ராவணன் (2010) – விமர்சனம்

by Karundhel Rajesh June 19, 2010   Tamil cinema

ஒரு ஊரில், ராமன் ராமன் என்று ஒரு இளவரசன் வாழ்ந்துவந்தான். அவனது மனைவியின் பெயர், சீதை. இந்த சீதையை, ராவணன் என்ற ஒருவன் கடத்திவிட்டான். காரணம், இந்த ராவணனின் தங்கை சூர்ப்பனகையை, ராமன் & ஃபேமிலி அவமானப்படுத்திவிட்டதுதான். எனவே, சீதை கடத்தப்படுகிறாள். அப்போது ராமன் என்ன செய்தான்? சீதையைத் தேடத்துவங்கினான். காட்டில் சீதையைத் தேடும்போது, அங்கு, காட்டைப் பற்றி நன்கு அறிந்தவனான அனுமான், ராமருக்கு சீதையைத் தேடுவதில் உதவி புரிகிறான். சீதையை எப்படியோ கண்டும் பிடித்துவிடுகிறான். சீதையிடம் வந்து, ராமர் கொடுத்த அடையாளத்தைக் கொடுத்து, தனது தோளில் தூக்கிக்கொண்டே ராவணனின் பிடியிலிருந்து சீதையைக் கொண்டுசென்றுவிடுவதாகவும் சொல்கிறான். ஆனால், இதனை மறுக்கும் சீதை, ராமரே வந்து தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லிவிடுகிறாள்.

அதே போல் ராமர் வந்து, ராவணனின் தம்பியைக் கொன்று, பின்னர் கடைசியாக ராவணனையும் கொன்று, சீதையை சிறைமீட்டுச் செல்கிறார்.

சுபம்.

உஸ்.. அப்பாடா…. இந்தக் கதையைத் தான் ஆதிகாலத்திலிருந்தே சம்பூர்ண ராமாயணம், (பழைய) தசாவதாரம், தெலுங்கு என்.டி. ஆர் ராமாயணம், டிவி ராமாயணம், பின்னர் இப்போதும் இன்னொரு டிவி ராமாயணம் என்று பலமுறை பார்த்தாயிற்றே. . இப்பொழுது, மறுபடியும், இந்தக் கதையை, ‘ராவணன்’ என்ற பெயரிலும் பார்க்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு இன்று மதியம் ஆளானேன்.

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். மணிரத்னத்தின் (கண்மூடித்தனமான) ரசிகர்கள், தயவுசெய்து இந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டாம். ராவணனைப் பற்றிய ஒரு அலசல் ஓக்கே என்பவர்களுக்கு மட்டுமே இந்தக் கட்டுரை.

சரி. ஏன் ராவணன் சுவாரஸ்யமாக இல்லை? ’ஆனானப்பட்ட மணி சாரின்’ படமாயிற்றே? அப்படியுமா இது மொக்கை? என்ற கேள்வி இயற்கையாக எழத்தான் செய்கிறது.

இப்படத்தின் திரைக்கதையில், ப்ளாக் ஹோல் ஸைஸில் மெகா ஓட்டைகள் நிறைய உள்ளன. இந்த ஓட்டைகளைப் பற்றி முதலில் பார்த்துவிடலாம்.

ரைட். முதல் ஓட்டை – மணிரத்னத்தின் அத்தனை படங்களிலும் நாம் கண்ட அதே பிரச்னை – ஒரு சம்பவத்தை எவ்வளவு மேம்போக்காகப் பார்க்க முடியுமோ, அவ்வளவு மேம்போக்காக அதனை மேய்ந்துவிட்டு, யாராலுமே ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு ஒரு மொண்ணையான சல்யூஷன் கொடுப்பது அவரது வழக்கம். இதற்கு உதாரணம், ரோஜா, பம்பாய், தில்ஸே, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் வெளிப்படையாகவே நாம் அவதானிக்கலாம்.

இப்படத்திலும் இதே பிரச்னையை நாம் பார்க்கிறோம். இப்படத்தில் வீரைய்யாவாக வரும் விக்ரமின் கதாபாத்திரம், கிட்டத்தட்ட ஒரு நவீன ராபின்ஹூட். அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால், இந்தக் கதாபாத்திர வடிவமைப்பில், பலவிதமான முரண்பாடுகள் உள்ளன. ஆய்த எழுத்தில் மாதவனின் கதாபாத்திரம், தனது அண்ணனைக் கொன்றவனிடமே எந்தக் கேள்வியும் இல்லாமல், பொதேலென்று சென்று விழுவது, மணிரத்னத்தின் இந்த முரண்பாடான கதைப்பாத்திர வடிவமைப்புக்கு ஒரு சரியான உதாரணம். அதைப்போலவே, இந்த வீரைய்யாவும், மொண்ணைத்தனமான பல முடிவுகளை இப்படத்தில் எடுக்கிறான். ஆனால் அந்த முடிவுகளுக்கு ஒரு காரணமும் இல்லை. ஜஸ்ட் லைக் தட். இதற்கு உதாரணம், தனது தங்கையின் புதுக்கணவன், ஆபத்துக்காலத்தில் அவளை விட்டு ஓடியதற்கே அவனது கையை வெட்டும் அளவு துடிப்பான வீரைய்யா, தனது தங்கையைக் கற்பழித்தவர்களில் ஒருவனான போலீஸ்காரனை, ஜஸ்ட் மொட்டை மட்டும் அடித்து கழுதை மேல் ஏற்றி, அனுப்பிவிடுகிறான். அது ஏன்? என்ன காரணம்? யாருக்கும் தெரியாது.

இதைப்போன்ற பல முரண்பாடுகளை வீரையாவின் கதாபாத்திரம் வெளிப்படுத்துவதால், அந்தக் கேரக்டரின் மீது நமக்கு வரவேண்டிய பரிவும் பச்சாத்தாபமும் முற்றிலுமாக வராமலேயே இருந்துவிடுகின்றன. இதனாலேயே, ‘ஏதோ திரையில் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன; நமக்கும் அதற்கும் சம்மந்தமே இல்லை’ என்ற ஒரு மனநிலையை, வெகுவிரைவிலேயே பார்வையாளர்கள் அடைந்துவிடுகின்றனர்.

படத்தில் நமக்கு எழும் சலிப்புக்கு இன்னொரு உதாரணம் – இப்படத்தை சற்று அவதானித்தால், வீரைய்யாவின் கதாபாத்திரத்தில், நம்ம சந்தனக்கடத்தல் வீரப்பனின் சில குணாதிசயங்கள் பொதிந்திருப்பதை அறியமுடிகிறது. வீரப்பனின் தம்பி அர்ஜுனன், போலீஸினால் சுடப்பட்டு இறந்ததைப் போலவே, இதிலும் வீரைய்யாவின் தம்பியும், இப்படத்தின் ராமனான பிருத்விராஜினால் சுடப்பட்டு இறக்கிறான். ஆனால், இந்தச் சம்பவங்களைக் காண்பிக்கத் தெரிந்த மணிரத்னம், அவற்றுக்கு, அவரது பாணியில், லாஜிக்கே இல்லாமல் கொடுக்கும் தீர்வுகள், படத்தை முற்றிலுமாக ஒரு கொடுமையான அனுபவமாக மாற்றிவிடுகின்றன. தம்பி இறந்தவுடன் பொங்கியெழும் வீரைய்யா என்ன செய்கிறான் என்று பார்த்தால், போலீஸ் முகாம் சென்று, அங்கு குண்டு போட்டுக் குதி குதியென்று குதிப்பதோடு சரி. என்னய்யா கொடுமை இது! தன்னுடனேயே எதிரியின் மனைவியைச் சிறைபிடித்து வைத்திருக்கும் வீரைய்யா, அந்தப் பெண்ணைப் படுபத்திரமாக வைத்துவிட்டு, இவற்றையெல்லாம் செய்வது முற்றிலும் நம்பத்தகுந்ததாகவே இல்லை. அதுவும், எதிரியின் மனைவியை அவன் கடத்தியதே, தனது தங்கைக்கு நடந்த கொடூரத்துக்குப் பழி வாங்கத்தான். அவளைக் கொல்ல நினைத்து, பின் வீரைய்யா மனம் மாறுவதற்கான காரணமும், எவ்வளவு செயற்கையாக இருக்க முடியுமோ அவ்வளவு செயற்கை.

பொதுவாக, சாஃப்ட்வேரில் என்னுடன் நான் பார்க்கும் நண்பர்கள் இந்தப் படத்தைப் பற்றி அனுப்பும் மின்னஞ்சல்களைப் படித்து, ஒருக்கால் படம் நன்றாக இருக்குமோ என்று நான் கொண்டிருந்த எதிர்பார்ப்பு, படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே முற்றிலும் தொலைந்து போனது. இந்த மின்னஞ்சல்களின் பொதுவான அமைப்பு: ‘கேமிரா அபாரம்; இசை பட்டையைக் கிளப்புகிறது; நடிப்பு ஆஹா ஓஹோ; mani has yet another time proved his talent;’ இந்த ரீதியிலேயே இருக்கின்றன. அப்புறம்தான் தெரிந்தது, இது ஒரு டெம்ப்ளேட் அமைப்பு என்று.

சரி. இப்பொழுது இன்னொரு விஷயத்தைப் பற்றியும் பார்க்கலாம். அது: இப்படத்தில் Technical Aspects பிரமாதம் என்ற விஷயம். ஆமாம்! பின்னே? மணிரத்னம் தேர்வு செய்யும் Crew முழுவதுமே, தங்களது துறைகளில் பல சாதனைகளைப் படைத்தவர்கள் ஆயிற்றே? சந்தோஷ் சிவன், ஸ்ரீகர் பிரசாத், மணிகண்டன், ஸமீர் சந்தா ஆகிய அனைவரும் இதுவரை பல விருதுகளைக் குவித்தவர்களாயிற்றே? இவர்களைப் போன்றவர்களைப் படங்களில் உபயோகப்படுத்தும்போது, அவர்களின் உச்சபட்சத் திறமை வெளிப்படத்தான் செய்யும்! இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

இப்படத்தைப் பார்த்ததில் இருந்து, ஒரு விஷயத்தைத் தெளிவாக விளங்கிக்கொண்டேன். என்னதான் படம் டெக்னிகலாக சிறந்து விளங்கினாலும், படத்தின் அடிநாதம் திரைக்கதை மட்டுமே. அது சொதப்பினால், ராவணன் போன்ற கொடுமைகள் வெளிவரத்தான் செய்யும்.

இப்பொழுது, படத்தின் நடிப்பம்சத்தையும் பற்றிப் பார்க்கலாம்.

விக்ரம் – வீரய்யா. விக்ரம் பாரதியார் கவிதைகளைப் பாடிக்கொண்டே ஐஸ்வர்யாவுக்கு ‘எசப்பாட்டு’ பாடுவது கொடுமையிலும் கொடுமை. சற்று சிந்தித்துப் பாருங்கள்: உயிராபத்தான ஒரு சிச்சுவேஷன். உங்களை யாரோ கடத்தப்போகிறார்கள். அந்த நேரத்தில் நீங்கள், கடத்துபவனிடம் பாரதியார் பாடலைப் பாடினால், எப்படி இருக்கும்? அதைவிடக் கொடுமை, அந்தக் கொடூரமான நபரும், பதிலுக்கு அதே பாடலைப் பாடி, இந்த அந்தாக்‌ஷரியை முடித்து வைப்பது ! என்ன கொடும சார் இது ! காரணம் – வசனம் எழுதியவர் பெயர் சுஹாஸினி என்று போட்டிருக்கிறது. அப்ப சரி.

இந்த வசன அபத்தங்கள், படம் நெடுகிலும் உள்ளன. படத்தின் மேல் நமக்கு ஒரு வெறுப்பே வந்துவிடுவதற்கு, வசனங்களும் ஒரு காரணம்.

