கருந்தேள் டைம்ஸ் – 1 : அனுபந்தம்

by Karundhel Rajesh November 13, 2010   Charu

ஜெயமோகன், தனது தளத்தில், தேவையே இல்லாமல் சாருவைத் தாக்கி, அவரே சில வரிகளைச் தானாகச் சேர்த்துக் கொண்டு வெளியிட்ட ஒரு கடிதத்தைத் தொடர்ந்தே, அவரது பித்தலாட்டங்களைப் பற்றி, கருந்தேள் டைம்ஸ் கட்டுரையில் எழுதினேன். அதில் வெளியிட விட்டுப்போன ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில், சாருவுடன் அன்று சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தபோது, இவ்விஷயத்தைப் பற்றி அவரது கருத்துக்களைக் கூறினார். அவற்றை எனது பதிவில் சேர்க்கவில்லை. ஏனெனில், ஒரு தனிப்பதிவாக அதனை வெளியிட்டால் தான், அவர் கூறிய விஷயத்தின் முக்கியத்துவம் நமக்குப் புரியும் என்பதால்தான். சாரு கூறியவற்றை, அவரது வார்த்தைகளிலேயே தரப்பார்க்கிறேன். இனி, ஓவர் டு சாரு.

‘அலெக்ஸா ரேங்கிங், அது இதுன்னு எதாவது சொல்லி, சண்டைக்குக் கூப்பிடுறாங்க.. ஆனால், இந்த எண்ணிக்கை ரீதியிலான பாப்புலாரிட்டி பத்தி என்னோட ஸ்டேன்ஸ் என்னன்னா, அதுக்கும் இலக்கியத்தின் தீவிரத்துக்கும் சம்மந்தமே இல்லைன்றதுதான். காஃப்கா, தாஸ்தாயவ்ஸ்கி பத்தித் தெரிஞ்சிருக்கும். அவர்களுடைய கொடிய வறுமையைப் பத்தியும், அவர்கள் காலத்தில் அவர்களின் புத்தகங்கள் விக்காதது பத்தியும்.. ஆனா இப்ப அவங்களை நாம கொண்டாடுறது இல்லையா? இதெல்லாம், சும்மா நம்மளை சண்டைக்கு வர அழைக்கிற வீண் முயற்சி.. இதுக்கெல்லாம் பதில் சொல்லணும்றதே இல்லை.

ஒரு சின்ன உதாரணம் : இப்ப, கேரளால நடக்கிற ‘ஹே’ ஃபெஸ்டிவல்ல, ஒரு எழுத்தாளர் கலந்துக்குறாரு. அவரு பேரு, ஹோர்ஹே வால்பி (Jorge Volpi). மெக்ஸிகோல இருந்து வர்ராரு. அவர், இப்போ அங்க இருக்குற ஒரு மிகப் பிரபலமான எழுத்தாளர். வயசு, ரொம்பக் கம்மி. நாற்பது இருந்தால் ஜாஸ்தி. ஆனால், அந்த ஊர் அரசு, அவருக்கு முக்கியப் பொறுப்புகள் கொடுத்து, அவரோட எழுத்தைக் கொண்டாடுது. ஆனால், இங்க என்ன நடக்குது? பல்ப் பல்ப்பா எழுதிக் குவிப்பவர் தான் இங்கே எழுத்தாளர்; கவிதைகள்னு பார்த்தா, பா விஜய் தான் இங்கே கவிஞர்; இந்த ரீதில இருக்கு.

மட்டுமல்லாமல், வால்பி எழுதிருக்குற புத்தகங்கள் எண்ணிக்கையும் ரொம்பக் கம்மி தான். இருந்தாலும், அந்த அரசு, அவரைக் கௌரவிக்குது. அவரை, அரசே தூதுவரா அனுப்புது. இலக்கியத்துக்கு இப்படித்தான் மரியாதை குடுக்கணும். ஒரு உதாரணத்துக்கு, இதுவரைக்கும் என்னுடைய நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வந்திருக்கு. ஆனால், அரசு, எந்த விதமான கௌரவத்தை வழங்குது? இலக்கியத்தைக் கௌரவிக்குதா? இல்லையே. இந்த மாதிரி அங்கீகாரமும் கௌரவமும்தான் ஒரு எழுத்தாளனுக்கு முக்கியத் தேவைகளே தவிர, இந்த ரேட்டிங் அது இது எல்லாம் இல்லை.

