எந்திரன் – எதிர்வினைகள்

by Karundhel Rajesh October 7, 2010   Copies

சென்ற பதிவில் நான் எழுதிய எந்திரன் விமர்சனத்துக்கு, சில நண்பர்களிடம் இருந்து வந்துள்ள பின்னூட்டங்களுக்கு இங்கே பதில் கொடுத்துவிடலாம் என்பது எனது நோக்கம். படித்துப்பாருங்கள். நண்பர்கள் கருத்தைக் கேள்விகளாகக் கொடுத்துள்ளேன்.

1. உலக சினிமா இயக்குநர்கள் போல் எந்திரன் படம் எடுத்தால், அதனைப் பார்க்க யாரும் இருக்கமாட்டார்கள். எந்திரன் ஒரு fantasy மட்டுமே. அதனை ஏன் இப்படியெல்லாம் விமர்சிக்கிறீர்கள்? இப்படம் தமிழில் ஒரு புதிய முயற்சி. அதனால் அதனைப் பாராட்ட வேண்டியதை விட்டுவிட்டு, வயிற்றெரிச்சலால் இப்படித் திட்டுவதை விட்டுவிடுங்கள்.

பதில் – ஒரு விஷயத்தை இங்கே தெளிவுபடுத்திவிடுகிறேன். எனக்கு ரஜினியின் மீதோ, ஷங்கரின் மீதோ எந்தவிதக் காழ்ப்போ அல்லது எரிச்சலோ இல்லவே இல்லை. ஒரு படத்தைப் பார்க்கிறோம். அதனைப் பார்த்துவிட்டு வந்து அதன் மீது உள்ள விமர்சனங்களை முன்வைக்கிறோம். அவ்வளவே. எந்திரனைப் பொறுத்த வரையில், எத்தனை திறந்த மனதுடன் இப்படத்தைப் பார்த்த போதும், ஒரு காட்சி கூட என்னைக் கவரவில்லை. நூற்றைம்பது கோடி செலவுசெய்து இவர்கள் எடுத்திருக்கும் ஒரு படத்தை, ரஜினி நடித்திருப்பதால் மட்டுமே ஆஹா ஓஹோ என்று பாராட்டுவது என்னால் முடியாத செயல். அதற்கு வேறு பலர் இருக்கிறார்கள்.

எனது தளத்தில், வெளிப்படையான, எந்தப் பக்கமும் சாயாத unbiased விமர்சனங்கள் மட்டுமே இதுவரை வைக்கப்பட்டு வருகின்றன. இனிமேலும் அப்படித்தான்.

இந்தப் படம் ஒரு fantasy என்று சொல்பவர்களுக்கு: படம் ஃபாண்டஸியாகவே இருக்கட்டும். அல்லது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஒரு படத்துக்கு அடிநாதமாக இருக்க வேண்டிய ஒரே விஷயம் – கதை. கதை இல்லையெனில், என்ன தான் கிம்மிக்ஸ் செய்தாலும், படம் குப்பையாகத்தான் ஆகும். எந்திரன் அப்படித்தான். அதில், எவ்வளவு தேடியும், கதை கிடைக்கவில்லை. கதையே இல்லாததால், திரைக்கதையும் இல்லை. திரைக்கதை இல்லாததால், படம் படு போர். இது மிகவும் எளிமையான விஷயம்.

இது தமிழில் ஒரு புதிய முயற்சியா? இவ்வளவு பணத்தை வைத்துக்கொண்டு, ரஜினியின் கால்ஷீட்டையும் இரண்டு வருடங்களுக்கு வைத்துக்கொண்டு, இவ்வளவு சாதாரணப் படம் ஒன்றைத்தான் எடுக்க முடிந்ததா ஷங்கர்? இதன் கருவையே எடுத்துக்கொள்வோம். ஒரு விஞ்ஞானி, ஒரு ரோபோவை வடிவமைக்கிறார். அதனுள், உணர்ச்சிகளைப் புகுத்துகிறார். அதனால் விபரீதம் விளைகிறது. அதன் காரணமாக அழிவு ஏற்படுகிறது. முடிவில் ரோபோ அழிக்கப்படுகிறது. இது, படத்தின் கரு. ஒன் லைன். இந்த ஒன் லைனை வைத்துக்கொண்டே, திரைக்கதையை எவ்வளவு நன்றாக வடிவமைத்திருக்க முடியும்? அதனை விட்டுவிட்டு, படு மொண்ணையாக எதையோ திரைக்கதை என்ற பெயரில் எழுதி, ஏன் நமது பொறுமையை சோதிக்க வேண்டும்?

இதுதான் எனது கோபத்துக்குக் காரணம். பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த இதே ஷங்கரின் இந்தியன், முதல்வன் ஆகிய படங்கள், இன்று பார்த்தாலும் அலுக்காது (அவற்றில் ஷங்கர் சொல்லும் விஷயங்கள் மொக்கை. அதை இந்த உதாரணங்களில் இப்போது விட்டுவிடுவோம்). திரைக்கதை அவற்றில் வேகமாக இருக்கும். போர் அடிக்காது. ஆனால், அதே ஷங்கர் எடுத்துள்ள இந்த எந்திரன், அப்படியா இருக்கிறது? அடித்துச் சொல்கிறேன். படத்தின் ஒரே ஒரு நிமிடம் கூட எங்களுக்குச் சுவாரஸ்யமாக இல்லவே இல்லை. எப்பொழுது படம் முடியும் என்றுதான் எண்ணவைத்தது இப்படம். இவ்வளவுக்கும் எனது மனைவிக்கு ரஜினி என்றால் உயிர். இப்படம், ஒரு ரஜினி ரசிகருக்கு எவ்வித எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்குமோ, அவருக்கு அப்படிப்பட்ட ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ரஜினி வந்தால், உடனே விசிலடிக்கும் ஆள் அவர். அவர், போன பதிவில் எழுதியுள்ள பின்னூட்டத்தை எடுத்துப் பாருங்கள். அவராலேயே தாங்க முடியாத ஒரு அறுவையாக அமைந்து போனது இப்படம்.

2. நீ சாருவின் அடிவருடி. எனவே, அவர் படம் குப்பை என்று சொன்னதும், அதையே நீயும் சொல்கிறாய்.

பதில் – நான் சாருவின் அடிவருடி என்று நீங்கள் சொல்வதே சிரிப்பை வரவழைக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது. சாரு எனது மிக நல்ல நண்பர். உங்களது நண்பர்களுக்கு நீங்கள் அடிவருடியாகத்தான் இருப்பீர்களா? தான் எப்படி இருக்கிறோமோ அப்படித்தானே அடுத்தவரையும் பற்றி எண்ணத் தோன்றும்? அதனாலேயே தான் உங்களுக்கும் அப்படித் தோன்றுகிறது என்று நினைக்கிறேன் ?

3. நீ வெள்ளைக்காரனை மட்டும் புகழும் ஆள். தமிழில் எது வந்தாலும், அதனைத் திட்டுவதே உன் வாடிக்கை. உன் மைண்ட் செட் அப்படி. என்னதான் பொறாமை உனக்கு இருந்தாலும், முயற்சியைப் பாராட்ட வேண்டும்.

பதில் – நான் வெள்ளைக்காரனை மட்டும் புகழ்வதில்லை. ஐரோப்பிய, கொரிய மண்ணைச் சேர்ந்தவர்களையும் சேர்த்துத்தான் புகழ்கிறேன் ;-). அது ஏனென்று, இதுவரை அப்படங்களுக்கு நான் எழுதிய விமர்சனங்களைப் படித்தாலே தெரியும். அங்கு, சினிமாவைச் சினிமாவாகத்தான் பார்க்கிறார்கள். தங்கள் ஃபேவரைட் நடிகரின் படம் வந்தாலும் கூட, திரையரங்கில் வந்து பார்ப்பதோடு மட்டும் ரசிகர்களின் கடமை முடிந்துவிடுகிறது. ஆனால், இங்கே மட்டுமே அலகு குத்துவது, பால் குடம் எடுப்பது போன்ற அசிங்கங்கள் நடைபெறுகின்றன. அதையும் டிவியில் ஒளிபரப்பி, படத்துக்கு விளம்பரம் தேடுவார்கள். அதையும் நம்பி, ரசிகர்களாகிய நாம் வெறியுடன் படத்தைப் பார்த்துவிட்டு, அது மொக்கையாக இருந்தாலும், வெளியே சொல்ல மனமின்றி, ‘ஹா… தலைவரு படம் சூப்பரப்பு ! ஆஸ்கர் வாங்கிரும் ! இங்கிலீசுல கூட இப்புடியெல்லாம் வந்ததே இல்லை’ என்றெல்லாம் காமெடி அறிக்கைகள் விட்டுக்கொண்டிருப்போம்.

ஆங்கிலப்படங்களுடன் எந்திரனை ஒப்பிடும் நண்பர்களுக்கு எனது எளிய கேள்வி: தமிழ்நாட்டில் மட்டுமே, ஆங்கிலம் பேசும் அரசியல் தலைவர், தென்னாட்டு பெர்னாட்ஷா; சில கதைகளும் கவிதைகளும் எழுதினால், அவர் மூதறிஞர் கலைஞர்; காப்பியடித்து நடித்தால் ,’ ஒலகநாயகன்’; இன்னும் புரட்சியே செய்யாமல், புரட்சித்தலைவர் ஆகலாம் (பாவம்யா செகுவேரா போன்றவர்கள்) . ராணுவத்தின் பக்கமே செல்லாமல் கேப்டன் ஆகிவிடலாம். தளபதி, சேநாதிபதி, சிப்பாய், புரட்சித் தளபதி, சின்ன தளபதி, ‘லிட்டில்’ சூப்பர் ஸ்டார், புரட்சித் தமிழன், ஆர்டினரி தமிழன், எக்ஸ்ட்ரா ஆர்டினரி தமிழன் ஆகிய பட்டங்கள், மிக எளிதில் கிடைத்து விடும்.

இதைப்போல் தான் , எந்திரன் ஹாலிவுட் படத்துக்கு சமம் என்றெல்லாம் அறிக்கைகள் விடுகிறீர்களோ? எத்தனை ஆங்கிலப்படங்கள் எந்திரனுடன் ஒப்பிடும்படி பார்த்திருக்கிறீர்கள்? என்ன காமெடி இது ?

தமிழில் வரும் படங்கள் எல்லாமே, ஒன்று ஈயடிச்சாங்காப்பி. அல்லது, படு மொக்கையான திரைக்கதை. என்றாவது ஒரு நாள் தான் நல்ல முயற்சிகள் வருகின்றன. அப்படி வரும் நல்ல முயற்சிகளை கட்டாயம் பாராட்டுவேன். அதை விட்டுவிட்டு, ரஜினி நடித்திருப்பதால் மட்டுமே எந்திரனை நான் பாராட்ட வேண்டும் என்று நினைக்கும் ‘புத்திசாலிகள்’, ஓடிவிடுங்கள் ? . இந்தப் பக்கமே வந்துவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

4. சுறா, பெண் சிங்கம் போன்ற படங்களுடன் எங்கள் தலைவர் நடித்த காவியத்தை ஒப்பிட்டு விட்டாய். மானங்கெட்டவனே.. உனக்கு என்ன தெரியும் நல்ல படத்தைப் பற்றி? நான் சொல்கிறேன் கேள். முதல் பாதி, சூப்பர்.. இரண்டாம் பாதி, மிரட்டல். ஆக மொத்தம், இது ஒரு பின்னியெடுக்கும் படம்.

பதில் – கேள்விகள் நிர். 1, 2 மற்றும் 3 உங்களுக்காதத்தான். படியுங்கள்.

5. நீ , விமர்சனத்தை முன்பே எழுதிவைத்துவிட்டாய். உனக்கு ஏன் இவ்வளவு கோபம் சன் மற்றும் ரஜினி மீது?

பதில் – அடப்பாவிகளா.. விமர்சனத்தை முன்பே எழுதிவிட்டு, படம் பார்க்கும் நிலையில் நான் இல்லை ? .. உங்கள் தங்கத்தலைவர், டாப்பு என்று நீங்கள் (அவரிடம் எவ்வளவு ஆப்பு வாங்கினாலும்) வீம்பாக சொல்லலாம்.. ஆனால், படத்தைப் பார்த்து விட்டு, படம் சரியில்லை என்ற என் கருத்தை நான் முன்வைத்துவிடக் கூடாது. இல்லையா? நன்றாக இருக்கிறதே உங்கள் நியாயம்?

சன் மற்றும் ரஜினி மீது என்ன கோபம் என்பதை, போன பதிவிலேயே எழுதியாயிற்று. மீண்டும் கேள்விகள் 1,2,3 அண்ட் 4ல் எழுதியிருக்கிறேன். படித்துக் கொள்ளவும்.

எல்லாக் கேள்விகளுக்கும் பதில் எழுதியாயிற்று என்று நினைக்கிறேன்.

இப்பொழுது, ஒரு சிறிய விஷயத்தைச் சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன்.

