டும். உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே…

    @ ShaggyLad – உங்களுக்கு விடியோ ஆதாரங்களும் வேண்டும் என்றால், நான் மேலே பின்குறிப்பில் குறிப்பிட்டுள்ள ஆங்கில ஒரிஜினல் சைட்டைப் பார்த்துவிடுங்கள். அதில் பல வீடியோக்கள் உள்ளன. பின்னூட்டங்களைப் பார்த்தால் தெரியும்.

    @ பன்னிக்குட்டி ராம்சாமி – இந்தப் பக்கம் ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்குறமாதிரி தெரியுது ? ;-) வாங்க.. //சீரியஸ் படங்கள்ல கூட கமல் நடிக்கும் போது, கேரக்டரவிட கமல்தான் தெரியுறாரு, அதுல அவருக்கு பெருமை வேற, இப்ப்டி நடிச்சே கமல் கெடுத்த படங்கள்தான் அதிகம்.//

    இது ரொம்ப உண்மை ! அவருக்கு ஒருவித Narcissism உண்டுன்னு இந்தப் படங்களைப் பார்த்தா எண்ணத் தோணுது.. நன்றி..

    @ சரவணக்குமார் – ஹாஹ்ஹா… அது என்னமோ உண்மை. அவங்க எக்கச்சக்கமா சம்பாதிச்சிட்டாங்க.. ஆனா நாம அதைப்பத்தி பேசி மண்டைய உடைச்சிக்கிறோம்.. ;-)

    @ கீதப்ரியன் – விஸ்வா சீக்கிரம் பதிவு போட்டா தாவலை ;-) .. போடுவாருன்னு நினைக்கிறேன்..

    @ access – எனது கருத்து என்னவெனில், கமல் நடிப்பு எல்லாம் சரிதான்.. ஆனால், இப்படிச் சுடும்போது, அதன் ஒரிஜினல் படத்துக்குக் கிரெடிட் கொடுக்கவேண்டுமல்லவா? தானே உட்கார்ந்து யோசித்ததுபோல் ஒரு பிம்பத்தை ஏன் உருவாக்க வேண்டும் என்பதே எனது கேள்வி.

    கமல் ஜேகேவைப் போல் வேடமிட்டது எனக்குத் தெரியும். அது மட்டுமல்லாது, அது கமலின் தந்தையைப் போலவும் இருந்தது. உங்களது விரிவான கருத்துக்கு நன்றி.. இந்த விவாதத்துக்கு இது மேலும் மெருகூட்டுகிறது.




  65.  

    உற்பத்திப் பொறியியலில் முதன்மையானது வார்ப்புகள்.

    இரும்பை உருக்கி அச்சில் ஊற்றி விரும்பிய உருவத்தைக் கொண்டு வருகிற யுக்தி. அச்சை எப்படி உருவாக்குவது?

    எந்த உருவம் வேண்டுமோ அதை எதிலாவது பதிக்க வேண்டும். அப்படிப் பதிக்கிற போது அந்த உருவத்தின் குழிந்த அச்சு உருவாகிறது. அதில் உருக்கின இரும்பை ஊற்றுகிற போது குவிந்த உருவம் கிடைக்கிறது.

    எதிலாவது என்று சொன்னோமே, அது எப்படி இருக்க வேண்டும்?

    உருவத்தைப் பதித்த உடன் அப்படியே எடுத்துக் கொண்டு அதே போல பிரதிபலிக்க வேண்டும். அந்தக் குணம் எந்தப் பொருளுக்கு இருக்கிறது?

    களிமண்.

    களிமண்ணைக் கொஞ்சம் நீர் சேர்த்துப் பிசைந்து கொண்டால், அதில் எந்த உருவத்தை வேண்டுமானாலும் உருவாக்கலாம். அதை அச்சாக உபயோகித்தால் அது மாதிரி பல உருவங்களை உற்பத்தி செய்யலாம். மண்ணாலான அச்சை விட அது உருவாக்குகிற இரும்பு உருவங்கள் உறுதியாகவும் நீண்ட நாள் நீடித்திருப்பவையாகவும் இருக்கும்.

    டைரக்டர்களின் கற்பனை உருவத்தை மனதில் பதித்து அச்சை உருவாக்கி அதில் இரும்பு வார்ப்பு மாதிரி உறுதியான பாத்திரங்களை உருவாக்குகிற திறமை இருக்கிற கமலஹாசன் களிமண்தானே? எத்தனை எத்தனை வார்ப்படங்களை உருவாக்கினாலும் மறுபடி தண்ணீர் சேர்த்துப் பிசைந்தால் அடுத்த வார்ப்படத்துக்கு களிமண் தயாராகி விடும்.

    வார்ப்புகள் அழிந்தாலும் களிமண் அழிவதில்லை.

    ஐம்பது வருஷமென்ன, ஐயாயிரம் வருஷமானாலும் களிமண் அதே குணத்தோடு, மென்மேலும் சிறந்த வார்ப்புகளை உருவாக்கவல்லது. தொடரட்டும் புதுப் புது வார்ப்புகள்.

    ‘சலங்கை ஒலி’ மற்றும் ‘சிப்பிக்குள் முத்து’ படங்களைப் பார்த்த சிவாஜி கணேசன், “நல்லாத்தான் நடிச்சிருக்கே, ஆனா என்னைக்கு நீ தாடி மீசை இல்லாம கிழவன் வேஷம் போடறயோ அன்னிக்குத்தான் உன் நடிப்பை நான் பாராட்டுவேன்” என்றாராம்.

    கமலின் உடனடி முயற்சி நாயகன்.




  66.  

    தாடி இல்லாமல், விக் வைக்காமல் அதில் வயதான வேடம் பண்ணி நடிகர் திலகத்துக்குக் காட்டிய போது “நான் ஹீரோவா பண்றப்போ இது மாதிரி கதைகள் வரல்லையெடா!” என்று ஏங்கியதோடு நில்லாமல் “இந்த வருஷமும் பெஸ்ட் ஆக்டர் அவார்ட் உனக்குத்தாண்டா” என்றாராம்.

    கமலின் அடுத்த முயற்சி தாடி மீசை ரெண்டுமே இல்லாத கிழ வேடம்.

    சுஜாதா ரங்கராஜன் கமலிடம் “ஒரு தாத்தாவை ஹீரோவா வெச்சி எடுத்த படம் சக்கைப் போடு போட்டு ஏகப்பட்ட அவார்டுகளை அள்ளியிருக்கிறதே, அப்படி ஒரு படம் பண்ண ஆசை இருக்கா?” என்று காந்தி படத்தை சுட்டிக் காட்டி கேட்டாராம். அதுதான் இந்தியன் படத்தின் விதை.

    கமலின் இந்தியன் பட கெட் அப் ஜெ.கிருஷ்ணமூர்த்தியை நினைவு படுத்துவதை எத்தனை பேர் கவனித்திருக்கிறீர்கள்?

    கமல் உள்பட பலரும் ஜெ.கே யை நாத்திகர் என்று எண்ணியிருக்கிறார்கள். உண்மையில் அவர் ஒரு agnostic. ஏறக்குறைய நாத்திகத்திலிருந்து agnosticism க்கு அவர் மாறியிருப்பதை தசாவதாரம் படம் காட்டுகிறது!




  67.  

    @ access – நீங்கதானே அப்பவே gopiன்ற பேர்ல வந்து கமெண்ட் போட்டது? ;-) ஐபில கண்டுபுடிச்சேன்… ;-) சரிதானே




  68.  

    தான் நடிச்ச படத்தையே வேற வேற களத்துல திருப்பி திருப்பி நடிக்கிறதுக்கு வேறு மொழியில் வந்த நல்ல படங்களில் இருந்து தானே ஒரு கதையை உருவாக்கி அதில் திறமையாக நடிப்பது எவ்வளவோ மேல் தல …. என்ன பண்ண நீங்கள் பஞ்ச் வசனத்திற்கு அடிமையானவர்கள் ,,,
    அதனால் இவரின் திறமை புரிவதில்லை உங்களுக்கு

    //மற்ற நடிகர்கள் எல்லாம் அவர்களது மசாலாக்களையே அரைக்கும் வேளையில் இது தேவலாம் தானே..

    repeettu

    வேற்றுமொழியில் வெளிவரும் அட்டு படங்களை அப்படியே காப்பி அடித்து (அன்றைய பில்லாவில் இருந்து இன்றைய தில்லாலங்கடி வரை) அரைத்த மாவையே அரைப்பதை விட வேறு வேறு தளங்களில் பயணப்படுவது எவ்வளவோ மேல் தல …

    சொந்தமா சரோஜாதேவி டைப் மஞ்சள் புத்தகம் எழுதுவதை விட, வேற்று மொழியில் வந்த நல்ல நாவல்களை தமிழ் நாட்டின் கலாச்சாரம் கலந்து கொடுப்பது எவ்வளவோ மேல் … அது போலதான் இதுவும்




  69.  

    இவ்வளவு நல்லா எழுதுற நீங்க, அசிங்கமா வேற பேர்லயெல்லாம் வந்து ஏன் உங்க மனசின் கழிவுகளையெல்லாம் இங்க காட்டுறீங்க? யார் எங்கிருந்து கமெண்ட்டு போட்டாங்கன்னு ஐபி ஈஸியா காட்டிருச்சி ;-) .. இனி இப்படி கோபின்ற பேர்ல வந்து ஒளறமாட்டீங்கன்னு நினைக்கிறேன்..




  70.  

    @ ராஜா – என்னுடைய வாதம் ரொம்ப எளிமையானது. காப்பி அடிக்கிறீர்களே.. அதனை, டைட்டிலில் சொல்லிவிட்டுச் செய்தால் என்ன? இவ்வளவுதான் என் கேள்வி. இன்னொருவரின் முழுச்சரக்கையும் தனது சரக்காக விளம்பரப்படுத்தி, இண்டர்வியூக்கள் கொடுத்து, உதார் விட்டு… இது ஏன்? ஏன் இந்த அறிவுஜீவி நாடகம்? உங்கள் படத்தை வேறு ஒருவர் இப்படிக் காப்பியடித்தால் மட்டும் கேஸ் போடுகிறீர்களே (காதலா காதலா ஹிந்திப் பதிப்பு மேல் தேனப்பன் கேஸ் போட்டார்).. அப்போது நீங்கள் அடிக்கும் இந்த ஈயடிச்சான் காப்பி மீது ஒரிஜினல் படமெடுத்தவர்கள் கேஸ் போட்டால்?

    அவ்வளவே எனது வாதம். மட்டுமில்லாமல், நான் பஞ்ச் வசனத்துக்கு அடிமையானவன் என்று உங்களுக்கு யார் சொன்னது? எனக்குத் தமிழில் பிடித்த நடிகர் யாருமில்லை நண்பரே.. என் கோபம் என்னவெனில், கமல், தான் ஒரு பெர்ரிய அறிவுஜீவி போல் காட்டிக்கொள்கிறாரல்லவா? ஆனால், அவரது சமுதாயப் புரிதல், மிக மிக அசிங்கமானது. அவர் ஒரு முஸ்லிம் எதிர்ப்பாளர். . உண்மையில் இபடி இருந்துவிட்டு, ஏன் பெரிய புரட்சியாளர் போல் நடிக்க வேண்டும் என்பதுதான்….




  71.  

    சபாஸ் சரியான போட்டி !!!!!!!!!!!!!!




  72.  

    சபாஷ் சரியான போட்டி !!!!!!!!!!!!!!




  73.  

    ஒரு நல்ல நடிகன்…..நல்ல படைப்பாளிதான்…ஆனால்.இந்த காப்பியடிச்சத சொல்லி இருக்கலாம்….

    ஹேராம்…..அதுல இருக்குறது உண்மை…அதுல கமல் இந்துத்துவத்த தூக்கி பிடிச்சத விட…அதோட கோர முகத்த காட்டினதுதான் உண்மை…ஏற்கனவே நடந்ததான் அதுல காட்டி இருப்பாரு…

    plagiarism – you can’t stop it unless the people truly gives the credit to the owner…but the truth is the ignorance of the fans makes the creator taking this chance to make themselves superior…

    சொல்லப்போனா தமிழ் திரையுலமே ஹாலிவுட்ட நம்பித்தான்
    இருக்காங்க…சங்கர்…மணி…..இந்த லிஸ்டுல சேராத ஆட்கள விரல் விட்டு எண்ணிடலாம்….

    one kind request – what is the exact limit of inspiration and plagiarism(copying)…

    My opinion : You can’t erase plagiarism in this media world….




  74.  

    Ek Ladka Ek Ladki’, a remake of “Overboard” with Neelam playing Goldie Hawn and Salman for Kurt Russell.
    • ‘Malamaal’ is a remake of the movie Brewster’s Millions where Naseeruddin Shah plays the role of Richard Pryor.
    • ‘Mayor Saab’ is a remake of the movie Dave where Kamal Hassan does a fairly good job trying to be Kevin Kline.
    • “Pyaar ka Saaya” is a copy of “Ghost”
    • “Bade Miyan Chote Miyan” is a copy of “Bad Boyz”
    • Chachi 420 was a remake of “Mrs. Doubtfire”. However, Kamal Hassan did a decent job trying to be Robin Williams.
    • Badshah copy of ‘Nick of time’, plan of killing a minister by her husband.
    • Yes Boss Indian remake of “For Love or For Money” with Shahrukh playing Michael J Fox
    • Yeh Dillagi (Sabrina) with Kajol cast in the role of Audrey Hepburn
    • Zalzala – Starring Dharmendra is a is a remake of Mcanna’s Gold.
    • Yes Boss – A copy of ‘ The Concierge’, with Shah Rukh playing the role of Michael J. Fox….except for the job description.
    • Badshah is a combination of Rush Hour and In a Nick of Time.
    • Mann (An Affair to Remember – Aamir Khan playing Cary Grant. This film did’nt bother to change much)




  75.  

    Aitbaar (Dial M for Murder – Raj Babbar plays Ray Milland, Dimple reprises Grace Kelly)
    • Zalzala (McKenna’s Gold – Dharmendra playing Gregory Peck !!!)
    • Baazigar (Kiss before dying, remade with Shah Rukh reprising the Matt Dillon role)
    • Akele Hum Akele Tum (Kramer vs Kramer, remade with Aamir Khan doing a fairly good job of Dustin Hoffman)
    • Agni Sakshi (Sleeping with the enemy, with Nana Patekar hamming his way through, and manisha Koirala doing a Julia Roberts)
    • Daraar (Sleeping with the enemy, a very close remake, with Arbaaz Khan doing a reasonable job of the psycho husband)
    • Do Kaliyan (Parent Trap, with two Neetu Singhs replacing the original Hayley Mills)
    • Farz, Mr. Bond, Bond 303 (All cheap attempts at undoing all of 007’s good work)
    • China Gate (Seven Samurai murdered by a super-retarded bunch)
    • Main Azaad Hoon (Meet John Doe – Amitabh doing a Gary Cooper)
    • Ghulam (On the Waterfront – Vikram Bhatt’s slap to Elia Kazan)
    • 100 days (Eyes of Laura Mars – with Madhuri Dixit doing Faye Dunaway’s bit)
    • Hatya (Witness – Harrison Ford played by Govinda !)
    • Criminal (Fugitive – Harrison Ford played by Nagarjuna !!!)




  76.  

    நண்பரே,

    உங்கள் ஆதங்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது. அவரது சுயசரிதையிலாவது எழுதுவாரா என்று காத்திருக்க வேண்டியதுதான்.

    நிறைய விடயங்களை தெரிந்து கொள்ளும் முன்பாக பார்த்த நாயகன், அன்பே சிவம், குணா, இந்திரன் சந்திரன் போன்ற படங்களை நான் ரசித்தேன் என்பதை என்னால் மறுக்கவியலாது. தற்போதுதான் படம் வெளியாகும் முன் அது என்ன படத்தின் தழுவல் என்பதை நண்பர்கள் போட்டு உடைத்து விடுகிறார்களே.




  77.  

    Sauda (Indecent proposal – Robert Redford’s consummate nightmare – a remake with Sumeet Saigal)
    • Chori Chori (It happened one night – Raj Kapoor and Nargis doing Gable and Colbert)
    • Dil Hai Ke Maanta Nahin (It happened one night – Mahesh Bhatt’s attempt at emulating Capra)
    • Ek Ruka Hua Faisla (12 Angry Men, redone reasonably with KK Raina playing Henry Ford)
    • Raffoo Chakkar (Some like it hot with Paintal playing Jack Lemmon!)
    • Ram Shastra (Hard to Kill with Jackie Shroff matching Steven Seagal’s histrionic ineptitude)
    • Chachi 420 (Mrs Doubtfire – better make-up, but poor everything else)
    • Pyar to hona hi tha (French Kiss – with a pathetic Ajay Devgan attempt at Kline)
    • Man Pasand (Pygmalion with superham Dev Anand as Higgins, Tina Munim as Eliza)
    • Lakhon wali baat (Fortune Cookie remade with Basu Chatterjee trying to be Billy Wilder)
    • Satte Pe Satta (Seven Brides for Seven Brothers remade with Amitabh Bachchan)
    • Andar Bahar (48 hrs, with Anil Kapoor making a pathetic attempt at being Eddie Murphy)
    • Khalnayika (Hand that rocks the cradle redone with Anu Agarwal)
    • Pehla Pehla Pyar (Roman Holiday ripoff with disproportionate Rishi Kapoor as Gregory Peck)
    • Insaaf ka tarazu (Hemingway sisters’ Lipstick redone with Zeenat Aman)
    • Parichay (Sound of Music with Jeetendra playing Julie Andrews !!!!)
    • Fareb (Unlawful Entry with Suman Ranganathan turning Indian Ray Liotta, Milind Gunaji’s rocker’s wild)




  78.  
    Ram

    கருந்தேள், நீங்க இங்கே குறிப்பிட்ட படங்களையெல்லாம் நான் பார்த்ததில்லை. அவர் உலக சினிமாக்களை காப்பி அடித்திருக்கலாம். ஆனால் இதன் மூலம் கமலின் உழைப்பை நாம் சந்தேகிக்க முடியாது.

    உதாரணத்திற்கு வெட்னெஸ்டே, ஒரு வெற்றி பெற்ற படத்தை அச்சு பிசகாமல் அப்படியே தந்திருக்காலாம், மிகவும் மெனக்கெட வேண்டியதில்லை.
    ஆனால், கமல் தயாரித்த உன்னைப் போல் ஒருவனில் வரும் வசனங்கள் என்னைப்பொருத்தவரை மிகவும் கூர்மையானவை. இதன் பின்னால் அவர் வசனகர்த்தாவுடன் செய்த உழைப்பு புலப்பட்டது. ஹிந்தி வெட்னெஸ்டே படமானது கமல் உழைப்பின் மூலம் மேலும் மெருகேரியது என்றே சொல்வேன்.

    வெட்னெஸ்டே படத்தை அவர் தயாரித்தது வணிக ரீதியாக என்று சொல்வதை விட, அந்த படத்தின் கருத்துகள் கடைகோடி தமிழர்களுக்கு சென்று சேர வேண்டும் என்று நினைத்திருக்கலாம். அது போல், தொப்புளில் பம்பரம் விடவும், ஒரு குத்தில் பத்து பேரை சாய்கத்தல் என்று குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டும் தமிழ் இயக்குனர்கள் மத்தியில், (இனையம் இல்லாத காலத்தில் இருந்தே) உலக சினிமாவை தமிழர்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம்.

    இது என்னுடைய தனிப்பட்ட கருத்து…




  79.  

    Access said :
    மேட்டர இப்படி கொட்டுருங்களே! நீங்க profile-வோட comments எலுதுங்கள்.
    நாங்க ஒன்னும் சொல்ல மாட்டோம்.




  80.  

    கமல் காப்பி அடித்தார் என்பதை ஆதாரங்களுடன் வெளியிட, அடுத்தவர் எழுதிய பக்கத்தைதான் பதிவரும் காப்பி அடித்து எழுதியிருக்கிறார். “கமல்ஹாஸனின் முக்கியப் படங்கள் என்று அழைக்கப்பட்டு வரும் படங்கள் எல்லாமே, ஆங்கில மற்றும் உலகப் படங்களின் ஈயடிச்சாங்காப்பி என்பது எனது வாதம்.” — அடுத்தவர் வாதத்தை உங்களுது வாதம்னு சொல்றது யாரோ பெத்த பிள்ளைக்கு நான்தான் அப்பா அப்படின்னு சொல்வதுபோல் உள்ளது. மத்தபடி பதிவில் சொல்லப்பட்ட கருத்துகளை முற்றிலுமாக ஒத்துக் கொள்கிறேன்




  81.  

    நம் ‘ஹாலிவுட்’ டின் (வருங்கால) முதல் தமிழ் இயக்குனர் (கருத்து உபயம் தத்துவஞானி ரஜினி அவர்கள்) திரு ஷங்கர் அவர்கள் சுஜாதாவின் உதவியோடு ஆரமபித்த கதை தான் ரோபோ. முதலில் கமல் நடிப்பதாக சொல்லப்பட்டு , பின்பு ஷாருக் கான், அஜீத் வரை போய் பின்பு ரஜினியிடம் முடிவடைந்தது(!) ஷங்கரின் தேடல். இந்தியனில் ‘அக்கடான்னு நாங்க ஒட போட்டா’ என்ற பெண் விடுதலைக்கான சிறந்த பாடல் நினைவிருக்கும். அதில் கமல் ஒரு ரோபோ நாயை கட்டி கூட்டி வருவார். அதில் இருந்து தான் ஷங்கருக்கு இந்த ரோபோ மேல் ஒரு ‘இது’ வந்திருக்கும் என்பது என் அபிமானம்




  82.  

    கமல் காப்பி அடித்த ஆங்கில படங்கள் நான் காப்பி அடிக்கவில்லை நண்பரே தகவல் பகிர்ந்து கொண்டேன்




  83.  

    HE copied more movies like this.. but these kamal fans wont accept that.

    leave this hollywood movies.. For wednesday(unnai pol oruvan) itself.. he gave interview in TV as his own story and creation.

    but apart from that, he is a gud actor. Bad director/story teller.




  84.  

    அன்பே சிவம் என்னக்கு மிகவும் பிடித்த படமான போர்றேஸ்ட் கும்ப் இன்ப்லுன்சே forrest gump மாதவன் கமல் ரயில்வே ஸ்டேஷன் சீன் அப்படியே காட்சி அல்ல கவிதை




  85.  

    king khan did that forrest gump scene from tom hanks in my name is khan.very subtle.human emotions very subtle.மிகை படுத்தாமல் எடுப்பதில் கமலுக்கு கமல் தான் underplaying characters




  86.  

    ஆங்கில படத்தை விடுங்கள் தமிழ் சினிமா புவனா ஒரு கேள்வி குறி ரஜினி சிவகுமார் நடித்தது மறுபடியும் ரங்கா ரஜினி கார்டே மணி நடித்தது அதே கதை கரு ,இரண்டு நண்பர்கள் நல்லவன் கெட்டவன் ஆகிறான் ,கெட்டவன் நல்லவன் ஆகிறான்,




  87.  

    நண்பர்கள் இப்படி தான் கமல் காப்பி அடிக்கிறார் என்று சொல்லி நான் மிகவும் நொந்து சொன்னது பேசாமல் தெரு கூத்து பண்ண போக வேண்டியது தான் ,கமல் அதை கூட அன்பே சிவமில் விட்டு வைக்கவில்லை




  88.  

    //@ access – நீங்கதானே அப்பவே gopiன்ற பேர்ல வந்து கமெண்ட் போட்டது? ;-) ஐபில கண்டுபுடிச்சேன்… ;-) சரிதானே//

    நண்பரே,
    தங்கள் அறிவுக்கு இந்த தமிழ் நாடேஅடிமை , நான் access இல்லை. நான் சாதாரண வாசகன். அவர்(access) எவ்வளவு சிறப்பாக அவர் கருத்தை வெளியிடுகிறார்.
    ஒரு வேண்டுகோள்:
    நீங்கள் Software Quality Analyst ஆனதிர்க்கு networking ல போயிருக்கலாம்.




  89.  

    வணக்கம் கருந்தேள் அவர்களே, என்னை தமிழ்நாட்டின் கடைசி குடிமகனாக வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் சொன்ன ஆங்கில படங்களின் பெயர்களை கூட நான் உங்கள் பதிவைப்பார்த்துத்துதான் தெரிந்திருக்கிறேன். படங்களை அல்ல. உண்மையை சொல்ல வேண்டுமானால் நீங்கள் தமிழ் சினிமா பார்க்கும் நிலையை தாண்டி விட்டீர்கள். கமல் படம் அல்ல இனி நீங்கள் இந்திய படமே பார்க்க முடியாது ஏனெனில் எல்லாவற்றிலும் காப்பி இருக்கும். ஆனால் நாங்கள் அப்படி அல்ல இன்னும் கமல் படமே புரியாமல் என்னடா படம் எடுக்கீறான் தலையும் புரியல வாலும் புரியலன்னு சொல்லிட்டு இருக்கோம். நாங்க எப்போ உலக சினிமா பார்க்கிரோமோ அப்போ கமலை கிழிப்போம்.. அது வரைக்கு பொருத்துக்கங்க. அதுவரைக்கு நீங்க தமிழ் சினிமா பார்க்காதீங்க.. அதான் உங்களுக்கு நல்லது.




  90.  

    இன்னொரு விஷயம் தெரியுமா அவர் தன்னோட சொந்த தயாரிப்பில் ரொம்ப பணம் செலவு செய்து நடிக்க மாட்டார் எடுதுகாட்டகா கடைசியாக பத்து வேடம் போட்டாரே, தசாவதாரம் தயாரிப்பாளர் கையை கடித்தது அவர்க்கு தான் தெரியும்




  91.  

    it is about media literacy though u belong to different profession u must appreciate other profession too. ஹிந்தி படம் சாஜன் சல்மான் சஞ்சய் தத் நடித்தது அந்த படத்தை பிரபு ரமேஷ் அரவிந்தை வைத்து டூயட் படம் எடுத்தார் பாலசந்தர் உங்களுக்கு எல்லாம் நினைவு இர்ருக்கும் என்று நினைக்கிறன்.same story.same film.




  92.  

    பாரதி ராஜாவின் புதுமை பெண் அப்படியே சொல்ல மறந்த கதை ,அங்கே பெண் இங்கே ஆண் மிகவும் புத்திசாலிதனமான தழுவல் ,உங்களுக்கு புரியும் படி சொன்னால் சந்தோஷ் சுப்ரமணியம் ஹீரோ போச்செச்சிவே பாதர் , அபியும் நானும் அதே கதை ஹெரோஇன் பெண்.possessive father in both films ,one is for son other is for daughter.




  93.  

    french film amelie scene guiding blind man copied in ghajini film asin guiding blind man with description very nice scene நல்ல விஷயம் எங்கே இருந்து வந்தது என்று பார்க்காமல் எப்படி இர்ருக்கு என்று மட்டும் பாருங்கள் ,ஒரு தமிழ் பேசும் நபரை அல்லது தமிழ் மட்டும் தெரிந்த பிடித்த நபரை கோட்பாதர் நோவேல் கொடுத்து படிக்க சொன்னால் கோட்பாதர் இங்கிலீஷ் படம் பார்க்க சொன்ன சொன்னால் முடியுமா ,கமப ராமாயணம் போல தமிழ் சினிமாவிற்கு கமல் செய்யும் மிக பெரிய சேவை அதை இழிவு படுத்தாதீர்கள் அதுவும் கமலின் பொன்விழா ,உபகாரம் செய்யவில்லை என்றாலும் உபத்திரவம் செய்யதீர்கள்,பாரட்ட முடியவில்லை என்றாலும் தூற்றாமல் இருக்கலாம் இல்லையா ,அப்படி கமல் தழுவிய ஆங்கில படம் போல சிறப்பாக இல்லை என்றால் தூற்றலாம்,ஐம்பது ஆண்டு காலம் ஆங்கிலம் தெரியாமல் ஆங்கிலம் படத்தை தழுவாமல் இர்ருந்து இருந்தால் கமல் எபோதோ கலை உலகில் இருந்து விலகி கல்யாண மண்டபம் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் முல்டிப்லெக்ஸ் கட்டி சில்லறை எண்ணி கொண்டு இருப்பார் கமல்




  94.  

    “அவரது சமுதாயப் புரிதல், மிக மிக அசிங்கமானது. அவர் ஒரு முஸ்லிம் எதிர்ப்பாளர். . உண்மையில் இபடி இருந்துவிட்டு, ஏன் பெரிய புரட்சியாளர் போல் நடிக்க வேண்டும் என்பதுதான்….”