பாரதியார் பாடல்களைப் பாடுவது தவிர, விக்ரமின் வேலை, பிதாமகனில் அவர் ஏற்றிருந்த ‘சித்தன்’ பாத்திரத்தை இங்கும் நடிப்பது. அதே அலறல்; அதே அழுகை.. கடவுளே!

பிருத்விராஜ், அவருக்கு அளிக்கப்பட்ட (எந்தவித லாஜிக்கும் இல்லாத) பாத்திரத்தை நடித்துவிட்டுப் போயிருக்கிறார். ஒரே ஆறுதல், ஐஷ்வர்யா ராய். அவரது நடிப்பு, நன்றாக இருந்தது (போல் ஒரு எண்ணம்).

கார்த்திக் – இதில் அனுமான். அது கூடப் பரவாயில்லை. ஆனால், அனுமான் செய்யும் அதே குரங்கு சேஷ்டைகளை அவரும் செய்வது, கடுப்பை அதிகரிக்கிறது. மரத்துக்கு மரம் தாவி, காரின் மேல் ஏறிக்குதித்து, குரங்கு போலவே பேசி… அய்யகோ ! ஆண்டவரே… எம்மை ரட்சியும் !!

அட இது கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், மனிதர் பல்லைத் தேய்க்கும்போதுகூட, குரங்கு போலவே ஒரு கல்லின் மேல் குந்திக்கொண்டே பல்துலக்குவது, கொடுமையின் உச்சம். மணிரத்னம், “மிஸ்டர் கார்த்திக்.. இப்படத்தில் நீங்கள் ஒரு குரங்கு.. எனவே, குரங்கைப் போலவே நடியும்’ என்று சொல்லிவிட்டார் போல இருக்கிறது.

சரி. இப்போது சூர்ப்பனகையின் பாத்திரத்துக்கு வருவோம். பிரியா மணி. அவர் இப்படத்தில், பருத்திவீரனைப் போலவே அதே வேடத்தில் நடித்திருக்கிறார். போலீஸாரால் ரேப் செய்யப்பட்டு, விக்ரமிடம் புலம்பும்போது, பருத்திவீரனில் பேசுவாரே – அதே பாணி.. கொஞ்சம் கூட மாறவில்லை.

ஆக, ராமாயணத்தை அப்படியே இப்படத்தில் எடுத்துவைத்துவிட்டு, இது ராமாயணமே இல்லை என்று மணிரத்னம் பேட்டி கொடுக்கலாம். நான் விக்ரமின் பேட்டியை ஹெட்லைன்ஸ் டுடே சேனலில் சமீபத்தில் பார்த்தேன். “இது ராமாயணம் இல்லவே இல்லை” என்று மனிதர் சத்தியமே செய்தார். இருக்கட்டும்.

அவ்வளவுதான். அவ்வளவே தான்.

இதுவரை நான் பார்த்த மணிரத்னத்தின் படங்களிலேயே, ‘ராவணன்’ போன்ற படு திராபையான ஒரு படத்தைப் பார்த்ததே இல்லை. ஒரு திரைப்படத்தின் அத்தனை ஆஸ்பெக்ட்களிலும் படுதோல்வியை சந்தித்திருக்கிறது இப்ப்டம் என்றே சொல்லலாம்.

இப்படத்தைப் பற்றி இன்னமும் நிறைய விஷயங்கள் உள்ளன. அவற்றைப் பின்னூட்டங்களில் அவ்வப்போது (நினைவு வரும்போது) எழுதுவேன்.

சுபம்

ஜெய் ஸ்ரீ ராம் !

  Comments

86 Comments

  1. இங்கு பலரது விமர்சனங்களைப்படிதேன். அதில் ஐஸ் அவர்கள் சீதை கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்று.

    அப்படி இருக்கும் போது சீதையை எப்பொழுதும் முழு மாரைக் காட்டிக்கொண்டு எப்படி? இது சீதையை அசிங்கமா காட்டுவது ஆகாதா? இந்து மத்ததை புண்படுத்துவது ஆகாதா?

    சீதைக்கு ராவணன் மீது காதல் (மையல்) இருப்பதாக காட்டுவது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?

    ராமாரை கோழையாகா காட்டுவது (பேடி என்று வால்மீகி சொல்லிருந்தாலும்) -ப்ரித்த்விக்கு ஐஸ் ராவானனிடமிருந்து உயர் பிட்சை வாங்கிக் கொடுப்பது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?

    ராமர் தமிழனுக்கு ஒரு ஹீரோ தான்—ரஜினிகாந்த் மாதிர்! இது தமிழர் மனதைப் புன்படுத்தாதா? சரி அதை விடுங்கள.

    இதே படத்தை அப்படியே நூற்றுக்கு நூறு—எதையும் மாற்றாமல்-அப்பபடியே ஒரு சீமானோ அல்லது மணிவண்ணனோ அல்லது சத்யராஜோ எடுத்து இருந்தால் நம்ம ராமகோபாலன் என்ன செய்திருப்பார்?

    Reply
  2. hmmm… ambuttuthaanaa?

    Reply
  3. நேத்து தான் படம் ரிலீஸ் இன்னிக்கு விமரிசனம்

    உங்க வேகம் செம்மொழி மாநாட்டை விட ………………….

    கலக்குங்க மச்சி

    Reply
  4. க.க.க.போ!! இருந்தாலும் உங்ககிட்ட இருந்து நெறைய எதிர்பார்க்குறேன்.

    டெக்னிக்கல் சமாச்சாரங்களுக்கும், திரைக்கதைக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னாலும் பல மரமண்டைகளுக்கு புரிவதில்லை. என் ஃபேஸ்புக்கில் இருக்கும், நண்பர்களின் ஸ்டேட்டஸ் அப்டேட்கள் அனைத்திலும் இராவண் சூப்பர், ஹேட்ஸ் ஆஃப் என்று எழுதியிருக்கின்றனர். ஒவ்வொன்றிலும் போய் சண்டை போட்டு கொண்டிருக்கிறேன்.

    Reply
  5. // என்னதான் படம் டெக்னிகலாக சிறந்து விளங்கினாலும், படத்தின் அடிநாதம் திரைக்கதை மட்டுமே. அது சொதப்பினால், ராவணன் போன்ற கொடுமைகள் வெளிவரத்தான் செய்யும்//

    சூப்ப‌ரா சொல்லி இருக்கீங்க‌..இந்த‌ சூப்ப‌ரான‌ டெக்ல்னிக்க‌ல் ச‌மாச்சார‌த்தால‌தான் ப‌ட‌ம் மொக்கையாக‌ என‌க்கு தெரிய‌வில்லை போலும்..:( என்னை ஆச்ச‌ர்ய‌ப்ப‌டுத்திய‌ ச‌ந்தோஷ் சிவ‌ன் & ம‌ணிக‌ண்ட‌னுக்கு ப‌ரிதாப‌ப்ப‌ட‌ தோணுது உங்க‌ விம‌ர்ச‌ன‌த்த‌ வாசிச்ச‌துக்கு அப்புற‌ம்
    …வீண‌டிக்க‌ப்ப‌ட்டுட்டாங்க‌ளே..ஆவ்…:'(

    Reply
  6. விடுநர்: ஓசியில் டிக்கெட் வந்தபோதும் அதனை பார்க்காமல் வந்த நபர்.

    பெறுனர்: தெரிந்தே இருந்தும், சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட நபர்.

    கருத்து: எங்களுக்குகாக இன்னும் எவ்வளவு தியாகம்தான் செய்வீங்க பாஸ்?

    அன்புள்ள ஐயா,

    வணக்கம். நலம். வேதனை அறிய ஆவல். இதனைபோலவே அடுத்தமாதம் இளைஞன் , மன்னிக்கவும், கலைஞரின் இளைஞன் என்றொரு படமும் வருகிறதாம். அதனையும் பார்த்து விட்டு கண்டிப்பாக இரண்டில் எது பெஸ்ட் என்று சொல்லிவிடுங்கள்.

    முன்கூட்டியே நன்றிகள் பல.

    வணக்கம்.

    பின் குறிப்பு: அப்புறம், கெட்டுப்போன பழைய சோறை நீங்கள் அழகான பூக்கள் கொண்டு டேகொரெட் செய்தாலும் மேல் பார்வைக்கு மட்டுமே ஏமாற்ற முடியும் என்பதை சுகாசினியின் கணவரிடம் சொல்லிவிடுங்கள்.

    Reply
  7. பேசாம ராமகோபாலன் கிட்ட படத்தை பார்க்க சொல்லி தமிழ்நாட்டை ஒரு ரத்த புமியைக்கிடலாமா- தேளு…

    ஜெய் ஸ்ரீ ராம் .

    Reply
  8. இதுவரை படித்த விமர்சனங்களில் பக்கா விமர்சனங்களில் சுரேஷ்கண்ணன் விமர்சனமும் உங்கள் விமர்சனமும் ஒன்று.

    பக்கா!

    Reply
  9. // அய்யகோ ! ஆண்டவரே… எம்மை ரட்சியும் !!//

    ஓஹோ…… நீங்க அவிங்களா????

    எல்லாரும் நோட் பண்ணிக்கங்கப்பா….!!

    இந்தப் படத்தை இப்படி காய்ச்சறீங்களே?? Lioness-ன்னு ஒரு படம் வந்திருக்கு. பார்த்தீங்களா??

    Reply
  10. Mani kku vera velaiye illa pola? oruvelai kuppura paduthu josipaaro? epadi namma kodumai paduthalamnu LOL

    Reply
  11. நண்பா,
    இது புட்ட கேசுன்னு முதல்லயே தெரியும்.
    ஓவர் பில்டப்பு.
    இங்க துபாய்ல அநியாயத்துக்கு ரிலீசுக்கு முன்னயே இவர் உலக மகா இயக்குனர் அப்படி இப்பட்ன்னு,கடவுளே,இவருக்கு இதான் கடைசி படம்னு படிச்சேன்.அப்பான்னு இருந்துது.

    Reply
  12. வலையுலகிலேயே முதல் முறையா முச்சிங்கங்களுக்கும் ஒருத்தர் விமர்சனம் போடிருக்கார்,

    Reply
  13. S.Raman Vellore

    எச்சரிக்கை கொடுத்ததற்கு மிக்க நன்றி, ஆனாலும் அதி மேதாவிகளான
    மணிரத்னம் ரசிகர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்களே. பல படங்களில் சமூகப் பிரச்சினையை காண்பிப்பதாக சீன் போடுவார். இரு தரப்பும் தப்பு என்று சமப்படுத்துவதிலேயே அவரது அக்கறை அடிபட்டுப் போயிருக்கும். கேரள அக்ரகாரம் போல இந்திராவில் ஒரு சேரியை வடிவமைத்த யதார்த்த திலகம் அல்லவா சுகாசினி

    Reply
  14. கார்த்திக் போன்ற வாழ்ந்து கெட்ட நடிகரை இப்படி அவமானப்படுத்தனுமா?
    இந்த வேஷத்தை தெலுங்கில் யார் செய்யுறா?தெரியுமா?
    ஹிந்தி அதைவிட கோரம்,அதில் அபிஷேக் பச்சன்,அப்பாவுக்கு கெட்டபேர் கொடுப்பவர்.

    Reply
  15. நம் தமிழ்நாட்டில் இந்து கடவுள்களை நம்மை ஆண்டவர்கள் அடிக்கடி கிண்டல் செய்வதால் நமக்கு நிறைய சகிப்பு தன்மை உள்ளது. எனவே,இந்த படத்தினை பாடல், கேமிரா,ஐஸ் அழகு என்று சொல்லி விட்டு போய் விடுவோம்.வட இந்தியாவில் ராமரை நிஜ அவதார புருஷனாக தான் பார்க்கிறார்கள் இன்னமும்.அதனால் இந்த கதை ராமாயணம் என்று இந்த கூட்டம் ஒத்துக் கொள்ளவே செய்யாது..அங்கு படம் ஓடுமா?சுகாசினி இந்திரா படத்திலே செய்யாத செயற்கை விஷயங்களா?எரிச்சல் தான் மிச்சம்..

