உத்தம வில்லன் (2015) – Tamil

by Karundhel Rajesh May 3, 2015   Tamil cinema

கட்டுரையில் சில ஸ்பாய்லர்கள் இருக்கலாம். இருப்பினும் படம் பார்க்க அவை தடையாக இருக்காது.

எனது ‘விஸ்வரூபம்’ விமர்சனத்தின் ஆரம்ப சில வரிகள் இவை. இவற்றுக்கும் உத்தம வில்லனுக்கும் தொடர்பு உண்டு என்பதால் அவற்றை இங்கேயும் கொடுக்கிறேன்.


 

கதாநாயகன் அறிமுகமாகும் பாடல் என்ற ஒரு விஷயம் தமிழ்ப்படங்களில் இன்றியமையாததாக இருக்கிறது அல்லவா? படத்துவக்கத்தில் கதாநாயகனை காலில் இருந்து தலைவரை ஸ்லோமோஷனில் காமெரா காண்பிக்கும்போது பின்னணியில் ஒலிக்கும் பாடல். இந்த கேமரா பாணியையே ஒரு டெம்ப்ளேட்டாக தனது படங்களில் வைத்துக்கொண்டவர் ரஜினி. அந்த நேரத்தில் எதாவது ஒரு செய்கை மூலம் ஆடியன்ஸுக்கு ஹாய் சொல்வதும் அவரது பாணி. அந்த ஹாய், சல்யூட் அடிக்கும் சைகையாகவோ, பூசணிக்காயை தலையால் உடைக்கும் செய்கையாகவோ, கண்களை க்ளோஸப்பில் காண்பிக்கும் காமெரா ஷாட்டாகவோ, லாங் ஷாட்டில் இருந்து சர்ரென்று அணுகும் கேமரா ஷாட்டில், நின்றவாக்கில் தவம் புரியும் செய்கையோ அல்லது ஒரு நடன ஸ்டெப்பை துவக்கும் நிலையில் இருப்பதாகவோ கூட இருக்கலாம். ரஜினிக்கு இந்த அறிமுகம் நன்றாகவே இருக்கும். சொல்லவந்ததன் சுருக்கம் என்னவெனில், ரஜினி இதை உபயோகிக்க ஆரம்பித்தபின்னர், பல கதாநாயகர்களின் படங்களில் இந்த ஓபனிங் ஸாங் அறிமுகம், எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளின் கவுண்டமணி போல இன்றியமையாததாகிவிட்டது.

ரஜினிக்கு எதிர்வெட்டாக விளங்கும் கமல் படங்களில் இந்த ஓபனிங் ஸாங் இண்ட்ரோ இருக்காது. ஏதோ ஒரு ஷாட்டில் ஜீப்பில் சென்றுகொண்டிருக்கும் கூலிங்க்ளாஸ் அணிந்த கமலாகவோ, ரயிலில் இருந்து இறங்கும் தாடிக்கார ஃபாரின் ரிட்டர்ன் ஷாட்டாகவோ, அகழ்வாராய்ச்சி செய்யும் சிவப்பு படர்ந்த ஷாட்டாகவோ, அல்லது இதுபோன்ற ஷாட்களாகவோதான் கமலின் அறிமுகம் பெரும்பாலும் இருக்கும். எப்போதாவது விக்ரம் டைட்டில் பாடல், வேட்டையாடு விளையாடு அதிரடி அறிமுகம் ஆகியன வருபவை உண்டு.

ஆனால், கதாநாயகனை அறிமுகப்படுத்தும் விஷயத்தில் கமலை அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்பதே என் அவதானிப்பு. சற்று கவனித்து கமல் படங்களைப் பார்த்தால், எந்தக் காட்சியில் கதாநாயகன் அறிமுகத்தை வைத்தால் அது ஆடியன்ஸைக் கவரும் என்பதை மிக நன்றாக அறிந்துவைத்தவராகவே கமல் இருக்கிறார். பெரும்பாலும் அந்த அறிமுகங்களில் பின்னணியில் ஒரு பாடலோ, துடிக்கவைக்கும் இசையோ அல்லது இரண்டுமேயோ கட்டாயம் கமலின் படங்களிலும் இருக்கும். ரஜினிக்கும் கமலுக்கும் வித்தியாசம் என்னவென்றால், ரஜினி படங்களில் இந்த அறிமுகம் பட ஆரம்பத்தில் மட்டுமே இருக்கும். பாடலில் ரஜினியைப் பற்றிய வரிகள் இடம்பெற்றிருக்கும். கமல் படங்களில், படத்தின் ஆரம்பத்திலோ, அல்லது சில காட்சிகள் கழித்தோ கூட இந்த அறிமுகம் இருக்கும். ரஜினி படங்களைப் போல் வெளிப்படையாக இது இருக்காது. ஆனால், ஆடியன்ஸுக்கும் பிடிக்கும்வகையில்தான் இருக்கும்.

இதோ இந்தக் கட்டுரையில் – கமல்ஹாஸன், இளையராஜா மற்றும் உன்மத்தம் – நான் சொல்லவந்ததை தெளிவாக எழுதியிருக்கிறேன்.


 

உத்தம வில்லனிலும் அப்படிப்பட்ட ஆரவாரமிக்க அறிமுகம் உள்ளது. படத்தில் வரும் ரசிகர்களின் கைதட்டலோடு படம் பார்க்கும் ரசிகர்களின் ஆரவாரமும் சேர்ந்து, பலத்த கரகோஷம்.

உத்தம வில்லன், ஒரு நடிகனின் கதை. மனோரஞ்சன் என்று பெயரில் கிட்டத்தட்ட கமல்ஹாஸனாகவே நடித்திருக்கிறார் கமல். திமிர் பிடித்த ஒரு நடிகன். சந்தோஷமற்ற திருமண வாழ்க்கை. இவரை மதிக்காத மகன். மருத்துவராக வரும் ஆண்ட்ரியாவைக் காதலித்துக்கொண்டிருக்கிறார். மனோரஞ்சனை அறிமுகப்படுத்திய veteran இயக்குநர் மார்க்கதர்சியாக பாலசந்தர்.

ஜிகர்தண்டாவைப் போல், இதுவும் படத்துக்குள் படம் என்பதெல்லாம் இதற்குள் எல்லாருக்குமே தெரிந்துவிட்ட செய்தி. மிகவும் வெற்றிகரமான நடிகன் ஒருவன் – திரையுலகின் சூப்பர்ஸ்டாராக இருப்பவன் – அவனது வாழ்க்கையில் என்னவெல்லாம் இழக்கிறான் என்பது படத்தில் சொல்லப்படுகிறது.

தனது திரைவாழ்வில் ஒரு முக்கியமான கட்டத்தில், தனது வாழ்க்கையைத் திரும்பிப்பார்க்கிறார் மனோரஞ்சன். தனது குருநாதரோடு இணையவேண்டும் என்று ஆசைப்படுகிறார். குருநாதரோடு ஏற்கெனவே இவரது மாமனாரான பிரபல தயாரிப்பாளர் பூர்ணசந்திர ராவ் பிரச்னை செய்திருப்பதால், மார்க்கதர்சிக்கும் மனோரஞ்சனுக்கும் சில காலமாகப் பேச்சுவார்த்தை இல்லை. ஆனால் மார்க்கதர்சி, மனோரஞ்சனின் பெரிய பட்ஜெட் படங்கள் வரும்போதெல்லாம், ’ஒரு படத்தின் ஜீவன், பணத்தில் இல்லை; உணர்வுபூர்வமான கதையில்தான் உள்ளது’ என்றெல்லாம் பேட்டிகள் கொடுக்கிறார். தயக்கத்தை மறந்து, மார்க்கதர்சியை சந்திக்கிறார் மனோரஞ்சன். இருவரும் இணையும் படம் தயாராகிறது. படத்தில் உத்தமன் என்ற கூத்துக்காரனாக நடிக்கிறார் மனோரஞ்சன். மனோரஞ்சனின் வாழ்க்கையின் சில பக்கங்களும், இந்தத் திரைப்படத்தின் சில காட்சிகளும் படம் முழுதும் வரிசையாகக் காட்டப்படுகின்றன.

மனோரஞ்சனாக நடிக்கையில் எந்தவிதமான மிகைநடிப்பும் இல்லாமல், இயல்பாகவே இருக்கிறது கமல்ஹாஸனின் நடிப்பு. அவரது மகன் படத்தின் ஆரம்பத்தில் அவரைப்பற்றிக் கேவலமாகப் பேசுவதைத் தற்செயலாகக் கேட்கிறார் மனோரஞ்சன். பின்னர் ஒரு திரைப்படத்தின் பார்ட்டியில், இருபத்தைந்து வருடங்களுக்கு முந்தைய பழைய கதை ஒன்று மனோரஞ்சனுக்கு ஜேகப் ஸச்சாரியா (ஜெயராம்) என்பவர் மூலம் நினைவுபடுத்தப்படுகிறது. யாமினி என்ற அவரது பழைய காதலி, அக்காதலியின் மூலம் பிறந்த குழந்தை மனோன்மணி, மனோரஞ்சனின் மாமனார் பூர்ணசந்திரராவ் ஆகியவர்களுக்கு இடையே நடந்த சில கசப்பான சம்பவங்கள் மனோரஞ்சனுக்குத் தெரியவருகின்றன. இதன்பின்னர் இன்னொரு அதிர்ச்சியும் மனோரஞ்சனுக்குக் கிடைக்கிறது. படிப்படியான இத்தகைய அதிர்ச்சிகள் மூலமாக, சில முக்கியமான முடிவுகள் எடுக்கிறார் மனோரஞ்சன். அதுதான் படம்.

மனோரஞ்சனின் கதை எனக்குப் பிடித்தது. இந்த மனோரஞ்சனின் கதைதான் படத்தின் பாஸிடிவ்களில் முக்கியமான அம்சம். வெளிப்புற இமேஜைக் கட்டிக்காப்பது, அசந்தர்ப்பமான சூழல்களில் ரசிகர்களின் தொல்லை, மனைவி மற்றும் குடும்பத்தினரோடு இருக்கும் உறவு மெல்ல உடைந்துகொண்டிருப்பது, இதையெல்லாம் மறக்கக் குடிப்பது போன்றவையெல்லாம் படத்தில் இயல்பாகக் காட்டப்படுகின்றன. இந்த மனோரஞ்சனின் கதையில்தான் படத்தை ரசிகர்களுடன் பிணைக்கும் உணர்வுபூர்வமான காட்சிகள் உள்ளன. இதற்கு நேர் எதிரானது உத்தமனின் கதை. முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்லப்பட்டிருக்கிறது இந்தக்கதை (அல்லது அப்படிச் சொல்லப்பட முயற்சி செய்யப்பட்டிருக்கிறது என்றும் வைத்துக்கொள்ளலாம்).