    கண்டிப்பாக கருந்தேள்,
    நேற்று இரவே இதனை பின்னுட்டத்தில் எழுதி உங்களினுடைய பதிவின் நோக்கம் பாதிக்கபடும் என்று கருதி பிறகு அழித்து விட்டேன்,

    “உன்னை போல் ஒருவனில்” ஒரு வசனம் வரும் “இன்ஷா அல்லாவா” என்று அவர் மனைவி கேட்பதாக அந்த வசனம் வரும் போது திரைஅரங்கில் பலத்த சிரிப்பொலி எழுந்ததது அடங்க வெகுநேரம் ஆகிற்று,
    இன்னோரு காட்சியில் “அதான் இரண்டாவது பொண்டாட்டி இருக்குல்ல” அப்படி என்று மறு படியும் அந்த சிரிப்பொலி அடங்க வெகு நேரம் ஆகிற்று,

    அந்த ஒரு நிமிடம் அந்த திரைஅரங்கில் சிரித்த அவர்களின் உள் உறங்கும் விலங்கு வெளிப்பட்டு மறைத்து,
    அந்த ஒட்டு மொத்த மிருகங்களின் ஒரு உருவமாகதான் அந்த நொடி கமல் தெரிந்தார்,
    இது போலதான் அவரின் சமுதாய புரிதல் மிகவும் கீழ்தரமாக அவரின் பல படங்களில் வெளிப்படும்,

    ச.செந்தில்வேலன் / S.Senthilvelan…..:)

    “Some Times Something Is Better Than Nothing But Always Nothing Is Better Than Some Stupid Things”

    பாடல் காட்சிகளே இல்லாமல் எடுக்கப்படும் மூன்றாம் தர படங்கள் ஏற்படுத்தும் பாதிப்பினை விட தவறான சமுக புரிதலின்னோடு எடுக்கப்படும் படங்கள் விதைக்கும் எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படுத்தும் பாதிப்பு அதிகமாக இருக்கும்.




  95.  

    Few scenes in “Vettaiyadu Vilayadu” are lifted from “The Mystic River” (Sean Penn starrer) – the scene where Kamal ‘discovers’ the mass burial site inside a forest in US.




  96.  

    சமுதாய புரிதல் ஹிந்து மஜோரிட்டி வாழும் நாட்டில் ஒரு தசவதாரம் படத்தில் முக்ஹுந்த முகுந்தா பாடல் போட முடியல தயாரிப்பாளர் எதிர்ப்பு அதையும் மீறி பாடல் பதிவானது ,முஸ்லிம் நண்பர் அதை ரிங் tone பயன் படுத்த தயங்கு கிறார் ,இது தான் சமுதாய் புரிதல்?




  97.  

    ஊனமுற்றோர் என்ற சொல்லே நீக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கும் போது, குருட்டு என்ற வார்த்தையை(2 முறை) உபயோகித்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது.




  98.  

    This is gud one.
    I really appreciate it.
    I jst started here.
    I ll share my thoughts abt this blog




  99.  

    கமல் உலகப் படம் காபி அடித்தாலும் , உள்ளூர் படம் காபி அடித்தாலும் அவரின் நடிப்பை ஆராதிக்கும் ரசிகன் நான்.

    நாளையே கமல் ரிக்ஷா காரன், காதலுக்கு மரியாதை, அங்காடி தெரு போன்ற படங்களை காபி அடித்து நடித்து வெளியிட்டாலும் பார்ப்பதற்கு நான் தயார்.
    இதை சொல்வதற்கு எனக்கு எந்த வித வெக்கமும் அவமானமும் இல்லை.




  100.  

    physically challenged differently abled? lean on me copied by kamal as nammavar ,நம்மவர் படம் லியன் ஒன மீ lean on me படம் காப்பி,,மோர்கன் பிறீமன் morgan freeman கேரக்டர் அக்டோர் actor நல்ல நடிப்பு அதை நீங்க பார்த்தாலே தமிழில் எடுக்க நினைப்பீர்கள் ,கமல் அதை செய்து தவறு இல்லையே ,பிறகு சிரஞ்சீவி மெகா மாஸ்டர் என்ற பெயரில் சுரேஷ் கிருஷ்ணா டிறேக்டியன் direction வணிக ரீதியாக வெற்றி ,அதே படம் மலையாளத்தில் லைப் இஸ் பெஆபிபுள் மோகன்லால் நடித்து படம் சரியாக போகல LIFE IS BEAUTIFUL very good film ,malayalam film also flop.




  101.  

    மோகன்லால் படம் லைப் இஸ் பெஔதிபுல் பாசில் டைரெக்டர் ,நீண்ட நாட்களுக்கு பிறகு அடி தடி சண்டை இல்லாமல் ஒரு போவேர்புள் கேரக்டர் வாத்தியார் ,சிறந்த படம் சிறந்த நடிப்பு எல்லாம் இருந்தும் வீண் ,நம்மவர் படம் கூட யாருக்கு பிரோயோசனம் அட நம்ம கரண் அவர்களுக்கு நல்ல ஆரம்பம் தமிழ் படங்களில் பிள்ளையார் சுழி போட்டது




  102.  

    சரி சரி 100 கமென்ட்டு வந்திடிச்சி…எல்லாரும் கலைஞ்சி போங்க…!




  103.  

    குணா படம் தான் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் அவர் சோனியா அகரவலை தூக்கி செல்லும் காட்சிகள்,வணிக ரீதியாக படம் குணா வெற்றி பெறவில்லை ஆனால் கொடைக்கானலில் குணா கவேஸ் caves கமலின் உழைப்பிற்கு பெயர் சொல்லும் இடம்,காதல் கொண்டேன் கூட கொஞ்சம் குணா கொஞ்சம் ராபின் வில்லியம்ஸ் நடித்த குட் வில் ஹன்டிங் பட ஹீரோ கேரக்டர் இன்ப்லுன்சே தனுஷ் கேரக்டர்.loosely based on that character,குட் வில் ஹன்டிங் ,லியன் ஒன மீ வாய்ப்பு கிடைத்தால் அவசியம் பாருங்கள் good will hunting ,lean on me.




  104.  
    sai

    நீங்க சொல்றத வெச்சு பாத்தா “Sergio leone” கூட உலகின் தலை சிறந்த இயக்குனர் என்ற பட்டத்திற்கு லாயக்கான்வரா என்ற கேள்வி எளும்…

    ஏன்னா…அவருடைய முக்கிய படங்கள் குரசேவா வின் படங்களின் கதையைக் கொண்டவை.

    குணா, ஹேய் ராம் போன்ற படங்கள் காப்பி என்று சொன்னீஙன்னா..உங்களையும் அரை வேக்காட்டு உலக சினிமா ரசிகர் என்றே நினைக்கத் தோன்றுகிறது!

    வெற்றி விழா ஒரு நாவலின் தழுவல்..அது தவறு என்றால் உலகின் தலை சிறந்த இயக்குனர்கள் பலரும் நாவலைக் கொண்டே எடுத்திருக்கின்றனர்.

    சதி லீலாவதி – இந்த படத்தில் கமலின் நடிப்பு ஒன்றே போதும்…அவர் “Genius” ஒரு என்பதை நிரூபிக்க…அந்த சக்திவேல் கவுன்டர் ஒன்றும் காப்பி இல்லயே…ஹிஹி

    In cinema its not based on from where it has been prepared – but what the artist brings new to the table and kamal has brought a lot of his own to the table and thats where he signs more than anyone else




  105.  

    தமிழில் அதன் பச்சை மண்வாசனையோடு எந்தவித அயல் தாக்கமோ நகல் எடுத்தலோ இல்லாமல் அக்மார்க் ஒரிஜினல் படத்தை எடுத்தவர் நடித்தவர் அண்ணன் ராமராஜன் அவர்களே.[இவர் படத்தையும் யாரும் காப்பி அடிக்கமுடியாது என்பது குறிப்பிடத் தக்கது] ஆகவே கமல் மாதிரி அந்நிய மோகிகளை புறக்கணித்து ராமராஜன் அவர்கள் படத்தை திரும்ப திரும்ப கண்டு களித்து நமது திரைப்பட ரசனையை மென்மேலும் வளர்த்துக் கொள்வோமாக.




  106.  

    மிக சிறந்த உதாரணம் ஆன்டி நோ ௧ கோவிந்தா ஹிந்தியில் கமல் கூட போட்டியாக அதே நேரத்தில் எடுத்தார் அவ்வை ஷண்முகி ஹிந்தி வடிவம் சாச்சி ௪௨௦ அப்புறம் நம்ம பிரசாந்த் ஆனழகன் எடுத்தார் ,ஓகே கோப்பி அடித்ததில் யாருக்கு வெற்றி ,நம்ம கமலுக்கு தான்,பாவம் கோவிந்தா மற்றும் பிரசாந்த் ,வரலாறு மற்றும் நிகழ் களம் வெற்றியை தான் கொண்டாடும் ,கமலின் வெற்றி சக ப பிரசாந்தை விட கோவிந்தா விட கமலின் படம் சிறப்பானது .சரித்திர சான்று.சோ சரித்திர நாயகன் கமல்.கமலின் நாயகன் ஹிந்தி வடிவமான தாயவன் வினோத் க்ஹன்ன நாயகன் ரீமேக் கிட்ட கூட நெருங்க முடியல .அமிதாப் அவர்கள் ஒரு கைதியின் டயரி ரீமேக் பண்ணினார் ஹிந்தியில் அதற்கு முக்கிய காரணம் கதை இருந்தாலும் கமலின் அந்த கிளைமாக்ஸ் குதிரை மேல சிலை போல இருக்கும் நடிப்பு ,அமிதாபின் படங்கள் ரஜினி அவர்கள் ரீமேக் செய்து உள்ளார் ,அனால் கமல் படம் ஹிந்தியில் அமிதாப் செய்தார்,தேவர் மகன் அணில் கபூர் செய்தார் ,அனால் கமல் போல வரல.அது தான் உண்மை




  107.  

    I think Mahaanadhi has shades of Hardcore (1979) Aboorva Sahodharargal has shades of Corsican brothers(1941). I’m not sure if there are substantial proof videos for this.




  108.  

    aunty no 1 govinda and chachi 420 released at the same time.i mean kamal released ahead of govindas auny no 1,prasanth tried his best in analagan but same story copy neengale sollunga yaar copy adichathil best.creation means hiding your resources.we r dealing with recreation,so we r re creating everything. re creation மறு உற்பத்தி அதில் யார் சிறந்தவர் என்று பார்க்க வேண்டும்,recreation




  109.  

    anpulla karunthel kannayiram-

    it is difficult to dismiss kamalahasan that he has been plagorising thro all his carrier. some one can show the evidence that most of the hollywood films are plagorised from any east european or japanese films. for example sliding door was from blind date of kieslowski and magnifiiant seven from seven samurai or tarantino films from godards narratives.

    you can question kamal for not admitting his inpiration from hollywood films. that is the fair approach.

    in my opinion almost all the tamil directors steal concepts or scenes or camera angles from european or hollywood films including the big ones.

    how about film critics? look at charu’s criticism on maniratnams guru, a wednes day – please compare his ubsurd criticism of unnai pol oruvan the tamil remake of a wednesday- he apperciate a wednesday as a best anti terrorist film and condemning unnai pol oruvan as hindutuva – kenath thanmaaga irukkirathu. the same charu talking about anti globalisation and plachimada in his one political article and appreciate maniratnams guru as he says he did not know the economics of the film, a film praise the economic ways of reliance group. where is the value here? and see his review on naan kadaval and his u turn afterwards on that movie. you people quote him as a valued critic. i could not understand.

    other than that the vicious circle created by esra and jayamohan, the so called literary tamil screen writers. the one who write sindhu sama veli like film is bitterly attacking john abraham. he could not understand the importance of amma ariyan. world film giants appreciate the film with valued reasons. jeyamohan is the bullshit of tamil cinema.

    and this esra says balachnadars aval oru thodra kathai is nothhing to do with khataks mega tara tag in his website article, not in any mainstream journal articles. and he even goes on to tell recognise balachander as the great indian direcors, ray and khatak. where is the value based critiism here?

    these three writers are the curse of tamil film criticism. biased tamil cinema screen writers approach of films in general.

    other wise i learn a lot from ur articles

    anpudan yamuna rajendran




  110.  

    நீங்க சொல்வது போல கமல் எந்த இங்கிலீஷ் படத்தில் இருந்து சுட்டேன் என்று டைட்டில் போட்டால் நல்லவர் ,அதற்க்கு தமிழ் சினிமா பட்ஜெட் இடம் கொடுக்குமா ரிக்ஹ்த்ஸ் வாங்க ,எல்ல இசையும் தியாகராஜ கீர்த்தனைகள் மற்றும் மேற்கத்திய இசை பீதொவேன் அல்லது மொசார்ட் அடிப்படை கொண்டது தான் அவர்களுக்கு எந்த மியூசிக் டைரக்டர் கிரெடிட் கொடுகிரரா ,எதுவுமே ஒரிஜினல் கிடையாது எல்ல இல்லகனங்களும் யாரோ நம் முன்னோர்கள் சரிகம பத நி போல பண்ணி வைதுலார்கள் ,ஆகவே கமல் கூட விதி விலக்கு அல்ல .எல்லாரும் ரே ச்ரியடோர்ஸ் தான் recreation business yellaarum re creators thaan ,பீதொவேன் மொசார்ட் பல வருன்டங்கள் உழைத்து தான் இலகனங்களை வகுத்தனர் அதை கூட நாம் சரியாய் பயன் படுத்த சிலருக்கு தான் தெரியும்,நல்ல இசையை ரசிக்க நல்ல ரசனை வேண்டும்,நல்ல கமலின் சினிமாவை ரசிக்க நல்ல ரசனை வேண்டும் ,




  111.  

    வாழ்த்துக்கள் :
    உங்கள் சமீபத்திய பதிவில் என் தாணை (கமல் ) தலைவனை பிரித்து மேந்துவிட்டீர்! சந்தோசம்.( தானே?!)
    தொடரட்டும் உங்கள் பதிவு. ஆவலுடன் அடுத்த பதிவை நோக்கி….

    ஒரு கேள்வி :
    உங்களை போன்று எத்தனை பேரு உலக திரைப்படங்களை பலவும் பார்க்க ரெடியா இருக்காங்க. ?

    நான் :
    ஒரு சாதாரண ரசிகனாய் அவரை இன்னும் ரசித்து கொண்டிருக்கும் பலரில்… நானும் ஒருவன். அவரது நடிப்பை இன்னும் பலபேருக்கு புரியவில்லை. இப்படி இருக்கும் என்னைபோன்ற மக்களுக்கு நீங்கள் சொல்லும் உலக சினிமா எட்ட தூரமே. அப்படி ஒருவேளை உலக சினிமாவை ரசிக்கும் நிலை என்னை போற்ற சாதாரண ரசிகனுக்கும் கிடைக்குமானால் அன்று கமலை நானும் வெறுப்பேன் உங்களைபோன்றே. அதுவரை…… என்று கமல் நடிப்பை ரசிக்கும் ஒரு சாதாரண ரசிகன்.

    முடிவு:
    நிறைய திரை துறையை சார்ந்த நண்பர்களுக்கு கமல் ஒரு முன்னுதாரணம், இந்த காப்பி விஷயம் முதற்கொண்டு. பணத்திற்காகவோ / தன் சுய விளம்பரத்திற்காகவோ அவர் இதனை செய்வதாவே இருந்தாலும் பல நாடுகளில் இருக்கும் நல்ல திரைப்பட விசயங்களை அவர் எடுத்துவந்து தருவதை… தரபோவதை ஆதரியுங்கள். விஷயம் எங்கிருந்த வந்தா என்ன சார். ரசியுங்கள்.

    தொடர்ந்து இது போன்ற பல திரை முகங்களை கிழித்து எழுதுங்கள்.




  112.  

    //இந்தப் பதிவு ஈயடிச்சான் காப்பி என்ற விஷயத்தை, பின்குறிப்பிலேயே தெளிவாகக் கொடுத்திருக்கிறேனே.. பதிவையே ஒழுங்காகப் படிக்க முடியாத நமக்கு, பெரிய லபக்குதாஸ் போன்ற இந்தப் பின்னூட்டம் எதற்கு?;-) .. காமெடி பண்னாம போயி வேலையைப் பாருங்க.. //

    நான் சொல்ல வந்தது என்னன்னா … அடுத்தவன் பதிவ காப்பி அடிச்சி, காப்பிய பத்தி ஏன் பதிவு போடனுன்னு கேட்டேன். அதுக்கு எதுக்கு லபக்குதாசுன்னு பலரும் யூஸ் பண்ணின வார்த்தையை காப்பி அடிக்குறீங்க? சொந்தமா நாலு வார்த்தையில பதில சொல்லுங்க தல.
    என்ன இருந்தாலும் நிறைய மெனக்கெட்டு இருப்பது தெரியுது. கமல திட்டாதீங்க , தல தான் தறுதலைகளுக்கு வழிகாட்டி.




  113.  

    செந்தில்வேலனை அப்படியே காப்பி அடிக்கிறேன்(இங்கயும் காப்பியா-)

    தல சினிமாங்கறது வியாபாரம். ரசிகர்களுக்கு தேவை நல்லப்படங்கள். அதில் நல்லப்படங்களை சுட்டுநமக்கு புடிக்கறமாதிரி கொடுக்கறதுல எந்ததப்பும் இல்லயே…

    அப்படியாவது நல்லப்படங்களை கொடுங்கடான்னு மற்ற இயக்குனர்களையும் சொன்னா அதையும் பண்ணாம அரைச்சமாவையே அரைக்கிறானுங்களே…இதை என்ன சொல்றது…???

    அதிகமான உலகப்படங்களை நீங்க பார்க்கறதுனால அது தெரியுது…உலகப்படம்னா என்னண்ணே தெரியாத கடைகோடி தமிழனக்கு கமலின் படம்தான் உலகப்படமா தெரியுது…. அந்த கடைகோடி தமிழனில் நானும் ஒருத்தன்….:)) நன்றி தல

    சுடறதுல தப்பு இல்ல…எந்த படத்தை சுடறோம்…எப்படி பாலிஷ் பண்ணிக் கொடுக்கறோம்ங்றதுதான் முக்கியம்…

    வேட்டைக்காரன், குருவி மாதிரிசுட்ட படம் எடுத்தாத்தான் தப்பு :) )




  114.  

    அப்புறம் சாருவோட நிகழ மறுத்த அற்புதம்…நானும் முன்னாடியே படிச்சிருக்கேன்… தமிழ்ல உலகப்படம் வரலைங்கறது சாருவோட கவலை…பாவம் அதுக்குப்போய் செத்துபோன சிவாஜி, எம்ஜிஆரை கூட வம்பிழுக்கிழுத்திருப்பாரு… என்னைப்பொறுத்தவரைக்கும் அது ஒரு இத்துப்போன கட்டுரை…




  115.  

    Sakarai illatha ooruku Ilupai poo thaan sakkarai. Naanjil pradaap, you write one story. I will copy your story. Then you know how you feel. Steeling others work is criminals thing. Whether it is welath or art, it is same. Kamal steals others work. Then he should not cry for thirutu DCD.




  116.  

    கருந்தேள்,

    அருமையான அலசல். இன்னும் பல படங்களில் சில காட்சிகளை மட்டும் உருவியிருப்பார். மகளிர் மட்டும் படத்தில் வரும் நாகேஷ் செத்த பிணம் காமெடி “WEEKEND WITH BERNEY” படத்தின் வருவது.




  117.  

    ரஜினியின் அருணாசலம் படம் “millions” படத்தின் காப்பி. அந்த படத்தில் 30 மில்லியன் டாலர், அருணாசலத்தில் 30 கோடி ருபாய்.




  118.  

    ^ ‘Millions’ is a 2004 film. ‘Arunachalam’ is a 1997 film. And there are no similarities between the two films whatsoever.




  119.  

    sathyama…… you made my day……. i ll sleep peacefully tonight




  120.  

    எங்கே தமிழ் சினிமா ,MGR FILMS MOSTLY ROBINHOOD FILMS,jai shankar films cow boy films n james bond films, rajini style all credit goes to cow boy films n satruhan sinha hindi star,kamal english films pola eduthaal ungallukku porukkala




  121.  

    survival theory beg or borrow or steal,steal ideas to survive.அதற்கு யாருமே விதி விலக்கு இல்லை,




  122.  

    உலக நாயகன பிரிச்சு மேய்ந்து விட்டாயே தலைவா… இனி அவர் உலக நாயகனா? இதுல ஆஸ்கர் கிடைக்கவில்லை என்றவுடன் அது அமெரிக்கர்களால் அமெரிக்கர்களுக்கு தரப்படுவது என்று ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டார்…

    இந்த ரெண்டு படமும் இந்தந்த படத்தின் காப்பி தானான்னு சொல்லுங்க…

    Green Card (1990, Andie McDowell, Gerard Depardieu) – NALA DHAMAYANDHI

    Memories of Murder (Korean Movie) – VETTAIYADU VILAIYADU




  123.  

    Green Card (1990) Release Date:
    11 January 1991 ,Michael Madhana Kamarajan is a 1990 film imdb source
    A M ரத்தினம் தயாரிப்பில் லண்டனில் காமேஸ்வரன் என்ற பெயரில் கமல் எடுபதாக இருந்த படம் பின்னர் நல தமயந்தி ஆனது ,அதாவது கிரீன் கார்டு மைகேல் மதன காமராஜன் ரிலீஸ் ட்டே பார்க்கவும் ,லண்டனில் காமேஸ்வரன் மைக்கல் மதன காமராஜன் பாகம் இரண்டு ,பின்னர் மாதவன் நடிக்க வெளியானது ,ஹிந்தியிலும் ராம்ஜி லோண்டோன்வலே என்ற பெயரில் ரிலீஸ் ஆனது ,நீங்கள் சொன்ன கொரியன் படம் என்னக்கு தெரியாது கொலைகாரன் கிரிம் ஸ்டோரி எனக்கு உடன் படு கிடையாது .all said and done kamal has three successive hits all his previous releases recovered their cost,whereas rajini kuselan official flop




  124.  

    மணிசித்திரதாலு சந்திரமுகியாகி கேரளாவிலேயே 100 நாட்களுக்கு மேல் … சிறந்த பாப்புலர் படமாக தமிழ் படம்,மலையாள படத்தை தமிழ் ரீமேக் செய்து கொஞ்சம் கூட அவமானம் இல்லாமல் வெறும் கோடிகள் கிடைபதர்காக எதையும் செய்யலாம் ,தமிழ் படங்கள் மலையாளத்தில் சக்கை போடு போடும் போது கத பறையும் போல் ரீமேக் படு தோல்வி ,சந்திரமுகியில் மாட்ட வேண்டியது,குசேலனில் மாட்டி கொண்டது தமிழ் சினிமாவின் மானம்,ஒரு தமிழ் சினிமா ரசிகனாக மிக பெரிய அவமானம் ,மணிசித்திர தாழ் காபி அடித்து திருப்பதிக்கே லட்டு கொடுத்தது ,ஒரு சாதாரண ஸ்ரீனிவாசன் படம் கத பறையும் போழ் வெற்றி ஆபீசியால் ரீமேக் குசேலன் கொடுக்கலையே .கமல் ஒன்றும் ஆங்கில படத்தை எடுத்து ஆங்கிலேஎர்களுக்கே கொடுக்கலையே சந்திராமுக்ஹி போல ,லைப் இஸ் பெஆபிபுள் பெஸ்ட் பிலிம் ஆஸ்கார் வாங்கினாலும் அது சார்லி சாப்ளின் படம் போல தான் இருந்தது என்பதை கருந்தேள் உலக சினிமா மேதைகளுக்கு நினையு ஊட்ட விரும்புகிறேன் ,காபி அடித்தால் அவரது padam மறுக்க படவில்லை ,கமல் படம் பெஸ்ட் போறேய்க்ன் foreign பிலிம் category தான் நோமினடே nominate ஆகும் ,




  125.  

    அன்பின் கருந்தேள்,

    என்னத்த சொல்ல…சீக்கிரமே ஒரு எதிர்வினை ஆத்திர வேண்டிதான். மண்டபத்துல சொல்லியிருக்கேன். நெக்ஸ்ட் மீட் பண்றேன். கமல வம்பிழுக்கிறதே இவிங்களுக்கு வேலையாப் போச்சு.(இவிங்க= கருந்தேள் + கருந்தேள் குரு சாரு!! )




  126.  

    குசேலனின் மாபெரும் வெற்றியால் கமலுக்கு ஒரு வருடம் லே ஆப் pyramid sai mira பிரமிட் சிமிர காங்ற்றச்ட் காசு என்ன நேரம் இல்லாதால் கமல் படம் மர்மயோகி ட்ரோப் ஆனது ரஹ்மான் ஸ்ரேயா எல்லாருக்கும் அட்வான்ஸ் கொடுத்து ட்ராப் ஆனது.தமிழுக்கு இன்னும் ஒரு காபி படம் கிடைத்து இருக்கும் ,தமிழ் சினிமா கொடுத்து வைக்கவில்லை ,one more copy braveheart lookalike film tamil filmdom missed.




  127.  

    Roberto Benigni’s La Vita é Bella
    (Life is Beautiful) happens to be the most popular Holocaust comedy It is complete
    with Benigni’s trademark Chaplinesque style; the film is awfully
    simplistic about a catastrophe as great as the Jewish Holocaust.Benigni simply turns the entire event into “a game” to save his little
    son the shock of the situation. While his intentions of showing that
    human love and a sense of humour can conquer Hitler are good – as
    overwhelmed viewers will tell you – the film is too removed from
    Holocaust reality. I can’t help wonder whether Benigni was trying to
    copy his idol Charlie Chaplin yet again




  128.  

    எப்படி மிஸ் பண்ணினார் நம்ம உலக நாயகன் life is beautiful copy panna.சாப்ளின் செல்லப்பா அவர் அபூர்வ சகோதரர்கள் பண்ணிய குள்ளன் உருவம் சிறுமியை மகிழ்விக்க குள்ளனாக மாறி காட்டுவார் புன்னகை மன்னனில் தயவு செய்து யாரவது கமல் குள்ளனாக மாறுவதற்கு எந்த ஹாலிவுட் படத்திலிருந்து சுட்டார் என்று சொல்லவும் பல வருடங்களாக தேடியும் கிடைக்க வில்லை




  129.  

    //bogan said…
    தமிழில் அதன் பச்சை மண்வாசனையோடு எந்தவித அயல் தாக்கமோ நகல் எடுத்தலோ இல்லாமல் அக்மார்க் ஒரிஜினல் படத்தை எடுத்தவர் நடித்தவர் அண்ணன் ராமராஜன் அவர்களே.[இவர் படத்தையும் யாரும் காப்பி அடிக்கமுடியாது என்பது குறிப்பிடத் தக்கது] ஆகவே கமல் மாதிரி அந்நிய மோகிகளை புறக்கணித்து ராமராஜன் அவர்கள் படத்தை திரும்ப திரும்ப கண்டு களித்து நமது திரைப்பட ரசனையை மென்மேலும் வளர்த்துக் கொள்வோமாக//
    :)

    Superabu!!




  130.  

    கருந்தேள்,நேரம் இருப்பின் கமலைப் பற்றிய‌ என்னுடைய‌ இந்தப்பதிவை படிக்கவும்!




  131.  

    romba naala article.indian cinema la orginality kedayathu.but copy adikarthum satharna vishyam ila.naala vishyangalai copy adikarthu thaapum ila.sontha karpanai nu scene podrathu konjam ila romba too much.

    DASAVATHARAM Ulagam Suttrum Valiban Oda THazuval.




  132.  

    i think copying is in indian blood , even mahabaratha was largely lifted from greek literature the character krishna is indian version of hercules , kambar wrote ramayana from valmiki . so its unfair to blame kamal and maniratnam , after all they are just being indians [:)]




  133.  

    oh great dasavatharam 10 roles ulagam sutrum valibhan thaluval ,this is news to me.yes all mgr fans said only the scientist character has mgr influenceஉலகம் சுற்றும் வாலிபன் ஒரு கேரக்டர் தான் விஞ்ஞானி ,கதை நாயகன் கிருமி,




  134.  

    சகலகலா வல்லவன் MGR மாட்டுகார வேலன் காப்பி PL NOTE KAMAL NAMES IS VELAN LIKE MGR,உயர்ந்த உள்ளம் SIVAJI FILM படிக்காத மேதை காப்பி




  135.  

    என்ன செய்வது காப்பி அடிப்பது கமலின் பொது உடைமை கருத்துக்கு உடன்பாடு ,எப்படி ராஜ் கமல் பிளம்ஸ் ஆஸ்தான நாயகி கவ்தமி அவர்கள் இப்போ அவர் நாயகி ஆகி விட்டார் தனி வாழ்கையிலும்




  136.  

    காப்பியையெல்லாம் விடுங்க. கமலுடைய படங்கள்ளல்ல எல்லாத்தையும் மீறி துருத்திக்கொண்டிருக்கும் அவருடைய புத்திசாலித்தனத்தை காட்டத்துடிக்கும் அந்த urge ரொம்ப வெறுப்பேத்தும். காப்பியையெல்லாம் மீறி அவருடைய காமெடி படங்களை கொஞ்சம் ரசிக்கலாம். கமலை வுடுங்க. அம்மா கொடுக்கும் கண்ணாடி துகள் கலந்த சோறை தெரிந்தே சாப்பிட்டுட்டு சூர்யா செத்துப்போகும் நந்தா பட கிளைமாக்ஸை ஒரு பழைய மலையாள படத்துல பார்த்த போது அப்படியே ஷாக்காயிட்டேன்! Et tu, Bala?




