எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் – 3 – காக்கிசட்டை

by Karundhel Rajesh July 22, 2010   80s Tamil

ம்ம்ம்ம்… எண்பதுகளில் மட்டுமல்ல. எந்தக் காலத்திலும் – ஏன் – இப்போதுகூட – கொடிகட்டிப் பறக்கக்கூடிய ஒரு கூட்டணி…. வெல்.. சத்யராஜ் & கமல். இவர்கள் நடித்த எந்தப் படத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அத்தனை படங்களிலும், நமக்கு வேண்டிய பொழுதுபோக்கு கிடைக்கும். சத்யராஜிடம் அத்தனை காட்சிகளிலும் ஆப்பு வாங்கும் கமல், கடைசி காட்சியில் மட்டும் (போனால் போகிறதென்று) சண்டையில் வென்று, கதாநாயகனாகத் தன்னை நிலைநாட்டிக் கொள்வார். அதெல்லாம் பரவாயில்லை. படம் முடிந்தாலும், நமது மனதில் நிற்கும் கதாபாத்திரமாக, சத்யராஜின் கதாபாத்திரம் மட்டுமே இருக்கும்.

அப்படி, ஆயிரத்தித் தொளாயிரத்து எண்பத்தி ஆறில் வெளிவந்த ஒரு படமே ‘காக்கி சட்டை’.

அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த ரஜினி கமல் படங்களில் ஒரு ஒற்றுமை இருக்கும். எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும், இயக்கம் என்று பார்த்தால், முக்காலே மூன்றரை வீசம், ஒரே ஒரு பெயர் மட்டுமே இருக்கும்.

ராஜசேகர்.

சென்ற பதிவில் நாம் பார்த்த ‘விக்ரம்’ படத்திற்கு முன்பாக, கமல் நடித்த ஒரு படமே காக்கிசட்டை.

தயாரிப்பு – சத்யா மூவீஸ். எம்ஜியாரின் மோஸ்ட் ஃபேவரைட் நிறுவனம். ஆரெம்வீ தான் இதன் மூளை. எம்ஜிஆரின் கைகள், ஒரு வேலைப்பாடு மிகுந்த பெட்டியைத் திறக்க, அதில் ‘சத்யா மூவீஸ்’ என்று எழுதியிருக்க, அவரது கைகள், அந்தப் பெயரின் மேல் பூமாரி பொழியும் லோகோவை, எண்பதுகளில் படங்கள் பார்க்க ஆரம்பித்த யாராயினும் புரிந்து கொள்வார்கள்.

அதே போல், சத்யா மூவீஸ் படங்களில், கதை என்று டைட்டிலில் வரும் இடத்தில், ‘சத்யா மூவீஸ் கதை இலாகா’ என்று போட்டிருக்கும். இன்றைய ‘விகடன் விமரிசனக்குழு’ போல. இந்தக் கதை இலாகாவில் யார் யார் இருந்தார்கள் என்று யாராவது தெளிவு படுத்தினால் தேவலை.

சரி. இந்த சத்யா மூவீஸ், ராஜசேகர், இளையராஜா, கமல் கூட்டணியில் வெளிவந்த ‘காக்கிசட்டை’ படம், பொழுதுபோக்குப் படங்களுக்கு ஒரு உதாரணம். இப்படத்துக்கு முன்னால், ‘சகலகலாவல்லவன்’ படத்தை, பொழுதுபோக்குப் படங்களுக்கு ஒரு முன்மாதிரியாகக் கொள்ளலாம்.

ரைட். படத்தின் கதை என்ன?

மிகவும் சிம்பிள். போலீஸ் வேலைக்கு ஆசைப்பட்டு, உடற்பயிற்சியெல்லாம் செய்து, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஒரு ஆள், நம்ம கமல். வீட்டு மொட்டை மாடியில் தான் எல்லா உடற்பயிற்சியும் செய்வார்.

பக்கத்து வீட்டில் இருந்துகொண்டு, கட்டுமஸ்தான கமலை லுக்கு விடும் கதாபாத்திரம், அம்பிகாவுக்கு. கமல் உடற்பயிற்சி செய்யும்போதெல்லாம், ரகசியமாக, காமெராவை வைத்துக்கொண்டு (ட்ரைபாட் எல்லாம் இந்தக் காமெராவுக்கு உண்டு) படம் எடுப்பார் அம்பிகா. அதைத் தெரிந்துகொள்ளும் கமல், உடல் முழுக்க சாக்கு போர்த்திக்கொண்டு வந்து, அம்பிகாவை டீஸ் செய்யும் காட்சிகளும் படத்தில் உண்டு.

தந்தை கல்லாப்பெட்டி சிங்காரம், தவக்களையின் உதவியோடு, கமலை ஏணியெல்லாம் போட்டு, வீட்டை சரசரவென்று ஏறச்செய்து, அவரது ஃபிட்நெஸ்ஸை அளவெடுக்கிறார். அப்படி ஒருமுறை பச்சை முட்டைகளை உடைத்துக் குடித்துவிட்டு, ஏணியேறும் கமல், பக்கத்து வீட்டின் குளியலறை ஜன்னல் மூலம், குளித்துக் கொண்டிருக்கும் அம்பிகாவைப் பார்த்து விடுகிறார். அவரது மனதில், ‘காதல்’ (???!!!) துளிர்விடுகிறது (உண்மையில், இது ஒரு நல்ல டபுள் எக்ஸ் படத்துக்கு உரிய தீமாகும்).

அதன்பின், அம்பிகா, கமலை, சென்னையிலேயே பெரிய துணி வடிவமைப்பாளரிடம் கூட்டிச் சென்று, போலீஸ் உடை தைத்துத் தருகிறார். மனம் நெகிழும் கமல், அம்பிகாவைக் காதலிக்கத் துவங்குகிறார்.

அந்தப் போலீஸ் உடையிலேயே, ஒரு லாரியில் கடத்தப்படும் போதை வஸ்துக்களை விரட்டிப் பிடிக்கும் கமல், அதனைப் போலீஸின் கஸ்டடியில் ஒப்புவிக்கிறார்.

அந்த வருடம் நடைபெறும் போலீஸ் நேர்முகத் தேர்வில், (செண்டிமெண்ட் புகழ்) கோபாலகிருஷ்ணனிடம் – கமிஷனர் என்று நினைக்கிறேன் – நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் கமல், தோற்றுப் போகிறார். அவர் போதை வஸ்துக்கள் அடங்கிய லாரியை மடக்கிப் பிடித்தவர் என்று தெரிந்தும், கோபாலகிருஷ்ணன் கமலை ஃபெயிலாக்கி விடுகிறார்.

இன்னொரு பக்கம், கடத்தல்காரர்கள் ராஜீவும் சத்யராஜும், போலீஸிடம் பிடிபட்ட லாரியை எரித்து விடுகிறார்கள்.