இந்த உத்தமனின் கதைதான் படத்தின் மிகப்பெரிய பலவீனம். மார்க்கதர்சி ஒரு சிறந்த இயக்குநராகப் படத்தில் காட்டப்பட்டிருக்கிறார். அப்படிப்பட்ட சிறந்த இ்யக்குநர் ஒருவரும், திரைப்படங்களின் முடிசூடா மன்னனாக விளங்கும் ஒரு நடிகனும் இணையும் கதை இவ்வளவு பலவீனமாகவா இருக்கும்? அது ஒரு நகைச்சுவைப் படம் என்பது காட்சிகளின் வாயிலாக நமக்குத் தெரிகிறது. இருந்தாலும் அந்தப் படத்தின் காட்சிகள் மிகமிக சாதாரணமானவையாகவே உள்ளன. அதில் சொல்லப்படும் கதையோ இருப்பதிலேயே மிகச்சாதாரணம். கிட்டத்தட்ட படத்தின் பாதியளவுக் காட்சிகள் இதில் உள்ளன என்பதால் இயல்பிலேயே படம் பார்க்கும் ரசிகர்களுக்குக் கொடூரமான ஒரு உணர்வையே அவை தருகின்றன. கொஞ்சம் கூட உப்புச்சப்பில்லாமல் பாதி படம் ஓடினால் எப்படி இருக்கும்? ஒருவிதக் கொலைவெறி கிளம்பும் அல்லவா? அதுதான் இப்படத்தின் மிகப்பெரிய பிரச்னை.

இது கமல்ஹாஸனின் படங்களில் புதிது அல்ல. ‘மும்பை எக்ஸ்ப்ரஸ்’ நண்பர்களுக்கு மறந்திருக்காது. அருமையான நகைச்சுவைப்படம். அதில் தடாலென்று கமல்ஹாஸனின் ஃப்ளாஷ்பேக் வரும். அதுதான் அப்படத்தின் மிகப்பெரிய ஸ்பீட் ப்ரேக்கர். அக்காட்சிகள் படத்தின் நகைச்சுவையான தன்மைக்கு நேர் எதிராக, உணர்ச்சிகரமாகவேறு எடுக்கப்பட்டிருக்கும். அப்படத்தில் அவை துளிக்கூடப் பொருந்தாது. படம் அதுவரை கொடுத்த உணர்வு மறந்துபோய், எரிச்சலே தலைதூக்கும். இது உத்தம வில்லனுக்கும் அப்படியே பொருந்தும். பழையகாலக் கதையில் சிரிப்பே வராத வசனங்கள், அவற்றுக்குக் கதாபாத்திரங்கள் புரியும் அசட்டுத்தனமான செய்கைகள், நடிப்பே துளிக்கூட வராத பூஜா குமார், ஒரு மொக்கை மன்னன், அவனுடைய இரண்டு முட்டாள் அமைச்சர்கள் என்ற அரதப்பழைய கதை என்றெல்லாம் ஏராளமான காட்சிகள் வருவதால் அவை வரும்போதெல்லாம் உச்சபட்ச எரிச்சலும் சேர்ந்தே வருகிறது. அக்காட்சிகள் எப்போது முடியும், மனோரஞ்சனின் கதை எப்போது துவங்கும் என்றே கிட்டத்தட்டப் படம் முழுதும் காத்திருக்கவேண்டிய சூழல்.

இருந்தாலும், மனோரஞ்சனின் கதை வரும்போதெல்லாம் உணர்ச்சிபூர்வமான காட்சிகளின் மூலம் அந்த எரிச்சல் மறைகிறது. மனோரஞ்சன் அவனது மகனிடம் பேசும் காட்சி ஒன்று உள்ளது. அதுபோன்ற இயல்பான காட்சி ஒன்றைத் தமிழில் பார்த்துப் பல நாட்கள் ஆகின்றன. இதுபோன்றே மனோரஞ்சன் அவனது மனைவியிடம் மருத்துவமனையில் பேசுவது, அவனுக்கும் அவனது மகளான மனோன்மணிக்கும் இடையே வரும் காட்சிகள், மனோரஞ்சன் அவனது மாமனாரிடம் பேசுவது என்று கமல்ஹாஸனுக்கு ஸ்கோர் செய்யப் பல காட்சிகள் உண்டு. அவற்றில் ஆச்சரியகரமாக எந்தவித மிகைநடிப்பும் இல்லாமல் கமல்ஹாஸன் நடித்திருக்கிறார் என்பதும் முக்கியம்.

மனோரஞ்சனின் கதை மட்டுமே படம் முழுதும் காட்டப்பட்டிருந்தால் அவசியம் இந்தப் படம் ரசிகர்களுக்குப் பிடித்தமான படமாக மாறியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உத்தமனின் கதையை இடையில் நுழைத்ததன் மூலம், படம் பரவலாக அனைவராலும் கிண்டல் செய்யப்படப்போகிறது என்பதிலும் சந்தேகமே இல்லை. இத்தகைய தன்மைதான் – தன் படத்தைத் தானே கெடுப்பது – கமல்ஹாஸனின் சில படங்களை க்ளாஸிக்காக ஆக்காமல் தடுக்கிறது.

இந்தப் படம் அனைவருக்கும் பிடிப்பது மிகக்கடினம். காரணம் உத்தமனின் கொடூர அறுவையான கதை. இதனால் படத்தின் நல்ல காட்சிகளும் பாதிக்கப்படுகின்றன. இக்காட்சிகளால் படமே மிக மெதுவாக நகர்வதைப்போன்ற ஒரு பிரமை ஏற்படுவதும் சகஜமே.

படத்தில் சொல்லப்படும் மனோரஞ்சனின் கதைக்கும் கமல்ஹாஸனின் கதைக்கும் ஏராளமான சின்னச்சின்ன தொடர்புகள் படம் முழுதும் உண்டு. கமலின் குருநாதர்தான் மனோரஞ்சனின் குருநாதர்; கமலைப்போலவே மனோரஞ்சனும் ஒரேபோன்ற நடன அசைவுகளை (வேண்டுமென்றே) ஆடுபவன்; கமலைப்போலவே மனோரஞ்சனின் வாழ்க்கையிலும் பல பெண்கள் இடம்பெறுகின்றனர்; இருவருமே கர்விகள்; கமல்ஹாஸன் படங்களைப் பற்றி இடம்பெறும் வதந்திகள் – மனோரஞ்சன் நடிக்க இருக்கும் படம் – ஆதி சங்கரரின் வாழ்க்கை. சில வருடங்கள் முன்னர் கமல் புத்தராக நடிக்க இருப்பதாக ஒரு வதந்தி கிளம்பியது நினைவுவரலாம். இன்னும் இதுபோன்ற பல விஷயங்களைப் படம் பார்க்கும் நண்பர்கள் புரிந்துகொள்ளமுடியும். இதைப்போலவே, படத்தில் வரும் மனோரஞ்சன் மற்றும் உத்தமனின் கதைகளும் பல தொடர்புகளைக் கொண்டிருக்கின்றன. மனோரஞ்சனின் வாழ்க்கை குறுகியது; உத்தமனோ ம்ருத்யுஞ்ஜயன் (சாவை வென்றவன்) என்றே அழைக்கப்படுகிறான்; மனோரஞ்சனின் வாழ்க்கையில் துயரம் அதிகம்; உத்தமனின் வாழ்க்கையிலோ சந்தோஷம் அதிகம்; இக்கதைகளில் ஒன்றில் வரும் காட்சிக்கான தொடர்பு இன்னொரு கதையில் வரும் இன்னொரு காட்சியாக இருக்கிறது. இப்படிப்பட்ட சில காட்சிகள் ஒன்றையொன்று இட்டு நிரப்புகின்றன. மனோரஞ்சனின் கதையில் வரும் உணர்ச்சிபூர்வமான காட்சிகளைக் கவனியுங்கள். அவற்றுக்கான தொடர்ச்சி உத்தமனின் கதையில் வரும் அடுத்த காட்சியில் இருக்கும் (வசனம் & பாடல்களில்). இதுபோன்ற சின்னச்சின்ன முக்கியமான விஷயங்கள் அனைத்துமே கமல்ஹாஸனால் திரைக்கதையில் கச்சிதமாக எழுதப்பட்டிருக்கின்றன.

இருப்பினும், உண்மையிலேயே உத்தமனின் கதை ஆடியன்ஸின் கழுத்தை அறுப்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது. உத்தமனின் கதையில் ஜீவன் துளிக்கூட இல்லை. வெறுமனே காட்சிகளை நிரப்புவதற்காகவே அது இடம்பெறுகிறதோ என்று சந்தேகப்படவைக்கிறது. துளிக்கூட திரையில் வரும் காட்சிகளில் ஒன்றமுடியாத கதை இது. இத்தகைய படுசாதாரணமான கதைக்கான அவசியம் என்ன என்பது எவ்வளவு யோசித்தும் பிடிபடவில்லை. இதுதான் உத்தம வில்லனின் பிரதான பிரச்னை. இதனால்தான் உத்தம வில்லன் ஒரு முழுமையான திரைப்படமாக இல்லாமல், ஆங்காங்கே சில காட்சிகளால் மட்டுமே உருவாகிய திரைப்படமாக உள்ளது. இதனால்தான் படம் பரவலாக நெகட்டிவ் விமர்சனங்களைப் பெறப்போகிறது. இதனால்தான் கமல்ஹாஸன் சோஷியல் மீடியாவால் ஓட்டப்படப்போகிறார். இதனால்தான் கமல்ஹாஸன் இனி ரிடையர் ஆகலாம் என்ற கருத்துகள் இனி எழுதப்பட உள்ளன.