  137.  
    Mr

    காப்பி அடிப்பதில் தப்பில்ல.. தமிழ் நாட்டில எத்தன பேரு நீங்க சொன்ன ஆங்கில படங்களை பாத்து இருப்பாங்க???
    அப்படி பட்ட நல்ல கதைகளை நம்ம மக்கள் கிட்ட கொண்டு சேர்க்கும் முயற்சினு கூட நாம இதை எடுத்துக்கலாம்ல…
    ஓரிஜின்ல் ஸ்க்ரிப்ட்னு மொக்க படம் எடுக்கும் ஆளுகள விட கமல் எவ்வளவோ தேவலாம்…
    சில பேரு ஒரே கதைய வெச்சு தொடர்ந்து நாலு படம் எடுக்கறாங்க.. அதெல்லாம் நல்லது இது மோசமா… போங்க ஸார்




  138.  

    நானும் அவருடைய ரசிகன்தான். அவருடைய நடிப்புக்குத்தான் ரசிகன்தானே தவிர, அவருடைய கதை உண்மையானது, அங்கே இருந்து சுட்டது என்று பார்ப்பது கிடையாது. ஒவ்வொரு படத்திலும் மற்ற நடிகர்களை விட அவர் எவ்வளவு வித்தியாசப்பட்டிருக்கிறார் என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, நீ சொன்ன மாதிரி இப்படி காப்பி பண்ணி நடிக்கிறார் என்பதெல்லாம் தேவையில்லாத விவாதம். இது ஒரு முட்டாள்தனமான கட்டுரை.




  139.  

    @ஈசீஆர் //கமலைப்பத்தியும் மணியைப்பத்தியும் எழுதுன நீ எத்தன படம் எடுத்திருக்கே? பின்னூட்டம் போடுறவன் எல்லாம் பதிவு எழுதணும்னு சட்டம் இருக்கா என்ன?//

    பதிவு போடுறவன் எல்லாம் படம் edukanumnu சட்டம் இருக்கா என்ன?//

    Read more: http://www.karundhel.com/2010/09/blog-post.html#ixzz0yqGO5OVf
    Under Creative Commons License: Attribution




  140.  

    நல்ல கட்டுரை. ஆனால் காப்பி என்பது கமலில் தொடங்கியது அல்ல.
    அது தியாகராஜ பாகவதர் காலத்தில் திரு. பி.யூ.சின்னப்பா, ரஞ்சன் போன்றவர்கள் நடித்த போதே தொடங்கிவிட்டது. அபூர்வ சகோதரர்கள் (பழையது!!) உத்தம புத்திரன் என்று ஒரு கதையையே (அதுவும் ஆங்கில படத்தின் காப்பியையே!) மீண்டும். மீண்டும் எடுத்து நாசமா போனவர்கள் நாம்.
    திரு. சிவாஜி எம்.ஜி.ஆர் காலத்திலும் இந்த காப்பி கதை தொடர்ந்தது.
    புதிய பறவை, மீண்டும் உத்தம புத்திரன் (இதை எத்தனை தடவை காப்பி அடிப்பார்களோ!) என்று பட்டியல் நீளும். புதிய பறவை “சேசிங் தி ஷடோ” வின் காப்பி. பிறகு திரு. கமல் காப்பியுலகில் நுழைந்து அதை கொஞ்சம் மசாலா தாளித்து காப்பி கலாசாரத்தை புதுப்பித்து பெயர் பெறுகிறார். கமலின் “எனக்குள் ஒருவன்” வந்த போது அவர் அதை நேரடியாக ஆங்கிலத்திலிருந்து காப்பி அடிக்க வில்லை. அந்த சமயம் திரு. ரிஷிகபூர் நடித்து ஹிந்தியில் வந்த “கர்ஸ்” என்கிற படத்தை பகுதி பகுதியாக காப்பி அடித்தார். மணி ரத்தினம் பற்றி பேசவே வேண்டாம். அவர் கொஞ்சமும் கூச்சமில்லாமல் இதிகாசங்களையே எடுத்துவிட்டு அது தனது சொந்த கதை என்று சொல்லிக் கொள்வார். ஆக இந்த காப்பி கூட்டத்தில் கமல் மட்டும் விதிவிலக்காக நினைத்தது நம் தவறு.

    ஒரே ஒரு வருத்தம். நிறைய உலக சினிமாக்களை கமலுக்கு அறிமுகம் செய்த அனந்து சார், கமலுக்கு கொஞ்சம் நன்றியுரைப்பதைப் பற்றியும் சொல்லி கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும்.

    இனி க‌ம‌ல் காப்பி அடித்தார் என்று சொல்வ‌தை விட‌ ப‌ல ஆங்கில‌ சினிமாக்க‌ளைத் த‌மிழ் ப‌டுத்தினார் என்று சொன்னால் மிகையாகாது.

    தமிழன் சொந்தமாக யோசித்து கதை எழுதி படமெடுக்க கூட திராணியற்றவனா?

    ஒரே ஒரு வருத்தம். நிறைய உலக சினிமாக்களை கமலுக்கு அறிமுகம் செய்த அனந்து சார், கமலுக்கு கொஞ்சம் நன்றியுரைப்பதைப் பற்றியும் சொல்லி கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும்.

    இனி க‌ம‌ல் காப்பி அடித்தார் என்று சொல்வ‌தை விட‌ ப‌ல ஆங்கில‌ சினிமாக்க‌ளைத் த‌மிழ் ப‌டுத்தினார் என்று சொன்னால் மிகையாகாது.




  141.  

    ரொம்ப சிம்பிள் லாஜிக். இப்ப உங்களுக்கு சாரு ரொம்ப பிடிச்சிருக்கறனால, அவரைப் பத்தின குறைகள் எதையும் உள்வாங்க உங்க மனசு தயாரா இருக்காது இல்லையா?!

    அப்படித்தான்.. எனக்கு கமல்!! :)




  142.  

    talk english walk english laugh english live english velaikkaran dialogue illai amitabh bachan namaklal dialoque copied by rajini,so talk english walk english laugh english live english so why dont u accept kamals english film influence,all so called original plays of shakespeare has been filmed by great directors of malayalam and bengali cinema.i have read shakespeare means r they fools i am talking about film makers to get influenced by shakespeare,,வெள்ளைக்காரன் கோட் சூட் போட்டால் நீங்களும் சூட் கோட் போட்டுக்குவீங்க ,அவங்க கார் பைக் வாங்கின நீங்களும் பைக் கார் வாங்குவீங்க பப்ளிக் போக்குவரத்து திறம்பட செயல்பட பொது மக்கள் யாரும் நினைப்பது இல்லை போராடுவதும் இல்லை உங்களுக்கு உலக சினிமா தெரிந்ததால் கமலின் சினிமா வெறும் மட்டமான சீப் சினிமா ,மனசை தொட்டு சொல்லுங்கள் பட்ச அடம்ஸ் ராப்பின் வில்லியம்ஸ் பிலிம் கடைகோடி தமிழனை சென்று அடைந்தது என்றால் அது கமலை சாரும் ,வெறும் சாருநிவேத சொன்னது போட்டு கமலை சிறுமை படுத்தும் எண்ணம் ,ஷேக்ஸ்பியர் டிராமா போல எடுத்த மலையாளம் பெங்காலி சினிமாவை என்ன என்று சொல்வது ,நீங்கள் ஷேக்ஸ்பியர் டிராமா புரியும் எனபதால் அவர்கள் சினிமாவில் ஷேக்ஸ்பியர் காபி அடிக்க கூடாது சொந்தமாக கற்பனை செய்து படம் எடுக்க வேண்டும் ,அப்படி கதை எடுக்க எத்தனை வகை உள்ளது பணக்காரன் எழை,அதிகார வர்க்கம் அடி பணியும் வர்க்கம் இப்படி எத்தனை எடுக்க முடியும் ,பட்ச அடம்ஸ் ஹுமன் எமொடிஒன்ஸ் மனிதன் அமெரிக்காவிலும் ஒன்று தான் இங்கும் ஒன்று தான்,அங்கே வெற்றி பெர்ற்றால் தான் இங்கே கூட வெற்றி பெற வாய்ப்பு.நாம் அன்றாடம் உபயோகிக்கும் தண்ணீர் அகோபின கூட அமெரிக்க மற்றும் வெள்ளைக்காரன் உபகோகிதால் தான் நாமமும் உபயோகிப்போம். அது போல கமலின் படங்கள் ஆங்கில படங்கள் போல தான் இர்ருக்கும்,ஒரு கோட்பாதர் கமல் பண்ணவில்லை என்றால் மைக் மோகன் போல வெறும் பாட்டு டான்ஸ் எவ்வளவு நாள் தாக்கு பிடிக்க முடியும்.




  143.  

    GOOD NEWS FOR ALL CINEMA FANS.ANIL KAPOOR ALMOST LUCKY MASCOT FOR THE FILM SLUMDOG MILLIONAIRE ,AND THE ONLY ONE POPULAR ACTOR PRESENT AT OSCAR PRESENTATION SO THAT LUCK KAMAL WILL ALSO GET SORRY TAMIL CINEMA WILL GET தமிழ், இந்தியில் தயாராகும் படத்தில் கமலுடன் நடிக்கும் அனில்கபூர் தமிழ், இந்தியில் தயாராகும் படத்தில் கமலும், அனில்கபூரும் இணைந்து நடிக்கின்றனர். இந்திப்பட உலகில் அனில்கபூர் பிரபல நடிகராக உள்ளார். அவர் சமீபத்தில் ஒரு பட விழாவில் பங்கேற்க சென்னை வந்தார். அப்போது கமலை சந்தித்து பேசினார். இருவரும் சேர்ந்து நடிப்பதென அச்சந்திப்பில் முடிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான கதையை தயார் செய்யும் படி அனில்கபூரிடம் கமல் கூறியுள்ளாராம்.http://www.maalaimalar.com/2010/09/07110908/tamil-actor-kamal.html இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார். அனில் கபூருக்கு கமலை மிகவும் பிடிக்கும். கமலின் சலங்கை ஒலி, தேவர் மகன் படங்களின் இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார். கமல் திறமையான நடிகர். அவரது தீவிர ரசிகன் நான என்று சக நடிகர்களிடம் கூறுவது உண்டு.
    இந்தி நடிகர்-நடிகைகள் தென்னிந்திய நடிகர்களை பாராட்டுவது இல்லை. அமிதாப்பச்சன் போன்ற பெரிய நடிகர்களைத்தான் புகழ்வார்கள். அவர்கள் மத்தியில் கமல்தான் பிடித்த நடிகர் என்று அனில்கபூர் துணிச்சலாக கூறி வந்தார். தற்போது அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிட்டியதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார். கமலை சந்தித்த போது சேர்ந்து படம் பண்ணலாம் என்றார். அவருடன் இணைந்து நடிப்பதை பெருமையாக கருதுகிறேன் என்றார் அனில்கபூர். OK please let us know kamal the copycat going to copy which film from hollywood.so this post is releavant




  144.  

    பாலசந்தரின் குழந்தையும் தெய்வமும் அப்பட்டமான காப்பி. நம்மவர் க்ளாஸ் ஆ்ப் 84 படத்தின் காப்பி என்று படித்திருக்கிறேன். மகாந்தியின் சிறைக் காட்சிகள் ஆங்கிலப் படத்தின் காப்பியாமே? ஜூலி கணபதி ஒரு ஆங்கிலப் படத்தின் அப்பட்டமான காப்பி.




  145.  

    பாலச்சந்தர் தயாரிப்பில் வந்த மழலை பட்டாளம் கூட காபி தான் …அதை இயக்கியது நடிகை லட்சமி என்று நினைக்கிறேன்




  146.  

    //ஜூலி கணபதி ஒரு ஆங்கிலப் படத்தின் அப்பட்டமான காப்பி.//

    stephen king எழுதிய நாவல் misery அதே பேரில் படமானது.அதன் அப்பட்டக் காபி தான் ஜூலி கணபதி.ஆனா,மிசெரி புக்கை compare பண்ணுறப்ப ஜூலி பரம சாதுவான படம்.




  147.  

    உழைப்பு தெரிகிறது!




  148.  

    Copy adichi padam edukradhu pathi ivlo periya blog ennu theriyala. Idhuku ‘Best Adaptation’ adpni oru award iruku. Oru sarasari Tamilanuku puriyadha english padatha Tamilanuku puriyara madhiri eduthadhuku peru ‘appatamana copy’ illai ‘Adaptation’. Ivlo research panna neenga indha blog-a adaptation apdingra positive note-la post panniyirundha oru mariyadhai vandhirukum.. aana kamal copy adichada naa kandupichiten apdingra veeen perumai than therinjadhu… sorry




  149.  

    பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.. பதில் பின்னூட்டம் போட்டு மாளவில்லை என்பதால், அதில் நண்பர்கள் எழுப்பியுள்ள சில கேள்விகளுக்கு என் பதில் இதோ:

    1. கமல் செய்வது தேசசேவை.. அயல்நாட்டுப் படங்களை அவர் காப்பியடிப்பது, எங்களுக்கு அந்த நல்ல படங்களைப் பற்றித் தெரியப்படுத்துவதற்காகத்தான்.

    பதில் – அப்படியென்றால், டைட்டிலில், நன்றி – என்று அந்தப் படத்தின் பெயரைப் போடலாமே? அப்புறம் ஏன் ஜீனியஸ்தனமாக, அந்தப் படத்தை என்னமோ தானே கனவுகண்டு எடுத்ததாக ஒரு வெட்டி பந்தா? கமலின் நோக்கம் மிகவும் சிம்பிள். ஒரு படம் நன்றாக இருக்கிறதா? அடி காப்பியை ! அவ்வளவே ;-)

    2. கமல், இந்தியப்படங்களை ரீமேக் செய்தார். அப்போது க்ரெடிட் கொடுக்கவே செய்தார்.. ஆனால் ஹாலிவுட் படங்களைக் காப்பியடித்தபோது, க்ரெடிட் கொடுக்காததற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

    பதில் – கமல், இந்தியப்படங்களை ரீமேக்கியபோது, அவர் மட்டும் க்ரெடிட் கொடுக்காமல் விட்டிருந்தால், அடி பின்னியிருப்பார்கள் ;-) . அதுதான் புத்திசாலித்தனமாக க்ரெடிட் கொடுத்துவிட்டார். அவரது குயுக்திக்கு இது ஒரு எக்ஸாம்பிள் ;-)

    மற்றபடி, கமல், தானே சொல்லிக்கொள்வதுபோல், ஜீனியஸோ, அல்லது தமிழ் சினிமாவைக் காப்பாற்ற வந்த ‘ஒலக நாயகனோ’ இல்லை. ஒரு சாதாரண, காப்பியடித்தே பேர் வாங்கும் நடிகர் மட்டுமே என்பது என் கருத்து. இதைப்பற்றி மேலும் விவாதிக்க நான் தயார். மெயில் செய்யுங்கள்.




  150.  

    @ பாலா – //ரொம்ப சிம்பிள் லாஜிக். இப்ப உங்களுக்கு சாரு ரொம்ப பிடிச்சிருக்கறனால, அவரைப் பத்தின குறைகள் எதையும் உள்வாங்க உங்க மனசு தயாரா இருக்காது இல்லையா?!

    அப்படித்தான்.. எனக்கு கமல்!! :) //

    ஆஹா.. என்ன தல.. ரைட்டு.. இதைப்பத்தி பேசுவோம்.. சாருவை எனக்கு பர்சனலா மிக நல்ல பழக்கம் உண்டு. அதேபோல், அவரைப் பத்தின குறைகள் எதையும் உள்வாங்க நான் தயாரா இல்லைன்னு உங்களுக்கு யார் சொன்னது? அவரைப் பத்தின விமர்சனங்களைப் பல பேர் எங்கிட்ட சொல்லிருக்காங்க.. நீங்களும் தான். நானும் இந்த விஷயத்துல ஓப்பன் ஹார்ட்டட் தான் ;-) . அவருகிட்டயே அந்த விமர்சனங்களைப் பத்திப் பேச என்னால் முடியும்.

    நீங்க எழுதிருக்குற இந்த வரிகளைப் பார்த்தால் – “இப்ப உங்களுக்கு சாரு ரொம்ப பிடிச்சிருக்கறனால, அவரைப் பத்தின குறைகள் எதையும் உள்வாங்க உங்க மனசு தயாரா இருக்காது இல்லையா?!” – பயங்கர சிரிப்பா இருக்கு தல.. ;-) வேணும்னே வம்பிழுக்கப் பாக்குறீங்க.. ;-) என் மனசு எப்புடி இருக்குன்றது உங்களுக்குத் தெரியவே இல்லைன்னு தான் இது காமிக்குது :-) .. உங்க வாதத்தின்படியே வெச்சிகினாலும், எனக்கு சாரு ரொம்ப நல்ல பழக்கம். அவரைப்பத்தி நல்லாத் தெரியும். ஸோ, இந்த விமர்சனங்களால் நான் பாதிக்கப்பட மாட்டேன் ;-) .. அதுபோல், கமல் உங்களுக்குப் பழக்கமா? அவரைப் பத்தி நான் இப்புடி எழுதினதை, நீங்க அவர் கிட்ட வெரிஃபை பண்ணி, அவரு தான் ‘ஒலகநாயகன்’.. தமிழ்ப்படங்களைக் காப்பாத்த வந்த பரமபிதா.. இந்தக் கருந்தேள் எழுதுனது ஒளறல்.. அந்த ஆங்கிலப்படங்கள், கமலோட படங்களைப் பார்த்துத் தான் காப்பியடிச்சி எடுத்தது.. அப்புடீன்னு அவராண்டையே சர்ட்டிஃபிகேட் வாங்கிப் போடுவீங்களோ? ;-) என்ன தல..

    நீங்களுமா இந்த செண்டி மயக்கத்துல மாட்டிக்கினீங்க ? மத்தவங்க வெறித்தனமா கமலை ஆதரிக்குறது எனக்குப் புரியுது.. ஆனா நீங்களும் அதையே சொல்றீங்களே.. அதுதான் சுத்தமா புடிபடல.. ஆட்டு மந்தைல நீங்களும் ஒருத்தரா? அப்ப ரைட்டு ;-) .. மேலே… எல்லாத்துக்கும் மேலே , ராம்ஜி யாஹூன்னு ஒருத்தர் கமெண்டு போட்ருக்காரு.. அதை இங்கே தருகிறேன்..

    //கமல் உலகப் படம் காபி அடித்தாலும் , உள்ளூர் படம் காபி அடித்தாலும் அவரின் நடிப்பை ஆராதிக்கும் ரசிகன் நான்.

    நாளையே கமல் ரிக்ஷா காரன், காதலுக்கு மரியாதை, அங்காடி தெரு போன்ற படங்களை காபி அடித்து நடித்து வெளியிட்டாலும் பார்ப்பதற்கு நான் தயார். இதை சொல்வதற்கு எனக்கு எந்த வித வெக்கமும் அவமானமும் இல்லை//

    இதுபோலவே தான் இருக்கு உங்க கமெண்ட்டும் ;-) டிட்டோ ! ;-) .. அவர் அப்புடி எழுதலாம். ஆனா நீங்களுமா? Et tu?




  151.  

    தேளு வா ராசா வா நம்ம வீட்டுப்பக்கம் ஒரு தபா எட்டி பாருமே!!!




  152.  

    apple computers invented graphical user interface microsoft copied that and won the lawsuit against apple,copied and won the lawsuit also,GUI i am using this system means i am grateful to apple,u r using microsoft the greatest criminal in mankind winning lawsuits if u say kamal the criminal,better twentieth century fox and warner brothers come here and open an office and put lawsuit on indian films no one can copy english films or battle is left to lawsuits not in intellectals like charunivedha and karundhel,so far never did that,மற்றபடி, கமல் நடிப்புக் கடவுள், அவர் தான் ‘ஒலகநாயகன்’ போன்ற பொய்மையான மாயைகளை நான் நம்புவதில்லை நண்பா.. அவர் அதிலும் காப்பி மன்னன்.. டஸ்டின் ஹாஃப்மேன் என்று ஒரு ஹாலிவுட் நடிகர்.. அவரது நடிப்பை இம்மியளவும் பிசகாமல் பிரதியெடுப்பதில் கமல் கில்லாடி. என்னைப் பொறுத்த வரை, காப்பியடித்தே பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு கிரிமினல் அவர். அவ்வளவே. நன்றி.
    September 8, 2010 1:10 AM கமலை குற்றவாளி கூண்டில் ஏற்றும் முன்னர் முன்னபாய் producer டைரக்டர் ராஜ்குமார் ஹிரானி ஆகியோரை எப்போது கூண்டில் ஏற்றுவது என் சினிமா நண்பர் சொன்னது patch adams பட்ச அடம்ஸ் என்ற இங்கிலீஷ் பிலிம் முன்னபாய் என்ற பெயரிலும் வசூல் ராஜா ஷங்கர் dada m b bs telugu உபேந்திரா m b b s kannada என்று அணைத்து இந்திய மொழிகளில் எடுத்து சம்பாரித்த பணம் பல பல கோடிகள் ஹாலிவுட் கம்பெனி கோட்டை விட்டது.நீங்க blogsuit போட்டாச்சு எப்போ lawsuit courts copyright acts ,let the lawsuit decide,till then enjoy ulaga nayaganin tamil version or desi version of hollywood films.




  153.  

    kamal not just dustin hoffman is totally wrong ,u say robbin williams,eddie murphy also,tootsie ,kramer v/s kramer lady role dustin hoffman பண்ணிய போதே இங்கே அவ்வை சண்முகம் அவர்கள் பெண் வேஷம் போட தெரிந்தவர் ,அதை காபி அடித்தார் ,so dustin hoffman also criminal in your words from mohan blog.நாடகங்களில் அந்த காலத்தில் பெண்கள் நடிக்க மாட்டார்கள் அதை ambalinga thaan பெண் வேஷம் poduvanga ,mrs doubt fire kathai என்று periya kathai illai ,kamalin mami get up indian version thaan rasikka therindhaal rasiyungal anaal கமலை criminal adhu idhu என்று yenna chinna pulla thanama irrukku ,vanakkam tamilagam from sun tv where they got title
    good morning america popular tv show athu pola copy adithaal thaan pizhaikka mudiyum,yevano kandipucha theory vetkam manam illamal xerox center thaan ஆல் college campus ,
    yella college campus verum copy adikka thaan solli kodukiranga ,atharkku satchi growing number
    of photostat copy stations near ஆல் educational institutions அதை xerox என்று sonnal kooda thavaru ,photostat copies yedukkum places,xerox is a கம்பெனி name அதை kooda e adichan copy pola xerox xerox என்று peyar vaithu ullanar.




  154.  

    namma ooru karaingaluku sondha arivay kidaiyathunu solla varingala ?




  155.  

    ஆப்பிள் நிறுவனம் பெருந்தன்மையான பதில் என்ன தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் நம் கண்டிபிடிப்பை உபகோயாக படித்தினாலும் அந்த கிராபிகல் உசெர் இண்டர்பாசே நாம் கண்டிபதது தானே மக்களை சென்று சேர்ந்தது என்று சந்தோஷத்தில் சொன்னது ,ஹாலிவுட் கம்பெனி கூட கமல் படம் பார்த்தால் இந்த மாதிரி சொல்ல கூடும்,இதனால் சாருவிற்கும் கருந்தேளுக்கும் ஏன் வேகிறது ,தேள் என்றல் கொட்டி தான் அக வேண்டுமா ,ஆபத்து வரும் பொது தானே கொட்ட வேண்டும் ,யாரை பார்த்தாலும் ஏன் கொட்ட வேண்டும் விஷத்தை




  156.  

    star plus tv channel ignored regional markets of southern region so sun tv took advantage c the political power and the market and market valuation of sun,similarly hollywood ignored all indian language market they can make the story and sell english film to india and negotiate with indian film makers for a remake in indian langauages for a reasonable price.அதிகார பூர்வமாக ஆங்கில படங்களை ரீமேக் rights வாங்கி எடுக்கும் களம் வெகு தூரம் இல்லை ,




  157.  

    கமலை பற்றி அவதூறாக பேசிய சாரு தப்பித்து கொண்டார் ,ரஜினி போல ரேபெஅட் பிசினஸ் கமலுக்கு மிகவும் குறைவு அதனால் கமல் ரசிகர்கள் டைம் வேஸ்ட் பண்ண மாட்டாங்க ,ஆனால் நுனாலும் தன வாயால் கெடும் என்பதை போல சாரு அவர்கள் நித்யானந்தா விசையம் மூலம் மாட்டி கொண்டார் ,அது போல தான் கருந்தேளும் மாட்டி கொள்ள போகிறார் ,காலம் தான் பதில் சொல்லும்




  158.  

    இங்கே கமல் காப்பியடித்தது பற்றி பேச்சு வரும் போது, குசேலன் தோல்வி பற்றி ஆக்ஸஸ் பேசக்காரணம் என்ன?

    கமலின் எவ்வளவோ படங்கள் தோல்வியடைந்த போது, அவர் பணம் திருப்பி தந்தாரா? ஆனால், ரஜினி குசேலன் படத்தில் வெறுமே நடிகராக இருந்த போதிலும் (தயாரிப்பாளர் அல்ல…), சுமார் 10 – 15 கோடிகள் வரை திருப்பித்தந்ததாக தெரிகிறது….

    இதே கமல் மர்மயோகிக்காக பிரமிட் அவர்களிடம் அட்வான்ஸாக பெற்ற ரூ.10 கோடியை திருப்பிக்கேட்ட போது, அது தான் ஒரு வருடம் காத்திருந்ததற்கான விலை என்று டபாய்த்தது ஞாபகம் இருக்கிறதா?

    இந்த விஷயத்தை கருணாநிதி அளவில் எடுத்துச்சென்று சரி செய்ததாகவும், அதன் பிரதிபலனாக இப்போது உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் “மன்மத அம்பு” (இது எந்த ஃபாரீன் படத்தின் சுடலோ / உல்டாவோ!!) படத்தில் நடிப்பதும் செய்தி….




  159.  

    கமல் காபி அடிக்காவிட்டால் என்ன வேறு யாரும் ஹாலிவுட் படங்கள் காபி அடிப்பது இல்லையா ,மகளிர் மட்டும் 9 to 5 காபி ,மகளிர் மட்டும் ஹிந்தி ரீமேக் லேடீஸ் ஒன்லி ladies only படம் எடுத்து வெளியிட வில்லை கமல்,அதில் தமிழில் நாகேஷ் தேஅது போடி dead body ரோல் கமல் ஹிந்தியில் பண்ணி இர்ருந்தார் ,இப்போ ஹிந்தி மகளிர் மட்டும் ஹலோ டார்லிங் என்ற பெர்யரில் வெளி ஆகி உள்ளது பாஸ் வித் ௩ ச்டப்ப்ஸ் boss with 3 staffs .பார்த்து சொல்லுங்க,criminal charges podunga hello darling producers director actor mela




  160.  

    because of kuselan debacle,pyramid sai mira sivajiyil sambaarichu kuselan vittanga naan business pesala vetri thozhvi copy visaiyam mattum thaan yenakku theriyum ,kamal missed many projects bharat bala 13 steps with asin that one year kamal legal battle time pochu,atharkku karanam kuselan panam maati kondadhu,balachander tiruppi kodukkala rajini thiruppi kodukkala yendru yaaraiyum kurippitu sollala.




  161.  

    குசேலன் படம் பற்றி நான் பேச கூடாதா, மன்னன் ,மாவீரன் பற்றி கூட பேசலாம் ,ரஜினி பட வெற்றி தோல்வி கூட கமல் படங்களை பாதிக்கும்,உதரணமாக குசேலன் தயாரிப்பாளர் கமல் படம் பண்ணினார் ,சும்மா அட்வான்ஸ் கொடுத்து கமிஷன் பிசினஸ் கிடையாது கோர்ட் கேஸ் என்று அலைய யாரும் விருப்ப பட மாட்டார்கள் ,எந்திரன் அடுத்து சன் pictures மிக பெரிய அளவில் மெகா budget படம் கமலை வைத்து தயாரிக்க இர்ருகிரர்கள் அது எந்திரன் வெற்றி தோல்வி பொறுத்து தான் ,இப்போது தெரிந்ததா நான் ஏன் குசேலன் பற்றி பேசினேன் என்று




  162.  

    endiran kooda kamalukkaga panniya kathai thaan sujatha shankar team so எந்திரனை பற்றி பேச கூட கமல் ரசிகர்களுக்கு தான் முன்னுரிமை ,ஏன் என்றால் அது வெறும் ஷங்கரின் சுஜாதாவின் கனவு படம் அல்ல ஹாலிவுட் நல்லவன் கேட்டவன் ஆகிறான் robocop மற்றும் spider man part 3 professor turns villain களவாணி படம் ,களவாணி கிரிமினல் கமலுக்கு தான் ஏக போக உரிமை உள்ளது




  163.  