நேர்முகத் தேர்விலிருந்து சோர்வாக வெளிவரும் கமல், நாட்டுச்சரக்கை முதன்முதலாக (????!!) அடித்துவிட்டு, பாடும் பாடலே, உலகப்புகழ் பெற்ற ‘சிங்காரி சரக்கு நல்ல சரக்கு’.

பாடல் முடிந்ததும், போலீஸ் மேல் மண்ணைத் தூவிவிட்டு ஓடும் கமலுக்கு, சத்யராஜ் அடைக்கலம் தர, கடத்தல் கும்பலில் ஒரு இடம் கிடைத்து, தனது திறமையால் வேகமாக வளர்ந்து, முக்கிய இடம் பிடிக்கிறார் கமல் (கோவையில் முக்கிய நபர் கைது – ஏன்? சேலத்துல முக்கினா கைது பண்ண மாட்டாங்களா?? கவுண்டமணி ஜோக் – சூரியன் படம் – நினைவு வருகிறது).

அதே நேரத்தில், கடத்தல் கும்பலைச் சேர்ந்த மாதவி, படத்தில் அறிமுகம் (நீச்சல் குளத்தில் நீந்தும் மாதவியை யாரால் மறக்க முடியும்?).

கமல், மாதவி ஜோடி, பல கடத்தல்களில் சத்யராஜுக்கு உதவி செய்கிறது. ஏர்போர்ட்டில் ஒரு பிணத்தைக் கடத்தி, முக்கியத் தகடு ஒன்றைக் கடத்திவரும் கமலை, சத்யராஜ் பாராட்டவும் செய்கிறார்.

(இந்த இடத்தில், கமல் அளித்த ஒரு இண்டர்வியூ நினைவுக்கு வருகிறது. பிணம் எரியும் தருணத்தில், அப்பிணத்தில் இருக்கும் ஒரு தகடு மேப்பை சத்யராஜ் தேடுவார். அந்த நேரத்தில், தனது அடியாள் ஒருவனை, ‘தகடு எங்கண்ணே? என்று சத்யராஜ் கேட்பதாக, சிச்சுவேஷன். ஆனால், சத்யராஜ், இந்த வசனத்தை உச்சரித்துவிட்டு, மலங்க மலங்க முழிக்கும் அடியாளிடம், ஸ்பாண்டேனியஸாக, ‘தகடு தகடு’ என்று கேட்கும் வசனம், சூப்பர்ஹிட்டாக மாறியது. இதனைக் கேட்டவுடன், பயங்கரமாக சிரித்ததாக கமல் கூறி, சத்யராஜை, மேலும் இப்படிப் பேசுமாறு என்கரேஜ் செய்ததாகக் கூறினார். ஆனால், கமலைப் பற்றி நன்றாகத் தெரிந்த பின், அவர் என்கரேஜ் செய்ததற்குப் பதில், வயிறு எரிந்திருப்பார் என்றே தோன்றுகிறது. ரஜினி பற்றிப் பல்வேறு தருணங்களில் கமல் அளித்த பேட்டிகளை நினைவு கூர்க. ரஜினியின் 25வது வருட விழாவிற்கு அளித்த பேட்டியிலும், யாருமே கேட்காமலே, ‘ரஜினிக்கு வாழ்த்துகள். ஆனா, நான் சினிமாக்கு வந்து, ஏறத்தாழ 50 வருஷம் ஆகப்போகுது’ என்று முந்திரிக்கொட்டைத்தனமாக பதில் அளித்த விஷயம், ஒரு உதாரணம். அதேபோல், மலேசியவிலோ சிங்கப்பூரிலோ ஒருமுறை, ஆடுபுலி ஆட்டம் முடிந்து, இருவரும் தனித்து ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த சமயம், ரஜினி வந்து தன்னிடம் ஆலோசனை கேட்டதாகவும், அப்போது, இனி இருவரும் சேர்ந்து நடிக்கச் சம்மதிக்க வேண்டாம் எனவும், இனிமேல் தனியாகத்தான் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களை வலியுறுத்த வேண்டும் என்றும் ரஜினிக்கு ஆலோசனை அளித்ததாக வேறு கமல் சொன்னார். இது, பக்கா வயிற்றெரிச்சல் என்பது, அவர் சொன்னவுடன் தெரிந்தது. ரஜினி கமல் இருவரும் சேர்ந்து நடிக்கும் காலத்திலேயே, டக்கென்று ரசிகர்களைக் கவர்ந்தவர்… வெல்.. ரஜினிதான். கமல், வழக்கப்படி, சிவாஜியிடம் இருந்து தான் கற்றுக்கொண்ட மிகை நடிப்பையே வழங்கி வந்தார். ரஜினி கமலுக்கு ஏற்பட்ட போட்டியைப் பற்றிய பல ரசமான தகவல்களை, சீக்கிரம் ஒரு பதிவாக எழுதுகிறேன்).

எனிவே, இப்படி சத்யராஜின் நம்பிக்கைக்குகந்த ஆளாக மாறி, ஒருநாள் திடீரென, கமல் போலீஸைச் சேர்ந்தவர் என்ற உண்மை வெளியே வருகிறது. வானிலே தேனிலா பாடல். அதன்பின், அங்கே வரும் கோபாலகிருஷ்ணன் – போலீஸ் படை – க்ளைமாக்ஸ் சண்டை – பின் சுபம்.

கடைசியில் தான் தெரிகிறது, கமல் அஸிஸ்டெண்ட் கமிஷனர் என்று. படம் முடிகிறது.

இந்த ஃபார்முலா, அதன்பின் எண்ணற்ற தமிழ்ப்படங்களில் உபயோகப்படுத்தப்பட்டது, எல்லாருக்கும் தெரிந்ததே. தில், ஒரு உதாரணம்.

ஆக, எண்பதுகளின் சூப்பர்ஹிட்டுகளில் ஒன்றான காக்கி சட்டை, இவ்வாறாக மக்கள் மனதைக் கவர்ந்தது.

இப்படம், எனக்கும் பிடிக்கும். குறிப்பாக, காக்கி சட்டையின் பாடல்கள். ‘கண்மணியே பேசு… மௌனமென்ன கூறு’, ‘வானிலே தேனிலா ஆடுதே பாடுதே’, ‘நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு’, பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும்’, ‘பூப்போட்ட தாவணி.. போதையில் ஆடுதே’ ஆகிய பாடல்கள், ரசிகர்கள் மனதைக் கவர்ந்தது, அந்தக் காலத்திய ரசிகர்கள் யாரும் மறக்க முடியாது.

ஸோ, காக்கி சட்டை – அட்டகாசம்!

காக்கி சட்டை பற்றி நான் ஆங்கிலத்தில் ‘IMDB’யில் எழுதி, அந்தப் படத்தை முதன்முதலாக ஐஎம்டிபியின் லிஸ்ட்டில் ஆட் செய்து எழுதிய விமர்சனத்தை இந்த சுட்டியில் காணலாம். ஆண்டு – 2006 (அதற்கு முன், இப்படம் ஐஎம்டிபியில் இல்லை. நான் ஐஎம்டிபியில் ஆட் செய்தபிறகு, எழுதப்பட்ட ஒரே விமர்சனம், எனது விமர்சனம் மட்டுமே).