மனோரஞ்சனாக வாழ்ந்திருக்கும் கமல்ஹாஸனுக்காக இப்படம் அவசியம் பார்க்கப்படவேண்டும். கமல்ஹாஸனிடம் இருந்து இயல்பான நடிப்பில் உணர்ச்சிபூர்வமான காட்சிகள் உடைய படம் கடைசியாக எப்போது வந்தது? அன்பே சிவம்தான் கடைசி. பனிரண்டு வருடங்கள் முன் (மஹாநதி & அன்பே சிவம் போல இதுவும் பிந்நாட்களில் பேசப்படும் என்பதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். அப்படங்கள் முழுமையானவை. இதுவோ அரைகுறையான படம்தான்). சமீபகாலத் தமிழ்ப்படங்களில் இது கொஞ்சம் வித்தியாசமான முயற்சிதான். இங்லீஷில் Scent of a woman போன்ற மிக மெதுவான படங்கள் பல உண்டு. ஆனால் அவை முழுக்க முழுக்கத் தரமானவையாக இருக்கும். உணர்ச்சிகளில் ஆடியன்ஸைப் பிணைக்கும். அதுபோல உத்தம வில்லனும் முழுமையாகவே ஒரு நல்ல படமாக எடுக்கப்படுவதற்கான பல சாத்தியக்கூறுகள் இருந்தே இருக்கின்றன. ஆனாலும் தன் படங்களைத் தானே சிதைக்கும் கமல்ஹாஸனின் பாணிதான் உத்தம வில்லனையும் சிதைத்திருக்கிறது. அதை அவர் மாற்றிக்கொண்டால் அவரால் இனிமேலும்கூட  தரமான, முழுமையான படங்களைத் தர இயலக்கூடும் என்பதற்கு உத்தம வில்லன் ஒரு உதாரணம். படத்தின் ஒரே பிரச்னை திரைக்கதைதான். அதில் துளிக்கூட சந்தேகமில்லை.

நடிப்பைப் பொறுத்தவரையில், கொடுக்கப்பட்ட வேடத்தை சிறப்பாகவே நாஸர் செய்திருக்கிறார். பாலசந்தரும் அப்படியே. ஊர்வசியின் அந்த மருத்துவமனைக் காட்சியில் அவரது நடிப்பு பிடித்தது. எம்.எஸ் பாஸ்கரைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. சண்முகராஜன், கே. விஸ்வநாத், ஜெயராம், ஆண்ட்ரியா, பார்வதி ஆகிய அனைவருக்கும் படத்தில் நல்ல காட்சிகள் உண்டு. பாடல்களும் இசையும் ஏற்கெனவே ஹிட்டாகிவிட்டன. இதோ இந்தப் பாடல்தான் என் ஃபேவரைட்.

  Comments

64 Comments

  1. Senthil Kumar J

    100% perfect review Boss..

    Reply
  2. Muthukumar

    I felt the same exactly like what you mentioned on the 8th century backdrop scenes in the movie. Else it would have been a good movie of Kamal in the recent times.

    Reply
    • Yes boss. Very true. That backdrop is the one which had spoiled an otherwise good film

      Reply
  3. Arun karthik

    முத்தம் கமலின் சிறப்பம்சங்களில் ஒன்று என்ற அற்ப விசயத்தை இன்னும் கையில் வைத்திருப்பது சிரிப்பு வரவைக்கிறது. (பாடல் வெளியீட்டில் அதைப்பற்றி ஆஹா ஓஹோ பேசியது உண்மையில் வெறுப்படைய வைத்தது.)
    உண்மையில் மனோரஞ்சன் மற்றுமதை சுற்றின பாத்திரங்கள் பிடிக்கும் வகையிலேயே இருந்து.கூட துணுக்கு வசனங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.நீங்கள் சொன்னதுபோல் உத்தமனின் கதை பொறுமையை சோதிக்கும் வகை. இதனால் மனோரஞ்சன் பாத்திரம் மற்றும் நடிப்பு உணரப்படுமா என்பது சந்தேகம்.மற்றபடி படம் கழுவி ஊற்றப்படப்போவது உறுதி.

    Reply
    • sankar

      Aam. padatthai kazhuvi ungal vaayil ootra vendum. Appa thaan adutha thadava ethu maathiri commend poda maatteenga.

      Reply
    • ஆமாம். உத்தமனின் கதையில் பல காட்சிகள் சுருக்கப்பட்டுள்ளன என்பதைப் படித்தேன். இருந்தாலுமே அந்தப் பகுதியில் சுவாரஸ்யம் துளிக்கூட இல்லைதான்

      Reply
  4. காரிகன்

    கருந்தேள் ராஜேஷ்,

    உண்மையில் உத்தம வில்லன் படத்தின் கதை இதுவல்ல. இது கே பாலச்சந்தருக்காக கமலால் திருத்தி எழுதப்பட்டது. அல்லது முழுவதும் வேறு கதையாக உருமாறியது. இதை கமல் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். நான் படம் பார்க்கவில்லை. பார்க்கும் விருப்பமும் இல்லை. பிரைன் டியூமர், மரணம் போன்ற 80களின் சங்கதியை வைத்துக்கொண்டு மக்களின் கண்ணீரை தூண்டிப்பார்க்கும் மிக மலிவான திரைக்கதை. கமல் இப்படி செய்வது ஆச்சர்யம்தான். இதெல்லாம் நீல வானம்,வாழ்வே மாயம், பயணங்கள் முடிவதில்லை போன்ற படங்களிலேயே பார்த்து அலுப்பு வந்துவிட்டது.

    அப்பறம் வில்லன் தமிழ் சொல் தான் என்று கமல் நிரூபிக்கும் நகைச்சுவையை சிரிப்பு நடிகர் சுருளி ராஜன் ஹிட்லர் உமாநாத் படத்தின் ஒரு வில்லுப் பாட்டில் ஏற்கனவே நக்கலாக சொல்லிவிட்டார். தச்சு வேலை செய்பவன் தச்சன் கணக்கு வேலை செய்பவன் கணக்கன் வில்லை எடுத்தவன் வில்லன் என்று அந்த வில்லுப்பாட்டில் சுருளி அதகளம் செய்திருப்பார்.

    https://www.youtube.com/watch?v=WqpH9S7bbPU

    நான் ஒரு பெரிய நடிகன் என்னைப் போல யார் இருக்கிறார்கள்? என்ற பிம்பத்தை விட்டு கமல் வெளியே வந்தால்தான் சில ஒழுங்கான படங்களைத் தரமுடியும். ஆனால் அது சாத்தியமா என்பது கேள்விக்குறி.

    Reply
    • kalil

      “பிரைன் டியூமர், மரணம் போன்ற 80களின் சங்கதியை வைத்துக்கொண்டு மக்களின் கண்ணீரை தூண்டிப்பார்க்கும் மிக மலிவான திரைக்கதை. கமல் இப்படி செய்வது ஆச்சர்யம்தான். இதெல்லாம் நீல வானம்,வாழ்வே மாயம், பயணங்கள் முடிவதில்லை போன்ற படங்களிலேயே பார்த்து அலுப்பு வந்துவிட்டது”
      இந்த கேள்விக்கான் பதிலை படத்தில் பாலச்சந்தர்-கமல் உரையாடலில் வைத்து இருப்பார்

      கருந்தேள் சொன்னது போல உட்கதை பொருந்தவே இல்லை சில இடங்களில் பொறுமையை சோதிக்கிறது.இதனை தவிர்த்து வேறு ஏதேனும் சிறந்த உட்கதையை எடுத்து இருந்தால் மறக்க இயலாதாக (அன்பே சிவம் போல)அமைந்து இருக்கும்

      Reply
      • sankar

        En intha kaalathula “brain tumor” “maranam” yaarukkum varaatha. 80’s la than varuma.

        Reply
    • //நான் ஒரு பெரிய நடிகன் என்னைப் போல யார் இருக்கிறார்கள்? என்ற பிம்பத்தை விட்டு கமல் வெளியே வந்தால்தான் சில ஒழுங்கான படங்களைத் தரமுடியும்// – காரிகன்.. இந்தப் படத்திலேயே அந்தப் பிம்பத்தைக் கிண்டல் செய்யும் சில வசனங்களைக் கமல் வைத்துள்ளார். அதுவே, அதைவிட்டு வெளியே அவர் வருவதற்கான வேலையாக எனக்குப் பட்டது.

      Reply
  5. கோபி

    ராஜேஷ், உங்கள் விமர்சனம் பெரும்பாலான என் பார்வையோடு ஒத்துப் போகிறது. நல்ல அலசல்.

    ஆனால்….
    //இதனால்தான் படம் பரவலாக நெகட்டிவ் விமர்சனங்களைப் பெறப்போகிறது. இதனால்தான் கமல்ஹாஸன் சோஷியல் மீடியாவால் ஓட்டப்படப்போகிறார். இதனால்தான் கமல்ஹாஸன் இனி ரிடையர் ஆகலாம் என்ற கருத்துகள் இனி எழுதப்பட உள்ளன.//

    இங்கே தான் உங்கள் கமல் துவேஷ முகம் வெளிப்படுகிறது. படத்தை பற்றி நீங்கள் சுட்டி இருக்கும் குறைகள் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாக இருக்கலாம். ஆனால் அதனாலேயே, மக்கள் இப்படிதான் கமலை ஓரம் கட்டுவார்கள் என்று எப்படி நீங்கள் முடிவு செய்கிறீர்கள்? நீங்கள் எடுத்துக் கொடுத்து தூண்டி விடுவது போலத்தான் எனக்கு படுகிறது. உங்கள் விமர்சனம் என்னவோ அதை செய்துவிட்டு போக வேண்டியது தான் உங்கள் வேலை. அது சரி, தவறு என்பதெல்லாம் அடுத்த விஷயம். நான் சொல்வது தான் சரி என்று சொல்லக் கூட உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் மக்களின் பிரதிநிதியாக உங்களை நினைத்துக் கொண்டு நீங்கள் தீர்ப்பை எழுதுவது தான் உங்களிடம் இருக்கும் பிரச்சினை. லிங்கா சொதப்பல் என்பதால், மீடியாவால் ஓட்டப்படுவார், மக்கள் அவர் ரிடையர் ஆகலாம் என்று சொல்ல வாய்ப்பு உண்டு என்ற ரீதியில் நீங்கள் எழுதியதாக எனக்கு ஞாபகம் இல்லை.