    Kambakht Ishq,houseful films copied tamil films producer lodged complaint

    சாரு போட பதிவு அவர் போட்டார் இவர் போட்டார் என்று ஏன் வெட்டி பேச்சு நீங்களே காபி லிஸ்ட் அது கூட யாரோ சொன்ன தவகல் உண்மையைய பொய்யா என்று கூட தெரியாது ,வீடியோ ஆதாரம் மட்டும் வைத்து என்ன புண்ணியம் லிஸ்ட் நீங்க தனியா தயார் செய்வது தானே ,அப்போது தான் புலம்பி கொண்டு இர்ருக்கும் தயாரிப்பாளர் தேனப்பன் சாரிடம் காதலா காதலா ,பம்மல் சம்பந்தம் ஹிந்தி ரீமேக் பண்ணி இர்ருக்காங்க ஹௌசெபுள் மற்றும் கம்பத் இஷ்க் சாரிடம் பெர்மிச்சியன் வாங்காமல் சாருவிடம் வாங்கினால் போதுமா என்று தெரியும்




  164.  

    I just want to understand something; When did Kamal claim himself as genius or savior of tamil cinema? Any links on he singing praise of himself? Or is it just the outlook of the people. I am just asking because if someone who is doesnt like Jayakanthan or Charu reads their articles or interview, they will be forced to think that they are blowing their own trumphet. Only people who have a neutral perspective can appreciate the interview. Does the author suffer from same problem??

    //இதுவும், பல பேருக்குத் தெரிந்திருக்கும். ‘Planes, Trains and Automobiles’ என்ற ஆங்கிலப்படத்தின் புத்திசாலித்தனமான காப்பி// The treatment of both the films are different. Copying scenes doesnt come under this category i feel. I want to just know whether you are againt plagiarism on the whole or is it just Kamal??

    And Mrs. Doubtfire is all about how Stuart getting into the house as the housekeeper. Tootsie has nothing in common with Avvai shanmugi as per the article you have linked with (You can enlighten me on this or may be i should see the film). I mean the film you have compared with Tenali goes hand in hand but not the others is what i meant.

    //இதில், பாரப்பாஸ் ஒரு குருட்டுப் பிச்சைக்காரியை எதிர்கொள்ளும் காட்சி, ஹேராமில் அப்பட்டமாகக் காப்பியடிக்கப்பட்டதைக் காணலாம்//.
    I think this can be ruled out as an inspiration. The whole situation was not copied it was just a scene to show the intensity for the situation. This had happened to so many of us. Like even you could have give a metaphor that your fav. author uses when you write something close to your heart. Dont we all??

    Regarding God father, Nayagan contros all these days, I can say that Kamal had copied only the mannerisms and the story is not in many ways directly matching with God father. And I think over various countries the life of gangster’s are more or less same. Aint it?




  165.  

    Sathileelavathi was not the written by Kamal haasan. And Last three films of Balumahendra had heavy influences of other language films for which Balu Mahendra is answerable not Kamal Haasan. I searched and searched but I cannot find a single link (since I am in office i cannot see videos) where he claims himself as great, he just talks about the efforts that are put into the film. Thats clever I would say. I saw title credits as original story for the movie Michael Madana Kama Rajan, for which he wrote the adapted story.

    Again, I am not trying to justify what he did, but still if the post is against plagiarism it should have talked about lot other people also. Or if the post is talking about Plagiarism by a single actor, then i would expect lot of posts on this with different actors or writers. That would make a nice series. But if this post is left alone, the blogger will be merely considered as having aversion over Kamal Haasan and the research and effort gone into this post will not get noticed.

    Right now, In Hindi as well as Tamil, i dont think scenes are orginating from the directors or writers, but from DVD’s. The much lauded Subramaniapuram has shades of Guy ritchie films, in approach. Without the approach Subramaniapuram is just like another cinema I would say. Paruthiveeran is almost another virumandi, without a hyped actor that is all.

    So I was not able to see what point does this post tries to make.

    And I have been a follower of your blog for quite a few days now. Havent commented much but I am a fan of your way of writing. I can see you laud Kim ki duk and introduced lot of films. Since you called Dasavatharam as rubbish, i just wanted to share you what my friends felt about Kim ki duk, They said it was nothing more than good photography and sex. :) .. Personal opinions right.. It seemed like you used some hard language when it can be said in much better way. I would request you to remember the words of good old guy of tamil..
    இனிய உளவாக இன்னாத கூறல்
    கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
    Cheers!

    P.S. Btw. Waiting for the review of Mongol Sequel :)




  166.  

    ஹாலிவுட் super man spider man bat man கூட நம்ம ஊர் ஹனுமான் தான் சாமியோவ் இப்படி கூட சொல்லுவீங்க ,அனுமன் பறப்பதை போல சூப்பர் man பறக்கிறார் ஏன் கிட்ட வீடியோ ஆதாரம் இருக்கு சூப்பர் man படம் அனால் என்ன செய்வது அனுமார் பறப்பது போல நம் இதிகாச கதைகளில் இருக்கு அனால் வீடியோ ஆதாரம் இல்லையே ஹாலிவுட் மேல கேஸ் போட




  167.  

    கமலை பற்றி குற்றம் சொன்னால் அது பொறமை அல்லது ரஜினி ரசிகர்கள , கமல் படம் லோட்டேரி lottery போல பிசினஸ் அடிச்சா ஹிட் இல்லை என்றால் மொட்டை ,சிவாஜி வெற்றிக்கு பிறகு ஷங்கர் எ வி எம் நிறுவனம் அளித்த பங்கு ,குசேலன் படத்துக்கு ரஜினி வாங்கிய சம்பளம் எவள்ளவு அது தான் பேச்சு ,சிவாஜி படத்தின் வெற்றி ஏக போக உரிமை கூட்டு முயற்சி தனி மனிதனுக்கு சொந்தம் என்றால் அவர் ஏன் மலையாளம் படம் ரீமேக் செய்ய வேண்டும் அதிசய பிறவி போல பாபா போல வள்ளி போல செய்யலாம் அல்லவா,சுபெர்ஷ்டரக superstar வந்து முகத்தில் கரி பூசி கொண்டார் ,அதே வேலை தான் ஸ்ஹருக்ஹ shah rukh கான் கூட செய்தார் பில்லு பார்பர் சூப்பர் ஸ்டாராக வந்து கரி பூசி கொண்டார் ,மலையாளம் ஒரிஜினல் நிறைய முறை பார்த்து இருக்கேன் yendra muraiyil குசேலன் பில்லு hindi vadivam thozhvi நிறைய varutham ஏன் என்றால் அது natpai solliya படம் natpu miga periya வெற்றி petru irruka வேண்டும்,mammooty avargal srinivasan கூட irundha natpu guest role panni ரஜினி shah rukh panniyadhu போல padal kaatchigal yendru migai paduthaamal ,srinivasanukkaga செய்தார்,adhuve naan குசேலன் பற்றி pesa karanam.verum calendar dates empty priyadharshanai call panni shah rukh panniyadhu yevvalavu waste innum konja naal porumaiyaga aamir கான் போல nalla kathai select panni irrukalam,nijamana natpu mamooty srinivasan natpu ,அது mohanlal கூட panni irrukalam ,ஏன் என்றால் நிறைய padangal srinivasan mohanlal கூட seidhu ullar.




  168.  

    Access! I have heard people talk in taminglish.. First time seeing a person who type in Taminglish.. Chance less




  169.  

    பிரசன்னாவுக்கு ஒரு பின்னூட்டம் அடித்ததில், ப்ளாகர் எரர் வந்து அவுட் ஆகிவிட்டது ;-(.. வழக்கமாக நோட்பேடில் தான் அடிப்பேன். ஆனால் … யானைக்கும் அடி சறுக்கும் ;-) .. அப்புறமாக அடிக்கிறேன் மறுபடியும் ;-)




  170.  

    hi annasarp.prasanna ramblings sorry its error from google transliteration not my fault blame it on technology cant capture my speed typing and translate just like adnan sami says there is no technology to capture his fastest keyboard playing hands ,
    i am really depressed actor murali passed away today.very recently i have seen video of adharva bana kathadi hero with father murali along with kamal wishing the hero in nakheeran.in




  171.  

    Yes access! Thats an unfortunate demise. If termed in western terms he passed away in very young age. Saw him as a proud father in Coffee with Anu..




  172.  

    எல்லாம் சரி.. கமல் தன்னுடைய முத்தக் காட்சிய கூட சொந்தமா பண்ணல.. அதுவும் காப்பிதானுங்கோ.. லொள் :)




  173.  

    ரஜினி படம் கூட நிறைய காப்பிதான்.. ஆனா, ரஜினியோட ஸ்டைல் அக்மார்க் ஒரிஜினல்.. அவருக்கே உரியது.. உலகத்துல யாரும் பண்ணாதது. ஆனா, கமல் தன்னுடைய படத்துல காட்டுற எந்த நடிப்பும், அவருடையதில்லங்கறது நடுனிலையானவர்களுக்கு தெரியும்.. என்னை பொறுத்த வரையில், ஒரு லூசா நடிக்கிறது ரொம்ப சுலபம்.. அததான் கமல் செஞ்சிக்கிட்டிருக்கார்..




  174.  

    கோட்பாதர் novel by மரியோ புசோ mario puzo says BEHIND EVERY SUCCESS THERE IS A CRIME.(behind every great success there is great crime)கருந்தேள் கண்டு பிடித்து விட்டார் கமல் கிரிமினல் என்று இதை எம லோகத்தில் உள்ள கணக்கு எடுப்பாளர் சித்ரா குப்டனிடம் சொல்லவேண்டாம்? ப்ளீஸ் யார் அவது அவர் போன் நம்பர் ஈமெயில் அட்ரஸ் இர்ருந்தால் அனுபவும் ,நான் கமலின் குற்றத்தை பாஸ் செய்து விடுகிறேன்.ஜோக்ஸ் அபார்ட்.என்னை novel படிக்க கோட்பாதர் படம் பார்க்க தூண்டியதே நாயகன் தான் ,எனக்கு நாயகன் படம் ஏமாற்றி விட்டது ,தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்று சொல்வார்கள் அதே போல சன்னி கேரக்டர் ரொம்ப போவேர்புள் powerful ,நாயகன் சன் (magan) ,அதை வீண் பண்ணி விட்டார்கள் ,நான் நிழல்கள் ரவி கதா பாத்திரத்தை சொல்கிறேன்,எல்லாரும் கமல் என்றாலே நாயகன் நாயகன் என்று பல வருன்டகள சொல்லி வருகிறார்கள் என்னக்கு இந்த மகன் கேரக்டர் டிம்மி பீஸ் ஆனது மிகவும் வருத்தம்.கோட்பாதர் novel படித்து கோட்பாதர் படம் பார்த்து பின்னர் தான் நாயகன் பார்த்தேன்.அதன் பின்னர் ராபர்ட் ளுடலும் robert ludlum bourne identity பெர்னே இதேண்டிட்டி வெற்றி விழா ஆக மாறியது அதுவும் இண்டர்வல் சுச்பென்சே suspense முடிந்தது இரண்டாம் பகுதி வெற்றி வேல் இப்ஸ் IPS என்னால் உட்கார முடியவில்லை உண்மைய சொன்ன ,நோவேல் NOVEL கடைசி வரை சுச்பென்சே SUSPENSE UNPUTDOWNABLE அதை படத்தில் இண்டர்வல் வரை தான் சுச்பென்சே SUSPENSE,நீங்க சொன்ன காபி அடித்த காரணத்தினால் படம் பார்க்காமல் இருக்கவில்லை அந்த நோவேல் NOVEL அந்த ஆங்கில படம் பார்த்ததும் தான் கமல் PADAM பார்க்க தூண்டியது ,ஹாலிவுட் கூட பன்னல வெற்றி விழா ஸ்டோரி கமல் பண்ணும் போது, அதற்க்கு டிரெக்டர் DIRECTOR பிரதாப் போதென் POTHEN மற்றும் சிவாஜி பிளம்ஸ் தான் பாராட்ட வேண்டும்.அதே போல உங்களுக்கு ஏன் ஏற்படவில்லை என்று புரியல,நான் சொல்லியது போல நீங்கள் குற்றம் SONNA நீங்க முழுசா அந்த கோட்பாதர் நோவேல் NOVEL கோட்பாதர் மூணு பகுதி பார்த்து இருக்கீங்க என்று அர்த்தம் ,வெறும் காபி அடிச்சான் காபி அடிச்சான் தான் சொல்றீங்க குற்றம் அதில் என்ன குற்றம் என்று சொல்லல.தமிழ் படம் கோட்பாதர் ஆங்கில படம் போல மூன்று பகுதி எடுக்க முடியாது தான் அதுவே ஒரு மிக பெரிய சவால் ,அந்த சவாலை தமிழ் மக்களுக்கு தன்னால் முடிந்ததை தந்து இருக்கிறார் உலக நாயகன் ,நாயகன் மற்றும் வெற்றி விழா படம் மூலமாக.அதுவே மிக பெரிய விஷயம் டைம்ஸ் பத்திரிக்கை times magazine all time best 100 films namma nayagan irukkar http://www.time.com/time/specials/packages/article/0,28804,1953094_1953146,00.html




  175.  

    //கமல், தானே சொல்லிக்கொள்வதுபோல், ஜீனியஸோ, அல்லது தமிழ் சினிமாவைக் காப்பாற்ற வந்த ‘ஒலக நாயகனோ’ இல்லை. ஒரு சாதாரண, காப்பியடித்தே பேர் வாங்கும் நடிகர் மட்டுமே என்பது என் கருத்து. இதைப்பற்றி மேலும் விவாதிக்க நான் தயார். மெயில் செய்யுங்கள். //

    கமல் மட்டுமல்ல!
    எல்லா மட்டைகளும் ஒரே குட்டையில் ஊறியவை தான் என்பது என் கருத்து!

    இன்னொரு டவுட்டு!

    சினிமா திருடுவது போல் வேற்று மொழி புதினங்களில் இருந்து கான்செப்டை திருடி, நாவல் எழுதும் எழுத்தாளர்கள் பத்தி என்ன நினைக்கிறிங்க தல!




  176.  

    தமிழ் படம் கோட்பாதர் ஆங்கில படம் போல மூன்று பகுதி எடுக்க முடியாது தான் அதுவே ஒரு மிக பெரிய சவால் ,அந்த சவாலை தமிழ் மக்களுக்கு தன்னால் முடிந்ததை தந்து இருக்கிறார் உலக நாயகன் ,நாயகன் மற்றும் வெற்றி விழா படம் மூலமாக.அதுவே மிக பெரிய விஷயம் டைம்ஸ் பத்திரிக்கை http://www.time.com/time/specials/packages/article/0,28804,1953094_1953146,00.html




  177.  

    Directed By: Mani Ratnam
    Screenplay: Rajasri , Mani Ratnam
    Cast: Kamal Hassan, Saranya, Janagaraj
    Bollywood is shorthand for Bombay Hollywood, seat of the largest Indian film industry. But it manufactures only about 200 of the thousand or so Indian feature films; a half-dozen regions boast production sites larger than most of the world’s national cinemas. Madras, capital of the Tamil state, is one such place, and its leader — arguably India’s top pop-film auteur — is Mani Ratnam. His movies, often dramatizing social unrest and political terrorism, churn with narrative tension and camera energy that would be the envy of Hollywood directors, if they were ever to see them. Nayakan, an early, defining work in his career, tells the Godfatherish tale of Velu, a boy who embraces a life of crime after his father is killed by the police. Velu (Kamal Hasan) has trouble juggling his family life with his life-and-death mob “family”; Ratnam has no such difficulty blending melodrama and music, violence and comedy, realism and delirium, into a two-and-a-half-hour demonstration that, when a gangster’s miseries are mounting, the most natural solution is to go singin’ in the rain.
    Nayakan (1987) From the TIME Archive:
    “A terrific gangster epic in the Godfather style”
    —TIME Magazine, Sep. 16, 1996 >>

    Read more: http://www.time.com/time/specials/packages/article/0,28804,1953094_1953146,00.html#ixzz0yvLdh4ID

    Read more: http://www.time.com/time/specials/packages/article/0,28804,1953094_1953146,00.html#ixzz0yvLPX4OP




  178.  

    //சினிமா திருடுவது போல் வேற்று மொழி புதினங்களில் இருந்து கான்செப்டை திருடி, நாவல் எழுதும் எழுத்தாளர்கள் பத்தி என்ன நினைக்கிறிங்க தல!//

    @ வால்பையன் – திருட்டுன்னு வந்தப்புறம் எந்தத் திருட்டா இருந்தாத்தான் என்ன? எல்லா திருட்டுமே தப்புதானே ;-) அது யாரு செஞ்சிருந்தாலும் !




  179.  

    அண்ணாத்தே கமல்ஹாசன் காப்பியடிச்சாருங்கிறது எல்லாம் சரிதான்… உங்க ஆதாரத்தை நம்புறோம். ஆனா அவர் நேட்டிவிட்டி கெடாம நம்பும்படியா.. ரசிக்கும்படியா படத்தை எடுத்திருக்காங்க அதை நாம ஒத்துக்கணும்.
    நல்ல பதிவு… பாராட்டுக்கள்..

    திருவட்டாறு சிந்துகுமார்




  180.  

    rajini style agmark original? பைத்தியக்காரன் என்ன வேண்டுமானால் பண்ணுவான் அது ஒரிஜினல் ஆகி விடுமா கௌ பாய் பிலிம் நீங்க பார்த்தது இல்லையா ரேவோல்வேர் revolver சுத்தறது ,சிகர்றேட்டே பிடிப்பது பைத்தியக்காரன் என்ன வேண்டுமானால் பண்ணுவான் அது ஒரிஜினல் ஆகி விடுமா கௌ பாய் பிலிம் நீங்க பார்த்தது இல்லையா ரேவோல்வேர் சுத்தறத, எப்படி வேண்டுமானாலும் இவங்க ஸ்டைல் பண்ணுவாங்க என்று கோபம் வந்து ஹிந்தி பிலிம் கோல்மால் அதிரடிக்காரன் பாட்டு வேண்டும் என்றே ச்பூப் பண்ணி இருந்தார் ,c the song if u have not seen it rohit shetty was goddamn angry with sivaji song he could make this Golmaal returns Tha karke full song video (Exclusive)as spoof only to insult sivaji and tamil film as a whole, ,http://www.youtube.com/watch?v=b2jp4iwRz-A&feature=related




  181.  

    Hi கருந்தேள்,

    Here you have missed one more scene. நாயகன் படத்தில் சரக்குகளை தண்ணீரில் போடும் காட்சி “Once Upon a time in America” (1982) படத்தில் இருந்து சுட்டது. One of my favorite movies, Great gangster movie. Particularly i don’t like “The Godfather” (1972) movie but above movie is in my favorites list.




  182.  

    அன்று விட்டலாசர்யா இன்று ஷங்கர் கிராபிக்ஸ் ஆச்சர்யா indha mindless entertainment கருந்தேள் கண்ணாயிரம் கண்டிப்பது இல்லையா ,கமலின் ஸ்டைல் வேறு ரஜினி ஸ்டைல் வேறு ,கேரக்டர் தேவை என்றால் அவர் அவர்கள் படம் பண்ணியது போல ven·tril·o·quist (Performing Arts / Theatre) the art of producing vocal sounds that appear to come from another source, dupe pottu vanathil parappadhu style that too after 60 years wait till sultan comes till then c this dupe style from enthiran film Endhiran.Co.In || Alex Martin Endhiran Stunt Shooting Exclusive Video http://www.youtube.com/watch?v=zi0sfRQ9Bx0




  183.  

    Endhiran.Co.In || Alex Martin Endhiran Stunt Shooting Exclusive Video http://www.youtube.com/watch?v=zi0sfRQ9Bx0 rajini style fighting with dupe spider man bat man super man தோற்றார்கள் போங்க AI ARTIFICIAL INTELLIGENCE தியேட்டரில் பார்க்க ஆள் இல்லை ,என்ன செய்வது இப்போது எல்லாம் நாங்கள் பார்த்த circus இப்போ இல்லை ,cinema கிராபிக்ஸ் circus தான்




  184.  

    /** கௌ பாய் பிலிம் நீங்க பார்த்தது இல்லையா ரேவோல்வேர் revolver சுத்தறது ,சிகர்றேட்டே பிடிப்பது பைத்தியக்காரன் என்ன வேண்டுமானால் பண்ணுவான்
    **/

    கௌபாய் படம் பார்த்திருக்கிறேன்.. ரஜினியும் நிறைய அந்த மாதிரி ரோல் பண்ணியிருக்கிறார்.. ஆனா, அவரோட ஸ்டைல்ன்னு ஒரு அடையாளம் இருக்குது..

    ரெண்டாவது, ரஜினி நடிப்புத் திலகம் இல்ல. அவர் ஒரு ஹீரோ.. ஹீரொயிசத்த வெளிப்படுத்தி பிரபலமானவர்.. அவருடைய படங்களில் எல்லாம் கதையை விட, அவருக்காகவே ஓடும்.. எல்லா கதையிலும் இருக்கும் ஃபார்முலா கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும்.. ஹீரோ பாதிக்கப்படுவார்.. பின்பு பொங்கி எழுந்து பழிவாங்குவார்.. இடையில கொஞ்சம் அம்மா சென்டிமென்ட்.. அதனால, அவர கதைய சுட்டார்னு சொல்ல முடியாது.. ஏன்னா, அவர் கதைக்காக பிரபலமாகவில்லை.. அவருடைய ஸ்டைல் க்காகத்தான் பிரபலமானார்.. பிரபலமான பின்னாடி, ரசிகர்கள் ஓடாத படத்தையும் ஓட வெச்சார்கள்ங்கறது வேறு விஷயம்..

    ஆனா கமலின் படங்கள் நடிப்புக்காகவும், கதைக்காகவும் போற்றப்படுகிறது.. அங்கேதான் கொஞ்சம் இடிக்குது.. வேறு ஒரு கதையை சுட்டு இங்க தன்னோடதா பேர் வாங்குறதுங்கறதுதான் விவாதமே.. கருந்தேள் அருமையா சொல்லியிருக்கிறார்.. இதுல வேற யோக்கியன் மாதிரி அப்பப்ப பேசி அட்வைஸ் பண்ணுவார்..




  185.  

    HellBOY :
    // இந்த பதிவை கருந்தேள் கண்ணாயிரம் அவர்களுக்கு சமர்பிக்கிறேன் …
    அவரோட ப்ளாக் ல போஸ்ட் பண்ணினேன் வரல அதன் இங்க போஸ்ட் பன்றேன் …
    யாராசு இத அங்க போஸ்ட் பண்ணுகபா உங்களுக்கு புண்ணியமா போகும் ….. //

    தமிழ் மக்களே நீங்க இனிமே கமல் படம் பாக்க வேண்டாம் அது எல்லாம் copy sexy இருக்கும் heroin உதட கடிபாரு அதனால நீங்க இனிமே விஜய்,அஜித்,விக்ரம்,சூர்யா,சிம்பு,தனுஷ்,முடுன்சா
    சிவாஜி ,MGR படம் பாருங்க மறக்காம
    பாக்யராஜ் ,செல்வராகவன் ,வாசு,ராமநாராயணன் படத்த குடும்பத்தோட பாருங்க …
    இங்க மொல்லாரி முடுசவிக்கி ரௌடி எல்லாம் முதலமைசர் ,அமைசர் முக்கியமா கற்பு கரசி கு%%#பு வேற .
    அவங்களுக்கு குனிசு #%%^$ நில்லுங்க கமல் தான் இங்க சரி இல்ல ..
    முக்கியமா இமயமலை போறேன்னு சொலிட்டு இருக்கறவரு படம் பாருங்கப அவரு தமிழ் சினிமா க்கு நாட்டுக்கு உங்களுக்கு நெறைய செஞ்சு இருகாரு…

    ஹி.. ..ஹி.. ..ஹி..
    நீங்க சாரு எல்லாரும் சரியான காமெடி பீஸ் யா உங்களுக்கு நாலு பேரு ஜால்ரா வேற
    இவரு என்னமோ பெருசா கண்டு புடுச மாறி …
    அப்பாட இன்னைக்கு எனக்கு நல்லா தூக்கம் வரும் …
    நான் திரும்பி வருவேன் …
    இதே மாறி கிழிகறமாரி பதிவு போடுங்கண்ணே !!!
    கருந்தேள் கண்ணாயிரம் அண்ணா !! this is from http://mohan-ramkumar.blogspot.com/2010/09/blog-post_07.html




  186.  

    ஆஹா… ஆஹா… நாரதா… சூப்பரா வொர்கவுட் ஆய்டுச்சிடா!!! யு த க்ரேட்டா……!!!

    கருந்தேள்… இப்படியா ஏமாறுவீங்க? :)




  187.  

    அபூர்வ சகோதரர்கள் என்ன படத்தின் காப்பி தல?




  188.  

    ரஜினி அவர்கள் அபூர்வ ராகங்களில் நடித்த போது என்ன சாதித்தார் என்று தெரியல அப்படி ஒரு கை தட்டல் ,கமல் பாவம் படம் முழுவதும் வந்து வேஸ்ட் ,விவேக் அந்த சீன் போல வருவார் சில படங்களில் ,சும்மா வந்தாலே போதும் அப்படி தான்,கேரக்டர் நடிகர் அக இருந்த ரஜினி தன பாதையை ஸ்டைல் என்று மாற்றி வெறும் ஆணவத்தை மட்டும் காண்பித்து இது தான் நடிப்பு என்றார் ,கமல் சொன்னது தமிழில் அவரக்கு நேரடி போட்டி கிடையாது மம்மூட்டி மோகன்லால் போல கேரக்டர் அக்டிங் ,ஸ்டைல் என்பது ஆணவம் தான் என்று ரஜினி அவர்களே சாவி பத்திரிகையில் சொன்னது,கௌ பாய் பிளம்ஸ் சிகர்றேட்டே ரோத்மன்ஸ் கப் பென்சன் ந ஹெட்கேஷ் வில்ச கப் எல்லாம் ஸ்டாப் ஆகி விட்டது சிகர்றேட்டே கம்பெனி ச்போன்சொர் ஸ்டாப் அப்புறம் அன்புமணி தான் அந்த சிகரேட்டே குடிக்கும் ஆணவத்திற்கு ஆப்பு வைத்தார் ,ஸ்டைல் பண்ணுவது என்று முடிவாகியது அதை சிகரேட்டே தூக்கி போட்டு குடித்தால் என்ன புப்ப்ளே கம் தூக்கி போட்டால் என்ன நீங்க ரசிகலையா ,ஒரு யாத்ரா தாத்தாவாக சமுதாய அக்கறை வேண்டாம் ,தனுஷ் ஐஸ்வர்யா மகன் யாத்ரா ,
    கமல் எபோதோ அந்த சிகரேட்டே கருமத்தை தொடுவதை தவிர்த்தார் ,நீங்க ஸ்டைல் காக என்ன வேண்டுமானாலும் காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் இளைய சமுதையத்தை குழந்தைகளுக்கு ரோல் மாடல் ரஜினி என்று சீர் கெடுக்கலாம் ,அந்த சமுதைய அக்கறை அன்புமணி அவர்கள் அதுவும் மாங்கா போராடி தான் வெற்றி பெற வேண்டியது ஆயிற்று ,பாபா பீடி பாபா சுருட்டு போஸ்டரில் ,




  189.  

    rajinikanth with debonair indha scene paarunga ,kamal kiss adithaal abasam ,கமல் கிஸ் அடித்தால் அசிங்கம் ஆபாசம் என்கிறார்கள் ,இந்த வீடியோ பாருங்க வெறும் சிறிய வீடியோ தான் ,தேபோனைர் புக் டோப்லேச்ஸ் சீன் ,படத்தின் பெயர் உன் கண்ணில் நீர் வழிந்தால் ,உண்மையிலேயே இந்த படம் அட்டர் பிளாப்,வேறு என்ன செய்வது கமல் படம் பிளாப் என்றால் ரொம்ப குஷி ,ரஜினி படம் பிளாப் என்றால் பாவம் தயாரிப்பாளர் என்று தான் நினைக்க தோன்றுகிறது ,நிஜமாவே இந்த தயரிபலருக்கு கண்ணில் நீர் வழிந்து இருக்கும் http://www.youtube.com/watch?v=RJJFAy6fQZs




  190.  

    யோவ் யாருப்பா அது அக்ஸஸ்…. கமலை தாக்கி எழுதினாலே ரஜினி ரசிகன்தான் அப்பிடிங்கற உன் அவதானிப்பை கண்டால் புல்லரிக்குது…..:))




  191.  

    thanks man, GOOD, NICE , FENTASTIC…

    Tamil makkala nalla emmathierukan….




  192.  

    நான் தானுங்க ஐயா நான் கமல் ரஜினி யாரையும் தாக்கல,உள்ளதை சொல்லுகிறேன் ,i just say only the facts ,பழச மறக்க நான் தயாராய் இல்லை அவ்வளவு தான் நான் கமல் ரஜினி யாரையும் தாக்கல,உள்ளதை சொல்லுகிறேன் ,நீங்க மறந்ததை நான் நினைவு படுத்துகிறேன் நடந்தவைகளை




  193.  

