Karundhel http://karundhel.com Reviews with a sting Mon, 17 Jun 2013 16:27:11 +0000 en-US hourly 1 http://wordpress.org/?v=3.5.1 Man of Steel (2013) – 3D – English http://karundhel.com/2013/06/man-of-steel-2013-english.html http://karundhel.com/2013/06/man-of-steel-2013-english.html#comments Sat, 15 Jun 2013 12:35:06 +0000 Rajesh Da Scorp http://karundhel.com/?p=3910 There’s the superhero and there’s the alter ego. Batman is actually Bruce Wayne, Spider-Man is actually Peter Parker. When that character wakes up in the morning, he’s Peter Parker. He has to put on a costume to become Spider-Man. And it is in that characteristic Superman stands alone. Superman didn’t become Superman. Superman was born [...]

The post Man of Steel (2013) – 3D – English appeared first on Karundhel.

]]>

There’s the superhero and there’s the alter ego. Batman is actually Bruce Wayne, Spider-Man is actually Peter Parker. When that character wakes up in the morning, he’s Peter Parker. He has to put on a costume to become Spider-Man. And it is in that characteristic Superman stands alone. Superman didn’t become Superman. Superman was born Superman. When Superman wakes up in the morning, he’s Superman. His alter ego is Clark Kent. His outfit with the big red “S”, that’s the blanket he was wrapped in as a baby when the Kents found him. Those are his clothes. What Kent wears – the glasses, the business suit – that’s the costume. That’s the costume Superman wears to blend in with us. Clark Kent is how Superman views us. And what are the characteristics of Clark Kent. He’s weak… he’s unsure of himself… he’s a coward. Clark Kent is Superman’s critique on the whole human raceBill (Kill Bill).

மேலே இருப்பது க்வெண்டின் டாரண்டினோ எழுதிய வசனம். அவரது கில் பில் இரண்டாவது வால்யூமில் வரும். இதுதான் சூப்பர்மேனைப் பற்றிய உண்மை. சூப்பர்மேன் என்ற கதாபாத்திரம், பிற காமிக்ஸ் சூப்பர்ஹீரோக்களில் இருந்து மாறுபட்டது. பேட்மேன், ஸ்பைடர்மேன், Ironman எல்லாருமே உண்மையில் மனிதர்கள். அவர்களது சூப்பர்ஹீரோ அவதாரங்களே இந்தப் பெயர்கள். மனிதர்களாக இருப்பவர்கள், ஏதேனும் நிகழ்வின் காரணமாக சூப்பர்ஹீரோ ஆகிறார்கள். மாறாக, சூப்பர்மேன் என்பவன் உண்மையில் ஒரு ஏலியன். அவன் பிறக்கும்போதே சூப்பர்மேன்தான். இயல்பிலேயே அவன் ஒரு சூப்பர்ஹீரோ. அந்த இயல்பை மறைக்கவே க்ளார்க் கெண்ட் என்ற பெயரில் ரிப்போர்ட்டராக வேலை செய்கிறான்.

நம்மூரில் சூப்பர்மேன் என்ற கதாபாத்திரத்தை நினைத்தாலே சிரிப்பு வரக்கூடிய அளவு அதனை எஸ்.வி. சேகர் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் காமெடி செய்திருக்கின்றனர். அந்த கதாபாத்திரமே அப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும், அமெரிக்காவில் இது நம்பர் ஒன் காமிக்ஸ் சூப்பர்ஹீரோ கதாபாத்திரம். (அமெரிக்காவின் இரண்டாவது சூப்பர்ஹிட் ஹீரோ – பேட்மேன். மூன்றாவது – ஸ்பைடர்மேன். நான்காவது இடம் யாருக்குத் தெரியுமா? அத்தனை பிரபலமாகாத Wolverine. நம்மூரில் தற்போது பிரபலமாக இருக்கும் Ironman, பனிரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஹல்க்குக்கு ஒன்பதாவது இடம். இந்த லிஸ்ட்டை முழுதாகப் பார்க்க இங்கே க்ளிக்கலாம்).

ஆனால், ஹாலிவுட்டின் மிகப்பிரபல காமிக்ஸ் சூப்பர்ஹீரோவாக இருந்தாலும், சூப்பர்மேனை திரையில் காண்பிப்பதில் ஒரு பிரச்னை இருந்தது. எந்தவித வெளிப்புற சக்திகளும் இல்லாமல், இயல்பிலேயே ஒரு மனிதன் பறக்கிறான் என்றால் அதனை திரைப்படங்களில் நம்பும்படி எடுப்பது கடினம். கூடவே, சூப்பர்மேனின் நகைச்சுவையான உடை. நீலக்கலர் உடையில் சிவப்பு ஜட்டியை போட்டுக்கொண்டு அங்குமிங்கும் ஒரு கதாபாத்திரம் குதித்துக்கொண்டிருந்தால் சிரிப்பு வந்துவிடும் இல்லையா? அதுதான் காரணம். குறிப்பாக தமிழ்நாட்டில் இது எடுபடும் வாய்ப்புகள் மிகவும் கம்மி (நல்லவேளையாக ஏற்கெனவே மிஷ்கின் தமிழில் முகமூடியை எடுத்துவிட்டதால், அத்தனை சிரிப்பும் அந்தப் படத்துக்கே சென்றுவிட்டது).

இப்போது திரைப்படத்துக்கு வரலாம். க்ரிப்டான் கிரகத்தில் இருந்து தந்தை ஜார்-எல்லினால் (Jor-El) பூமிக்கு அனுப்பப்படும் குழந்தை கால்-எல் (Kal-El). கான்ஸாஸில் ஜொனாதன் கெண்ட் மற்றும் மார்த்தா தம்பதியினரால் வளர்க்கப்பட்டு, க்ளார்க் கெண்ட் என்ற பெயரில் வளர்கிறான் கால்-எல். அவனது கிரகமான க்ரிப்டானில் புரட்சி செய்த ராணுவ ஜெனரல் ஸாட் (Zod) மற்றும் அவனது கூட்டாளிகள் சிறை வைக்கப்படுகிறார்கள். தந்தை ஜார் -எல், ஜெனரல் ஸாடினால் கொல்லப்படுகிறார். பூமிக்கு அனுப்பப்பட்ட கால்-எல்லின் உடலில் க்ரிப்டானில் புதிய உயிர்களை படைக்கவல்ல மரபணுக்கள் இருக்கின்றன. ஆகையால், க்ரிப்டான் அழிந்தாலும், கால்-எல்லின் உடலில் இருக்கும் இந்த மரபணுக்களை எடுத்து புதிய க்ரிப்டானை படைக்க இயலும். முப்பத்து மூன்று ஆண்டுகள் கழித்து, கால்-எல்லை தேடி பூமிக்கு வருகிறான் ஸாட். இதன்பின் என்ன நடந்தது? இதுதான் கதை.

திரைப்படத்தில் க்ரிஸ்டோஃபர் நோலனின் பெயர், ‘கதை’ என்ற டைட்டிலில் வருகிறது. ஆனால், மேலே சொன்ன கதையில் எதுவும் புதிய அம்சம் இல்லை. இதற்குமுன்னர் வெளிவந்த சூப்பர்மேன் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு பாகங்களில் பிரதம வில்லன் லெக்ஸ் லூதரை தூக்கிவிட்டால் இந்தப் படத்தின் கதை ரெடி. நோலனின் பேட்டிகளைப் படித்தால், பேட்மேன் கதபாத்திரம் எப்படி நோலனால் உயிர்ப்பிக்கப்பட்டதோ அப்படி சூப்பர்மேனையும் புதிதாகக் காண்பிக்கவேண்டும் என்று நோலன் விருப்பப்பட்டதாகத் தெரிகிறது. கூடவே, திரைக்கதை எழுதியுள்ள டேவிட் கோயர், ஏற்கெனவே பேட்மேன் பிகின்ஸ் படத்துக்கு நோலனுடன் சேர்ந்து திரைக்கதை எழுதியிருப்பவர். ஆனால், என்னதான் தலைகீழாக நின்று திரைக்கதை எழுதினாலும், சூப்பர்மேனைப் பற்றிய படத்தை இப்படித்தான் எடுக்கமுடியும் என்பதில் சந்தேகமில்லை. காரணம் சூப்பர்மேனின் கதை அப்படி. காமிக்ஸில் மட்டுமே எடுபடக்கூடிய கதை அது.

படத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை படம் முழுக்க வியாபித்திருப்பது – ஸிஜி. படம் 133 நிமிடங்கள் ஓ…..டுகிறது. கிட்டத்தட்ட ஒரு முழுநீள தமிழ்ப்படத்தின் நீளம். இத்தனை நீளமாக இருக்கும் படத்தில் எக்கச்சக்கமான ஸிஜி காட்சிகள் இடம்பெற்றால் எப்படி இருக்கும்? ஸ்டண்ட் காட்சிகள் நீ…..ளமாக இருந்து, நமது பொறுமையை சோதிக்கின்றன. போதாக்குறைக்கு படத்தில் ஆடியன்ஸை ஈர்க்கும் திரைக்கதை இல்லை.

படத்தில் எனக்கு நெருடிய அம்சங்களைப்பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.

முதலில், சூப்பர்மேனின் கதாபாத்திரம். பொதுவாக ஆடியன்ஸின் மனநிலை என்னவென்றால், சாதாரண மனிதனாக இருக்கும் ஒருவனுக்கு ஏதேனும் நேர்ந்து அதனால் அவன் சூப்பர்ஹீரோ ஆகிவிட்டான் என்று சித்தரித்தால் ஏற்றுக்கொள்ளலாம் என்று தோன்றும். ஆனால், பிறப்பிலேயே ஒருவன் அதிபயங்கர சக்திகளுடன் இருக்கிறான் என்றால்? ஆனால் சூப்பர்மேனைப் போன்ற இன்னொரு கதாபாத்திரமான ‘தோர்’ (Thor) என்பவனை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது. காரணம் அவன் பூமியில் வசிப்பதில்லை. வேற்றுக்கிரகத்திலேயே இருப்பவன். கடவுள். கூடவே, சூப்பர்மேனின் கதாபாத்திரத்தின் இயல்புகள் – அவன் யாரையும் துன்புறுத்துவதில்லை, மிகவும் நல்லவன் – போன்றவை தோரிடம் இல்லை. தோர் ஒரு கோபமான கடவுள். எனவே தோர் ஒப்புக்கொள்ளப்பட்டான். ஆனால் சூப்பர்மேன் கிட்டத்தட்ட ஏசுவைப் போன்றவன். படத்திலேயே ஏசுவுடன் சூப்பர்மேனை ஒப்பிடும் காட்சிகள் இருக்கின்றன. இருவருமே தங்களைப் புரிந்துகொள்லாத மனிதர்களுக்காக தியாகம் செய்தவர்கள் என்ற கருத்து ஆடியன்ஸின் மேல் திணிக்கப்படுகிறது.

ஒரு உதாரணத்துக்கு, இன்னொரு சூப்பர்ஹீரோ படமான The Dark Knight படத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்தப் படத்தில் இருந்த சுவாரஸ்யமான திரைக்கதை, Man of Steeலில் மிஸ்ஸிங். காரணம் மிக எளிதாகவே தெரிந்துவிடுகிறது. பேட்மேனின் கதாபாத்திரம், சூப்பர்மேனை விட இயல்பானது. அது ஒரு சாதாரண மனிதன். அந்த மனிதனுக்கு சிறுவயதில் நேர்ந்துள்ள கொடுமையை ஆடியன்ஸால் புரிந்துகொள்ளமுடியும். ஆனால், சூப்பர்மேன் அப்படியல்ல. அவன் வேறு கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்தவன். அவ்வளவே. அவனிடம் மக்கள் இரக்கம் கொள்ள எதுவுமே இல்லை. அவனைப் பார்த்து பயந்து ஓடத்தான் செய்வார்கள். அதுதான் இயல்பு. அவனைப் புரிந்துகொள்ளாத மக்களைக் காப்பாற்றவேண்டும் என்று அல்லும் பகலும் சூப்பர்மேன் துடிக்கும் காரணத்தை எத்தனை முக்கினாலும் ஜஸ்டிஃபை செய்யமுடியாது (என்னதான் ஏசுவுடன் ஒப்பிட்டாலும்கூட).

அடுத்த காரணம் – மக்களைக் காப்பாற்றுவேன் என்று சொல்லிக்கொண்டே, படத்தின் ஸ்டண்ட் காட்சிகளில் வில்லன்களை விடவும் அதிக சேதத்தை சூப்பர்மேன்தான் ஏற்படுத்துகிறான். பல கட்டிடங்களை ஓட்டையிடுகிறான்; பெட்ரோல் பங்க் இவனால் வெடிக்கிறது; கார்கள் தூக்கியெறியப்படுகின்றன; இன்னும் பல சேதங்கள் இருக்கின்றன. இது என்ன லாஜிக்? இதுதான் ஹீரோவை கனிவானவனாக படைப்பதில் இருக்கும் அபாயம். இதையே ஹல்க்கோ தோரோ செய்தால் கேள்விகள் எழாது. ஆனால் சூப்பர்மேன் இப்படி செய்வதுதான் சிக்கல். அதேபோல் சூப்பர்மேன் யாரையும் கொல்வதில்லை. காரணம் அவனது இரக்க குணம். ஆனால் இதில் அதுவும் பொய்க்கப்படுகிறது. சூப்பர்மேன் கொல்கிறான். அதை மக்களால் கட்டாயம் ஏற்றுக்கொள்ள முடியாது.

அடுத்தது – சூப்பர்மேன் தான் காமிக்ஸ் உலகின் முதல் சூப்பர் ஹீரோவாக இருந்தாலும், அதன்பின் ஆயிரத்தெட்டு சூப்பர்ஹீரோ படங்கள் வந்துவிட்டன. ஆகவே, கிட்டத்தட்ட Avengers படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தின் காட்சிகள் எடுபடாமல் போய்விடுகின்றன.

இன்னொன்று- டார்க் நைட்டில் பேட்மேனும் ஜோக்கரும் நேருக்கு நேர் மோதி பார்த்திருக்கிறீர்களா? அதுதான் அந்தப் படத்தின் சக்ஸஸ் பாயிண்ட்களில் ஒன்று. ஆனால் இதில் வில்லன் ஸாரும் சூப்பர்மேனும் கண்டபடி அடித்துக்கொள்கின்றனர். வில் ஸ்மித்தின் ‘Hancock’ படத்தில் இரண்டு சூப்பர்ஹீரோக்களும் அடித்துக்கொள்வதைப்போலவே மிகவும் அலுப்பாக இருந்தன இந்தக் காட்சிகள். டார்க் நைட்டுடன் எந்தப் படத்தையும் ஒப்பிட முடியாது. இருந்தாலும், இந்தப் படத்தைப் பற்றி எழுதும்போது டார்க் நைட்டின் இயல்புத்தன்மையைப் பற்றி எழுதாமலும் இருக்கமுடியாது.

சூப்பர்மேனுக்கும் பிற சூப்பர்ஹீரோக்களுக்கும் இருக்கும் வேற்றுமைகளை இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்தோம். ஆனால், யோசித்துப் பார்த்தால், சூப்பர்மேனுக்குப் பின்னர் அவனைப்போலவே இருக்கும் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. கேப்டன் அமெரிக்கா ஒரு உதாரணம். அதேபோல் தோர். இவர்களில் பலரை உருவாக்கியவர் ஸ்டான் லீ (கேப்டன் அமெரிக்காவை உருவாக்கியவர்கள் ஜோ சைமன் & ஜாக் கிர்பி). கில்லாடித்தனமாக ஒரு சூப்பர்ஹீரோ ராணுவத்தையே (அவெஞ்சர்ஸ்) உருவாக்கிவிட்டபின்னர், பழைய ஹீரோ சூப்பர்மேனைப் பற்றிய படம் பார்க்கும்போது அவெஞ்சர்ஸ் படம் பார்ப்பதுபோலவே ஒரு எண்ணம் உருவாவதைத் தடுக்கமுடியாது. அதேபோல், சூப்பர்மேனுக்கும் கேப்டன் அமெரிக்காவுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. கேப்டன் அமெரிக்காவை விரிவாக நாம் திரையில் பார்த்தபின்னர், இப்போது சூப்பர்மேனைப் பார்த்தால் கேப்டன் அமெரிக்காவின் சின்னத்தம்பி போல தோன்றியது. (உண்மையில் கேப்டன் அமெரிக்காவின் பல குணாதிசயங்கள் சூப்பர்மேனிடமிருந்தே இன்ஸ்பையர் செய்யப்பட்டவை).

எனவே, இப்போது இருக்கும் சூப்பர்ஹீரோ படையில் சூப்பர்மேன் தனித்துத் தெரிவதற்கான வாய்ப்புகள் கம்மி. காரணம் சூப்பர்மேனை விட பல விதங்களிலும் சுவாரஸ்யமான பல ஹீரோக்களை கடந்த சில வருடங்களில் நாம் பார்த்தாயிற்று. இவர்களுக்கும் சூப்பர்மேனுக்கும் உள்ள ஒரே பிரதான வேற்றுமை – சூப்பர்மேனின் பாரம்பரியம். அதை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி வித்தியாசம் காட்ட முடியும்?

Man of Steel படம் என்னை கவரவில்லை. ஒருவேளை நீங்கள் டமால் டுமீல் ஸிஜி ஆக்‌ஷன் ஸீக்வென்ஸ்களின் விசிறியாக இருந்தால், இந்தப் படத்தின் நீ…….ண்ட ஸ்டண்ட் காட்சிகள் உங்களைக் கவர வாய்ப்பிருக்கிறது. ’அதையெல்லாம் ஆல்ரெடி அவெஞ்சர்ஸில் பார்த்தாயிற்று’ என்று நீங்கள் நினைத்தால், இந்தப் படத்தை தவிர்ப்பது நலம். படத்தில் புதிதாக எதுவுமே இல்லை. பழைய மொந்தை. புளித்துப்போன கள்.

பி.கு – சூப்பர்மேனின் பிரதான வில்லன் லெக்ஸ் லூதரைப் பற்றிய ஒரு மிகச்சிறிய க்ளூ இந்தப் படத்தில் இருக்கிறது. படத்தின் இறுதியில் சூப்பர்மேனை நோக்கி வில்லனால் வீசப்படும் பெரிய லாரியை கவனியுங்கள். அடுத்த பாகத்தில் வில்லன் லெக்ஸ் தான் என்பது இந்த க்ளூவின் அர்த்தம்.


The post Man of Steel (2013) – 3D – English appeared first on Karundhel.

]]>
http://karundhel.com/2013/06/man-of-steel-2013-english.html/feed 20
Headhunters (2011) – Norway http://karundhel.com/2013/05/headhunters-2011-norway.html http://karundhel.com/2013/05/headhunters-2011-norway.html#comments Sun, 26 May 2013 18:25:50 +0000 Rajesh Da Scorp http://karundhel.com/?p=3888 ரூல் நம்பர் 1 – நுழையப்போகும் இடத்தைப் பற்றிய அத்தனை விபரங்களையும் தெரிந்துகொள்ளாமல் அங்கு செல்லக்கூடாது. ரூல் நம்பர் 2 – பத்து நிமிடங்களுக்கு மேல் அங்கு இருக்கக்கூடாது. ரூல் நம்பர் 3 – ஒவ்வொரு நிமிடத்திலும், அங்கு யாரேனும் திடீரென வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. ரூல் நம்பர் 4 – எந்த DNA அடையாளத்தையும் அங்கே விட்டுவிடக்கூடாது. ரூல் நம்பர் 5 – மிக விலையுயர்ந்த போலியை தயாரிப்பதில் அதிக நேரம் செலவிடவேண்டாம். காரணம், மிக [...]