சில நண்பர்கள், எந்திரனுக்கு நான் எழுதிய விமர்சனம் படித்துவிட்டு, கோபம் அடைந்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது. உங்களுக்குப் படம் பிடித்தது போலவே, எனக்குப் பிடிக்கவில்லை. அவ்வளவுதான் .சிம்பிள். ஆனால், நீங்கள் நினைத்தது போல் விமர்சனம் இல்லை என்று என் மீது பாய்வதில் கொஞ்சமாவது நியாயம் இருக்கிறதா? சொல்லுங்கள். நீங்கள் நினைப்பது போல் தான் நானும் நினைக்க வேண்டும் என்றால், அதற்குப் பெயர், வடிகட்டிய ஃபாஸிஸம்.

ஒவ்வொருவரும் அவரது சொந்தக் கருத்துக்களை வெளிப்படையாக முன்வைத்தால்தான் அது ஒரு ஆரோக்கியமான விவாதம் ஆகும். எனவே, ரஜினி நடித்திருப்பதால் மட்டுமே இப்படத்தை நான் பாராட்ட வேண்டும் என்று நினைக்கும் நண்பர்கள், இதனையும் எண்ணிப்பாருங்கள். முதலில், எந்திரன் ஒரு திரைப்படம். அதன்பின் தான் இது ரஜினி படம், ஷங்கர் படம் என்றெல்லாம் பகுத்தறியப்படவேண்டும். இது ஒரு படைப்பு. பொதுமக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. எனவே, அதன் மீது பல்வேறு விமர்சனங்களும் வரத்தான் செய்யும். அதுதான் நியாயம். அதனை விட்டுவிட்டு, இப்படத்தைப் பாராட்டாவிட்டால் அவன் தேசத்துரோகி என்ற உங்கள் அபிப்பிராயத்தை சற்றே மாற்றிக்கொள்ள முயலுங்கள்.

அவ்வளவே.

  Comments

66 Comments

  1. ஹி ஹி ஹி மூணாவதும் ஐந்தாவதும் என்னோட கேள்வி. நன்றி பார் யுவர் பதில்கள்.

    நம்மளைப் பொறுத்தவரை இந்தியனைத்தவிர மற்ற எல்லா நாட்டவரும் வெள்ளைக்காரர்களே 🙂

    கமலுக்கு எழுதியதை விட இதில் காட்டம் கொஞ்சம் கம்மிதான். சந்தொஷம் அடுத்து ”டும் கி டம்” படத்தப் பத்தி கிழிச்சு எழுதுங்க 🙂

    Reply
  2. ரஜினிக்கு சொம்பு தூக்கியவர்களுக்கு நல்ல அடி.

    ஆனால் அதுவல்லவே நமது நோக்கம். நல்ல படம் எடுங்கன்னு சொல்றது தப்பா என்ன ?

    Reply
  3. ரஜினியை அல்லது அவர் நடித்த படத்தைப் பற்றி தவறாக எழுதுபவர்கள் தேசத்துரோகிகள் அல்லது, அப்படி எழுத பயப்படும் நிலை இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.

    அதையும் மீறி உங்கள் கருத்துக்களை உங்கள் வலைத்தளத்தில் பதிவு செய்தது நன்று.

    Reply
  4. ரஜினி ரசிகர்கள்…எந்திரன் ரசிகர்கள்….

    இந்தப்படம் அவ்வளோ நல்லாயிருக்கு…பயங்கர வசூல்னு சொல்றீங்க..சரி..அப்பறம் எதுக்கு ஒவ்வொரு பதிவா போய் இது நல்லபடம், உலகமகா படம் அது இதுன்னு கமெண்ட் போட்டு யாருக்கு prove பண்றீங்க..

    படத்து மேல அவ்வளோ நம்பிக்கை இருந்தா எதுக்கு இதெல்லாம்…யாரோ என்னமோ சொல்லிட்டு போறாங்க…உங்களுக்கு படம் பிடிச்சிருந்தா அதோட விட வேண்டியதான…கருந்தேள் ஏற்கனவே முடிவு பண்ணிட்டு எழுதினார்னு சொல்றீங்க..நீங்க மட்டும் “கருந்தேள் உங்களிடம் இருந்து இதை எதிர்பார்த்ததுதான்”னு முடிவு பண்றது சரியா…

    இதுல பின்னுட்டம் இட்டிருந்த பல பேர் கமல் பத்திய பதிவுல கமலை கடுமையா விமர்சனம் பண்ணியிருந்திருந்தீங்க..மணிரத்னம் பத்தி விமர்சனம் பண்ணியிருந்திருந்தீங்க…அப்ப அவுங்களுக்கு ஒரு Yardstick ரஜினிக்கு ஒரு yardstickஆ..உங்களுக்கு பிடிக்காத ஆட்களை பத்தி எழுதினா சேர்ந்து சந்தோஷமா கண்டபடி விமர்சிப்பீங்க..அதுவே உங்களுக்கு பிடித்தவர்கள் என்றால்….

    ஏற்கனவே கருந்தேளின் பதிவுகளை படிப்பவர்கள் பெரும்பாலானோர் Constructive criticism வேணும் ரீதில எழுதுறது பரவாயில்லை.அவர்களுக்கு கருந்தேளுடன் பழக்கம் இருக்கலாம்..தெரியல..ஆனா ரஜினி ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் சம்பந்தமே இல்லாம எங்கிருந்தோ லிங்க் பிடிச்சு வந்து கருந்தேளை திட்ட வேண்டிய அவசியம் என்ன…பின்னுட்டம் போட்டவர்களையும் சேர்த்து அனாவசியமாக எதுக்கு காட்டமா பேசணும்…

    கொஞ்சம் நாகரிகமாக கருத்துக்களை முன்வைத்தால் கொறஞ்சா போயிருவீங்க…

    Reply
  5. அய்யா நா ஒரு சாதாரண சினிமா ரசிகன்..எனக்கு தோன்றுனத சொல்றேன்..பிழையிருந்தால் பொறுத்தருள்க…
    கருந்தேள் மாதிரி வலைத்தளத்தில் எழுதுற பல பேரின் வேலை – Film Critic இல்ல.(ராஜேஷ்..சரியா). அவுங்களும் சினிமா ரசிகர்களே…ஒரு Film critic சினிமாவை பத்தி விமர்சிக்கும் போது அதிலுள்ள +ve,-ve விஷயங்கள் உட்பட அனைத்தையும் நடுநிலைமையோட விமர்சிக்கணும்னு எதிர்பார்க்குரதில ஞாயம் உண்டு..

    இப்ப நம்ம எத்தனை படங்கள நண்பர்களுடன் பார்க்குறோம்.ஒவ்வொரு படத்தையும் இப்படித்தான் கமெண்ட் அடிக்கிறோமா..போறபோக்குல சப்பை..மொக்கைன்னு எதாவது சொல்றதில்ல..நா avatar,2012 மாதிரி படங்கள இதுபோலத்தான் கமெண்ட் அடிச்சேன். அதுமாதிரிதான் இந்த பதிவுகளும். நண்பர்களிடம் பேசுவதை போல பதிவுகள் எழுதுறது தவறா..

    Reply
  6. nalla samathaana kolantha.

    Reply
  7. yardstick, constructive criticism, film critic
    ////////////////

    ஒரு மண்ணும் புரியலை 🙂 நாகர்கோவில் தானே கொஞ்சம் டமில்ல புரியுர மாதிரி எழுதுங்க பாஸ்.

    கிரிஸ்டோபர் நோலனுக்கு “என்னளவில் இது ஒரு சிறந்த ஆக்கம், போனது என் தூக்கம்” ந்னு லெட்டர் போட்டா அந்த மனுஷனுக்கு புரியுமா??? 🙂

    Reply
  8. @Phantom Mohan
    ஏங்க..நீங்கதான் phantomனுலாம் பேரு வெச்சிருக்கீங்க..எனக்கு அதுக்கு அர்த்தம் கூட தெரியாது..மீ நோ இங்கிலிபிச். ஏதோ உங்களைப்போல் வலைப்பதிவில் எழுதுறவங்கட்ட இருந்து இந்த வார்தைகள கத்துக்கிட்டேன்.
    (எனக்கு நாகர்கோவில் இல்ல..)

    Reply
  9. நல்ல சொல்லி இருகிங்க ஆனால் இங்க இருக்குற முட்டாள்களுக்கு இந்த ஒரு பதிவு மட்டும் அல்ல ஓராயிரம் பதிவுகள் வந்தாலும் திருந்த மாட்டார்கள் எனவே இவர்களுக்கு பதில் சொல்லுவதற்கு பதில் நீங்கள் உங்கள் புதிய பதிவுகளை வெளியிடலாம்..எந்திரன் படம் ரொம்ப போர்…அதுவும் எந்திரன் நல்ல இருக்குங்கிற விமர்சனகள் (பதிவுகள் ) ரொம்ப ரொம்ப போர்…ப்ளீஸ் நீங்களாவது வேற எழுதுங்க பாஸ்…

    Reply
  10. // இங்கே மட்டுமே அலகு குத்துவது, பால் குடம் எடுப்பது போன்ற அசிங்கங்கள் நடைபெறுகின்றன. அதையும் டிவியில் ஒளிபரப்பி, படத்துக்கு விளம்பரம் தேடுவார்கள். அதையும் நம்பி, ரசிகர்களாகிய நாம் வெறியுடன் படத்தைப் பார்த்துவிட்டு, அது மொக்கையாக இருந்தாலும், வெளியே சொல்ல மனமின்றி, ‘ஹா… தலைவரு படம் சூப்பரப்பு ! ஆஸ்கர் வாங்கிரும் ! இங்கிலீசுல கூட இப்புடியெல்லாம் வந்ததே இல்லை’ என்றெல்லாம் காமெடி அறிக்கைகள் விட்டுக்கொண்டிருப்போம். //

    இதையும் சேர்த்துக்கங்க…
    இதை தப்புன்னு சொன்னா அலகு எடுத்துகிட்டு ஒரு கும்பல் வந்துடும்.

    // இன்னும் புரட்சியே செய்யாமல், புரட்சித்தலைவர் ஆகலாம் (பாவம்யா செகுவேரா போன்றவர்கள்) .//

    ஹாஹா…

    // நீங்கள் நினைத்தது போல் விமர்சனம் இல்லை என்று என் மீது பாய்வதில் கொஞ்சமாவது நியாயம் இருக்கிறதா? சொல்லுங்கள். நீங்கள் நினைப்பது போல் தான் நானும் நினைக்க வேண்டும் என்றால், அதற்குப் பெயர், வடிகட்டிய ஃபாஸிஸம்.

    முதலில், எந்திரன் ஒரு திரைப்படம். அதன்பின் தான் இது ரஜினி படம், ஷங்கர் படம் என்றெல்லாம் பகுத்தறியப்படவேண்டும். இது ஒரு படைப்பு. பொதுமக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. எனவே, அதன் மீது பல்வேறு விமர்சனங்களும் வரத்தான் செய்யும். அதுதான் நியாயம். அதனை விட்டுவிட்டு, இப்படத்தைப் பாராட்டாவிட்டால் அவன் தேசத்துரோகி என்ற உங்கள் அபிப்பிராயத்தை சற்றே மாற்றிக்கொள்ள முயலுங்கள். //

    நியாயமான வாதம். உடன்படுகிறேன். 🙂

    Reply
  11. என்னாது…பத்தே பத்து கமெண்ட் தானா…அதுலயும் 3 என்னோடது..2 phantom mohanணோடது..மக்களே என்னாச்சு…இது தப்பாச்சே…அப்ப இன்னைக்கு ஒண்ணும் கிளம்பாதா….சரி வேற இடம் பார்க்க வேண்டியதான்..

    அண்ணன் கருந்தேளாரே…
    உங்க Requiem for a Dream பதிவ இப்பதான் படிச்சேன். செம flowல எழுதியிருக்கீங்க..Darren Aronofskyயோட pi படத்தப் பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன்…அவரது அடுத்த படத்தின் ட்ரைலர் இதோ…
    http://www.youtube.com/watch?v=5jaI1XOB-bs
    Black Swan – dec 1 ரிலீஸ் ஆகுது.

    அதுனால என்னை மாதிரி உங்க “வாசகர்களின்” வேண்டுகோள் என்னன்னா..மறுபடியும் நீங்க hardcore திரைப்படங்கள் குறித்து எழுதணும். கமல் பதிவுல நிறைய நேரம் செலவாயிருச்சு. அதே போல் எந்திரனையும் நைட்…இருங்க நேரத்த பார்க்குறேன்…”Posted by கருந்தேள் கண்ணாயிரம் at 12:47 AM”..எப்பா…அதுக்கு வரும் பின்னுடங்களுக்கு பதில்..எதிர்வினைனு…நீங்க படங்கள் குறித்து எழுதுறது இந்த மாதிரி பதிவுகளால குறைக்கிறது என்பது என் கருத்து. இத எதுனா பண்ண முடியாதா…

    Reply
  12. நண்பா,
    நான் ஒரு அட்டெனன்சு போட்டுட்டு போறேன்,புது மீள்பதிவு ஒன்னு போட்டிருக்கேன்.