    HellBOY :
    // இந்த பதிவை கருந்தேள் கண்ணாயிரம் அவர்களுக்கு சமர்பிக்கிறேன் …
    அவரோட ப்ளாக் ல போஸ்ட் பண்ணினேன் வரல அதன் இங்க போஸ்ட் பன்றேன் …
    யாராசு இத அங்க போஸ்ட் பண்ணுகபா உங்களுக்கு புண்ணியமா போகும் ….. //

    அடா பாவிகளா தமிழனை அழிக்க வெளிய இருந்து யாரும் வர தேவை இல்ல …நீங்களே போதும்டா சாமி ….
    கமல் மற்ற ஆங்கில படங்களை காப்பி பண்ணிட்டார் நு ஒரே ஒரு தவற மட்டும் வட்சு மொத்தமா அவரையே நாரடுசுடிகளே …
    இந்த நாட்டுல எவன்டா ஒழுங்கா இருக்கான் மகாத்மா கூட ஒரு சில விஷயங்கள்ல ரெம்ப மோசமான ஆளு அவர பத்தி ஆங்கில எழுத்தாளர்கள் கிழி கிழி நு கிளுசுருகாணுக அதுக்காக அவரோட நல்ல leadership சரி இல்ல அவரு சுயநலம் உள்ளவரா…சொல்லுங்க பாப்போம் ?
    நீங்க சொல்ற எல்லா ஆங்கில படங்களும் original தான்னு எப்படி சொல்றிங்க அதுவும் copy யா கூட இருக்கலாம் இது அந்த நாட்டுல இருக்கவனுக்கு தான் தெரியும் …
    ஒரு நல்ல writer கு அழகு நிறை குறை இரண்டையுமே ழுதணும் நீங்க குறைகள மட்டுமே சொல்லி இருகரிங்க நீங்க எழுதுனதுல எனக்கு உடன்பாடே இல்ல.

    எல்லாதையு நான் ஒத்துகறேன் ஆனா கடைசியா சொன்னிகளே சாரு முடியலடா சாமி …அவரு எல்லாம் ஒரு ஆளு அவருக்கு தன்னோட சுய புராணம் பாடவே நேரம் பத்தல இதுல கமல் பத்தி அவரு சொல்றாரு …
    சாரு & உங்களை பத்தி தெருஞ்சவங்க அதிகம் போன 1 லட்சம் பேரு இருக்குமா ?(ஹி ஹி பிரபல பதிவரா ?)
    நீங்களே சுய புராணம் பாடும்போது கமல் தன்ன பத்தி சுய புராணம் பாடறதுல தப்பே இல்ல
    நீங்க காந்தி பத்தி உண்மையா எழுதி இல்லாட்டி உண்மைய படுசு பாருங்க தெரியும் அவரே எவளோ தப்பு பண்ணி இருக்காருன்னு
    போங்கடா நீங்களு உங்க ப்ளாக் ம் எவன் சிக்குவான்னு அலையரிங்க
    September 8, 2010 1:25 PM




  194.  

    நீங்க சொன்ன எல்ல ஆங்கில படங்களும் ஒரிஜினல் என்று எப்படி சொல்ல முடியும் ,அசத்தல் தமிழ் படம் சத்யராஜ் வடிவேலு ரம்யா கிருஷ்ணா நடித்தது அது 3 men and a baby ,3 men and a cradle hollywoodla சுடரனுங்க உலகமயமாக்கல் உலக நாயகனை மட்டுமா விட்டு வைக்கவில்லை, ஆயுதம் செய்வோம் சுந்தர் மற்றும் வடிவேலு நடித்து வெளி ஆனது ,அது முன்னபாய் பார்ட் ௨ ,காந்தி அவர்கள் பின்னணியில் அதை பாவம் முன்னபாய் இரண்டாம் பாகம் ரிக்ஹ்த்ஸ் வாங்கியவர்கள் வயிற்றில் புளி கரைத்து இர்ருக்கும் ,அதை தெலுங்கில் சிரஞ்சீவி அவர்களை வைத்து பிரபு தேவா அவர்கள் இயக்கி படம் தோல்வி ,நல்ல வேலை கமல் அதை செய்யல




  195.  

    sorry ஆயுதம் செய்வோம் சுந்தர் C விவேக் நாசர் நடித்து வெளி ஆனது ,அது முன்னபாய் பார்ட் ௨ ,காந்தி அவர்கள் பின்னணியில் அதை பாவம் முன்னபாய் இரண்டாம் பாகம்




  196.  

    HI Access! Just wanted to say something if you dont mind. The post speaks about Plagiarism by Kamal films. I request you to not to hijack the discussion, just for the sake of commenting :) . If you have any other points to share than “Who is not doing” kinda comments, please share with us.

    Prasanna.




  197.  

    இனி என்ன செய்வார்கள்?? மனிரத்னம், கமல்ஹாசன்? நம்ம ஊர் டைரக்டர்களின் கதை சுடும் வேகத்தை பார்த்து அரண்டு போய் இருக்கிறார்கள் ஹாலிவுட்காரர்கள் இப்படியே விட்டா நம்ம கதைய நாம படம் பண்றதுக்கு முன்னாடி இந்தியாகாரங்க பண்னிடுவாங்கன்னு பயந்து போயிட்டாங்க.. இனிமே அனுமதி இல்லாம சுட்ட கேஸ் போடுவோம்னு ஹாலிவுட் நிறுவனங்கள் அறிவித்திருக்கிறார்கள்.. அதனால. பாலிவுட் டைரக்டர்கள் உஷாராயிட்டாங்க முதல் கட்டமாக இதற்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோஹர். “ஸ்டெப் மாம்” ஹாலிவுட் படத்தின் உரிமையை வாங்கி, “வீ ஆர் ஃபேமிலி” படத்தை தயாரித்தார். அடுத்து “இத்தாலியன் ஜாப்” பட உரிமையை இந்தி இயக்குனர்கள் அப்பாஸ்&மஸ்தான் வாங்கியுள்ளனர். இந்த ஹாலிவுட் படத்தை அவர்கள் இந்தியில் படமாக்க உள்ளனர். அபிஷேக் பச்சன், பாபி தியோல், சோனாக்ஷி சின்ஹா நடிக்கின்றனர். தொடர்ந்து மேலும் சில ஹாலிவுட் படங்களின் உரிமையை வாங்கவும் இந்தி பட தயாரிப்பாளர்கள் பேசி வருகிறார்கள் இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம், ஹாலிவுட் நிறுவனங்களின் எச்சரிக்கைதானாம். வால்ட் டிஸ்னி, வார்னர் பிரதர்ஸ், ட்வென்டித் செஞ்சுரி ஃபாக்ஸ், சோனி உள்ளிட்ட ஹாலிவுட் நிறுவனங்கள் இந்தி சினிமாவுக்கு வந்துவிட்டன. தமது தயாரிப்பில் வெளியான படங்களை இந்தியில் காப்பி அடிப்பதை கண்டு, இந்நிறுவனங்கள் கொதித்தன. வழக்கு போடுவோம் என்றும் எச்சரித்தன. இதனால் உரிமை வாங்கி ரீமேக் செய்யுங்கள் என பாலிவுட்டுக்கு இந்தி தயாரிப்பாளர் சஙகம் மறை முகமாக உத்தரவு போட்டிருக்கிறதாம். இதையடுத்துதான் இந்த மாற்றம். ஃபாக்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவிலும் நுழைந்து விட்டது. சீக்கிரமே வேறு சில ஹாலிவுட் நிறுவனங்களும் வர உள்ளன. இதனால் கோலிவுட்டும் கலக்கத்தில் உள்ளது.

    இதுல என்ன காமெடினா ஃபாக்ஸோட இந்திய பிரதிநிதி முருக தாஸ் அவர் எடுத்து ஹிட்டான கஜினியும் மொமண்டோ காப்பி, எடுத்துட்டு இருக்க 7ஆம் அறிவும் , இன்செப்சன் காப்பி, ஸோ முதல்ல முருகதாஸ் ரைட்ஸ் வாங்கனும்




  198.  

    Podaa Vennai. Santhadi sakkil, why did you mention Kamal as ‘hater of muslims’ ? This shows you guys (yourself and charu) have some motive to make money.




  199.  

    @ பாலா – அது ! ;-) வசமா ஏமாந்துபுட்டேன் ;-) ஹாஹ்ஹா… அதானே பார்த்தேன் ;-)




  200.  

    ஏங்க.. யாருங்க இந்த அக்ஸஸ்??? இந்த அடி அடிக்கறாரு கீபோர்டை?




  201.  

    200 கமெண்ட் வாங்கின தம்பி கருந்தேள் வாழ்க.. வாழ்க..!!

    யப்பா…. எல்லா கமெண்ட்டையும் படிக்க முடியலை சாமீ…! ஒவ்வொன்னும் பதிவு கணக்கா இருக்கு.




  202.  

    access யாருன்னு தான் தெரில.. மனுஷர் சும்மா புள்ளிவிவரப் புலியா இருக்காரு… நண்பர் access… எங்கிருந்தாலும் வந்து உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவும் ;-)




  203.  

    //யப்பா…. எல்லா கமெண்ட்டையும் படிக்க முடியலை சாமீ…! ஒவ்வொன்னும் பதிவு கணக்கா இருக்கு//

    அய்யகோ !! அதை ஏன் கேக்குறீங்க ;-) .. கொடுமை தல.. எஹக்கு கமெண்டுக்கு பதில் அடிச்சி ஓய்ஞ்சிருச்சி… நீங்க சொன்னீங்களே ஒரு மூணெழுத்து வியாதி.. அது வந்திருமோன்னு தோணுது ;-)




  204.  

    கலக்கல்ஸ், இதே போல் சார்ளி சாப்ளினும் கமலும் என்று தொடர் பதிவே எழுதலாம்.
    கமல் நடிப்புக்கு மட்டுமே நான் ரசிகன் ஆனால் காப்பி யாரடித்தாலும் அது குற்றமே!




  205.  

    வால்ட் டிஸ்னி, வார்னர் பிரதர்ஸ், ட்வென்டித் செஞ்சுரி ஃபாக்ஸ், சோனி உள்ளிட்ட ஹாலிவுட் நிறுவனங்கள் வந்தாச்சு ,தயாநிதி உதயநிதி கலாநிதி எல்லா நிதிகளும் நிதி கொடுத்து உத்தரவு வாங்கி தான் ஆங்கில படங்கள மொழி மாற்றம் அல்லது ரீமேக் செய்யணும் ,அதனால் இந்த அங்க காபி அடிச்சான் இங்க காபி அடிச்சான் என்று சொல்லும் உரிமை ஹாலிவுட் பட கம்பனிகளுக்கு தான் உண்டு,சாரு மற்றும் கருந்தேள் கண்ணாயிரம் போன்றவர்களுக்கும் ரஜினி ரசிகர்கள் வெறியர்களுக்கும் உரிமை கிடையாது கமல் காபி படங்களை பற்றி பேச.அப்படி யாரவது பேசினால் எந்திரன் படம் பாத்து தடவை பார்க்க தண்டனை நிறைவேற்ற படும் ,அதுவும் மிகவும் பழைய தியட்டரில் ,மூட்டை பூச்சி கடி உடன் ,சவுண்ட் சிஸ்டம் மிகவும் மோசமாக உள்ள திரியாரங்கல்களில் cinema hall தான் பார்க்க வேண்டும்




  206.  

    my reply to mohan blog மிக்க நன்றி கமல் ஒரு அற்புத கலைஞன் என்ற தலைப்புக்கு ,சாரு அவர்களுக்கு மற்றும் கருந்தேள் கண்ணாயிரம் போன்றவர்களுக்கு அதிசயம் நடந்ததா என்பதற்கு பதிலடி உங்க தலைப்பு.உங்க அளவிற்கு பதிவு போட பதிவு எழுத எனக்கு பொறுமை இல்லை ,யாரும் கேட்க ஆள் இல்லை என்று சாரு பேசினார் அதை கருந்தேள் தொடர்கிறார் ,சாரு தண்ணி அடிக்க கமல் காசு கொடுக்கவில்லை என்ற கோபமா அல்லது ப்றேவிஎவ் ஷோ கூப்பிடல அந்த கோபமா தெரியல ,ரஜினி வெறும் நடிகர் மட்டும் என்பதால் அவருக்கு நிறைய நேரம் இர்ருக்கு எல்லாரையும் அரவணைத்து செல்ல ஆனால்கமல் அவர்கள் எல்லா விசியங்களும் தானே இழுத்து போட்டு கொண்டு செய்பவர் ஆகவே நேரமின்மை காரணமாக நிறைய பேரை கண்டு கொள்ள முடியவில்லை அதனால் அவர்களை உதாசீன படுத்தியதாக நினைப்பார்கள் ,அது தான் ரஜினி கமலுக்கு உள்ள வேற்றுமை.தசவதாரம் படம் பண்ணும் பொது எனக்கு தெரிந்த நடிகர் ஒருவர் டைரக்டர் ரவி குமார் பார்க்க செல்லும் பொது கமல் அங்கே இருந்து உள்ளார் தசவதாரம் எவ்வளவு கஷ்டம் பாத்து ரோல் மிக சிந்தனை செயல் வேண்டும் ,அந்த நடிகருக்கு கோபம் கமல் தன்னை கண்டு கொள்ளவில்லை என்று ,இதை ரமேஷ் க்ஹன்ன அவர்கள் சொன்னது வெறும் நடிச்சு கோண்டிநிட்டி பார்க்க பழைய சோட்ஸ் மறந்து போகும் அதே துணி இருக்கனும் ,நம்ம கமல் சார் பத்து வேடத்தில் நடிக்க எவ்வளவவு சிரம பட்டு இர்ருப்பர் ,அதை மனதில் கொள்ளாமல் நடிகர் அதுவும் முன்னணி நடிகர் கிடையாது அவர் பெயர் படையப்பா ரமேஷ் தெனாலி படத்தில் கூட கமலுடன் பஸ்ல சண்டை போடுவார் ,படையப்பா படத்தில் ரஜினி நண்பர் கூட்டதில் வருவார் ,நான் தசவதாரம் பற்றி அவரிடம் எதாவது தகவல் கிடைக்குமா என்று கேட்டல் அவர் பதில் விஷ் பண்ணினால் கமல் கண்டு கொள்ளவில்லை,இதை சேரன் அவர்கள் சொல்லி இருக்கிறார் மகாநதி பட ஷூட்டிங் பொது சேரன் நிறைய முறை வணக்கம் சொல்லி இருக்கிறார் பதிலுக்கு கமல் வணக்கம் சொல்லவில்லை ,அதனால் கமலிடம் நெருங்கி பேச தயக்கம்,அதற்க்கு கமல் சொன்னது நானும் வணக்கம் சொல்லிய நினைப்பில் இருந்து விட்டேன் ஏற்று .காட்சி சரியாக வர வேண்டும் காட்சிக்கு தன்னை தயார் செய்து கொள்கிறார் மனதளவில் இந்த ஈடுபாட்டை கூட படையப்பா ரமேஷ் ஒரு நடிகர இருந்தும் புரிந்து கொள்ளவில்லை ,எனக்கும் கஷ்டமாக இர்ருக்கு ஏன் இப்படி என்று ,இதே போல தான் திரையில் கண்ணும் கமல் பட காட்சிகள் மிகவும் தப்பான அர்த்தம் கண்டுபிடிக்க படுகிறது .




  207.  

    my reply to mohan மிக்க நன்றி கமல் ஒரு அற்புத கலைஞன் என்ற தலைப்புக்கு ,சாரு அவர்களுக்கு மற்றும் கருந்தேள் கண்ணாயிரம் போன்றவர்களுக்கு அதிசயம் நடந்ததா என்பதற்கு பதிலடி உங்க தலைப்பு.உங்க அளவிற்கு பதிவு போட பதிவு எழுத எனக்கு பொறுமை இல்லை ,யாரும் கேட்க ஆள் இல்லை என்று சாரு பேசினார் அதை கருந்தேள் தொடர்கிறார் ,சாரு தண்ணி அடிக்க கமல் காசு கொடுக்கவில்லை என்ற கோபமா அல்லது ப்றேவிஎவ் ஷோ கூப்பிடல அந்த கோபமா தெரியல ,ரஜினி வெறும் நடிகர் மட்டும் என்பதால் அவருக்கு நிறைய நேரம் இர்ருக்கு எல்லாரையும் அரவணைத்து செல்ல ஆனால்கமல் அவர்கள் எல்லா விசியங்களும் தானே இழுத்து போட்டு கொண்டு செய்பவர் ஆகவே நேரமின்மை காரணமாக நிறைய பேரை கண்டு கொள்ள முடியவில்லை அதனால் அவர்களை உதாசீன படுத்தியதாக நினைப்பார்கள் ,அது தான் ரஜினி கமலுக்கு உள்ள வேற்றுமை.தசவதாரம் படம் பண்ணும் பொது எனக்கு தெரிந்த நடிகர் ஒருவர் டைரக்டர் ரவி குமார் பார்க்க செல்லும் பொது கமல் அங்கே இருந்து உள்ளார் தசவதாரம் எவ்வளவு கஷ்டம் பாத்து ரோல் மிக சிந்தனை செயல் வேண்டும் ,அந்த நடிகருக்கு கோபம் கமல் தன்னை கண்டு கொள்ளவில்லை என்று ,இதை ரமேஷ் க்ஹன்ன அவர்கள் சொன்னது வெறும் நடிச்சு கோண்டிநிட்டி பார்க்க பழைய சோட்ஸ் மறந்து போகும் அதே துணி இருக்கனும் ,நம்ம கமல் சார் பத்து வேடத்தில் நடிக்க எவ்வளவவு சிரம பட்டு இர்ருப்பர் ,அதை மனதில் கொள்ளாமல் நடிகர் அதுவும் முன்னணி நடிகர் கிடையாது அவர் பெயர் படையப்பா ரமேஷ் தெனாலி படத்தில் கூட கமலுடன் பஸ்ல சண்டை போடுவார் ,படையப்பா படத்தில் ரஜினி நண்பர் கூட்டதில் வருவார் ,நான் தசவதாரம் பற்றி அவரிடம் எதாவது தகவல் கிடைக்குமா என்று கேட்டல் அவர் பதில் விஷ் பண்ணினால் கமல் கண்டு கொள்ளவில்லை,இதை சேரன் அவர்கள் சொல்லி இருக்கிறார் மகாநதி பட ஷூட்டிங் பொது சேரன் நிறைய முறை வணக்கம் சொல்லி இருக்கிறார் பதிலுக்கு கமல் வணக்கம் சொல்லவில்லை ,அதனால் கமலிடம் நெருங்கி பேச தயக்கம்,அதற்க்கு கமல் சொன்னது நானும் வணக்கம் சொல்லிய நினைப்பில் இருந்து விட்டேன் ஏற்று .காட்சி சரியாக வர வேண்டும் காட்சிக்கு தன்னை தயார் செய்து கொள்கிறார் மனதளவில் இந்த ஈடுபாட்டை கூட படையப்பா ரமேஷ் ஒரு நடிகர இருந்தும் புரிந்து கொள்ளவில்லை ,எனக்கும் கஷ்டமாக இர்ருக்கு ஏன் இப்படி என்று ,இதே போல தான் திரையில் கண்ணும் கமல் பட காட்சிகள் மிகவும் தப்பான அர்த்தம் கண்டுபிடிக்க படுகிறது .




  208.  

    my reply to mohan மிக்க நன்றி கமல் ஒரு அற்புத கலைஞன் என்ற தலைப்புக்கு ,சாரு அவர்களுக்கு மற்றும் கருந்தேள் கண்ணாயிரம் போன்றவர்களுக்கு அதிசயம் நடந்ததா என்பதற்கு பதிலடி உங்க தலைப்பு.உங்க அளவிற்கு பதிவு போட பதிவு எழுத எனக்கு பொறுமை இல்லை ,யாரும் கேட்க ஆள் இல்லை என்று சாரு பேசினார் அதை கருந்தேள் தொடர்கிறார் ,சாரு தண்ணி அடிக்க கமல் காசு கொடுக்கவில்லை என்ற கோபமா அல்லது ப்றேவிஎவ் ஷோ கூப்பிடல அந்த கோபமா தெரியல ,ரஜினி வெறும் நடிகர் மட்டும் என்பதால் அவருக்கு நிறைய நேரம் இர்ருக்கு எல்லாரையும் அரவணைத்து செல்ல ஆனால்கமல் அவர்கள் எல்லா விசியங்களும் தானே இழுத்து போட்டு கொண்டு செய்பவர் ஆகவே நேரமின்மை காரணமாக நிறைய பேரை கண்டு கொள்ள முடியவில்லை அதனால் அவர்களை உதாசீன படுத்தியதாக நினைப்பார்கள் ,அது தான் ரஜினி கமலுக்கு உள்ள வேற்றுமை.தசவதாரம் படம் பண்ணும் பொது எனக்கு தெரிந்த நடிகர் ஒருவர் டைரக்டர் ரவி குமார் பார்க்க செல்லும் பொது கமல் அங்கே இருந்து உள்ளார் தசவதாரம் எவ்வளவு கஷ்டம் பாத்து ரோல் மிக சிந்தனை செயல் வேண்டும் ,அந்த நடிகருக்கு கோபம் கமல் தன்னை கண்டு கொள்ளவில்லை என்று ,இதை ரமேஷ் க்ஹன்ன அவர்கள் சொன்னது வெறும் நடிச்சு கோண்டிநிட்டி பார்க்க பழைய சோட்ஸ் மறந்து போகும் அதே துணி இருக்கனும் ,நம்ம கமல் சார் பத்து வேடத்தில் நடிக்க எவ்வளவவு சிரம பட்டு இர்ருப்பர் ,அதை மனதில் கொள்ளாமல் நடிகர் அதுவும் முன்னணி நடிகர் கிடையாது அவர் பெயர் படையப்பா ரமேஷ் தெனாலி படத்தில் கூட கமலுடன் பஸ்ல சண்டை போடுவார் ,படையப்பா படத்தில் ரஜினி நண்பர் கூட்டதில் வருவார் ,நான் தசவதாரம் பற்றி அவரிடம் எதாவது தகவல் கிடைக்குமா என்று கேட்டல் அவர் பதில் விஷ் பண்ணினால் கமல் கண்டு கொள்ளவில்லை,இதை சேரன் அவர்கள் சொல்லி இருக்கிறார் மகாநதி பட ஷூட்டிங் பொது சேரன் நிறைய முறை வணக்கம் சொல்லி இருக்கிறார் பதிலுக்கு கமல் வணக்கம் சொல்லவில்லை ,அதனால் கமலிடம் நெருங்கி பேச தயக்கம்,அதற்க்கு கமல் சொன்னது நானும் வணக்கம் சொல்லிய நினைப்பில் இருந்து விட்டேன் ஏற்று .காட்சி சரியாக வர வேண்டும் காட்சிக்கு தன்னை தயார் செய்து கொள்கிறார் மனதளவில் இந்த ஈடுபாட்டை கூட படையப்பா ரமேஷ் ஒரு நடிகர இருந்தும் புரிந்து கொள்ளவில்லை ,எனக்கும் கஷ்டமாக இர்ருக்கு ஏன் இப்படி என்று ,இதே போல தான் திரையில் கண்ணும் கமல் பட காட்சிகள் மிகவும் தப்பான அர்த்தம் கண்டுபிடிக்க படுகிறது .




  209.  

    sorry blog error posted 3 times very sorry,yellam kovai mandala mattrum chennai man vasanai thaan unga vikram pathivu paarthen so all i can say is unnaipol oruvan n invisible man,thank u.




  210.  

    i only see english films at maruti,central,kanagadhara and apasara at kovai,yennai tamil padam paarka vaithadhu kamal films thaan yendraal adhu migai illai.




  211.  

    நான் பல இடங்களில் பின்னூட்டங்களாக வைத்த குற்றசாட்டுகளை ஒரு முழு கட்டுரையாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி.நானும் கமலின் ரசிகன்தான்.ஆனால் அவர் தனது திறமைகளை பத்து விழுக்காடு கூட பயன்படுத்தவில்லை என்பது எனக்து கருத்து.
    தெனாலி இன்ன பிற படங்கள் காப்பி என்பது தெரியும் .ஆனால் “ராஜபார்வை”, “எனக்குள் ஒருவன்”,”இந்திரன் சந்திரன் ” என நீண்ட பட்டியல் என்னை சற்று (ஆம் சற்றுதான்!!)அதிர்ச்சி அடைய வைத்து.
    .
    .
    *******************************************************************************************
    மேலும் சில விஷயங்களை சொல்லாமல் விட்டுவிட்டீர்கள் .
    அது getup பற்றியது.
    1. தசாவதாரத்தில் Fletcher getup Sin city(2005) படத்தில் Marv கதாபாத்திரத்தின் (Mickey Rourke ) getup தான் என்பதை சற்று வேதனையுடனும் காழ்ப்புனடும் கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
    2. Batman and Robin(1997) படத்தில் Uma thurman அருகில் ஒரு அடியாள் போல் மொட்டை தலையுடன் நிற்பவனை பாருங்கள்.ஆளவந்தான் “நந்து” கதாபாத்திரம் getup எங்கிருந்து வந்தது என்பது விளங்கும்.
    3.last but not least….!!!! நாயகன் ஒரு அட்ட காப்பி.சரி காப்பி அடித்தது மணி ரத்னம் மட்டுமல்ல..கமலும்தான்…
    இள வயது கமல் The Godfather I &II படத்தில் Michael Corleone ஆக நடித்த Al pacino வின் உடல் மொழிகளையும், வயதான கமலின் உடல் மொழிகள் The Godfather I இல் Vito Corleone ஆக நடித்த Marlon brando வின் உடல் மொழிகளையும் அட்ட காபி அடித்திருப்பார்.
    கதையில் மட்டுமல்ல நடிப்பிலும் அவர் வெளி நாட்டு படங்களை காப்பியடித்தார்.
    சாரு கூறியது போல் எண்பதுகளில் கமல் Al pacino வின் உடல் மொழிகளை காப்பியடித்தார்.
    etc…etc….
    பி.கு:கமலை இழிவு படுத்த இதை நானும் எழுதவில்லை..அவரிடம் மேலும் எதிர்பார்பதாலேயே இதை எழுதினேன்.(கருந்தேளின் நோக்கமும் அதுவே என யூகிக்கிறேன்!!)




  212.  

    @ஆக்ஸிஸ்,
    நண்பா,மிக்க மகிழ்ச்சி,
    உங்க பயனுள்ள தகவல்களை பதிவா போட்டு,கலைச் சேவை செய்யலாமே?.பின்னூட்டம் வாயிலா படிக்க கண்ணை கட்டுது,தவிர உழைப்பு வீணாககூடாது என்னும் எண்ணமும் கூட.:)




  213.  

    கருந்தேளா? பல்லியா?

    http://charuonline.com/blog/?p=974

    hmmm…waiting for your ffedback

    endrum anbudan,
    N.Parthiban




  214.  

    This comment has been removed by the author.




  215.  

    கமல் வேறு ரஜினி வேறு என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பு இல்லை ,கமல் ரஜினி இருவரின் ஆரம்ப கால வெற்றி பஞ்சு அருணாசலம் அவர்களையே சேரும்,கமல் பஞ்சு அவர்கள் பாணியை கை விட்டதால் தான் நான் தமிழ் படமே பர்ர்க்க ஆரம்பித்தேன் ,தன நூறாவது படம் ராஜா பார்வையாக ஏன் நடிக்க வேண்டும் .பஞ்சு அண்ணன் கிட்ட சொல்லி ஒரு சிறப்பான மசாலா பண்ணி இரருக்கலாம் அல்லவா,சத்யா படம் கமல் வழியில் ஒரு ஒரு திருப்புமுனை ஏன் என்றால் ரஜினி அவர்கள் அமிதாப் பாணியில் கொமெடியிலும் கலக்கி கொண்டு இருந்தார் அதை ஈடு கட்ட கமல் crazy மோகன் கூட்டணி உருவானது ,அதில் இருந்து தான் கொமெடி கலை கட்ட ஆரம்பித்தது கிரேசி மோகன் அவர்கள் பிரபலமானது பாய்ஸ் இன் பாலவாக்கம் கிரேசி பாய்ஸ் இன் பாலவாக்கம் அது கிரேசி பாய்ஸ் ஆங்கில படங்களை பார்த்து மேடை நாடகங்கள் செய்து வெற்றி பெற்றார் ,குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கமலுக்கு மறு பிறவி கொடுத்தவர் கிரேசி மோகன் தான் என்று சொன்னால் அது மிகை ஆகாது ,நாம் அதற்க்கு ஆங்கில படங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் ,கிரேசி மோகன் போல கமல் போல எல்லோராலும் ஆங்கில படத்தை அதுவும் காபி அடிக்க முடியாது ஏன் என்றால் அதற்க்கு இந்திய வடிவம் கடினம் ஹாலிவுட் சென்சர் ப்ரோப்ளேம் கிடையாது நம்மக்கு அப்படி இல்லையே EVERYTHING IS FAIR IN LOVE AND WAR என்பது போல copy adithal kooda EVERYTHING IS FAIR IN HUMOUR AND FILMS I MEAN KAMAL FILMS comedikkaga makkalai makilvikka yethaiyum seiyalaam




  216.  

    virtuosity அப்படிங்கற படத்துல டென்சல், ரசல் குரோ நடித்திருப்பார்கள். இதில் ரசல் குரோ வில்லன். கதை மறந்துவிட்டது.