    Reply
  16. //அப்புறம்தான் தெரிந்தது, இது ஒரு டெம்ப்ளேட் அமைப்பு என்று.//
    ஐயகோ இதேபோல 30 மெயில் வந்தது நண்பா,
    கோராமை.மெயில் ஃபாரவார்ட் செய்யவே பிறந்த ஒரு கூட்டம் என தோன்றியது,இது போன்ற மரணமொக்கைகளை மக்கள் மிதிக்க வேண்டும்,படத்தின் பல காட்சி அமைப்புகள் அகிரோவின் ரோஷமான் படத்தின் தழுவலாம்.பிளாக் அண்ட் ஒயிட்டையும் கூட விடமாட்டேன் என்கின்றனர்.

    Reply
  17. அன்புள்ள கருந்தேள்,
    அது எப்புடி நீங்க இந்த படம் படு திராபைன்னு சொல்லலாம்? இது ஒரு ஒலகசினிமா பாஸ். நீங்க இன்னும் 2,3 தடவை பாருங்க.கண்டிப்பா புடிக்கும்!!
    டிஸ்கி:
    ——
    நான் இன்னும் பாக்கல.ராஜேஷ் மதியமே sms அனுப்பி போயிராதீங்கன்னு சொல்லிப்போட்டாரு…..ஹி ஹி ஹி

    Reply
  18. @ ஹாலிவுட் பாலா
    //// அய்யகோ ! ஆண்டவரே… எம்மை ரட்சியும் !!//

    ஓஹோ…… நீங்க அவிங்களா????

    எல்லாரும் நோட் பண்ணிக்கங்கப்பா….!!

    நோட்டட்…நோட்டட். ரொம்ப நன்றி தல 🙂

    Reply
  19. ஆமா தமிலிஷ்ல எப்புடி மைனஸ் ஓட்டு போடுறது…எனிபடி ஹெல்ப் மீ….

    Reply
  20. ஓஹோ…… நீங்க அவிங்களா????

    பாலா விட்டுடாதீங்கள்…. அப்படியே கொண்டு போங்க.

    கண்ணாயிரம்……….

    சிவகுமார் கூட மணிரத்னத்தை ஆகோ ஓகோன்னு புகழும் போது மனதிற்குள் ஒலித்திக்கொண்டுருந்த கேள்விகள் இப்போது தான் ஒவ்வொருவரின் வார்த்தைகளாகவும் வந்து கொண்டுருக்கிறது.

    வீட்டில் எல்லோரும் கூடியிருக்கும் இவரின் படத்தை போட்டால் காட்டுக்கத்தல் வரும். நீ தனியா இருக்கும் போது பாத்துக்கடா, எங்களால் தாங்க முடியுதுடான்னு கெஞ்சுவாங்க…..

    Corporate Range க்கு தமிழ்படத்தை கொண்டு சென்றவர் என்பது எவராலும் மறக்க முடியாது?

    Reply
  21. @ சூர்யா – 😉 ஜெய் ஜெய் ராம் ராம் 😉

    @ ஆட்டையாம்பட்டி அம்பி – நண்பா . . தப்பாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.. நான் ஆரெஸெஸ் இல்லை. எனவே, உங்கள் பின்னூட்டம் தவறான முகவரிக்கு வந்துவிட்டது என்று நினைக்கிறேன்..

    @ பப்பு – அம்புட்டே தான் !! 😉

    @ பாரதி – நண்பா.. இப்படம், எனக்குத் துளிக்கூட பிடிக்கவில்லை. டெக்னிக்கல் விஷயங்கள் சூப்பர் தான்.. ஆனால் நீங்களே சொல்லியுள்ளபடி, அவர்கலை நினைத்து நாம் பரிதாபப்படத்தான் வேண்டும். புரிந்துணர்வுக்கு நண்றி நண்பா..

    @ சிபி – ஹீ ஹீ . .எல்லாம் ஒரு பீலா தான் 😉

    @ பிரசன்னா ராஜன் – நண்பா . . இதே தான் எனக்கும் நடக்குது.. நானும் சண்டை புடிச்சிக்கினு தான் கீறேன்.. என்ன கொடும இது !

    @ விஸ்வா – உங்க கடிதம் டாப்பு !! என்னாது .. ? அடுத்த மாசம் இன்னொரு படமா.. தாங்காதையா தாங்காது !! மீ த எஸ்கேப் !

    @ நாஞ்சில் பிரதாப் – இது நல்ல ஐடியா மாப்பி!! அவுருக்கு ஒரு கள்ள மெயில் அனுப்பிர வேண்டியது தான் ! 😉 அப்பறம் காமெடி பின்னியெடுக்கும்ல 😉

    @ குசும்பன் – உங்களது பின்னூட்டத்துக்கு மிக்க நன்றீ.. அவரது பதிவைப் படித்தேன்.. அது இதைவிட டாப்பு ! அவருக்கும் பின்னூட்டியிருக்கிறேன்.. இனி அடிக்கடி வாங்க நண்பா !

    @ ஹாலிவுட் பாலா – அட தல !! நான் செத்தேன் ! 😉

    உங்க Lioness (18+) விமர்சனம் பார்த்தேன் . . என்ன ஒரு விமர்சனம் அது ! ஒலக விமர்சனப் போட்டில இது வந்துச்சி, அப்புறம் ஒரு பயல் அந்தப் பக்கம் வர முடியாது… !! அக்காங்

    @ Siva – நண்பா . . கரெகிட்டா சொல்லிட்டீங்க.. ஆனா யோசிக்கும்போது, சும்மா யோசிக்க மாட்டாரு. . . இலைதழைகளைப் புகைச்சிக்கினே யோசிப்பாரு (if u know what I mean).. 😉

    @ கார்த்திகேயன் – நண்பா . .அந்த் ஐண்டர்வ்யூவை நானும் பார்த்தேன்.. ஆனா உடனேவே இது கடைசி இல்ல.. இன்னும் ஒரு படம் எடுப்பேன்னு சொல்லிபுட்டாரு நன்பா ;-(

    அப்புறம், கார்த்திக் பேரு வந்தவுடனே நானு மட்டும் தான் ‘உய் உய்’ன்னு பெரிசா விசிலடிச்சேன் . . அவுரு வரும்போதும் தான்.. ஆனா, அவுரு டோட்டலா வேஸ்ட் ஆயிட்டாரு ! கொடும..

    அதே போல், ரஷொமான் காட்சிகள், மிகச்சில காட்சிகள்ல வருது.. காட்டுக்குள்ள போறது.. மத்தபடி, அந்த ஃபார்வோர்ட் மெயில்கள் இனிமே வந்துச்சின்னா, கடுமையா எதிர்வினை புரியப்போறேன்.. 😉 பார்க்கலாம்.

    @ ராமன் – கண்டிப்பா நண்பா . .அந்த சமூகப் பிரச்னைகள் எல்லாம், சும்மா படத்தை காசாக்க.. அத்தனையும் போலி அக்க்றை நண்பா.. கரிகிட்டா சொன்னீங்க..

    @ அமுதா கிருஷ்ணா – வட இந்தியாவுல படம் கண்டிப்பா ஓடாது.. அது உறுதி.. இந்தியாவுல எங்கியும் இது ஓடாது.. அந்த அளவு திரைக்கதைல ஓட்டைகள் பல..

    @ மயிலு – ஏன் இந்தக் கொலவெறி? 😉 ராஜேஷ் வேற என்னல்லாம் சொன்னாரு 😉

    என்னாது மைனஸ் ஓட்டா? மக்கா ஒரு பயல் ஊருக்குள்ள நடமாட முடியாது.. பிச்சிப்புடுவேன் பிச்சி.. சொல்லிப்புட்டேன் . . அக்காங்

    @ ஜோதிஜி – ஆஹா… இன்னும் எவ்வளவு பேரு இப்புடி கிளம்பிருக்கீங்க 😉

    மத்தபடி, இந்த ஒரு படம் போதும்.. இனி மணிரத்னம்ன்னாலே அவனவன் அலறப்போறான். . தியேட்டர்லயே ஒரு மயான அமைதி.. படம் முடிஞ்சவுடன் அங்கங்க சௌண்டு வந்திச்சி பாருங்க.. அதையெல்லாம் அவரு கேட்டாரு… உடனே ரிட்டயர் தான்..

    Reply
  22. எதிர்பார்த்தது போல வந்த விமர்சனங்கள் எல்லாம் சரியாக அமைஞ்சு போச்சு…

    ஓகே… இனி எதிர்பார்ப்பு இல்லாம டிவிடியில பார்த்துக்கலாம் 🙂

    Reply
  23. //வீட்டில் எல்லோரும் கூடியிருக்கும் இவரின் படத்தை போட்டால் காட்டுக்கத்தல் வரும். நீ தனியா இருக்கும் போது பாத்துக்கடா, எங்களால் தாங்க முடியுதுடான்னு கெஞ்சுவாங்க…..//
    ஜோதிஜியின் இந்த பின்னூட்டம் மிகவும் வாஸ்தவமானது,எல்லார் வீட்டிலும் நடப்பது,சீரியஸான விஷயத்தில் ஆபாசம் நுழைப்பது தேவயில்லாத ஒன்று,உதாரணம்,மனிஷா ஓடி வரும் அந்த கண்ணாளனே காட்சி.

    Reply
  24. ஏனோ, சிரத்தையுடன் விமர்சனம் எழுதும் பலரும், என்னவென்றே தெரியவில்லை… மணிரத்னம் பாணியிலேயே… ‘பட்டும் படாமல்’, ‘தாமரை இல்லை தண்ணீர் போல’ அவரது இந்த படத்துக்கும் விமர்சனம் என்ற பெயரில் ‘நுனிப்புல்’ பதிவு போட்டிருக்கிறார்கள். ‘சினிமா மாமேதை'(?) மணிரத்னம் படத்தை குறை சொன்னால், தன்னை ‘விஷயம் இல்லாதவன்’ என்று மற்றவர்கள் எண்ணுவார்கள் என்று ஐயுறுகிறார்களோ..? சரி, போகட்டும்…

    ஆனால், நீங்கள் வித்தியாசமானவர். உண்மையை யாருக்கும் பயப்படாமல் உடைத்துள்ளீர்கள்.

    நான் இப்படத்திற்கான-இதுவரை வலையில் படித்ததிலேயே- ஏறக்குறைய முழுமையான தரமான தெளிவான விமர்சனம் இது தான்.

    வெல்டன், மிஸ்டர் ஸ்கார்பியன் 1000 ஐஸ்.

    Reply
  25. எல்லோருடைய விமர்சனமும் நிறைகுறைகளை தாங்கி வந்துள்ளது. அதில் உங்கள் விமர்சனம் டாப்.

    Reply
  26. எனக்கும் நெறைய MSG சூப்பர் அமேசிங் அப்டினெல்லாம்

    Reply
  27. சுஜாதா இல்லாத குறையை நிச்சயம் உணர முடிகிறது…

    Reply
  28. Anonymous

    Attu Movie. Ithuku ivlo build-up a?. BTW, Maniratnam sonthama
    yoschichi oru kathai elutha maattara?.

    Periya kodumai ennana… IswaryaRai TAMIL pesurathuthan.

    Reply
  29. Anonymous

    couple of corrections…. in “ayutha ezhuthu” madhavan’s character kills his own brother. he doesnt join someone else who has killed him. madhavan guns down his brother with his own hands.

    and in “raavanan” all the policemen who raped priya mani are killed. in the beginning of the film they are burnt alive or they are hacked to death in a village fair and one of them has his leg chopped off. the john vijay character is accused of taking the sister to the police station. no dialogue says he is a rapist. also his manhood is cutoff as a punishment. karthik’s dialogue on seeing the naked john vijay makes it clear as to what has been done to him.