    Reply
  13. @கொழந்த
    எப்போ உங்க அடுத்த போட்டோவை ரிலீஸ் பண்னுவீங்க,எந்திரன் படரிலீசை விட உங்க ஒரிஜினல் போட்டொ எப்போ போடுவீங்கன்னு சஸ்பென்ஸ் தாங்கலப்பா:))

    Reply
  14. Raaj,

    Everything accepted, hmmm… u r right.

    ( may be your stand was the same on these days, but your modulation is sensible today)

    have you ever watched POOVE POOCHOODAVA movie ? ( I can foresee your eyebrows frowning with question mark !!!!- but i just wanted to convey you about the movie which i like the most I have ever watched- If you hav not watched it, just watch it once)

    bye, c u

    Reply
  15. உங்களை சொல்லி குற்றமில்லை. உங்களது மனம் மிகவும் Westernised ஆகிவிட்டது. . . பணி புரிவது IT நிறுவனமோ ?? அதான் மேலாதிக்கம் தலை விரித்து ஆடுகிறது.. ஏதோ எங்களுக்கு பிடித்தவர்களை பார்த்து சந்தோசம் அடைகிறோம், அவர்களின் வெற்றியை எங்களின் வெற்றியை எண்ணுகிறோம், எங்களால் அதுதானே முடியும் . . . அதிர்ஷ்டம் மற்றும் வாய்ப்பு கிடைத்திருந்தால் நாங்களும் கல்லூரி முடித்ததும் எக்கச்சக்கமான பேச்சு திறமையால் 25000 ரூபாய் வேலையில் சேர்ந்து இந்நேரம் நிறைய வெளிநாட்டுக்காரன் படம் பார்த்து எங்கள் அறிவை வளர்திருபோமே. ! அவன் காலை பிடித்து விட்டு எங்களை வளர்திருப்போமே .. பாவப்பட்ட ஜென்மங்களின் இந்த அற்ப சந்தோசம் உங்களுக்கு கேளிக்கை , இன்ட்லி யில் வோட்டு பெற்று பெருமை பெற்றுக்கொள்ள பொன்னான வாய்ப்பு. . என்ன செய்வது. கருந்தேளுக்கு கொட்ட மட்டும் தானே தெரியும். . ..

    Reply
  16. //ஒவ்வொருவரும் அவரது சொந்தக் கருத்துக்களை வெளிப்படையாக முன்வைத்தால்தான் அது ஒரு ஆரோக்கியமான விவாதம் ஆகும். எனவே, ரஜினி நடித்திருப்பதால் மட்டுமே இப்படத்தை நான் பாராட்ட வேண்டும் என்று நினைக்கும் நண்பர்கள், இதனையும் எண்ணிப்பாருங்கள். முதலில், எந்திரன் ஒரு திரைப்படம். அதன்பின் தான் இது ரஜினி படம், ஷங்கர் படம் என்றெல்லாம் பகுத்தறியப்படவேண்டும். இது ஒரு படைப்பு. பொதுமக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. எனவே, அதன் மீது பல்வேறு விமர்சனங்களும் வரத்தான் செய்யும். அதுதான் நியாயம். அதனை விட்டுவிட்டு, இப்படத்தைப் பாராட்டாவிட்டால் அவன் தேசத்துரோகி என்ற உங்கள் அபிப்பிராயத்தை சற்றே மாற்றிக்கொள்ள முயலுங்கள்.//

    l like this sentence.. but enthiran is not like ur review.. its too good film from my point of view..

    Reply
  17. தேளு, எந்திர‌ன் விம‌ர்ச‌ன‌த்தை விட‌ நீங்க‌ கொடுத்த‌ இந்த‌ ப‌தில் ப‌திவு சூப்ப‌ர்…முக்கிய‌ம‌ க‌டைசி ப‌ந்தியை வ‌ழிமொழிகிறேன்..

    Reply
  18. இரசனை என்பது மனிதருக்கு மனிதர் மாறுபட்ட ஒரு சமாசாரம். ஒருத்தருக்கு பிடிக்கறது இன்னோரத்தருக்கு பிடிக்காம போகலாம். அதுக்காக ரசனைகெட்டவனுங்க கிடையாது. ஒரு சிலருக்கு படம்னா 2,3 fight scene 5 songs ..அப்புறம் தலைவர் screen ல வரது இதுதான் பிடிக்கும். Cinema is just an entertainment in our country.Moreover, you may feel this movie will not be upto hollywood level, but think of all the ppl in villages who hasn’t seen an english movie, they will watch this amazed. You have the responsibility of satisfying them too. That way we have to keep moving in circles with love, masala , comedy etc etc. We cannot take a genre specific movie, we cannot take movie without songs and we should abide by all rules of tamil cinema.
    நீங்க சொன்ன மாதிரி screenplay grip – ஆ இல்ல. first half speed – ஆ போச்சு and it was entertaining too. second half was not a much interesting one. Shankar failed to make a good screenplay here. But Rajini was outstanding in 2nd half. உங்களுக்கு அத பார்த்தப்போ சிரிப்பு வந்ததுன்னு சொன்னீங்க. அது உங்க கருத்து. ஆனா அது படத்தோட விமர்சனமா எழுதும்போது வேற மாதிரி கையாண்டிருக்கலாம். This is too harsh.
    உங்க மனைவி ரஜினி fan அவங்களுக்கே பிடிக்கல அப்படின்னு சொன்னீங்க. this is not needed here. எல்லாருக்கும் தனிப்பட்ட ரசனைன்னு ஒன்னு இருக்கு. You are trying to defend your critic on movie by telling that even one of the rajini fans ( your wife) didnt like movie.
    Try to avoid harsh words while writing review.

    நன்றி,
    புகழ்

    Reply
  19. இரசனை என்பது மனிதருக்கு மனிதர் மாறுபட்ட ஒரு சமாசாரம். ஒருத்தருக்கு பிடிக்கறது இன்னோரத்தருக்கு பிடிக்காம போகலாம். அதுக்காக ரசனைகெட்டவனுங்க கிடையாது. ஒரு சிலருக்கு படம்னா 2,3 fight scene 5 songs ..அப்புறம் தலைவர் screen ல வரது இதுதான் பிடிக்கும். Cinema is just an entertainment in our country.Moreover, you may feel this movie will not be upto hollywood level, but think of all the ppl in villages who hasn’t seen an english movie, they will watch this amazed. You have the responsibility of satisfying them too. That way we have to keep moving in circles with love, masala , comedy etc etc. We cannot take a genre specific movie, we cannot take movie without songs and we should abide by all rules of tamil cinema.நீங்க சொன்ன மாதிரி screenplay grip – ஆ இல்ல. first half speed – ஆ போச்சு and it was entertaining too. second half was not a much interesting one. Shankar failed to make a good screenplay here. But Rajini was outstanding in 2nd half. உங்களுக்கு அத பார்த்தப்போ சிரிப்பு வந்ததுன்னு சொன்னீங்க. அது உங்க கருத்து. ஆனா அது படத்தோட விமர்சனமா எழுதும்போது வேற மாதிரி கையாண்டிருக்கலாம். This is too harsh.
    உங்க மனைவி ரஜினி fan அவங்களுக்கே பிடிக்கல அப்படின்னு சொன்னீங்க. this is not needed here. எல்லாருக்கும் தனிப்பட்ட ரசனைன்னு ஒன்னு இருக்கு. You are trying to defend your critic on movie by telling that even one of the rajini fans ( your wife) didnt like movie.
    Please try to avoid harsh words while writing review.

    நன்றி,
    புகழ்

    Reply
  20. இரசனை என்பது மனிதருக்கு மனிதர் மாறுபட்ட ஒரு சமாசாரம். ஒருத்தருக்கு பிடிக்கறது இன்னோரத்தருக்கு பிடிக்காம போகலாம். அதுக்காக ரசனைகெட்டவனுங்க கிடையாது. ஒரு சிலருக்கு படம்னா 2,3 fight scene 5 songs ..அப்புறம் தலைவர் screen ல வரது இதுதான் பிடிக்கும். Cinema is just an entertainment in our country.Moreover, you may feel this movie will not be upto hollywood level, but think of all the ppl in villages who hasn’t seen an english movie, they will watch this amazed. You have the responsibility of satisfying them too. That way we have to keep moving in circles with love, masala , comedy etc etc. We cannot take a genre specific movie, we cannot take movie without songs and we should abide by all rules of tamil cinema.

    Reply
  21. நீங்க சொன்ன மாதிரி screenplay grip – ஆ இல்ல. first half speed – ஆ போச்சு and it was entertaining too. second half was not a much interesting one. Shankar failed to make a good screenplay here. But Rajini was outstanding in 2nd half. உங்களுக்கு அத பார்த்தப்போ சிரிப்பு வந்ததுன்னு சொன்னீங்க. அது உங்க கருத்து. ஆனா அது படத்தோட விமர்சனமா எழுதும்போது வேற மாதிரி கையாண்டிருக்கலாம். This is too harsh.
    உங்க மனைவி ரஜினி fan அவங்களுக்கே பிடிக்கல அப்படின்னு சொன்னீங்க. this is not needed here. எல்லாருக்கும் தனிப்பட்ட ரசனைன்னு ஒன்னு இருக்கு. You are trying to defend your critic on movie by telling that even one of the rajini fans ( your wife) didnt like movie.
    Please try to avoid harsh words while writing review.

    நன்றி,
    புகழ்

    Reply
  22. அங்கு, சினிமாவைச் சினிமாவாகத்தான் பார்க்கிறார்கள். — nalla comedy sir. Have you heard about Star wars Craze ? Will smiths’s fans ? ….. I understand your sincerity and responsibility you have in cinema world. You want to change this foolish crowd . Totally understandable. What a man you are…. You are bringing change in millions life everyday… Hats off….

    Reply
  23. ஹா ஹா ஹா சரியான நெத்தியடி.
    என்ன அதுவும் குறிப்பாக புரட்சி நாயகன்(சே குவேரா என்னவாம்!!நல்ல கேள்வி) மற்றும் தென்னாட்டு பெர்னார்ட்ஷா (தென்னாட்டு காந்தியை விட்டுவிட்டீர்கள்.தமிழ்நாடு என்ன இங்கிலாந்துலையா இருக்குது ?!!)
    என்ன பண்ணுறது கருந்தேள் தமிழனின் தலைஎழுத்து அப்படி.
    திராவிடன் என அரை நூற்றாண்டாக கூவிக்கொண்டிருக்கும் ஆட்சியை பிடித்த பிடிக்க முடியாத கட்சிகளிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி-நான்கு மாநிலங்களை சேர்த்து திராவிடன் என கூவும் இவர்கள் பக்கத்துக்கு மாநிலத்துக்காரனிடமிருந்து தண்ணி வாங்க வக்கில்லை.தமிழன்னு சொல்லுங்கப்பு.
    அடுத்து தென்னாட்டு அல்லது இந்தியாவின் Stanley Kubrick ஷங்கர் என ஒத்து ஊதினாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.(அடங்கப்பா அத நான் கேட்பதற்கு செவிடாக இருப்பது மேல் என நினைக்கிறேன்!)
    நம்மாளுங்களுக்கு 1st half சூபெர் செகண்டு ஹால்ப் மொக்கை என்பது மாதிரியான விமரிசனங்களையே கேட்டு பழகிப்போனதால்தான் இந்த பிரச்சனையே!மாற்ற முயற்சி செய்யும் சிலரையும் அடிவருடி அது இதுவென குறை சொல்வது தவிர்க்க இயலாது என நினைக்கிறேன்.தொடர்ந்து எழுதுங்கள்.

    Reply
  24. கருத்து சொல்றதப்பாத்தா, அடுத்த ஆஸ்காருக்கு கருந்தேள் எடுக்குறப்படந்தான் போகுமுன்னு நினைக்கிறேன். ஏன்னா அக்குவேறா ஆணிவேறா அலசுறதப்பாத்தா, மணிரத்னம், சங்கர், பாலசந்தர் எல்லாரயும் ஒரு ஒன் இயர் கருந்தேளுகிட்ட ட்ரைனிங் அனுப்பலாம்.

    (தரு)தல ஒத்துக்குமான்னுதான் தெரியல? பாப்போம்.

    Reply
  25. ரஜினி படம் வந்தால், அதைப் பாராட்டியே ஆகவேண்டும்.. அதன் மீது விமர்சனங்களை வைத்துவிட்டால், அது குற்றம் என்பது நம் வெற்றியின் கருத்து போலும்.. இவரைப்போல் கண்மூடித்தனமான வெறியர்கள் இருக்கும்வரை, தமிழ்ப்படங்களை ஆண்டவனால் கூடக் காப்பாற்ற முடியாது… :-).. மேலே அவர் கொடுத்துள்ள பட்டியலில் இருக்கும் இயக்குநர்கள் தான் தமிழின் சிறந்த இயக்குநர்கள் என்பது அவரது கண்மூடித்தனமான நம்பிக்கை.. அப்படியென்றால், அவரது இந்த வெறித்தனம், சரிதான் 🙂 .. இது பூட்ட கேஸ் 🙂

    Reply
  26. செக்ஸ் படம் நிறைய இருக்கு உங்கள் தரத்துக்கு ஏற்றது நீங்களும் சாருவும் அந்தப் படங்களுக்கும் விமர்சனம் எழுதி நம் சமூகத்தை முன்னேற்ற வேண்டும் .