    உத்தம வில்லன் ஒரு கிளாசிக் என்றும் கூடத் தான் நிறைய பேர் பதிவு செய்கிறார்கள். அப்படி பதிவிட்டவர்கள் எல்லாம் கேனையன்களா?

    Reply
    • அவர் ஒருவேளை என்னை மனதில் வைத்து சொல்லியிருக்கலாம். ஏனெனில் அவர் என்னென்ன காரணங்கள் சொன்னாரோ அந்தந்த காரணங்களுக்காக எனக்கு படம் சுத்தமாக பிடிக்கவில்லை. என்னைப்போல இந்த படத்தை கழுவி ஊத்தியவர் யாரும் இல்லை என்பதால் நான் இதை உணர்ந்தே சொல்கிறேன்.

      Reply
    • Thiyagarajan

      //லிங்கா சொதப்பல் என்பதால், மீடியாவால் ஓட்டப்படுவார், மக்கள் அவர் ரிடையர் ஆகலாம் என்று சொல்ல வாய்ப்பு உண்டு என்ற ரீதியில் நீங்கள் எழுதியதாக எனக்கு ஞாபகம் இல்லை.//
      தாங்கள் தயவு செய்து இவரின் எந்திரன் விமர்சனத்தைக் காணவும். அதில் இவ்வாறு குறிபிட்டுள்ளார். //பாவம்.. அந்த வயதானவரை அவர் போக்கில் விட்டுவிடுங்கள். அவர் பாட்டுக்கு இமயமலை ஏறித் தனது பொழுதைக் கழிக்கட்டும்.//

      Reply
      • கோபி – நான் அவ்வாறு சொன்னதன் காரனம், அப்படிப் பல கருத்துகளை ஏற்கெனவே சோஷியல் மீடியாவில் பார்த்ததுதான். மற்றபடி ரஜினி வெர்சஸ் கமல் என்பதெல்லாம் என் நோக்கமே அல்ல. என் எந்திரன் விமர்சனத்தை நீங்கள் படித்திருந்தால், தியாகராஜன் மேலே சொல்லியுள்ளதுபோல் பல வரிகளை அதில் படிக்கலாம். எனக்குக் கமல் துவேஷம் கிடையவே கிடையாது. கமல்ஹாஸன் அடித்த காப்பிகளை மட்டுமல்ல. இன்னும் பலரின் காப்பிகளைப்பற்றியும் எழுதியுள்ளேன். என் வேலை நடுநிலையாக எழுதுவது. அதைத்தான் செய்கிறேன். நன்றி.

        Reply
  6. ramesh kumar

    Dear Karundhel,
    I like your reviews very much and your knowledge on cinema,but this review seems to be unfair .I have seen this movie in dubai with my kids. The manoranjan side was superb and I enjoyed and at the same time my kids were bored and they are looking for uthaman portion and they enjoyed very much and they are laughing like anything and by seeing their mind and and the songs were very good in the uthaman portion.

    Reply
    • Dear Ramesh,

      When I said the Uthaman part is very light, I said from the perspective of general audience. It might be true that the kids loved it. but that’s a minority, isn’t it?

      Reply
  7. gopi

    ivlavo therintha neengal antha arumayana padathayum eduthu vidalam kamal ellam ethuku sir.

    Reply
    • கோபி.. கமல் பற்றி எழுதினாலே திட்டுவேன் என்ற மன நிலையில் நீங்கள் இருந்தால் அவசியம் இந்த விமர்சனம் படித்தால் கோபம்தான் வரும். அதற்கு நான் ஒன்றுமே செய்ய முடியாது.

      Reply
  8. Humor-a rasikka theriyaadha unakku thaanda brain tumor, en daabaru. Poi olunga thirumbi poi padatha paaruda en vendru. Everyone in the theatre laughed their heart out, got chilled on emotional scene. English padathaa puriyaama paathutu aaaha oohoannu solra echaa budhida ungalukku. All age group enjoyed. Readers,ignore this issues spoiler review, enjoy the genius of kamal with family n friends

    Reply
    • சரிடா டோமரு. மொதல்ல ஒரு பதிலை எப்படி எழுதணும்னு தெரிஞ்சிட்டு வந்து எழுது. லூசு மாதிரி உளறிகிட்டு இருக்காத. அப்படியே ஓடிரு.

      Reply
    • ATY

      Thanks for the link Gopi.

      Reply
    • This Guy is another Philistine, Who boasts to be Smart & knew More about Cinema, But Simply Outsmarts & uses Internet as a medium to publicize himself. Mr.Rajesh, I bet you have no basic Qualities , even preliminary qualities to be a Movie Critic, You don’t even know basic about Visual Medium. If In doubt ask the Professionals, They may clarify. Its not the Ignorance that kills, Even the illusion of Knowledge is Much dangerous to the Society , I pity the Crowd that Hails you.
      My English is not Straight, May be try to See if you could got through.
      http://peththal.blogspot.sg/2015/05/sagunis-heaven-uthama-villain.html

      Reply
    • தம்பி.. கண்மூடித்தனமா ஜால்ரா அடிச்சி, இயக்குநருக்கே தெரியாத கண்டகண்ட ‘குறி ஈடெல்லாம்’ நுழைச்சி என்னால எழுத முடியாது. அது எநக்குத் தேவையும் இல்ல 🙂 .. அதென்ன.. கமல் படம்னா கண்மூடித்தனமா பாராட்டணுமா? வெளிப்படையா நிறை குறைகளை எழுதுனா உடனே உங்களுக்கெல்லாம் தூக்கிட்டு ஆடுமா? இப்புடி முட்டாள் ரசிகனா இருக்காத. உடம்புக்கு ஆவாது 🙂

      Reply
  9. gobinath

    Marupadiyum indha mental paiyan review paduchitu sirika vendiyadhu dha..

    Reply
    • சரிடா.. படிக்க புடிக்காட்டி ஓடிரு. உன்னை யாரும் இதைப் படிக்க அழைக்கல.. புர்தா?

      Reply
  10. kathawarayan

    அருமை,
    ராஜேஷ் திரைக்கதை என்பது எப்படி வடிவமைக்கப்பட வேண்டும் தெளிவாக கூறவும்

    Reply
  11. kathawarayan

    அருமை,
    ராஜேஷ் திரைக்கதை என்பது எப்படி வடிவமைக்கப்பட வேண்டும் தெளிவாக கூறவும்.

    Reply
    • பாஸ்.. அதுக்கு எந்த விதியும் இல்லை. பார்க்குறவங்களை டார்ச்சர் பண்ணாம, சுவாரஸ்யமா இருந்தா போதும்.

      Reply
      • கோபி

        ரஜினி, விஜய், அஜித், விஷால், சிம்பு படம் எல்லாம் பார்த்தா எனக்கு டார்ச்சரா இருக்கு, கமல் படம் சுவாரசியமா இருக்கு. இந்த நடிகர்களின் ரசிகர்களுக்கு இது vice versa வா இருக்கும். இதுல யாருடைய படம் சுவாரஸ்யம், யாருடைய படம் சுவாரஸ்யம் இல்லைன்னு எதை வெச்சு தீர்மானிப்பது ராஜேஷ்? இது தான் சுவாரஸ்யம் ன்னு பார்முலா எங்கேயாவது இருக்கா, அப்படிப்பட்ட பார்முலா எல்லா படங்களுக்கும் பொருந்துமா?

        50 வருஷத்துக்கு முன்ன வெளியான ஜப்பானிய படம் Seven Samurai 3 மணி நேரம் ஓடுனாலும் அது எனக்கு இன்னைக்கும் சுவாரசியமா இருக்கு. ஆனா நம்ம ஊருல 80 ல வந்து வெற்றிகரமா ஓடுன சிவாஜியின் திரிசூலம் எனக்கு டார்ச்சரா தான் இருக்கு.

        இதுல யார் அல்லது எது சரி? ஆக யார் யாருக்கு எது பிடிக்குதோ, அது அவங்களை பொறுத்தவரை சுவாரசியம். இது தான் சுவாரசியம், இது தான் சரி, இது தான் ஒட்டுமொத்த கருத்து என்று எதையும் பொதுமை படுத்த முடியாது ராஜேஷ்.

        Reply
        • கோபி,

          யாருமே யாரோட ரசிகர்களாகவும் இருக்கும் பட்சத்தில் அவங்கவங்களுக்குப் புடிச்ச நடிகர்களின் படத்தை விட்டுக்கொடுக்க மனசு வராதுதான். அதுனாலதான் ரசிகனா படங்களைப் பார்க்காமல், நடுநிலையா படத்தைப் பார்த்தா நல்லது என்பது என் கருத்து. ஒரு படத்தின் நிறைகுறைகளை அப்படிப் பார்த்தாதான் தெரிஞ்சிக்க முடியும். ரசிகனா படங்களைப் பார்த்தா அவசியம் அது போர் அடிச்சாலும் நல்லா இருக்குன்னு தான் சொல்வோம்.

          //இது தான் சுவாரஸ்யம் ன்னு பார்முலா எங்கேயாவது இருக்கா, அப்படிப்பட்ட பார்முலா எல்லா படங்களுக்கும் பொருந்துமா?// – ஃபார்முலா எதுவும் இல்லை. மூணு மணி நேரம் தியேட்டர்ல உக்காரும் ஆடியன்ஸை சுவாரஸ்யப்படுத்துவதுதான் கமர்ஷியல் படம். ஆனா சுவாரஸ்யம் என்பது அதுல இன்ன நடிகர் நடிச்சிருக்கார் என்பதுனால வர்ரதில்லை. இதை நீங்களே திரிசூலம் உதாரணம் மூலம் சொல்லிருக்கீங்க.

          //ஆக யார் யாருக்கு எது பிடிக்குதோ, அது அவங்களை பொறுத்தவரை சுவாரசியம்// – இது ரசிக மனப்பான்மைன்னுதான் நான் நினைக்கிறேன். நீங்க கமல் ரசிகர் என்றால் பேச்சே இல்லை. உ.வி அவசியம் உங்களுக்குப் பிடிக்கத்தன செய்யும். நன் யாரோட ரசிகனும் இல்லை. என் வேலை நடுநிலையோடு விமர்சனம் செய்தல். உ.வில எனக்கு என்னென்ன புடிச்சிருக்கு – என்னென்ன புடிக்கலை என்பதைதான் என் விமர்சனத்துல சொல்லிருக்கேன். யாரையும் இன்ஃப்ளுயன்ஸ் செய்வது என் நோக்கம் அல்ல. என் கருத்தையும் யார் மீதும் திணிக்கவில்லை.