  Comments

80 Comments

  1. ம்ம் தலைவரின் பாண்டியன், விஜயின் போக்கிரி எல்லாவற்றிக்கும் முன்னோடி. The Departed கொஞ்சம் இந்தப் படம் போல இல்லை

    Reply
  2. நீங்கள் விஜய் டிவி நடத்திய கமல் 50 பார்க்கவில்லைப் போலிருக்கின்றது. அதில் ரஜனியே கமல் தன்னை தனித்து நடிக்கும் படி கூறியதைக் கூறியுள்ளார். ரஜனிக்கும் கமலுக்கும் இருக்கும் நட்பும் பெரும் தன்மையும் உங்களைப் போன்ற ரஜனி ரசிகர்களிடம் இல்லை.

    காக்கிச்சட்டையின் லேட்டஸ் வேர்சன் போக்கிரி.

    கமல் மீதான தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்த்து உங்கள் விமர்சனம் கலக்கல்.

    Reply
  3. @ தர்ஷன் – அதேதான்… காக்கிசட்டை, பாண்டியன், போக்கிரி எல்லாவற்றுக்கும் முன்னோடி தான்… டிபார்ட்டட் கூட, இந்தப் படம் போல் தான்.. உலகளாவிய ஒரு யூனிவர்சல் தீம் தான் காரணம் 😉

    @ வந்தியத்தேவன் – நான் ரஜினி ரசிகன் அல்லவே அல்ல. அதே போல் கமல் ரசிகனும் அல்ல. இது, ஒரு தனிப்பட்ட திரைப்பட ரசிகனின் பார்வை மட்டுமே. ரஜினிக்கும் கமலுக்கும் இருப்பது பெருந்தன்மையாகவே இருக்கட்டும். ஆனால், அவர்களது வளர்ச்சியை எனது சிறுபருவம் முதலே கண்டு வந்துள்ளேன். இக்கட்டுரையில் இருப்பது, எனது கருத்து.

    ஆனால், அதில் கண்டிப்பாக எந்தக் காழ்ப்பு உணர்ச்சியும் இல்லை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இது ஒரு ஆரோக்கியமான விவாதமாக மாறினால், முதலில் சந்தோஷம் அடைவது நானாகத்தான் இருப்பேன்.

    உங்களது கருத்துக்கு நன்றி நண்பா..

    Reply
  4. //(உண்மையில், இது ஒரு நல்ல டபுள் எக்ஸ் படத்துக்கு உரிய தீமாகும்).

    //

    இத பத்தி நம்ம பாலி பாலி என்ன சொல்ல போறாரு.

    Reply
  5. //நேர்முகத் தேர்விலிருந்து சோர்வாக வெளிவரும் கமல், நாட்டுச்சரக்கை முதன்முதலாக (????!!) அடித்துவிட்டு, பாடும் பாடலே, உலகப்புகழ் பெற்ற ‘சிங்காரி சரக்கு நல்ல சரக்கு’.
    //
    இந்த பாட்டுல கூட சேர்ந்து ஆடற சரக்க பத்தி ஒன்னும் சொல்லம போனா எப்படி 🙂

    Reply
    • raja

      🙂

      Reply
  6. //நீச்சல் குளத்தில் நீந்தும் மாதவியை யாரால் மறக்க முடியும்?).//
    உங்களால முடியுமா பாலி பாலி 🙂

    Reply
  7. வழக்கம்போல இந்த படத்தையும் நான் பார்த்தது இல்லை (நான் உண்மையில் 1997 ஆண்டிற்கு முன்பு பார்த்த தமிழ் படங்கள் மிகவும் குறைவே, ஆனால் அதற்க்கு பின்பு வந்த படங்களில் பெரும்பான்மையானவற்றை பார்த்து விட்டேன், 75% சதவீதம் வரை).

    அது ஏனோ தெரியவில்லை கமல் படங்களும் சரி, கமலும் சரி என்னை ஈர்த்தது கிடையாது. நான் 1997 ஆண்டிற்கு பிறகு தமிழ் படங்களை பார்க்க ஆரம்பித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    Reply
  8. //என்கரேஜ் செய்ததற்குப் பதில், வயிறு எரிந்திருப்பார் என்றே தோன்றுகிறது. ரஜினி பற்றிப் பல்வேறு தருணங்களில் கமல் அளித்த பேட்டிகளை நினைவு கூர்க. ரஜினியின் 25வது வருட விழாவிற்கு அளித்த பேட்டியிலும், யாருமே கேட்காமலே, ‘ரஜினிக்கு வாழ்த்துகள். ஆனா, நான் சினிமாக்கு வந்து, ஏறத்தாழ 50 வருஷம் ஆகப்போகுது’ என்று முந்திரிக்கொட்டைத்தனமாக பதில் அளித்த விஷயம், ஒரு உதாரணம். அதேபோல், மலேசியவிலோ சிங்கப்பூரிலோ ஒருமுறை, ஆடுபுலி ஆட்டம் முடிந்து, இருவரும் தனித்து ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த சமயம், ரஜினி வந்து தன்னிடம் ஆலோசனை கேட்டதாகவும், அப்போது, இனி இருவரும் சேர்ந்து நடிக்கச் சம்மதிக்க வேண்டாம் எனவும், இனிமேல் தனியாகத்தான் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களை வலியுறுத்த வேண்டும் என்றும் ரஜினிக்கு ஆலோசனை அளித்ததாக வேறு கமல் சொன்னார். இது, பக்கா வயிற்றெரிச்சல் என்பது, அவர் சொன்னவுடன் தெரிந்தது. ரஜினி கமல் இருவரும் சேர்ந்து நடிக்கும் காலத்திலேயே, டக்கென்று ரசிகர்களைக் கவர்ந்தவர்… வெல்.. ரஜினிதான். கமல், வழக்கப்படி, சிவாஜியிடம் இருந்து தான் கற்றுக்கொண்ட மிகை நடிப்பையே வழங்கி வந்தார். ரஜினி கமலுக்கு ஏற்பட்ட போட்டியைப் பற்றிய பல ரசமான தகவல்களை, சீக்கிரம் ஒரு பதிவாக எழுதுகிறேன்).
    //
    ஏதோ ஒரு சண்டைய ஆரம்பிச்சு வெக்கிற நோக்கம் நல்லாவே தெரியுது

    Reply
  9. என்னுடைய தற்போதைய ஹாபி – 1940’s மற்றும் 1950’s ஆண்டுகளில் வந்த ஆங்கில படங்களை சேகரித்து பார்ப்பதும், சில குறிப்பிட்ட வகையான பழைய தமிழ் படங்களை (1960+ to 1985) சேர்த்து பார்ப்பதுமே.