The post Headhunters (2011) – Norway appeared first on Karundhel.

]]>
ரூல் நம்பர் 1 – நுழையப்போகும் இடத்தைப் பற்றிய அத்தனை விபரங்களையும் தெரிந்துகொள்ளாமல் அங்கு செல்லக்கூடாது.

ரூல் நம்பர் 2 – பத்து நிமிடங்களுக்கு மேல் அங்கு இருக்கக்கூடாது.

ரூல் நம்பர் 3 – ஒவ்வொரு நிமிடத்திலும், அங்கு யாரேனும் திடீரென வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

ரூல் நம்பர் 4 – எந்த DNA அடையாளத்தையும் அங்கே விட்டுவிடக்கூடாது.

ரூல் நம்பர் 5 – மிக விலையுயர்ந்த போலியை தயாரிப்பதில் அதிக நேரம் செலவிடவேண்டாம். காரணம், மிக அசிங்கமான போலியைக் கண்டுபிடிக்கக்கூட பல நாட்கள் ஆகும்.

ரூல் நம்பர் 6 – எத்தனை திறமையான திருடனாக இருந்தாலும் எப்படியும் இரண்டு விஷயங்கள் நடக்கும் வாய்ப்பு அதிகம். ஒன்று – வாழ்க்கை முழுதும் நன்றாக வாழக்கூடிய அளவு விலைபோகும் ஓவியம் ஒன்று உங்களுக்குக் கிடைக்கக்கூடும். அல்லது, நீங்கள் பிடிபடலாம்.

 

க்ரைம் த்ரில்லர்களை எழுதுவதில் நார்வே நாட்டின் சிறந்த பல்ப் எழுத்தாளர்களில் ஒருவர் யூ நெஸ்போ (Jo Nesbø). அவரது சிறந்த பல்ப் நாவல்களில் ஒன்று – Hodejegerne. இந்த நாவலை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமே Headhunters. க்ரைம் த்ரில்லர்கள், ஆங்கிலத்தை விட மற்ற மொழிகளில் பல சமயங்களில் நன்றாக இருப்பதுண்டு. அப்படி ஒரு படம் இது. இந்தப்படம் ஆங்கிலத்தில் வந்திருந்தால், படத்தின் graphic violence பெருமளவு குறைக்கப்பட்டிருக்கும். ஆனாலும், ஆங்கிலத்தில் இந்தப்படம் வெளிவரப்போவதாகவே தெரிகிறது. எப்படி எடுக்கப்படப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

‘Headhunter’ என்ற பதம் வெளிநாடுகளில் பிரபலம். எந்தத் துறையாக இருந்தாலும், அதில் கில்லாடியாக விளங்குபவர்கள் இந்த headhunters. இவர்களை பல நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்தி, தங்களுக்குத் தேவையான ஆட்களை இவர்களின்மூலமாக கண்டுபிடித்து, வேலைக்கு எடுத்துக்கொள்வார்கள். Consultancy என்று நம்மூரில் சொல்லப்படுவதன் இம்ப்ரவைஸ் செய்யப்பட்ட பதம் இது. கன்ஸல்டன்ஸிகளில் இருப்பவர்கள், தத்தமது துறையில் சிறந்தவர்கள் அல்ல. அவர்களின் வேலை, இணையத்தில் இருக்கும் பல்வேறு விண்ணப்பங்களை அலசி, தேவையான தகுதி இருப்பவர்களின் விண்ண்ணப்பத்தை வேறொரு நிறுவனத்துக்கு அனுப்புவது. ஆனால், headhunterகள், நிறுவனங்களாலேயே வேலைக்கு அமர்த்தப்பட்டு, அவர்களது துறைசார்ந்த அறிவின் காரணமாக அந்தந்த நிறுவனங்களுக்குத் தேவைப்படும் நபர்களைத் தேர்வு செய்வார்கள்.

அப்படி ஒரு headhunter – ரோஜர் ப்ரௌன். இருப்பவர்களில் தலைசிறந்தவன்.

அவனது மனைவி, ஒரு ஓவியர். பெயர் டயானா. மனைவியின் காஸ்ட்லி வாழ்க்கையை ரோஜரின் வேலையால் ஈடுசெய்யமுடிவதில்லை. ஆகவே, அபாயகரமான தொழில் ஒன்றில் இறங்குகிறான்.

தேர்வுசெய்யப்படும் நபர்களிடம் சாதுர்யமாகப் பேசி, அவர்களிடம் ஏதாவது பழமைவாய்ந்த அரிய ஓவியங்கள் இருக்கின்றனவா என்று அறிந்துகொண்டு, தேவைப்படும் நிறுவனங்களிடம் அவர்களின் நேர்முகத்தேர்வை ஏற்பாடு செய்துவிட்டு, அந்த நேரத்தில் அவர்களின் வீட்டுக்கு சென்று அந்த ஓவியங்களை திருடுவது ரோஜரின் வேலை. அந்த ஓவியங்கள் அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விலைபோகும். இதில் ரோஜருடன் துணையாக இருப்பது, ஓவெ. நார்வே போன்ற ஸ்கேண்டிநேவியன் நாடுகளில் (வட ஐரோப்பிய நாடுகள். டென்மார்க், நார்வே மற்றும் ஸ்வீடன் ஆகியவை ஸ்கேண்டிநேவியன் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன), ஒவ்வொரு வீட்டிலும் செக்யூரிடி சிஸ்டம் அவசியம் இருக்கும். திருடர்கள் அவ்வளவு சுலபத்தில் உள்ளே நுழைய இயலாது. எனவே, ஓவெயின் வேலை, இந்த செக்யூரிடி ஸிஸ்டத்தை சில நிமிடங்களுக்கு செயலிழக்க வைப்பது.

தனது தொழிலை செவ்வனே செய்துகொண்டு அழகிய மனைவியுடன் சந்தோஷமாக இருக்கும் ரோஜரின் வாழ்க்கையில் ஒரு சோதனை வருகிறது. அந்த சோதனையில் தன்னையறியாமல் சிக்கிக்கொள்ளும் ரோஜரின் வாழ்க்கை சின்னாபின்னமாகிறது. The Shawshank Redemption படத்தில் வரும் ஆண்டி டுஃப்ரீனைப் போல், மலம் நிரம்பிய ஒரு குட்டையில் முழுக்கு போடும் அளவு அவனைத் துரத்துகிறது விதி (ஆண்டியாவது பரவாயில்லை. கழுத்தளவு மலம் நிரம்பிய ஒரு குழாயில் நீந்தி வந்து சிறையில் இருந்து தப்பித்தான். ஆனால் ரோஜரோ, மலக்குட்டையில் முற்றிலுமாக முழுகும் சோதனைக்கு ஆளாகிறான்).

அது என்ன சோதனை? அதிலிருந்து ரோஜரால் தப்பிக்க முடிந்ததா? படத்தைப் பார்த்தால் தெரியும்.

படத்தில் மற்றொரு பிரதான கதாபாத்திரத்தை ஏற்றிருப்பது, Game of Thrones தொடரில் ஜாய்மி லானிஸ்டராக நடிக்கும் நிகலாய் கோஸ்டர் வெல்தாவ் (Nikolaj Coster-Waldau).

படம் மிக மிக மெதுவாக ஆரம்பிக்கிறது. பொறுமையின் எல்லைக்கே நாம் செல்லும்போது சூடுபிடித்து, இறுதிவரை அதே வேகத்தில் செல்கிறது. படத்தில் பல திருப்பங்கள் உள்ளன. அவற்றில் சில, நாம் எதிர்பார்ப்பது. பல, நாம் எதிர்பாராதது. திரைக்கதை நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. முதல் பாதியை இரண்டாம் பாதியுடன் இணைக்கும் பல திருப்பங்கள் உள்ளன. இப்படிப்பட்ட திருப்பங்களின் மூலம் பல முடிச்சுக்கள் அவிழவது போன்று திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. இதுபோன்ற திரைக்கதையே த்ரில்லர் படங்களில் தேவையானது. அதேபோல் படத்தில் graphic violence அதிகம். எனவே, ரத்தம் பிடிக்காத நபர்கள் படத்தைப் பார்க்க வேண்டாம்.

பி.கு – படத்தில் ரோஜரின் காராக வரும் கறுப்பு நிற LS460 லெக்ஸஸ் கார், அட்டகாசமாக இருந்தது. பல படங்களில் வரும் கார்களை நான் கவனித்தாலும், இந்தக் கார்  தனிப்பட்ட முறையில் என்னைக் கவர்ந்தது. இதோ இந்த LS460 மாடல் லெக்ஸஸைப் பற்றிய ட்ரெய்லர். காரின் விலை – 38 லட்சம் ரூபாய். இந்த ட்ரெய்லரைத் தொடர்வது திரைப்படத்தின் ட்ரெய்லர்.

 


The post Headhunters (2011) – Norway appeared first on Karundhel.

]]>
http://karundhel.com/2013/05/headhunters-2011-norway.html/feed 3
The Bullet Vanishes (2012) – Chinese http://karundhel.com/2013/05/the-bullet-vanishes-2012-chinese.html http://karundhel.com/2013/05/the-bullet-vanishes-2012-chinese.html#comments Sun, 19 May 2013 19:48:23 +0000 Rajesh Da Scorp http://karundhel.com/?p=3870 ஷெர்லக் ஹோம்ஸ் பற்றி நமது தளத்தைப் படிக்கும் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றி எக்கச்சக்க கட்டுரைகள் எழுதியாயிற்று. ஹோம்ஸ், தனது துறையில் ஒரு ஜீனியஸ். அவருக்குத் தெரியாத பல விஷயங்கள் உண்டு (சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது என்று எண்ணுபவர் அவர்) என்றாலும், துப்பறிவதில் அவருக்கு நிகர் அவர்தான். பலவிதமான காலடித்தடங்களை ஆராய்ந்து கண்டுபிடிப்பது முதல், எந்தெந்தப் பகுதியில் எப்படிப்பட்ட சேறு இருக்கிறது, நகரின் பலவிதமான சாலைகள், மனித உடலில் நேரும் ஆயுதங்களின் பாதிப்புகள், குற்றம் நடந்த [...]

The post The Bullet Vanishes (2012) – Chinese appeared first on Karundhel.

]]>
ஷெர்லக் ஹோம்ஸ் பற்றி நமது தளத்தைப் படிக்கும் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றி எக்கச்சக்க கட்டுரைகள் எழுதியாயிற்று. ஹோம்ஸ், தனது துறையில் ஒரு ஜீனியஸ். அவருக்குத் தெரியாத பல விஷயங்கள் உண்டு (சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது என்று எண்ணுபவர் அவர்) என்றாலும், துப்பறிவதில் அவருக்கு நிகர் அவர்தான். பலவிதமான காலடித்தடங்களை ஆராய்ந்து கண்டுபிடிப்பது முதல், எந்தெந்தப் பகுதியில் எப்படிப்பட்ட சேறு இருக்கிறது, நகரின் பலவிதமான சாலைகள், மனித உடலில் நேரும் ஆயுதங்களின் பாதிப்புகள், குற்றம் நடந்த இடத்தில் இருக்கும் சின்னச்சின்ன தடயங்களை வைத்தே குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் திறன், யாரை அல்லது எதைப் பார்த்தாலும், பார்வைக்குக் கிடைக்கும் விஷயங்களை வைத்துக்கொண்டு நிறைய தகவல்களை தெரிந்துகொள்ளுதல் போன்ற பலவிதமான குணாதிசயங்கள் உடைய ஒரு கதாபாத்திரம் அது.

ஷெர்லக் ஹோம்ஸ் சைனாவில் வாழ்ந்தால் எப்படி இருக்கும்?

Cut to

 

தூக்கில் தொங்கும்போது கழுத்தின் சதையில் கயிறு அழுத்துவதால், கழுத்தைச் சுற்றியும் கெட்டியான, சிவப்பான தழும்புகள் உருவாகின்றன. முகம் சற்றே நீலமாக மாறுகிறது. கண்ணினுள் இருக்கும் ரத்த நாளங்கள் வெடிக்கின்றன. கழுத்தின் ஆரம்பத்தில் இருக்கும் Hyoid எலும்பு உடையும் அபாயம் உருவாகிறது. அந்த எலும்பு உடைந்தால் உடனடி மூச்சுத்திணறல் மற்றும் மரணம் ஆகியன சம்பவிக்கும்.

Cut to

 

1930. சைனா. ஸோங் டோங்லூ என்பவர் அங்கிருக்கும் ஒரு குறிப்பிட்ட சிறையின் சூப்ரிண்டெண்டெண்ட். கைதிகளிடம் பேசி, அவர்களின் கதையைத் தெரிந்துகொள்வது இவரது பொழுதுபோக்கு. டோங்லூவின் புலனாய்வுத் திறமை பற்றி அவரது உயரதிகாரிக்குத் தெரிந்ததால், அவருக்கு பிரமோஷன் கொடுக்கப்பட்டு, சைனாவின் டியான்செங் பிராந்தியத்துக்கு மாற்றல் அளிக்கப்படுகிறது. காரணம், அங்கு இருக்கும் காவல்துறையின் ஊழல்களை வேரறுப்பது. டோங்லூ தனது மாற்றலையும் பதவி உயர்வையும் வழக்கப்படி எந்த சந்தோஷமோ துயரமோ இன்றி ஏற்றுக்கொள்கிறார். அவரைப்பொறுத்தவரையில், அவர் கடன் பணி செய்து கிடப்பதே. ஆகவே டியான்செங் பிராந்தியத்துக்குப் பயணிக்கிறார்.

Cut To

காலடித்தடத்தை வைத்து ஒரு நபரைக் கண்டுபிடிப்பது சுலபம். உதாரணத்துக்கு, ஒரு கட்டிடத்தின் மாடியில் இருந்து அவன் தரையில் குதிக்கிறான் என்றால், குதித்தபின் மண்தரையில் ஏற்படும் காலடித்தடத்தின் அழுத்தத்தை வைத்து அவனது எடையை உடனடியாக கணிக்கமுடியும். கூடவே, அங்கிருந்து அவன் ஒடிய தடங்களை வைத்து – அவனது வலது மற்றும் இடது காலடித்தடங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை கணக்கிட்டு – அவனது உயரத்தையும் கண்டுபிடிக்க இயலும். அந்த தடங்கள் ஒரே பாணியில் இல்லாமல் ஒழுங்கற்று இருந்தால், குதிக்கும்போது அவன் கால்களை காயப்படுத்திக்கொண்டான் என்று பொருள். கூடவே, அவனது காலடித்தடங்களின் அழுத்தத்தை வைத்து, எந்தக் காலை அவன் முதலில் உபயோகிக்கிறான் என்று புரிந்துகொள்ளலாம். அப்படி புரிந்துகொண்டால், அவனது வயது, எடை, உயரம், அவனது கைப்பழக்கம் (விபரீத அர்த்தம் எதையும் புரிந்துகொள்ளவேண்டாம். இடதா அல்லது வலதுகையாளனா என்பது – ஷிட். இங்கேயும் விபரீத அர்த்தம் வருகிறதே) முதலியன புரிந்துவிடும். அதன்பின் அவன் எந்தக் கும்பலினுள் இருந்தாலும் அவனை பிடிப்பது எளிது.

Cut to

 

டியான்செங் பிராந்தியம். அங்கே காவல்துறையின் சூப்பர்ஸ்டாராக விளங்குபவன், க்வோ ஸுயி. அவனைப் போல் குறிபார்த்து சுடுபவர்கள் அந்தப் பிராந்தியத்திலேயே இல்லை. மின்னல் வேகத்தில் துப்பாக்கியை எடுத்து, இலக்கை தவறாமல் சுட்டு வீழ்த்துபவன் அவன். க்வோ ஸுயிக்கு அநியாயத்தைக் கண்டாலே அலர்ஜி. நேர்மையே வெல்லவேண்டும் என்பதில் எந்த எல்லைக்கும் செல்பவன் அவன். இளைஞன்.

Cut to

 

டிங் (Ding) என்பவன் டியான்செங் பிராந்தியத்தில் ஒரு துப்பாக்கி குண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்திருக்கும் நபர். அரசியல் தொடர்புகள் உள்ளவன். அவனது தொழிற்சாலையில் இருக்கும் ஒரு ஏழைப் பெண்ணை russsian roulette என்ற விளையாட்டின் மூலம் கொன்றவன். ரஷ்யன் ரூலெட் என்ன என்று கேட்கும் நபர்களுக்கு: ரிவால்வரில் உள்ள ஆறு ஓட்டைகளில் ஒரே குண்டை மட்டும் போட்டுவிட்டு, மற்ற ஐந்து ஓட்டைகள் உள்ள ஸிலிண்டரை சுற்றிவிட்டுவிட்டு, துப்பாக்கியை தன் தலையை நோக்கியோ அல்லது பிறரின் தலையை நோக்கியோ வைத்துக்கொண்டு அமுக்குவது. அதிர்ஷ்டம் அவனது பக்கம் இருந்தால் தலை சிதறாமல் இருக்கும். இல்லாவிடில் தலையின் குறுக்கே ஓட்டை விழும். இப்படிப்பட்ட ஒரு விளையாட்டின் மூலம் ஒரு பெண்ணைக் கொன்ற டிங், பெரும் பிரச்னைக்கு ஆளாகிறான். அந்தப் பெண்ணின் ஆவியின் மூலம், அந்தத் தொழிற்சாலையெங்கும் சுவர்களில் அந்தப் பெண்ணின் மர்ம வாசகங்கள் தென்படுகின்றன. மட்டுமல்லாமல் ஒவ்வொரு நபராக அந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் டிங்கின் ஆட்கள் இறக்கின்றனர். மிகவும் மர்மமான முறையில்.

Cut to

 

டியான்செங் பிராந்தியத்துக்கு ஸோங் டோங்லூ வருகிறார். அவரை சந்திக்கிறான் க்வோ ஸுயி. அந்தப் பிராந்தியத்தின் இணையற்ற இரண்டு போலீஸ்காரர்கள் ஒன்றுசேர்கிறார்கள். இருவரும் டிங்கின் துப்பாக்கி தொழிற்சாலைக்கு வருகின்றனர். இதன்பின் என்ன நடக்கிறது?

இதுதான் The Bullet vanishes படத்தின் ஓப்பனிங்.

படத்தின் முதல் பாதி மின்னல்வேகத்தில் ஓடுகிறது. ஒவ்வொரு நொடியும் சஸ்பென்ஸ். அதன்பின் முடிச்சுகள் மெள்ள அவிழும்போது என்ன ஆகிறது என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

ஷெர்லக் ஹோம்ஸின் கதைகளால் இன்ஸ்பையர் ஆன படம் இது என்பது படம் பார்க்கும்போதே தெரிகிறது. அவரது கதைகளில் வரும் சில சம்பவங்கள் இந்தப் படத்தில் இருக்கின்றன.

திரைக்கதையை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இந்தப் படத்தின் முதல் பாதி ஒரு உதாரணம். படத்தில் பல காட்சிகள் ஒன்றுக்கொன்று கோர்க்கப்பட்டிருக்கின்றன. அப்படி இருந்தால்தான் இந்த வகையைச் சேர்ந்த படங்கள் சுவாரஸ்யமாக இருக்கும். படத்தின் முடிச்சுகள் அவிழ்வதை கூர்ந்து கவனியுங்கள். ஒவ்வொரு முடிச்சும் புத்திசாலித்தனமாக எழுதப்பட்டிருப்பது புரியும். குறிப்பாக, முதல் பாதி & இரண்டாம் பாதியில் இருக்கும் காட்சிகளின் தொடர்பை கவனித்தால், ஒரு சஸ்பென்ஸ் படத்தின் திரைக்கதை எப்படி இருக்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம்.