          Reply
        • கோபி

          ராஜேஷ், நான் நேற்று இரண்டாவது முறை படம் பார்த்தேன். உங்கள் மற்றும் பலருடைய Positive, Negative and Neutral reviews பலதும் படித்துவிட்டு தான் இரண்டாவது முறை போனேன். எந்த Negative விமர்சனமும் என்னை கோபப்படுத்தவில்லை என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அதையும் ஒரு கண்ணோட்டமாகத் தான் கருதினேன்.

          வீம்புக்காக சொல்லவில்லை, படம் இரண்டாவது முறை பார்க்கும் பார்க்கும் போது எனக்கு இன்னும் பிடித்து இருந்தது. பொய் சொல்லவில்லை. நேற்று (10.5.15, ஞாயிறு)1.15 pm Bangalore Cinepolis அரங்கில், படம் பார்த்தவர்கள் ரசித்து பார்த்ததாகவே எனக்கு பட்டது. House full என்றாலும் கைதட்டல்களே இல்லை தான், ஆனால் படம் முழுதும் ஆங்காங்கே மென்மையான சிரிப்பலைகள், உணர்ச்சிகரமான காட்சிகளில் உச் கள், படம் முடிந்து, கருப்பு திரையில் Direction Ramesh Aravind என்று எழுத்துக்கள் வந்தும் பெரும்பாலானவர்கள் இருக்கையில் அப்படியே அமர்ந்து இருந்ததும், உச்ச கட்டமாக, ஒரு தாய்க்கும் அவருடைய சின்ன மகளுக்கும் (6 அல்லது 7 வயது இருக்கலாம்), அரங்கை விட்டு வெளியே வந்த போது நடந்த உரையாடலும், படம் மக்களிடம் reach ஆகி இருக்கிறது என்பதற்கு சாட்சி.

          “ப்ரீதா, படம் எப்படி இருந்துச்சு? Was it nice, Ok or boring?” ”

          “Movie was good, I liked it”.

          மீண்டும் சொல்கிறேன், பொய் சொல்லவில்லை.

          Reply
          • கோபி.. உங்களுக்குப் படம் பிடிச்சது பற்றி சந்தோஷம். அந்தப் பொண்ணுக்கும் அம்மாக்கும் நடந்த கன்வர்சேஷன் அழகு. ஒவ்வொரு மன்சனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் என்பதுபோல், எனக்கும் உண்மையில் பல காட்சிகள் பிடித்தன. அதைத்தான் நானும் எழுதிருக்கேன். இருந்தாலும் சில காட்சிகள் படத்தைக் கீழே இழுத்துவிட்டன என்பது என் ஒபீனியன். Anyways, cheers and best wishes.

  12. KUMAR

    VERY NICE REVIEW RAJESH ..AM REGULAR FAN OF UR REVIEWS EXCEPT FEW….IN THIS REVIEW u mentioned about mumbai express oh! god i never scene like that kind irritable movie till my life cant understand what is going that movie “ithula live sound recording vera”.my humble opening humor is to be “simple and understandable when ever think tat movie or scene we need to smile na ” most of kamal comedy movies is stage drama except michel madana kamarajan and vasoolraja” ..

    Reply
    • sankar

      just watch santhanam and power star comedy. You should not watch Kamal Haasan’s movies. You are not matured enough to watch Kamal’s movies.

      Reply
      • This Guy is another Philistine, Who boasts to be Smart & knew More about Cinema, But Simply Outsmarts & uses Internet as a medium to publicize himself. Mr.Rajesh, I bet you have no basic Qualities , even preliminary qualities to be a Movie Critic, You don’t even know basic about Visual Medium. If In doubt ask the Professionals, They may clarify. Its not the Ignorance that kills, Even the illusion of Knowledge is Much dangerous to the Society , I pity the Crowd that Hails you.

        Reply
        • Sankar & B – I am actually laughing out loud at your idiotic comments. Just coz a film has Kamal hassan in it, do you think everybody should go gaga closing their eyes? My job as a reviewer is to review a film unbiasedly. This film, although good, has it’s own flaws and I have listed them out. If you do not want to read it – if you lack the guts to accept the flaws as they are, please leave. I do not have any place for stooges like you.

          //I bet you have no basic Qualities , even preliminary qualities to be a Movie Critic, You don’t even know basic about Visual Medium// – oh.now the ‘geniuses’ are giving me gyan. As I said, I know what I write. If you want to be a chamcha, it’s your wish. But do not puke bullshit in my post. Just get out.

          Reply
          • kumar – thanks for the detailed comment. Cheers.

          • B

            Dear Mr.Rajesh, I was not in an intention to mock. Just be open for feedback when you post things for public. Dont tag us under some tag to justify your crap. Truth is This movie has proved how much you are into movies. Hope you should have read the dissection of uv by now.Accept the fact that you cant understand the movie and correct it. You will learn only when you accept. Dont close the doors. When u dont want people to comment,dont let the public view it. If it hurted your feelings,sorries.But you dont deserve to be a critic at least for Movies of these Genre.Hold your Temper Sir.

          • Balaji,

            //Truth is This movie has proved how much you are into movies. Hope you should have read the dissection of uv by now.Accept the fact that you cant understand the movie and correct it.// – so far, that dissection is the best piece of crap I have read in my entire life 🙂 .. I was laughing out loud to read it. IMO, even kamalhassan cannot think of such reasons to justify his uthaman part which was too amateurish.

            To me, it just doesnt make any sense at all. I mean, I too have mentioned the similarities between kamalhassan and manoranjan. It stops there. This article tries to link everything with everything else in the film, which, to me, is like the exited orgasmic ramblings of a fanatic ( no offence). I would say that rakesh was so exited to see his god on screen, that he decided that there is a link between everything.

            If u read conversations with mani ratnam, mani himself has debunked several of such ‘so called’ semiotics imagined by rangan. He casually rejects them, saying those are just some shots, and not thought about earlier, well planned.

            Similarly, this article too tries painstakingly to establish kamal as the ultimate genius god of tamil cinema, but its a very weak article to me.

            But even if we consider everything he had mentioned as true (argument’s sake), the uthaman story lacks pace, and is a very ordinary, painfully boring episode. So, ultimately to me, it just stands as an odd, boring, cliched story with no real emotions.

            And, just because your idol’s film is getting reviewed, just do not be offended 🙂 .. My blog gives unbiased views. If you are not able to take it, just get out, with all due respect :-).. This is not a place for stooges as I have mentioned earlier.

          • //you dont deserve to be a critic at least for Movies of these Genre// – Oh, and what genre is it? Please educate me, will u :-)..you can give your opinion to my post. I welcome that. But when it becomes a judgement to pass, I just care a damn. Nobody can pass half baked judgements on anybody. Hence, do not try to impose your half baked foolish theories on me. Been there. Had seen a lot of ramblings like that. Would never work here.

          • B

            *so far, that dissection is the best piece of crap I have read in my entire life 🙂 .. I was laughing out loud to read it. *
            So you take sole rights to say other’s opinion as Crap … (I don’t mind even if u say that) but paradoxically you get offended & ask others to leave the page or Get rid of it. Hope we live in Open Society (At least for Internet Warriors) & not Draconian Society.
            *IMO, even kamalhassan cannot think of such reasons to justify his uthaman part which was too amateurish. *
            Just Say it as your Opinion, do not tag it under Review .
            I too felt the correlation of the Both the roles.
            One Sample instance -” En Uthiraththin Vitahi , En Uyir Ithirtha Sathai, Veroruvanai Pagavan ena Poruththiduvena…” U look at the Sync, Previous Shot Manonmani says that Her only father is Jacob & Not her Biological one.
            But after his daughter completely accepts him, Look at the prelude when the Versus appear that Comes from Manoranjan when he is behind the Window & walks with refined emotion with unmasked black dye one his face.
            Hope you got this & believe that you won’t say was just coincidence. That Prelude Starts even before the Theyyam Sequence starts .
            There are Few Dozens of Interrelated stuff.
            I agree that this cinema is too much for Tamil Movies.
            The meaning of the Tamil versus : “How Could I Tolerate- if the Seed from My Own Blood & my Own Flesh that evolved from my life – calls someone else GOD-( in here its creator) ” and Fabulously related with Prahalad’s Story.
            I never read the dissection before I saw the Movie.

            * the uthaman story lacks pace, and is a very ordinary, painfully boring episode. So, ultimately to me, it just stands as an odd, boring, cliched story with no real emotions*-
            Its Still your Opinion again its subjective, The Social Networking response in obvious. There are people of all categories.
            For the People who felt it boring ask them about Polanski and Kieslowski Movies movies to sit & watch – They don’t fall under Entertainer

            *And, just because your idol’s film is getting reviewed, just do not be offended 🙂 .. My blog gives unbiased views.*
            I am Choosy when it comes to Movies & isn’t this a personal statement & don’t tag me under any band- just to Justify what you said is right. Unbiased – don’t pull me into this please .
            To point your height of absurdity u even related Anbesivam is a copy of Planes Trains & Automobiles.
            Even UV is based on a Novel . Do you know that.?
            That’s Just One sample .
            There are Places where I agree with you but not all whatever you have penned .
            Sometimes it’s even alarming to look at the contemporary Society who don’t even think about the genuineness of the facts that they read .
            I never thought of responding to this . (- I simply Ignored- like many others )
            But looking at the stature of your imprudent verdict , I provoked.
            That’s where I doubted your so called ******Unbiased ***** crap
            * If you are not able to take it, just get out, with all due respect :-).. This is not a place for stooges as I have mentioned earlier.*- I am sorry, those words don’t hurt me as I expected this from you and moreover I am not looking for a platform to perform for instance some use Internet as a medium and Cinema as Mule to Carry them.
            I sincerely agree that it was my fault to respond you . I got agitated as you kept on using this as a place to pen whatever you ponder and call it Review -when u deceive a cluster by your own Opinions and You call it Rational.
            After all its just an Illusion of knowledge as I said Earlier.