    ஆகையால் இது போன்ற படங்கள் – இப்போதைக்கு பார்க்கும் உத்தேசம் இல்லை.

    Reply
  10. //(உண்மையில், இது ஒரு நல்ல டபுள் எக்ஸ் படத்துக்கு உரிய தீமாகும்).

    இத பத்தி நம்ம பாலி பாலி என்ன சொல்ல போறாரு//

    அடப்பாவிகளா… முடிவே பண்ணிட்டீங்களா ?? 😉 பாலி பாலின்னு.. 😉

    இதோ தலைவர் வந்துட்டாரு.. இருங்க இருங்க .. மிஸ் கிட்ட மாட்டி.. மரத்துமேல பாட்டி 😉

    Reply
  11. //இந்த பாட்டுல கூட சேர்ந்து ஆடற சரக்க பத்தி ஒன்னும் சொல்லம போனா எப்படி :)//

    Y. விஜயாவப்பத்தி சொல்லாமப்போனது என்னோட குத்தம்தான் … அதுக்காக சாமி வந்து கண்ணக் குத்திங்ஸ் பண்ணிருமோன்னு பயமா இருக்கு 😉

    Reply
  12. @ விஸ்வா – //வழக்கம்போல இந்த படத்தையும் நான் பார்த்தது இல்லை (நான் உண்மையில் 1997 ஆண்டிற்கு முன்பு பார்த்த தமிழ் படங்கள் மிகவும் குறைவே, ஆனால் அதற்க்கு பின்பு வந்த படங்களில் பெரும்பான்மையானவற்றை பார்த்து விட்டேன், 75% சதவீதம் வரை).

    அது ஏனோ தெரியவில்லை கமல் படங்களும் சரி, கமலும் சரி என்னை ஈர்த்தது கிடையாது. நான் 1997 ஆண்டிற்கு பிறகு தமிழ் படங்களை பார்க்க ஆரம்பித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.//

    ஆஹா… ஒரு கோல்டன் ஏஜ்ஜ மிஸ் பண்ணிட்டீங்களே… அந்தக் காலகட்டத்துல வந்த ரஜினி கமல் டிஸ்கோ சாங்ஸ் சும்மா பட்டைய கிளப்புமே … 😉 ரஜினி ஷங்கர் முதல்லே சேர்ந்த ‘சிவாஜி’ல இப்புடி ஒரு டிஸ்கோ சாங் இருக்கும்னு நினைச்சி ஏமாந்து போன ரசிகர்கள்ல நானும் ஒருத்தன் 🙁

    Reply
  13. //காக்கி சட்டையின் பாடல்கள். ‘கண்மணியே பேசு… மௌனமென்ன கூறு’, ‘வானிலே தேனிலா ஆடுதே பாடுதே’, ‘நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு’, பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும்’, ‘பூப்போட்ட தாவணி.. போதையில் ஆடுதே’ ஆகிய பாடல்கள், ரசிகர்கள் மனதைக் கவர்ந்தது//

    உண்மைதான். குறிப்பாக கமல் அங்கிளும், அம்பிகா ஆண்ட்டியும் போட்ட ஆட்டத்தை யாரால் மறக்க இயலும்? பல தடவை சித்ரஹார் (?!) நிகழ்ச்சியில் இந்த பாடல்களை பார்த்துள்ளேன்.

    Reply
  14. @ இராமசாமி கண்ணன் – //ஏதோ ஒரு சண்டைய ஆரம்பிச்சு வெக்கிற நோக்கம் நல்லாவே தெரியுது//

    ஆஹா… ஆரம்பிச்சிட்டீங்களா… சண்டைய நீங்க நல்லாவே கீ குடுத்துட்டீங்க.. இனி வூட்டுக்கு ஆட்டோல்லாம் வருமே.. அய்யகோ ;-(

    Reply
    • Holger HogelüchtHallo Lisa,dann musst Du die Adresse rausnehmen. Wenn Du aber ein lokales Unternehmen mit Publukimsverkehr betreibst (z.B. Geschäft vor Ort) dann sollte das natürlich drin bleiben. So können Leute Dich z.B. auch über Ihr Mobiltelefon finden und klicken, dass sie vor Ort waren!

      Reply
    • Åh jamen du skulle bare have været taget ud til Femørem station til Steinerskolen på amager. Der har vi tilbragt vores dag og er FYLDT op med indtryk og gode sager i lommerne.Sad ved siden af Jesper Binzer og gik helt i stå inde i mit hoved ;).Billeder her lidt senere, eller i morgen hvis jeg falder i søvn inden jeg er færdig (undtagen af Jesper. Han skulle have liv til at være privat og banke sin messing-lysestage i fred, sammen med sønnen) ;).

      Reply
  15. @ விஸ்வா – //என்னுடைய தற்போதைய ஹாபி – 1940’s மற்றும் 1950’s ஆண்டுகளில் வந்த ஆங்கில படங்களை சேகரித்து பார்ப்பதும், சில குறிப்பிட்ட வகையான பழைய தமிழ் படங்களை (1960+ to 1985) சேர்த்து பார்ப்பதுமே//

    அதையெல்லாம் ஒரு லிஸ்ட்டு போட்டா, நாங்களும் பார்ப்போம் இல்ல.. என்னா ஒரு வில்லத்தனம் !

    Reply
  16. //குறிப்பாக கமல் அங்கிளும், அம்பிகா ஆண்ட்டியும் //
    அப்ப்வே கமல் அங்கிள்னா( இத வேணா ஒத்துக்கலாம்.. அம்பிகா ஆண்டியா :L) நீங்க அப்ப குழந்தயா விஷ்வா அண்ணாச்சி 🙂

    Reply
  17. //ஆஹா… ஒரு கோல்டன் ஏஜ்ஜ மிஸ் பண்ணிட்டீங்களே…//

    உண்மைதான். நான் தமிழகத்திற்கு வந்ததே எண்பதுகளின் இறுதியாண்டில் தான். அதுவரை வாடா இந்திய படங்களும், அந்த ரீஜனல் தொலைக்காட்சியும்தான் நமக்கு துணை.

    நடு நடுவே சம்மர் ஹாலிடேவில் வரும்போது ஏதாவது தமிழ் படங்களை பார்ப்பதும், தமிழ் காமிக்ஸ்களை வாங்குவதும் உண்டு.