    Reply
  30. என்ன பாஸு! எங்கே ஊருல இந்தி பதிப்பு போட்ருகாங்க. எப்படியாவது சப்டைட்டில் படித்தாவது சந்தோஷ் சிவனுக்காக பாக்கலாம்னு இருந்தேன். மணி செம கத்தி போட்டார் போல இருக்கே!

    Reply
  31. @ கார்த்திகேயனும் அறிவுத்தேடலும்

    //ஒன்று,உதாரணம்,மனிஷா ஓடி வரும் அந்த கண்ணாளனே காட்சி//

    அவ்ளோ நல்லவனால நீர்?அந்த காட்சியை மட்டும் நானு எம்புட்டி தடவை பாத்தேன்னு எனக்குதான் தெரியும். சரி விடுங்க, திருமதி.மனீஷாவப் பத்தி நாம் ஏன் பேசனும்?!!

    Reply
  32. @ karunthel

    அனானிக்கு பதில் சொல்லுங்க தம்பி கருந்தேள். தூங்கிக்கிட்டே படம் பாக்குறது, இல்லை கைப்பேசிய நோண்டிக்கினே படம் பாக்குறது– அப்புறம் படம் நல்ல இல்லை, புரியலைங்குறது!! மணிரத்னம் படத்தெல்லாம் ஒரு மீப்பொருண்மை மனநிலையோட பாக்கனும்ணே!

    பி.கு:
    —-
    ”மீப்பொருண்மை”னா என்னான்னு ஜெமோகிட்ட கேட்டுக்குங்க. நான் ரொம்ப பிஸி.எனக்கு நெறைய வேலை இருக்கு.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    Reply
  33. இது அடாசுனு ஆரம்பத்துலையே தெரியும் பிரதர்.இதுக்கெல்லாம் இவ்ளோ பில்ட் அப்பா?சமீப கால மொக்கைகளின் வரிசையில் இதுவும் ஒண்ணு.ஆனா சூப்பர் ஹிட் மூவி ஆயிடும் பாருங்க. 😉

    Reply
  34. //முதல் ஓட்டை – மணிரத்னத்தின் அத்தனை படங்களிலும் நாம் கண்ட அதே பிரச்னை – ஒரு சம்பவத்தை எவ்வளவு மேம்போக்காகப் பார்க்க முடியுமோ, அவ்வளவு மேம்போக்காக அதனை மேய்ந்துவிட்டு, யாராலுமே ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு ஒரு மொண்ணையான சல்யூஷன் கொடுப்பது அவரது வழக்கம். இதற்கு உதாரணம், ரோஜா, பம்பாய், தில்ஸே, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் வெளிப்படையாகவே நாம் அவதானிக்கலாம்.//

    இப்படத்திலும் இதே பிரச்னையை நாம் பார்க்கிறோம்//

    அடுத்த‌ ப‌ட‌த்திலும் இதே பிர‌ச்சினையை பார்ப்போம் அப்ப‌வும் அடுத்த‌ ம‌ணி ப‌ட‌த்தை பார்க்காம‌ல் விட‌ மாட்டோம்!!

    Reply
  35. //இதுவரை நான் பார்த்த மணிரத்னத்தின் படங்களிலேயே, ‘ராவணன்’ போன்ற படு திராபையான ஒரு படத்தைப் பார்த்ததே இல்லை. //

    ஒரு வரி சொன்னாலும் திருவரி.இதே கருத்தைத்தான் நானும் சொன்னேன். அதற்கு அவ்வளவு எதிர்ப்பு எனக்கு. மேலாட்டமாக படங்களைப் பார்ப்பவர்களால் எவ்வளவு ஆபத்து என்பது நீங்கள் குறிப்பிட்டது போல் software மக்களால் தான் ஏற்படுகிறது.

    Reply
  36. விமர்சனம் மட்டுமே எழுதுபவர்கள் விமர்சனம் எல்லாம் ஒரு விமர்சனமே அல்ல

    Reply
  37. இந்தக் கதையைத் தான் ஆதிகாலத்திலிருந்தே சம்பூர்ண ராமாயணம், (பழைய) தசாவதாரம், தெலுங்கு என்.டி. ஆர் ராமாயணம், டிவி ராமாயணம், பின்னர் இப்போதும் இன்னொரு டிவி ராமாயணம் என்று பலமுறை பார்த்தாயிற்றே.

    அட இது ரீமிக்ஸ்

    Reply
  38. Anonymous

    நீங்கள் இந்தப்படத்தின் உள் அர்த்தங்களை சரியாக உள்வாங்கவில்லை எனத்தோன்றுகிறது.இன்னும் ஒரு முறை படத்தைப்பார்க்கவும்.

    Reply
  39. i saw the Hindi version, i just saw it as a movie…not relating with any mythology backdrop. the movie was quite entertaining and kept me engaging till the end. i liked it!

    Reply
  40. Anonymous


    தனது தங்கையைக் கற்பழித்தவர்களில் ஒருவனான போலீஸ்காரனை, ஜஸ்ட் மொட்டை மட்டும் அடித்து கழுதை மேல் ஏற்றி, அனுப்பிவிடுகிறான்.

    ////
    நீங்க‌ ப‌ட‌ம் பார்த்த‌ ல‌ட்ச‌ண‌ம் அப்ப‌டி. கார்த்திக் ட‌ய‌லாக்கிருந்தே என்னானு தெரிய‌லே??

    த‌ம்பி jesus ப‌ற்றி ப‌ல‌ நூறு ப‌ட‌ங்க‌ள் வ‌ந்திருக்கு, இராம‌ய‌ண‌த்தை இன்னும் ப‌ல‌ ப‌ரிமாண‌ங்க‌ளில் எடுக்க‌லாம்.

    Reply
  41. Anonymous


    இந்தக் கதையைத் தான் ஆதிகாலத்திலிருந்தே சம்பூர்ண ராமாயணம், (பழைய) தசாவதாரம், தெலுங்கு என்.டி. ஆர் ராமாயணம், டிவி ராமாயணம், பின்னர் இப்போதும் இன்னொரு டிவி ராமாயணம் என்று பலமுறை பார்த்தாயிற்றே. . இப்பொழுது, மறுபடியும், இந்தக் கதையை, ‘ராவணன்’ என்ற பெயரிலும்

    ////

    த‌ம்பி jesus ப‌ற்றி ப‌ல‌ நூறு ப‌ட‌ங்க‌ள் வ‌ந்திருக்கு, இராம‌ய‌ண‌த்தை இன்னும் ப‌ல‌ ப‌ரிமாண‌ங்க‌ளில் எடுக்க‌லாம்.

    Reply
  42. கருந்தேள் சார்…… இதுவரைக்கும் நான் படிச்ச விமர்சனகளிலேயே உங்களுடைய விமர்சனம்தான் டாப் …. சரியா படத்த புட்டு புட்டு வச்சிரிக்கிங்க. எனக்கும் ஒன்னுமே புரியலே ……..மணிரத்னம் படம்னா அஹா….ஓஹோ எழுதுறாங்க .மணிரத்னம் என்ன …உலக மகா அறிவு ஜீவியா ? . இவர் மனைவி ஒரு தடவை ஒரு சினிமா விமர்சனத்தில் தரக்குறைவாக பேச வாங்கி கட்டிகொண்டார் . என்னமோ இவர்கள் செய்வதுதான் சரியான விமர்சனம் போலவும் ,இவர் கணவர் மணிரத்னம் எடுக்கும் படங்கள் தான் உலக அற்புத படங்கள் போலவும் தமிழ் சினிமா உலகமும், சாட்டிலைட் சேனல்களும் ,பத்திரிக்கைகளும் முண்டி அடிச்சிக்கிட்டு நிக்கிறாங்க…………ஏன் ?
    இது போன்ற குப்பையான கதைகளை கொண்ட படங்களை புறம் தள்ள வேண்டும் .

    Reply
  43. @ ரஃபீக் – இது பாயிண்ட்டு ! இத னிதானமா டிவிடில பார்க்கலாம்.. ஆனா அப்பவும் மொக்கை தாங்காதே !! 😉

    @ UFO – ஆமாம் நண்பா.. பல ஆங்கில சைட்டுகள்லயும், தமிழ் பத்திரிக்கைகள்லயும், இத ஆஹா ஓஹோன்னு

    பார்ருறாங்க.. ஆனா படத்தில எதுவுமே இல்ல.. எரிச்சல் தான் மிச்சம்.. நன்றி நண்பா..

    @ அக்பர் – மிக்க நன்றி.. அடிக்கடி வரவும்..

    @ பேநா மூடி – அட இந்த மாதிரி மெயிலு எஸ் எம் எஸ்ஸெல்லாம் சும்மா வந்துக்கினே இருக்கு… இவங்களையெல்லாம் கட்டி

    வெச்சி, பெண் சிங்கம் பாக்க சொல்லலாம்னு இருக்கேன் 😉

    @ குரு – அதே தான் ! சுஜாதா இல்லாத குறை, படம் முழுக்கவும் தெரிகிறது…

    @ அனானி – ஆய்த எழுத்தில், பாரதிராஜா தான் மாதவனின் அண்ணனைக் கொல்லச் சொல்கிறார். அவரிடமே மாதவன் போய்

    விழுவதைத்தான் அப்படி சொல்லியிருக்கிறேன்..

    அதே போல், முதல் காட்சியில் போலீஸார் செத்தது கவனித்தேன். எரிக்கப்படுவார்கள். அவர்கள் தான் தங்கையை ரேப்

    செய்ததையும் அறிவேன். ஆனால், விக்ரமின் கதாபாத்திரத்தின் வடிவமைப்பில் மணிரத்னம் செய்த ஓட்டைகளைப் பற்றி

    எழுதும்போது வெளிப்பட்ட ஒரு உதாரணச் சம்பவம் அது. படம் முழுக்க, இந்தக் கதாபாத்திரத்தின் முரண்பாடுகள் வெளிப்பட்ட

    விதமாகவே உள்ளன. உங்கள் கருத்துக்கு நன்றி..

    @ மீனாட்சி சுந்தரம் – தல.. சொந்த செலவில சூனியம் வெச்சிக்காதீங்க.. அவ்ளோதான்.. சொல்லிப்புட்டேன் 😉

    @ மயிலு – அடப்பாவி ! கும்மி இன்னமும் தொடருதா ? 😉

    அனானி சொன்னதுக்கு பதில் சொல்லியாச்சி ;-).. மத்தபடி, படம் ஓடும்போது நான் அல்லாருக்கும் படத்தப் பாக்காதீங்கன்னு

    மெஸெஜ் அனுப்புனது உண்மை தான்.. அதுல ஒரு மானஸ்தன் பேரு மயிலு 😉

    அதென்னது? மீப்பொருண்மையா? அது எந்தக் கடையில கிடைக்குது ? சொல்லுங்க வாங்கிக் குடிக்கிறேன் 😉

    @ இலுமி – எனக்கென்னமோ இது ஃப்ளாப் ஆயிரும்னு தோணுது… பொறுத்திருந்து பார்ப்போம் 😉

    @ கரிசல்காரன் – நண்பா… நீங்க சொன்னது சரிதான்… நாம பாக்குறத உடமாட்டோம்.. அவரும் மொக்கையா

    படமெடுக்குறத உடமாட்டாரு 😉

    @ கவி – அந்த மாதிரி மெயிலு வந்துச்சின்னா, உங்க எதிர்ப்பைத் தயங்காமல் காட்டுங்க.,.. உடாதீங்க.. இல்லேன்னா,

    இவங்க கருத்துக்களை நம்பிப் படத்தைப் பார்க்குற மக்கள் நொந்திருவாங்க நண்பா..