ஸக்கரியா கிட்ட கொஞ்ச நாள் முன்னாடி பேசினேன். என்னோட புத்தக வெளியீட்டு விழாவுக்கு வரமுடியுமான்னு கேட்டதுக்கு, அவரு, அந்தத் தேதில நான் எங்கே இருப்பேன்னு எனக்கே தெரியாதுன்னு சொன்னாரு. அது உண்மை தான். அவரு, பல நாடுகள்ல சுற்றும் ஒரு மனிதர். அந்த அனுபவங்களை, சுவையான எழுத்தா மாற்றும் திறமை அவருக்கு உண்டு. ஒரு எழுத்தாளன்னா அப்படித்தான் இருக்கணும். உலக அளவில் இலக்கியவாதிகள் இப்படித்தான் இருக்காங்க; இருப்பாங்க.. இங்க தான் அது எதுவுமே இலக்கியத்துக்கு மறுக்கப்படுது.. எந்த விதமான அங்கீகாரமும் இல்லாமலே இங்க இலக்கியவாதி எழுதுறான். வேற வழியும் இல்ல.

இது பத்தி எந்த அவேர்னெஸ்ஸும் இல்லாம, இவங்க இப்புடித்தான் சண்டைக்கு வா வான்னு அவங்க ரேஞ்சுக்குக் கூவிக்கிட்டு இருப்பாங்க. அதையெல்லாம் இக்னோர் பண்ணிட்டு, நம்ம வேலையைப் பார்ப்போம்.’

இதுதான் சாரு பேசியதன் சாராம்சம். அவரது கருத்து, ஜெயமோகன் தளத்தில் வேண்டுமென்றே சாருவை வம்புக்கிழுத்து ஜெயமோகனே ஜோடித்து எழுதிய கடிதத்தை, இக்னோர் செய்வதே. போகிறபோக்கில், அவதூறுத் தாக்குதல் செய்யும் ஒரு முயற்சி அது. இதற்குக் காரணம், ஜெயமோகனின் வழக்கமான வயிற்றெரிச்சலும் புகைச்சலும் தான். அதற்கு எவ்வித மரியாதையும் கொடுக்காமல், புறங்கையால் தள்ளிவிட்டுவிட்டு, நமது வேலையைப் பார்ப்போம் என்பது சாருவின் கருத்து. அது உண்மையும் கூட.

இருந்தாலும், ஜெயமோகனின் பிக்காளித்தனத்தைப் பற்றிய கட்டுரை ஏன் எழுதினேன் என்றால், அவர் குள்ளநரித்தனமாகச் செய்யும் இந்தப் பித்தலாட்ட வேலைகளைப் பற்றி, நண்பர்களுக்குத் தெரிவிப்பதற்கேயாகும். சென்ற பதிவில் நான் கொடுத்துள்ளவை, ஆதாரங்களுடன் கூடிய குற்றச்சாட்டுகள். ஜெயமோகன், தன்னுடைய தரப்பு தான் நியாயம் என்று நிரூபிப்பதற்காக, எந்தப் பித்தலாட்டமும் செய்யத் தயாராக இருப்பதையே அது காட்டுகிறது.

எனவே, இப்படிப்பட்ட ஒரு காமெடிபீஸ் விடும் வயிற்றெரிச்சல் பிடித்த அறிக்கைகளை இனி முற்றிலும் இக்னோர் செய்துவிட்டு, நமது வேலையைப் பார்ப்போம்.

பி.கு – வரும் வாரத்தில், எனக்குப் பிடித்த ஒரு தமிழ்ப்படத்தைப் பற்றி எழுதுவேன். மட்டுமல்லாமல், நண்பர்களுக்கு ஒரு சந்தோஷமான ஆச்சரியமும் வரும் வாரத்தில் உண்டு. அடுத்த பதிவில் அது தெரியவரும். திங்களன்று.

  Comments

9 Comments

  1. பி.கு – வரும் வாரத்தில், எனக்குப் பிடித்த ஒரு தமிழ்ப்படத்தைப் பற்றி எழுதுவேன். மட்டுமல்லாமல், நண்பர்களுக்கு ஒரு சந்தோஷமான ஆச்சரியமும் வரும் வாரத்தில் உண்டு. அடுத்த பதிவில் அது தெரியவரும். திங்களன்று.

    உங்களுக்கு ஒரு தமிழ் படம் பிடிச்சிருக்கா. மகிழ்ச்சி மக்கா.. நீங்க உங்க Tag Line @ sub Titleஅ உலக சினிமா.. உள்ளுருக்கு அனிமான்னு மாத்துங்கன்னு சொல்லான்னு வந்தேன்.. அதுக்குள்ள ஒரு தமிழ் படம் பிடிச்சிருக்குன்னு சொல்லி என்னய அதிர்ச்சில ஆழ்திட்டிங்க.. உங்களுக்கே இது நியாயமா .. அப்புறம் இந்த பதிவில நான் மேல காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணினத தவிர எதுவும் எனக்கு புரியல..