    Reply
  27. @ வசந்திரன் – ஓ நீங்கள் அந்தக் கேஸா? செக்ஸ் படம் பார்த்து ஆட்டிக்கொண்டிருக்கும் கேஸ்.. தலையை.. 🙂 உங்களுக்காகத்தான் பல தளங்கள் உள்ளன இணையத்தில். அந்தப் பக்கம் போனீர்கள் எனில், நிறைய படங்களும் கதைகளும் கிடைக்கும் 🙂 . இங்கே இருப்பதெல்லாம் உமது மரமண்டைக்குப் புரியாத விஷயங்கள் 🙂 .. சூ சூ போ போ.. 🙂

    Reply
  28. முதலில் உள்ளதை உள்ளபடி உரைத்த கருந்தேளுக்கு பாராட்டுக்கள்.ப்ளாக் இல் நண்பர்கள் பலர் எழுதிய ஆஹா ,ஒஹோ, பலே ,பிரமாதம் , ஹாலிவுட் தரம் போன்ற விமரிசனகளை படித்து விட்டு பரவாஇல்லியே தமிழிலும் நல்ல முயற்சி செய்து ஹாலிவுட் தரத்திற்கு படங்கள் எடுகிரார்களோ என்ற எதிர்பார்ப்பில் படம் பார்த்த எனக்கு பெரும் ஏமாற்றமும் , தலை வலி யும் தான் மிஞ்சியது.
    ரஜினி+ ஷங்கர்+ ரஹ்மான்+ 150 கோடி +2 வருட உழைப்பு+சன் பிக்சர்ஸ் = குப்பை

    இதற்க்கா இத்தனை பில்டப் . விமரிசனம் எழுதும் பதிவுலக நண்பர்களே தயவு செய்து நடு நிலைமையுடன் எழுதுங்கள் .ஒருவேளை பதிவுலகமும் சன் குழுமத்திடம் விலை போய் விட்டதோ என்ற பயம் எனக்கு ஏற்படுகிறது ஹாலிவுட் தரத்திற்கு இனையாக உள்ளது என்றெல்லாம் எழுதுகிறீர்களே ?உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா அல்லது நீங்களெல்லாம் உண்மையிலேயே ஹாலிவுட் படங்களை பார்த்தது இல்லையா ?

    ரஜினியே நடித்திருந்தாலும், ஷங்கர் படமே என்றாலும் குப்பை குப்பையே என்று உண்மையை உயர்த்தி கூறிய
    கருந்தேளுக்கு மீண்டு ஒரு சபாஷ் .

    Reply
  29. என்ன மிஸ்டர் தேள்,போன பதிவுல எப்படியெல்லாம் விசத்தை கக்க முடியுமோ அப்படியெல்லாம் கக்கிவிட்டு இந்தபதிவில் வாயில் விரலை வைத்தால்கூட கடிக்க தெரியாத பிள்ளை போல பேசுகிறீர்கள்?ஒரு திரைபடத்தை பற்றி விமர்சிக்கும் பொது அதில் தனிமனித விமர்சனம் எங்கிருந்து வந்தது?
    ///ரஜினியால், இப்படத்தில் வசனம் பேசுவதைத் தவிர வேறு எதையுமே முழுதாகச் செய்ய முடியவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. பாவம்.. அந்த வயதானவரை அவர் போக்கில் விட்டுவிடுங்கள். அவர் பாட்டுக்கு இமயமலை ஏறித் தனது பொழுதைக் கழிக்கட்டும். ///
    இப்பவும் சொல்கிறேன் எங்களது கோவம் இதுதானே தவிர நீங்கள் சொல்லும் வடிகட்டிய பாசிசம் எல்லாம் எதுவும் இல்லை.ரைட்டு விடுங்க நீங்களும் அடுத்த பதிவ போட்டுடீங்க..நானும் என் வேலைய பாக்கிறேன்.(ரஜினி கூட இன்னைக்கு இமையமலைக்கு கிளம்பிட்டார் பாஸ்)

    Reply
    • i accept your comment frnd

      Reply
  30. //இவரைப்போல் கண்மூடித்தனமான வெறியர்கள் இருக்கும்வரை, தமிழ்ப்படங்களை ஆண்டவனால் கூடக் காப்பாற்ற முடியாது… :-)//
    கரெக்டு….!!

    கருந்தேள் அண்ணா..நீங்க உங்க மனசுல பட்டத பட்டத சொல்றீங்க.. அவங்க எல்லாருமே எந்திரனை புகழனும்னு நினைச்சா அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க…

    சில பேரை சொல்லி திருத்தலாம்… சில பேரை????
    மறப்போம்… மன்னிப்போம்!!!!

    Reply
  31. The Independent(UK)

    Meet India’s biggest film star

    Balding, paunchy, 61-year-old Rajinikanth is an unlikely leading man. But his new film, out this week, looks set to break all records

    By Andrew Buncombe in Delhi

    Sunday, 3 October 2010

    ‘Endhiran’ is the latest highly dramatic outing for Rajinikanth

    In Mumbai, the print of his film was driven at dawn to a temple by horse-drawn carriage in order for it to be blessed. In Chennai, the 4am showing of the film sold out, forcing fans to hustle to get tickets for the 5am slot. In Milton Keynes, movie reviewers were charmed, and in the US, hard-to-get tickets were reportedly selling for up to $40 (£25).

    This is how things are in the world of Rajinikanth, an Indian movie star of utterly larger-than-life proportions whose every film is a guaranteed hit. Remarkably, while he may be little known outside India, Rajinikanth is the second highest-earning Asian actor, pipped for the top spot only by Jackie Chan.

    This weekend, the 61-year-old veteran of more than 150 films is earning even more money. The star’s latest film, Endhiran – English title The Robot – opened to good reviews and huge, adoring crowds who queued overnight outside cinemas across the nation to watch the latest, high-adrenaline adventure. Inside, the audiences shouted and cheered at their hero’s unlikely moves while outside fireworks were set off and drums played.

    Reply
  32. But this movie is different for several reasons. Not only is it the most expensive Indian movie in history, costing around 1.6bn rupees (£23m), a vast sum for a film in this country even if it’s nothing compared to Hollywood. But the film was also simultaneously released globally at more than 2,000 cinemas, the largest ever distribution for an Indian film and a decision that underscores the star’s appeal with south Asian communities around the world.

    “He has a tremendous following. I’d say he is the ultimate Indian movie star,” said Taran Adarsh, a leading film critic. “Other film stars could not get away with what he does in films – he shoots with his fingers, he swallows helicopters and he turns into an anaconda – but whatever he does the fans love.”

    Even by the usually brash standards of popular Indian cinema, Rajinikanth is no ordinary star. A balding former Bangalore bus conductor who makes no effort to hide his paunch, the actor has a connection with fans that his rivals can only wish to match. He famously makes little effort at realism in his films.

    Rather, they are usually unbelievable stories in which his performance is completely over the top. There is lots of comedy as well, and plenty of music and dance routines. The actor’s trademark move is to throw a cigarette into the air, catch it deftly between his lips and then light it, all in one move.

    “He is no mere actor – he is a force of nature,” said Grady Hendrix, writing in the online magazine Slate. “If a tiger had sex with a tornado and then their tiger-nado baby got married to an earthquake, their offspring would be Rajinikanth.”

    What makes the actor’s story and record-breaking success even more intriguing is that he is not even a product of Bollywood, the much-celebrated Hindi-language movie industry based in Mumbai. Rather he comes from what is sometimes known as Kollywood, the Tamil-language film scene based in the city of Chennai. In Chennai, formerly known as Madras, Rajinikanth’s new film opened in 45 cinemas on Friday.

    For years, Rajinikanth, whose real name is Shivaji Rao Gaekwad, worked as a struggling stage actor. Once he made his breakthrough, he never looked back. There have been occasions when directors have tried to kill off one of his film characters and fans have responded by threatening to burn down cinemas.

    His new film tells the story of a robot, played by him. The film’s team includes Yuen Wo-ping, who worked on The Matrix, Stan Winston Studios, which worked on Jurassic Park, and the Academy Award-winning composer AR Rahman, best known in the West for the score to Slumdog Millionaire.

    First reports say the sci-fi movie’s technical effects and graphics are better than in any previous Indian movie and for the first time are of international standard. It’s also estimated that this latest offering will set a new box office record for the nation. The legend of Rajinikanth is set to soar even higher.

    Reply
  33. But this movie is different for several reasons. Not only is it the most expensive Indian movie in history, costing around 1.6bn rupees (£23m), a vast sum for a film in this country even if it’s nothing compared to Hollywood. But the film was also simultaneously released globally at more than 2,000 cinemas, the largest ever distribution for an Indian film and a decision that underscores the star’s appeal with south Asian communities around the world.

    “He has a tremendous following. I’d say he is the ultimate Indian movie star,” said Taran Adarsh, a leading film critic. “Other film stars could not get away with what he does in films – he shoots with his fingers, he swallows helicopters and he turns into an anaconda – but whatever he does the fans love.”

    Even by the usually brash standards of popular Indian cinema, Rajinikanth is no ordinary star. A balding former Bangalore bus conductor who makes no effort to hide his paunch, the actor has a connection with fans that his rivals can only wish to match. He famously makes little effort at realism in his films.

    Rather, they are usually unbelievable stories in which his performance is completely over the top. There is lots of comedy as well, and plenty of music and dance routines. The actor’s trademark move is to throw a cigarette into the air, catch it deftly between his lips and then light it, all in one move.

    “He is no mere actor – he is a force of nature,” said Grady Hendrix, writing in the online magazine Slate. “If a tiger had sex with a tornado and then their tiger-nado baby got married to an earthquake, their offspring would be Rajinikanth.”

    What makes the actor’s story and record-breaking success even more intriguing is that he is not even a product of Bollywood, the much-celebrated Hindi-language movie industry based in Mumbai. Rather he comes from what is sometimes known as Kollywood, the Tamil-language film scene based in the city of Chennai. In Chennai, formerly known as Madras, Rajinikanth’s new film opened in 45 cinemas on Friday.

    For years, Rajinikanth, whose real name is Shivaji Rao Gaekwad, worked as a struggling stage actor. Once he made his breakthrough, he never looked back. There have been occasions when directors have tried to kill off one of his film characters and fans have responded by threatening to burn down cinemas.

    His new film tells the story of a robot, played by him. The film’s team includes Yuen Wo-ping, who worked on The Matrix, Stan Winston Studios, which worked on Jurassic Park, and the Academy Award-winning composer AR Rahman, best known in the West for the score to Slumdog Millionaire.

    First reports say the sci-fi movie’s technical effects and graphics are better than in any previous Indian movie and for the first time are of international standard. It’s also estimated that this latest offering will set a new box office record for the nation. The legend of Rajinikanth is set to soar even higher.

    Reply
  34. thaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaank uuuuuuuuuuuuuuuuuuuu
    கருட புராணம் மற்றும் ரோபோ ராமாயணம் இதிகாச மோசடி இப்போ சுஜாதா இல்லை அடுத்த படம் சங்கர் எப்படி செய்வார்,பார்க்கலாம் ,இறக்கம் இல்ல மனிதன் அரக்கன் ,அந்த அரக்கனை உருvவாகிய வசிகீரனும் அரக்கன் தான் மனிதன் இல்லை ,வசீகரன் தன காதலியை எந்திரனுக்கு விட்டு கொடுத்து இருக்கலாம் அல்லது இரும்பில் இதையம் முளைத்த எந்திரன் தன்னை படைத்த கடவுளுக்காக விட்டு கொடுத்து இருக்கலாம்

    வசீகரன் இரக்கம் இல்லாதவன் என்பதற்கு சாட்சி

    கிளைமேக்ஸ் கோர்ட் சீன் – ஒரு 1000 போலீசாரைக் கொன்ற இயந்திரன், தான் ஒரு இயந்திரம் அதனால் தன்னை தண்டிக்க முடியாது என்று வாதாடும் போது, சயின்டிஸ்ட் ரஜினி புன்முறுவல் செய்கிறார். சமூக நலன் மிகுந்த ஒரு சயின்டிஸ்ட் 1000 மக்களைக் கொன்ற வருத்தம் இல்லாமல் எப்படி அந்தமாதிரி ஒரு ரியாக்‌ஷன் தரமுடியும் ?. எடிட்டர் எப்படி விட்டார் ?.