    Reply
  18. //உண்மைதான். குறிப்பாக கமல் அங்கிளும், அம்பிகா ஆண்ட்டியும் போட்ட ஆட்டத்தை யாரால் மறக்க இயலும்? பல தடவை சித்ரஹார் (?!) நிகழ்ச்சியில் இந்த பாடல்களை பார்த்துள்ளேன்//

    😉 அந்த நிகழ்ச்சி, ஒளியும் ஒலியும் தானே.. அத, பெரிய்ய ’ஒ’ ஒண்ணு போட்டு, அதுக்கப்புறம் ‘ளியும் லியும்’ன்னு ஒண்னுக்குக் கீழ ஒண்ணா போடுவாங்க.. ஜாலியா இருக்கும் 😉

    Reply
  19. //உண்மைதான். நான் தமிழகத்திற்கு வந்ததே எண்பதுகளின் இறுதியாண்டில் தான். அதுவரை வாடா இந்திய படங்களும், அந்த ரீஜனல் தொலைக்காட்சியும்தான் நமக்கு துணை//

    அப்ப ‘நேத்து ராத்திரி யம்மா’, ‘பொன்மேனி உருகுதே’, ‘பேசக்கூடாது’, மாதிரி பாட்டெல்லாம் நீங்க டோட்டலா உட்டுட்டீங்க 😉

    ச்சே.. ஜஸ்ட்டு மிஸ்சு… 😉

    Reply
  20. //நீங்க அப்ப குழந்தயா விஷ்வா அண்ணாச்சி//

    பச்சிளம் பாலகன் விஸ்வா என்பதை எங்கள் ஹாலிவுட் அங்கிள் உறுதிபடுத்துவார் (அவரு எங்க அப்பாரு காலத்துல பதிவு போட்டவரு).

    உண்மையில் மேட்டர் என்னன்னா இந்த படங்களை எல்லாம் தற்போதுதான் பார்ப்பதால் (எப்போதாவது நேரம் கிடைத்தால் டிவியில், அல்லது நண்பர்களுடன் பயணம் செல்லும்போது இரவினில் பல கமென்ட்டுகளுடன் பார்க்கையில்) அந்த மென்டாலிட்டி தான் வருகிறது.

    தவறாக இருப்பின், பொருட்படுத்த வேண்டாம்.

    Reply
  21. //
    தவறாக இருப்பின், பொருட்படுத்த வேண்டாம்.//

    இந்த டிஸ்கி நல்லா இல்ல.

    Reply
  22. //ஹாலிவுட் அங்கிள் உறுதிபடுத்துவார் (அவரு எங்க அப்பாரு காலத்துல பதிவு போட்டவரு).
    //
    நேத்திலேந்து அவருக்கு பேர மாத்தியாச்சு.. புது பேர தேளு கிட்ட கேட்டுக்கோங்க அண்ணாச்சி 🙂

    Reply
  23. //அப்ப ‘நேத்து ராத்திரி யம்மா’, ‘பொன்மேனி உருகுதே’, ‘பேசக்கூடாது’, மாதிரி பாட்டெல்லாம் நீங்க டோட்டலா உட்டுட்டீங்க 😉

    //
    அதெல்லாம் என்ன எல்.கே.ஜில்ல சொல்லி தர ரைம்ஸா.. விஸ்வா அண்ணாச்சி அப்பல்லம் குழந்தயாம் தேளு

    Reply
  24. //அந்த நிகழ்ச்சி, ஒளியும் ஒலியும் தானே.//

    அது தமிழ் நாட்டில். மற்றபடி நானிருந்த வட இந்திய மாநிலங்களில் எல்லாம் வெள்ளிகிழமை சித்ரஹாரும் , புதன்கிழமை வேறொரு பாடல் நிகழ்ச்சியும் வெளியாகும். அந்த பாடல் நிகச்சியில் அனைத்து மொழியிலும் பாடல்களை வெளியிடுவார்கள். ஒரு தமிழ் பாடல், ஒரு தெலுங்கு பாடல், ஒரு பெங்காலி பாடல், ஒரு பஞ்சாபி பாடல், இரண்டு ஹிந்தி பாடல்கள் என்று வரும்.

    அப்போதுதான் ஒரு தமிழ் பாடலை பார்ப்பேன். அதில் தான் இந்த மாதிரி பாடல்களை எல்லாம் பார்த்தது.

    உங்களுக்கு ஒரு மேட்டர் தெரியுமா? ஒரு காலத்தில் தூர்தர்ஷனில் பாடல்களை வெளியிட பட நிறுவனம் பணம் செலுத்த வேண்டும். (ஒரு பாடல் ருபாய் ஐந்தாயிரம் என்று நினைவு 1989ல்)

    Reply
  25. //உண்மையில் மேட்டர் என்னன்னா இந்த படங்களை எல்லாம் தற்போதுதான் பார்ப்பதால் (எப்போதாவது நேரம் கிடைத்தால் டிவியில், அல்லது நண்பர்களுடன் பயணம் செல்லும்போது இரவினில் பல கமென்ட்டுகளுடன் பார்க்கையில்) அந்த மென்டாலிட்டி தான் வருகிறது//

    அந்தப் படங்களையெல்லாம் இப்புடித்தான் பாக்கணும்.. அப்பத்தான் படு ஜாலியா இருக்கும் விஸ்வா 😉

    Reply
  26. //அது தமிழ் நாட்டில். மற்றபடி நானிருந்த வட இந்திய மாநிலங்களில் எல்லாம் வெள்ளிகிழமை சித்ரஹாரும் , புதன்கிழமை வேறொரு பாடல் நிகழ்ச்சியும் வெளியாகும். அந்த பாடல் நிகச்சியில் அனைத்து மொழியிலும் பாடல்களை வெளியிடுவார்கள். ஒரு தமிழ் பாடல், ஒரு தெலுங்கு பாடல், ஒரு பெங்காலி பாடல், ஒரு பஞ்சாபி பாடல், இரண்டு ஹிந்தி பாடல்கள் என்று வரும்//

    அந்த நிகழ்ச்சியின் பேரு ‘சித்ரமாலா’… அதுக்கு நானுமே ஒரு ஃபேன் தான் 😉

    Reply
  27. அதேபோல, சித்ரஹார் வந்தது, புதன்கிழமை… சித்ரமாலா வந்தது, திங்கட்கிழமை.. அது எனக்கு உறுதியா தெரியும்… ஏன்னா, இந்த நிகழ்ச்சிகளுக்காக அப்போ அடிச்சிக்கினு பழியாக் கிடந்து பார்ப்போம் 😉

    Reply
  28. //அப்ப ‘நேத்து ராத்திரி யம்மா’, ‘பொன்மேனி உருகுதே’, ‘பேசக்கூடாது’, மாதிரி பாட்டெல்லாம் நீங்க டோட்டலா உட்டுட்டீங்க//

    கிட்டத்தட்ட, ஆமாம். என்ன செய்ய?

    கால யந்திரம் ஒன்னு வாங்குங்க. ரெண்டு பெரும் பயணம் செய்யலாம். ஆனா, இடத்த மாத்திக்கலாம், நான் தமிழ் நாட்டிற்கும், நீங்க உங்களுக்கு புடிச்ச இடத்திற்கும்.

    ஒக்கே?