    Reply
  2. தெளிவான வாதம் நண்பா
    அலெக்ஸா மூத்திரத்துக்கும் தீவிர இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம்னே புரியலை,இவன் சைட்ல புதுசு புதுசா விட்ஜெட் வச்சிருக்கும் போதே இவன் இது போல குறுக்குவழியில் சிண்டுமுடிவான்னு தெரியும்.அடுத்து மணிரத்னம் கூட வேற கூட்டணின்னு பேசிக்கிறாங்க,ஒரு பைத்தியக்காரனுக்கே நம்மால் தாங்க முடியாது!!!:(

    Reply
  3. அது என்ன நண்பா தமிழ்படம்
    மையினாவா?
    அது என்னா ஆச்சரியம்?சொல்லுங்க சஸ்பென்ஸு தாங்காது

    Reply
  4. ஜெயமோகன் , சாரு என்கின்ற எழுத்தாளர்களை விட, அம் மனிதர்களையே எனக்கு பிடிக்கும், இந்த மாதிரியான கருத்து வேறுபாடுகளை கூட தனி மனித சேஷ்டைகளாகவே ரசிக்க தோன்றுகிறது, ஆனால் சம கால இலக்கியத்தில் சாருவின் பங்கு யாராலும் புறக்கணிக்க முடியாதது… புதிய பகுதிக்கு வாழ்த்துக்கள்…

    அப்புறம் அது என்ன தமிழ்படம் ????

    Reply
  5. @ இராமசாமி கண்ணன் – உலக சினிமா.. உள்ளூருக்கு அனிமா… ஆஹா.. என்ன ஒரு அட்டகாசமான டேக்லைன் !! 🙂 எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு… ஹீ ஹீ… ஆனா, இனி நல்ல தமிழ்ப்படங்களையும் பத்தி அப்பப்ப எழுதப்போறதுனால, அதையெல்லாம் எழுதி முடிச்சிட்ட பின்னால, இதை ரிசர்வ் பண்ணிக்குறேன் 🙂

    @ கீதப்ரியன் – அந்த மணி – மோகன் வதந்திய நானும் கேள்விப்பட்டேன்.. நண்பா… நாமெல்லாம் செத்தோம்.. ஆனா எப்புடியும் படம் வர இன்னும் ரெண்டு வருஷமாவது ஆகும் 🙂 அதுக்குள்ள எதாவது நாட்டுக்கு ஓடி, எஸ்கேப் ஆயிரலாம் 🙂

    அப்புறம், அந்தத் தமிழ்ப்படமா? ஹீ ஹீ… நாளை வரை பொறுத்திருக்கவும் 🙂

    @ Shivam – உண்மை.. ஆனால், இந்த வாதங்களெல்லாம், ஆரம்பித்து வைப்பது எப்பொழுதுமே ஜெயமோகனாகவே இருக்கும். எதாவது உளறி வைப்பார்… அதுதான் இதில் காமெடி.. அந்தத் தமிழ்ப்படம், நாளை பார்க்கவும் 🙂 நன்றி

    Reply
  6. அலெக்ஸா விற்காகவே எழுதினா எந்த குப்பை ஆபாச எழுத்தாளனும் ,இலக்கிய வாதி ஆயிடுவானா?அல்லது பாரதி ,திருவள்ளுவர் கூட அலெக்ஸா வைத்துதான் நிரூபிக்க வேண்டுமா…
    அலெக்ஸா வில் யார் வேண்டுமானாலும் முந்த முடியும்..சுவையாய் எழுதுவதில் முந்த முடியாது..அது ஜெயமோகனுக்கு எப்போதும் வாய்க்காது

    Reply
  7. @ ஆர். கே சதீஷ்குமார் – //சுவையாய் எழுதுவதில் முந்த முடியாது..அது ஜெயமோகனுக்கு எப்போதும் வாய்க்காது//

    🙂 கரெக்டா சொன்னீங்க.. ஜெயமோகன் எழுதுவதை, சும்மா படிக்க முயற்சி பண்ணேன்.. ஹாவ்வ்வ்… தூக்கம் வந்தது தான் மிச்சம் பாஸ் 🙂 பாரதி, வள்ளுவர் பற்றி உங்க கமெண்ட் டாப்பு 🙂

    Reply
  8. தீபாவளி விடுமுறைக்கு அப்புறம் i am back எலாதையும் படிச்சுட்டு சாவகாசம நைட் வந்து கமெண்ட் போடுகிறேன்

    Reply

Join the conversation