    எல்லா கலைகளும் தெரிந்தவன் எல்லா பாஷைகளும் தெரிந்தவன்
    இந்த எந்திரன் என்ற வெறும் ஆணவம் மட்டும் மிஞ்சியது
    ஒரு தியாகம் இல்லை விட்டு கொடுத்தல் இல்லை இரக்கம் இல்லை
    இதயம் முளைத்ததாக கட்டு கதை சிந்திக்க தெரிந்ததாக கட்டு கதை

    மனிதனாக அடிபடையில் தேவை இரக்கம் அது கூட வசீகரன் சொல்லி தரவில்லை தெரிந்தால் தானே சொல்லி தருவார் , இயந்திர அரக்கனை பார்க்க எல்லா மனித அரக்கர்களும் படை எடுப்பு வெள்ளி திரை நோக்கி வேறு என்னத்தை சொல்ல
    வசீகரன் ஆராய்ச்சியே மூழ்கி இருபதால் எந்திரன் கள்ள காதல் வைத்து
    இருக்கலாம் சனா கூட ,இந்த மெகா சீரியல் உலகத்தில் மேலும் பல லட்சம் கோடிகள்
    சம்பாரித்து கொடுத்து இருப்பான் இந்த எந்திரன்
    அன்பே சிவம் rocks

    எந்திரன் sucks

    sorry compassion is dead
    passion rocks
    all passionate arrakargal endorse enthiran in big way

    யாருமே கமலை நெருங்க முடியாது அன்பே சிவம் என்று சொன்னதை சுஜாதா ஆகட்டும் சங்கர் ஆகட்டும் ரஜினி ஆகட்டும்
    வெறும் மசாலா மாமனார்கள்
    அரக்கனை காட்டி கல்லா கட்டுபவர்கள்

    ஒரு நல்ல மனிதன் மற்றும் எந்திர உறவை சித்தரிக்காமல் வெறும் அரக்க குணத்தை
    மட்டும் காட்டி மக்களை முட்டாளாக்கி பல கோடிகள் சம்பாரித்து தான் மிச்சம்

    Reply
  35. //நீ சாருவின் அடிவருடி. எனவே, அவர் படம் குப்பை என்று சொன்னதும், அதையே நீயும் சொல்கிறாய்//

    பொதுவா ஒரு டவுட், நீங்க தப்பா நினைக்கலனா: “அடிவருடி”னா என்ன? நான் நினைப்பது சரியா? லிட்ரெல் மீனிங் தானா?

    Reply
  36. அதை நீங்க அந்தக் கேள்வி கேட்டவங்க கிட்ட தான் கேட்கணும் 🙂 ஒருவேளை, ‘தலைவர்’ கிட்ட கேட்டாலும் பதில் கிடைக்கலாம் 🙂

    Reply
  37. ஆமா… நானு அடுத்த பதிவுக்கே போயாச்சி.. இப்ப வந்து, இந்த மாதிரி ஒரு கேள்வியைக் கேட்குறது எதுனாலன்னு தெரிஞ்சிக்கலாமா? 🙂 ஏன் இந்த காமெடி? 🙂

    Reply
  38. கருந்தேள் கண்ணயிரம் அவர்களே வணக்கம்,
    உங்களுக்கு பிடித்த ஐந்து தமிழ் திரை படங்களை கூறுமாறு கேட்டு கொள்கிறேன்…

    நன்றி
    ரகு

    Reply
  39. கருந்தேள் நியமான விமர்சனம் அதற்கு நீங்கள் அளித்த பதிலும் சூப்பர்

    வாழ்த்துகள்.

    Reply
  40. ஆங்கிலப்படங்களுடன் எந்திரனை ஒப்பிடும் நண்பர்களுக்கு எனது எளிய கேள்வி: தமிழ்நாட்டில் மட்டுமே, ஆங்கிலம் பேசும் அரசியல் தலைவர், தென்னாட்டு பெர்னாட்ஷா; சில கதைகளும் கவிதைகளும் எழுதினால், அவர் மூதறிஞர் கலைஞர்; காப்பியடித்து நடித்தால் ,’ ஒலகநாயகன்’; இன்னும் புரட்சியே செய்யாமல், புரட்சித்தலைவர் ஆகலாம் (பாவம்யா செகுவேரா போன்றவர்கள்) . ராணுவத்தின் பக்கமே செல்லாமல் கேப்டன் ஆகிவிடலாம். தளபதி, சேநாதிபதி, சிப்பாய், புரட்சித் தளபதி, சின்ன தளபதி, ‘லிட்டில்’ சூப்பர் ஸ்டார், புரட்சித் தமிழன், ஆர்டினரி தமிழன், எக்ஸ்ட்ரா ஆர்டினரி தமிழன் ஆகிய பட்டங்கள், மிக எளிதில் கிடைத்து விடும்.

    எழுத்து பிழை செய்து இருக்கிறீர்கள். அது உலக நாயகன், ஒலக நாயகன் அல்ல. திருத்திக்கொள்ளுங்கள்.

    Reply
  41. Download பண்ணின படத்தையே முழுசா பாக்க முடியல,..எப்படி நீங்க எல்லாம் தியேட்டர் ல போயி பாத்திங்க?

    Reply
  42. எந்திரன் அப்படித்தான். அதில், எவ்வளவு தேடியும், கதை கிடைக்கவில்லை. கதையே இல்லாததால்,

    இதன் கருவையே எடுத்துக்கொள்வோம். ஒரு விஞ்ஞானி, ஒரு ரோபோவை வடிவமைக்கிறார். அதனுள், உணர்ச்சிகளைப் புகுத்துகிறார். அதனால் விபரீதம் விளைகிறது. அதன் காரணமாக அழிவு ஏற்படுகிறது. முடிவில் ரோபோ அழிக்கப்படுகிறது. இது, படத்தின் கரு. ஒன் லைன்

    Sorry i dont write in tamil… so does this mean Kathai and Karru are diffrent. i totally accept that you did not like the movie fine, but how come you call it a unbiased one.

    Sir..Ramanathapurathil irukka kadasi alukitta… poi Inception padathai pottu kattunga… enn OLDBOY kuda … tamilil transalte panni kattunga…. padama eppadi irukunu solluranu parpom….

    Enthrian is a movie which is like a hollywood movie which was tried in 1960’s in hollywood… konjam konjam ma thaan… thaan Robot…na enna nu solla mudiyum…unga allavukku Puthisaliya ramanathapuram.. tirunelveliil daily vellai seyyuravan iruka mattnga….

    neegha periya IT propfeesional irupinga… ennna neegha ellam illama.. NASAvil rocket odathu illa…(even me to IT)

    athavathu…. koraikura nayee ellam kadikathunu solluvanga…unagallu jalra adikuravan ellam kandippa 2 thadavai padam parthu iruppan…

    athavathu tamil cinema pudikathunu sollurathu oru perumaya boss…
    ithee methavi thanathai ellam konjam namma… code ..testing..supportnu pannama… ethoo researchil use panni iruntha.. india 1960’s intha mathiri padam eduthu irukum….

    how mnay sci-fi movie have u watched which were released in 1960’s in hollywood..???

    terminator was released in 1980’s ..so u can imagine their thought process… and what were ppl in 1980’s doing in tamil cinema..?? so dont expect enthrian as a 2010 movie..it shld be compared for a attmept in 1960. intha kuppaya edukavaee 150croce agi irukuna… terminator mathiri eduka.. evalavu agum….

    namma seyura vellayil mattum namma enna… america sorry neegha thaan korea ..japan… scientista… vethu code adikura alunga thaane….
    avanuga… mullaya… akka purama use pannuran.. namma ethuku use pannurom… aduthavanukku vellai seyya… so avanga mullai appadi think pannina.. namma mullai vialavu thaan think pannum….

    neegha unga pothu sevaya thoraunga…. parthu enthrian ungalala.. flop agida poguthu… please oree oruu padam edungalaen… just oru 10mins ikku oru padam edungalen… short film… illati..very short film… unga kathai theramai.. thirai kathai theramai.. ellarukum therinuju kurom…

    Reply
  43. D.A.R.Y.L. (1985) “Daryl” (whose name is an acronym for
    “Data-Analysing Robot Youth Lifeform”)
    http://en.wikipedia.org/wiki/D.A.R.Y.L.
    ஹாலிவுட் காவியம்

    எந்திரன் தமிழ் கண்ராவி
    c the story line and enthiran story
    just a prediction by the creators that machines can take over our
    lives in a negative way if its not handled properly
    http://en.wikipedia.org/wiki/D.A.R.Y.L.

    visit the site to know more r beg borrow r steal
    and watch this film
    Data-Analysing Robot Youth Lifeform D.A.R.Y.L.
    way ahead of its time

    (Barret Oliver)
    is an experiment in artificial intelligence,
    created by the government. Although physically
    indistinguishable from an ordinary ten-year-old boy,
    his brain is actually a super-sophisticated microcomputer
    with several unique capabilities. These include
    exceptional reflexes,
    superhuman multitasking ability, and the ability to
    “hack” other computer
    systems. The D.A.R.Y.L. experiment was funded by the
    military, with the
    intention of producing a “super-soldier”. One of
    the original scientists
    has misgivings about the experiment and decides
    to free Daryl, but is killed in the process

    Because Daryl has revealed a capacity for human emotions
    (including fear), the D.A.R.Y.L. experiment is
    considered a failure by the military and the decision
    is made that the project be “terminated”.
    Dr. Stewart (Josef Sommer), one of Daryl’s designers,

    “General, a machine becomes human … when you can’t tell
    the difference anymore.”, implying that she is
    no longer certain that Daryl is not human.

    Reply
  44. D.A.R.Y.L. (1985) “Daryl” (whose name is an acronym for
    “Data-Analysing Robot Youth Lifeform”)
    http://en.wikipedia.org/wiki/D.A.R.Y.L.
    ஹாலிவுட் காவியம்

    எந்திரன் தமிழ் கண்ராவி
    c the story line and enthiran story
    just a prediction by the creators that machines can take over our
    lives in a negative way if its not handled properly
    http://en.wikipedia.org/wiki/D.A.R.Y.L.

    visit the site to know more r beg borrow r steal
    and watch this film
    Data-Analysing Robot Youth Lifeform D.A.R.Y.L.
    way ahead of its time

    (Barret Oliver)
    is an experiment in artificial intelligence,
    created by the government. Although physically
    indistinguishable from an ordinary ten-year-old boy,
    his brain is actually a super-sophisticated microcomputer
    with several unique capabilities. These include
    exceptional reflexes,
    superhuman multitasking ability, and the ability to
    “hack” other computer
    systems. The D.A.R.Y.L. experiment was funded by the
    military, with the
    intention of producing a “super-soldier”. One of
    the original scientists
    has misgivings about the experiment and decides
    to free Daryl, but is killed in the process

    Because Daryl has revealed a capacity for human emotions
    (including fear), the D.A.R.Y.L. experiment is
    considered a failure by the military and the decision
    is made that the project be “terminated”.
    Dr. Stewart (Josef Sommer), one of Daryl’s designers,

    “General, a machine becomes human … when you can’t tell
    the difference anymore.”, implying that she is
    no longer certain that Daryl is not human.

    Reply
  45. @ ராஜா – உங்க பின்னூட்டம் முழுவதுமே ஒரு புலம்பல் ரேஞ்சிலேயே உள்ளது. எந்திரன் எனக்குப் பிடிக்கவில்லை. ஏன்? காரணம் மிக சிம்பிள்.. நோ கதை.. நோ நத்திங்.. அவ்வளவு தான்.. இப்புடி ஒரு மொக்கைக் கதையை எடுப்பதற்கா 2 வருடங்கள் மற்றும் 150 கோடி?

    மத்தபடி, நீங்க பொலம்பிருக்குற சாஃப்ட்வேர், லொட்டு லொசுக்கு, முடிஞ்சா படம் எடுத்துக் காமி எட்ஸெட்ரா மொத்தமும் டோட்டலா உளறல்கள் தான்.. நான் உங்களைத் திட்டல.. உங்க தலைவர் படம் உங்களுக்கு பெருசா இருக்கலாம். ஆனா, எனக்கு அப்புடி இல்லை. ஏன்னா நான் தலைவர்ன்ற ஒரு காரணத்துக்காக பையாஸ் ஆகலை.. அவ்வளவுதான் 🙂

    நீங்க சொல்ற ராமனாதபுரம், டெய்லி வேலை செய்யுர ஆட்கள் எல்லாருமே, நல்ல கதை உள்ள எந்தப்படமா இருந்தாலும் ஆதரிக்கிறவங்க தான்.. அங்காடித் தெரு ஓடலையா?