1930களில் சைனாவின் ஃபாரன்ஸிக் தொழில்நுட்பம் பற்றிய பல தகவல்கள் இந்தப் படத்தில் கிடைக்கும். இரவு நேரத்தில் பார்க்கவேண்டிய த்ரில்லர் இது.

பி.கு – கருந்தேளில் இதுவரை வந்திருக்கும் ஷெர்லக் ஹோம்ஸைப் பற்றிய கட்டுரைகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்க.


The post The Bullet Vanishes (2012) – Chinese appeared first on Karundhel.

]]>
http://karundhel.com/2013/05/the-bullet-vanishes-2012-chinese.html/feed 12
The Thieves (2012) – South Korean http://karundhel.com/2013/05/the-thieves-2012-south-korean.html http://karundhel.com/2013/05/the-thieves-2012-south-korean.html#comments Wed, 15 May 2013 18:34:47 +0000 Rajesh Da Scorp http://karundhel.com/?p=3860 சௌத் கொரியன் படங்கள் பெரும்பாலும் கிம் கி டுக் படங்கள் போலத்தான் இருக்கும் என்று ஒரு காலத்தில் நம்பிவந்தேன். அதனை உடைத்தது Oldboy. அதன்பின் சரமாரியாக பல ஆக்‌ஷன் படங்களைப் பார்த்தேன். ஆக்‌ஷன் படம் – என்றால் கண்டபடி சுட்டுக்கொண்டு சாகும் டை ஹார்ட் பாணி படங்கள் அல்ல. கதையோடு ஆக்‌ஷன் கலந்து, படம் பார்க்க சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் படங்களே நான் சொல்லவந்தவை. சில உதாரணங்களாக A Bittersweet Life, I saw the Devil, The [...]

The post The Thieves (2012) – South Korean appeared first on Karundhel.

]]>
சௌத் கொரியன் படங்கள் பெரும்பாலும் கிம் கி டுக் படங்கள் போலத்தான் இருக்கும் என்று ஒரு காலத்தில் நம்பிவந்தேன். அதனை உடைத்தது Oldboy. அதன்பின் சரமாரியாக பல ஆக்‌ஷன் படங்களைப் பார்த்தேன். ஆக்‌ஷன் படம் – என்றால் கண்டபடி சுட்டுக்கொண்டு சாகும் டை ஹார்ட் பாணி படங்கள் அல்ல. கதையோடு ஆக்‌ஷன் கலந்து, படம் பார்க்க சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் படங்களே நான் சொல்லவந்தவை. சில உதாரணங்களாக A Bittersweet Life, I saw the Devil, The Chaser, The Good, bad and the Weird போன்ற படங்களை சொல்லலாம். இது தவிர பேய்ப்படங்கள், சைக்கலாஜிகல் த்ரில்லர்கள், காதல் படங்கள் போன்றவையும் சௌத் கொரியன் படங்களில் உண்டு. இது எதுவாக இருந்தாலும் கதாபாத்திரங்களின் பின்னணியை அலசி, கேரக்டரைஸேஷன் என்ற கதாபாத்திர வடிவமைப்பை அட்டகாசமாக இப்படங்களில் செய்திருப்பதைக் காணலாம். குறிப்பிட்ட கதாபாத்திரம் திருடனாக இருந்தால் அவன் திருடனாகத்தான் இருப்பான். இடையே ’நல்ல திருடன்’ போன்ற மேட்டரெல்லாம் இவற்றில் காணமுடியாது (கொழந்த கவனிக்க). இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் நல்ல பின்னணி இருக்கும்.

ஹாலிவுட் மசாலாக்களில் ஒரு குறிப்பிட்ட ஜானர் உண்டு. Heist films என்பதைப் படித்திருப்பீர்கள். கொள்ளையை மையமாக வைத்து இயக்கப்படும் படங்கள். குறிப்பாக அதில் ஒரு கொள்ளைக்கும்பல் இருக்கும். டக்கென்று நினைவுபடுத்திக்கொள்ள Ocean’s Eleven படத்தை நினைத்துப் பார்க்கலாம். இந்த ஹாலிவுட் ஹீஸ்ட் படங்களுக்கு எப்படி திரைக்கதை வடிவமைப்பது என்பதைப் பற்றியே தனியாக புத்தகங்கள் எழுதும் அளவு பிரம்மாண்டமான ஒரு பிரிவு இது.

இதுவரை நீங்கள் பார்த்த்திருக்கும் ஹீஸ்ட் படங்களை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அவற்றில் என்னென்ன பொதுவான விஷயங்களை கண்டுபிடிக்கமுடிகிறது?

1. ஒரு கொள்ளை கும்பலை உருவாக்குவது. கும்பலில் ஒரு பெண், ஒரு வயதான நபர், ஒரு மிக இளைஞன் ஆகியவர்கள் அவசியம். யாராவது ஒரு நபர் ரிடையர் ஆகியிருப்பார். அவரை தேடிக்கண்டுபிடித்து கும்பலில் சேர்ப்பார்கள்.

2. கும்பலின் தலைவன் விட்டேற்றியான மனநிலையிலேயே இருப்பான். எல்லாரையும் அவ்வப்போது திட்டுவான். அவனிடம்தான் திட்டம் இருக்கும்.

3. கும்பலின் இலக்கு பெரும்பாலும் ஒரு கேஸினோவாகத்தான் இருக்கும்.

4. கேஸினோ (அல்லது) கொள்ளையடிக்கப்படும் இடத்தின் ரகசிய கேமராக்கள், செக்யூரிடிகள், மக்கள் நடமாட்டம், தப்பிக்கும் வழிகள் போன்றவற்றை ஒரு மாதம் முன்னரே நோட்டமிட்டு வைத்திருப்பார்கள். கொள்ளை நடக்கத் துவங்கும்போது இந்த நோட்டமிட்ட ஃப்ளாஷ்பேக் காட்சிகள் இண்டர்கட்டாக இடம்பெறும்.

5. மேலே பாயிண்ட்கள் ஒன்றிலிருந்து நான்கு வரையிலான காட்சிகள்தான் திரைப்படத்தின் முதல் அரைமணி நேரமாவது இடம்பெறும்.

6. கும்பலில் ஒவ்வொருவரும் ஒரு தனிப்பட்ட திறமையில் கெட்டிக்காரர்கள்.

7. கொள்ளை அடிக்கப்படும்.

8. கொள்ளையினால் பிரச்னை வெடிக்கும். கும்பலில் யாராவது துரோகி இருப்பான்(ள்). அந்தத் துரோகி பணத்துடன் ஓட்டம்.

9. கும்பலில் மீதம் இருப்பவர்கள் ஒவ்வொருவராக இறத்தல். இறப்பு பெரும்பாலும் போலீஸ் Shoot-out அல்லது தங்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு சாவது என்றே இருக்கும்.

10. உயிரொடு பிழைத்த கும்பலின் எச்சங்கள், பணத்தைத் திருடிக்கொண்டு ஓடிய நபரை கண்டுபிடித்தல்.

11. இறுதியில், படத்தின் பாதியில் கொள்ளையடிக்கப்பட்ட வில்லன் எண்ட்ரி. மூன்று சாராரும் அடித்துக்கொண்டு சாதல்.

12. யாராவது ஒரு நபர் பணத்தை அடைதல். இது பெரும்பாலும் கும்பலின் எதிர்பாராத நபராகவே இருக்கும்.

13. சுபம் (என்று எழுதுவதற்குள் அடுத்த பாகம் டுமீலென்று வந்தாலும் வந்துவிடும்).

உலகில் எந்த மூலையில் ஒரு ஹீஸ்ட் படம் எடுத்தாலும் இந்தப் பாயிண்ட்கள்தான்.

ஆனால், எல்லாருக்கும் தெரிந்த இந்தப் பாயிண்ட்களை வைத்துக்கொண்டே படு சுவாரஸ்யமான படம் ஒன்றைக் கொடுக்க முடியுமா? அதுவும் ஆயிரத்தெட்டு ஹீஸ்ட் படங்கள் வந்துவிட்ட பின்னர், 2012ல்?

The Thieves படத்தைப் பாருங்கள்.

இதுபோன்ற ஹீஸ்ட் படங்கள் எடுப்பதில் இன்னொரு முக்கியமான திரைக்கதை விதி என்னவென்றால், படத்தின் இரண்டாம் பாதியில் பணம் திருடுபோனபின்னர் ஏற்படும் ட்விஸ்ட்களுக்கு (திருப்பங்கள்) படத்தின் முதல் பாதியிலேயே காரணங்களை எழுதியிருக்கவேண்டும். அதாவது, படத்தின் முதல் பாதியில், இறுதியில் வரப்போகும் பிரச்னைகளுக்கான ஆரம்பங்கள் இருத்தல் வேண்டும். முன்பின்னாக திரைக்கதையை கோர்ப்பது. இப்படி கோர்த்திருந்தால்தான் திரைக்கதை சுவாரஸ்யமாக இருக்கும்.

இந்தப்படம் தென்கொரியாவில் வெளிவந்தபின், அதன் திரைப்பட வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த இரண்டாவது படம் என்ற பெருமையை இன்றுவரை பெற்றிருக்கிறது. படம் அதற்கேற்றவாறுதான் இருக்கிறது. ஒரு இடத்தில் கூட தொய்வில்லாமல் இறுதிவரை விறுவிறுப்பாக செல்லும் படங்களில் இதை தாராளமாக சேர்க்கலாம்.

படத்தில் சௌத் கொரியாவின் பிரபல நடிகர்கள் பலர் நடித்திருக்கின்றனர். அவர்களில் Macao Park என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிம் யூன் ஸியோக் என்ற நடிகரை எனக்கு மிகவும் பிடித்தது. ஏன் என்று படத்தில் தெரிந்துகொள்வீர்கள். நான் சொன்ன ஒருங்கிணைக்கும் நபர் இவர்தான்.

நான் சில படங்களைப் பற்றி எழுதும்போது, தமிழில் சுடப்படும் வாய்ப்பு மிக அதிகம் என்று எழுதியிருப்பேன். இதோ இந்தப்படம் எப்போது வேண்டுமானாலும் தமிழில் வெளியாகலாம். எனவே அதற்குமுன்னர் இப்படத்தைப் பார்த்துவிடுவது சாலச்சிறந்தது.

இதற்குமேல் இப்படத்தைப் பற்றி எதுவும் எழுதப்போவதில்லை. பட விமர்சனம் என்று இதுபோன்ற மசாலாக்களுக்கு செய்வதில் எந்த பலனும் இல்லை என்பதால் நோ விமர்சனம்.

பி.கு – கருந்தேள் டாட் காமில் இதுவரை எழுதப்பட்டுள்ள தென்கொரியப் படங்களைப் பற்றிப் படிக்க இங்கே க்ளிக் செய்யலாம்.


The post The Thieves (2012) – South Korean appeared first on Karundhel.

]]>
http://karundhel.com/2013/05/the-thieves-2012-south-korean.html/feed 9
சூது கவ்வும் (2013) – தமிழ் http://karundhel.com/2013/05/soodhu-kavvum-tamil-2013.html http://karundhel.com/2013/05/soodhu-kavvum-tamil-2013.html#comments Sun, 12 May 2013 17:01:17 +0000 Rajesh Da Scorp http://karundhel.com/?p=3851 முன்கதை 2012 ஜூலையன்று நண்பர் முரளி குமார் அழைத்திருந்தார். நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் குறும்படங்களை திரையிட்ட நலன் குமரசாமி என்ற இயக்குநரின் திரைக்கதை ஒன்று இருப்பதாகவும், அந்தத் திரைக்கதையைப் படித்து, அதன் குறைகள்/பிரச்னைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்ட முடியுமா என்று கேட்டார். அவசியம் முடியும் என்று சொன்னேன். அதன்பின்னர் நலன் அழைத்தார். அவரிடம் பேசியபின்னர், திரைக்கதையை நன்றாகப் படித்தேன். அதன்பின்னர் திரைக்கதையின் சில விஷயங்களைப் பற்றி மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் பேசினோம். நலனுக்கு சில சந்தேகங்கள் இருந்தன. அவற்றை விரிவாக அனுப்பியிருந்தார். [...]

The post சூது கவ்வும் (2013) – தமிழ் appeared first on Karundhel.

]]>
முன்கதை

2012 ஜூலையன்று நண்பர் முரளி குமார் அழைத்திருந்தார். நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் குறும்படங்களை திரையிட்ட நலன் குமரசாமி என்ற இயக்குநரின் திரைக்கதை ஒன்று இருப்பதாகவும், அந்தத் திரைக்கதையைப் படித்து, அதன் குறைகள்/பிரச்னைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்ட முடியுமா என்று கேட்டார். அவசியம் முடியும் என்று சொன்னேன். அதன்பின்னர் நலன் அழைத்தார். அவரிடம் பேசியபின்னர், திரைக்கதையை நன்றாகப் படித்தேன். அதன்பின்னர் திரைக்கதையின் சில விஷயங்களைப் பற்றி மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் பேசினோம். நலனுக்கு சில சந்தேகங்கள் இருந்தன. அவற்றை விரிவாக அனுப்பியிருந்தார். அவற்றுக்கு எனது கருத்துகளையும் விரிவாக அனுப்பினேன்.

எங்கள் விவாதம் முடிவடைந்த பிறகு, கொஞ்ச நாட்களில் அதனை மறந்தும் விட்டேன். அதன்பின்னர் ஒரு நாள் நலன் அழைத்திருந்தார். திரைக்கதைக்கு ஒரு நல்ல தயாரிப்பாளர் கிடைத்துவிட்டதாகவும், படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் சொன்னார். அதன்பின்னர் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதும் பேசினார். பின்னர் படப்பிடிப்பு முடிந்து, பாடல் வெளியீட்டு விழாவுக்கு அழைத்தார். பின்னர், பட வெளியீட்டைப் பற்றியும் பேசினார்.

படமும் வெளியாகிவிட்டது. பலருக்கும் பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன். ஆனால் பெங்களூரில் வெளியாகவில்லை. இங்கு படம் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் வெள்ளியன்று வெளிவந்ததால், அன்றே மாலையில் படத்தைப் பார்த்துவிட்டோம்.

நலனின் திரைக்கதையைப் படித்தபோது, அந்தத் திரைக்கதையில் வழக்கமான தமிழ்ப்படங்களில் காணப்படும் சில விஷயங்கள் இல்லாதது ஆறுதலாக இருந்தது (கதாநாயகி இல்லை. ஆகவே டூயட்கள் இல்லை. ஃப்ளாஷ்பேக் இல்லை. ஆகவே மெதுவாக நகரும் காட்சிகள் படத்தில் இல்லை.பாடல்கள் மிகக்குறைவு. பேசவே பேசாத இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் இத்யாதி). அந்தத் திரைக்கதை அப்படியே எடுக்கப்பட்டால் அவசியம் தமிழில் ஒரு வித்தியாசமான genreல் வெளிவந்து வெற்றி அடையும் என்பது என் கருத்து.

அதேபோல் படம் அட்டகாசமான வெற்றி அடைந்திருக்கிறது. இந்தப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை. ‘அது எப்புடி வித்தியாசம்? அப்புடி இன்னாபா கீது இதுல?’ என்று கேள்விகளை எழுப்பும் நண்பர்களுக்கு, இதோ படத்தைப் பற்றிய விபரமான விஷயங்கள்.

 

’ஓரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் கண்ணுக்கு மட்டும் தெரியும் பெண்’ என்பது தமிழில் மிக அரிது. பொதுவாக ஹாலிவுட் படங்களில்தான் இப்படிப்பட்ட விஷயங்கள் இருக்கும். எனக்குத் தெரிந்து, பாலசந்தரின் ‘பொய்க்கால் குதிரை’ படத்தில் சலூன் வைத்திருக்கும் ரவீந்தரிடம், சலூன் புகைப்படத்தில் இருக்கும் கமல்ஹாஸன் பேசுவார். ரவீந்தரின் காதல் வெற்றியடைய வழிகளை சொல்லுவார். அதுவும் மிகச்சில காட்சிகளில் மட்டும்தான் வரும்.

பொதுவாக இப்படி ஒரு கதாபாத்திரம் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். தமிழ்ப்படங்களில் அது எப்படி காட்டப்படும் என்றால், படத்தின் இறுதியில் வில்லனால் அடிபட்டு சாகும் நிலையில் இருக்கும் ஹீரோவின் கண்களுக்கு முன்னர் மட்டும் இறந்துபோன கதாநாயகி தெரிவாள். உடனேயே ‘டாய்ய்ய்ய்ய்ய்’ என்று அலறிக்கொண்டு வில்லனை ஒரே அடியில் வீழ்த்துவார் ஹீரோ. இல்லையெனில், எதாவது பாடலில் ஹீரோ ஜாலியாக எங்காவது செல்லும்போது அங்கே கதாநாயகி தெரிவாள்.

இந்தப்படத்தில் இருப்பதுபோன்ற ஜாலியான ஒரு பெண் கதாபாத்திரத்தைப் பார்த்து மிக நீண்ட நாட்களாகிவிட்டன. அதிலும், படத்தின் கடைசியில் இந்த உண்மையை சொல்லி ஆடியன்ஸை தலைவேதனைக்கு உள்ளாக்கும் படமாக இது இல்லாமல் (தலாஷ் ஒரு உதாரணம்) படத்தின் ஆரம்பத்திலேயே தாஸ் தனது வியாதியைப் பற்றிச் சொல்லிவிடுகிறார். இதனால் படத்தின் வெவ்வேறு கதாபாத்திரங்கள் அந்தப் பெண் கதாபாத்திரத்துடன் உரையாடும் தாஸைப் பார்த்து ரியாக்ட் செய்வது நன்றாக வந்திருக்கிறது. நகைச்சுவையாகவும் இருக்கிறது. இந்தக் கதாபாத்திரம் நகைச்சுவையாக உபயோகப்படுத்தப்பட்டிருப்பதை நான் பார்த்ததில்லை. தலாஷ், The Sixth Sense போன்ற படங்கலில் மிக சீரியஸாகவே இதைப்போன்ற சித்தரிப்புகள் இருக்கும்.

சரி. எந்தக் காரணமுமில்லாமல் ஏன் இப்படி ஒரு கதாபாத்திரம் என்ற கேள்வியை ஒருசில விமர்சனங்களில் படிக்க நேர்ந்தது. காரணம், தாஸின் மனவியாதி என்பதைத்தான் அவரே சொல்கிறாரே?

அடுத்தது, ஆள் கடத்தலைப்பற்றிய ஜாலியான பார்வை. இதற்கு முன்னர் மும்பை எக்ஸ்ப்ரஸில் இந்தக் கரு கையாளப்பட்டிருக்கும். ஆனால் மும்பை எக்ஸ்ப்ரஸில் கதை தடாலென்று மனீஷா கதாபாத்திரம், அவருக்கும் கமலுக்கும் நிலவும் காதல் என்று தடம்மாறி, அலுக்க ஆரம்பித்துவிடும் (கதை விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கும்போது இப்படி எதாவது வைத்து கதையை மெதுவாக ஆக்குவது கமலின் வழக்கம்.  அது அவரது பாணி. படிக்க – ‘அன்பே சிவம் ஏன் ஓடவில்லை?’ & ‘அன்பே சிவம் – ஒரு கட்டுரையும் அதன் எதிர்வினையும்’.). இந்தப்படத்தில் காதலே இல்லாததால், அப்படிப்பட்ட திசைமாற்றக் காட்சிகள் எதுவும் இல்லாமல் படம் சுவாரஸ்யமாகச் செல்கிறது.