    Reply
  29. //அதெல்லாம் என்ன எல்.கே.ஜில்ல சொல்லி தர ரைம்ஸா.. விஸ்வா அண்ணாச்சி அப்பல்லம் குழந்தயாம் தேளு//

    ஆ.. அப்ப நானும் தான் குழந்தை… தொட்டில்ல படுத்துக்கினே, இந்தப் பாட்டெல்லாம் கேட்டு நோட்ஸ் எடுத்துக்கினு, வருங்காலத்துல ப்ளாக் ஆரம்பிச்சி எழுதலாம்னு குறிச்சி வெச்சிகினேன் . . அக்காங் நைனா..;-)

    Reply
  30. கதை :சத்யா மூவிஸ் என போடக் காரணம் சுரண்டல்தான்.அப்பாவி எழுத்தானிடம் சில ஆயிரங்கல் கொடுத்து வாங்கி விட்டு இப்படி டைட்ட்டிலில் போட்டு விடுவார்கள்..படம் ஹிட்டாகி வேற்று மொழி உரிமம் விற்க்கும் பணம் முழுக்க அமுக்கி விடுவார்கள்.எழுத்தாளன் பெயர் டைட்ட்டிலில் வந்தால் ராயல்டி தொகையில் பாதி கொடுக்க வேண்டி வரும்

    Reply
  31. //கால யந்திரம் ஒன்னு வாங்குங்க. ரெண்டு பெரும் பயணம் செய்யலாம். ஆனா, இடத்த மாத்திக்கலாம், நான் தமிழ் நாட்டிற்கும், நீங்க உங்களுக்கு புடிச்ச இடத்திற்கும்.

    ஒக்கே?//

    டபிள் ஓகே !! நான் போக விரும்பும் இடம், பண்டைய சோழ சாம்ராஜ்யமாகத்தான் இருக்கும்… 😉 அப்பாலிக்கா, எகிப்து ! 😉

    Reply
  32. //கதை :சத்யா மூவிஸ் என போடக் காரணம் சுரண்டல்தான்.அப்பாவி எழுத்தானிடம் சில ஆயிரங்கல் கொடுத்து வாங்கி விட்டு இப்படி டைட்ட்டிலில் போட்டு விடுவார்கள்..படம் ஹிட்டாகி வேற்று மொழி உரிமம் விற்க்கும் பணம் முழுக்க அமுக்கி விடுவார்கள்.எழுத்தாளன் பெயர் டைட்ட்டிலில் வந்தால் ராயல்டி தொகையில் பாதி கொடுக்க வேண்டி வரும்//

    ஆஹா…. அப்புடிப் போகுதா கதை? என்ன கொடுமை சார் இது ???

    Reply
  33. ////அதெல்லாம் என்ன எல்.கே.ஜில்ல சொல்லி தர ரைம்ஸா.. விஸ்வா அண்ணாச்சி அப்பல்லம் குழந்தயாம் தேளு//

    ஆ.. அப்ப நானும் தான் குழந்தை… தொட்டில்ல படுத்துக்கினே, இந்தப் பாட்டெல்லாம் கேட்டு நோட்ஸ் எடுத்துக்கினு, வருங்காலத்துல ப்ளாக் ஆரம்பிச்சி எழுதலாம்னு குறிச்சி வெச்சிகினேன் . . அக்காங் நைனா..;-)

    //

    ஆஹா.. பிஞ்சிலே பழுத்த பழம் 🙂

    Reply
  34. //ஆஹா.. பிஞ்சிலே பழுத்த பழம் :)//

    ஹீ ஹீ… நானெல்லாம் எம்மாத்திரம்… தலைவர் நித்தியே சரணம் 😉

    இப்ப தூங்கப்போறேன்… காலைல வந்து கும்மியைத் தொடருகிறேன் 😉

    Reply
  35. ரஜினியின் காட்பாதர் இன்றும் கமல்தான்.எம்ஜியார்-சிவாஜிக்கு நடந்தது தங்களுக்கிடையில் நடக்காமல் பார்த்துக்கொண்டனர்.கமல் இல்லை என்றால் முள்ளும்மலரும் படமே வந்திருக்காது
    நீ சிவாஜி என்றால் நான் தசவதாரம் என்று வசூலில் மட்டுமே போட்டி இருக்கும்

    Reply
  36. நண்பா கலக்கலாக எழுதியுள்ளீர்கள்,
    எனக்கு கமலிடம் பிடித்ததும் உண்டு,பிடிக்காதது நிறையவே உண்டு.

    நீங்க சொன்ன இந்த கதை இலாகாவை முதல்ல ஒழிக்கனும்,வக்காலிங்க ஃபீல்டை உருப்படவே விடமாட்டேங்கிறாய்ங்க,

    கோவிந்த் ந்ஹ்லானியின் ஆர்த் சத்யா பார்த்தேன்,கடமை கண்னியம் கட்டுப்பாடு,இன்ஸ்பெக்டர் பல்ராம்,மேலும் நிறைய காட்சிகள் அதிலும் வருகிறது,அந்த படம் ஓம்புரி கலக்கியுள்ளார்,மிகை நடிப்பா?அப்படின்னா என்னன்னு கேட்பார்,சின்ன சின்ன டீடெய்ல்கள் க்குட அருமை,நேரம் கிடைச்சா அதை பாருங்க,

    மற்றபடி ஆன்னு வாயை பிளந்து பார்த்த படம்,அக்காலத்தில் கமல் அம்பிகா கெமிஸ்ட்ரி அப்படி தூளாஇருக்கும்,கூடவே தலைவரின் இசை,கேக்கனுமா?!!!!!!!!!!!!தூள்,பாட்டை வைத்தே கதை திரைக்கதையில் உள்ள ஓட்டைகளை அடைத்திருப்பார் ராஜசேகர்.இவரின் படிக்காதவன் பட அண்ணன் தம்பி பாத்திரத்துக்கெல்லாம் நான் 10 வயசிலேயே லாஜிக் உதைக்குதுன்னு யோசிச்சி பாத்திருக்கேன்னா பாருங்களேன்?கொடும சார்.

    இன்னொரு மகா மோசமான குழு அருணாச்சலா கதை இலாகா,பாபா கதை இலாகா,அப்படின்னு போடுறது.

    எனக்கு இன்னும் தமிழில் பெருமையாக சொல்லக்கூடியது போல் உள்ளபடம் புதுமைப்பித்தனின் கதையை மையமாய் கொண்ட உதிரிப்பூக்கள்,அதை கொண்டாடலாம் காலத்துக்கும்,மிகை நடிப்பை வழங்கதெரியா விஜயன் சரத்த்பாபு போன்றோரை எல்லாம் நாம் எப்படி உபயோகப்படுத்திவிட்டோம்?இது முடியாது போல,

    Reply
  37. அடப்பாவிகளா… லஞ்ச் சாப்பிட்ட டயர்ட்ல, ஆஃபீஸில் ஒரு குட்டித்தூக்கம் போட்டுட்டு வர்றதுக்குள்ள.. கும்மியை முடிச்சிட்டு போய்ட்டீங்களே!!!

    =====

    //கோவிந்த் ந்ஹ்லானியின் ஆர்த் சத்யா பார்த்தேன்,//

    ஆரம்பிச்சிட்டீங்களா???!!!!!!!