    ரசல் குரோ ஒரு எதிர்கால மனிதன் மாதிரி. அதில் ஒரு சீனில் ஆளவந்தான் மொட்டை கமல் கிளைமாக்ஸில் போட்டிருக்கு ஜாக்கெட் போல போட்டுக் கொண்டிருப்பார். அந்த நடை ஒரு எகத்தாளமான அரைப் பைத்தியம் போன்றவனின் நடை. அதே நேரம் அதில் கொலை வெறியும், வில்லத்தனமும் மிகுதியாக இருக்கும்.

    இந்த நடையை மேனரிஸத்தை ஆளவந்தானில் கமல் அப்படியே பயன்படுத்தியிருப்பார். virtuosity படம் வந்தது 1995-ல். இது எப்டி இருக்கு?




  217.  

    without copy & paste nobody cant live here karunthell…
    A single qn:how did u come to know something to write in a blog…somebody has to teach u how to do r u have to c how they did.
    u r not here then….and finally its ur thoughts to get fame by teasing an legend….without knowing the science & history….inventions started..but after knowing imitations and interpretations leads to discovery…
    U r not at all eligible to write abt a great legend called “kamalhasan”..whatever it is he did his best in all the films…
    he might stolen a single story line,but the way he applied thoughts no one can’t…and he is the best actor most people agreed…
    dont take the freedom of writing leads to hurting fans of him…beware of taking chances….

    thanks,
    Venkat




  218.  

    @ பார்த்திபன்

    //கருந்தேளா? பல்லியா?

    http://charuonline.com/blog/?p=974

    hmmm…waiting for your ffedback

    endrum anbudan,
    N.Parthiban//

    இதோ இப்பதான் பார்த்தேன் ;-) .,.. எனது பதில், இன்னும் கொஞ்ச நேரத்தில் ;-)




  219.  

    without copy & paste nobody cant live here karunthell…
    A single qn:how did u come to know something to write in a blog…somebody has to teach u how to do r u have to c how they did.
    u r not here then….and finally its ur thoughts to get fame by teasing an legend….without knowing the science & history….inventions started..but after knowing imitations and interpretations leads to discovery…
    U r not at all eligible to write abt a great legend called “kamalhasan”..whatever it is he did his best in all the films…
    he might stolen a single story line,but the way he applied thoughts no one can’t…and he is the best actor most people agreed…
    dont take the freedom of writing leads to hurting fans of him…beware of taking chances….

    thanks,
    Venkat




  220.  

    paavam alavandhan really kamal’s intuition clicked as only alavanthan o

    O paneerselvam ruled tamil nadu as jaya has to clear tansi cases.




  221.  

    ஹம படம் ஹிந்தி பாருங்க அமிதாப் வாழ்ந்த கதா பாத்திரம் ரஜினி சுரேஷ் கிருஷ்ணா சத்யா மூவீஸ் எப்படி அதை பாஷா பாஷா பாஷா படுகொலை செய்தார் ஹம படத்தை என்று உங்களுக்கே தெரியும்,அப்புறம் காபி அடிப்பதை பற்றி பேச யாருக்கு அருகதை இருக்கு என்று தெரியும்,அவளுவு பெரிய டான் பாஷா எதுக்கு ஆட்டோ டிரைவர் என்பது கேள்வி குறி அல்ல கேலி குறி ,ஹம படம் எம் ஜி ஆர் படம் அசோகன் சிரிக்கும் வில்லன் போல அனுபம் க்ஹெர் மிக அருமையாக பண்ணி இருப்பார் ,அமிதாப் வாழ்ந்த கதா பாத்திரத்தை எப்படி எல்லாம் கெடுக்க முடியுமோ அப்படி கெடுத்து வைத்தார் சுபெர்ச்டார் ,நீங்களே பாருங்க.டுச்டின் ஹோப்ப்மன் வெள்ளைக்கார ஆன்டி டிரஸ் கமல் மடிசார் மாமி ,அட்டை காபி ஒன்றும் கிடையாது இம்மி பிசகாமல் ,சா மில் நடத்தும் அமிதாப் பம்பாயில் டான் கூட கிடையாது சும்மா கூலி தொழிலாளி தான் அதை பாஷா பாஷா என்று அசிங்க படித்தியத்தை நீங்க பார்த்து இனி மேல காபி அடிப்பதை பற்றி வாய் கூட திறக்க மாடீங்க, இதில் அமிதாப் தம்பி ரஜினி தான், நான் உங்களை அனுபம் க்ஹெர் காமெடி வில்லன் ,இங்க தேவன் ,ஊரை விட்டு ஓடிய அமிதாப் தான் கொலையாளி என்று குட்டையை குழப்பும் வில்லன் ,ரகுவரன் கேரக்டர் danni , ஒரு ரஜினி படம் தான் பார்க்க சொல்கிறேன்,அனுபம் க்ஹெர் காமெடி வில்லன் ,இங்க தேவன் ,ஊரை விட்டு ஓடிய அமிதாப் தான் கொலையாளி என்று குட்டையை குழப்பும் வில்லன் ,ரகுவரன் கேரக்டர் ,காபி என்றால் காபி கண்ராவி காபி ,தழுவல் என்றால் தழுவல் ம்ஹா கண்ராவி CREATIVE ASSASSINATION,




  222.  

    trains planes automobiles copy anbe sivam the name says it all ,இன்னும் காட்டுமிராண்டி கௌ பாய் பிலிம் பலிக்கு பலி பழிக்கு பழி பார்க்கும் எடுக்கும் ஆட்கள் உள்ளவரை அன்பே சிவம் என்ற வார்த்தைக்கு மகத்துவம் தெரியாது அன்பே சிவம் என்று பெயர் சொன்னால் போதும் அதில் என்ன கதை வேண்டும் ஆங்கில படத்தை காபி அடிக்க ,உன்னை கொல்ல வந்தவனிடம் கூட அன்பு காட்டு,இதை டிரெக்டர் பாலா அவர்கள் பிதா மகனில் அன்பே சிவம் கிளைமாக்ஸ் வரும்,திருமுலர் சொன்னது இந்த பெயர் வைத்த நண்பர் பாராட்டினார் ,கமல் திருமுலர் சொன்னதை காபி அடித்தார் ,பாரதி சொன்னதையும் காபி அடித்தார் அவர் பாரதி ஆக நடிக்கவில்லை என்றாலும் அவர் செய்யும் கேரக்டர் முக்கால் வாசி பாரதி காபி தான்




  223.  

    Planes, Trains & Automobiles படத்தை ஒப்பிடும் போது ‘அன்பே சிவம்’ ஆயிரம் மடங்கு சிறந்தது.




  224.  

    எதையும் காப்பி அடிக்காமல் எடுத்த ஒரே தமிழ் படம் “யாருக்கு யாரோ ஸ்டெப்நீ “

    இப்படிக்கு
    சாம் அன்டேர்சன்




  225.  

    @ பார்த்திபன் – உங்கள் கேள்விக்குப் பதில், சாரு ஆன்லைனில் வந்துவிட்டது. நன்றி.




  226.  

    http://www.desifun.co.uk/watch-online-movie/hum.htm link is working please please watch hindi film HUM online youtube link,ungalukku hindi theriyavittalum sub titles irrukku ,இந்த படத்தை பார்த்து விட்டு சொல்லுங்க மனசாட்சி தொட்டு யார் காபி எது காபி ,பாஷா படம் வெற்றி தோல்வி பற்றி நான் பேச வரல ,ரஜினி ஸ்டைல் பாருங்க அமிதாப் படத்தில் ,அமிதாபுக்கு இணையாக ,இதை பார்த்தவங்களும் பார்த்துட்டு சொல்லுங்க ஏன் நிறைய வருடங்கள் ஆகின்றது மறந்து இருப்பீங்க அமிதாப் தம்பி ரஜினி மற்றும் கோவிந்தா ,கோவிந்தா தனி பட்டு வேற ,தமிழ் பாஷா தம்பி கேரக்டர் பாட்டு பாடல எல்லா பாட்டுமே ரஜினிக்கு தான்




  227.  

    ஹம படம் எந்த நாடு படத்திலிருந்து சுட்டாங்க என்று பார்த்து சொல்லுங்க தெரிந்தால் சொல்லுங்க ,பார்க்க மிகவும் ஆவலாக இருக்கேன் ,அந்த கிமி கட்கர் பாம்பே விட்டு செல்லும் அமிதாப்பை மீண்டும் சந்திக்கும் ஊட்டி ஷூட்டிங் ஸ்போட் அவ்வளவு பேர் ஷூட்டிங் வேடிக்கை பார்க்க வந்து இர்ருபங்க மேக் அப் போடும் பொது ஹெரோஇனே heroine kimi katkar கிமி கட்கர் கண்ணாடியில் அமிதாப் தெரிவார் ,ஏன் நண்பர் சூப்பரா whistle போட்டது இன்னும் நினைவு இருக்கு




  228.  

    Enthiran script copy from upendra http://www.youtube.com/watch?v=iQEB1x4aQwc video proof enthiran knows all languages just like tamil
    enthiran vaseegaran? trailer of enthiran says he knows all languages
    and all arts The director shankar latest movie Enthiran(ROBO) script was similar from Kannada hero upendra’s movie Hollywood.According to script Upendra Was a scientist in this movie he will Made a Upendra Robo with his master in Enthiran script Rajani will made rajani robo both movies in climax have mutuval thing is that the hero will made robo villain will try to trap that robo,hahaaaa what a story shame shame shame shame copying from kannada film that too kannada film same same same.rajinishhhhhhhhhh styleeeeeeeee,shankar styleeeeee http://en.wikipedia.org/wiki/Hollywood_(Kannada_film)




  229.  

    An identical man could be made only by cloning and not by designing a robot. Funniest thing about this robot is that it is programmed to listen to all languages in this universe including that of a monkey




  230.  

    உண்மை எது பொய் எது என்று தெரிய வேண்டும் இல்லையா ,கருந்தேள் பேச்சை கேட்டால் எங்கோ கமல் அமெரிக்காவில ஆங்கில படத்தை திருடியதை சொல்லி சொல்லி காட்டுறார் ,திருடன் திருடன் என்று கூச்சல் போடறார் ,நம்ம வீட்ல இருக்கிற திருடன் ரஜினி ,அமிதாப் படங்களை காபி அடிக்கும் அடித்தே சூப்பர் ஸ்டார் ஆனவர்,மாவீரன் தான் பிளாப், வேலைக்காரன் ,பணக்காரன் ,பாஷா ,பில்லா , அதை நான் சொல்லி கொள்ள சுட்டி காட்ட ஜன நாயக உரிமை கருத்து உரிமை இருக்கு,முதலில் வீட்டை திருத்துங்க அப்புறம் நாட்டை நாட்டில் உள்ள கமலை திருத்துங்க




  231.  

    This comment has been removed by the author.




  232.  

    ஹாய் ஏதோ படத்த பார்த்து கதை சொல்லேறேங்கனு பார்த்த ஓவரா வறுத்து எடுகதிங்க நம்ம கமல் பாவம்




  233.  

    கருந்தேள்,
    கமலின் ப்ளஜரிஸம் அவருடைய​ குரு தமிழ் பேராசிரியர் தொ. பரமசிவனிடமிருந்து கற்றுக்கொண்டது. அந்தாள் இலக்கிய​ ப்ளஜரிஸ்ட், இந்தாள் … அதுதான் எழுதிக் கிழிச்சிட்டீங்களே.




  234.  

    கமலஹாசன்… இந்த பொழப்பு பொழைக்கறதுக்கு நாலு வீட்ல பிச்ச எடுக்கலாம்…




  235.  

    காப்பி அடிக்கப் பட்ட படங்கள் என்று முன்னேயே தெரியும்..

    அந்த வகையில் பார்த்தால் ஆனால் இந்தப் பதிவும் காப்பி அடிக்கப் பட்டது
    தான் (இந்தத் தகவல்களை எங்கோயோ பார்த்த ஞாபகம்..)

    காப்பி அடிப்பதில் தவறில்லை.. நல்ல படைப்புகளை அனைத்து மக்களுக்கும்
    கொண்டு சேர்க்கும் விஷயம் மிகச் சிறந்ததே..

    ஆனால் கலைஞருக்கு முதலில் கண்ணியம் வேண்டும்…

    காப்பி அடிக்கும் பட்சத்தில், அதன் உண்மையான உரிமையாளருக்கு ஒரு சிறிய
    நன்றியைத் தெரிவிப்பதில் தவறென்ன.. அது உங்களின் பெருந்தன்மையை எடுத்துக்
    காட்டுமே..

    தயவு செய்து நன்றி தெரிவியுங்கள்…

    அதை விடுத்து அவர்களின் படைப்புகளைத் தானே உருவாக்கியது போல் காட்டுவது
    ஒன்றும் அறியா மக்களை ஏமாற்றுவது போலாகும்..

    குறைந்த பட்ச மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ளலாம்..

    மற்றபடி, காப்பி அடித்தாலும் அதைப் பிரதிபலிப்பது யாருக்கும் கைவரக்
    கூடிய காரியம் அல்ல.. உதாரணத்திற்கு சதிலீலாவதி, பம்மல் கே சம்பந்தம்
    போன்ற படங்களை வேறொரு தமிழ் நடிகர் நடித்திருக்க முடியுமா என்று கற்பனை
    கூட செய்ய முடியவில்லை..

    கருந்தேள் யாரையும் மனதார புண்படுத்த நினைக்க வில்லை எனில், அவருடைய
    இந்தப் பதிவு நல்ல தகவல்களை ரசிகர்களுக்குக் கொடுத்துள்ளது என்று
    சொல்லலாம்..




  236.  

    ,இது பெஞ்ச்மார்க் என்னும் விசையம் ,கக்கூஸ் என்று சொல்லிய டாய்லெட் என்று சொல்லியது போல் அப்புறம் பாத்ரூம் என்று சொல்லி அப்புறம் எப்படி ரெஸ்ட் ரூம் ஆனது உலகம் பூராவும் அமெரிக்காவை எல்ல விசயைதிலும் காபி அடிப்பார்கள் நீங்க போடும் பான்ட் சட்டை போன்ற விசையம் ,பிரபு தேவ மைக்கல் ஜாக்சன் போல அட வில்லை என்று சொன்னால் அவர் அட்ரெஸ் இல்லாமல் பொய் இருப்பார் ,உங்களுக்கு பிடிக்கவில்லை பிரபு தேவ மாதிரி அட தெரியல என்றால் மைக்கல் ஜாக்சன் நடனம் மட்டும் பாருங்க ,காபி அடித்தான் கிபி அடித்தான் என்று கூச்சல் போடாதீர்கள் ,எவ்வளவு பேருக்கு பிரபு தேவ போல மைக்கல் ஜாக்சன் நடனத்தை கமல் நடிப்பு போல ஆங்கில படத்தை காபி அடிக்க தெரியும் mudiyum ,திறமையை பாரடுங்கையா ,பொறமை படாதீங்க




  237.  

    prabhu deva indias answer to michael jackson means kamal indias answer

    to robert de niro,al pacino ,dustin hoffman,robbin williams,eddie murphy

    சம்ஸ் போண்ட பிளம்ஸ் மறுபடியும் கோப்பி அடித்து செய்வது அப்புறம் மிச்சியன் இம்போச்சிப்ளே வேறு

    james bond films copied again and again with differnt heros

    titles

    and mission impossible 1 ,2, 3, 4. 5

    அரைத்த மாவை அரைப்பது ஹாலிவுட் படங்கள் பிச்சை எடுக்க போலாம் கதைகளுக்கு வேறு நாடுகளுக்கு

    belated wishes to kamal for making some wonderful films on the lines

    of great hollywood actors we r proud of u.




  238.  

    Erin Brockovich (2000) julia roberts fighting for water contamination issue

    அது போல தூள் படத்தில் காட்சி வரும்

    இதை ஹாலிவுட் படத்தில் இருந்து சுட்டார்கள் காபி அடித்தார் என்று சொல்லாமல் அது ஒரு பெஞ்ச்மார்க் ,ஆங்கில மயமாக்க பட்ட நம்ம ஊர் ஹோட்டல் மற்றும் வெறும் அனைத்து அலுவலகங்கள் சினிமாவை மட்டும் தான் விட்டு வைத்தததா ,

    உலக நாயகன் ஒலக நாயகன்

    விமர்சனம் எதற்கு

    திருக்குறள் உலக பொதுமறை

    எத்தனை பேருக்கு தமிழ் தெரியும்

    திருக்குறள் மொழி மாற்றம் பண்ணி இருந்தாலும்

    அதை எத்தனை பேர் படித்து இருப்பார்கள்

    கீதை உபநிஷதிலிருந்து சுட்டது திருக்குறள் என்றால் நீங்க ஏற்று

    கொல்விரகள? அல்லது கீதை சொல்லாதது உபநிஷத் சொல்லாதது

    திருக்குறளில் என்ன புதிதாக சொல்லி இருக்கிறார்கள்

    நீங்க திருக்குறள் படிகதீங்க அப்போ,

    உண்மையான உலக நாயகன் காந்தி தான் மாடர்ன் உலகத்தில்

    காந்தி கதை ஒரு பகுதி ஹே ராம் படத்தில் எடுத்தால்

    பெரிய ஆஸ்கார் தேசிய விருது கிடைக்கவில்லை என்றாலும்

    காந்தி பற்றி தெரிந்து கொள்ள விரும்பிகிறவர்களுக்கு அனைத்து உலகிலும்

    ஹே ராம் புத்தகமாக அல்லது த்வத் வடிவமாக இருக்கிறது என்பதை தாழ்மையுடன்

    சொல்லி கொள்ள கடமை பட்டு இருக்கேன்

    அதனால் தான் கமல் உலக நாயகன்

    இப்போ சொல்லுங்க நம்ம காந்தி உண்மையான உலக நாயகன்

    அவரை பற்றி படம் எடுத்தார் அதனால் உலக நாயகன்

    காக்கி சட்டை பார்த்து போக்கிரி எடுத்தனர்

    பெர்னே இதேண்டிட்டி பார்த்து மொமேண்டோஸ் எடுத்தனர்

    மெமரி லாஸ் memory loss மூன்றாம் பிறையிலே வந்தது

    வெற்றி விழாவில் வந்தது

    கஜினியிலும் வந்தது

    என்று சொல்லி கொண்டே போகலாம்

    தயவு செய்து உலக நாயகனின் பெருமைகளை சிறுமை படுத்தாதீர்கள்

    இதை ஹாலிவுட் படத்தில் இருந்து சுட்டார்கள் காபி அடித்தார் என்று சொல்லாமல் அது ஒரு பெஞ்ச்மார்க் ,ஆங்கில மயமாக்க பட்ட நம்ம ஊர் ஹோட்டல் மற்றும் வெறும் அனைத்து அலுவலகங்கள் சினிமாவை மட்டும் தான் விட்டு வைத்தததா ,

    உலக நாயகன் ஒலக நாயகன்

    விமர்சனம் எதற்கு

    திருக்குறள் உலக பொதுமறை

    எத்தனை பேருக்கு தமிழ் தெரியும்

    திருக்குறள் மொழி மாற்றம் பண்ணி இருந்தாலும்

    அதை எத்தனை பேர் படித்து இருப்பார்கள்

    கீதை உபநிஷதிலிருந்து சுட்டது திருக்குறள் என்றால் நீங்க ஏற்று

    கொல்விரகள? அல்லது கீதை சொல்லாதது உபநிஷத் சொல்லாதது

    திருக்குறளில் என்ன புதிதாக சொல்லி இருக்கிறார்கள்

    நீங்க திருக்குறள் படிகதீங்க அப்போ,

    உண்மையான உலக நாயகன் காந்தி தான் மாடர்ன் உலகத்தில்

    காந்தி கதை ஒரு பகுதி ஹே ராம் படத்தில் எடுத்தால்

    பெரிய ஆஸ்கார் தேசிய விருது கிடைக்கவில்லை என்றாலும்

    காந்தி பற்றி தெரிந்து கொள்ள விரும்பிகிறவர்களுக்கு அனைத்து உலகிலும்

    ஹே ராம் புத்தகமாக அல்லது த்வத் வடிவமாக இருக்கிறது என்பதை தாழ்மையுடன்

    சொல்லி கொள்ள கடமை பட்டு இருக்கேன்

    அதனால் தான் கமல் உலக நாயகன்

    இப்போ சொல்லுங்க நம்ம காந்தி உண்மையான உலக நாயகன்

    அவரை பற்றி படம் எடுத்தார் அதனால் உலக நாயகன்

    காக்கி சட்டை பார்த்து போக்கிரி எடுத்தனர்

    பெர்னே இதேண்டிட்டி பார்த்து மொமேண்டோஸ் எடுத்தனர்

    மெமரி லாஸ் மூன்றாம் பிறையிலே வந்தது

    வெற்றி விழாவில் வந்தது

    கஜினியிலும் வந்தது

    என்று சொல்லி கொண்டே போகலாம்

    தயவு செய்து உலக நாயகனின் பெருமைகளை சிறுமை படுத்தாதீர்கள்

    தமிழ் கூறும் நல் உலகம் இலங்கையில் மட்டும் இல்லாமல் உலகம் பூரா

    இருந்து கொண்டு தெனாலி படத்தில் தங்களுக்கு நேர்ந்த அதே அனுபவம்

    சொந்த வீடுகள் அழிந்து சொந்தங்கள் அழிந்து நாட்டை விட்டு ஓடி போக
    வேண்டியது ஆயிற்று அதை தெனாலி சோமன் விட எந்த சினிமா சொன்னது

    புலம் பெயர்ந்த தமிழர்கள் எல்லோருமே உலக நாயகர்கள் தான் அவர் அவர்

    துறைகளில் .அங்கிலேயர்கல்கலுகும் நம் தமிழர்கள் விஞ்ஞானத்தில் ஆகட்டும்

    தொழில் நுட்பத்தில் ஆகட்டும் நாம் அவர்களை விட சளைத்தவர்கள் இல்லை என்பதே உண்மை.அனால் இந்தியர்கள் மைக்ரோசாப்ட் அடிவருடிகள் போல இல்லமல் வெள்ளைகரர்களின் கை பாவிகளாக இல்லாமல் இந்தியாவில் இருந்து உலக சினிமா எடுக்க துடிக்கும் கமல் போல ஒரு மைக்ரோசாப்ட் ஒபெரடிங் சிஸ்டம் பண்ண வில்லை என்றாலும் ஒரு தேசி ப்ரௌசெர் கூகுளே ச்ரோமே போல மொழ்ஜில பிறேபாக்ஸ் போல

    atleast like google chrome and firefox

    needed by indians or desi browser needed.




  239.  

    கப்பி அடித்தால் அதை ஒத்துக்கொள்ளும் துணிவு இருக்கவேண்டும்.
    ஆம், நான் 9to5 திரைப்படத்தை மகளிர் மட்டும் என்று எடுத்தேன். மிஸஸ் டவுட்ஃபயர் கதையையும், டூட்ஸி ஸ்டைலையும் சேர்த்து அவ்வை ஷண்முகி கதையாக்கினேன் என்று ஒத்துக்கொள்ளவேண்டும்.
    திரையில் கதை-கமலஹாசன் என்பதற்கு பதில் ஒரிஜினல் கதாசிரியர் பெயரைப் போடவேண்டும். அல்லது இந்தப்படத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று போடவேண்டும். அல்லது காப்புரிமை வாங்கிச் செய்யவேண்டும். துரோக் கால் படத்தை குருதிப்புணல் என்று எடுத்தார், வெனஸ்டே படத்தை உன்னைப்போல் ஒருவன் என்று எடுத்தார். எல்லாம் காப்புரிமை வாங்கிச் செய்தார். இதையே வெளிநாட்டு இறக்குமதிக்கும் செய்தால் என்ன குறைந்து போய்விடுவார் ?

    இதெல்லாம் செய்ய கமலிடம் பணம் இல்லையா ?




  240.  

    அது தான் உங்க கனவு நிறைவேறி ஆச்சே ,இனி மேல யாரும் கோபிரிக்ஹ்ட் இல்லாமல் படம் எடுக்க முடியாது

    வால்ட் டிஸ்னி, வார்னர் பிரதர்ஸ், ட்வென்டித் செஞ்சுரி ஃபாக்ஸ், சோனி உள்ளிட்ட ஹாலிவுட் நிறுவனங்கள் வந்தாச்சு

    இந்தியாவிற்கு அவர்கள் கேட்கவேண்டிய கேள்வி கோர்ட்
    பார்த்து கொள்ளும்

    பஜாஜ் ஸ்கூட்டர் கதை தெரியாது

    vespa scooter contract முடிந்தும்

    அதையே பஜாஜ் என்று வந்து கொண்டு

    தான் இருந்தது பல ஆண்டுகள்

    இன்னும் இப்படி பல கதைகள் , vespa scooter

    தன models bajaj kooda போட்டி போட்டது மறந்து போச்சா ,

    இப்படி இந்தியாவில் பல கதைகள் பல துறைகளில்

    ஈ அடிச்சான் காபி தான்




  241.  

    பஜாஜ் மாதிரி பெரிய திருடன்

    இருக்க முடியாது இந்திய சரித்திரத்தில்

    நீங்க சொன்ன மாதிரி கமல் காபி போல வீசப

    ஸ்கூட்டரை காபி அடித்ததினால் பஜாஜ் ஸ்கூட்டரை

    யாரும் திட்டவில்லை ,காபி அடிப்பது போல பண்ணினாலே

    அது ஒரிஜினல் பன்னுபவருடைய குறைபாடு தான்

    இதை தான் கமல் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் தன்னை போல

    பேசினால் போதும் என்று உருவ வேற்றுமை ,குரல் வேற்றுமை

    மற்றும் எல்லா வித தமிழ் பேசி மிகவும் கஷ்ட படார்

    உதரணமாக குள்ளமாக அதை யாரும் எளிதில் காபி அடிக்க

    முடியாது ,தெனாலி இலங்கை தமிழில் பேசினால் அவவள்ளவு

    சீக்கிரம் மிமிக்ரி ஆர்டிஸ்ட் பேச முடியாது

    ஏதோ ஒரு நாயகன் டயலாக் தான் காக்க கத்துவது
    போல வேண்டும் என்றே அந்த வேலு நாயக்கரை

    இழிவு படுத்துவது போல செய்வார்கள்

    கதை படி வேலு நாயக்கர் இது வரை அழுதது இல்லை

    அப்படி அழுகாத மனிதன் எப்படி அழுவான் என்று

    தான் கொஞ்சம் வினோத அழுகையாக இருக்கும்

    எல்லா மிமிக்ரி ஆர்டிஸ்ட் கமல் குரல் போல பேச

    முடியும் ஆனால் அவரை போல வட்டார வழக்கு பேச அவ்வளவு

    எளிதல்ல

    ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் உன்னை போல பேசினால் நீ

    காலி என்னும் உணர்வு சாதாரண நடிகன் இருக்கும் போது மிக பெரிய ஹாலிவுட் நிறுவனங்கள் காபி அடிப்பது அல்லது எளிதில் காபி அடிப்பது போல ஏன் எடுக்க வேண்டும்

    வேண்டுமானால் எல்லா ஹாலிவுட் படங்களையும் 3 D ,IMAX FORMAT எடுக்க சொல்லவும் அதற்க்கு பட்ஜெட் தொழில் நுட்பம் கூட அவர்களுக்கு நிறைய கம்பனிகளுக்கு இல்லை என்பது தான் உண்மை .




  242.  

    maine pyaar kiya சல்மான்
    கானிடம்
    கதாநாயகி உடைய அப்பா கேட்பது போல தன அப்பா

    சம்பாரித்த செல்வம் இல்லாமல்

    சல்மானினால் தனியாக நிற்க முடியுமா என்றால்

    அதற்கு அவர் முடியும் என்று லாரி ஓட்டுகிறார் கல் உடைக்கிறார்

    ஒரு வெளி நாடு இந்தியர் பணக்காரர் காதலுக்காக எதுவும் செய்வார்

    இந்த கதையும்

    எனக்கும் உனக்கும் சம்திங் சம்திங்

    கதையும் என்ன வித்தியாசம்

    அதிலும் காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்

    ஹீரோ ஹிந்தியில் லாரி ஓட்டுவார் ,கல உடைப்பார்

    தமிழில் விவசாயம் பண்ணுவார் அவ்வளவு தான் வித்தியாசம்

    மைனே பார் கிய maine pyaar kiya பார்த்தவர்கள் இதை தமிழில் ரசிக்க முடியுமா?