    @ prabhuphotojournalist – மொக்கையா படம் எடுக்குறவங்க படமெல்லாம் ஒரு படமே அல்ல.. 😉 இதுதான்

    முதல் உண்மை.. மொதல்ல அவங்களை நல்லபடமெடுக்க சொல்லுங்க. அப்பறம் நாங்கெல்லாம் நல்லா விமர்சனம்

    எளுதுறோம்.. 😉

    @ சௌந்தர் – 🙂 ஆமாங்க தல.. இது மொக்கை ரீமிக்ஸ் தான் 😉

    @ அனானி- என்னாது உள்ளர்த்தமா ?? ஆத்தாடி ஆள உடுங்க.. ஒரு தடவைக்கே உயிரே போன ஃபீலிங்கி.. இதுல இன்னொரு தடவை பார்த்தா, செத்துருவேன்… உங்களுக்கு ஏன் இந்தக் கொலைவெறி ? 😉

    @ Kamal – உஙளுக்குப் புடிச்சது குறிச்சி மகிழ்ச்சி.. எனக்கு சுத்தமா புடிக்கல நண்பா..

    @ இரண்டாம் அனானி – ரைட்டு.. நீங்க படம் பார்த்த லட்சணத்தப் புட்டுப்புட்டு வெச்சதுக்கு நன்றி.. ராமாயணத்த பல பரிமாணங்கள்ல எடுக்கலாம் தான்.. ஆனா இது மொக்கையின் உச்சம்ணா.. முடியல..

    @ ஷாஜஹான் – கண்டிப்பா இது போன்ற குப்பைகளைப் புறம் தள்ள வேண்டும் தான்.. இப்பவே தியேட்டர் காத்தாட ஆரம்பிச்சாச்சு.. சீக்கிறம் அது நடந்துரும்.. ஆனா நம்ம மீடியா, மணிரத்னம் என்ன செஞ்சாலும் இப்புடித் தான் பப்ளிசைஸ் பண்ணுவாங்க.. அது ஒரு தனிக் கொடுமை ! உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..

    Reply
  44. Anonymous

    கருந்தேள் சார்,
    உங்க பேச்ச கேக்காம படம் பாக்க போன என் ஒத்தகாது செவுட்டு அண்ணனுக்கு இன்னொரு காதும் டமாரமாய்டுச்சு சார்,எதோ வசனத்துக்கு பதிலா அருவிசத்தம் தான் வருதாமே,எங்க அண்ணன் வேற ஸ்பீக்கர் பக்கம் உக்காந்தாராம்,எதாவது இன்சூரன்ஸ் கிடைக்குமா?
    மெட்ராஸடாக்கீஸில் ஃப்ராது குடுக்காலாமா?

    Reply
  45. Anonymous

    @அனானி,
    நீங்க வேற,பாரதியார் பாட்டை அயிசுவரியா பாடுறத கேட்டு தூங்கிக்கிட்டிருந்த என் நண்பனுக்கு சித்தபிரமை புடிச்சிட்டுய்யா,
    மெட்ராஸ் டாக்கீஸுக்கு நான் போய்ட்டு வந்தேன் பிராது குடுக்க.
    1மாசத்துக்கு கொடைக்கானல் டூராம்.
    நீங்க போனா சுண்ணாம்புகூட குடுக்கமாட்டாங்களாம்யா.
    போங்கய்யா,வாங்க போய் புள்ளகுட்டிய படிக்கவைப்போம்.

    Reply
  46. Anonymous

    ஏன் சார்
    வெளிநாட்டில் படம் புடிக்காட்டி டிக்கெட் காசை திருப்பி குடுப்பானாமே?
    நம்ம ஊர்ல குடுப்பானா?10பேர் டிக்கெட் காசு வாங்கனும்,பாதிபடத்தில் இந்த பின்னூடம்

    Reply
  47. Anonymous

    @அனானி,
    படம் முடிஞ்சிடுச்சா,
    போய் கேட்டீங்களா காசை.
    கழுத்த சேத்து வச்சி ஒன்னு குடுத்தானா?
    பின்ன என்ன?தியேட்டர் காரனே வந்தவரை லாபம்னு ஓட்டறான்.
    படத்தை.அடுத்த மாதம் ஆனந்த விகடன் வாங்குனா படம் டிக்கட் ஃப்ரீயாம்யா.அலச்சல பாரேன் இதுகளுக்கு.
    தலைவலிதைலம் ஃப்ரியாக்குடுக்கறத்துக்கென்ன.
    என் புதுப்பொண்டாட்டி கோச்சுக்கிட்டு போய்ட்டாய்யா,அந்த வெறுப்பு தான் எனக்கு,இது ஊத்திக்கும் பாரேன்.ராஜ் டீவிக்கு சங்குதான்.

    Reply
  48. நண்பரே,

    உங்கள் விமர்சனம் ஒரு மிகையான போலியை அதன் வரிவரியாக உரித்திருக்கிறது. அடி பின்னி பிழிந்து விட்டீர்கள் 🙂 படம் முடிந்து திரையரங்கைவிட்டு நீங்கள் வெளியேறிய வேளையில் உங்கள் முகத்தையும், உங்களிடமிருந்த கோபத்தையும் கற்பனை செய்து பார்க்கிறேன் 🙂 இவ்வகையான இயக்குனர்கள் இனியும் போலியான அர்த்தமற்ற விமர்சனங்களில் குளிர்காயாது உண்மையான படைப்பொன்றை தரவிழைந்தால் அதுவே போதுமானது. சிறப்பான விமர்சனம்.

    Reply
  49. நண்பரே:
    படம் பார்த்து வெளியே வந்தும் உடல் முழுவதிலிருந்தும் (குறிப்பாக காதுலிருந்து) ரத்தம் வழிவது நிற்கவில்லை.சரியான ப்ளேடு!! என்னை போலவே ஜுன் – 19 அன்று நிறைய அப்பாவி மக்கள், டெட்ராய்டில் ஏ.ஆர். ரஹ்மானின் நிகழ்ச்சி ரத்தானதால், நாங்களே வலியப் போய் மாட்டிக்கொண்டோம்.
    திருமூர்த்தி

    Reply
  50. vanakkam,

    i accept v have heard lot of Rama stories. But have any one of us heard in this perspective of pointing the Ravana’s part of story and his part of justification. Except ‘Ravana kaviyam’ by ‘Pulavar Kuzhanthai’. Watch it as a Epic. U ll get to know about the foolish Hindu cult(sorry if i’m offending but its true). Even if u watch it as real time story it speaks bout the problem happened in Veerapan case.

    Okay guys wat Justice u want from Mani if u r sayin he makes his movie as a membokku mudivilla movie..? Is he a supreme court Justice r wat.. he makes u tothink nd come to ur own decision. he doesnt wanna force u. tat s wat thinking means. he wants u to think..

    friends this s not a commercial movie please try to watch it with some sense. without that dont watch dis movie.

    if a creator makes a gd work i cant understand wats the problem with u guys..

    “paarata arivillaya illa manasillaya??”

    Reply
  51. Anonymous

    ஐயோ ,
    கருந்தேள் சார்.
    மோசம் போய்ட்டோம்சார்,எப்பவும் படிக்கிற விமர்சனத்த நம்பி போனா கால வாரி விட்டுரிச்சி சார்,இனி,உங்க விமர்சனம் படிச்சிட்டு தான் சார் போய் பார்ப்பேன்.சார் தயவு செஞ்சு தமிழ் படத்துக்கு உங்கள மாதிரி ஆட்கள் எழுதுங்க சார்,நாங்க உங்க கீட்டேந்து நிறைய மாற்றுப்பார்வையையும்,சவுக்கடி விமரசனத்தையும் எதிர்பார்க்குறோம்,அயோ போச்சே,காசு 400 ரூபாய் போசே!!!#######பய்யன்ங்க,இப்புடியா எடுப்பான் படம்,வண்ட வண்டயா வருது,அந்த வடநாட்டுக்காரி மார காட்டுறத்துக்கா சார் 400 ரூவா டிக்கேட்டு,தூ,தன் மேல் நம்பிக்கையில்லாதவன் தான் பொம்பள மார காட்டி படம் எடுப்பான்,இவ்ளோ சீரியஸா.

    Reply
  52. Anonymous

    அட மணிரத்தனம் உருவிகளா,
    சாமியோவ் உங்களையெல்லாம் கையெடுத்து கும்பிட்டு கேக்குரேன்,தயவுசெஞ்சு நிறுத்திக்கோங்க,உங்க பூசாரித்தனமும் வேணாம் பொங்கச்சோறும் வேணாம்,எனக்கு,என் லவ்வருக்கு,அவ தங்கச்சிக்கு,அவ ஃப்ரெண்டுக்குன்னு1200+கால் டாக்ஸி 600+ஹோட்டல் டிஃப்ன்னு 700ன்னு செலவு பண்ணி இந்த மொக்கைக்கு போனா ,பாதிலயே போலாம் வான்னு என் லவ்வர் தரதன்னு காரி துப்பி கூட்டிட்டு போய்ட்டாய்யா,படமா எடுக்கரீங்க படம்,மண்ண வாரி தூத்திடுவேன்,அறுக்கத்தெரியாதவனுக்கு ஏன்யா 1008 கதிரரிவாள்?
    அத்தினி அஸிஸ்டெண்ட் டைரக்டரு,உங்கள மாதிரி கார்பொரேட் ஃபார்வார்டர்ஸ்,கொஞ்சமாவது ரோஷமிருந்தா படம் நல்லா குடுத்துருக்கனும்,எவனாவது வக்காலத்து வாங்குனினீங்க,பேரை சனிரத்தனம்னு மாத்திக்க சொல்லு சரியா இருக்கும்.
    சனிஸ்வரன் போட்ட ரத்தகோடு மாதி படம்.

    Reply
  53. Anonymous

    Hopeless miscast in the title role, Abhishek lacks the gravitas and screen presence to pull off such a pivotal character.Utterly unconvincing, with eyes wide open often and a weird laugh, Abhishek looks and behaves like a whacko on an overdose of cocaine.

    Unlike other great villains in Indian movies, notably Amjad Khan as Gabbar Singh in Sholay, Abhishek Bachchan never once evokes fear in Raavan but seems strangely comical. Never has the mighty demon king Raavan been reduced to a weird caricature through the actions of a pygmy on the screen.

    When he’s with the fellow tribals, when he’s with his kidnap victim, when he’s fighting the cops and in the key confrontations (with Ragini and with the cop Dev), Abhishek is all at sea. Beyond salvage.

    When the woman calls him a janwar (animal), the simpleton laughs like a compliment has been proffered. If Abhishek is the shortest midget in the acting menagerie in Raavan, his co-stars Aishwarya Rai and Vikram) are not far behind.

    When she’s not tormenting us with her shrill screams, Aishwarya is too wooden to show even a spark of acting talent. Be it in the initial confrontation with Beera or the polygraph test moment with her husband on the train or the final scenes the woman is a nightmare as far as acting.

    Oftentimes, Aishwarya never looked like she was a kidnap victim in the rough milieu of a jungle but more like a beauty queen with some minor discoloration on the face.Vikram, the South Indian actor who has demonstrated some acting skills in the past, is a complete disappointment here.

    Not once do we see the anguish after his wife is kidnapped or the passion for his wife in the bedroom scene nor the aggressive determination to finish Beera. Au contraire, the fella has the look of a desperately constipated man whose bottle of laxatives is missing.Rest of the Drivel
    Much has been said of Raavan’s supposedly breathtaking photography. While we would not deny that the movie has been filmed in the picturesque, lush jungles of India it’s by no means a work of art.