    -பாலி பாலி.

    Reply
  38. //;-) அந்த நிகழ்ச்சி, ஒளியும் ஒலியும் தானே.. அத, பெரிய்ய ’ஒ’ ஒண்ணு போட்டு, அதுக்கப்புறம் ‘ளியும் லியும்’ன்னு ஒண்னுக்குக் கீழ ஒண்ணா போடுவாங்க.. ஜாலியா இருக்கும் ;-)//
    ஆமாம் நண்பா,மறக்க முடியுமா?
    தடங்கலுக்கு வருந்துகிறோம்,

    கருப்பு வெள்ளை,இது கருப்பு வெள்ளைன்னு மேதாவித்தனமா ஒலியும் ஒலியும் நடுவில் போடுவாங்க, இதையெல்லாம் வரையவே ஒரு ஆர்டிஸ்ட் இருப்பார் போல, செட்டிங் எல்லாம் கந்தரகோலமா இருக்கும்,அப்போ கிருஷ்ணர் வேஷம் போட்ட நடிகர் இப்போ தாத்தா வேடம் போடுறார் பார்த்தேன்.அது ஒரு கனாக்காலம்.

    அம்பிகாவை கண்மணியே பேசு பாட்டில் அப்படி உபயோகிப்படுத்தியிருப்பார்கள்,ஒரு லென்சு போதாமல்,பல லென்சுகளில் தலைகீழாக எல்லாம் காட்டி புதுமை காட்டியிருப்பார்கள்,

    முக்கியமா படிக்காதவன் படத்தில் ராஜாவுக்கு ராஜா நாண்டா அந்த பாட்டில் கார் பில்டிங் மேல் ஏறும் என்று கேள்வி பட்டவன்,முதல் நாளே செண்ட்ரல் சினிமாவில் அடித்துபிடித்து போய் பார்த்தேன். தொடர்ந்து அப்படத்தை ஓரு வாரம் போய் போய் பார்த்தேன்..அப்போதைக்கு அது ஒரு வியப்பு..

    Reply
  39. // ‘சத்யா மூவீஸ் கதை இலாகா’ என்று போட்டிருக்கும்.//

    அதுக்கு முன்னாடியே… இராம நாரயணனின் சீனியர்கள் (மிருகங்களை வச்சி படமெடுப்பாங்களே) இந்த இலாகா மேட்டரை யூஸ் பண்ணியிருப்பாங்களே!!

    ”தாய் மீது சத்தியம்” படத்தின் டைட்டிலில் இது பார்த்த நியாபகம் இருக்கு.

    Reply
  40. ////கோவிந்த் ந்ஹ்லானியின் ஆர்த் சத்யா பார்த்தேன்,//

    ஆரம்பிச்சிட்டீங்களா???!!!!!!!

    -பாலி பாலி.//
    தல இங்கன தான் உண்டு,

    தல ஆர்த் சத்யா ஈரோடு பக்கமோ தூத்துக்குடி பக்கமோ இருக்கு,என்னை டேமேஜ் பண்ணாதீங்க பிளீஸ்,நான் பாவம்:((((

    Reply
  41. //முக்கியமா படிக்காதவன் படத்தில் ராஜாவுக்கு ராஜா நாண்டா அந்த பாட்டில் கார் பில்டிங் மேல் ஏறும் என்று கேள்வி பட்டவன்,முதல் நாளே செண்ட்ரல் சினிமாவில் அடித்துபிடித்து போய் பார்த்தேன். தொடர்ந்து அப்படத்தை ஓரு வாரம் போய் போய் பார்த்தேன்..அப்போதைக்கு அது ஒரு வியப்பு.
    ///

    இனிமே இந்த 80-கள் ஏரியாவில் எதுவும் பேசக்கூடாது. நம்மள வயசானவங்கன்னு சொல்லிடுறாங்க. கல்யாணம் ஆகலைன்னா.. அவங்கள்ளாம் யங்ஸாம்!! ஹைய்யோ.. ஹைய்யோ.>!

    Reply
  42. //ஆர்த் சத்யா ஈரோடு பக்கமோ தூத்துக்குடி பக்கமோ இருக்கு//

    பொழச்சிப் போங்க!! 🙂 🙂

    இன்ஸ்பெக்டர் பல்ராமும், க.க.க-வும் பார்த்திருக்கேன்.

    ஹிந்தி ஒழிக!
    தமிழ் வாழ்க!
    மலையாளம் வாழ்க!

    Reply
  43. தல என்ன மேட்டர் ஓடுது உங்களுக்கும் ஜோதிஜிக்கும்?அவர் உங்களுக்காக டால்பின் வீடியோ டெடிகேட் பண்ணியிருக்கார்,வலைச்சரத்தில்!!!பாதீங்களா,கடைய மூடாம காத்திருக்கார்,நீங்க வருவீகன்னு:)))

    Reply
  44. யூட்யூபுல கண்மணியே பேசு பாருங்க எஞ்சாய் பண்ணுங்க..

    அம்பிகா ஸ்பெஷல்…

    http://www.youtube.com/watch?v=uUPjMBq6iEc
    எங்கே என் ஜீவனே……..கமலுடன்

    http://www.youtube.com/watch?v=o2vIsFIezGs&feature=related

    தழுவாத கைகள் கேப்டனுடன்

    Reply
  45. //தழுவாத கைகள் கேப்டனுடன்//
    ஏன் தழுவரதுன்னா என்னன்னு கேப்டனுக்கு தெரியாதா ?

    Reply
  46. அண்ணே முதல்ல நம்ம கேள்விக்கு பதில் சொல்லுன்னே.

    //தழுவாத கைகள் கேப்டனுடன்//
    ஏன் தழுவரதுன்னா என்னன்னு கேப்டனுக்கு தெரியாதா ?

    Reply
  47. //அண்ணே முதல்ல நம்ம கேள்விக்கு பதில் சொல்லுன்னே.

    //தழுவாத கைகள் கேப்டனுடன்//
    ஏன் தழுவரதுன்னா என்னன்னு கேப்டனுக்கு தெரியாதா ?//

    பாட்ட பாத்துட்டு பேசுங்க நண்பா,
    புரட்டி எடுத்திருக்கார்.இதையெல்லாம் வெளிய சொல்ல்முடியலை,அப்புடியிருக்கு கேப்டன் பெர்ஃபார்மன்ஸ்

    Reply
  48. தழுவாத கைகைகள்னா எது… ”ஒரு குடும்பத்த உருவாக்க சொன்ன ஒரு கிராமத்த உருவாக்கி வெச்சாரு எங்கப்பா” அப்படின்னு ஒரு பாட்டு வருமே அந்த படமா 🙂

    Reply
  49. அதே அதேம்செம மெமரி நண்பா.