    ஏங்க இப்புடி ஒரு சப்பைக்கட்டு கட்டுறீங்க? ஓல்ட் பாய் மாதிரி படம் எடுக்கச் சொல்லலை. நல்ல கதையோட ஒரு படம் எடுக்கச் சொல்றேன். அவ்வளவே 🙂

    தமிழ் சினிமா புடிக்காதுன்னு சொல்லலை. எந்திரன் மாதிரி குப்பைகள் புடிக்காதுன்னு மட்டுமே சொல்றேன்.. எங்க திறமையை எங்க காட்டணும்னு எங்களுக்குத் தெரியும் 🙂 .. உங்க திறமையை போஸ்டர் அடிக்கிறதுலயும், அலகு குத்துறதுலையும் காட்டாம, நீங்க போயி நாலு காசு சம்பாதிச்சி குடும்பத்த கரையேத்துற வழிய பாருங்க 🙂

    உங்க வாதப்படி பார்த்தா, எந்திரன் ஒரு 1960ஸ் படம்.. டெக்னாலஜில.. இல்லையா? இருந்துட்டுப் போகுது.. நான் டெக்னாலஜியைக் குறை சொல்லல. கதை என்பது மருந்துக்குக் கூட இல்லாமல், வெறும் டெக்னாலஜியை ஏன் திணித்தார்கள் என்பதே விஷயம்.. சும்மா ரஜினி வந்து நடிச்சிட்டா, அந்தப் படத்தைத் தூக்கித் தலைல வெச்சிகினு ஆடணுமா? என்ன காமெடி இது 🙂

    போயி உங்க வேலையை (மட்டும்) பாருங்க 🙂 நீங்க அலகு குத்திக்கினு ஆடுற நேரத்துல, வேலை போயிரப் போகுது.. 🙂

    Reply
  46. கருந்தேள் அவர்களின் நடு நிலைமை என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது
    அதாவது ரஜினி கமல் ஆகியோரை சரி சமமாக தாக்கியது ஒரு தலை பட்சமில்லாமல்
    விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை
    விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட விசையம் என்பது எதுவும் இல்லை
    அனால் அந்த விமர்சனம் ஆரோகியமாக இருக்க வேண்டும்
    என்பதே ஏன் தாழ்மையான கருத்து.

    ஹாலிவுட் அன்பே சிவம் ஐஸ் ஏஜ் படத்தில் தன்னை கொன்ற மனித
    இன குழந்தையை யானை தூக்கி வைத்து கொஞ்சும்
    அதை காட்சி படித்திய விதம் அருமை
    அதே போல களவாணி படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் எல்லாம்
    பெரிய சண்டை ஆகும் என்று எதிர் பாரத்தால் ஹீரோ விமல் வந்து தடுத்து
    என் மச்சான் மேல யாரவது கைய வைச்சீங்க என்று காமெடி ஆகும்
    சண்டை காட்சி மிக புத்தி சாலி தனமான காட்சி அமைப்பு
    வன்முறையை தவிர்த்ததிற்கு டிரெக்டர் சர்குனதிற்கு தைரியம் அதிகம்

    அப்புறம் குசேலன் படம் நட்பை சொல்லிய படம் வெற்றி பெறவில்லை
    என்ற ஆதங்கம் ஆர்யா ராஜேஷ் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில்
    நன்பேண்ட என்று சொல்லி அந்த குறை போக்கி விட்டனர்
    வன்முறை அருவாளுடன் ஓடி வரும் ஹீரோ
    அப்புறம் கிளைமாக்ஸ் ஜீவா கூட சண்டை அது கூட காமெடி அவது
    இது எல்லாம் கமலின் அன்பே சிவத்திற்கு கிடைத்த வெற்றிகள்

    கமல் என்னும் தனி மனித பெருமை பாட வில்லை

    கமல் என்னும் கான்செப்ட் புரிந்து கொள்ள எவ்வள்ளவு இலக்கியங்கள்
    உலக திரைப்படங்கள் பார்த்தாலும் சாருவிற்கும் கருந்தேளுக்கும் புரியாது
    அன்பே சிவம் கூட மிக கடுமையா விமர்சித்தார் சாரு

    இப்போ பாருங்க தமிழ் சினிமாவே அன்பே சிவம் என்று சொன்னது

    கமல் அன்பே சிவம் பெயர் வைத்த போது தமிழ் சினிமா பெயர்கள்

    அன்பே டையான
    அன்பே அன்பே
    அன்பே நிலையானது உன்னை சரணடைந்தேன்
    பெயரில் பின் பற்றிய தமிழ் சினிமா இப்போது
    அன்பே சிவம் பட கருத்தையும் பின் பற்றி வெற்றி பெற்றும் இருகிறார்கள்
    அதை இந்த எந்திரன் என்கிற அரக்கன் மான்ஸ்டர் அதிமேதாவி
    எல்லா கலைகளையும் அறிந்தவன் எல்லா மொழிகளையும் தெரிந்தவன்
    எல்லா விசியங்களும் தெரிந்ததால் தான் அன்பு பிடிக்காது
    அன்பே சிவம் மாதவன் போல
    கெடுத்து விட்டான் படு பாவி எந்திரன்
    மென்மையாக சொல்ல வேண்டிய விசையத்தை மசாலா மாமன்னர்கள்
    கெடுத்து விட்டனர்
    இது சத்தியம்

    Reply
  47. கருந்தேள் அவர்களின் நடு நிலைமை என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது
    அதாவது ரஜினி கமல் ஆகியோரை சரி சமமாக தாக்கியது ஒரு தலை பட்சமில்லாமல்
    விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை
    விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட விசையம் என்பது எதுவும் இல்லை
    அனால் அந்த விமர்சனம் ஆரோகியமாக இருக்க வேண்டும்
    என்பதே ஏன் தாழ்மையான கருத்து.

    ஹாலிவுட் அன்பே சிவம் ஐஸ் ஏஜ் படத்தில் தன்னை கொன்ற மனித
    இன குழந்தையை யானை தூக்கி வைத்து கொஞ்சும்
    அதை காட்சி படித்திய விதம் அருமை
    அதே போல களவாணி படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் எல்லாம்
    பெரிய சண்டை ஆகும் என்று எதிர் பாரத்தால் ஹீரோ விமல் வந்து தடுத்து
    என் மச்சான் மேல யாரவது கைய வைச்சீங்க என்று காமெடி ஆகும்
    சண்டை காட்சி மிக புத்தி சாலி தனமான காட்சி அமைப்பு
    வன்முறையை தவிர்த்ததிற்கு டிரெக்டர் சர்குனதிற்கு தைரியம் அதிகம்

    அப்புறம் குசேலன் படம் நட்பை சொல்லிய படம் வெற்றி பெறவில்லை
    என்ற ஆதங்கம் ஆர்யா ராஜேஷ் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில்
    நன்பேண்ட என்று சொல்லி அந்த குறை போக்கி விட்டனர்
    வன்முறை அருவாளுடன் ஓடி வரும் ஹீரோ
    அப்புறம் கிளைமாக்ஸ் ஜீவா கூட சண்டை அது கூட காமெடி அவது
    இது எல்லாம் கமலின் அன்பே சிவத்திற்கு கிடைத்த வெற்றிகள்

    கமல் என்னும் தனி மனித பெருமை பாட வில்லை

    கமல் என்னும் கான்செப்ட் புரிந்து கொள்ள எவ்வள்ளவு இலக்கியங்கள்
    உலக திரைப்படங்கள் பார்த்தாலும் சாருவிற்கும் கருந்தேளுக்கும் புரியாது
    அன்பே சிவம் கூட மிக கடுமையா விமர்சித்தார் சாரு

    இப்போ பாருங்க தமிழ் சினிமாவே அன்பே சிவம் என்று சொன்னது

    கமல் அன்பே சிவம் பெயர் வைத்த போது தமிழ் சினிமா பெயர்கள்

    அன்பே டையான
    அன்பே அன்பே
    அன்பே நிலையானது உன்னை சரணடைந்தேன்
    பெயரில் பின் பற்றிய தமிழ் சினிமா இப்போது
    அன்பே சிவம் பட கருத்தையும் பின் பற்றி வெற்றி பெற்றும் இருகிறார்கள்
    அதை இந்த எந்திரன் என்கிற அரக்கன் மான்ஸ்டர் அதிமேதாவி
    எல்லா கலைகளையும் அறிந்தவன் எல்லா மொழிகளையும் தெரிந்தவன்
    எல்லா விசியங்களும் தெரிந்ததால் தான் அன்பு பிடிக்காது
    அன்பே சிவம் மாதவன் போல
    கெடுத்து விட்டான் படு பாவி எந்திரன்
    மென்மையாக சொல்ல வேண்டிய விசையத்தை மசாலா மாமன்னர்கள்
    கெடுத்து விட்டனர்
    இது சத்தியம்

    Reply
  48. இனிது இனிது கூட ஒரு அன்பே சிவம் தான்
    சீனியர் ஜூனியர் அடிதடி ஆகும் என்று பாரத்தால்
    பெட் மேட்ச் கிரிக்கெட் விளையாடுவார்கள்
    ஜூனியர் சீனியர் கள் மேல கம்ப்ளைன்ட் கொடுக்க போகும் போது
    மத்யஸ்தம் செய்யும் நபர் ஜூனியர் களை பார்த்து கேட்கும் கேள்வி
    அவங்க வாழ்க்கை நாசமாகும் கம்ப்ளைன்ட் செய்தால்
    அதனால் ப்ரின்சிபளிடம் போவது தவிர்க்க பட்டது
    வன்முறையும் தவிர்க்கப்பட்டது
    தமிழில் இது போன்ற முயற்சிகள்
    ஹாப்பி டேய்ஸ் ரீமேக் என்றாலும் பாராட்டுக்கு உரியது

    ஆனந்தம் படத்தில் வீட்டிற்க்கு திருட வந்தவனை கூட
    குடும்ப உறுப்பினர் ஆக்கி கொள்வது
    இந்த மாதிரி எந்த விசையமும் இல்லாத எந்திரன் ஒரு குப்பை

    சங்கரின் பாலாஜி சக்திவேலின் காதல் படத்தில் கூட
    கிளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ பரத்தை ஹெரோஇனே நாயகி மற்றும்
    கணவர் அரவணைத்து செல்லும் காட்சி போல
    எந்திரனில் எந்த காட்சியும் இல்லை

    ரோபோட் தப்பு செய்தால் அதை மாற்றி ப்ரோக்ராம் செய்யும்
    புத்தி கூட இல்லையா டாக்டர் வசீகரனுக்கு
    அதை என் அடித்து நொறுக்கி போட வேண்டும்

    ரெட் சிப் பொருத்தி வில்லன் உபயோக படுதலையா
    அழிவு பூர்வ வேலைகளுக்கு

    ஆக்க பூர்வ வேலைகளுக்கு மாற்றி சிப் பொருத்தும்
    வல்லமை வசீகரனுக்கு இல்லாமல் போனது எப்படி

    மிக கேவலமான கதை பாதை

    ஒரு நல்ல படத்திற்கு கிடைக்க வேண்டிய அத்தனை
    அங்கீகாரமும் வியாபாரமும் ஒரு கெட்ட மோசமான
    படத்திற்கு கிடைத்தது மிகவும் கொடுமை
    தமிழ் சினிமாவின் துரதிர்ஷ்டம்

    Reply
  49. just c this debate Rajinikanth Ndtv-Hindu Debate-3

    http://www.youtube.com/watch?v=cjShkNGhx34

    fans of rajinikanth has no answer for failure of baba and
    kuselan and convince or confuse mantra

    chinmayee singer rajini fanatic said rajini sir himself said
    kuselan is pasupathy film not rajini film
    JUST LIKE BILLU BARBER IS NOT SHAHRUKH FILM
    FANS HAD NO ANSWER FOR BABA DEBACLE WHATS WRONG WITH RAJINI
    if this is correct rajini can do any number of films
    why so much hype and sold at very hefty prices
    pyramid saimira went out of business and kamal had to wait in bench
    for one year and lost two films one from bharat bala and other one
    from hollywood production warner brothers i think.

    சங்கர் இல்லையென்றால் ரஜினி ஜீரோ
    இது இந்தியா டுடே சொன்னது

    அதை யாரும் சொல்ல தயங்குகிறார்கள்

    சங்கர் இல்லாவிட்டாலும் கமல் CAN SURVIVE

    INDIA TODAY KAMAL 50 YEARS SPECIAL ISSUE
    ரவி குமார் அவர்கள் சொன்னது
    கமலின் பிரமாண்டம் வேறு
    சங்கரின் பிரமாண்டம் வேறு
    அதற்கு உதாரணம் காட்சிக்கு தேவை என்றால் மட்டுமே
    CG COMPUTER GRAPHICS அது கல்லை மட்டும் கண்டால்
    பாட்டு அல்லது சுனாமி
    காட்சிகள் தசவதாரம் படத்தில்
    if this is correct rajini can do any number of films
    why so much hype and sold at very hefty prices
    pyramid saimira went out of business and kamal had to wait in bench
    for one year and lost two films one from bharat bala and other one
    from hollywood production warner brothers i think.