    பாச மலர் படத்தை எத்தனை முறை ரீமேக் செய்து உள்ளனர்

    தமிழில்

    அந்த மாதிரி பண்ணாமல் உலக சினிமா போல பண்ணுவதால்

    தான் கமலின் சிறப்பு காபி உரிமம் பெற்று இருக்கிறரா அல்லது
    காபி அடித்தார என்பது அனாவசியம்

    எப்படி கிழக்கு சீமையிலே பாச மலர் கதை போல

    பாச மலர் பட தயாரிபளர்களிடம் அனுமதி பெற்றார என்பது

    காபி அடித்தார என்பது நம்மக்கு தேவையா

    என்ன தான் நீங்க வருடம் பூராவும் ரூம் போட்டு யோசித்தாலும்
    cinderlla story pola thaan irukkum yosithalum
    அதை ஏற்கனவே எடுத்து இருப்பார்கள்




  243.  

    Sathya Marathon Man (1976)?
    Hoffman’s Marathon Man (1976) has laurence oliver as
    a nazi. The Laurence oliver character
    is the root for the part
    played by the villian in “sathya”.

    http://jackofall.blogspot.com/2005/03/inspired-kamal-hassan.html

    It is a remake from Sunny Deol’s 1985 film Arjun

    let me put this baseless record straight

    http://en.wikipedia.org/wiki/Sathya_(film)

    Enakkul Oruvan( English: Someone within me )
    is a 1984 Tamil film starring Kamal Haasan
    in the lead role. A remake of Subhash Ghai’s
    Hindi film, Karz (1980), starring Rishi Kapoor,
    and Tina Munim.

    http://en.wikipedia.org/wiki/Enakkul_Oruvan

    not the one Reincarnation of Peter Proud(1975)

    Devar Magan

    you will be surprised. Kamal he himself told the
    inspiration for the movie was “God Father”.
    Now put shivaji as the Marlon brando,
    Al pacino as kamal, the barzinni and other
    mafia’s as Nazar. Gang wars into clan fights,
    you got the Devar magan. It is definitely a
    great adaptation; lot of credit goes to kamal.
    But still inspired, by his very own words

    Kurudhi Punal

    the story is a remake of the film Drohkaal.

    ,jumping before train sequences from money train

    what an invention jumping before train

    amir khan also did the same in GHULAM

    (BLAME IT ON TECHNOLOGY IMPORTS

    HOLLYWOOD ALSO NEED TO SELL ALL ITS EQUIPMENTS

    TO INDIAN FILM MAKERS)

    #)Vetri vizha
    Was based on the Robert Ludlum book “Bourne Identity”

    NOVEL ADAPTION YENNA KUTRAM AIYAA WHATS WRONG WITH THAT

    Vikram
    Let’s not go into the james bond style story
    line of this movie.Check out the costumes,
    it will remind various movies from star war’s
    to biblical movies.

    OH THAT THINGS ONLY BELONG TO HOLLYWOOD NOT TO WORLD CINEMA

    Virumandi
    The great thing about the movie is not the
    story line.But how the movie is narrated.
    Unfortunately a very old technique,
    used by kurusawa in the 50′s.Actually kamal
    is not the first to be inspired by Kurusawa’s
    Roshmon, vennai balachander’s has already taken
    “Andha Naal” on the same style.Jail
    interviewing part is from “The Life of David Gale”.

    SHOLAY ALSO COPIED FLASHBACK STORY TELLING TECHNIQUE

    The film relies primarily upon the use
    of flashbacks to tell the story,

    Panchathantiram

    This film is loosely inspired from the
    1998 English flick Very Bad Things.

    Sathi leelavathi

    samsaarm samasaaram kathai ithai hollywoodukku thaan

    sondham namma oorukku sontham kidaiyadhu

    http://en.wikipedia.org/wiki/Panchathanthiram

    VERY BAD THINGS IS A MEGA HIT FILM KAMAL COPIED IT TO

    MAKE MILLIONS,SO HE DONT WANT BILLIONS ONLY

    loosely inspired not fully




  244.  

    ரசனை என்பது அற்பமான விஷத்தை அற்புதமாக ரசிப்பது

    கமல் ஒரு அற்புதமான கலைஞன்

    ஒரு அற்புதமான விசையத்தை கூட ரசிக்க தெரியாத

    அற்பர்கள் இந்த ப்ளாக் மூலம் தெரிந்தது

    அடுத்து என்ன செய்வது

    எந்திரன் படத்தை எப்படி கேமரா துடைத்தார்கள்

    பெரு நாட்டில் எந்திரன் பட குழு சுற்று புற சூழலை

    எப்படி மாசு படுத்தியது

    என்பதை நீங்கள் சன் தொலைகாட்சியில் பார்த்து மகிழுங்கள்

    வெறும் ற்றைலேர் வெளியீடு போதுமா

    எப்படி வேலூர் பட பிடிப்பின் போது ஆம்பூர் பிரியாணி

    சாபிடார்கள் அதை சமைத்தவர் யார்

    சாப்பிட்டதில் யார் அதிகமாக சாப்பிட்டார்கள்

    என்று மிக ஆச்சர்யமான தகவல் கண்டு மகிழுங்கள்




  245.  

    ரசனை என்பது அற்பமான விசயத்தை அற்புதமாக ரசிப்பது

    கமல் ஒரு அற்புதமான கலைஞன்

    ஒரு அற்புதமான விசையத்தை கூட ரசிக்க தெரியாத

    அற்பர்கள் இந்த ப்ளாக் மூலம் தெரிந்தது

    அடுத்து என்ன செய்வது

    எந்திரன் படத்தை எப்படி கேமரா துடைத்தார்கள்

    பெரு நாட்டில் எந்திரன் பட குழு சுற்று புற சூழலை

    எப்படி மாசு படுத்தியது

    என்பதை நீங்கள் சன் தொலைகாட்சியில் பார்த்து மகிழுங்கள்

    வெறும் ற்றைலேர் வெளியீடு போதுமா

    எப்படி வேலூர் பட பிடிப்பின் போது ஆம்பூர் பிரியாணி

    சாபிடார்கள் அதை சமைத்தவர் யார்

    சாப்பிட்டதில் யார் அதிகமாக சாப்பிட்டார்கள்

    என்று மிக ஆச்சர்யமான தகவல் கண்டு மகிழுங்கள்




  246.  

    ‘கிறுக்குச் சித்தர்’ கமல்ஹாசன்
    http://chudachuda.blogspot.com/2009/05/blog-post_18.html
    for a while i am giving rest to my opinion please read whenever u get time .thank u.




  247.  

    நண்பரே,

    படங்களின் பட்டியல்கள் அருமை. நான் ரஜினி, கமல் இருவரையுமே ரசிப்பவன். இருவருமே பல படங்களை தழுவியே நடித்துள்ளனர். கிரெடிட் கொடுக்கனுமா, வேணாமானு அவங்க மனசாட்சிக்கு தோனும்போது செய்யட்டுமே. நாம் படங்களை ரசிப்போம். நல்ல கருத்துக்கள் இருந்தால் எடுத்துக்கொள்வோம், தேவையில்லாத விஷயத்தை ஒதுக்கிடுவோம்.




  248.  

    Recently I read even some of Charu’s works are copies. Not just copies, “Photo copies”. Till date there is no reply from Charu. Why not you respond to this Karunthel on behalf of Charu?




  249.  

    @ cap tiger – நன்றி..

    @ ராம் வெங்கடேசன் – உங்கள் தளம் பார்த்தேன்..

    @ கோபி- சாரு, கமல் போல அணுகவே முடியாமல் தன்னைச் சுற்றி ஜால்ராக்களை வைத்துக் கொண்டிருப்பவர் அல்லவே.. அவரிடமே நீங்கள் இதைப்பற்றிக் கேட்கலாமே.. அதை விட்டுவிட்டு, கமல் காப்பியடித்ததை ஆதாரத்துடன் எழுதினால், உடனே நம்ம கருணாநிதி கேட்குற மாதிரி சம்மந்தமே இல்லாமல் பேசினால் எப்படி? :-)




  250.  

    tamil cinema fans can be divided into two- one who watches hollywood movies, and one who dosent…i watched god father and also naayagan and know that naayagan is but taken from god father…but at any point of time while watching naayagan do you feel “aiyo god father padatha keduthutaangale?” No. I do agree with your plagiarism comment, yes…and kamal trying to show himself as a philosopher(goundamani dialogue thaan nybagam varudhu,) but kamal has also done some movies which are original( salangai oli, maro charitra, pesum padam to name a few..) at no point of time i am justifying kamal’s plagiarism but you could have mentioned a small bit about kamal’s positives also, and not just negatives, kamal oda original padangalaiyum neenga solli irundhaa avar copy adikka venidya avasiyam illaingara point thelivaaga therinju irukkum, but irundhum copy adikkaraar… And I strongly object to people speaking bad about music director Deva…At no point of time has he said that all the tunes are his….makkal rasanaikerpa music podarennu thaan solli irukkaare thavira vera eduvum sonnadhu illa…There are lots of hypocrites(including Kamal) but I cannot accept Deva as one of them…




  251.  

    நீர் அப்போதுதான் பார்த்தீர் என்று சொல்லவும். அதற்க்கு ஓர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இதை அவர் சொல்லி விட்டார். இதையும் நீர் ஏற்றுக்கொள்ள மாட்டீர். முடிந்தாள் விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டு பாருங்கள். சாருவுக்கும் இது தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. அவரும் அதைதான் சொன்னார். ரகுமான் வாங்கிய கடுப்பில் சொன்னார் என்று. கமல் ஆஸ்கார் பற்றி எப்போதோ சொன்னார் என்று உமக்கு தெரியும் ….அனால் ஒப்புக்கொள்ள மாட்டீர்.

    கருந்தேள் கண்ணாயிரம் அவர்களே இதுவே ஒரு தமிழ் படத்தின் பெயர் தானே ஐயா. உமக்கு சொந்தமாக ஒரு பெயர் வைக்க தெரியாதா. அதையும் திருடி வைத்து கொண்டு நீங்கள் செய்யும் அலப்பறை தாங்களை.

    கமல் நடித்த நீங்கள் குறிப்பிட்ட அணைத்து படங்களும் ஆங்கில படங்களின் இன்ஷ்பிரஷன் என்று நாங்கள் ஒற்றுக்கொல்கிறோம். ஆனால் ஈ அடிச்சான் காபி அல்ல. அதை நீங்கள் ஒற்றுக்கொல்லுங்கள்.

    என்னமோ நோபல் பரிசுக்காக பெரிய கண்டுபிடிப்பு பண்ணிட்ட மாதிரி சீன் போட வேண்டாம என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அதை நிரூபிப்பதற்காக மண்டை பிதுக்கொள்ளவேண்டம். இந்த விஷயம் யாரோ எப்பவோ சொன்னது. எங்களுக்கும் தெரியும். நீர் கண்டுபிடித்தார் போல் சீன் போட வேண்டாம். .

    கருந்தேள் அவர்களே உமக்கு திக்குவாய் இருக்கும் போல…அது உலக நாயகன்….ஒலக நாயகன் அல்ல…

    தப்பை குறிப்பிடுங்கள்…விவாதம் செய்யுங்கள்…அனால் யாரையும் அவமான படுத்தாதீர் கருந்தேள்…




  252.  

    My point in bringing Charu here is (Copy….), he was referring this webpage in his site. He is always elated when something negative on Kamal is posted and he never misses a chance to refer the related links. What quality does charu have, to refer this topic of Kamal (copy) when he himself is accused of doing it?

    Yes I agree almost all of Kamal’s films are localised copies. But you need to have a talent to localise western versions. That way he is better than so many araicha maavu cases.




  253.  

    ஜாக்கியோட கடைக்கு போனதால் இங்கேயும் ஒரு பின்னூட்டம்!இல்லாத ஊருக்கு சர்க்கரை மாதிரி கமல்.சராசரி தமிழனுக்கு மூலக்கதை எங்கிருந்து என்பதில் என்ன கவலை?நீங்கள் சொல்லுகிற படி டைட்டிலில் கிரடிட் கார்டு போட்டா Comparision புத்தியோடவே படம் பார்க்கத்தூண்டும்.

    எல்லோரும் கஜனி மெமண்டோவோட காப்பின்னு சொல்றாங்க.நேற்று Death Race பார்க்கும் போது ஜேசன் உடம்புல குத்திகிட்ட பச்சையும் கூட எதுலருந்து எது சுட்டது என்று யோசிக்க வைத்தது.

    ஆங்கிலம் மட்டுமே அசல் என்று எப்படி சொல்ல இயலும்?தொழில் நுட்ப ரீதியாக சிறப்பாக இருக்கும் ஆங்கிலப் படங்கள் விட்டாலாச்சார்யாவையே எனக்கு நினைவு படுத்துகின்றன.

    முதலில் போக்கிரி ரசனைகளை மாற்ற முயற்சி செய்யுங்கள்.(முடியும்ன்னு நினைக்கிறீங்க)அதற்கு பின் கமலின் சுட்ட பழமா?சுடாத பழமா விவாதிப்போம்.

    முடிக்கும் முன் சின்னதா ஒரு குட்டு!இடுகையில் உங்கள் சுயலாபமே எஞ்சி நிற்கின்றது.




  254.  

    pongada…. pzhappatha pasangalaa…




  255.  

    @ கிறுக்கன் – அட இங்கயும் அதே பின்னூட்டமா? :-) பின்னூட்ட சாதனை எதாவது பண்றமாதிரி நோக்கமா? ;-) ஆஹா.. என்ன ஒரு கேள்வி? நானு படத்தோட பேரு இந்த சைட்டுக்கு வெச்சதுக்குக் காரணம், ரொம்ப சிம்புள்.. அது – ‘இன்ஸ்பிரேஷன்’.. ;-) உங்க ஒலகநாயகன் பண்ற அதே வேலை தான் ;-) ..

    பை த வே, அது உலகநாயகன் இல்லை. ஒலகநாயகன் தான் ;-) .. ஏன்னா, தமிழ்நாட்டுலயும், கொஞ்சம் வட இந்தியாவுலயும் மட்டுமே தெரிஞ்ச தன்னை, ஒலகத்துக்கே நாயகனா ஆக்கிக்க முயற்சி பண்ணாரே.. ஒலகப்படங்களை ஈயடிச்சாங்காப்பி அடிச்சி ;-) .. அதைக் காமெடி பண்ணி வெச்ச பேரு அது ;-)

    எனக்குத் திக்குவாய் இல்லை.. உமக்குத்தான் அப்ஸஸிவ் கம்பல்ஸிவ் டிஸார்டர் போல ;-) .. உங்க ஒலகநாயகன் மாதிரி ;-) … அவரு அடிச்ச ஈயடிச்சாங்காப்பிகளை இன்னமும் இன்ஸ்பிரேஷன்னே சொல்லி ஊரை ஏமாத்த முடியாது ;-)

    அப்புறம், அந்த ஆஸ்கர் பத்தி ஒ(ளறல்)லகநாயகன் சொன்னது , லகான்ல அமீர்கான் நாமிநேட் ஆனாரே.. அப்ப எரிஞ்ச வயித்தெரிச்சலால கூட இருக்கலாம் ;-) .. அதே மாதிரி ரஹ்மான் வாங்குனப்ப அவரு வயிறெறிஞ்சி சொன்ன பேட்டியை நானும் படிச்சிருக்கேன்.. ;-) ஹாஹ்ஹா.. இவரு சொல்ற ஒளறல்களையெல்லாம் லின்க்கெல்லாம் அனுப்பி ப்ரூவ் பண்ணப்பாக்குறீங்களே.. நீங்க கட்டாயம் மறைகழண்ட கேஸ் தான் ;-) .. தஞ்சாவூர்ல கல்வெட்டு ரெடி பண்ணிட்டீங்களா? பின்னால வர்ர ஒங்க சந்ததிகள், அதப் பார்த்துப் படிச்சிப் பயன்பெறுவாங்க :-)




  256.  

    பாஸ்…எனக்கு ஒரே ஒரு கேள்வி…
    tell me the exact difference between copying and inspiration?

    if you’re answering in a detail that will be really good…




  257.  

    @ நெருப்புச் சக்கரம் – காப்பிக்கும் இன்ஸ்பிரேஷனுக்கும் உள்ள வேறுபாட்டைக் கேட்டிருக்கிறீர்கள். அது மிகவும் சுலபமாயிற்றே..

    தேவா, எஸ்.ஏ ராஜ்குமார் செய்வது காப்பி.
    கமல், மணிரத்னம் ஆகியவர்கள் செய்தால் அது இன்ஸ்பிரேஷன் ;-)

    மேட்டர் ஒன்றுதான். ஆனால், செய்யும் ஆள் கமலாக இருந்தால், உடனே அது இன்ஸ்பிரேஷனாக மாறிவிடும் ;-)

    இதைத்தானே பல காலமாகச் சொல்லிவருகிறார்கள் ;-)




  258.  

    ஹலோ கருந்தேள் கண்ணாயிரம்,
    கமல் ஒரு உலக படத்தை காப்பி பண்ணி அந்த படத்திற்கு சேதாரம் வராத வரைக்கும் அது தவரே அல்ல.
    எப்படி பாயும் புலியில் ரஜனி 36th Chamber of Shaolin யும் for your eyes only யும் சேர்த்து படம் பண்ணியும் புறம் போக்காக மாறின மாதிரி இல்லாம இருந்தால் சரிதான்.
    மேலும் தங்களது பதிவு எல்லா காலத்திலும் கமலுக்கு எதிராகவே தெரிகிறது.
    எனது சக ரஜினி ரசிக நண்பர்கள் கமல் படத்தை முதல் நாளே (காக்கி சட்டை பீரியடில்] பார்ஹ்து விடுவார்கள் எனக்கு முன்பாகவே,, குற்றம் பார்க்க…அதுபோலதான் நீங்களும் உங்கள் பதிவுகளும்.
    எப்படியோ நல்ல ரசனைகளும் நல்ல கருத்துக்களும் எந்த வழியில் வந்தாலும் நலமே.
    நாங்கள் கமலிடம் ரசித்ததெல்லாம் நவரசங்களும் யாராலும் தர முடியாத சிருங்காரமும் ..
    தங்கள் பதிவிற்கு நன்றி ..

    சாமுவேல் ராபின்சன்
    ரியோ டி ஜெனிரோ




  259.  

    நீங்க சொல்றத வச்சு பாத்தா…ஒங்களுக்குமே அந்த வித்தியாசம் புரியல போல தெரியுது………




  260.  

    @ sasero – ஹலோ சாமுவேல் ராபின்ஸன்,

    உங்கள் மெயிலுக்கு நன்றி. நான் கமலுக்கு எதிரி அல்லவே அல்ல. ஈயடிச்சாங்காப்பிக்கு மட்டுமே எதிரி. கமல்ஹாஸன் என்ற நடிகர், தமிழ் மக்களை இத்தனை காலம் ஏமாற்றியதை எதிர்த்தே எனது பதிவு. மற்றபடி, ராமராஜன் இதைச் செய்து, அவரை ‘ஒலகநாயகன்’ என்று தூக்கிப்பிடித்து ஆடிக்கொண்டிருந்தாலும், இதைத்தான் செய்திருப்பேன்.

    குற்றம் பார்ப்பது என் வேலை அல்ல. அதற்குப் பல பேர் இருக்கிறார்கள். ஒருவேளை உங்களுக்கு அப்படித் தெரிந்தால், வெல்.. எதற்குப் படிக்க வேண்டும்? எதற்கு டென்ஷனாக வேண்டும் சொல்லுங்கள்?

    நன்றி…

    @ நெருப்புச்சக்கரம் – எனக்கு வித்யாசம் நல்லாவே புரியும்.. ஆனா கமல் வெறியர்களுக்குத் தான் அது புரியாது. அதுனால தான் கமல் செய்யுறதெல்லாம் இன்ஸ்பிரேஷன் இன்ஸ்பிரேஷன்னு சொல்லிக்கினு திரியுறாங்க ;-)




  261.  

    அட உண்மையிலேயே எனக்கு புரியல…..நீங்க இவ்ளோ நீஈஈஈஈஈளமா பதிவு எழுதிருக்கீங்கன்னுதான் ஒங்ககிட்ட கேட்டேன்….எனக்கு தெரியாதுன்னு கேட்டா…நீங்களும் மழுப்புறீங்க…
    இந்த வித்தியாசத்த பத்தி எங்கள மாறி ஆளுக்கும் புரியிறாப்ல ஒரு பதிவு போடுங்க….




  262.  

    Tamil Movies are copied or shall i say “inspired”
    from Hollywood and Bollywood, so this has been
    happening both ways since quite a few decades,
    e.g The famous” Ghajini” is “inspired” from
    “Memento” and so are the following
    Tamil movies which have been copied/inspired
    from Bollywood:-

    qaidi 911 – Kaithi Kannaayiram
    aaradhana – Sivahamiyiri Selvan
    yadon ki baaraat – Naalai Namade
    don – billa
    qurbani – Viduthalai
    trishool – Mr. Bharath
    golmal – thillu mullu
    deewar – thee
    mard – Maaveeran
    laawaris – Panakkaran
    arth – marupadiyum
    namak halal – Velaikkaran
    namak haram – unakkaaga naan
    hath ki safai – savaal
    arjun – sathya
    damini – priyanka
    drohkal – Kuruthipunal
    andaz apna apna – Ullathai Allitha
    munnabhai – vasool raja
    johnny gaddar(inspired) – sindhanai sei
    khosla ka ghosla – poi solla porom
    rampur ka lakshman – mangudi minor
    majboor – Naan Vazavaipen
    Amar Akbar Antony – Ram Robert Rahim
    Khuddar – Padikkathavan
    khoon pasina – Siva
    HuM (inspired) – Badsha
    Kasme Vaade – Dharmathin Thalivan
    Pyar Jhuktha Nahin – Naan Adimai Illai
    insaf ki pukar – Guru Sishyan
    khudgarz – annamalai
    Roti Kapda aur Makan – Jeevana Porattam
    Aaj Ki Awaz – Naan Sigapu Manitha
    raja rani – Adutha Varisu
    Vishwanath – Naan Mahan Alla
    karz – ennakul oruvan

    This is not an exhaustive list and
    I am pretty sure we can find many
    such Tamil movies copied from Bollywood




  263.  

    Khudgarz is a 1987 Bollywood film starring
    Jeetendra, Shatrughan Sinha, Bhanupriya and
    Govinda. The film marks the directorial
    debut of actor Rakesh Roshan. It was later
    remade into Tamil as Annamalai with
    Rajnikanth and Sarath Babu playing the Male leads.

    தேவர் பிளம்ஸ் ,விஜய வாகினி ,ஏ வி எம் தயாரித்த பழைய படங்கள்

    விடுங்க அவர்கள் ஹிந்தி தமிழ் இரண்டிலும் தாயரித்தார்கள்

    அதன் பின்னர் வெறும் ஹிந்தி ரீமேக் செய்து தான் பிழைத்து

    கொண்டது தமிழ் சினிமா

    அதற்க்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர் பாலாஜி அவர்கள்

    வெறும் ஹிந்தி படங்களை மட்டும் ரீமேக் செய்வார்

    குர்பானி படம் விடுதலை என்று சரியாக போக வில்லை
    என்றாலும் விடாமல் தமிழகத்தில் நன்றாக ஓடிய ஹிந்தி

    படங்களை தொடர்ந்து ரீமேக் செய்தார் பாலாஜி

    அதன் தொடர்ச்சி ரஜினி மற்றும் கமல் ஹிந்தி ரீமேக்
    செய்து வந்தனர்
    குரு ஜுக்னு ஹிந்தி ரீமேக் என்று சொல்லி கொண்டே போகலாம்

    சட்டம் தோஸ்தானா ரீமேக்

    Dostana (Hindi/Urdu: “friendship” Urdu:دوستانہ)
    is a 1980 Bollywood movie, produced by
    Yash Johar and directed by Raj Khosla.
    The film stars Amitabh Bachchan,
    Shatrughan Sinha, Zeenat Aman

    நல்ல வேலை கமல் தன படங்கள் ஹிந்தியில் செய்ய ஆரம்பித்தார்

    மூன்றாம் பிறை சத்மா ஆனது ,

    வறுமையின் நிறம் சிவப்பு ,சட்டம் ஏன் கையில் yendru

    but A wednesday remake

    உன்னைப்போல் ஒருவன் வரை தொடர்கிறது ரீமேக் கலாச்சாரம்

    ஒரிஜினல் சரக்கு எதுவும் இல்லாத தமிழ் சினிமா
    விமர்சனத்திற்கே லாயக்கு இல்லை

    காபி அடித்தான் என்று சொல்ல




  264.  

    hindi film

    மதர் இந்தியா கூட தமிழில் ரீமேக் ஆனது

    வெள்ளைகாரனை hollywood films காப்பி அடிக்கணும் இல்லை

    என்றால் hindi films ஹிந்தி காரனை

    காப்பி அடிக்கணும்

    இது தான் தமிழ் சினிமாவின் பரிதாப நிலை

    அன்றும் இன்றும் என்றும்

    தமிழ் சினிமா முதுகு எலும்பு இல்லாத துறை

    பிற மொழிகளை நம்பி வாழும் கட்டாயம்
    hollywood bollywood தவிர

    மலையாளம் தெலுகு ரீமேக் வேறு




  265.  

    தமிழ் சினிமா ஒரு கால கட்டத்தில் நேரடி போட்டி ஆங்கில ஹிந்தி மலையாளம் மற்றும்

    தெலுங்கு டப்பிங் படங்கள் மற்றும் சீன படங்கள் ஆங்கிலத்தில் டப்பிங் செய்து

    வெளியானது ,ஏதோ ஒரு பாலச்சந்தர் ஒரு பாரதிராஜா ஒரு பாக்யராஜ் ஒரு

    விசு ஒரு பாலு மகேந்திரா தான் இருந்தனர் ,

    தமிழ் சினிமா என்னும் பெயரை காப்பாற்ற

    ,அப்புறம் தொழில்நுட்பத்தில் ஆங்கில படங்களுக்கு இணையாக

    மணி ரத்னம் மற்றும் கமல் படங்கள்

    உங்கள் பாஷையில் காபி அடித்தனர்

    அதனால் தான் தமிழ் சினிமா இன்று உயிருடன் இருக்கு
    மணி ரத்னம் கமல் போன்றவர்களின் அடுத்த கட்டம் தான்]
    சங்கர்

    கலைக்காக விஞ்ஞானம? அல்லது விஞ்ஞான் திற்காக கலையா

    இதை விட மான கேடு என்ன இருக்க முடியும்

    நல்ல கதை சொல்ல தெரியனும்
    ஆனால் நல்லா விஞ்ஞானம் பயன் படுத்தனும்

    நல்லா பிரமாண்டம் எற்படதணும்
    வெறும் மார்க்கெட்டிங் பிழைப்பு
    சக மனிதர்கள் சக நடிகர்கள்
    சக தயாரிபாளர்களை வாழ விடாமல் பிச்சை எடுக்க
    வைக்க வேண்டும்
    குறைந்தது ஐம்பது படங்கள் தமிழ் சினிமாவில்
    முடித்த பிறகும் அதை வெளி இட ஆள் இல்லை
    பாவம் தயாரிபளர்கள் சொந்த காசை போட்டு
    வட்டி மேல மேல வட்டி கட்டி இன்னும் காசை கண்ணில் பார்க்க
    முடியல

    இப்போ ஒரு மனிதரின் இண்டஸ்ட்ரி

    அது ரஜினி தான்
    இப்போ தமிழ் சினிமா மானம் எங்கே போயிற்று
    படத்தின் முன்னோட்ட காட்சி கூட காசு கொடுத்து பார்க்க வேண்டும்

    அப்புறம் ஒரு குடும்ப இண்டஸ்ட்ரி
    தயாநிதி கலாநிதி உதயநிதி
    நம்மக்கு எல்லாம் பெருமை

    விசில் அடிப்பதில்
    ஜோராக விசில் அடிங்க இந்த பதிவை படித்து
    எந்திரன் போஸ்டர் வெளியீட்டு விழா

    http://shilppakumar.blogspot.com/2010/09/blog-post_17.html




  266.  

    Don – Amitabh/Zeenath

    Billa – Rajini/Sripriya

    http://www.youtube.com/watch?v=vv8t6zal8to&feature=fvw
    Hindi block buster song

    http://www.youtube.com/watch?v=qaYZEk39v_E&feature=channel
    Tamil

    You can see they have copied even the constumes of Amitabh to Rajini…

    Great Originality!!!!!!!!!!!!!!

    Costumes.. koodava… “Realistic” appadeena ennanu theriyadhu…Tamil cinema has a shows a different culture..in movies..For the past 10yrs things are getting better..

    Since the actors should/suppose to look cool…. they wore Jerkins/jackets in cchennai veyil..romba kodumai




  267.  

    நீங்கள் சொல்லும் எல்லா தமிழ் படங்களையும் பார்த்த நான் அதன் மூலமாகக் குறிப்பிடும் எதையும் பார்க்கவில்லை. அதனல் அழுத்தமாக எதுவும் சொல்ல முடியாது. ஆனால் சில சிந்தனைகள்:
    கமலின் எல்லாப் படங்களிலுமே ஹாலிவுட் பாணி structure இருப்பது மிக சுலபமாக யூகிக்கக் கூடிய ஒன்று. அதே போல கதைக் களம், கதை சொல்லும் யுத்தி, வெரைட்யான முயற்சிகள் இவை கமல் தொடர்சியாக முயன்று வந்து கொண்டு இருப்பது.மிக குறைவாகவே அத்தகு முயற்சிகள் நிகழும் தமிழ் திரை துறையில் இவை முக்கியத்துவம் பெறவே செய்கின்றன.