    Neither the music nor the accompanying picturization add much value to the movie. The picturization is mediocre at best.Also, there’s poor chemistry between Vikram and Aishwarya Rai, an inexcusable sin considering they are supposed to be deeply in love with each other and the raison d’etre for much of the movie.Priyamani didn’t do any damage in the short role.And the ending was, oh, so limp. Besides being utterly implausible.

    Stay Away
    Folks, Raavan is a despairingly bad movie completely unworthy of your attention.If ever there’s a Bollywood movie with all downside and no upside, it’s Raavan, it’s Raavan, it’s Raavan.Do not even consider wasting your time or money on such third-rate trash.Show these shameless devils your middle finger with gusto.

    Reply
  54. Anonymous

    And while we’re are at it, let’s pull the life-support plug on the other nincompoops too, i.e. Ash, Vikram and Mani Ratnam.

    For it’s this wicked quartet that bamboozled us of 2-hours and 28-minutes and some precious $$ by falsely promising to show us a movie. 🙁

    Pathetic Shit
    Folks, no ifs and buts here, Raavan is a pathetic piece of shit.

    It boggles the mind that a man with 27-years of experience as a director, yes, we’re talking of Mani Ratnam here, can put out shit like Raavan and try to fob it off as a movie.

    Only in the Bollywood cesspool, folks. Nowhere else can such garbage debut on so many screens worldwide.

    By the way, this irresponsible clown Mani Ratnam is also responsible for the screenplay.

    Too Many Problems
    There are too many problems with Raavan.

    Let’s start with the story.

    Since Indian movie-makers are just unable to think of engrossing story-lines they are forced time and again to fall back on the old epics. A fortnight back, it was Raajneeti (based on the Mahabharat) and today it’s Raavan.

    As is obvious to the dullest of the dullards, Raavan borrows heavily from that other great Indian epic Ramayan.

    And so we have this so-called movie Raavan set in the present but with a cast of characters drawing from the Ramayan.

    Abhishek Bachchan is Beera (the demon king Raavan), an amalgam of Robin Hood and a dangerous criminal holed up in the jungle terrain of a fictional area called Laal Mati.

    Abhishek’s real-life wife Aishwarya Rai plays Ragini (Sita of Ramayan), the ethereally beautiful woman Beera has kidnapped in retaliation for police brutality.

    Vikram is the dark-glasses wearing police officer Dev (Ram). And then there are an assortment of supporting characters like Hanuman (played with some elan by Govinda), Vibhishan et al.

    But in this twist on the Ramayan, we have the camera focusing more on Raavan and less on Ram.

    That’d be fine too if only the story manages to hold your attention. But the shoddy screenplay leaves no chance of that.

    Shallow, boring story, and how so. Everything gets the superficial treatment here. Be it the love between Dev and Ragini, the police war on Beera and his cohorts, Beera’s attacks on the police or the growing fondness of Beera for Ragini or her Stockholm Syndrome (??) like behavior.

    Hopeless Caricature
    If we’ve said it once, we’ve said it a million times. Abhishek Bachchan is a hopeless retard with an AQ (Acting Quotient) lower than that of a baboon. This acting thing is just beyond this creature.

    What Abhishek does on the screen ad nauseum, ad infinitum is not acting but a grotesque perversion of it.

    Reply
  55. Anonymous

    The sole solace of Raavanan (Tamil) is that it’s a shade better than the Hindi version starring that Bollywood shaitan Abhishek Bachchan.

    Sure, it’s the same stupid, boring, unappealing, shallow story that you see in the Hindi version with nary a difference.

    It’s filmed in the same lush jungles too. Hey, that’s no surprise since the two versions were filmed simultaneously.

    What’s the Difference?
    But the principal difference between the two versions in this modern-day take on the Indian epic Ramayan is that Vikram brought some life to the principal character Veerayya (part Robin Hood and part dangerous criminal) in the Tamil version.

    As the whole world knows by now, the lobotomized dodo Abhishek Bachchan butchered his role of Beera in the Hindi version and made him look like a character overdosing on Crack Cocaine.

    While Vikram’s performance was welcome relief, it still didn’t do enough to make this movie watchable because the rest of this movie is unadulterated garbage.

    Of course, Aishwarya Rai was her usual incompetent self in both versions attesting to the sordid fact that beauty trumps acting skills in the Indian movie business. What a shame!

    Prithviraj was hopelessly inadequate as the police officer pursuing Veera, who has kidnapped his wife Ragini in retaliation for the brutal gang-rape (and subsequent suicide) of his step-sister Vennila (Priyamani) by the police.

    Priyamani was alright in the Tamil version too and mercifully didn’t pee all over herself as she did in some of her recent Telugu films.

    Mani Ratnam, the Villain
    Without a shred of doubt, the arch villain of Raavanan is director Mani Ratnam for the shoddy screenplay and poorly fleshed out characters.

    Raavanan is infantile, sophomoric stuff and not a movie one expects from a director with more than a quarter-century in the movie business.

    For the most part, Indian film-makers are just unable to get their hands on a decent script. The bozos focus too much on hiring the big stars and ignore the basic requirement of a good script.

    This leaves the hapless viewer trapped between the Scylla of poor acting and the Charybdis of a shoddy script with little hope of an entertaining 2-hours at the movies.

    Raavanan is one of the most extraordinary characters in Indian mythology and to reduce him to such a pitiful caricature is an unpardonable, egregious, heinous sin for which Mani Ratnam will ever bear the guilt.

    The dialogs were most banal and the music and picturization of the songs most ordinary.

    And to all the idiots getting a hard-on over the photography, we say:

    Reply
  56. Anonymous

    Folks, despite Raavanan being a shade better than Raavan (Hindi) it’s still not worth your time or money.

    This movie is trash and worthy of your middle finger.

    Do not even consider seeing this wretched garbage.

    Reply
  57. Anonymous

    THe film is not Bad as u said..I enjoyed the film very much..

    Reply
  58. Anonymous

    dei jai sri ram,
    padam na eenanu unakku theriyuma..periya evan mathiri ezhuthirukka.
    moodu da……..

    Reply
  59. Anonymous

    குரங்கை கடித்த கருந்தேள் என்னும் சாருவின் கட்டுரை படித்து பிடித்து வந்தேன்,அய்யோ,சரியான் லின்க் தான் சாரு குடுத்தார்.செம ட்ரீட்டு.ஃபாலோவரும் ஆயிட்டோம்.எங்க ஆஃபீஸ்ல 80பல்க் டிக்கட் ப்ளாக் பண்ணதை போன்லையே கேன்சல் பண்ணிட்டோம்.தேங்க்யூ,இது டிவிடியில் கூட பார்க்க ஏற்றது இல்லை என புரிந்தது,நல்ல தமிழ் படங்களுக்கும் உங்க பரிந்துரை இனி தேவை,

    Reply
  60. Anonymous

    சார் ஒரு ரிக்வஸ்ட்,
    நல்ல தரமான லோபட்ஜெட் படங்களை உங்களுக்கு பிடிக்கும் பட்சத்தில் விமர்சனம் செய்து ஊக்குவிக்க வேண்டுகிறேன்,இது போல கமர்ஷியல் ஹிட்டுகளை மனிதர்கள் புறம் தள்ளனும்.கதையம்சம் உள்ள யதார்த்த படங்களை வாழவிடனும்.இவர்கள் மார்க்கெட்டிங்குக்கு செலவழித்த கோடிகளில் எவ்வளவு கதையம்சமுள்ள படங்கள் எடுக்கலாம்?

    Reply
  61. Anonymous

    ஏன் சார்,
    ஹனுமனை ,ராமனை கிண்டல் செய்துவிட்டு இவரால் சென்னையில் இருக்க முடியும்,மும்பையில் இருக்க முடியுமா?இந்திரா என ஒரு படு திராபையான படம்,சுஹாசினி போன்றவர்களுக்கு வசனம் எழுதவும்,மைக்பிடித்து அடுத்தவர்கள் படங்களை குறைகூறவும் என்ன தகுதி இருக்கு?
    ஏ.ஆர்.ரகுமான் இதுபோல ஆட்களை புறக்கணிக்கனும்.அட்டைபூச்சி மாதிரி அவரை உறிந்து,இப்படி ஒரு கொடுமையான படைப்பையா த்ருவது?.சொந்த அண்ணன் ஜிவி கஷ்டத்தில் இருந்தபோது எனக்கென்ன என இருந்தவர் இந்த மணி,அப்போதே இவர் ஒரு படம் செய்து கொடுத்தால் அவர் தூக்கில் தொங்கியிருக்கவே மாட்டார்.அறுத்த கைக்கு சுண்ணாம்பு தராத கூட்டம் என்றால் அது மெட்ராஸ் டாக்கீஸ் தான்.

    Reply
  62. @ அனானி – கொடும தலைவா.. படத்தைப் போயி பார்த்துட்டு, காது டமாரானதுக்கு.. மெட்ராஸ் டாக்கீஸ்ல பிராது கொடுத்தா, ஒண்ணும் நடக்காது.. . அவங்க இதுக்குள்ள இந்தப் படத்தை, எக்கச்சக்கமான ஒலகத் திரைப்பட விளாக்கள்ல மார்கெட்டிங் பண்ணி, பைசா குவிக்க ஆம்பிச்சிருப்பாய்ங்க.. இதுதான் கொடும !

    @ அடுத்த அனானி – //நீங்க வேற,பாரதியார் பாட்டை அயிசுவரியா பாடுறத கேட்டு தூங்கிக்கிட்டிருந்த என் நண்பனுக்கு சித்தபிரமை புடிச்சிட்டுய்யா//

    ஹாஹ்ஹா.. இது சரியான பன்ச் ! 😉 நீங்க சொன்னமாதிரி, போயி புள்ள குட்டிங்கள படிக்க வெய்யுங்கய்யா ! 😉

    @ முதல் அனானி – //என் புதுப்பொண்டாட்டி கோச்சுக்கிட்டு போய்ட்டாய்யா//

    அடக்கொடுமையே !! இந்தக் கோராம வேற நடந்திருச்சா ? !! அய்ய்யோ பாவம் நீங்க ! என்னோட நண்பனுக்கும் இதே நிலைமைதான்னு கேள்விப்பட்டேன்.. நேத்து, போவாதே போவாதேன்னு சொல்லியும், பிடிவாதமா பொண்டாட்டிய கூப்புட்டுக்கினு போனான்.. ஒருவேளை, அவந்தான் இப்புடி கமெண்ட்டு போடுறானோ ? 😉

    @ காதலரே – //படம் முடிந்து திரையரங்கைவிட்டு நீங்கள் வெளியேறிய வேளையில் உங்கள் முகத்தையும், உங்களிடமிருந்த கோபத்தையும் கற்பனை செய்து பார்க்கிறேன்// – இடைவேளையிலேயே நண்பர்களுக்கு மெஸேஜ் அனுப்பத் தொடங்கிவிட்டேன்..

    வெளியேறும் வேளையில், நான் அடைந்த கோபத்தை உருவகப்படுத்தவேண்டுமென்றால், நித்யானந்தா நிரபராதி என்று தீர்ப்பு
    வந்தால் பாதிக்கப்பட்டவர்களின் கோபம் எப்புடியிருக்குமோ அப்புடி !!! நன்றி 😉

    @ கார்த்திகேயன் – நண்பா.. மிஸ் பண்ணிட்டேன் உங்க கால.. ஆனா என் ஜோடி மஞ்சக்குருவி தான் என்னோட காலர்ட்யூன் 😉

    @ Thirumurthi – நண்பா.. ஸேம் ப்ளட் ?? அய்யோ.. சொந்த செலவுல சூனியம் வெச்சிகிட்டீங்களே (என்னைப் போல்) . . என்ன கொடும நண்பா இது? 🙁

    @ Anand – வணக்கம்.