இன்னொரு நல்ல விஷயம் என்னவென்றால், படத்தில் வரும் ஜாலியான திருப்பங்கள்.ஆங்காங்கே வரும் இந்த ட்விஸ்ட்கள், படத்தை சுவாரஸ்யமாக்குகின்றன. உதாரணம்: ஆட்டோவில் சென்றுகொண்டிருக்கும்போது பாக்கெட்டில் இருக்கும் பென் ட்ரைவ் சிதறுவது. இந்தப்படத்தில் வரும் ட்விஸ்ட்கள் மிகப்பெரிய திருப்பங்கள் அல்ல. ஆனால் படத்தை அலுக்காமல் கொண்டுசெல்ல அவை உதவுகின்றன.

நகைச்சுவை ஒன் லைனர்கள், இந்தப்படத்தின் இன்னொரு பலம். படம் முழுக்கவே ஆங்காங்கே இவை இருக்கின்றன. ஹாலிவுட்டில் பல கேங்ஸ்டர் படங்களில் இப்படிப்பட்ட நகைச்சுவை வசனங்களை பார்த்திருக்கிறேன். தமிழில் முழுநீளமாக அவைகளைப் பார்ப்பது இப்போதுதான். உதாரணத்துக்கு, 2003ல் வெளிவந்த CrimeSpree (என் விமர்சனத்தை க்ளிக்கிப் படிக்கலாம்) படத்தில் இப்படிப்பட்ட காட்சிகள் இருக்கும். அதேபோல் கை ரிட்சியின் கேங்ஸ்டர் படங்களிலும் இப்படிப்பட்ட வசனங்கள் & காட்சிகள் இருக்கும் (RocknRolla & Revolver).

பொதுவாக ஒரு திரைப்படம் சுவாரஸ்யமாக இருக்கிறது என்றால், கதாபாத்திரங்களின் பின்னணியை நன்றாக தயார் செய்திருத்தல் வேண்டும். திரைப்படத்தில் இடம்பெறாவிட்டாலும் பரவாயில்லை. அந்தப் பின்னணியை நினைவுபடுத்தும் வகையில் ஆங்காங்கே காட்சிகள் வைத்திருந்தால் போதுமானது. இந்தப் படத்தில் மேட்டர் படம் எடுக்கும் டாக்டரின் கதாபாத்திரம் அப்படிப்பட்டது. அதேபோல், எந்தத் திரைக்கதையாக இருந்தாலும் சரி, அதில் வரும் காட்சிகளை ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்துதல் அவசியம். இது பாக்யராஜின் படங்களில் இருக்கும். படத்தின் முதல்பாதியில் ஒரு காட்சி, இரண்டம் பாதியில் வரும் காட்சியோடு கோர்க்கப்பட்டிருக்கும். இதுபோன்ற தொடர்புள்ள காட்சிகள், படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும். இந்தப் படத்தில் கிட்டத்தட்ட பல காட்சிகள் அப்படி இருக்கின்றன. இதோ இரண்டு உதாரணங்கள்:

படத்தில் பாப் மார்லியின் கெட்டப்பில் வந்து தாஸை அடிக்கும் இளைஞன் – இந்த இளைஞன், சும்மா அறிமுகமாகும் காட்சியில் மட்டுமே வருவான் என்றே நாம் நினைக்கக்கூடும். ஆனால், ‘சில்லரை இல்லப்பா’ என்று தாஸினால் இன்சல்ட் செய்யப்படும் இவன், அதன்பின் டாஸ்மாக் சண்டையில் முக்கியப்பங்கு வகிப்பான். அதேபோல் படத்தின் கடைசிக் காட்சியிலும் வருவான்.

படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே பிரம்மா & மேட்டர் டாக்டர் ஆகியவர்களைப் பற்றிய செய்தித்தாள் ந்யூஸ் – இது, படத்தில் போகப்போக இவர்கள் இருவரும் உள்ளே நுழைவார்கள் என்பதற்கான ட்ரெய்லர். அதேபோல் படம் ஆரம்பித்து பாதியைக் கடந்தபின் தடாலென்று ஒரு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தக்கூடாது என்பது திரைக்கதை ரூல். இதில் முதல் காட்சியிலேயே நமக்கு அக்கதாபாத்திரங்களைப் பற்றிய க்ளூ கிடைத்துவிடுகிறது.

படத்தின் இறுதியில் பிரம்மாவினால் அடிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் இருக்கும் தாஸ், ஒருகணம் நினைவு தப்பி கிட்டத்தட்ட மரணத்தை அனுபவிக்கிறான். அப்போது அவனது காதலி ஷாலு அவனை சந்தித்து, அவனுக்காக ஒரு சிறிய பாடலைப் பாடுவாள். இதேல்லாம் தமிழில் யோசிக்க முடியாதது. Again, ஹாலிவுட்டில்தான் இதைப்போன்ற காட்சிகளை பார்த்திருக்கிறேன். அதேபோல், படத்தின் முடிவில் அப்படத்தின் பிரதான கதாபாத்திரங்கள் அதற்குப்பின்னர் என்ன செய்தார்கள் என்று விளக்குவதும் ஹாலிவுட் ஸ்டைல்தான்.

’பீட்ஸா’ திரைப்படத்தை நான் பார்த்தபோது எனக்கு விஜய் சேதுபதியின் நடிப்பு பிடிக்கவில்லை. அதை அந்த விமர்சனத்திலும் எழுதி இருந்தேன். ஆனால் இந்தப் படத்தில் அவரது நடிப்பில் எந்தக் குறையும் தெரியவில்லை.  ஒரு மிகப்பெரிய ரவுண்ட் தமிழில் வரப்போகும் நடிகர் இவர் என்பது இந்தப் படத்தில் தெரிகிறது. படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேருமே கேஷுவலாகவே நடித்திருக்கிறார்கள் . இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் – சந்தோஷ் நாராயணனின் இசை. கிதார், லோக்கல் தப்பட்டை போன்ற பலவிதமான இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு நன்றாக இசையமைத்திருக்கிறார். இது மட்டும் இல்லாமல், பாடல்களில் வித்தியாசம் காட்டியிருப்பது எனக்குப் பிடித்தது (குறிப்பாக ‘மாமா டவுசர் கழண்டுச்சி’, ’எல்லாம் கடந்து போகுமடா’ மற்றும் தீம் இசை-Sudden Light). இந்தப் பாடல்களைப் போல ஒரு பரிசோதனை முயற்சி எனக்குத் தெரிந்து தமிழில் அரிது (பாடல்களின் quality அல்ல நான் சொல்வது. பாடல்களின் பல்வேறு genreகளின் முயற்சியையே சொல்கிறேன்). சந்தோஷ் நாராயணன் கண்டிப்பாக தமிழ்ப் படங்களில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்துக்குச் செல்வதற்கு அத்தனை தகுதிகளும் அவருக்கு இருக்கிறது. அவசியம் செல்வார் என்று நம்புகிறேன்.

படத்தின் நெகட்டிவ் அம்சங்கள்?

படத்தின் இண்டர்வெல் ப்ளாக்கில் வரும் விபத்து, சரியாகப் படமாக்கப்படவில்லை. அது மிகவும் செயற்கையாக தெரிகிறது. நன்றாகப் படமாக்கப்பட்டிருக்கும் ஒரு மசாலாவில் இது கொஞ்சம் உறுத்தியது. படத்தின் இரண்டாம் பாதி தொய்வாக இருக்கிறது என்று ஃபேஸ்புக்கில் படித்தேன். ஆனால் எனக்கு அப்படித் தெரியவில்லை. ஏற்கெனவே திரைக்கதையை படித்திருந்ததாலோ என்னமோ இரண்டாம் பாதியும் மிகவும் விறுவிறுப்பாகவே சென்றது. மிகச்சில காட்சிகளில் இசைக்கருவிகளின் இரைச்சல் காதுகளைப் பதமாக்கியது. அவ்வளவே. உதயம் NH4 படத்தின் விமர்சனத்தில் எழுதியிருந்ததுபோல், ஒரு மசாலாவில் லாஜிகல் விஷயங்களைப் பார்க்கக்கூடாது என்பது என் கொள்கை. மசாலாவின் எல்லைகளுக்கு உட்பட்டு ஒரு படம் எப்படி நன்றாகப் படமாக்கப்பட்டிருக்கிறது என்பதே ஒரே மேட்டர்.

தமிழில் சூது கவ்வும் படத்தைப் போன்ற முயற்சிகள், தமிழ்ப்படங்களின் genre மாறிவருவதையே காட்டுகின்றன. தமிழில் ஒரு கை ரிட்சியின் படத்தைப் பார்ப்பது போன்ற அனுபவம் கொடுக்கும் இப்படிப்பட்ட படங்கள் வருவதை வரவேற்கிறேன்.

பி.கு

1. படத்தை நாங்கள் பார்த்தது, பெங்களூரின் ஃபேம் லிடோவில். ஹிந்திக்காரர்களைப் போன்று தோற்றம் தந்த ஒரு பெரிய குடும்பம் வந்திருந்தது. அவர்களைப் பார்த்து நாங்கள் குழம்பி, தியேட்டர் மாறி வந்துவிட்டோமோ என்று எண்ணிய காமெடியும் நடந்தது. ஆனால் அவர்கள்தான் விழுந்து புரண்டு சிரித்துக்கொண்டிருந்தனர். ’ஹை க்ளாஸ்’ தமிழர்கள் போலும்.

2. தியேட்டரில் ஆடியன்ஸின் எதிர்வினை அபாரமாக இருந்தது. படத்தின் ஒவ்வொரு திருப்பத்தின்போதும் சிரிப்பொலி. அத்தனை பேரும் படத்தை எஞ்சாய் செய்ததைப் பார்த்தேன்.

3. படத்தில் மிகச்சிறிய பங்காற்றியிருக்கும் ஒருவன் (நான்), படத்தை விமர்சிப்பது தகுமா? அது நடுநிலைமை என்ற கான்செப்டையே தகர்க்கிறதே? இந்தக் கேள்வி, விமர்சனமெழுத அமருமுன்னரே எனக்கு இருந்தது. ஆனால், எனக்கு ஒருவேளை இந்தப் படம் பிடித்திருக்காவிடில், பிடிக்கவில்லை என்றுதான் எழுதியிருப்பேன். அதில் சந்தேகமில்லை என்பதால், பிடித்திருக்கிறது என்றும் எழுத எந்தத் தயக்கமும் இல்லை. உண்மையில் திரைக்கதையைப் படித்த சமயத்திலேயே அதன் வித்தியாசமான தன்மை எனக்குப் பிடித்தது.

The post சூது கவ்வும் (2013) – தமிழ் appeared first on Karundhel.

]]>
http://karundhel.com/2013/05/soodhu-kavvum-tamil-2013.html/feed 23
Star Trek Into Darkness (2013) – 3D – English http://karundhel.com/2013/05/star-trek-into-darkness-2013-3d-english.html http://karundhel.com/2013/05/star-trek-into-darkness-2013-3d-english.html#comments Sat, 11 May 2013 18:00:55 +0000 Rajesh Da Scorp http://karundhel.com/?p=3841 Space: the final frontier. These are the voyages of the starship Enterprise. Its five-year mission: to explore strange new worlds, to seek out new life and new civilizations, to boldly go where no man has gone before   ஒரு பிரம்மாண்டமான விண்வெளிக் கப்பல். அதற்குள் இருக்கும் பல்வேறு மனிதர்கள். அவர்களின் தலைவராக ஒரு கேப்டன். இந்தக் கப்பலின் வேலை, எந்த மனிதனும் இதுவரை [...]

The post Star Trek Into Darkness (2013) – 3D – English appeared first on Karundhel.

]]>

Space: the final frontier. These are the voyages of the starship Enterprise. Its five-year mission: to explore strange new worlds, to seek out new life and new civilizations, to boldly go where no man has gone before

 

ஒரு பிரம்மாண்டமான விண்வெளிக் கப்பல். அதற்குள் இருக்கும் பல்வேறு மனிதர்கள். அவர்களின் தலைவராக ஒரு கேப்டன். இந்தக் கப்பலின் வேலை, எந்த மனிதனும் இதுவரை போயிருக்காத பல்வேறு புதிய உலகங்களுக்குப் பயணப்படுதல்.

இந்தியாவில் ஸ்டார் டிவி வந்த புதிதில், அப்போதைய ஸ்டார் ப்ளஸில் ‘ஸ்டார் ட்ரெக்’ என்ற தொலைக்காட்சி ஸீரீஸ் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது. அதன்பின்னர் ஸ்டார் ப்ளஸ் ஹிந்தி சேனலாக மாறியபின்னரும், ஸ்டார் வேர்ல்ட் சேனலில் வந்துகொண்டிருந்தது இந்த ஸீரீஸ். அப்போது அதனை தவறாமல் பார்ப்பேன். ஒவ்வொரு எபிஸோடிலும் அந்த ஸீரீஸ் கையாண்ட களன்கள் எனக்குப் பிடிக்கும். உதாரணத்துக்கு, ‘Elementary, dear Data’ என்ற எபிஸோடில் ஷெர்லக் ஹோம்ஸ் கதையில் ஹோம்ஸ் எப்படி துப்பறிகிறாரோ அப்படி Data என்ற ஆண்ட்ராய்ட் ரோபோ ஒன்று துப்பறியும். இதுபோன்று, ஒவ்வொரு எபிஸோடிலும்  ஒவ்வொரு சுவாரஸ்யம் இதில் இருக்கும். சொல்லப்போனால் நாம் இங்கு ஏற்கெனவே பார்த்த Firefly ஸீரீஸுக்கெல்லாம் இதுதான் இன்ஸ்பிரேஷன்.

நேற்று உலகெங்கும் Star Trek in to Darkness வெளியாகியிருக்கிறது. இது, மூன்று வருடங்களுக்கு முன்னர் வந்த Star Trek படத்தின் இரண்டாம் பாகம் என்பது பல நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும்.ஆனால் உண்மையில் இது ஸ்டார் ட்ரெக் வரிசையில் பனிரண்டாவது படம். இதற்கு முன்னர் வெளிவந்திருக்கும் படங்களில் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். அவைகளைப் பற்றியும் எனக்குத் தெரிந்த விஷயங்களையும் கொஞ்சம் சொல்லலாம் என்று தோன்றுகிறது.

spock_rarepb

Mr. Spock

ஸ்டார் ட்ரெக் என்ற இந்த ஸீரீஸ், முதன்முதலில் ஒளிபரப்பாக ஆரம்பித்த ஆண்டு – 1966. மொத்தம் மூன்று வருடங்கள் ஒளிபரப்பாகியது. கேப்டன் ஜேம்ஸ் டி. கிர்க் என்றவரின் தலைமையின் கீழ் இந்த விண்வெளி ஓடம் மொத்தம் ஐந்து வருடங்களுக்கு பல இடங்களுக்குப் பயணப்பட்டு, பல்வேறு சாகஸங்களில் ஈடுபடுவதே கதை. இதில் கிர்க்கின் வலது கையாக, First officer என்ற பொறுப்பில் ஸ்பாக் என்பவர் இருப்பார். லயன் காமிக்ஸில் வெளிவந்துகொண்டிருந்த ஸ்பைடருக்கும் இவருக்கும் ஒரு வித்தியாசம் கூட இருக்காது. ஒருவேளை ஸ்பைடரை அக்காலத்தில் திரைப்படமாக எடுத்திருந்தால் ஸ்பாக்காக நடித்த லியொனார்ட் நிமாயை (Leonard Nimoy) நடிக்க வைத்திருக்கலாம் என்று நினைப்பேன். இந்த ஸ்பாக் என்பவரின் தாய், மனித இனத்தை சேர்ந்தவர். தந்தை, வல்கன் என்ற கிரகத்தை சேர்ந்தவர். ஸ்பாக், ஒரு நடமாடும் கணினி. ஆனால் எக்காலத்திலும் எந்த விதியையும் மீறாதவர். ஜேம்ஸ் கிர்க்குக்கு பல வகைகளில் உதவுவதைப்போலவே உபத்திரவங்களையும் விளைவிப்பவர். கிர்க், ஸ்பாக்குக்கு நேர் எதிர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் விதிகளை மீறுவதைப்பற்றிக் கவலைப்படாதவர்.

இந்த இருவரைத் தவிர மேலும் டாக்டர் லியொனார்ட் மெக்காய், மாண்ட்கோமரி ஸ்காட், ஸ்பாக்கின் காதலி உஹுரா & ஹிகாரு ஸுலு என்ற அதிகாரி ஆகியவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்த ஸீரீஸ். இந்தக் கதைகள் நடக்கும் காலம் கி.பி. 2266 முதல் 2269 வரை. எண்டர்ப்ரைஸ் என்ற அந்த விண்வெளி ஓடம் தனது ஐந்து வருட பயணத்தில் முதல் மூன்று வருடங்களில் சந்திக்கும் சாகஸங்கள் இவை.

இந்த முதல் ஸீரீஸ் முடிவடைந்ததும், அதன்பின்னர் ஒரு அனிமேஷன் ஸீரீஸ் வெளிவந்தது. இதற்குப்பின்னர் 1987லிருந்து 1994 வரை ஏழு வருடங்கள், முதல் ஸீரீஸின் தொடர்ச்சியான ’The Next Generation’ ஒளிபரப்பப்பட்டது. ஒரிஜினல் கதை நடந்ததற்குப்பிறகு நூறு வருடங்கள் கழித்து, கேப்டன் ஸான் லுக் பிகார்ட் (Jean Luc Picard) என்பவரின் கீழ் நடக்கும் சாகஸங்கள் இவை. நான் பார்க்க ஆரம்பித்தது இந்த ஸீரீஸ் தான். இதில்தான் முதல் பத்தியில் பார்த்த ஆண்ட்ராய்ட் ரோபோ Data வரும். பிகார்டாக நடித்தவர் பாட்ரிக் ஸ்டூவர்ட். இந்த ஸீரீஸின் கதாபாத்திரங்கள் மிகப்பிரபலம்.

இதன்பிறகு Deep Space Nine, Voyager & Enterprise போன்ற ஸீரீஸ்கள் வெளிவந்தன. இதில் Enterprise என்பது எல்லாக் கதைகளுக்கும் முன்னர் நடக்கும் prequel.

இந்த அத்தனை ஸீரீஸ்களையும் கணக்கிட்டால் அவற்றில் வரும் கதைகள், சாகஸங்கள் முதலியன எண்ணிலடங்காதவை. போதாதென்று பத்து படங்கள் வேறு வெளிவந்திருந்தன (அவற்றில் பல படங்கள் மொக்கைகள்).

ஸ்டார் வார்ஸ் போல, ஸ்டார் ட்ரெக்கும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற ஒரு ஸீரீஸாக இருந்தது. இந்த ஸீரீஸின் கடைசிப்படம் 2002ல் வெளிவந்திருந்த Star Trek: nemesis. படுதோல்வி. இதன்பின் சில வருடங்களுக்கு ஸ்டார் ட்ரெக் கிடப்பில் கிடந்தது. ஹாலிவுட் வழக்கப்படி தோண்டியெடுக்கப்பட்டு Reboot செய்யப்பட்ட ஆண்டு, 2009. அப்போதுதான் Star Trek என்ற படம் வெளிவந்தது. இது, முதல் ஸீரீஸில் (1966-1969) இடம்பெற்ற கதாபாத்திரங்களின் இளம் பருவத்தில் இவர்களெல்லாம் எப்படி சந்தித்துக்கொண்டனர் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். எனக்கு மிகவும் பிடித்த படமும் கூட. மிகவும் விறுவிறுப்பாக செல்லும் இந்தப் படத்தில், இளவயது ஸ்பாக், தனது வருங்காலத்திய முதியவர் ஸ்பாக்கை சந்தித்துப் பேசும் காட்சிகளும் உண்டு (முதிய ஸ்பாக்காக நடித்தவர், முதல் ஸீரீஸில் ஸ்பாக்காக நடித்த லியனார்ட் நிமாய்). ஸைன்ஸ் ஃபிக்‌ஷன் ரசிகர்கள் தவறவே விடக்கூடாத படம் இது.