    பன்னிங்க தான் கூட்டம் கூட்டமாக சினிமா தியேட்டர் போய் படம் பார்க்கும்
    சிங்கம் சிங்கிளா பிகரை தள்ளி கொண்டு போய்
    அல்லது தனியாக DVD படம் பார்க்கும்
    இந்த முல்டிப்லெக்ஸ் multiplex மரபை மீறி ரஜினி படம் பார்க்கும் எல்லோரும் பன்னி
    குட்டிகள் தான்

    அன்பே சிவம் திரைஅரங்கில் ஓட வில்லை என்றாலும் சினிமாவே
    பார்க்காதவர்களும் திரைஅரங்கு போகாதவர்களும் கூட
    தொலைகாட்சியில் பார்த்து அல்லது DVD வீடியோ பார்த்து பாராட்டிய படம்

    ரஜினி படம் வசூல் அளவு பல லட்சம் கோடி என்றால்

    கமல் படங்கள் மக்கள் பார்த்தது கணக்கில் அடங்காதது
    உண்மையான உலக சினிமா ஆர்வலர்கள் ஹே ராம் படம்
    ஹோமே வீடியோ பார்த்து இருப்பார்கள்
    காந்தி பற்றி சொன்னதால் உலகில் எங்கும் கிடைக்கும் வீடியோ
    ரேபிறேன்ஸ் பொக்கிஷம் காலத்தால் அழியாதது
    THANKS TO TECHNOLOGY

    Reply
  50. எந்திரன் எதிர் வினைகளுக்கு வருவோம்
    நம்ம வீட்டு வாண்டுகள் அல்லது பசங்க அல்லது குழந்தைகள்
    ஒரு சீன் கூட இம்ப்ரெஸ் impress ஆகல எந்திரனில்
    indha scene power rangers pola
    indha scene d war rudra nagam
    indha scene inspector gadget pola
    indha scene irobot pola
    indha scene terminator pola
    indha scene godzilla pola
    indha scene yendru so many scenes suttadhu
    வாண்டுகளுக்கே தாங்க முடியல என்றால்
    எனக்கு எப்படி இருக்கும்
    என் சினிமா அறிவிற்கு தாங்க முடியல சாமி

    போல என்று வந்தாலே அது காபி தானே
    புதுமை ஒன்றும் இல்லை
    தேவர் பிளம்ஸ் பிறகு ராம நாராயணன் அனைத்து மிருகங்களையும்
    வைத்து படம் எடுத்தார் ,மிருக வதை சட்டம் அல்லது ப்ளூ கிராஸ் அமைப்பினால்
    இந்த கம்ப்யூட்டர் கருமத்தில்

    மாயஜாலம் செய்ய தொடங்கி விட்டார்
    ராம நாராயணனை கூட மன்னித்து விடலாம்

    பிரமாண்டம் பிரமாண்டம் என்று சொல்லி
    சிறிய பட்ஜெட் படங்கள் தன் சொந்த தயாரிபுகுகளை
    நிறுத்தியது சங்கரின்
    எஸ் பிக்ட்செர்ஸ்
    அனந்தபுரத்து வீடு மற்றும் ரெட்டை சுழி படங்கள் சரியாக
    போகததால்
    இவ்வளவு சம்பாரித்த சன் பிக்க்செர்ஸ்
    சிறிய படங்கள் வாங்குவதிலும் அக்கறை செலுத்தலாம் அல்லவா?

    உதயநிதி ஸ்டாலின் சிறிய பட்ஜெட் மைனா படத்தை பெரிய அளவில்
    கொண்டு வருகிறார்

    yenthiran debate will go on till sultan releases

    rajini appeared in enthiran and most of the work done by
    CG as u said

    கருந்தேள் சொன்னது போல
    ரஜினிக்கு டப்பிங் தவிர வேறு வேலை இருந்து இருக்காது

    இனி கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் “சுல்தான் தி வாரியர்

    Reply
  51. எந்திரன் தியேட்டர்கள் காலி-தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்!

    October 16, 2010

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்துள்ள எந்திரன் படத்திற்கு இலங்கையில் மோகம் குறைந்து விட்டதாக செய்திகள் கூறுகின்றன. பல தியேட்டர்களில் படம் எடுக்கப்பட்டு விட்டதாகவும், கூட்டம் குறைந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    இதுகுறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தி…

    இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் எதிர்பார்ப்புடனும், பெரும் ரசிகர் ஆரவாரத்துடனும் எந்திரன் திரையிடப்பட்டது. நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு தமிழ்ப் படத்திற்கு இந்த அளவுக்கு வரவேற்பும், எதிர்பார்ப்பும் கிடைத்தது இதுவே முதல் முறையாகும்.

    ஆனால் தற்போது கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் எந்திரனுக்கு மவுசு குறைந்து விட்டது. இங்குள்ள பல்வேறு தியேட்டர்களில் எந்திரன் படத்தை எடுத்து விட்டனர். கூட்டம் குறைந்து போனதே இதற்குக் காரணம்.

    இதுகுறித்து யாழ்ப்பாணத்தில் இரு தியேட்டர்களுக்கு உரிமையாளரான தியாகராஜா என்பவர் கூறுகையில், படத்தைப் பார்க்க வரும் தமிழர்கள், இது தமிழ்ப் படம் போல இல்லையே, ஆங்கிலப் படம் போல இருக்கிறதே என்று கூறுகிறார்கள். அதை விட முக்கியமாக நமது கலாச்சாரத்திற்கும், இதற்கும் பொருத்தமாக இல்லையே என்பதுதான் அவர்களது முக்கிய கவலையாக உள்ளது.

    இந்த எண்ணம் சிலரிடம் மட்டும் ஏற்படவில்லை. ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் பரவியுள்ளதால் படத்தைக் காண வருவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் காரணமாக எங்களது இரு தியேட்ட்டர்களில் போட்டிருந்த எந்திரனை, ஒரு தியேட்டரிலிருந்து எடுத்து விட்டோம் என்றார்

    பூபாளசிங்கம் என்ற தமிழர் கூறுகையில், இது தமிழ்ப் படம் போலவே இல்லை. வடிவேலு, கவுண்டமணி, செந்தில் போன்றோரின் காமெடி இல்லாமல் போனது படத்துக்கு மிகப் பெரிய பலவீனம். இங்குள்ள தமிழர்களுக்கு தமிழ்ப் படம் என்றால் அதில் காமெடியைத்தான் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் எந்திரனில் இது இல்லாதது பெரும் பலவீனம் என்றார்.

    ஆரம்பத்தில் ரஜினி, ஐஸ்வர்யா படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்புடன் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது இல்லை என்பதால் ரசிகர்களிடையே ஆர்வம் குறைந்து போய் விட்டது என்றும் கூறினார் பூபாளசிங்கம்.

    இதை விட முக்கியமாக, எந்திரன் ரிலீஸான அடுத்த நாளே மலேசியாவிலிருந்து பெருமளவில் டிவிடிக்கள் வந்து குவிந்து விட்டனவாம். இதுவும் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருகை குறைந்து போனதற்கு முக்கியக் காரணமாம். யாழ்ப்பாணத்தில் எந்திரன் திருட்டு விசிடியும், டிவிடியும் தாராளமாக கிடைக்கிறதாம்.

    தமிழ் எந்திரன் நிலை இப்படியிருக்க, இந்தி ரோபோவுக்கு பெரும் ஏமாற்றம் மிஞ்சியுள்ளதாம். அதாவது இந்தி ரோபோவுக்கு சுத்தமாக வரவேற்பில்லையாம். இந்தியில் பார்ப்பதை விட தமிழிலேயே பார்க்கலாம் என்பதால் இந்தி ரோபோவைப் பார்க்க யாரும் ஆர்வம் காட்டவில்லையாம். மேலும், இந்திப் படம் என்றால் ஷாருக் கான் உள்ளிட்டோரின் படங்களைத்தான் அங்குள்ளவர்கள் எதிர்பார்க்கிறார்களாம். அதேசமயம், ரஜினியை தமிழ்ப் பட நடிகராக மட்டுமே பார்ப்பதாகவும், அதிலும் காமெடியில் கலக்கும் ரஜினியைத்தான் அதிகம் ரசிப்பதாகவும் தியாகராஜா கூறுகிறார்.

    Reply
  52. எந்திரன் – நானும் நானும்!!!
    http://sivigai.blogspot.com/2010/10/blog-post.html
    வழக்கம் போல, மக்களோடு மக்களாக, நானும் ஐக்கியமாகிறேன்.

    சில எண்ணங்கள்:

    எந்திரன் ஒரு அசாதாரமான படம். எந்திரன் ஒரு குப்பை. எந்திரன் போல ஒரு படம் வந்ததுமில்லை, இனி வரப்போவதுமில்லை. இப்படி ஒரு படம் வந்ததே தேவையற்றது. இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கலாம். எந்திரன் படத்தை புறக்கணிப்போம். நல்ல வேளை கமல் தப்பித்து விட்டார். இந்நேரம் கமலுக்கு வயிறெரிந்து வயிறே ஓட்டை ஆயிருக்கும். உஸ் அப்பாஆஅ!!! கண்ணக் கட்டுதப்பா.
    சாதாரணமாக, படம் பார்க்கும்போதும், முடிந்தவுடனேயும், இந்த கீழே உள்ள ஏதாவது ஒரு நிலைதான் இருக்கும்.

    படம் முழுதும் சிரித்துக் கொண்டு, படம் முடிந்த பின்னரும், அதில் வரும் ஏதாவது ஒரு காட்சியைப் பற்றி பேசி சிரிப்பது. (பாஸ் எ பாஸ்கரன், ஓரம்போ, கோவா போன்ற படங்கள்.)
    இடைவேளை வரை அல்லது அதற்கு சற்று அடுத்து வரை சிரித்து விட்டு, அதன் பின் அமைதியாய் பார்த்து விட்டு, சற்றே சோகமாய் வருவது. (பருத்தி வீரன், சுப்ரமணியபுரம், ரேணிகுண்டா போன்ற படங்கள்)
    படம் முழுதும் அல்லது பிற்பாதியில் ஒரு வித ஆக்ரோஷத்துடன் பார்ப்பது (நேரம் போவதே தெரியாமல்). சண்டைக்காட்சிகள், சவால் விடும் காட்சிகளில் நாமும் கத்துவது என்று. படம் முடிந்து வீட்டிற்கு வந்து யோசிக்கும்போதுதான், லாஜிக் கழுதை உதைக்கும். (சிங்கம், பில்லா, நான் மகான் அல்ல போன்றவை).
    எப்படா படம் முடியும். ஏன்தான் வந்தமோ என்று தன்னைத்தானே நொந்துக் கொள்வது (மாயக்கண்ணாடி, கந்தசாமி, ராவணா, விண்ணைத் தாண்டி வருவாயா போன்றவை)
    எந்திரனின் ஒரு கை மட்டும் குப்பையிலிருந்து வரும் காட்சியில் இடைவேளை விட்டால், ம்ம்ம்ம்.

    “எந்திரன் முதல் காட்சி – இடைவேளை விடும் விழா”. எந்திரன் இடைவேளையில் மசால் வடை விற்ற சிறப்பு நிகழ்ச்சி (சமோசா அடுத்த வாரம்). விற்பவர் “கலாநிதி மாறனுக்கு ரொம்ப நன்றி சார். அவர் மட்டும் இல்லேன்னா, இந்த மசால் வடை எல்லாம் வித்தே தீர்ந்திருக்காதுங்க” என்று சொல்லாவிட்டால், கத்தரிக்கப்படும். (நான் அவர் கொடுக்கும் பேட்டியை சொன்னேன்).
    ரஜினி மனதிற்குள் “நூறு நூத்தம்பது படம் நடிச்சுட்டு சந்தோசமா காச வாங்கிட்டு போயிட்டு இருந்தேன். இந்த ஒரு படம் நடிச்சுட்டு, நான் படற அவஸ்தை இருக்கே, அய்யய்யோ” என்று மருவிக்கொண்டிருக்கலாம்.
    “எந்திரன் உருவான விதம்” என்று கண்டிப்பாக நிகழ்ச்சி வரும். அதில் டிரெயின் சண்டைக்காட்சி மற்றும் நடனக் காட்சிகளை எப்படி எடுத்தோம் என்று போடுவார்களா??