    //i accept v have heard lot of Rama stories. But have any one of us heard in this perspective of pointing the Ravana’s part of story and his part of justification. Except ‘Ravana kaviyam’ by ‘Pulavar Kuzhanthai’. Watch it as a Epic. U ll get to know about the foolish Hindu cult(sorry if i’m offending but its true). Even if u watch it as real time story it speaks bout the problem happened in Veerapan case.Okay guys wat Justice u want from Mani if u r sayin he makes his movie as a membokku mudivilla movie..? Is he a supreme court Justice r wat.. he makes u tothink nd come to ur own decision. he doesnt wanna force u. tat s wat thinking means. he wants u to think..

    friends this s not a commercial movie please try to watch it with some sense. without that dont watch dis movie. if a creator makes a gd work i cant understand wats the problem with u guys..

    “paarata arivillaya illa manasillaya??”//

    வெல். இந்தப்படத்தை, ஒரு படம் என்று கூட நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். இது ஒரு ட்ராஷ். ராவணனின் பார்வையில் கதையை நகர்த்துவதை நான் தப்பு என்று சொல்லவே இல்லை. இப்படி ஒரு குப்பையை எடுத்ததுதான் தவறு என்கிறேன். உயிரே போர நேரத்துல ‘அந்தாக்‌ஷரி’ என்னய்யா வேண்டிக்கிடக்கு? மணிரத்னமும் சரி.. சுஹாஸினியும் சரி.. தமிழர்களை எவ்வளவு இளப்பமாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கு, படத்தில் நிகழும் இதைப்போன்ற, லாஜிக்கே இல்லாத சம்பவங்கள் உதாரணம்.

    மத்தபடி, உங்க பின்னூட்டத்தில இருக்குற காமெடி வரிகளை நினைச்சி நினைச்சி சிரிச்சேன்.. பின்னுங்க.. 😉

    Reply
  63. @ மூன்றாம் அனானி – //அயோ போச்சே,காசு 400 ரூபாய் போசே!!//

    என்னா பண்றது..? என்னைப்போல், நீங்களும் காசக்குடுத்து, சூனியம் வெச்சிக்கிட்டீங்க.. உடுங்க.. இனிமேல் உஷாரா இருப்போம்..

    @ நான்காம் அனானி – //அட மணிரத்தனம் உருவிகளா,
    சாமியோவ் உங்களையெல்லாம் கையெடுத்து கும்பிட்டு கேக்குரேன்,தயவுசெஞ்சு நிறுத்திக்கோங்க,உங்க பூசாரித்தனமும் வேணாம்
    பொங்கச்சோறும் வேணாம்,எனக்கு,என் லவ்வருக்கு,அவ தங்கச்சிக்கு,அவ ஃப்ரெண்டுக்குன்னு1200+கால் டாக்ஸி 600+ஹோட்டல் டிஃப்ன்னு 700ன்னு செலவு பண்ணி இந்த மொக்கைக்கு போனா ,பாதிலயே போலாம் வான்னு என் லவ்வர் தரதன்னு காரி துப்பி கூட்டிட்டு போய்ட்டாய்யா,படமா எடுக்கரீங்க படம்,மண்ண வாரி தூத்திடுவேன்,அறுக்கத்தெரியாதவனுக்கு ஏன்யா 1008 கதிரரிவாள்?//

    அது வேற ஒண்ணுமில்ல. மணிரத்னத்தை ஒரு தெய்வம் ரேஞ்சுல நம்ம மக்கள் சில பேர் உருவகப்படுத்தி வெச்சிருக்காங்க.. அவங்களுக்கு , இந்தப் படம் , சாமி கிட்ட இருந்து வந்துருக்குற பிரசாதம்.. அவங்க நம்மளை அப்புடித்தான் சொல்லுவாங்க..

    ‘Icanoclast’ அப்புடீன்னு ஆங்கிலத்துல ஒரு சொலவடை இருக்கு.. சுருங்கச் சொல்லப்போனா, பொதுப்புத்தியை உடைக்குறவங்கன்னு அர்த்தம்.. அதத்தான் இங்க நாம செய்யுறோம்.. ஃப்ரீயா உடுங்க நைனா..

    @ ஆங்கிலத்தில் பெரிய விமர்சனம் போட்ட அனானி – உங்கள் விமர்சனம் தான் நிதர்சனம். மிக்க நன்றி.. இந்த விமர்சனத்தை இங்கே போட்டதுக்கு.. அப்புடியே உங்களது ஒரிஜினல் ஐடியைக் குடுத்தாத்தான் என்னவாம்? நன்றீ நண்பா

    @ அடுத்த அனானி – //THe film is not Bad as u said..I enjoyed the film very much..//

    ஓகே நண்பா.. உங்களுக்குப் புடிச்சது மாதிரி, எங்களுக்குப் புடிக்கல.. நன்றி ..

    @ பயந்தாங்குள்ளி அனானி – //dei jai sri ram,
    padam na eenanu unakku theriyuma..periya evan mathiri ezhuthirukka.
    moodu da……..//

    அட இங்கப்பார்ரா.. 😉 நம்ம சைட்டுல ஒரு காமெடி பீஸு… 😉 படம்னா என்னன்னு எனக்கு சுத்தமா தெரியாது அனானி சார்.. மண்டபத்துல யாரோ சொன்னத இங்க வந்து எளுதிருக்கோம்.. 😉 நீங்க வந்து, கத்துக்குடுங்க மேதகு பம்பும் அனானி அவர்களே 😉

    யோவ்.. மொதல்ல, உன்னோட ஒரிஜினல் ஐடில வந்து இதெ கமெண்ட்டப் போடு.. அப்புறம் வெச்சிக்கலாம் கச்சேரி.. நீ போட்ட கமேண்ட்டோட ஐபி அட்ரஸ் ட்ரேஸ் பண்ணியாச்சி.. உங்கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பாக்குறோம்.. அப்பத்தான் சைபர் போலீஸ்ல உன் கம்ப்ளீட் ஜாதகத்தக் குடுக்க முடியும்.. அதுக்கு அப்புறம், அண்டர்வேர் போட்டுக்கினு, டிக்கில அடிவாங்கி, களியுருண்டை திங்கும்போது, ‘படம்னா என்ன’ன்னு நான் அங்க வந்து உனக்குச் சொல்லிக் குடுக்குறேன்.. போடாங்…

    @ அனானி – //குரங்கை கடித்த கருந்தேள் என்னும் சாருவின் கட்டுரை படித்து பிடித்து வந்தேன்,அய்யோ,சரியான் லின்க் தான் சாரு குடுத்தார்.செம ட்ரீட்டு.ஃபாலோவரும் ஆயிட்டோம்.எங்க ஆஃபீஸ்ல 80பல்க் டிக்கட் ப்ளாக் பண்ணதை போன்லையே கேன்சல் பண்ணிட்டோம்.தேங்க்யூ,இது டிவிடியில் கூட பார்க்க ஏற்றது இல்லை என புரிந்தது,நல்ல தமிழ் படங்களுக்கும் உங்க பரிந்துரை இனி தேவை//

    நன்றி நண்பா.. சூப்பரான வேலை பண்ணீங்க.. அதான் டிவில வருதே.. அப்ப பார்த்துக்கலாம் (வேற படத்தை.. அதே நேரத்துல).. 😉

    Reply
  64. @ அனானி – //ஏன் சார்,
    ஹனுமனை ,ராமனை கிண்டல் செய்துவிட்டு இவரால் சென்னையில் இருக்க முடியும்,மும்பையில் இருக்க முடியுமா?இந்திரா என ஒரு படு திராபையான படம்,சுஹாசினி போன்றவர்களுக்கு வசனம் எழுதவும்,மைக்பிடித்து அடுத்தவர்கள் படங்களை குறைகூறவும் என்ன தகுதி இருக்கு?
    ஏ.ஆர்.ரகுமான் இதுபோல ஆட்களை புறக்கணிக்கனும்.அட்டைபூச்சி மாதிரி அவரை உறிந்து,இப்படி ஒரு கொடுமையான படைப்பையா த்ருவது?.சொந்த அண்ணன் ஜிவி கஷ்டத்தில் இருந்தபோது எனக்கென்ன என இருந்தவர் இந்த மணி,அப்போதே இவர் ஒரு படம் செய்து கொடுத்தால் அவர் தூக்கில் தொங்கியிருக்கவே மாட்டார்.அறுத்த கைக்கு சுண்ணாம்பு தராத கூட்டம் என்றால் அது மெட்ராஸ் டாக்கீஸ் தான்//

    ஹூம்ம்… உங்க கோபம் புரியுது.. உங்க கருத்துக்கள் வெகு உண்மை.. வழிமொழிகிறேன்

    Reply
  65. @ நல்ல கருத்தைச் சொல்லிய அனானி – //சார் ஒரு ரிக்வஸ்ட்,
    நல்ல தரமான லோபட்ஜெட் படங்களை உங்களுக்கு பிடிக்கும் பட்சத்தில் விமர்சனம் செய்து ஊக்குவிக்க வேண்டுகிறேன்,இது போல கமர்ஷியல் ஹிட்டுகளை மனிதர்கள் புறம் தள்ளனும்.கதையம்சம் உள்ள யதார்த்த படங்களை வாழவிடனும்.இவர்கள் மார்க்கெட்டிங்குக்கு செலவழித்த கோடிகளில் எவ்வளவு கதையம்சமுள்ள படங்கள் எடுக்கலாம்?//

    கண்டிப்பா நண்பா.. முடிஞ்ச அளவுக்கு இனி நல்ல படங்களைப் பற்றி எழுதத் தொடங்குகிறேன்.. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..

    Reply
  66. நண்பா,
    என்ன இங்கே கமெண்ட் மழை இங்கே,பாச்க்காரங்க பொழிஞ்சு தள்ளிட்டாய்ங்களா?
    அருமையான பதில்கள்,ரசித்தேன்,இந்த வட்டாரத்திலேயே அசிங்கமா கமெண்ட் வரும்னு தெரிஞ்சும் மாடரேஷன் வைக்காத ஒரே ஆள் நீங்க தான்,ஒரு சிலர் மாடரேஷன் நீக்கியிருந்தாலும் அதன் தன்மையை வைத்து தான் பிரசுரிப்பர் [அ] நிராகரிப்பர்,குட்,கீப் இட் அப்,சாரு லின்க் கொடுத்தமைக்கு பாராட்டுக்கள்.அப்படியே சூட்டோட சூடா எதாவது இலக்கியத்தரமான ஒலகபடத்துக்கு ஒரு விமர்சனம் ப்ளீஸ்.

    Reply
  67. @ கார்த்திகேயன் – நன்றி நண்பா.. மாடரேஷன் வெக்காததுக்குக் காரணம், அசிங்கமா கமெண்ட்டு போடுறவனுங்க, அப்புடி என்ன தான் எழுதுறாங்க பார்க்கலாம்ன்ற எண்ணம் தான்.. அதுக்குச் சூடா இங்க பதிலும் கிடைக்கும்.. என்ன ஆனாலும் மாடரேஷன் வெக்க மாட்டேன்.. இது உறுதி.

    லின்க் கொடுத்ததுக்கு சாருவுக்கு என்னோட மனமார்ந்த நன்றிகள். இதோ ஒரு உலகப்படத்துக்கு விமர்சனம் வந்துக்கினே இருக்கு… நாளை வெளியிடப்படும் 😉

    Reply
  68. ச்சே ஏகப்பட்ட மக்கள் தங்கள் கருத்துக்களை அப்படியே பொழிஞ்சி தள்ளி இருக்காங்க

    நாம சும்மா இருக்க கூடாது …………. ம்ம்ம்ம்

    ஒரு வேல குடுக்கலாம் ………

    அண்ணே கருந்தேள் அண்ணே அப்புடியே உங்க தராசு தட்ட எடுத்து இந்த பக்கம் இராவணன் அந்தப் பக்கம் சிங்கம்

    ஒரு ஒப்பீடு செய்யுங்களேன்

    ஏகப்பட்ட எதிர் பார்ப்புகளுடன்

    Reply
  69. கொஞ்ச நாள் தமிழ் படம் எடுக்கறத தடை செஞ்சுடணும் !