இந்தப் படத்துக்குப் பிறகு நடக்கும் கதையே Star Trek Into Darkness.

முதல் பகுதி அட்டகாசமாக இருந்ததால், அதை நம்பி ஆவலோடு சென்ற எனக்கு இந்த இரண்டாவது பாகம் முழுத்திருப்தி அளிக்கவில்லை. பழைய ஸ்டார் ட்ரெக் படங்களின் வாசனை கொஞ்சம் அடித்தது. இதில் வில்லனாக நடித்திருப்பவர், நமது ‘ஷெர்லக்’ - பெனடிக்ட் கம்பர்பேட்ச் (Benedict Cumberbatch). இந்த வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் – ’கான்’ (Khan). தொலைக்காட்சித் தொடரிலும், பின்னர் திரைப்படங்களிலும் இந்த ஸீரீஸின் தலையாய வில்லனாக இடம்பெற்ற கதாபாத்திரம் இது. இந்த கான் யார்? ஏன் வில்லனானான்? போன்ற கேள்விகளுக்கு இந்தப் படத்தில் விடை இருக்கிறது.

சைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்களுக்கே உரிய டெம்ப்ளேட்டில் கொஞ்சம் அலுப்பாகவே சென்ற இந்தப் படத்துக்கு நான் பரிந்துரைக்கும் மார்க்- 6/10. பெரிதாக எதுவும் இல்லை. ஆங்காங்கே சுவாரஸ்யம் தவறிவிடுகிறது. முதலில் வெளிவந்த பத்து படங்களில் பல படங்கள் அரத மொக்கைகள். இந்தப் படம் அந்த அளவு மொக்கை இல்லை என்றாலும், கிட்டத்தட்ட அதற்கு அஸ்திவாரம் இட்டுவிட்டது. இனிவரும் மூன்றாம் பாகம் செம கடி போடப்போகிறது என்று நினைக்கிறேன்.

பி.கு

1. இரண்டே பத்திகளில் முடிக்கவேண்டிய விஷயத்தை இவ்வளவு பெரிதாக எழுதியதன் நோக்கம் – எனக்குப் பிடித்த டிவி ஸீரீஸை கொஞ்சம் அறிமுகப்படுத்தலாமே என்பதே :-)

2. சூது கவ்வும் படத்தின் விமர்சனம் நாளை இரவு எழுதுவேன்.


The post Star Trek Into Darkness (2013) – 3D – English appeared first on Karundhel.

]]>
http://karundhel.com/2013/05/star-trek-into-darkness-2013-3d-english.html/feed 7
மொத்தக் கதைகள் 36 – 4 http://karundhel.com/2013/05/36-dramatic-situations-4.html http://karundhel.com/2013/05/36-dramatic-situations-4.html#comments Thu, 02 May 2013 17:45:59 +0000 Rajesh Da Scorp http://karundhel.com/?p=3782 இதுவரை எழுதப்பட்ட நான்கு கட்டுரைகளை இங்கே படிக்கலாம். இது ஐந்தாவது கட்டுரை. மொத்தக் கதைகள் 36 மொத்தக் கதைகள் 36 – 1 மொத்தக் கதைகள் 36 – 2 மொத்தக் கதைகள் 36 – 3 Situation 16: Madness – வெறித்தனம் தேவையான கதாபாத்திரங்கள்: கதாபாத்திரம் 1 – பித்துப் பிடித்த நபர் (அல்லது) கோபத்தின் உச்சமான வெறியில் இருப்பவர் கதாபாத்திரம் 2 – முதல் கதாபாத்திரத்தால் பாதிக்கப்படும் நபர். வாழ்வின் சில கோரமான [...]

The post மொத்தக் கதைகள் 36 – 4 appeared first on Karundhel.

]]>
இதுவரை எழுதப்பட்ட நான்கு கட்டுரைகளை இங்கே படிக்கலாம். இது ஐந்தாவது கட்டுரை.

மொத்தக் கதைகள் 36
மொத்தக் கதைகள் 36 – 1
மொத்தக் கதைகள் 36 – 2
மொத்தக் கதைகள் 36 – 3

Situation 16: Madness – வெறித்தனம்

தேவையான கதாபாத்திரங்கள்:

கதாபாத்திரம் 1 – பித்துப் பிடித்த நபர் (அல்லது) கோபத்தின் உச்சமான வெறியில் இருப்பவர்
கதாபாத்திரம் 2 – முதல் கதாபாத்திரத்தால் பாதிக்கப்படும் நபர்.

வாழ்வின் சில கோரமான தருணங்களில், மிகவும் சாதுவாக இருக்கும் ஒரு நபர் கொடிய வெறிச்செயல் ஒன்றைப் புரிவதைப் பற்றிப் பலமுறை படித்திருக்கிறோம். அப்படிப்பட்ட வெறிதான் இந்த சிச்சுவேஷன். நாமேகூட பலமுறை நமக்கு நெருங்கியவர்களிடம் இப்படி நடந்துகொண்டிருப்போம் (செயலில் அல்ல. அட்லீஸ்ட் பேச்சில்). இப்படிப்பட்ட உச்சபட்ச வெறித்தனத்தின் பல வெளிப்பாடுகள் இதோ.

1.
A. உறவினர்கள் வெறித்தனத்தால் கொல்லப்படுதல். இதைச்செய்பவருக்கு அவர்கள் உறவாக இருக்கவேண்டும்.
B. காதலனோ காதலியோ, காதலி அல்லது காதலனின் வெறியால் கொல்லப்படுதல்
C. வெறித்தனத்தால், இதுவரை வெறுக்கப்படாத நபர் ஒருவரைக் கொல்லுதல் (அல்லது) காயப்படுத்துதல். வெறி கிளம்பும்போது சிலமுறை நமக்குப் பிடித்த நபர்களை நாம் காயப்படுத்துவது உண்டு. அப்படிப்பட்டது இது.

2. கோபவெறியால் தனக்குத்தானே அவப்பெயரை உண்டுசெய்துகொள்ளல்
3. நம்மால் அன்புசெலுத்தப்பட்டவர்களை இப்படிப்பட்ட வெறியால் இழத்தல் (இங்குதான் காளிதாஸரின் சாகுந்தலம் உதாரணமாக வருகிறது. துஷ்யந்தன் அம்னீஷியாவால் பாதிக்கப்பட்டு சாகுந்தலையை தெரியவே தெரியாது என்று கோபமாக மறுத்தல்).
4. வம்சாவழியின் மரபுவழியாக வரும் பித்துநிலையைப் பற்றிய பயத்தாலேயே வெறியடைதல்

இந்த நான்கு வகைகளில் ’வெறி’ என்ற வார்த்தையால் குறிக்கப்படுவது பைத்தியமாகவும் இருக்கலாம். மனநோய்கள், உளவியல் பிரச்னைகள் போன்றவையும் இந்த வகைகளில் அடங்கும். திடீரென உள்ளிருந்து கிளம்பும் கோபம், சில நேரங்களில் மனநோயாக இருக்க வாய்ப்பு உண்டு.

Situation 17: Fatal Imprudence – உயிராபத்தான மதியீனம்

மதியீனம் என்பது எப்போதாவது எல்லாருக்கும் நேர்வது. வரப்போகும் சூழ்நிலையின் முக்கியத்துவம் தெரியாமல் மதியிழந்து அவசர முடிவு எடுத்து அதனால் பாதிக்கப்படுவதே இந்த சிச்சுவேஷன். பாதிக்கப்படுதல் என்பது, மரணமாகக்கூட இருக்கலாம். அதேபோல் இந்த பாதிப்பு பல விதங்களில் முடியலாம். இந்த சிச்சுவேஷன் மூன்றுவகைப்படும்.

1.
A. மதியீனத்தால் தனக்குத்தானே கேடு விளைவித்துக்கொள்வது (அல்லது) துரதிருஷ்டம் அடைவது
B. மதியீனத்தால் தனக்குத்தானே அவப்பெயரை வரவழைத்துக்கொள்ளல்

2.
A. அதீதமான ஆர்வத்தால் (curiosity) தனக்குத்தானே கேடு விளைவித்துக்கொள்ளல்
B. அதீதமான ஆர்வத்தால் தனக்கு விருப்பமான நபர்களை இழத்தல்

3.
A. தனது அதீதமான ஆர்வத்தால் பிறருக்குக் கெடுதலோ மரணமோ நேருதல்
B. தனது மதியீனத்தால் உறவினருடைய மரணம் நிகழ்தல்
C. தனது மதியீனத்தால் காதலன் அல்லது காதலியின் மரணம் நிகழ்ந்துவிடுதல்
D. தனது இளிச்சவாய்த்தனத்தால் (அல்லது) ஏமாளித்தனத்தால் உறவினர்களின் மரணம் நிகழ்தல்

பொதுவாக imprudence என்னும் மதியீனம் எதனால் நிகழ்கிறது என்று பார்த்தால், ஒன்று – அதீதமான ஆர்வம் அல்லது ஏமாளித்தனம் என்ற இரண்டு சிச்சுவேஷன்கள் நமது மனதில் வராமல் போகாது. எதாவது விஷயத்தில் மூக்கை நுழைக்கும் ஆர்வம் இருந்தால், முன்யோசனை அங்கு இல்லாமல் போய்விடும். அதனால் ஆபத்து (தனக்கோ பிறருக்கோ) நேரலாம். அல்லது, ஏமாளியாக இருந்துவிட்டால், பிறரைப்பற்றிய சிந்தனை இல்லாமல் போய், அதனால் ஆபத்து நேரலாம். (’விக்ரம்’(1986) படத்தில், அந்நிய நாட்டு உளவாளியான ராகவேந்தரைத் தேடி கமல் வருவார். ஆனால் ஆபத்தை உணராத அவரது ஏமாளி மனைவியோ, ராகவேந்தர் வீட்டில் இல்லை என்று கமலிடம் வழிவார். அது ராகவேந்தர் கமலிடம் பிடிபட்டு கண்டபடி சித்ரவதை செய்யப்பட்டு, இறுதியில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வதில் முடியும். இது, தன்னுடைய ஏமாளித்தனத்தால் கணவனின் மரணம் நிகழ்தல் என்ற 3C சிச்சுவேஷனுக்கு உதாரணம்).

இப்படி அதீத ஆர்வம் & ஏமாளித்தனம் என்பன பிரதான விஷயங்களாக இருக்க, பொறாமை, மனிதனின் தேவைகளான தூக்கம், பசி, மோகம், காமம், பகட்டு போன்றவையும் சிலசமயங்கள் மதியீனத்தை நோக்கி கதாபாத்திரங்களை இழுத்துச் செல்கின்றன. இது போன்ற தேவைகளின் மீதான ஆசை அதிகமாகும்போது (அல்லது) இவற்றுக்கான தேவைகள் மனதை அலைக்கழிக்கும்போது, மதியீனம் ஏற்படுகிறது.

Situation 18: Involuntary Crimes of Love – காதலால் நிகழும் தற்செயலான குற்றங்கள்

ஒரு பெண்ணை ஒருவன் காதலிக்கிறான். மணந்துகொள்கிறான். ஆனால் அதன்பின்னர்தான், அந்தப்பெண் உறவுமுறையில் அவனுக்கு சகோதரி முறை என்று தெரிகிறது. அப்போது மணந்தவனின் மனநிலை எப்படி இருக்கும்? இதுபோன்ற உறவுமுறை சிக்கல்கள், பொதுவாக போல்டியின் காலத்தில் இரண்டுவகையில் நாடகங்களைப் பார்க்கும் ஆடியன்ஸுக்கு வெளிப்படுத்தப்பட்டன. ஒன்று – குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு உண்மை தெரியும் அதே நேரத்தில்தான் ஆடியன்ஸுக்கும் அது தெரியவரும். இதனால் கதையின் ஒரே கோணமே மேடையிலும் ஆடியன்ஸின் மனதிலும் ஓடும். இரண்டாவது வகை கொஞ்சம் சுவாரஸ்யமானது. ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் உள்ள இந்த உறவு சிக்கல் யாரேனும் ஒரு நபருக்குத் தெரிந்துவிடுகிறது. ஆனால் அந்த நபர் தனது சுய லாபத்துக்காக அதனைப் பயன்படுத்திக் கொள்கிறான். ஆகவே, இந்த சிக்கல் ஆடியன்ஸுக்கு முதலிலேயே தெரிந்துவிடுகிறது. பதைபதைக்கும் மனதுடன், பொறியை நோக்கி செல்லும் அந்த ஹீரோவையும் ஹீரோயினையும் பார்த்து பதைபதைப்பார்கள் ஆடியன்ஸ். இந்த இரண்டாவது வகைதான் ஹிட்ச்காக்கின் அத்தனை படங்களிலும் இருக்கும். அதாவது, உண்மையை ஆடியன்ஸுக்கு முதலில் சொல்லிவிடுதல். ஆனால் கதாபாத்திரங்களுக்கு அது தெரியாது. இதனால் பல சஸ்பென்ஸ் தருணங்களை உருவாக்க முடியும். ஹிட்ச்காக் இதனை கச்சிதமாக உபயோகப்படுத்திக்கொண்டவர்.

இந்த சிச்சுவேஷனுக்குத் தேவையான கதாபாத்திரங்கள் மூன்று.

கதாபாத்திரம் 1 & 2: காதலில் விழும் ஜோடி.
கதாபாத்திரம் 3: உண்மையை வெளிப்படுத்துபவர்

இந்த சிச்சுவேஷன் மொத்தம் நான்கு வகை.

1.
A. தனது தாயை திருமணம் செய்துகொண்டுவிட்டோம் என்ற உண்மை புரிதல் (இதெல்லாம் கிரேக்க நாடகங்களில் சாதாரணம். ’ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் (Oedipus complex)’ என்ற பிரபலமான வார்த்தை பலருக்குத் தெரிந்திருக்கலாம். இதை உருவாக்கியவர் ஸிக்மண்ட் ஃப்ராய்ட். தனது தாயை ஒரு ஆண்பிள்ளை நேசிப்பது. இதற்கு எதிர்வெட்டாக கார்ல் கஸ்டாவ் ஜங் (Carl Gustav Jung) உருவாக்கிய வார்த்தை Electra complex. தந்தையின் அன்பைப் பெறுவதற்கான முயற்சியில் தாயை முந்திக்கொள்ளவேண்டும் என்று ஒரு பெண் குழந்தை நினைப்பதே இது. சிறுகச்சிறுக தந்தையின்மீது ஒரு ஈர்ப்பு ஏடுபட்டு, சில பெண்கள் தந்தையை மானசீகமாக காதலிக்கவே ஆரம்பித்துவிடுவது).

B. தனது காதலி, உண்மையில் தனக்கு சகோதரி முறை என்பதை தற்செயலாக ஹீரோ தெரிந்துகொள்வது

2.
A. தனது சகோதரியைத்தான் திருமணம் செய்துகொண்டிருக்கிறோம் என்பதை ஹீரோ தெரிந்துகொள்வது
B. ஹீரோ அவனது சகோதரியைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று யாரேனும் சதித்திட்டம் தீட்டி, அதனை நிறைவேற்றுவது (சகோதரி என்பது சகோதரி முறையாகக்கூட இருக்கலாம். அல்லது தொலைந்துபோன சகோதரி- பல வருடங்கள் கழித்து அவளை சந்திக்கும் ஹீரோ காதல்வசப்பட்டு மணந்துகொள்வது – அதன்பின் உண்மை தெரிவது என்றும் இருக்கலாம்).
C. சகோதரன், அவனது சகோதரியை காதலிக்க முனைவது (அதாவது, இன்னும் காதலிக்கவில்லை. ஆனால் அதற்கான விருப்பம் இருக்கிறது. உண்மையைத் தெரிந்துகொண்ட யாரேனும் இதைப்பற்றி ஹீரோவிடம் சொல்லாமல் இருக்கலாம்).

3.தனது மகள் என்பது தெரியாமல் காதலிக்கவோ அல்லது மணம் புரியவோ நினைத்தல்

4.
A. உறவுமுறையில் இருக்கும் பிரச்னை தெரியாமல், திருமணத்துக்கு மீறிய உறவில் ஈடுபட நினைப்பது (அதாவது அடல்ட்ரியில் ஈடுபட முனைவது. சகோதரி அல்லது மகளுடன். இந்த உறவுமுறை ஹீரோவுக்குத் தெரிவதில்லை)
B. உறவுமுறையில் இருக்கும் பிரச்னை தெரியாமல் திருமணத்துக்கு மீறிய உறவில் ஈடுபட்டே விடுவது

Situation 19: Slaying of a kinsman unrecognized – யாரென்றே தெரியாமல் ஒரு உறவினரைக் கொன்றுவிடுவது

ஒரு நபரை இன்னொரு நபர் கொன்றுவிடுகிறார். ஆனால் கொன்ரபின்னர்தான் அவர் இவரது நெருங்கிய உறவினர் (அல்லது) ரத்த சம்மந்தம் உள்ளவர் என்பது புரிகிறது. அந்த சூழ்நிலை எத்தகைய சோகத்தைக் கொண்டுவரும் என்பது நன்றாகப் புரிகிறதல்லவா?

இதற்குத் தேவைப்படும் கதாபாத்திரங்கள் இரண்டு.

கதாபாத்திரம் 1: கொலை செய்பவர்
கதாபாத்திரம் 2: அடையாளம் தெரியாமல் முதல் கதாபாத்திரத்தால் பாதிக்கப்படும் நபர்

இந்த சிச்சுவேஷன் ஏழு வகைப்படுகிறது.

1.
A. யாரேனும் ஆரூடம் சொல்லியதால் (அல்லது) தெய்வீக ஆணையால், மகளை தெரியாமல் கொலைசெய்யப்போகும் தருணம்வரை வந்துவிட்ட தந்தை. (தந்தைக்கு, அவர் கொல்லப்போவது தனது மகள் என்றே தெரியாமல் இருப்பது).

அசரீரி சொல்லிய வார்த்தைகளை தவறாகப் புரிந்துகொண்டு மகளைக் கொல்லச் சென்ற தந்தையைப்பற்றி இங்கே இருக்கிறது. கிரேக்க நூல் ஒன்று (Demaphon). நம்மூரில்கூட யாரேனும் போலி சாமியார் அல்லது பூசாரி சொன்னதால் பெற்ற மகளை நரபலி கொடுக்க எத்தனித்தவர்களைப் பற்றிப் படிக்கிறோம் அல்லவா?

B. அரசியல் நெருக்கடியால் மகளைத் தெரியாமல் கொலைசெய்ய எத்தனிக்கும் தந்தை
C. காதலில் நேரும் விரோதத்தால் மகளைத் தெரியாமல் கொலைசெய்ய எத்தனிக்கும் தந்தை
D. தனது மகள் என்று தெரியாமல் இருக்கும் பெண்ணின் காதலன் தன்மீது கொண்ட வெறுப்பினால் அந்தப் பெண்ணைக் கொல்ல எத்தனிக்கும் தந்தை

2.
A. மகன் என்று தெரியாமல் அவனைக் கொல்ல எத்தனிக்கும் தந்தை. இதன் உட்பிரிவு, மகன் என்று தெரியாமல் அவனைக் கொன்றே விட்ட தந்தை.
B. மேலே பார்த்த அதே சிச்சுவேஷன். ஆனால் இங்கே மகனைக் கொல்ல நினைப்பது (அல்லது) கொன்றுவிட்டது ஏனெனில், சுயநலம் மற்றும் சூது ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதே. அதாவது, தந்தை இங்கே நிஜமான வில்லன்.
C. இது, மேலே பார்த்த Bயுடன், உறவினர்களின்மேல் தீராத வெறுப்பும் சேர்ந்துகொள்ளல். உதாரணம்: தாத்தாவுக்குப் பேரன் மேல் இருக்கும் வெறுப்பு

3. சகோதரனை யாரென்று தெரியாமல் கொல்ல எத்தனிப்பது. அதேபோல் ஒரு சகோதரி தனது சகோதரன் அல்லது சகோதரியை, பணி நிமித்தமாக கொல்வது.