          • Let me tell you Balaji. I have not ridiculed the film here, am I? I have listed out the positives and negatives here. I am in no way trying to push my thoughts on the readers. That’s not my job. My job is to write an unbiased review. And I have done that. Now, let’s come to the points you have listed.

            First of all, just take a look at these lines – //This Guy is another Philistine, Who boasts to be Smart & knew More about Cinema, But Simply Outsmarts & uses Internet as a medium to publicize himself. Mr.Rajesh, I bet you have no basic Qualities , even preliminary qualities to be a Movie Critic, You don’t even know basic about Visual Medium. If In doubt ask the Professionals, They may clarify. Its not the Ignorance that kills, Even the illusion of Knowledge is Much dangerous to the Society , I pity the Crowd that Hails you//

            I mean, what is this? Is this the way to respond to anybody? Just look at those judments you have passed on me. Try to talk in this manner to anybody in person, and let’s see how they respond back to you. You can disagree with me, which is absolutely fine. I welcome it. But, this is not the way to respons boss. I am in no way inclined to take this kind of a judgement from anybody. I just thrash them. Anybody would. If I talk to you in this manner, what would you do?

            Secondly, //So you take sole rights to say other’s opinion as Crap … (I don’t mind even if u say that) but paradoxically you get offended & ask others to leave the page or Get rid of it. Hope we live in Open Society (At least for Internet Warriors) & not Draconian Society.// – this is exactly the point I am trying to make you understand. Glad that you have now come to a conclusion. You were sying my opinion about the movie as crap, and I don’t deserve to be a critic. So, I guess you too don’t have the sole credit to say some opinion as crap. Glad you understood it.

            To me, the uthaman part is the single most negative aspect of the film, however hard people may try to prove by correlating every scene with every other scene. It just doesn’t make any sense to me. That ‘udhiraththin vidhai’ line you have mentioned, can be twisted in any direction boss. Sorry – the argument is too weak. As I said, even if we accept it for argument’s sake too, that episode is boring, slow and is ameturish. I liked the manoranjan part. No doubt, as I have mentioned here.

            So, bottomline is, if you have an opinion to tell, please do. But do not pass it as a judgement. Nobody would buy it. I welcome feedback. But when they start by mentioning //This Guy is another Philistine, Who boasts to be Smart & knew More about Cinema, But Simply Outsmarts & uses Internet as a medium to publicize himself// – I care a damn. Even you would do the same thing, I am sure.

            You might love the entier movie. That’s absolutely okay. But you are trying to prove that the people who point out negativities are morons. Isn’t that a personal statement ?? My policy is that there should be an opinion to everything. Both positive and negative. But when your opinion becomes a thoughtless judgement on me, I give the same treatment back. that’s how I live.

            Hope this comment clarifies. Cheers.

      • KUMAR

        Hi sankar

        Maturity is not required for watching movies a good taste is enough…a movie should give feel something laugh cry smile anything that’s enough i hope…am not against kamal hasan if we like kamal then we cant close our eyes and say all movies is good na…am also admired lot of kamal movies except his few comedy movies only again i say its comedy dramas not movies …example watch kadhala kadhala once again…hope u understand…pesi pesi ye savadipanga…in that movie many scenes not comedy all characters say no of jokes every scene and same characters laugh for that jokes.inside the screen.except audience… i dont like this kind of movies i was enjoyed apporva sagothararga, michel madana kamarajan, vasoolraja a interesting story make and humor will travel limit that movies …

        Reply
      • KUMAR

        one more shankar…seriasa irkadan meturity venum sirkaradhku ethu meturity…siripu vanda sirchitu povom …santhanam solrapola “avlo peria comedy ila ithu “na epadi sirika….

        Reply
  13. sankar

    “Mr.Rajesh, I bet you have no basic Qualities , even preliminary qualities to be a Movie Critic”. You are 100% correct.
    First of all Mr.Rajesh is a reviewer. But he behaves like a critic. His reviews itself are extremely biased. Then why he criticizes cinema and cinema technicians?
    Mr.Rajesh thinks that if he reads some cinema related books and if he watches some world cinemas(like Nolan’s and Scorcese’s films), he can be a critic.
    Critic should have wide knowledge of cinema and they should be biased. Mr.Rajesh does not have even basic qualities to be a Movie Critic. But he criticizes our genius technicians. He appreciates everthing done by some hollywood directors like Nolan, Tarantino and scorcese, but criticize whatever new experiments done by Tamil Industry technicians.

    Mr. Rajesh, please be a reviewer. do not be a critic. because u are not eligible for that.

    Reply
    • Mr Sankar.. I bet you have no basic qualities to accept the flaws in this film. You are a devotee of Kamal obviously. That is okay. But you do not have permission to puke bullshit in my blog. And by the way, just take a look at my Dark knight rises post. That’s by far the most idiotic film of Nolan, and I have rejected that film altogether.

      And, //Mr. Rajesh, please be a reviewer. do not be a critic. because u are not eligible for that.// – may I ask your eligibility to pass this judgement? Who are you? What are your credentials? I have an unbiased standard which I maintain. And I certainly have valid credentials to be what I am now. So, don’t be a chamcha to anybody. Do not be an idiotic fool. Instead, use your brain. If you still want to puke bullshit in my blog, I have work. So just get out.

      Reply
  14. சார் இந்த அமர காவியத்தில் ஒரே ஒரு கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. குழந்தை உருவாவது வரை தொடர்பில் இருந்த மனோரஞ்சன் அதற்கெல்லாம் மேனேஜரை அனுப்பாமல் எல்லாம் முடிந்த பிறகு லெட்டரை மேனேஜர் மூலம் அனுப்பி அப்படியே தெலுங்கு ப்ரொட்யூசர் மகளுடன் லைஃபில் செட்டிலாகிவிட்ட மர்மமென்ன? இது எதாவது குறியீடா? அல்லது பாயசம் எதாவது சாப்பிட்டு அந்தக் குழந்தை உருவாகியதா?

    டாக்டராக வரும் ஆன்ட்ரியாவின் நிலை என்ன? ஏதாவது ஏடாகூடமென்றால், அவருக்கு பிறக்கும் குழந்தைக்கு எதாவது உயில் எழுதி இருக்கிறாரா? மேனேஜர் லெட்டர் வைத்துக்கொண்டதைப் போல ட்ரைவரிடம் வேறு சத்தியம் வாங்கிக்கொன்டார்கள். தகப்பன் யாரென்ற அறம் படம் பார்த்ததிலிருந்து கண்ணீராக வழிந்து கொல்கிறது.

    தயை கூர்ந்து பதில் சொல்லவும்.

    Reply
    • அன்பர் சிவாஜி ராவ்,

      அன்பரே. ப்ரொட்யூசர் மனோரஞ்சனை வலுக்கட்டாயமாக தன் பிடியில் வைத்துக்கொள்கிறார் என்றுதான் படத்தில் சொல்கின்றனர். அவர் சிறிய வயது என்பதால் ப்ரொட்யுசர் அவரை முழுக்க முழுக்கத் தன் கட்டுப்பாடியில் வைத்துக்கொண்டுவிட்டார் என்பதுதான் மனோவே சொல்வது…அப்பால ஆண்டிரியாவே ரகசிய தொடர்பு. இதில் தேள் வேறு கொட்டினால் என்ன செய்வது என்று வினவி இருக்கின்றீர்கள்…. திருடர்களுக்குத் தேளே கொட்டாது என்பது சான்றோர் வாக்கல்லவா?

      Reply
  15. Muthukumar

    திரு கருந்தேள் அவர்களே,

    தயவு செய்து முதலில் உங்கள் ரஜினி ஐ ரிடைர்ட் ஆக சொல்லவும்.

    சகிக்க முடியவில்லை, அவருடைய லூட்டியும் உங்கள் விமர்சனமும்.

    இப்படிக்கு,
    ஒருவன்.

    Reply
    • Muthukumar

      திரு கருந்தேள் அவர்களே,
      உங்கள் விமர்சனத்தை குறை கூறியதட்காக வருந்துகிறேன். ஆனால் நீங்கள் கமலை எப்போதும் ஒரு படி தாழ்த்தியே விமர்சனம் செய்கிறீர்கள். அவருடைய கடின உழைப்புக்கு முன்னால், தங்களுடைய விமர்சனம் மிக நெருடலாக இருக்கிறது என்பது என் கருத்து.

      இப்படிக்கு,
      ஒருவன்.

      உங்கள் விமர்சனத்தை குறை கூறியதட்காக வருந்துகிறேன். ஆனால் நீங்கள் கமலை எப்போதும் ஒரு படி தாழ்த்தியே விமர்சனம் செய்கிறீர்கள். அவருடைய கடின உழைப்புக்கு முன்னால், தங்களுடைய விமர்சனம் மிக நெருடலாக இருக்கிறது என்பது என் கருத்து.

      இப்படிக்கு,
      ஒருவன்.

      Reply
      • திரு முத்துக்குமார்,

        இப்படி யோசித்துப் பாருங்கள். கமல் ஒரு படத்தில் இருபது வேடங்களில் நடிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் கதையோ அரத திராபை. அப்போது என்ன செய்வீர்கள்? 20 வேடங்களில் நடித்த உழைப்புகு மரியாதை செய்வோம். படத்தைத் தலையில் வைத்துக் கூத்தாடுவோம் என்றா நினைப்பீர்கள்? கொடுத்த காசுக்கு படம் சுவாரஸ்யமாக இல்லை என்றால் அதை விமர்சிப்பதில் என்ன தவறு? இந்தப் படத்தை நான் நல்ல படம் என்றேதான் சொல்லியிருக்கிறேன். இங்கே பாருங்கள் – //மனோரஞ்சனாக வாழ்ந்திருக்கும் கமல்ஹாஸனுக்காக இப்படம் அவசியம் பார்க்கப்படவேண்டும்//. ஆனால் நான் யாருடைய ரசிகனும் அல்ல. நான் ஒரு விமர்சகன். நல்லது கெட்டதுகளை விமர்சிப்பவன். எனவேதான் இப்படத்தின் நெகட்டிவ் அம்சங்களையும் சொல்லியிருக்கிறேன். அதில் தவறு இல்லையல்லவா?