    உதாரணமாக ‘ப்ளேன்ஸ்,..’- ‘அன்பே சிவம்’ .என்னளவில் அன்பே சிவம் பல நல்ல தருணங்களை கொண்ட படம். ப்ளேன்ஸ் மெல்லிய நகைச்சுவை படம் என்றால் அன்பே சிவம் அந்த கதை சொல்லும் யுத்தியை கையாண்ட முற்றிலும் வேறு ஒரு நோக்கத்தை கொண்ட படம். ஒரு படைப்பின் தனித்த்வம் அதன் கலாச்சரப் பிண்ணனி, அதன் நோக்கம், மூலத்தை மீறிய ஆன்மா இவற்றால் தான் நிர்ணயிக்கப் படுகிறது என்பது என் எண்ணம்) இப்படியாக ஒவ்வொரு படத்திற்க்கும் அதிலுள்ள ஒற்றுமை-வித்தியாசங்களை ஆராய முடியும். இந்த ஆராய்ச்சிகளை மீறி தமிழ் சினிமாவிற்க்கு ஏற்கனவே சொன்ன படி மாற்று சினிமா கொடுத்ததில் அவரது பங்கு மறுக்க முடியாதது. அவரது சினிமாக்கள் தமிழில் எப்போதும் தனித்து நிற்பவை. தமிழ் ரசிகனின் ரசனையை வேறு தளத்திற்க்கு இட்டு செல்ல ஓயாமல் முயல்பவை.

    ஆனால் ஒன்றல்ல இரண்டல்ல கிட்டதட்ட எல்லா படங்களுமே எதோ ஒன்றின் சாயலில் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
    இதனால் முக்கியமாய் அடிபடுவது அவரது தனி ஆளுமை. தமிழ் போன்ற மாற்று களம் குறைவாக இருக்கும் சினிமாத்துறையில் இவர் பிற மொழி சினிமாவில் இருந்து நிறைய கடன் வாங்கி தன் பெரும் மேதாவி ஆளுமையை கட்டமைத்து இருக்கிறார். இந்த தவறு அவரை கொண்டாடும் அவரது ரசிகர்களை ,தமிழ் சமூகத்தை அவர்களது ignorance ஐ உபயோகபடுத்தியது ஆகிறது. இந்த தவறை செய்யும் எந்த கலைஞனும் அவன் கலைக்கு அவன் சமூகத்திற்க்கு குற்றவாளி ஆகிறான்.

    தனது எந்த படைப்பிற்க்கும் அதன் மூலம் பற்றி குறைந்த பட்சம் பேட்டிகளிலாவது குறிப்பிடாமல் இருப்பது சுத்தமான நேர்மையின்மை. இந்த நேர்மையின்மை வெறும் அவரது inspirations பற்றி குறிப்பிடாதது மட்டிலும் அல்ல. பொதுவாகவே ஒருவித ‘அவார்ட் படம் எடுக்கிறேன் பார்’ தன்மை அவரது படங்களில் இருப்பது போல் எனக்கு தோன்றுவது உண்டு. தன்னை அதிகம் முன்னிறுத்துவது மற்றுமொரு பலவீனம். படைப்பை மீறி படைப்பாளி தெரிகிறான் என்றால் அவனுக்கு ‘அவன்’ தான் முக்கியம் ஆகிறான். (ஹே ராமில் எனக்கு தெரிந்தது சாகெத் ராம் அல்ல பெரும்பாலும் கமல் மட்டுமே )
    கமல் ஒரு உதாரணம் மட்டுமே. நிறைய பேர் பிற மொழி நாவல்(சிலர் தமிழ் நாவல்களே கூட) இவற்றை தழுவி எடுக்கும் போது ஏன் அவற்றை குறீப்பிடுவதே இல்லை?? மூலத்தை மீறி அவர்களது படைப்பு தனித்து நின்றால் நிச்சயம் தமிழ்சமூகம் அவர்களை கொண்டாடும். இன்றும் கூட கொண்டாடிக் கொண்டு தான் இருக்கிறது. அவர்களின் ஏமாற்றுதலை உணராமல். உணர்ந்தால் இந்த கலைஞர்கள், இவர்களது படைப்புகள் எல்லாம் சுவடில்லாமல் காலத்தில் அடித்து செல்லப்படும்.

    நேர்மையின்மையால் அதற்கு கிடைத்திருக்கும் கலை மதிப்பு, அதன் ஆன்மா அதன் அங்கீகாரம் எல்லாமே போலியாகிப் போய்விடும் அபாயம் குறித்து கமல் கவலைப்படுகிறாரோ என்னவோ நான் நிஜமாகவே கவலைப்படுகிறேன்.

    குறிப்பு — அவள் ஒரு தொடர்கதை யில் பாலசந்தர் அதன் மூலக்கதை பற்றி டைட்டிலில் குறிப்பிட்டு இருப்பார்.




  268.  

    1) நீங்கள் சொல்லும் எல்லா தமிழ் படங்களையும் பார்த்த நான் அதன் மூலமாகக் குறிப்பிடும் எதையும் பார்க்கவில்லை. அதனல் அழுத்தமாக எதுவும் சொல்ல முடியாது. ஆனால் சில சிந்தனைகள்:
    கமலின் எல்லாப் படங்களிலுமே ஹாலிவுட் பாணி structure இருப்பது மிக சுலபமாக யூகிக்கக் கூடிய ஒன்று. அதே போல கதைக் களம், கதை சொல்லும் யுத்தி, வெரைட்யான முயற்சிகள் இவை கமல் தொடர்சியாக முயன்று வந்து கொண்டு இருப்பது.மிக குறைவாகவே அத்தகு முயற்சிகள் நிகழும் தமிழ் திரை துறையில் இவை முக்கியத்துவம் பெறவே செய்கின்றன.

    உதாரணமாக ‘ப்ளேன்ஸ்,..’- ‘அன்பே சிவம்’ .என்னளவில் அன்பே சிவம் பல நல்ல தருணங்களை கொண்ட படம். ப்ளேன்ஸ் மெல்லிய நகைச்சுவை படம் என்றால் அன்பே சிவம் அந்த கதை சொல்லும் யுத்தியை கையாண்ட முற்றிலும் வேறு ஒரு நோக்கத்தை கொண்ட படம். ஒரு படைப்பின் தனித்த்வம் அதன் கலாச்சரப் பிண்ணனி, அதன் நோக்கம், மூலத்தை மீறிய ஆன்மா இவற்றால் தான் நிர்ணயிக்கப் படுகிறது என்பது என் எண்ணம்) இப்படியாக ஒவ்வொரு படத்திற்க்கும் அதிலுள்ள ஒற்றுமை-வித்தியாசங்களை ஆராய முடியும். இந்த ஆராய்ச்சிகளை மீறி தமிழ் சினிமாவிற்க்கு ஏற்கனவே சொன்ன படி மாற்று சினிமா கொடுத்ததில் அவரது பங்கு மறுக்க முடியாதது. அவரது சினிமாக்கள் தமிழில் எப்போதும் தனித்து நிற்பவை. தமிழ் ரசிகனின் ரசனையை வேறு தளத்திற்க்கு இட்டு செல்ல ஓயாமல் முயல்பவை.

    ஆனால் ஒன்றல்ல இரண்டல்ல கிட்டதட்ட எல்லா படங்களுமே எதோ ஒன்றின் சாயலில் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
    இதனால் முக்கியமாய் அடிபடுவது அவரது தனி ஆளுமை. தமிழ் போன்ற மாற்று களம் குறைவாக இருக்கும் சினிமாத்துறையில் இவர் பிற மொழி சினிமாவில் இருந்து நிறைய கடன் வாங்கி தன் பெரும் மேதாவி ஆளுமையை கட்டமைத்து இருக்கிறார். இந்த தவறு அவரை கொண்டாடும் அவரது ரசிகர்களை ,தமிழ் சமூகத்தை அவர்களது ignorance ஐ உபயோகபடுத்தியது ஆகிறது. இந்த தவறை செய்யும் எந்த கலைஞனும் அவன் கலைக்கு அவன் சமூகத்திற்க்கு குற்றவாளி ஆகிறான்.




  269.  

    This comment has been removed by the author.




  270.  

    தனது எந்த படைப்பிற்க்கும் அதன் மூலம் பற்றி குறைந்த பட்சம் பேட்டிகளிலாவது குறிப்பிடாமல் இருப்பது சுத்தமான நேர்மையின்மை. இந்த நேர்மையின்மை வெறும் அவரது inspirations பற்றி குறிப்பிடாதது மட்டிலும் அல்ல. பொதுவாகவே ஒருவித ‘அவார்ட் படம் எடுக்கிறேன் பார்’ தன்மை அவரது படங்களில் இருப்பது போல் எனக்கு தோன்றுவது உண்டு. தன்னை அதிகம் முன்னிறுத்துவது மற்றுமொரு பலவீனம். படைப்பை மீறி படைப்பாளி தெரிகிறான் என்றால் அவனுக்கு ‘அவன்’ தான் முக்கியம் ஆகிறான். (ஹே ராமில் எனக்கு தெரிந்தது சாகெத் ராம் அல்ல பெரும்பாலும் கமல் மட்டுமே )
    கமல் ஒரு உதாரணம் மட்டுமே. நிறைய பேர் பிற மொழி நாவல்(சிலர் தமிழ் நாவல்களே கூட) இவற்றை தழுவி எடுக்கும் போது ஏன் அவற்றை குறீப்பிடுவதே இல்லை?? மூலத்தை மீறி அவர்களது படைப்பு தனித்து நின்றால் நிச்சயம் தமிழ்சமூகம் அவர்களை கொண்டாடும். இன்றும் கூட கொண்டாடிக் கொண்டு தான் இருக்கிறது. அவர்களின் ஏமாற்றுதலை உணராமல். உணர்ந்தால் இந்த கலைஞர்கள், இவர்களது படைப்புகள் எல்லாம் சுவடில்லாமல் காலத்தில் அடித்து செல்லப்படும்.

    நேர்மையின்மையால் அதற்கு கிடைத்திருக்கும் கலை மதிப்பு, அதன் ஆன்மா அதன் அங்கீகாரம் எல்லாமே போலியாகிப் போய்விடும் அபாயம் குறித்து கமல் கவலைப்படுகிறாரோ என்னவோ நான் நிஜமாகவே கவலைப்படுகிறேன்.

    குறிப்பு — அவள் ஒரு தொடர்கதை யில் பாலசந்தர் அதன் மூலக்கதை பற்றி டைட்டிலில் குறிப்பிட்டு இருப்பார்.




  271.  

    ஒலக திரைப்பட விழாவில் போய் மனிதம் படிக்க வேண்டிய தலை எழுத்து

    யர்ருக்கும் இல்லை ,அவர்களுடைய முயற்சிகள் நமக்கு ஒரு தூண்டுகோல்

    அது பேசும் படம் எடுத்த துணிவு

    காது மற்றும் வாய் பேசாதோர் பார்த்த ரசித்த படம் புஷ்பக் என்னும் பேசும்
    படம் வியாபார நிர்பந்தனை எதுவும் இல்லாமல் எடுத்த படம்

    நான் திரைஅரங்கில் மாற்று திறனளிகளால் ரசிக்க பட்ட ஒரே படம்
    எனக்கு தெரிந்து சப் தைத்லஸ் sub titles இல்லாத கால கட்டத்தில்
    japanese
    பாசையில் கார் என்றாலே போர்டோ fordo

    ford is american car manufacturer name

    japanese name for car is fordo

    உங்க பாசையில் சொன்னால் காபி அடித்து தான் கார் பண்ணவே பழகிய ஜப்பான்

    அது போல சினிமா என்னும் வார்த்தையே வெள்ளைக்காரன் சொல்லி கொடுத்தது
    தான் நாம் காபி அடிக்கிறோம் அதற்க்கு ஒலக சினிமாவை பார்த்து காபி அடித்து
    எடுக்க வேண்டும்




  272.  

    NALLA YELUTHNINGA POONGO….YELLAM UNMAI…….KEEP IT,,,SCORPIO………..THANKS




  273.  

    Exemplary vintage vehicles:

    1922–1939 Austin 7 — the Austin Seven was one
    of the most widely copied vehicles ever,
    serving as a template for cars around the world,
    from BMW to Nissan.
    http://en.wikipedia.org/wiki/History_of_the_automobile

    dont buy any car from BMW to nissan

    buy only original

    dont watch kamal films

    watch original adam and eve films

    made by adam and eve-the human




  274.  

    DEATH OF ORIGINALITY

    according to Einstein, creativity is hiding your sources

    There is a saying that anything that can be done
    has already been done.

    I would like to add that anything that can be done
    has been done and will be done over and over and over
    again. Lets face it, for simple reasons when
    something works there are thousands of copycats
    that are ready to dig their hand in the pot and
    see if they can pull anything from this.
    The thought is throughout every medium of media.

    Don’t get me wrong I am not saying that this is
    a bad thing or me standing on a soapbox
    preaching to be original because I just
    found out that my film is a DIRECT rip-off
    of a film that was made about three years ago
    (and I did not know that it was not done).
    Yet I suggest that if you are going to “be
    inspired by another work”
    then take it and make it your own

    கலை என்பதே ஒரு ஏமாற்று வேலை தான்

    நீங்கள் எங்கு சுட்டீர்கள் என்று மறைக்க தெரிந்தால்

    தான் நீங்க உண்மையான கலைஞன்?

    absence of evidence is not absence of crime

    வருமானத்திற்கு அதிகமான சொத்து இருந்தால் என்ன
    சொத்தே மிக அதிகமாக இருந்தால் என்ன வருமானம் இல்லாமல்
    எல்லாம் ஒன்று தான்

    ஒரிஜினல் என்று சொல்வதும் காபி என்று சொல்வதும் ஒன்று தான்

    யாருக்கும் தெரியாதது செய்தால் அது ஒரிஜினல்

    எல்லாருக்கும், தெரிந்தது செய்தால் அது காபி?

    According to Picasso, art is a lie, then let
    there be more such lies, because to lie
    you have to CREATE it,

    Overall there is nothing wrong with breathing new life
    in something old. It has been done millions
    of times, and ever William Shakespeare was not original.
    Take it and make it your own.




  275.  

    Why ? Why cant we live original lives ?
    Why are our lives so similar. Why are we not
    able to come up with original ideas ?
    Why dont we have more Oscar Wildes ?
    Where are the Einsteins ?
    Why havent we produced another
    David Ogilvy in the last 50 years ?

    Just the other day, i was walking down the street
    and noticed that most of us end up going to
    similar schools, getting similar education,
    wearing similar clothes, form similar
    opinions and end up living similar –
    and unorginial lives.

    Our language, mannerisms, thinking is
    so box-standard; it is revolting. I feel nauseous
    when i think of how so many of us can live
    this way. May be this is a sign of the
    end of originality.

    Most of the great inventions/discoveries in the
    realm of science have been done in the last
    two centuries. This century and perhaps
    the next one will only have minor modifications
    in all things known….technology is bound by Moore’s law.
    And then what ?? Across all realms, right from TEchnology,
    natural science, Fashion, societal organisations,
    economic systems; one can see an absolute lack of
    originality. It is as if we have stopped
    discovering and we are all too afraid to live
    original lives, imagine something original and new…..

    Fashion is nothing but re-packaging of things
    old and outdated. We have an uncanny ability
    to dig up the past and bring elements to the
    present; as if the “collective unconsciious”
    forces us to re-visit the past and re-live it.

    So, where is original thinking ? Where are new
    ideas ? Where are the daring heroes who transformed
    the world and shook the roots of conventional wisdom ?
    Are they products of another day and age ? Is the
    world not able to produce any more of them ?

    Is this the beginning of the end ??
    End of originality as we know it.




  276.  

    A point here.

    How many Hollywood movies actually make
    it to Indian shores?

    About 50 a year may be from
    the hundreds that they make.
    How many Hollywood
    movies do you watch in a year?
    Probably a similar number.

    What I am trying to say is that only the best
    of Hollywood ever leaves America.
    Most of their movies are trash too.

    Not just that, even they are remakes of
    other movies and they do not give credits either.

    For example: How many creature features are made each year?
    It is a mind-bogglingly huge number.
    Don’t tell me that you can actually have any original
    concepts in a creature feature.

    Then almost every Hollywood movie has the heroes
    battling their demons

    (father’s death,
    somebody whose life they could not save, etc.),
    which they ultimately exorcise themselves
    of by doing what they fear.

    Where is the originality there?

    Yes, they do make some good movies.

    And these are the only ones that we get to see.

    The case is different for Indian cinema.
    We see/hear about almost every piece of crap.
    But, we also make some good movies.
    Who has not liked movies like Maqbool, Black,
    or even Swades (I am only naming from the
    most recent of the lot)?

    So, it is really not fair to pass judgement
    on indian cinema simply because the
    statistics are stacked against it.
    Yes, if you are in the habit of watching
    about 300 Hollywood movies each year
    and a similar Indian ones,
    then I guess you could label
    them crap or a masterful ones.

    Did my point get across?




  277.  

    உலக நாயகனும் மயிர்க்கூச்சரியும உலக நிகழ்வுகளும்
    நடிகர் கமல்ஹாசனின் ஐம்பது வருட சினிமா வாழ்க்கை ஒரு புறம் கொண்டாடபட்டுக்கொண்டு இருக்கையில் அவரை பற்றிய வேறு சில சம்பவங்கள் என் மின்னஞ்சலிலும் குறுந்தகவலிலும் வந்தது. இதுவரை யாரும் யோசித்திடாத(குறைந்தபட்சம் நான்), எதிலும் பதிக்கப்படாத மயிர்க்குசெறியும் சம்பவமாக அது இருந்தது. அந்த கருத்துக்கள் மற்றவருக்கு கொஞ்சம் புதிராக இருக்கலாம், அமானுஷ்யமாக இருக்கலாம், ஏன் சிலருக்கு சிரிப்பாகவும் இருக்கலாம். அவருடைய சினிமாக்களும் நிஜ உலக சம்பவங்களும் முடிக்கப்பட்டது போல் ஒரு தோற்றம் அளித்தது அந்த தகவல்.

    இதோ உங்களையும் குழப்ப அது என்னவென்று பார்ப்போம்.

    1978, கமலின் சிகப்பு ரோஜாக்கள் வெளிவந்தது. அவருடைய கதாபாத்திரம் பெண்களை கொல்லும் ஒரு மனநோயாளியாக இருந்தது…
    >> அடுத்த வருடம் சைக்கோ ராமன் என்பவன் போலீசில் பிடிபட்டான். நிறைய பேர்களை மூர்க்கமாக கொன்றதே அவன் செய்த குற்றம், குறிப்பாக பெண்களை…

    1788 ஆம் வருடம் வேலையில்லா திண்டாட்டத்தை சித்தரிக்கும் படமாக சத்யா வெளிவந்தது.
    >>அடுத்த இரண்டு வருடம் கழித்து இந்தியாவில் வேலையில்லா திண்டாடம் தலை விரித்து ஆடியது.
    பார்க்க: http://en.wikipedia.org/wiki/Poverty_in_India

    1992 ஆம் வருடம் தேவர் மகன் என்ற திரைப்படம் வெளிவந்து சக்கை போடு போட்டது. சமூகத்தில் நடக்கும் சாதி சண்டையை மையப்படுத்தி இருந்தது அந்த திரைபடத்தின் கதை.
    >>அடுத்தத் வருடம் தென் தமிழக மாவட்டங்களில் சாதிகலவரங்கள் வெடித்து வரலாற்றில் பதிவாகி உள்ளது.

    சுமார் 1996 ஆம் வருடம் நடந்த தொடர் நிதி நிறுவன மோசடிகளால் பொது மக்கள் பெருமளவில் ஏமாற்றப்பட்டது அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க முடியாது. >>அதற்கு ஓரிரு வருடங்களுக்கு முன்பாகவே வருடம் வெளிவந்த மகாநதி திரைப்படத்தில் அதை பதிவு செய்தார் கமல்.

    2000 ஆம் வருடத்தில் வெளிவந்த ஹேராம் திரைப்படம் ஹிந்து முஸ்லிம் கலவரங்களை பற்றி அமைந்து இருந்தது.
    >>சொல்லிவைத்தார் போல் இரண்டு வருடத்தில் குஜராத் கோத்ரா சம்பவத்தில் ஹிந்து முஸ்லிம் பிரச்சனை வெடித்தது.

    சுனாமி என்று ஒரு வார்த்தையை அன்பே சிவம்(2003) என்ற திரைப்படத்தில் பயன்படுத்தினார் கமல்ஹாசன். இந்த படத்தை நன்றாக கவனித்தோர் அதை உணர்வர். சுனாமி என்கின்ற சொல் பலருக்கும் பரிட்சயம் ஆகாத சமயம் அது.
    >>சரியாக 2004 ஆம் வருடத்தில் சுனாமியால் எண்ணற்ற மனித உயிர்களை கொன்று பெருத்த சேதத்தை உருவாக்கியது.

    வேட்டையாடு விளையாடு என்ற படம் 2006 ஆம் ஆண்டு வெளிவந்தது. மனிதர்களை கொன்று புதைப்பது தான் அந்த படத்தில் வரும் இளமாறன் மற்றும் அமுதன் என்ற இரண்டு சைக்கோ கதாபாத்திரங்களில் வேலை.

    >>மொனிந்தர் மற்றும் சதீஷ். சரியாக மூன்று மாதத்தில் நொய்டா தொடர் சைக்கோ கொலைச்சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தது.

    அவருடைய தற்போதைய கடைசி படமான தசாவதாரம் 2008 இல் வெளிவந்தது. அமெரிக்காவில் இருந்து விமானம் மூலமாக இந்தியாவிற்கு வரும் ஒரு உயிர் கொல்லி வைரஸ் உலகை அழிக்க முற்படுவதே அந்த படத்தின் மையக்கரு.

    2009……

    >

    >

    இப்போது என்ன?

    >

    >

    நியாபகம் வருகிறதா??

    >>

    சிந்தியுங்கள்…

    >>>>>>>

    கொஞ்சம் ஜீரணிக்க கடினமாக இருக்கலாம்.

    அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தில் ஆரம்பமானதாக கருதப்படும். விமானம் மூலம் இந்திய வந்திருக்கலாம் என்று யூகிக்கப்படும் அந்த உயிர் கொல்லி வைரஸ் இப்போது உலகையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது..அதன் பெயர் தான் SWINE FLU பன்றி காய்ச்சல்

    இந்த சம்பவங்களை என்னவென்று சொல்வது? COINCIDENCE என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஒற்றுமை நிகழ்வுகளா? இல்லை புலப்படாத சக்தி கமலிடம் உள்ளதா?

    எது எப்படியோ. தசாவதாரம் கிளைமாக்சில் வருவது போல் ரங்கராஜன் நம்பியோ இல்லை கோவிந்த் ராமசாமியோ எம்மக்களை அழிவிலிருந்து காப்பாற்றினால் கோடி புண்ணியம்…

    ஓம்.. ……நமோ நாராயணாய




  278.  

    உலக நாயகனும் மயிர்க்கூச்சரியும உலக நிகழ்வுகளும்
    நடிகர் கமல்ஹாசனின் ஐம்பது வருட சினிமா வாழ்க்கை ஒரு புறம் கொண்டாடபட்டுக்கொண்டு இருக்கையில் அவரை பற்றிய வேறு சில சம்பவங்கள் என் மின்னஞ்சலிலும் குறுந்தகவலிலும் வந்தது. இதுவரை யாரும் யோசித்திடாத(குறைந்தபட்சம் நான்), எதிலும் பதிக்கப்படாத மயிர்க்குசெறியும் சம்பவமாக அது இருந்தது. அந்த கருத்துக்கள் மற்றவருக்கு கொஞ்சம் புதிராக இருக்கலாம், அமானுஷ்யமாக இருக்கலாம், ஏன் சிலருக்கு சிரிப்பாகவும் இருக்கலாம். அவருடைய சினிமாக்களும் நிஜ உலக சம்பவங்களும் முடிக்கப்பட்டது போல் ஒரு தோற்றம் அளித்தது அந்த தகவல்.

    இதோ உங்களையும் குழப்ப அது என்னவென்று பார்ப்போம்.

    1978, கமலின் சிகப்பு ரோஜாக்கள் வெளிவந்தது. அவருடைய கதாபாத்திரம் பெண்களை கொல்லும் ஒரு மனநோயாளியாக இருந்தது…
    >> அடுத்த வருடம் சைக்கோ ராமன் என்பவன் போலீசில் பிடிபட்டான். நிறைய பேர்களை மூர்க்கமாக கொன்றதே அவன் செய்த குற்றம், குறிப்பாக பெண்களை…

    1788 ஆம் வருடம் வேலையில்லா திண்டாட்டத்தை சித்தரிக்கும் படமாக சத்யா வெளிவந்தது.
    >>அடுத்த இரண்டு வருடம் கழித்து இந்தியாவில் வேலையில்லா திண்டாடம் தலை விரித்து ஆடியது.
    பார்க்க: http://en.wikipedia.org/wiki/Poverty_in_India

    1992 ஆம் வருடம் தேவர் மகன் என்ற திரைப்படம் வெளிவந்து சக்கை போடு போட்டது. சமூகத்தில் நடக்கும் சாதி சண்டையை மையப்படுத்தி இருந்தது அந்த திரைபடத்தின் கதை.
    >>அடுத்தத் வருடம் தென் தமிழக மாவட்டங்களில் சாதிகலவரங்கள் வெடித்து வரலாற்றில் பதிவாகி உள்ளது.

    சுமார் 1996 ஆம் வருடம் நடந்த தொடர் நிதி நிறுவன மோசடிகளால் பொது மக்கள் பெருமளவில் ஏமாற்றப்பட்டது அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க முடியாது. >>அதற்கு ஓரிரு வருடங்களுக்கு முன்பாகவே வருடம் வெளிவந்த மகாநதி திரைப்படத்தில் அதை பதிவு செய்தார் கமல்.

    2000 ஆம் வருடத்தில் வெளிவந்த ஹேராம் திரைப்படம் ஹிந்து முஸ்லிம் கலவரங்களை பற்றி அமைந்து இருந்தது.
    >>சொல்லிவைத்தார் போல் இரண்டு வருடத்தில் குஜராத் கோத்ரா சம்பவத்தில் ஹிந்து முஸ்லிம் பிரச்சனை வெடித்தது.

    சுனாமி என்று ஒரு வார்த்தையை அன்பே சிவம்(2003) என்ற திரைப்படத்தில் பயன்படுத்தினார் கமல்ஹாசன். இந்த படத்தை நன்றாக கவனித்தோர் அதை உணர்வர். சுனாமி என்கின்ற சொல் பலருக்கும் பரிட்சயம் ஆகாத சமயம் அது.
    >>சரியாக 2004 ஆம் வருடத்தில் சுனாமியால் எண்ணற்ற மனித உயிர்களை கொன்று பெருத்த சேதத்தை உருவாக்கியது.




  279.  

    வேட்டையாடு விளையாடு என்ற படம் 2006 ஆம் ஆண்டு வெளிவந்தது. மனிதர்களை கொன்று புதைப்பது தான் அந்த படத்தில் வரும் இளமாறன் மற்றும் அமுதன் என்ற இரண்டு சைக்கோ கதாபாத்திரங்களில் வேலை.

    >>மொனிந்தர் மற்றும் சதீஷ். சரியாக மூன்று மாதத்தில் நொய்டா தொடர் சைக்கோ கொலைச்சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தது.

    அவருடைய தற்போதைய கடைசி படமான தசாவதாரம் 2008 இல் வெளிவந்தது. அமெரிக்காவில் இருந்து விமானம் மூலமாக இந்தியாவிற்கு வரும் ஒரு உயிர் கொல்லி வைரஸ் உலகை அழிக்க முற்படுவதே அந்த படத்தின் மையக்கரு.

    2009……

    >

    >

    இப்போது என்ன?

    >

    >

    நியாபகம் வருகிறதா??

    >>

    சிந்தியுங்கள்…

    >>>>>>>

    கொஞ்சம் ஜீரணிக்க கடினமாக இருக்கலாம்.

    அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தில் ஆரம்பமானதாக கருதப்படும். விமானம் மூலம் இந்திய வந்திருக்கலாம் என்று யூகிக்கப்படும் அந்த உயிர் கொல்லி வைரஸ் இப்போது உலகையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது..அதன் பெயர் தான் SWINE FLU பன்றி காய்ச்சல்

    இந்த சம்பவங்களை என்னவென்று சொல்வது? COINCIDENCE என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஒற்றுமை நிகழ்வுகளா? இல்லை புலப்படாத சக்தி கமலிடம் உள்ளதா?

    எது எப்படியோ. தசாவதாரம் கிளைமாக்சில் வருவது போல் ரங்கராஜன் நம்பியோ இல்லை கோவிந்த் ராமசாமியோ எம்மக்களை அழிவிலிருந்து காப்பாற்றினால் கோடி புண்ணியம்…

    ஓம்.. ……நமோ நாராயணாய