4. தாயை யாரென்று தெரியாமல் கொன்றுவிடுவது.
5. சூது, கபடம் ஆகியவற்றால் மனது திசைதிருப்பப்பட்டு, தந்தையை அடையாளம் தெரியாமல் கொன்றுவிடுதல். அதேபோல், எந்தக் கபடமும் இன்றி, வெறுமனே தந்தையை யாரென்றே தெரியாமல் கொல்லுதல். போலவே தந்தையை அடையாளம் தெரியாமல் கொல்ல எத்தனித்தல். அதேபோல் தந்தையை அடையாளம் தெரியாமல் அவமானப்படுத்துதல்.

6.
A. பழிவாங்கும் வெறியின்கீழ் தாத்தாவை அடையாளம் தெரியாமல் கொல்லுதல். இந்தக் கொலைக்குக் காரணம் பிறரது தூண்டுதலாக இருக்கும்.
B. எந்தத் தூண்டுதலும் இல்லாமல், தாத்தாவை அடையாளம் தெரியாமல் கொல்லுதல்
C. மனைவியின் தந்தையை எவரது தூண்டுதலும் இல்லாமல் தானாகவே (அடையாளம் தெரியாமல்) கொல்லுதல்

7.
A. காதலுக்குரிய ஒரு பெண்ணை அனிச்சையாகக் கொல்லுதல்
B. காதலுக்குரிய பெண்ணையோ ஆணையோ அடையாளம் தெரியாமல் கொல்ல முனைதல்
C. அடையாளம் தெரியாத மகனைக் காப்பாற்றுதலில் தோல்வி

இந்த பத்தொன்பதாம் சிச்சுவேஷனின் இறுதியில் இருக்கும் துணுக்குச்செய்தி என்னவெனில், ஷேக்ஸ்பியர் இந்த சிச்சுவேஷனை அவரது ஒரு நாடகத்தில் கூட பயன்படுத்தவில்லை என்பதே.

Situation 21: Self Sacrificing for an ideal – குறிக்கோளுக்காக தியாகம் செய்தல் (அல்லது) உயிர்துறத்தல்

நமது அரசியல் தலைவர்கள் அடிக்கடி இந்தப் பதத்தை உபயோகப்படுத்துவதைக் காணலாம். ஆனால் அவர்களின் பேச்சால் தூண்டப்பட்டு தற்கொலை செய்துகொள்வது, அவர்களது தொண்டர்கள் மட்டுமே. தலைவர்கள் ஜாலியாகப் பேசிவிட்டு பங்களாவில் ஓய்வெடுப்பதைக் காணலாம்.

ஏதேனும் ஒரு குறிக்கோளுக்காக உயிரைத் துறத்தல் என்பது சரித்திர காலத்தில் ஒரு மாண்பாகக் கருதப்பட்டது. அத்தகைய சிச்சுவேஷனான இதில் தேவையான கதாபாத்திரங்கள் இரண்டு.

கதாபாத்திரம் 1: ஹீரோ
கதாபாத்திரம் 2: ஹீரோ உயிர்துறக்கும் குறிக்கோள். இது ஒரு மனிதனாகவோ ஒரு பொருளாகவோ இருக்கலாம்.

இந்த சிச்சுவேஷன் நான்கு வகைப்படும்.

1. A. தான் சொன்ன வார்த்தை (அல்லது) கொடுத்த வாக்குக்காக உயிர்துறத்தல்
B. தனது மக்களின் வெற்றிக்காக உயிர்துறத்தல்
C. தனது பெற்றோருக்காகவோ அல்லது மூதாதையர்களுக்காகவோ உயிர்துறத்தல்
D. தனது மதத்துக்காக (அல்லது) தனது கண்டுபிடிப்பு, கொள்கை போன்றவற்றுக்காக உயிர்துறத்தல் (கலிலியோ ஒரு உதாரணம்). அதேபோல் தனது மன்னனுக்காக உயிர்துறத்தல்

2. A. அன்பு, காதல் போன்றவையும், அதன்பின்னர் உயிரும், மதத்துக்காக (அல்லது) தனது கண்டுபிடிப்பு, கொள்கை போன்றவற்றுக்காக துறத்தல்
B. அன்பு, காதல் போன்றவையும், அதன்பின்னர் உயிரும், ஒரு லட்சியத்துக்காக துறத்தல்
C. தனது நாட்டுக்காக காதலைத் துறத்தல்

3. வாழ்க்கை வசதிகளை, கடமைக்காக துறத்தல்
4. மரியாதை, மதிப்பு, புகழ் போன்றவைகளை தனது நம்பிக்கை (அல்லது) மதம் (அல்லது) கொள்கை போன்றவற்றுக்காக தியாகம் செய்தல்

(தொடரும்)…

The post மொத்தக் கதைகள் 36 – 4 appeared first on Karundhel.

]]>
http://karundhel.com/2013/05/36-dramatic-situations-4.html/feed 4
Iron man 3 (2013) – 3D – English http://karundhel.com/2013/04/iron-man-3-2013-english.html http://karundhel.com/2013/04/iron-man-3-2013-english.html#comments Sun, 28 Apr 2013 18:12:39 +0000 Rajesh Da Scorp http://karundhel.com/?p=3821 சென்ற வருடம் அவெஞ்சர்ஸ் படத்தைப்பற்றி விரிவாக அலசினோம். அந்த அவெஞ்சர்ஸில் இன்றியமையாத ஒரு கதாபாத்திரமான அய(ர்)ன்மேன் என்கிற டோனி ஸ்டார்க் பற்றியும் அந்தக் கட்டுரைகளில் விரிவாகப் பார்த்தோம். இருந்தாலும், இதோ இந்த இணைப்பை க்ளிக் செய்து அந்த தொடர் கட்டுரைகளைப் படிக்கலாம். The Avengers – a short series in karundhel.com ஏற்கெனவே இரண்டு பாகங்கள் வெளிவந்துவிட்ட இந்த Iron Man ஸீரிஸில் இப்போது மூன்றாவது பாகம். ஓகே. இந்தப் படத்தில் இரும்புக் கவசங்கள், வெறிபிடித்த [...]

The post Iron man 3 (2013) – 3D – English appeared first on Karundhel.

]]>
சென்ற வருடம் அவெஞ்சர்ஸ் படத்தைப்பற்றி விரிவாக அலசினோம். அந்த அவெஞ்சர்ஸில் இன்றியமையாத ஒரு கதாபாத்திரமான அய(ர்)ன்மேன் என்கிற டோனி ஸ்டார்க் பற்றியும் அந்தக் கட்டுரைகளில் விரிவாகப் பார்த்தோம். இருந்தாலும், இதோ இந்த இணைப்பை க்ளிக் செய்து அந்த தொடர் கட்டுரைகளைப் படிக்கலாம்.

The Avengers – a short series in karundhel.com

ஏற்கெனவே இரண்டு பாகங்கள் வெளிவந்துவிட்ட இந்த Iron Man ஸீரிஸில் இப்போது மூன்றாவது பாகம். ஓகே. இந்தப் படத்தில் இரும்புக் கவசங்கள், வெறிபிடித்த வில்லன், ஹீரோவின் காதலி, டமால் டுமீல் குண்டுகள், ஹீரோ பேசும் பகடிமிக்க வஜனங்கள், லாஜிக் இல்லாத சண்டைக்காட்சிகள், ஹீரோவுக்கு உதவும் சின்னஞ்சிறு பையன் போன்றவை இருக்கின்றன. இந்த வரிசையை அப்படியே பல ஹாலிவுட் படங்களில் பார்க்கலாம். இருந்தாலும், Iron Man ரசிகர்களை இந்தப் படம் கவருமா?

உண்மையை சொல்லப்போனால், Iron Man 2 படமே கொஞ்சம் தள்ளாட்டமாகத்தான் இருந்தது. முதல் பகுதி உருவாக்கிய பிரம்மாண்டமான வெற்றியை இரண்டாவது பாகம் தக்கவைத்துக்கொண்டது ஆச்சரியம்தான். முதல் பாகத்தின் புகழே காரணம். அதனாலேயே மக்கள் வெள்ளம் இரண்டாவது பாகத்தையும் ஓடவைத்தது. அதுதான் இந்தப் பாகத்துக்கும் நடக்கப்போகிறது.

பொதுவில், ஹாலிவுட் படங்களை எடுத்துக்கொண்டால், மூன்றாவது பாகம் என்று எடுக்கப்பட்ட முக்கால்வாசிப் படங்கள் சுவாரஸ்யமாக இருந்ததில்லை என்பது தெரியும். Jurassic Park 3, Austin Powers in Goldmember, Lethal Weapon 3 (இந்த சீரீஸ் நான்கு பாகங்கள். இதன் அட்டகாசமான முதல் பாகம்தான் தமிழில் சூரசம்ஹாரம் என்ற பெயரில் கொத்துபரோட்டா செய்யப்பட்டது. இன்னொரு குறிப்பிடத்தகுந்த விஷயம், இந்த லீதல் வெபன் படத்திற்கு திரைக்கதை எழுதிய Shane Black தான் Iron Man 3 படத்தை இயக்கியிருக்கிறார்), The Dark Knight Rises, Beverly Hills Cop 3, Blade : Trinity, The Matrix Revolutions, The Mummy : Tomb of the Dragon Emperor (அரத மொக்கை), Ocean’s 13, Rush Hour 3, Spider-Man 3, Transformers: Dark of the Moon, Underworld 3: Rise of the Lycans, Resident Evil: Extinction போன்றவை என் மனதுக்குத் தோன்றிய மூன்றாம் பாக மொக்கைகள். இவைகளில், அத்தனை பாகங்களும் கொடுமையாக எடுக்கப்பட்ட Twilight படங்களை சேர்க்கவில்லை.

எனக்குத் தெரிந்து மூன்றாம் பாகம் அட்டகாசமாக இருந்தது Return of the King மட்டுமே. அதற்குக் காரணம் லார்ட் ஆஃப் த ரிங்ஸ் என்பது ஒரு நாவல். அது மூன்று பாகங்களாக எழுதப்பட்டதால் அவைகள் மூன்று படங்களாக எடுக்கப்பட்டன. இதற்கு அடுத்ததாக Star Wars Episode VI: Return of the Jedi. அதேபோல், மூன்றாம் பாகம் கொஞ்சம் பரவாயில்லை என்றால் Back to the Future 3, The Godfather 3, Men in Black 3, Naked Gun 331/3: The Final Insult (இது வேண்டுமென்றே எடுக்கப்பட்ட படம்), Toy Story 3, Pirates of the Caribbean: At world’s End போன்ற படங்கள்.

பொதுவாக, மூன்றாம் பாகம் என்பது பணத்தை மட்டுமே மனதில் வைத்துத்தான் எடுக்கப்படுகிறது. மிகச்சில விதிவிலக்குகளாக ரிடர்ன் ஆஃப் த கிங் மற்றும் ரிடர்ன் ஆஃப் த ஜெடாய் படங்களை சொல்லலாம் (ஆச்சரியகரமாக, இரண்டு படங்களுமே ‘Return of the’ என்றே தொடங்குகின்றன). இந்த இரண்டு படங்களை எடுத்த பீட்டர் ஜாக்ஸன் மற்றும் ஜார்ஜ் லூகாஸ் ஆகியவர்கள், எப்போதாவது மட்டுமே தோன்றக்கூடிய visionary என்று சொல்லக்கூடிய இயக்குநர்கள். இந்த இரண்டு படங்களை இன்னும் பலப்பல ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் அலுக்காது. மேலே உள்ள லிஸ்ட்டில் உள்ள மொக்கையான மூன்றாம் பாகங்களை எடுத்தவர்களை கவனித்தால் ஒன்று தெரியும். ஸாம் ரெய்மி (ஸ்பைடர்மேன் 3) மற்றும் க்ரிஸ்டோஃபர் நோலன் (த டார்க் நைட் ரைஸஸ்) ஆகியவர்களுமே இந்த பணத்துக்கான போட்டியில் தலைகுப்புற விழுந்து மண்ணைக் கவ்வியவர்கள்தான் (இந்த இரண்டு படங்களும் நன்றாக ஓடினாலும், இந்த இயக்குநர்களின் ரசிகர்களை அவர்களால் திருப்திப்படுத்த இயலவில்லை. ரசிகர்கள் இவர்களது பணம் பண்ணும் முயற்சியை இனம்கண்டுகொண்டார்கள்). இங்குதான் சிறந்த இயக்குநருக்கும் நல்ல இயக்குநருக்குமான வித்தியாசம் புரிபடுகிறது. பீட்டர் ஜாக்ஸன் & ஜார்ஜ் லூகாஸ் ஆகியவர்கள் சிறந்த இயக்குநர்கள் என்பதும் தெரிகிறது (ஜார்ஜ் லூகாஸ் சும்மா இருக்காமல், மேலும் மூன்று ஸ்டார் வார்ஸ் படங்களை எடுத்து வெளியிட்டார். ஆனால் அவைகள் மொக்கைகள் அல்ல. அதேபோல் பீட்டர் ஜாக்ஸன் இப்போது ஹாபிட் படங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார். இதுவரையில் வெளிவந்திருக்கும் ஹாபிட் படத்தின் முதல் பாகம் நன்றாகவே இருக்கிறது. திடீரென ஹாபிட் படங்களை இரண்டிலிருந்து மூன்றாக ஜாக்ஸன் அறிவித்ததும், எனக்கு இவரும் பணத்துக்கு விலைபோய்விட்டாரோ என்று தோன்றியது. ஆனால் மூன்றாம் பாகத்தில் லார்ட் ஆஃப் த ரிங்ஸ் கதைகளுக்கும் ஹாபிட்டின் முடிவுக்குமான பல தொடர்புகள் விளக்கப்படும் என்று ஜாக்ஸன் சொல்லியிருக்கிறார். இவைகள் லார்ட் ஆஃப் த ரிங்ஸ் புத்தகத்தின் அப்பெண்டிக்ஸ்களில் உள்ளன. பொறுத்திருந்து பார்ப்போம். இதிலும் பீட்டர் ஜாக்ஸனுக்கும் ஜார்ஜ் லூகாஸுக்கும் உள்ள ஒற்றுமை தெரிகிறது. ஒரே கதையின் ஆறு பாகங்களை எடுத்தவர்கள் இந்த இருவரும் என்பது ஜாக்ஸன் ஹாபிட்டின் மூன்றாம் பாகத்தை வெளியிட்டதும் உலகெங்கும் பரவப்போகும் செய்தி. ஜாக்ஸனுக்கு லார்ட் ஆஃப் த ரிங்ஸ். லூகாஸுக்கு ஸ்டார் வார்ஸ். இதிலும் உள்ள ஒற்றுமை புரிகிறதல்லவா? எப்படி ஸ்டார் வார்ஸ் படங்கள் முதலில் வெளிவந்து, அதன்பின் அவற்றின் முன்கதைகள் மூன்று படங்களில் பின்னர் வெளிவந்தனவோ அதேபோல் முதலில் லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்கள் வெளிவந்து, அதன்பின் அவற்றின் முன்கதையான ஹாபிட் படங்கள் வரப்போகின்றன).

இப்படிப்பட்ட மூன்றாம் பாகங்களின் நீண்ட வரலாறு ஏனெனில், தற்போது வெளிவந்திருக்கும் Iron Man 3 படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கத்தான். இதுவரை படித்துவந்த நண்பர்களுக்கு, படம் எப்படி என்று புரிந்திருக்கும். முதல் பாகம் அட்டகாசம் என்றால், மூன்றாம் பாகம் படுமோசம். இந்த ரீதியிலான ஆக்‌ஷன் படங்களின் மேலே சொன்ன டெம்ப்ளேட்டிலேயே இந்தப் படம் எடுக்கப்பட்டு, இனிமேல் Iron Man என்ற பெயரில் எதாவது படம் வெளிவந்தால் குதிகால் பிடறியில் தெறிக்க கண்களை மூடிக்கொண்டு வெறித்தனமாக திரையரங்குக்கு எதிர்த்திசையில் ஓடிவிடவேண்டும் என்ற எண்ணத்தையே இப்படம் ஏற்படுத்துகிறது.

இதில் நடித்திருக்கும் ராபர்ட் டௌனி ஜூனியர், முதல் பாகத்தில் இருந்த சுறுசுறுப்பை இழந்து, எப்போதடா படப்பிடிப்பு முடியும் என்று எண்ணிக்கொண்டு தினமும் மூன்று லார்ஜ்கள் அடித்துவிட்டு இரவு முழுக்க யோசித்தவர் போலவே காணப்படுகிறார். அவரது காதலியாக வரும் க்வைனத் பால்ட்ரோ, ராபர்டை விடவும் வயதான பெண்மணி போலவே இருந்து, மருந்துக்குக் கூட ஆடியன்ஸின் மனதில் எந்த உணர்ச்சியையும் தூண்டாமல் இருக்கிறார் (வெய்ட். எந்த உணர்ச்சியையும் என்பது தவறு. எரிச்சல் என்ற உணர்ச்சி அதிகம் மேலிடுகிறது). வில்லனாக நடித்திருப்பதோ ஹாலிவுட்டின் முதுகிழடுகளில் ஒருவரான பென் கிங்ஸ்லி. கேட்க வெண்டுமா? பிள்ளையில்லாத வீட்டில் கிழவர்கள் ‘துள்ளி’ விளையாடிய கதை என்பது இதுதான்.

இதில், படத்தில் ட்விஸ்ட் போன்ற ஒரு வஸ்து, தடவு தடவு என்று தடவிக்கொண்டிருக்கும்போது கண்களில் லேசாக அகப்படுகிறது. படத்தின் வில்லன் கை பியர்ஸ் (Guy Pearce), மெமெண்டோவில் நடித்த நடிகர். ஆனால் இந்தப்படத்தில், முகமூடியில் நட்டு கழண்ட காமெடி வில்லன் நரேனைப் போலவே கனகச்சிதமாக அதே நடிப்பை நல்கி, வெடிச்சிரிப்பை வரவழைக்கிறார் (முகமூடியைப் போலவே இந்தப் படத்தின் க்ளைமேக்ஸும் ஹார்பரில் எடுக்கப்பட்டிருக்கிறது. மிஷ்கின் கவனிக்க. காப்பி உஷார்). அப்படியென்றால் பென் கிங்ஸ்லி? அவர் நடித்ததிலேயே இதுதான் பயங்கர காமெடி வேடம். மனிதரை கூப்பிட்டு அனுப்பி அவமானப்படுத்திவிட்டார்கள் என்பது தெரிகிறது.

இந்தப் படத்தில் ரசிக்கும்படியாக எதுவும் இல்லையா?

Absolutely not. ரசிக்கும்படியான ஒரே காட்சி, இந்தப் படத்தின் டைட்டில்கள் ஓடிமுடித்தபின் வழக்கமாக அவஞ்சர்ஸ் கதாபாத்திரங்கள் நடிக்கும் படங்களில் வருவதுபோலவே (Post-credits) இதிலும் வருகிறது. அந்தக் காட்சி மொத்தம் ஒரே நிமிடம் ஓடுகிறது. அவ்வளவே. அதைப் பார்ப்பதற்காகவே ஐநாக்ஸில் அமர்ந்துகொண்டிருந்தவர்கள், என்னையும் சேர்த்து ஐந்து பேர். படம் ஹௌஸ்ஃபுல். இருந்தாலும் அத்தனை கூட்டமும் டைட்டில்கள் ஆரம்பித்தவுடன் எஸ்கேப்.