        Reply
    • திரு முத்துக்குமார்,

      ரஜினி என் பாக்கெட்டில் இல்லை. அவர் எனக்கு உறவினரோ நண்பரோ இல்லை. எனவே அதை அவரிடம் சொல்ல இயலாது. வேண்டுமென்றால் நீங்களே அவருக்குக் கடிதாசி அனுப்பவும். உங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு எல்லாம் நான் ஆட முடியாது. அப்படியே, விமர்சனம் சகிக்கவில்லை என்றால் படிப்பதை நிறுத்திவிட்டு உருப்படியான வேலையைப் பார்க்கும்படி பரிந்துரைக்கிறேன்.

      Reply
  16. B

    Rajesh, Why did u Alter Your First review??????.This is not what I saw First. This is Edited Version- Sneaky Work. This Makes all my Comments Worthless. I saw Your First Review stated that there is no Relations between 2 stories. This is Misleading. Please do Say that You have edited that after the comments been posted.

    Reply
    • Absolutely not. I never change my reviews. If I do, I put up the date of change there. This is exactly the first review I published. The unchanged version. I don’t know whose review you read.

      Reply
      • And, again a judgement getting passed on me – //This is Edited Version- Sneaky Work. This Makes all my Comments Worthless//. This is what makes me to respond in the same way.

        Reply
  17. B

    Rajesh , I did not see these in your first Review.
    //படத்தில் சொல்லப்படும் மனோரஞ்சனின் கதைக்கும் கமல்ஹாஸனின் கதைக்கும் ஏராளமான சின்னச்சின்ன தொடர்புகள் படம் முழுதும் உண்டு. கமலின் குருநாதர்தான் மனோரஞ்சனின் குருநாதர்; கமலைப்போலவே மனோரஞ்சனும் ஒரேபோன்ற நடன அசைவுகளை (வேண்டுமென்றே) ஆடுபவன்; கமலைப்போலவே மனோரஞ்சனின் வாழ்க்கையிலும் பல பெண்கள் இடம்பெறுகின்றனர்; இருவருமே கர்விகள்; கமல்ஹாஸன் படங்களைப் பற்றி இடம்பெறும் வதந்திகள் – மனோரஞ்சன் நடிக்க இருக்கும் படம் – ஆதி சங்கரரின் வாழ்க்கை. சில வருடங்கள் முன்னர் கமல் புத்தராக நடிக்க இருப்பதாக ஒரு வதந்தி கிளம்பியது நினைவுவரலாம். இன்னும் இதுபோன்ற பல விஷயங்களைப் படம் பார்க்கும் நண்பர்கள் புரிந்துகொள்ளமுடியும். இதைப்போலவே, படத்தில் வரும் மனோரஞ்சன் மற்றும் உத்தமனின் கதைகளும் பல தொடர்புகளைக் கொண்டிருக்கின்றன. மனோரஞ்சனின் வாழ்க்கை குறுகியது; உத்தமனோ ம்ருத்யுஞ்ஜயன் (சாவை வென்றவன்) என்றே அழைக்கப்படுகிறான்; மனோரஞ்சனின் வாழ்க்கையில் துயரம் அதிகம்; உத்தமனின் வாழ்க்கையிலோ சந்தோஷம் அதிகம்; இக்கதைகளில் ஒன்றில் வரும் காட்சிக்கான தொடர்பு இன்னொரு கதையில் வரும் இன்னொரு காட்சியாக இருக்கிறது. இப்படிப்பட்ட சில காட்சிகள் ஒன்றையொன்று இட்டு நிரப்புகின்றன. மனோரஞ்சனின் கதையில் வரும் உணர்ச்சிபூர்வமான காட்சிகளைக் கவனியுங்கள். அவற்றுக்கான தொடர்ச்சி உத்தமனின் கதையில் வரும் அடுத்த காட்சியில் இருக்கும் (வசனம் & பாடல்களில்). இதுபோன்ற சின்னச்சின்ன முக்கியமான விஷயங்கள் அனைத்துமே கமல்ஹாஸனால் திரைக்கதையில் கச்சிதமாக எழுதப்பட்டிருக்கின்றன.// Should I have seen this earlier , unlike narcissist – Definitely I wont have replied you. Again don’t misinterpret me.

    Reply
    • B

      It Should be My Mistake . My Sincere Apologies. My Comments above are Void. You may Remove them If u Intend to as I see they are Irrelevant to the context.

      Reply
      • Absolutely no issues Balaji. //My Comments above are Void. You may Remove them If u Intend to as I see they are Irrelevant to the context// – your comments yielded an interesting perspective, and so let them be there. I do not mind. Cheers and good day. Thanks for the comments.

        Reply
    • Hey no issues Balaji. From my side, let me assure that I didn’t change anything. This review is the same one I published on the day one. Anyways, cheers and best wishes.

      Reply
  18. I watched the movie yesterday. Don’t remember anything about the movie now. Our whole family is Kamal fans. Son and husband came to the theatre after more than an year since it was Kamal’s movie. Son was looking at my face to see my expression throughout the movie. A good actor is wasting his time. Husband wants to watch ‘anbe sivam’ again tomorrow. We want to remember him as a good actor.
    I postponed reading this review to have my own opinion of the movie. It is just kuppe. I could see Kamal only in a few frames. That is all.

    Reply
  19. Ananth

    சினிமாவில் வாழ்க்கையைத் தேடுபவர்கள் தமிழர். திரையில் நாயகர் நியாயத்தைத் தட்டிக் கேட்டால், நிஜத்திலும் அவ்வாறே இருப்பார் என நினைப்பர் தமிழர். சமீப காலத் தமிழ்ப்படங்களில் அந்த வகை கதாநாயகர்களை உரித்துக் கொடுக்கும் படங்கள் வர ஆரம்பித்தன. சித்தார்த் நடித்த ‘ஜிகர்தண்டா’ அவ்வகையில் வந்த படம். கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’, அதே ரகத்தில் இன்னொரு படம்.

    கமலுக்கு எந்த மாதிரி திரைப்படங்கள் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுக்கும்? நடனத்தில் பரிமளித்த சலங்கை ஒலி, கடைசியில் இறந்து போகும் குணா, இரு வேடத்தில் தோன்றிய ஆளவந்தான் போன்றவை நினைவுக்கு வருகின்றன. ”உத்தமவில்லன்” திரைப்படத்தில் இவை அனைத்தும் காணக் கிடைக்கின்றன. பழங்கால வேடத்தில் உத்தமனாகவும் நிகழ்கால கதாநாயகன் மனோரஞ்சன் ஆகவும் இரு வேடத்தில் கமல் வருகிறார். வித்தியாசமான நடனத்தை அபிநயம் செய்பவராக நடிக்கிறார்.

    கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும்போது கட்டுரை எழுதச் சொல்வார்கள். அந்தக் கட்டுரையில் சொந்த விஷயங்களும், தனிப்பட்ட அனுபவங்களும் நிறைந்து இருக்க வேண்டும். அந்த மாதிரி நேர்மையாகவும் உண்மையாகவும் எழுத்தில் இருந்தால் மட்டுமே, அந்தக் கட்டுரையோ அல்லது கதையோ வாசகரின் மனதில் தங்கி நிலைத்திருக்கும். வேறொருவருக்கு நிகழ்ந்ததை புனைவாக்கினாலும் கூட அதில் கொஞ்சமேனும் சொந்த ஆசாபாசங்களை உணர்வுகளாக வடிக்க வேண்டும். அதில் கொஞ்சம் கற்பனையும் கலந்தால், புனைவுக்குரிய சுவாரசியத்தையும் உருவாக்கி விடலாம்.

    ’உத்தம வில்லன்’ படத்தில் நாயகன் மனோரஞ்சனுக்கு நடிகன் கதாபாத்திரம். அறுபது வயது ஆகிவிட்டாலும், தொந்தியும் தொப்பையும் குலுங்கினாலும் கூட, இருபது வயது நாயகிகளோடு ஆட்டம் போடும் கதாபாத்திரம். நாலு சண்டை, ஐந்து பாட்டு, ஏ / பி / சி வர்த்தகத்திற்கான வியாபார வித்தகங்கள் கொண்ட திரைப்படத்தில் நடித்து தள்ளுகிறார். திடீரென்று ஒரு நாள், தன்னுடைய பெயர் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்னும் வினா எழுகிறது. தனக்கு துவக்க காலத்தில் நல்ல படங்களைக் கொடுத்து சிறப்பான நடிகன் என்று பலரும் பேச வைத்த 83 வயதான இயக்குநர் மார்க்கதரிசியிடம் செல்கிறார்.

    மார்க்கதரிசியோடு இணைந்து ‘உத்தம வில்லன்’ படத்தைத் துவங்குகிறார். இதற்கு நடுவில் மூன்று காதல்கள். முதல் காதல் நிறைவேறவில்லை. இரண்டாவது மனைவி மட்டும் காதலிக்கும் இல்லத்தரசி காதல். மூன்றாவது மூத்த வயதில் இளவயதினரை பாசத்துடனும் காமத்துடனும் பற்றும் ஒவ்வாக் காதல்.

    திரைப்படத்தில் வரும் மூன்று காதல் போல் மூன்று தந்தையர்களும் உண்டு. முதல் தந்தை மாமனார் பூர்ணசந்திர ராவ் ஆக வரும் கே விஷ்வநாத். இரண்டாவது தந்தை நாயகன் மனோரஞ்சன். மூன்றாவது தந்தை ஜேகப் ஜக்கரியா ஆக வரும் ஜெயராம்.

    மாமனார் வருங்காலத்தைப் பற்றிக் கவலைப்படுபவர். தன் மகள் நலத்தை எண்ணி சிந்தித்து செயல்படுபவர். மகளுக்காக மாப்பிள்ளையை உருவாக்கியவர். ஒன்றுமில்லாத ஏழை ஆறுமுகத்தை காதல் இளவரசன் மனோரஞ்சன் ஆக்கியவர்.