    படம் கொஞ்சம் சுமாரா இருக்கும்போதே இவங்க அலும்பு தாங்கலியே? ஒரு வேளை ரொம்ப நல்லா எடுத்திருந்தா?? (என்னங்க, அப்படி எடுத்தாதான் இவ்வளவு அலும்பு தேவை இல்லையேன்னு சொல்றீங்களா.. சரிதான். )

    Reply
  53. ரஜினியும் ரீமேக் படங்களும்

    ரஜினி நடித்த பல ரீமேக் படங்கள் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் அவருடைய இமேஜையும் உயர்த்தின.
    தில்லுமுல்லு (கோல்மால்)
    பில்லா (டான்)
    குப்பத்து ராஜா (தோ யார்)
    நான் வாழ வைப்பேன் (மஜ்போர்)
    தீ (தீவார்)
    விடுதலை (குர்பானி)
    அடுத்தவாரிசு ( ராஜாராணி)
    நான் மகான் அல்ல (விஸ்வனாத்)
    நான் சிகப்பு மனிதன் (ஆஜ் கி ஆவாஸ்)
    நான் அடிமை இல்லை (பியார் ஷுக்தா நஹின்)
    தர்மத்தின் தலைவன் (கஷ்மே வாடெ)
    குரு சிஷ்யன் ( இன்சாஃப் கி புகார்)
    வேலைக்காரன் (நமக் ஹலால்)
    மாவீரன் (மர்த்,இந்தி)
    மிஸ்டர் பாரத் (திரிசுல்)
    படிக்காதவன் (குத்தார்)
    பணக்காரன் (லாவரிஸ்)
    சிவா (கூன் பசினா)
    அண்ணாமலை (குத் கர்ஸ்)
    பாட்ஷா (ஹம்)
    ஆகியவை இந்தியிலிருந்தும்,

    போக்கிரிராஜா (சுட்டலுனாரு ஜாக்ரதா)
    நல்லவனுக்கு நல்லவன் (தர்மத்முடு)
    மாப்பிள்ளை (அத்தகி எமுடு அம்மகி மொகுடு)
    அதிசயபிறவி (யெமுடுகி மொகுடு)
    வீரா (அல்லரி மொகுடு)
    ஆகியவை தெலுங்கில் இருந்தும்

    பொல்லதவன் (பிரமதே கனிகெ)
    புதுகவிதை (நா நினா மரியலரே)
    கை கொடுக்கும் கை (கத சஙகமா)
    மன்னன் (அனூரகா அரலித்)
    பாண்டியன் (பாம்பே தாதா)
    தர்மதுரை (தேவா)
    ஆகியவை கன்னடத்தில் இருந்தும்

    முத்து (தேன்மாவின் கொம்பத்)
    சந்திரமுகி (மணிசித்ர தாழ்)
    குசேலன் (கதபறயும் போல்)
    ஆகிய படங்கள் மலையாளத்தில் இருந்தும் ரீமேக் செய்யப்பட்டவை.

    Reply
  54. வெற்றி சதவிகிதம் என்று பார்த்தால் இவற்றில் பெரும்பாலான படங்கள் பெருவெற்றி பெற்றவை. வெகு சில படங்கள் மட்டுமே தோல்வி அடைந்தவை. ரஜினியின் இமேஜை உச்சிக்கு கொண்டு சென்ற பல படங்கள் ரீமேக் படங்களே.இந்த அபார வெற்றி சதவிகிதத்துக்கு காரணம் என்று பார்த்தால்
    1. பெரும்பாலும் வெற்றி அடைந்த படங்களே ரீமேக் செய்யப்படும். அவற்றிலும் தனக்கு சூட் ஆகும் படங்க்ளை மட்டுமே ரஜினி கவனமாக தேர்ந்தெடுத்தார். பெரும்பாலான அமிதாப்பின் வெற்றி படங்களை ரீமேக் செய்த ரஜினி அக்காலத்தில் வெளியான கபி கபி போன்ற படங்களை தவிர்த்திருப்பார். பைரவி,முள்ளும் மலரும் போன்ற படங்களின் மூலம் கிடைத்த ஆக்‌ஷன் இமேஜை கெடுத்துவிடாத படங்களை மட்டும் தெரிவு செய்தார். இப்போது கூட பிளாக்,சர்க்கார்,சீனிகம்,ஏகலைவா போன்ற அமிதாப்பின் படங்களை கண்டும் காணாதது போல் தவிர்த்துவிட்டார்.

    2. இந்த படங்களை கவனித்தால், ரஜினிக்கு முழுவதும் சூட்டாகாத படமெனில் எஸ்ஸென்ஸை மட்டுமே பயன்படுத்தியிருப்பார்கள். தேன்மாவின் கொம்பத் படத்தையும் முத்து படத்தையும் இதைப்பற்றி அறியாத ஒருவர் பார்த்தால் இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத படங்கள் என்றே சொல்லுவார். நல்லவனுக்கு நல்லவன் படமும் பல மாற்றம் செய்யப்பட்டதே.

    3. பல இந்திப்படங்கள், முண்னனி நாயகர்கள் இணைந்து நடித்ததே. ஆனால் தமிழில் இதை கவனமாக தவிர்த்திருப்பார்கள். இரண்டாவது கதானாயகன் பெரும்பாலும் டம்மிதான்.வேலைக்காரன் – சரத்பாபு, படிக்காதவன்- தம்பி கேரக்டர்,பணக்காரன் – சரண்ராஜ், தீ – தம்பி சுமன் டம்மி. இவையெல்லாம் அங்கே நல்ல ஸ்கோப் உள்ள கேரக்டர்கள். இதையெல்லாம் விட மிஸ்டர் பாரத் படத்தில் எஸ் வி சேகரை படு டம்மியாக்கி இருப்பார்கள். திரிசூல் என அப்பா, இரு மகன்களுக்கும் சம்மான ஸ்கோப் உள்ள படம் அது. படப்பிடிப்பில் சேகர் சத்யராஜிடம் சொன்னாராம் இது தோசூல் என. சில நாள் கழித்து சத்யராஜ் சொன்னாராம், படம் ஏக்சூல் என. ஆனால் படம் பெப் குறைவாக இருந்ததால் சத்யராஜின் சீன்களை அதிகப்படுத்தினார்கள். தமிழ்னாட்டில் இது சகஜம் தான். வணிக மதிப்புள்ள முண்ணனி நாயகர்கள் சேர்ந்து நடிப்பது இங்கு அரிதே. கடைசியாக அப்படி வந்த படமென்றால் பிதாமகனை சொல்லலாம். இவ்வாறு டம்மியாக்கப்படும் நடிகர்களின் நல்ல சீன்கள் ரஜினி கணக்கில் வரவு வைக்கப்பட்டு அவரது இமேஜ் உயர காரணமாய் அமைந்தது.

    Reply
  55. 4. இவ்வாறு சில கேரக்டர்களை குறைத்தாலும், நடிக நடிகையர் தேர்வில் ரஜினி மிக கவனமாக இருப்பார். அப்போது உச்சத்தில் இருக்கும் வில்லன்,நாயகிகளை மட்டுமே தேர்வு செய்தார். ஆன்ஸ்ட் ராஜ் ல் தூள்கிளப்பிய தேவனை பாட்ஷா க்கு தேர்வு செய்ததை உதாரணமாக கொள்ளலாம். முத்து படத்திற்க்கு முதலில் அரவிந்த்சாமியை கேட்டனர். அவர் மறுக்கவே சரத்பாபு.
    5. இப்படங்களின் பின்னால் இருந்த திரைக்கதை,இயக்குனர்கள் நல்ல அனுபவம் பெற்றவர்கள். பஞ்சு அருணாசலம்,எஸ் பி முத்துராமன்,ராஜசேகர்,சுரேஷ்கிருஷ்ணா,குகனாதன்,பாலசந்தரின் உதவியாளர்கள் போன்றோரின் உழைப்பு இவற்றை மெருகேற்றியது

    6. தமிழ் மக்களின் ரசனை மற்ற மாநிலங்களை விட சற்று வேறுபட்டது. இதை ரஜினி நன்கு உணர்ந்திருந்தார். அதனால்தான் இந்தி படங்களின் நீளம்,மலையாள படங்களின் தளர்வேகம்,தெலுங்கின் எதிலும் அதிகப்படி போன்ற கூறுகள் தமிழில் தலைகாட்டாமல் பார்த்து கொண்டார்.

    7. தனக்கு ஏற்ற பில்டப் காட்சிகளை கவனமாக அமைத்திருப்பார். ஹம் மில் அமிதாப் முதன்முறையாக கோபப்படும் காட்சியை விட இங்கே ரஜினிக்கு அமைக்கப்பட்ட காட்சி பலமடங்கு பவர்புல்லானது.

    8. செண்டிமெண்ட் காட்சிகளிலும் கவனமாக இருப்பார். இந்தி படங்களில் இருக்கும் அண்ணியுடன் சகஜமாக பழகும் காட்சிகள்,தெலுங்கில் இருக்கும் மாமியாரை சைட் அடிக்கும் காட்சிகள் இவை இங்கு நடக்காது.

    9. அந்த பாத்திரங்களை உள்வாங்கி தன் ஸ்டைலில் நடிப்பை வழங்குவதும் வெற்றிக்கு முக்கிய காரணம். இரண்டு மூன்று நாயகர்கள் சேர்ந்து கொண்டுவரும் ரிச்னெஸ்ஸை தன் பாடி லாங்குவேஜாலும்,புதுவகை மேனரிஸங்களாலும், ஸ்டைலான மேனரிசத்தாலும் ஒருவராகவே கொண்டுவரும் திறமை ரஜினிக்கே உண்டு.

    http://muralikkannan.blogspot.com/2008/10/blog-post_18.html

    Reply
  56. சாரி நானும் கொஞ்சம் காபி அடித்து விட்டேன்
    முரளிகண்ணன் அவர்களிடம் இருந்து
    மன்னிக்கவும்

    எந்திரன் படம் உன்னிப்பாக பார்த்தால் அது அந்நியன் படம்
    போல தான் இருக்கும்
    வசீகரன் அம்பி

    அடி தடி செய்ய தெரியாத பயந்தாங்கொள்ளி
    கலா பவன் மணி கூட சண்டை போடா முடியாமல் ஓடி போகும்
    பேடி அதனால் அம்பி

    சிட்டி ரோபோட் ரேமோ ரோமியோ

    சிட்டி வேர்சின் இரண்டு
    அந்நியன் தான்

    என்ன வேண்டுமானாலும் செய்யும் சக்தி வல்லமை
    படைத்தது
    shankar is known for remaking his own films

    indias answer to hollywood alien,x men and all
    other man spider man
    bat man super man iron man etc etc is enthiran.

    Reply
  57. ரஜினியை அல்லது அவர் நடித்த படத்தைப் பற்றி தவறாக எழுதுபவர்கள் தேசத்துரோகிகள் அல்லது, அப்படி எழுத பயப்படும் நிலை இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.

    அதையும் மீறி உங்கள் கருத்துக்களை உங்கள் வலைத்தளத்தில் பதிவு செய்தது நன்று.

    Reply
  58. It’s really amazing and informative post. It’s very useful for every people so i am thankful to you for sharing such a helpful knowledge with us.
    web development company

    Reply
  59. நானும் ஒரு ரஜினி ரசிகன் தான் என்னால் உங்களுடைய விமர்சனத்தை புரிந்து கொள்ள முடிகிறது.. ஆனால் ஒன்றை மட்டும் உங்களிடம் கேட்க விரும்புகிறேன். எந்திரன் படத்தில் எந்த ஒரு சின்ன காட்சியும் உங்களின் மனதை கவர வில்லையா அல்லது உங்களுக்கு இந்த படமே விருப்பம் இல்லையா.. விமர்சனம் எழுதுபவர்கள் அந்த படத்தின் கதை பற்றியும் அதன் உள்ளே இருக்கும் திரைக்கதை பற்றியும் எழுதி அந்த படத்தில் இருக்கும் சில குறைகளை பற்றியும் குறிப்பிட்டு எழுதுவதே விமர்சனம் என்பதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள் ஆனால் நீங்களோ அதற்கு நேர் எதிராக விமர்சனம் செய்கிறீர்கள்.. அதென்ன உங்களுக்கு கொரியன் திரைப்படங்கள் மட்டுமே அருமையாக இருக்கிறதோ.. அதில் இருக்கும் நாடகத்தனமான அமைப்பை பற்றி நீங்கள் ஏன் வாய்திறக்க மறுகிரீர்கள் இது தான் உங்களின் நடுநிலைமையான விமர்சனம் என்றால் இந்த தமிழ் திரைப்படம் தான் எண்களின் காவியங்கள் என்றே வைத்துக்கொள்ளுங்கள்.

    ஏதினும் தவறாக எழுதி இருந்தால் மன்னிக்கவும்.
    அன்புடன்
    க.சவரீசன்.

    Reply
    • Rajesh Da Scorp

      சவரீசன்.. எனக்கு எந்திரன் படத்தில் சுவாரஸ்யமாக எதுவுமே இருப்பதாக தோன்றவில்லை என்பதையே என் விமர்சனத்தில் எழுதியிருக்கிறேன். சில ஆங்கிலப்படங்களில் இருந்து சுடப்பட்ட படம் அது. குறிப்பாக Bicentennial Man . மட்டுமல்லாமல் சுவாரஸ்யமே இல்லாத, predictable காட்சிகள். கொரியன் படங்களில் இருக்கும் நாடகத்தனமான அமைப்பு என்பதை அது என்ன என்று சொன்னீர்கள் என்றால் விவாதிக்கலாம்.

      உங்கள் கருத்தில் என்ன தப்பு இருக்கிறது? எதற்காக மன்னிப்பு? ஒவ்வொருவருக்கும் இருக்கும் கருத்தை வெளிப்படையாக சொல்வதை ஆதரிப்பவன் நான் நண்பரே

      Reply

Join the conversation