எனவே, இந்தப் படத்துக்கு ஏதேனும் எதிர்பார்ப்பு என்று மனதின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஃபீலிங்கோடு சென்றீர்கள் என்றால், கடுமையாக பாதிக்கப்படுவீர்கள் என்பது நிச்சயம். எதுவுமே எதிர்பார்க்காமல் சும்மா கொஞ்சம் ஆக்‌ஷன் காட்சிகள் பார்க்கலாம் என்று நினைத்தால் கூட இதயம் நின்றுபோகும் அளவு லாஜிக் ஓட்டைகள் இதில் உள்ளன. இத்தனைக்கும் படத்தை இயக்கியிருக்கும் Shane Black, ஹாலிவுட்டின் பிரபல ஆக்‌ஷன் பட திரைக்கதையாளர்.

இனிமேல் இந்த அவெஞ்சர்ஸ் கதாபாத்திரங்கள் நடிக்கும் படங்களை பார்க்காமல் எஸ்கேப் ஆகிவிடலாமா என்று தோன்றுகிறது. இதில் அக்டோபரில் எனக்குப் பிடித்த அவெஞ்சர்ஸ் கதாபாத்திரமான Thor ’வெடிக்கும்’ Thor 2: The Dark World’ படம் வேறு வருகிறது. என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

பி.கு – இந்தப் படத்திலும் ஸ்டான் லீயின் ஒரே நொடி cameo இருக்கிறது.

இதோ Thor: The Dark World படத்தின் ட்ரெய்லர்.


The post Iron man 3 (2013) – 3D – English appeared first on Karundhel.

]]>
http://karundhel.com/2013/04/iron-man-3-2013-english.html/feed 11
திரைப்படம் எடுப்பது எப்படி? Shot by Shot – a book by Steven D Katz http://karundhel.com/2013/04/shot-by-shot-tamil-translation.html http://karundhel.com/2013/04/shot-by-shot-tamil-translation.html#comments Mon, 22 Apr 2013 19:11:25 +0000 Rajesh Da Scorp http://karundhel.com/?p=3809 ஒரு திரைப்படத்தை எடுப்பது எப்படி? நாமெல்லாம் பல திரைப்படங்களை திரையரங்கில் சென்று பார்க்கிறோம். சிலமுறை திரைப்படங்கள் நமக்கு பிடிப்பதில்லை. ‘என்னடா இது செம்ம மொக்கையா இருக்கு?’ என்று எரிச்சல் அடைகிறோம். அதன்பின் அந்தப் படத்தைப் பற்றி எழுதி, அந்த இயக்குநர் அல்லது நடிகரின் ரசிகர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கொள்கிறோம். அப்போது பின்னூட்டமிடும் அவர்கள், ‘டாய்ய்ய்ய்ய்… முடிஞ்சா ஒரு படம் எடுத்துப் பாருடா. சொம்மா பேசிக்கினு’ என்று ‘அன்புடன்’ நம்மிடம் பேசுவார்கள். சீரியஸாகப் பேசுவோம். ஏதோ குன்ஸாக நம்மிடம் [...]

The post திரைப்படம் எடுப்பது எப்படி? Shot by Shot – a book by Steven D Katz appeared first on Karundhel.

]]>
ஒரு திரைப்படத்தை எடுப்பது எப்படி?

நாமெல்லாம் பல திரைப்படங்களை திரையரங்கில் சென்று பார்க்கிறோம். சிலமுறை திரைப்படங்கள் நமக்கு பிடிப்பதில்லை. ‘என்னடா இது செம்ம மொக்கையா இருக்கு?’ என்று எரிச்சல் அடைகிறோம். அதன்பின் அந்தப் படத்தைப் பற்றி எழுதி, அந்த இயக்குநர் அல்லது நடிகரின் ரசிகர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கொள்கிறோம். அப்போது பின்னூட்டமிடும் அவர்கள், ‘டாய்ய்ய்ய்ய்… முடிஞ்சா ஒரு படம் எடுத்துப் பாருடா. சொம்மா பேசிக்கினு’ என்று ‘அன்புடன்’ நம்மிடம் பேசுவார்கள்.

சீரியஸாகப் பேசுவோம். ஏதோ குன்ஸாக நம்மிடம் ஒரு ஒன்லைன் இருக்கிறது. எண்பதுகளில் இருந்ததுபோல் ‘சத்யா மூவீஸ் கதை இலாகா’ என்று நம்மிடம் எதுவும் இலாகா இல்லாததால், நாமேதான் அதனை டெவலப் செய்யவேண்டும். கதையை திரைக்கதையாக்கி, திரைக்கதையை பலமுறை அடித்துத் திருத்தி, ஒருவழியாக இறுதி ட்ராஃப்ட் தயாரானதும் தயாரிப்பாளரை சந்தித்து, கதையை சொல்லி கன்வின்ஸ் செய்து பட்ஜெட்டை தயார் செய்துகொண்டு, ஆள் அம்பு சேனை எல்லாம் ரெடி செய்துகொண்டு, படப்பிடிப்புத் தளத்துக்கு சென்று இறங்கியாயிற்று. ‘டைரக்டர் வர்ராரு’ என்று அங்கிருக்கும் எல்லாரும் நமக்கு வணக்கம் வைப்பதை பெருமையாக உணர்ந்துகொண்டு, கெத்தாக குறுக்கும் நெடுக்கும் பலமுறை நடந்தாயிற்று.

அதன்பின்?

கையில் இருக்கும் திரைக்கதையை எப்படி படமாக மாற்றுவது? நமது மனதில் நாம் கற்பனை செய்துவைத்திருக்கும் கதையை எப்படி கேமரா மூலம் அதேபோல் படமாக்குவது? திரைப்படத்தை படமாக்கும்போது நமக்குத் தேவையானது என்ன? எந்தெந்த வழிமுறைகளைக் கையாண்டால் நமது மனதில் இருக்கும் கதை, அதே வடிவத்தில் தத்ரூபமாக திரையில் வெளிவரும்?

ஷாட் பை ஷாட்டாக ஒரு திரைப்படத்தை எப்படி எடுப்பது என்று விளக்குவதே Shot by Shot என்ற புத்தகம்.

Visualization என்ற, நமது கதையை மனதில் நினைத்துப் பார்த்து செதுக்குவதில் ஆரம்பித்து, விஷுவலைஸ் செய்வதற்கான வழிமுறைகள், இதன் தொடர்ச்சியாக ப்ரொடக்‌ஷன் டிஸைன் என்பது பற்றிய விரிவான விளக்கங்கள், ஸ்டோரிபோர்ட்கள் எப்படி செய்துவைத்துக் கொள்வது என்ற அருமையான வழிமுறை, பின்னர் எடிட்டிங், ஷாட்களை வரிசையாக, அவற்றின் கண்டின்யூட்டி மாறாமல் எடுப்பது, வசனங்களை எப்படி இயல்பாக கேமராமுன்னர் பேசவைத்து எடுப்பது, கேமராவின் ஃப்ரேமின் நுணுக்கங்கள், கேமரா ஆங்கிள்கள் எப்படி வைப்பது, கேமராவை அட்டகாசமாக எப்படி கையாள்வது, ஷாட்களின் வெவ்வேறு வடிவங்கள் போன்ற அத்தனை விபரங்களையும் ஸ்டீவன் D காட்ஸ் என்பவர் இந்தப் புத்தகத்தில் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்திருக்கிறார். அத்தனையும் மிக அற்புதமான தகவல்கள். இந்தப் புத்தகமும் மிகவும் பிரபலமான புத்தகம்.

இந்தப் புத்தகத்தின் அத்தியாயங்களை, தமிழ்ஸ்டுடியோ அருண் நடத்திவரும் ’பேசாமொழி’ என்ற இணையதள பத்திரிக்கையில் மொழிபெயர்த்து வருகிறேன். தொடரின் பெயர் – ‘திரைமொழி’. பேசாமொழி என்பது மாற்று சினிமாவுக்கான ஒரு இணைய இதழ். பாலு மஹேந்திராவின் ‘வீடு’ திரைப்படம் பற்றி ஏற்கெனவே ஒரு கட்டுரையை நான் அதில் எழுதியிருந்தேன். நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். அப்போதே இந்தத் தொடரையும் எழுத ஆரம்பித்திருந்தாலும், ஒரு சில கட்டுரைகள் எழுதியபின்னர் இணைப்பை வழங்கலாம் என்றே இத்தனை நாள் அதைப்பற்றி சொல்லவில்லை. இப்போது நான்கு கட்டுரைகள் இந்த நான்கு மாதங்களில் வெளிவந்திருப்பதால், இங்கே அவற்றின் இணைப்பை அளித்திருக்கிறேன். தவறாமல் படித்துப்பாருங்கள். ஸிட் ஃபீல்டின் திரைக்கதைத் தொடரைப்போலவே இதுவும் ஒரு மிக முக்கியமான தொடர்.

இந்த பேசாமொழி இணைய இதழ், மிகவும் வித்தியாசமான, informative இணைய மாத இதழ்.  வெங்கட் சாமிநாதன்,  ட்ராட்ஸ்கி மருது, ராஜன் குறை, அம்ஷன் குமார், தியடோர் பாஸ்கரன் போன்றவர்கள் இந்த இணைய இதழில் அவ்வப்போது எழுதி வருபவர்கள்.  பல நல்ல கட்டுரைகளும் நேர்காணல்களும் இன்னும் பல விஷயங்களும் இந்த இணைய இதழை மிகவும் பயனுள்ளதாக ஆக்குகின்றன. நண்பர்கள் இந்த இதழை புக்மார்க் செய்துவைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஒவ்வொரு மாதமும் இந்தத் தொடரின் அத்தியாயத்தின் மொழிபெயர்ப்பு வெளிவரும்போது இனிமேல் அதுவரை வந்துள்ள அத்தனை அத்தியாயங்களின் இணைப்போடு அதனை நமது தளத்தில் வெளியிடலாம் என்று இருக்கிறேன். நண்பர்கள் அந்தத் தொடரை தவறாமல் படிக்க அது வழிவகுக்கும் என்பதால். நன்றி.

 

1. Shot by Shot – அறிமுகக் கட்டுரை
2. முதல் பாகம் – Visualization: The Process
அத்தியாயம் 1 – Visualization
3. அத்தியாயம் 2 – Production Design
4. அத்தியாயம் 2 – Production Design (தொடர்ச்சி)

இவையே இதுவரை வந்திருக்கும் அத்தியாயங்களின் மொழிபெயர்ப்புகள்.  படித்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிருங்கள் friends. See you.

பி.கு – அடுத்த கட்டுரையில் ‘மொத்தக் கதைகள் 36’ தொடர்கிறது.

The post திரைப்படம் எடுப்பது எப்படி? Shot by Shot – a book by Steven D Katz appeared first on Karundhel.

]]>
http://karundhel.com/2013/04/shot-by-shot-tamil-translation.html/feed 3
Udhayam NH4 (2013) – Tamil http://karundhel.com/2013/04/udhayam-nh4-2013-tamil.html http://karundhel.com/2013/04/udhayam-nh4-2013-tamil.html#comments Sat, 20 Apr 2013 17:23:55 +0000 Rajesh Da Scorp http://karundhel.com/?p=3792 தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, இரண்டு விஷயங்கள் அவ்வப்போது நடக்கும். ஒன்று – ’தமிழ்த்திரையுலகின் தலையெழுத்தையே மாற்றப்போகும் படம் இது’ என்ற அடைமொழியுடன் சில சமயங்களில் பல பெரிய இயக்குநர்களின் படங்கள் எடுக்கப்பட்டு வெளியாகும். ஆனால் தமிழ்சினிமாவின் ‘தலையெழுத்து’, இந்தப் படங்களால் மில்லிமீட்டர் அளவு கூட மாறாது. அந்த அடைமொழியெல்லாம் படத்தை வெற்றிகரமாக மார்க்கெட் செய்வதற்கு மட்டுமே என்பது படத்தைப் பார்த்ததும் புரிந்துவிடும். இரண்டு – எந்த அறிவிப்பும் ஆரவாரமும் இல்லாமலும் சில சமயங்களில் சில பெரிய இயக்குநர்களின் [...]

The post Udhayam NH4 (2013) – Tamil appeared first on Karundhel.

]]>
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, இரண்டு விஷயங்கள் அவ்வப்போது நடக்கும். ஒன்று – ’தமிழ்த்திரையுலகின் தலையெழுத்தையே மாற்றப்போகும் படம் இது’ என்ற அடைமொழியுடன் சில சமயங்களில் பல பெரிய இயக்குநர்களின் படங்கள் எடுக்கப்பட்டு வெளியாகும். ஆனால் தமிழ்சினிமாவின் ‘தலையெழுத்து’, இந்தப் படங்களால் மில்லிமீட்டர் அளவு கூட மாறாது. அந்த அடைமொழியெல்லாம் படத்தை வெற்றிகரமாக மார்க்கெட் செய்வதற்கு மட்டுமே என்பது படத்தைப் பார்த்ததும் புரிந்துவிடும். இரண்டு – எந்த அறிவிப்பும் ஆரவாரமும் இல்லாமலும் சில சமயங்களில் சில பெரிய இயக்குநர்களின் படங்கள் வெளியாகும். அவைகளில் ஓரிரண்டு, எப்போதாவது அட்டகாசமான படங்களாக அமைந்துவிடும். இதில் கவனிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், இந்த இரண்டு வகையான படங்களாலும் தமிழ் சினிமாவின் ‘தலையெழுத்து’ மாறியிருக்கவே இருக்காது. ஆனால், பலத்த அறிக்கைகளுடனும் போலியான பில்ட்-அப்களுடனும் வெளியாகும் ஒரு pseudo திரைப்படத்துக்கும், அமைதியாக வெளியாகி வெற்றிபெறும் திரைப்படத்துக்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?

சரி. அதென்ன தமிழ் சினிமாவின் தலையெழுத்து? அது ஏன் மாறவேண்டும்? இதற்கு மிக எளிமையான விடை என்னவாக இருக்கும் என்றால், உலகின் பெருமைமிக்க திரைப்பட விழாக்களில் இத்தகைய படங்களைப் போட்டுக்காட்டி தமிழ் சினிமாவின் முத்திரையை ஆழமாகப் பதிக்கக்கூடிய படங்களே ‘தலையெழுத்தை’ மாற்றக்கூடிய படங்கள். அந்தப் பட்டியலில் இதுவரை ஒரே ஒரு தமிழ்ப்படம் கூட இல்லை. இப்படி யோசித்துப் பாருங்கள். நாமெல்லாம் பல உலக நாடுகளின் படங்களைப் பார்க்கிறோம். அவற்றில் சிறந்த படங்கள் என்று ஒரு பட்டியல் தயாரிக்கச்சொன்னால், பல நாடுகளின் படங்கள் அவற்றில் இடம்பெறும். இப்படி வேறு நாட்டைச் சேர்ந்த பல திரைப்பட ரசிகர்களையும் ஒரு பட்டியல் தயாரிக்கச்சொன்னால், அவற்றில் இந்தியப் படங்கள் மிக அரிதாகவே இருக்கும். அதிலும் தமிழ்ப்படங்கள் கட்டாயம் இருக்காது. தமிழில் இனிமேல்தான் ஒரு உலகப்படம் வரவேண்டும் என்பது எத்தகைய அவமானகரமான செய்தி? ஒரு திரைப்பட ரசிகனாக, எனக்கு இந்த வருத்தம் உண்டு. அத்தகைய படங்களை எடுக்கும் ஆற்றல் படைத்த தமிழ் இயக்குநர்கள் என்று என்னை ஒரு பட்டியல் இடச்சொன்னால் அதில் தற்போது இருப்பவர்களில் முதலிடம் பெறும் பெயராக ‘வெற்றிமாறன்’ என்பதே இருக்கும் (எனக்கு மிகப்பிடித்த தமிழ்ப்படமான ஆரண்யகாண்டம் இயக்குநர் குமாரராஜாவின் அடுத்த படத்தைப் பார்த்துவிட்டு, முதலிடம் இவருக்கா வெற்றிமாறனுக்கா என்று முடிவு செய்வேன்) . நான் பார்த்தவரையில், பேட்டிகளில் இதுவரை ’நான் ஒரு உலகப்படம் எடுக்கிறேன்’ ரீதியில் அறிக்கைகளை அள்ளி வீசாமல் (இதுவரையில்) அமைதிகாக்கும் ஒரே இயக்குநர் இவர்தான். கூடவே, வெற்றிமாறனின் கருத்துகளும் மிக முதிர்ச்சியாக இருக்கும். ஒரு உதாரணமாக, விகடனில் சில மாதங்களுக்கு முன்னர் அவர் கொடுத்திருந்த பேட்டியில் ஒரு குறிப்பிட்ட கேள்வியும் அவரது பதிலும் இங்கே படிக்கலாம்:

 

கேள்வி – ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் ஏன் இவ்ளோ இடைவெளி எடுத்துக்கிறீங்க?

வெற்றிமாறனின் பதில் – முப்பது வருஷம் நாம கத்துக்கிட்ட விஷயங்களை ஸ்க்ரிப்ட்டாப் பண்ணி முதல் படம் இயக்கிருவோம். அதுக்கு அப்புறம் புதுசா ஒண்ணு கத்துக்கணும். புதுசா ஒரு ஏரியா தெரிஞ்சுக்கணும்னா, அதுக்கு ஒரு வருஷம் தேவைப்படுது. அப்புறம் அதைப் படமா எடுக்க இன்னொரு வருஷம் தேவைப்படுது. இது என் ஸ்டைல். இது ஆளுக்கேத்த மாதிரி மாறலாம். என் ஃபிலிம் கேரியர்ல எத்தனை படங்கள் இயக்கினேன்னு சொல்றதைவிட, என்னென்ன படங்கள் இயக்கினேன்னுதான் சொல்ல விரும்புறேன். எனக்கு இன்னும் முப்பது வருஷம் கேரியர் இருக்குன்னா மொத்தமா 15 படங்கள்தான் இயக்குவேன். அது போதும் எனக்கு.

இதுதான் அவரது பாணி. இந்த இரண்டு விஷயங்கள் மட்டுமல்லாது, City of God ஸ்டைலில் சிறந்த படங்களை எடுக்கும் திறன் அவருக்கு இருக்கிறது. அவர் எடுத்திருக்கும் இரண்டு படங்களைப்பற்றிப் பேசுவதற்குப் பல விஷயங்கள் இருக்கின்றன. அவசியம் பின்னர் விரிவாக இன்னொரு நாள் இந்த இரண்டையும் பிரித்து மேயலாம். நான் எழுத விரும்பும் இரண்டு படங்கள் இவை.

அப்படிப்பட்ட வெற்றிமாறனின் முதல் படமாக வந்திருக்கவேண்டிய ஒரு படம்தான் இந்த ‘உதயம் – NH4′ என்பது நண்பர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவரது ‘பொல்லாதவன்’ படத்தை எடுப்பதற்கு முன்னரே, ‘தேசிய நெடுஞ்சாலை’ என்ற பெயரில் ஒரு படத்தின் படப்பிடிப்பு இரண்டு நாட்கள் நடந்து, பின்னர் படமே கைவிடப்பட்டது. அதன்பின்னர் பொல்லாதவன் வந்து பெரிய ஹிட் ஆக, பின்னர் வந்த ஆடுகளமோ ஐந்து தேசிய விருதுகளோடு வெற்றிமாறனை சிறந்த இயக்குநராக நிலைநாட்டியது. அதன்பின்னர் வெற்றிமாறனுக்கு அவரது முதல் ஸ்க்ரிப்டை மறுபடி தூசிதட்டுவது பெரிய விஷயமாக இருந்திருக்காது. வெற்றிமாறனின் கதை, வசனம், தயாரிப்பு மற்றும் அவரது அஸிஸ்டெண்ட் மணிமாறனுடன் சேர்ந்து எழுதிய திரைக்கதையின் கூட்டமைப்பில் நேற்று வெளியாகியிருக்கும் படமே ‘உதயம் – NH4′. இன்று மதியம் முகுந்தா திரையரங்கில் இந்தப் படத்தைப் பார்த்தோம்.