    Reply
  70. தமிழ் திரை படங்களை கீழே இருக்கும் எதாவது ஒரு Choice ல் அடக்கி விட முடியும்

    * ஏதாவது ஒரு வாரிசு மீசையே முளைக்காமல் பென்சில்ல வரைஞ்சிக்கிட்டு ஒரு புது முகத்தோட எங்காவது ஒரு பாரின் லோகேஷன்ல டான்ஸ் ஆடுவானுங்க. ஆடுறது கக்கூஸ் முன்னாடின்னு கூட பார்க்க மாட்டனுங்க !
    * யதார்த்தமா தர்றேன்னு ஒன்னுக்கு போறதா காட்டுவானுங்க
    * லோட லோட ன்னு பேசிகிட்டே இருக்கானுங்க . சில படங்கள கண்ண கட்டிக்கிட்டு பார்க்கலாம். ‘மொழில’ கூட அந்த ஊமை கதா பாத்திரத்திற்கு வாய்ஸ் குடுத்தானுங்க !
    * பெரிய ஹீரோன்னா தோண்ட கிழிய கத்துவானுங்க.

    இத தவிர வேற ஒண்ணும் இருக்கறதில்ல தமிழ் படத்துல! இன்றைய பார்வையாளர்கள், பல மொழி படங்களைப் பார்கிறார்கள். படம் வெளி வந்து ஐந்தாவது நிமிடம் இது ஜப்பானிய அல்லது இத்தாலிய தழுவல் என்று சொல்ல தொடங்கி விடுகிறார்கள். திரை துறையினற்கு இது புரிய வேண்டும் முதலில். I’m getting tired of tamil movies.

    Rajesh

    Reply
  71. இவ்வளவுக்கும் மேலே எங்க நெல்லைத் தமிழ் மேலே புல்டோசர் விட்டு ஏத்தின கடுப்பும் எனக்கு சேர்ந்துகிடுச்சு. எங்க சாபம் அந்தாளைச் சும்மா விடாது!

    Reply
  72. Anonymous

    க(ளி)ம்புகளை கையில் வைத்துக் கொண்டு இந்து மதம் திரைப்படங்களில் புண்படுத்தப்பட்டு, காயப்படுத்தப்பட்டு இருக்கிறதா என்று கண் காணித்து மருந்து போடவும், மண்டையை உடைக்கவும் தயாராகும் இந்துவாக்கள், இராவணன் படம் பற்றி வாய்த் திறக்காதது வியப்பளிப்பையும் வியப்பின்மையையும் ஒருசேரவே அளிக்கிறது. கருணாநிதி இந்து மதத்தை கொச்சைப்படுத்திவிட்டார், இராமனை இழிவு படுத்திவிட்டார் என்றெல்லாம் கூப்பாடு போட்டு கண்டனம் தெரிவிப்பவர்கள் இராமயணம் பின்னனியில் எடுக்கப்பட்ட ஒரு கதையில் இராமன் இழிவாகவும், இராவணன் உயர்வாகவும் காட்டப்பட்டிருப்பதை பார்த்து இவர்கள் கொதித்திருப்பார்கள் என்றே பலரும் நினைத்தது சற்று ஏமாற்றம் தான்.

    * படத்தில் (அசோக) வனச் சீதையாக வலம் வந்த ஐஸ்வர்யா ஆடைகளில் கண்ணியம் இல்லை, படம் முழுவதும் ஜாக்கெட்டை திருப்பிப் போட்டுக் கொண்டதைப் போன்றே அணிந்து இருந்தார் (நன்றி திரு பரிசல்காரன்)

    * சீதை மீது இராவணன் விழுவது போன்ற காட்சியாக ஐஸ்வர்யா மீது விக்ரம் தடுமாறி விழுவது, பிறகு சீதையை நெருங்கி உடலெங்கும் கையால் படர்வது போன்ற காட்சிகள், இந்த காட்சி இந்திப் படத்தில் இல்லை. (இந்தி ரசிகர்கள் டென்சன் ஆவார்கள் என்று தவிர்தார்களோ), இராமயணக் கதைபடி இராவணன் சீதையை தொடவே மாட்டான், பெண்ணின் விருப்பமில்லாமல் பெண்ணைத் தொட்டால் தலை வெடித்துவிடும் என்கிற சாபம் இருந்ததாம். முதல் காட்சியில் தண்ணீரில் தள்ளிவிடப் படும் சீதையை பிற ஆடவன் தொட்டு தூக்கி காப்பாற்றுவது போன்றவை இவை எல்லாம். இராவ(ண)ன் படங்களில் சீதை மீது இராவணன் விழுவது போன்ற காட்சி இதிகாச மீறல்.

    * இராமயணக் கதையில் சீதை மீது சந்தேகப்படுபவன் பிற ஆடவன் தான், குறிப்பாக துணி துவைக்கும் ஒருவர் சீதை மீது சந்தேகப்பட இராமன் சீதையை தீக்குளிக்கச் சொல்லுவான். இதில் இராமன் பாத்திரமே சீதை ஐஸ்வர்யா மீது சந்தேகம் கொண்டு மருத்துவ சோதனைக்குச் செல்லச் சொல்கிறது.

    * அனுமாராக வரும் கார்திக்கை படம் முழுவதும் தண்ணி அடிக்கும் குடிகாரன் பாத்திரமாகக் காட்டி அனுமாரைக் கொச்சைப் படுத்தியது

    * இதைவிடக் கொடுமையோ கொடுமை….. சொல்லவென்னா கொடுமை தமிழில் வரும் இராவணன் இந்தியில் வரும் சீதைக்கு கணவன் 🙂

    * இராமயணத்தில் சீதை மீட்கப்படுவதற்கு முன்பே இராவணன் அழிந்துவிடுவான், அல்லது அழிந்த பிறகு மீட்கப்படுவாள், இதில் சந்தேகப்படும் இராமனிடமிருந்து விலகி இராவணனைத் தேடி வருவதாகக் காட்டுகிறார்கள். கடைசி காட்சியில் இராவணன் சீதையை தொட்டு அப்புறப்படுத்துகிறான். இவை எல்லாம் இதிகாச மீறல்

    Reply
  73. Anonymous

    Hunter S. Thompson once said

    the movie business
    is a cruel and shallow money trench.

    where thieves and pimps run free
    and good men die like dogs.’

    இதில் திருடர்கள்,மாமாக்கள் என சொல்வது யாரை என சொல்லவும் வேண்டுமோ?

    Reply
  74. I felt the same way as you said. It looks like a natural sceneries documentary

    Reply
  75. நண்பரே,
    ராமாயணத்தை வேற கோணத்தில் படமாக காட்டுவதாக கூறுவது கூட ஓகே! ஆனால் அப்படி பார்த்தால் கோழைத்தனமாக முதுகில் குத்தும் ராமன் அல்லவா சாக வேண்டும்? சில பல குறைகள் இருந்தாலும் 1 தடவை பார்க்கலாம்!

    Reply
  76. கைப்புள்ள

    தனது தங்கையின் புதுக்கணவன், ஆபத்துக்காலத்தில் அவளை விட்டு ஓடியதற்கே அவனது கையை வெட்டும் அளவு துடிப்பான வீரைய்யா, தனது தங்கையைக் கற்பழித்தவர்களில் ஒருவனான போலீஸ்காரனை, ஜஸ்ட் மொட்டை மட்டும் அடித்து கழுதை மேல் ஏற்றி, அனுப்பிவிடுகிறான். அது ஏன்? என்ன காரணம்? யாருக்கும் தெரியாது.////
    .
    .
    ஏன் நீர் ஐஸ்வர்யாவின் ரேப் சீனை எதிர்பார்த்தீரோ ?ஹீ ஹீ ஹீ
    .
    இது ராமாயண் காப்பிதான்.நீங்கள் கூறுவது போல் பல முறை எடுக்கப்பட்டுவிட்டது.
    ஆனால் நீங்கள் மிகவும் புகன்ழ்ந்த ஆயிரத்தில் ஒருவன் குறைந்தது பத்து படங்களின் குழப்பி அடிக்கப்பட்ட சாணம்.(சாரு கூறியது உண்மை).மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற மொக்கை படமும் ஆங்கில படங்களின் காப்பிதான்(கௌதம் தும்மும் போதும் ஆங்கிலத்தில்தான் தும்புவான் போல..ஹீ ஹீ.)அந்த ஆங்கில கொடுமை இந்த படத்தில் இல்லை என்பது சின்ன ஆறுதல்.
    .
    .
    ஒரே ஆறுதல், ஐஷ்வர்யா ராய். அவரது நடிப்பு, நன்றாக இருந்தது (போல் ஒரு எண்ணம்).///
    .
    அட ஆயிரத்தில் ஒருவனில் பேயாட்டம் போட்ட ரீமா ஆண்ட்ரியா பிசாசுகளை காட்டிலும் இவர் சிரத்தையாகதான் நடித்ருக்கிறார் .இவ்வாறு சேற்றில் மழையில் நடிக்க எந்த தமிழ் நடிகையும் முன்வர மாட்டர்.அவர்கள் பீட்சா கார்னரில் உட்கார்ந்து கடலை மற்றும் வெளிநாட்டில் டூயேட் இவற்றைத்தான் விரும்புவர்.
    அப்புறம் விண்ணைத்தாண்டி வருவாயா … படத்தில் த்ரிஷா என்ற மொக்கை நடிக்கவே தெரியாத(தமிழ் தெரியாது என பெருமையாக கூறிகொள்ளும் ஒரு டாஷ் ) அந்த கொடுமையை காட்டிலும் ஐஷின் நடிப்பு எவ்வளவோ தேவலை

    Reply
  77. Anonymous

    ravanan nalla padama ketta padama?
    therialiya

    Reply
  78. உயிராபத்தான ஒரு சிச்சுவேஷன். உங்களை யாரோ கடத்தப்போகிறார்கள். அந்த நேரத்தில் நீங்கள், கடத்துபவனிடம் பாரதியார் பாடலைப் பாடினால், எப்படி இருக்கும்? அதைவிடக் கொடுமை, அந்தக் கொடூரமான நபரும், பதிலுக்கு அதே பாடலைப் பாடி, இந்த அந்தாக்‌ஷரியை முடித்து வைப்பது ! என்ன கொடும சார் இது ! காரணம் – வசனம் எழுதியவர் பெயர் சுஹாஸினி என்று போட்டிருக்கிறது. அப்ப சரி.
    ethathanda naan padam partha annilarunthu solikiru irrucan!!THALIVA entha varikalukagave i will follow u ..!!

    Reply
  79. ஓகே… இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல…

    Reply
  80. viruchigam

    “என்னய்யா கொடுமை இது! தன்னுடனேயே எதிரியின் மனைவியைச் சிறைபிடித்து வைத்திருக்கும் வீரைய்யா, அந்தப் பெண்ணைப் படுபத்திரமாக வைத்துவிட்டு, இவற்றையெல்லாம் செய்வது முற்றிலும் நம்பத்தகுந்ததாகவே இல்லை”

    ராமாயணத்தில் கும்ப்பகர்ணன் சாகும் போது ராவணன் சீதையையா கொன்றான்?

    stockholm syndrome

    படத்தைப்பற்றி வைக்கப்பட்ட இன்னொரு விமர்சனம்-கதாப்பதிரங்களின் உடைக்கும் மொழிக்கும் சம்பந்தமில்லை -life of pi ,slumdog millionaire இவற்றில் கதாப்பதிரங்கள் சம்பந்தமே இல்லாமல் Englishதான பேசும்.

    இது வியாபாரத்திட்காக ஹிந்தியை தமிழில் விக்ரமை வைத்து எடுத்தார்கள் .

    Reply

Join the conversation