    மனோரஞ்சனுக்கு இரண்டு குழந்தைகள். முதல் குழந்தை மனோன்மணி. கல்லூரிப் படிப்பை முடிக்கும்வரை மனோன்மணி என்று தனக்கு ஒரு மகள் இருப்பதையே அறியாதவர். காதலில் பிறந்த குழந்தையை சூழ்நிலை நிர்ப்பந்தத்தால் கைவிட்டவர். இன்னொரு குழந்தை முறையாகப் பிறந்த குழந்தை. ஆனால், அந்த மகனுடனும் பெரியதாக அன்னியோன்யம் எதுவும் வளர்க்காதவர். தான் உண்டு, தன் நடிப்பு உண்டு, தன் முதிய காதலிகள் உண்டு என்று சுயலவாதியாக வாழ்க்கையைக் கொண்டாடுபவர்.

    மூன்றாமவர் ஜேகப் சக்கரியா. ஜெயராம் இந்த கதாபாத்திரத்தில் அமரிக்கையாக வந்து போகிறார்.

    திரைப்படத்தில் மூன்று பேரைக் குறிப்பிட்டு பாராட்ட வேண்டும்.

    முதலாமவர் எம் கிப்ரான். படத்தின் பாடல்களில் பாரம்பரியமும் இருக்க வேண்டும். தற்காலத்திற்கு ஏற்ப கேட்கக் கூடிய துள்ளலாகவும் பாய வேண்டும். கதையோடும் இழைந்தோட வேண்டும். அவை எல்லாம் சாத்தியமாக்கி உள்ளார்.

    தாலி கட்டிய மனைவியாக ஊர்வசி வருகிறார். ஆஸ்பத்திரி காட்சி மட்டுமே அவருடைய உயிர் ஊட்டத்திற்கு அத்தாட்சி. மைக்கேல் மதன காமரஜனில் பழக்கமான ஜோடி. கமலின் நிஜ வாழ்வில் சரிகா அவரை விட்டுப் பிரிந்ததை நினைவுறுத்தும் குணச்சித்திரம்.

    மூன்றாவதாக சொக்கு செட்டியாராக வரும் மேனேஜர் எம் எஸ் பாஸ்கர். இவருக்குக் கொடுக்கப்பட்டதை ஒழுங்காகச் செய்யாவிட்டால்தான் செய்தி. கிரேசி மோகன் தனமான மொழிமாற்ற வசனங்களை சர்தார்ஜியுடன் சேர்ந்து கலகலக்கிறார். ‘அழுதா உங்களுக்கு நல்லாயில்ல!’ என்று மனோரஞ்சன் சொன்னாலும் அந்தக் காட்சியிலும் இயல்பான உடல்மொழியும் அவருக்கே பிரத்தியேகமான அன்றாட இயல்புகளின் பிரதிபலிப்பாலும் ”சொக்கு” நிலைத்திருப்பார்.

    திரைப்படத்தின் மிகப் பெரிய பலவீனம் ‘உத்தமன்’ கதாபாத்திரம் வந்து போகும் நாடகீய தருணங்கள். அந்தப் பழங்காலக் கதையில் நிறைய சாத்தியங்கள் இருந்திருக்கின்றன. ராஜா – ராணிகளை கேம் ஆஃப் த்ரோன்ஸ் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் கூட தத்ரூபமாகக் காட்டுகிறார்கள். ஆனால், தமிழ்த் திரைப்படத்தில் கிரீடம் வைத்து, கவசம் தைத்து, உத்தரீயணம் தரித்து, பஞ்சகச்சம் கட்டி சினிமா எடுப்பதாகச் சொல்கிறார்கள். இந்த மாதிரி பாவ்லா அரசர்களைக் கிண்டல் செய்வதில் பாடலில் ‘புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சி!’ என்று கோடிட்டு கிண்டலும் செய்கிறார்கள்.

    அந்த மாதிரி நுண்ணிய நகைச்சுவை புரிகிறது. ஆனால், ‘ஜிகர்தண்டா’ போல் தமிழ் சினிமாவிற்குள் இருந்து கொண்டு தமிழ் சினிமாவை நக்கல் அடித்த காட்சியமைப்போ, வசனங்களோ எதுவுமே இடம்பெறவில்லை. “நான் புத்திசாலி!” என்று கமல் சொல்லிக் கொண்டே, “எனக்கு நடனம் தெரியும் பார்!”, “நான் தெய்யம் ஆடுகிறேன் பார்!”, “என்னுடைய நகைச்சுவையைப் பார்!” என்று காதில் வந்து கத்துவது போல் படம் மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து அன்னநடை இடுகிறது.

    குறுநில மன்னர்களைப் பற்றியும் சேர, சோழ, பாண்டிய பேரரசுகளின் இலட்சணங்களை தோலுரித்து, அதே சமயம் காமெடியும் கலந்து கொடுத்த ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ போல் வெளிப்படையாக அரசியலும் பேசவில்லை. அந்தப் படத்தில் உக்கிரபுத்தன் என்னும் வீரன் ஒருவனும் புலிகேசி என்னும் கோழை மன்னனும் இருந்தார்கள். உத்தம வில்லனில், அந்த இருவரும் ஒருவராகவே வருகிறார்கள். ஆனாலும், இந்த நாடகத்தை இவ்வளவு நீட்டி முழக்கியதற்கு, சன் தொலைக்காட்சி படத்தொகுப்பாளரிடம் கொடுத்தால், அரை மணி நேரமாக வடிவேலுவின் காட்சிகளை சுருக்கித் தந்திருப்பார். அது இந்தப் படத்தை விட சுவாரசியமாக இருந்திருக்கும்.

    கமலுக்கு இந்தப் படம் இன்னொரு மணிமகுடம். நிரலி எழுதுபவர் எனக்கு ஜாவா தெரியும், ஆரக்கிள் தெரியும், ரூபி தெரியும் என்று அடுக்கி, தன்னுடைய பயோ டேட்டா சொல்லிக் கொள்வார். அது போல் நான் நடிகனாக நடித்து இருக்கிறேன். தந்தையாக வந்திருக்கிறேன். கதக்களி ஆடி இருக்கிறேன். ஆண்ட்ரியாவோடு கொஞ்சி இருக்கிறேன். பூஜாவை கண்ட இடங்களில் தொட்டு இருக்கிறேன். மூளைக்கட்டி வந்தவனின் வேதனையைக் காட்டி இருக்கிறேன். – இப்படி பட்டியல் போட்டு, தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார்.

    திரையரங்கில் இருந்தவர்கள் சிரித்த இடங்களில் எல்லாம் எனக்கு தமிழ் வசனம் புரியவில்லையோ என்று சந்தேகப்பட்டு ஆங்கிலத் துணையெழுத்துக்களைப் படித்தால், அப்பொழுதும் சிரிப்பு உண்டாகவில்லை. ஆனால், ஆங்கிலத்தில் மொழிமாற்றாமல், சூழலுக்குத் தக்கவாறு மொழிபெயர்க்கிறோம் என்று சம்பந்தமே இல்லாமல் இஷடத்திற்கு தங்களுடைய காவியத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தமிழ் வசனங்கள் நிஜமாகவேத் தேவலாம். நன்றாக இருக்கிறது. நிறைய இருக்கிறது. அதுதான் பிரச்சினை. படத்தின் முக்கிய பிரச்சினையும் கூட.

    நான் கூட எனக்குத் தெரிந்த கிரேக்கத் தொன்மம், சமீபத்தில் ஹார்ப்பர்ஸ் இதழில் படித்த சிறுகதை என எல்லாவற்றையும் இங்கே நுழைக்கலாம். ஆனால், அதற்கெல்லாம் இந்தப் பதிவில் இடமில்லை. மணி ரத்னம் எடுத்த ஓகே கண்மணி போல் சுருக்க சொல்ல வேண்டாம். ஆனால், நிறைய வெட்டி எறிந்திருக்கலாம். வளவளா வசனத்தைப் பாதியாகக் குறைத்து, கொட்டாவியை தடுத்திருக்கலாம்.

    இவ்வளவு சொல்லி விட்டு, திரைப்படத்தில் தேவையில்லாமல் வரும் ”அல்லா” வசன விளிப்பையும், மனோன்மணியின் கழுத்தில் தொங்கும் சிலுவையும், ‘நாங்க கிறிஸ்டியன்ஸ்! எனவே பெருந்தன்மையோடு நடந்து கொள்வோம்!” என்னும் பொதுமைப்படுத்தல்களையும் சொல்லாமல் செல்வது இழுக்கு. தொந்தி பெருத்த பிராமணர்கள் சாப்பிடுவதைக் காட்டுவது ஃபோர்டு பவுண்டேஷன் பாட்டாளிகளுக்கு உழைக்கிறது என்று நிறுவுவது போல் துருத்திக் கொண்டெல்லாம் இல்லை. கமல் படமென்றால் காமம் இருக்கும். நாராயண தூஷணையும் பார்ப்பான் பாஷிங்கும் இருக்கும் என்பது “அவர்கள்” எழுதிய விதி.

    படத்தின் முதல் பலவீனம் ‘அகோ வாரும் பிள்ளாய்’ என பியூ சின்னப்பா ரக வசனங்கள் என்றால், கே பாலச்சந்தர் இன்னொரு முட்டுக்கட்டை. அவரை இந்த வயதில் இப்படி படுத்தி இருக்க வேண்டாம். எனக்கு லீலா சம்சனைத் தெரியும் என்று மணி ரத்னம் அவரை உபயோகித்தால், கொஞ்சமாவது பொருந்துகிறது. கான்ஸ்டபிள் வேடத்தில் நடிக்க கான்ஸ்டபிள் ஆகத்தான் இருக்க வேண்டுமா?

    குண்டு கமலையும் அவருடைய மடியில் உட்கார்ந்து கொள்ளும் ஆண்ட்ரியாவையும் பார்த்தால் லஷ்மி நரசிம்மரைப் பார்த்த மாதிரி இருக்கிறது. ஆனால், இந்தத் திரைப்படத்தில் நரசிம்மர் செத்து விடுகிறார். தூணைப் பிளந்துகொண்டு நரசிம்மர் வருவார்… வருவார்… என பிரகலாதன் போல் நானும் அஷ்டாவதானி என்னும் வித்தகாதி வித்தக கமலுக்காக படம் நெடுகக் காத்திருந்தேன்.

    Review from WordPress.com …apt…

    Reply
  20. I love reading these articles because they’re short but inrmtoafive.

    Reply

Join the conversation