முதல் ஸீனின் முதல் ஷாட்டிலிருந்தே விறுவிறுப்பாகச் செல்லும் படங்கள் தமிழில் மிகக்குறைவு. இந்தப் படம் அப்படிப்பட்டது. படத்தின் முதல் ஸீனிலேயே படத்தின் களம் நிறுவப்பட்டுவிடுகிறது. அதன்பின் ஒவ்வொரு ஸீனாக படத்தின் விறுவிறுப்பு அதிகரித்துக்கொண்டே சென்று, இடைவேளையில் படம் பார்க்கும் ஆடியன்ஸான நாமும் ஒருவித பரபரப்புக்குள்ளாகிறோம். இத்தனைக்கும் படத்தின் கதை ஆதியிலிருந்து பல தமிழ்ப்படங்களில் கையாளப்பட்ட அதே கதை. கதையில் எந்தப் புதுமையும் இல்லை. ஒரே வரியில் எழுதப்பட்டுவிடக்கூடிய கதைதான் இது. ஆனால், திரைக்கதை இந்தப் படத்துக்கு ஒரு மிகப்பெரிய பலம். முன்பின்னாக மாறிமாறி வரும் நான் லீனியர் திரைக்கதை உத்தியை வெற்றிகரமாகப் பயன்படுத்தியிருக்கிறார் வெற்றிமாறன். அதிலும் ஒவ்வொரு கதாபாத்திரமாக கதையை நகர்த்திச் செல்லும் ‘ரஷோமான்’ உத்தி இது. சரியாகப் பயன்படுத்தப்பட்டால் படம் பார்க்கும் ஆடியன்ஸையும் கதைக்குள் இழுக்கக்கூடிய உத்தி. இதை நாம் விருமாண்டியில் பார்த்திருக்கிறோம். இதிலும் கச்சிதமாக இந்த உத்தி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

படத்தின் களம் பெங்களூரில் நடக்கிறது. பெங்களூரில் வாழ்பவனாக, நான் சுற்றிய பல இடங்களை படத்தில் காணமுடிந்தது. குறிப்பாக சர்ச் ஸ்ட்ரீட். அங்குள்ள காஃபி ஷாப்கள், கடைகள், ஒரு சில பப்கள், மெட்ரோ பாலம் இத்யாதி. இது ஒரு விஷயமே இல்லை. ஆனால், படத்தின் கதாபாத்திரங்கள், கல்லூரி மாணவர்கள். பெங்களூரில் கல்லூரி மாணவர்களைப் பற்றி எனக்குத் தெரியும். அதேதான் படத்திலும் சரியாகக் காண்பிக்கப்பட்டிருக்கிறது. கூடவே கல்லூரி நண்பர்களுக்குள் பேசிக்கொள்ளும் வசனங்கள். இயல்பானவை. பாசாங்கில்லாதவை.

திரைப்படங்களைப் பார்க்கையில் எப்போதும் மறந்துவிடக்கூடாத ஒரு விஷயம் இருக்கிறது. அது, நமது வயது மற்றும் ரசனை. உதாரணமாக, இந்தத் திரைப்படத்தில் கல்லூரி மாணவர்களே படம் முழுக்க வருபவர்கள். தற்போது கல்லூரி படிக்கும் மாணவர்களால் இவர்களுக்குள் நிகழும் உரையாடல்களை இயல்பாகத் தங்களது வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கமுடியும். அப்படிப் பார்த்தால், அந்தக் காட்சிகள் மற்றும் வசனங்கள் ஆகியவற்றின் இயல்புத்தன்மை புரிந்துவிடும். மாறாக, ஒரு நடுத்தர வயது மனிதர் இப்படத்தைப் பார்த்தால், அவருக்கு காட்சிகள் புரியாமல் போகும் வாய்ப்பும் இருக்கிறது (ஆனால் வெற்றிமாறனைப் புரிந்துகொண்டுவிட்டால் படம் அலுக்காது). உதாரணம்: படத்தில் வரும் காதல் காட்சிகள். எந்தக் காதல் ஜோடியாக இருந்தாலும் சரி – அவர்கள் நிஜவாழ்வில் பேசுவதில் ஒரு pattern (டெம்ப்ளேட்) இருக்கும். (படத்தின் கதாநாயகி பேசும் வசனங்களில் இவை வருகின்றன). அந்த பேட்டர்ன் இதில் இடம்பெற்றிருக்கிறது. ஒரு காதலி, காதலனிடம் எதிர்பார்ப்பது என்ன? ஒருவிதமான security. அதாவது, பிரச்னைகளில் தன்னைக் கைவிடாமல், தன்னுடன் இருந்து தன்னைப் பாதுகாப்பானா மாட்டானா என்ற எண்ணம் பெண்களின் மனதில் இருக்கும். அந்த எண்ணம்தான் ஒரு ஆடவனை அந்தப் பெண்கள் விரும்புவதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. கூடவே அந்த ஆடவனின் இயல்பான தன்மை (நகைச்சுவை உணர்வு இத்யாதியெல்லாம் இதில் வருகின்றன). இதெல்லாம் இந்தப் படத்தில் யோசிக்கப்பட்டு, அவற்றுக்கேற்ப காட்சிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. படத்தைப் பார்ப்பதற்கு மட்டுமல்லாமல், ஒரு படத்தை எடுக்கும்போதும் நான் மேலே சொன்ன இரண்டு விஷயங்கள் (வயது & ரசனை) முக்கியமானவை. ஒரு இயக்குநருக்கு இந்த இரண்டிலும் தெளிவு இருந்தால்தான் அப்படத்தின் காட்சிகள் இயல்பானவையாக இருக்கும். இல்லையேல் முன்பெல்லாம் அரத திராபையான கல்லூரிக் காட்சிகள் தமிழ்ப்படங்களில் வருமே, அப்படி ஒரு நகைச்சுவையாக அது மாறிவிடும். இந்தப் படத்தில் திரைக்கதை எழுதியிருப்பது வெற்றிமாறன் என்பதால் அந்தத் தெளிவு அவருக்கு இயல்பிலேயே இருக்கிறது (இந்த இடத்தில், மேலே இருக்கும் அவரது பதிலை ஒருமுறை படித்துக்கொள்ளவும்). ஆகவே படத்தின் காட்சிகள் நன்றாக வந்திருக்கின்றன.

இன்னொரு விஷயம், இப்படத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் தமிழ். பெங்களூரில் பல வருடங்களாக வாழ்வதால், எனக்கு இங்கே பேசப்படும் தமிழ் நன்றாகத் தெரியும். ‘கொடுப்பாங்க’ என்று இங்கே கன்னடம் பேசும் மக்கள் தமிழ் பேசும்போது சொல்லமாட்டார்கள். மாறாக, ‘கொடுக்குவாங்க’ என்றுதான் சொல்வார்கள். ‘நின்னுக்கினு, போய்க்கினு, ஆமாவா’ என்றெல்லாம் அவர்களின் தமிழ் நீளும். படத்தில் இந்த பெங்களூர்த்தமிழ் மிகவும் துல்லியமாக, கச்சிதமாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக படத்தின் கதாநாயகன் பிரபு(சித்தார்த்)வின் நண்பனாக வரும் நடிகர் பேசுவது அக்மார்க் பெங்களூர் தமிழ். கூடவே படத்தில் வரும் போலீஸார்கள் பேசுவதும் இதே ரீதியிலான தமிழ். இது, படக்குழுவினர் செய்திருக்கும் ரிஸர்ச் என்பது நன்றாகப் புரிகிறது. வட்டார வழக்கில் இயல்புத்தன்மை இருப்பது ஒரு நல்ல படத்துக்கு அடையாளம் (அது ஒன்று மட்டுமே நல்ல படத்தைத் தந்துவிடாது என்பதும் முக்கியம்).

அடுத்த விஷயம், படத்தின் திரைக்கதையைக் கூர்தீட்டியிருக்கும் விதம். வழக்கமாக படத்தில் இடம்பெறும் காட்சிகளில் ஒரு conflict (மனப்போராட்டம்) இடம்பெற்றால், ஆடியன்ஸின் மனதில் அந்தக் காட்சிகள் சொல்லவரும் விஷயம் நன்றாகத் தைக்கும் என்று திரைக்கதை ஜாம்பவான்கள் எழுதியுள்ளனர் (குறிப்பாக நமது ஸிட் ஃபீல்ட்). இதை விளக்கவேண்டும் என்றால் இந்தப் படத்திலிருந்தே ஒரு உதாரணம் சொல்லி விளக்கலாம். படத்தில் ஒரு போலீஸ் அதிகாரி. இவருக்கு ஒரு முக்கியமான வேலை. ஆனால் அதேநாளில் அவரது மகனின் பிறந்தநாள். மாலையில் நடக்கவிருக்கும் விழாவில் மகனுக்கு ஒரு சர்ப்ரைஸ் பரிசு அளிக்கப்போவதாக சொல்லியிருக்கிறார். மகனும் மனைவியும் ஆவலாக இவரது வருகைக்குக் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அதிகாரிக்கு வேலை நிமித்தமாக அலைவதால் செல்ல முடியாத சூழல். மனைவியின் ஃபோன் வருகிறது. மகன் பேசுகிறான். மகனின் குரலில் இனம்புரியாத ஆர்வம். தந்தையின் சர்ப்ரைஸ் கிஃப்ட் என்னவாக இருக்கும்? மனைவிக்கும், கணவன் இந்த விழாவுக்கு வருவதில் மகிழ்ச்சி. படத்தில் ஒவ்வொரு முக்கியமான ஸீன் வரும்போதும் இவர்களின் ஃபோன் அந்த அதிகாரிக்கு வருகிறது. அதிகாரியின் மனநிலையை இந்த ஃபோன் பாதிக்கிறது. இருவிதமான உணர்ச்சிகளில் சிக்கிக்கொண்டு தவிக்கிறார் அதிகாரி. வேலையை முடித்தே ஆகவேண்டிய சூழல் (அந்த வேலையிலும் பல சிக்கல்கள்) & தவிர்க்கவே முடியாத மகனின் பிறந்தநாள் விழா. இந்த மனப்போராட்டம்தான் அவரது செயல்பாடுகளை பாதிக்கிறது. மன உளைச்சல் வருகிறது. இத்தனைக்கும் நாம் அந்த மனைவியையும் மகனையும் படம் முழுக்கவே பார்ப்பதில்லை. வெறும் ஃபோன்கால்களில் மட்டுமே அவர்களை சந்திக்கிறோம். இதுதான் conflict. ஹாலிவுட்டில் பல படங்களில் இந்தவிதமான மனப்போராட்டம் இடம்பெறும். கதையிலும் ஒரு ஈடுபாட்டை விளைவிக்கும். தமிழில் இதுபோன்ற ஒரு துல்லியமாக எழுதப்பட்ட conflictடை இப்போதுதான் பார்க்கிறேன் (குருதிப்புனலில் இந்த conflict இருக்கும்). இதனால் அந்தக் கதாபாத்திரத்தைப் புரிந்துகொள்ளமுடிகிறது. முழுதாக கெட்டவனும் இல்லை; அதேபோல் முழு நல்லவனும் இல்லை. அவன் ஒரு சராசரி மனிதன். வேலையில் உள்ள சாதகமான அம்சங்களை வைத்துக்கொண்டு மேலே செல்ல முயல்பவன்.

அதேபோல் படத்தின் கதாநாயகன், பிற படங்களைப்போல் ஒரு ‘ஹீரோ’ அல்ல. இப்படிப்பட்ட படங்களில் வழக்கமாக, யாராக இருந்தாலும் அடித்துப் பந்தாடும் கதாநாயகன் தான் இருப்பான். ஆனால் இதில் சித்தார்த்தின் பாத்திரம், ஒரு சாதாரண பாத்திரம். பல சூழ்நிலைகளில், அவரது கதாபாத்திரம் வெறுமனே ரியாக்ட் தான் செய்கிறது. அதாவது, சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக இல்லாதபோது நாம் எப்படி நடந்துகொள்வோமோ அதேதான். பெரிய ஹீரோ போல் சித்தார்த் யோசிப்பதில்லை. படத்தில் போலீஸுடன் மோதும் காட்சிகளில் கூட, நாமாக இருந்தால் என்ன நடக்குமோ அதுதான் நடக்கிறது (கட்டுரையின் இறுதியில் இருக்கும் பி.கு 4 பார்க்க).

காட்சிகள் எழுதப்பட்டதில் மட்டுமல்லாது திரைப்படத்திலும் நன்றாகவே எடுக்கப்பட்டிருக்கின்றன. அவ்வப்போது மிக இயல்பான நகைச்சுவையும் படத்தில் உண்டு. நடிப்பும் நன்றாகவே இருக்கிறது.

இவையெல்லாம் படத்தின் நிறைகள். இனிமேல் குறைகளைப் பார்ப்போம்.

படத்தின் முதல் மற்றும் பெரிய குறை – Kay Kay மேனனை நடிக்கவைத்திருப்பது. கேகே மேனன் ஒரு சிறந்த நடிகர். Hazaron Khwaishen Aisi (எனது விமர்சனத்தை க்ளிக்கிப் படிக்கலாம்) படத்திலும், Gulaal படத்திலும் இவரது நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான கேகே மேனனை, அவரது நடிப்புக்கே வாய்ப்பு வழங்காத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவைத்திருப்பது எனக்கு ஒரு குறையாகத் தோன்றியது. அந்தக் கதாபாத்திரம் நன்றாக எழுதப்பட்டிருப்பதை மேலே கண்டோம். இருந்தாலுமே நடிப்பில் பெரிய ஸ்கோப் இல்லாத வேடம் அது. அந்தக் கதாபாத்திரத்தை யார் வேண்டுமானாலும் செய்திருக்கலாம். கேகே மேனன் தேவையில்லை (ஆனால் Hazaron khwaishen Aisi படத்திலும் குலால் படத்திலும் அவர் செய்திருக்கும் பாத்திரங்களை அவர் மட்டுமே செய்திருக்க முடியும். அப்படங்களைப் பார்த்தால் உங்களுக்கும் இது புரியும்). எப்படி ‘ரன்’ படத்தில் அதுல் குல்கர்னி (ஹேராமில் அப்யங்கராக நடித்து, கமலை விஞ்சியவர்) என்ற அற்புதமான நடிகர் வேஸ்ட் செய்யப்பட்டாரோ அப்படி இதில் கேகே மேனன். ஆனால் அதுலின் அளவு முழுமையாக குப்பையில் தூக்கி எறியப்படாமல், நாம் மேலே பார்த்த conflict அவருக்கு கொஞ்சமே கொஞ்சம் உதவுகிறது.

படத்தின் இரண்டாம் குறை, பாடல்கள். ‘பொல்லாதவன்’ & ‘ஆடுகளம்’ படங்களில் பாடல்களும் படத்தின் திரைக்கதைக்கு உதவியிருக்கும். கேட்பதற்கும் நன்றாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் ஒரு பாடல் கூட நம்மை ஈர்க்கவில்லை. படத்தின் வேகத்துக்கு ஸ்பீட் ப்ரேக்கர்களாக இருக்கின்றன இந்தப் பாடல்கள் (இவை, முதன்முறை இயக்குநராக ஆகியிருக்கும் மணிமாறனின் பரிந்துரைகளாக இருந்திருக்கலாம். வெற்றிமாறன் இயக்கியிருந்தால் இந்த விபத்து நேர்ந்திருக்காது என்று தோன்றுகிறது).

இந்த இரண்டு குறைகளைத் தவிர, இந்தப் படத்தில் வேறு குறைகள் இருப்பதாகத் தெரியவில்லை. படத்தின் இரண்டு பாதிகளும் எனக்குப் பிடித்தன. இந்தப்படம் நான் லீனியராக இல்லாமல், ஒரே கோட்டில் படம் பிடிக்கப்பட்டிருந்தால் பல டெம்ப்ளேட் காட்சிகள் இருந்திருக்கும். ஆனால் சாமர்த்தியமாக திரைக்கதையை ரஷோமான் ஸ்டைலில் அமைத்து, அந்த டெம்ப்ளேட்களை நமது கண்ணிலிருந்து மறைத்திருக்கிறார் வெற்றிமாறன் என்பது தெரிகிறது. ஆகவே அந்த சாமர்த்தியத்துக்கு ஒரு சியர்ஸ்.

இந்தப் படம் ஒரு Road movie எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணம். தமிழில் இப்படிப்பட்ட ரோட் மூவிக்கள் மிக மிக அரிது. (‘பையா’ படம், ஒரு ரோட் மூவி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணம். நான் பார்த்த படங்களில் பயங்கர அலுப்பான படங்களில் அதுவும் ஒன்று). அந்த வகையிலும் இரண்டு மாறன்களுக்கும் (வெற்றி & மணி) ஒரு டோஸ்ட்.

முடிவாக எனது கருத்து: சுவாரஸ்யமான ஒரு திரைப்படத்தை இரண்டு மாறன்களும் நமக்கு அளித்திருக்கிறார்கள். படம் எனக்குப் பிடித்தது. எனவே படக்குழுவினருக்கு ஒரு பெரிய சியர்ஸ்.

பி.கு

1. படத்தின் இறுதியில் வரும் முத்தக்காட்சி, ஆடியன்ஸின் கைத்தட்டலை முகுந்தாவில் பெற்றது.

2. படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில், பெங்களூரில் நடக்கும் காவி பயங்கரவாதம் இடம்பெற்றிருக்கிறது (காதலர் தினத்தை எதிர்க்கிறேன் பேர்வழி என்று பப்களில் புகுந்து வெறிபிடித்த உராங் உடான்களைப் போல் நடந்துகொள்கிறார்கள் அல்லவா? அதைத்தான் சொல்கிறேன். இந்தக் காட்சியை, பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது என்ன என்று மேலே சொல்லியிருந்தேன் அல்லவா? அத்துடன் சம்மந்தப்படுத்தி யோசித்துக்கொள்ளவும்).

3. பாலு மஹேந்திராவிடமிருந்து பிரிந்துவந்த வெற்றிமாறன், தமிழ்ப்படங்களிடையே தனது வருகையை ஒரு bang போல அறிவித்த ‘பொல்லாதவன்’ அளவு, வெற்றிமாறனிடமிருந்து வந்திருக்கும் மணிமாறனின் வருகை இந்தப்படத்தில் இல்லை. எனினும், இந்தப்படம் ஒரு குறிப்பிடத்தகுந்த முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை.

4. படத்தில் ’போலீஸை எதிர்க்கும் சாதாரண குடிமகன்’ காட்சிகள் வருகின்றன. ஆனால் பிற படங்களைப் போல் அவை அபத்தமாக இல்லை. போலீஸும் அவரை எதிர்ப்பவனும் தனியாக பொருதிக்கொள்ளும்போது என்ன நடக்குமோ அதுதான் இந்தப்படத்தில் இருக்கிறது.

The post Udhayam NH4 (2013) – Tamil appeared first on Karundhel.

]]>
http://karundhel.com/2013/04/udhayam-nh4-2013-tamil.html/feed 24