    மேல அர்த்தமுள்ள ஆசைகளை லின்கை மட்டும் மிஸ் பண்ணாதீங்க செம க்ரிஸ்டல் ப்ரிண்ட்,சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ரெ

    Reply
  50. மயில் மெசெஜ் போட்ருக்கேன் ஒங்க பதிவுல. உடனே வர சொல்லி. எங்க போயிருந்தீங்க

    Reply
  51. நல்லா இருக்கு தேளு.

    பாலி பாலிக்கு வாழ்த்துக்கள். 😉

    //தமிழ் வாழ்க!
    மலையாளம் வாழ்க!//

    அங்க நிக்கிது உங்க அரசியல்.பிழைச்சுக்குவீர் ! 🙂

    Reply
  52. காக்கி சட்டைன்னு டைட்டில் பாத்து நீங்க கமல் ரசிகரா விக்ரம், காக்கி சட்டைன்னு விமர்சனம் எழுதுறீங்களேன்னு கேக்க வந்தேன்… ஆனா உட்டாலக்கடியா மாறிடுச்சு. சிறு வயதில் ரஜினியின் தீவிர ரசிகனாக இருந்த போதும் இந்த இரண்டு படங்களும் எனக்கும் பிடிக்கும்..

    எழுத்து நடையும் சுவாரஸ்யமா இருக்கு தல..

    Reply
  53. அடடே… தலைவர் பட விமர்சனத்தை கவனிக்கவே இல்லை தல…

    ஒரு பக்கா மசாலா படத்துக்கு இதுஒரு உதாரணம். நான் அதிகம் பார்த்த கமல்படங்களில் உயர்ந்த உள்ளம், வாழ்வேமாயம் படத்துக்குப்புறம் காக்கிச்சட்டைதான்.

    நீங்க சொன்னாமாதிரி இந்தபடத்தோட கான்செப்ட் வச்சி ஏகப்பட்ட படங்கள் வந்துருக்கு… வாழ்வே மாயம் படம் பத்தி எழுதுங்க தல…

    Reply
  54. படம் ரிலீஸ் அன்று முதல் நாள் முதல் ஷோ பார்த்தேன்.கமலின் ராஜ்ஜியம் தானே 80களில்..

    Reply
  55. இந்த படத்தின் படபிடிப்பின் போது அம்பிகா ஒரு அமைச்சருடன் ரகசியமா ஊட்டிக்கு போனதால் கதையை கொஞ்சம் change பண்ணினாங்கன்னு கேள்விபட்டேனே ??? அது உண்மையா ????

    எல்லா படங்களிலும் கொஞ்சம் கவனித்து பார்த்தால் கமலோட ஆர்வ கோளாறு நல்லாவே தெரியும் ….

    பல படங்களில் பெண் க்கு எதிரான வசனங்கள் நிறையவே இருக்கும் …. அதை கேட்கும் பொழுதெல்லாம் எனக்கு எரிச்சல் தான் வரும்

    (இதையெல்லாம் மீறி அவர் அடிக்கும் lip – kiss காகவே நான் அவரை ரசிக்கிறேன் …… திரிஷாவின் உதடுகளின் நிலை, அந்த படம் வந்தால் தான் தெரியும்)

    Reply
  56. எல்லாம் சரி ..இந்த படத்தில் மாதவி போலீஸ் தானே ???

    Reply
  57. நண்பரே,

    மாதவி மாதவிதான்..அம்பிகா,ராதாவெல்லாம் டோட்டல் வேஸ்ட். இப்படத்தில் வரும் அந்த லாரி சேஸிங் சண்டைக்காட்சியை மறக்கவே முடியாது, அவ்வளவு நன்றாக எடுத்திருப்பார்கள், கமலும் அந்த சண்டைக்காட்சியில் நன்றாக செய்திருப்பார் [இல்லையா :)] உலகப் புகழ்பெற்ற பாடலான சிங்காரி சரக்கு நல்ல சரக்கு மிகவும் அருமையான பாடல் என்பதனை இங்கு கூறிக்கொள்வதோடு சிங்காரியின் சரக்கை இலுமினாட்டியும் அடிக்க வேண்டுமென வாழ்த்தி விடைபெறுகிறேன் :)) நல்ல ஜாலியான பதிவு, கிளுகிளுப்பா எழுதுவதை நிறுத்தாதீர்கள்.

    Reply
  58. நீச்சல் குளத்தில் நீந்தும் மாதவியை யாரால் மறக்க முடியும்?

    மாதவிக்காகவே பார்க்கலாம் இந்த படத்தை 😉

    Reply
  59. ‘சிங்காரி சரக்கு நல்ல சரக்கு’.//

    இன்னைக்கு கேட்டாலும் சும்மா கும்முன்னு இருக்குமே!

    Reply
  60. இந்தக் கால கமர்ஷியல் திரைப்படத்திற்குக்கூட உதாரணமாக இந்தப் படத்தைச் சொல்லலாம்..!

    பக்கா எண்ட்டர்டெயிண்ட்மெண்ட்.. செம ஜாலிப்பா..!

    இனிமையான பாடல்கள்.. சுவையான திரைக்கதை.. சத்யராஜின் அந்த தகடு தகடு.. என்று அத்தனையும் சுவைகள்..!

    அம்பிகாவைவிட எனக்குப் பிடித்தது மாதவிதான்.. அந்த டான்ஸ்.. அசத்தலாச்சே..!

    Reply
  61. பூப்போட்ட தாவணி பாடலின் இசை அற்புதமான கொண்டாட்டம்…

    Reply
  62. சிறு வயதில் விரும்பி பார்த்த படம்

    அந்த “தகடு தகடு” மறக்க முடியமா 🙂

    Reply
  63. என் கணிப்பில் மாதவியைப் போல செக்ஸியான கண்களைக் கொண்ட நடிகை சமீப காலங்களில் தென்னிந்திய திரைகளில் வந்ததில்லை. ஏதோ ஒரு கமல் படத்தில் இரு-குறை ஆடையில் (அதாங்க two piece ) தோன்றி கிறங்க அடித்திருப்பார். மாதவிக்காவே ராஜ் டிவியில் தம்பிக்கு எந்த ஊரு படத்தை போடும்போது எல்லாம் பார்ப்பதுண்டு

    Reply
  64. தலைவர் கமலை நக்கல் அடித்திருப்பதைத் தவிர்த்து, இது ஒரு நல்ல ஜாலியான பதிவு…

    Reply
  65. I agree with you. What a kalakal tamil film? I like this film very much. Great review…..
    Buy domain

    Reply
  66. ரஜினி கமலுக்கு ஏற்பட்ட போட்டியைப் பற்றிய பல ரசமான தகவல்களை, சீக்கிரம் ஒரு பதிவாக எழுதுகிறேன்).

    seekeeram thalaiva sekiram

    Reply
  67. ரஜினி கமலுக்கு ஏற்பட்ட போட்டியைப் பற்றிய பல ரசமான தகவல்களை, சீக்கிரம் ஒரு பதிவாக எழுதுகிறேன்).

    seekeeram thalaiva sekiram

    Reply

Join the conversation