மன்மதன் அம்பு (2010) – விமர்சனம்

by Karundhel Rajesh December 25, 2010   Tamil cinema

மன்மதன் அம்பு படத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன், இன்னொரு படத்தைப் பற்றிக் கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.

Romance on the High Seas என்பது படத்தின் பெயர். வெளிவந்த ஆண்டு – 1946. படத்தின் கதை? கணவன், மனைவி ஆகிய இருவருமே ஒருவரையொருவர் சந்தேகப்பட்டுக்கொண்டிருக்கும் சூழல். அந்த நேரத்தில், Rio de Janeiro செல்வதற்காக, மனைவி, ஒரு சொகுசுக் கப்பலில் டிக்கட் புக் செய்கிறார். தனது வியாபார நிமித்தமாகத் தனக்கு இருக்கும் கடினமான வேலைகளால், கணவனால் மனைவியுடன் செல்ல முடியவில்லை. ஆனால், மனைவி தனியாகச் சொகுசுக் கப்பலில் செல்வதைத் தாங்க முடியாத கணவன், ஒரு துப்பறியும் நிபுணரிடம், மனைவியைப் பின்தொடர்ந்து சென்று, அவள் தனக்குத் துரோகம் செய்கிறாளா என்று கண்காணிக்கச் சொல்கிறான். அந்தத் துப்பறியும் நிபுணரும், அந்தச் சொகுசுக் கப்பலில் பயணம் மேற்கொள்ள, கடைசி நிமிடத்தில் தனக்குப் பதில் வேறு ஒரு பெண்ணைக் கப்பலில் அனுப்புகிறாள் மனைவி. அந்தப் பெண்ணும் இந்தத் துப்பறியும் நிபுணரும் மெல்லக் காதலில் விழும் நேரம், அந்தப் பெண்ணின் நிஜமான காதலனும் கப்பலுக்குள் வந்துவிட, இதனால் ஏற்படும் குழப்பங்களே கதை.

சரி, இப்போது மன்மதன் அம்புக்கு வருவோம்.

இப்படத்தின் கதையும் அதே தான். ஆனால், இதில், ஜோடிகளுக்குத் திருமணம் ஆகவில்லை. நிச்சயம் மட்டுமே செய்யப்படுகிறது. சொகுசுக் கப்பலில் பயணிக்கும் தனது வருங்கால மனைவியான அம்புஜவல்லி, தனக்குத் துரோகம் செய்கிறாளா என்பதைக் கண்காணிக்கும் பொருட்டு, முன்னாள் மேஜர் ராஜமன்னாரைத் தொழிலதிபர் மதனகோபால் அனுப்புகிறார். அம்புஜவல்லி ஒரு சொகுசுக் கப்பலில் பயணம் மேற்கொள்ள, பின்னாலேயே தொடருகிறார் ராஜமன்னார். இதனால் என்ன குழப்பங்கள் நேர்கின்றன என்பதே மன்மதன் அம்பின் கதை. Romance on the High Seas படத்துக்கும் மன்மதன் அம்புக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் – ஆங்கில மூலத்தில், மனைவி கப்பலில் வருவதில்லை. தனக்குப் பதில் இன்னொரு பெண்ணை செட்டப் செய்து அனுப்புகிறாள். மன்மதன் அம்பிலோ, கதாநாயகியே கப்பலில் பயணிக்கிறாள். இதுதான் வித்தியாசம்.

வழக்கப்படி, கமல் மற்றும் கே. எஸ். ரவிகுமார் கூட்டணியில் வந்துள்ள இப்படமும், ஆங்கிலப் படம் ஒன்றின் காப்பியாகவே இருக்கிறது. இதுவரை இந்தக் கூட்டணி, ஒரிஜினலாக ஒரு படம் கூட எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வை சண்முகியில் (Tootsie & Mrs. Doubtfire) ஆரம்பித்த இந்தக் காப்பி சரித்திரம், தெனாலி (What about Bob?), பஞ்ச தந்திரம் (Very Bad Things), தசாவதாரம் (Outbreak) என்று தொடர்ந்து, இப்போது மன்மதன் அம்பில் வந்து முடிந்திருக்கிறது.

தமிழ்த் திரையுலகில், இப்போது யாரைப் பார்த்தாலும் கண்டபடி காப்பியடிக்கிறார்கள் என்றால், இதற்கெல்லாம் ஆதி காலத்திலேயே பாதை போட்டுக் கொடுத்தவர் கமல் என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். எதைப் பற்றியும் கவலைப்படாமல், இஷ்டத்துக்கு ஹாலிவுட் / உலகப் படங்களைக் கைமா செய்து தமிழில் பல படங்களை எடுத்தவர் கமல். ஆகவே, மன்மதன் அம்பு மட்டும் அந்த விதிக்குத் தப்புமா? இந்தக் காப்பிகள் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தும், நமது மீடியா, ’இந்தியாவிலேயே சிறந்த நடிகர் கமல்’ என்ற பொய்யான வாதத்தை முன்நிறுத்திக்கொண்டிருக்கிறது. வேண்டுமென்றே கமல் அடித்த காப்பிகளைப் பற்றிய செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. உண்மையில், கமல் இந்தியாவின் சிறந்த நடிகர் அல்ல. தமிழிலேயே, பசுபதி போன்ற, கமலையும் விஞ்சும் திறமைபடைத்தவர்கள் பலர் உள்ளனர்.

எனது சந்தேகம் என்னவென்றால், இருபது வருடங்கள் முன், உலகப்படங்கள் பற்றி எதுவுமே தெரியாமல் இருந்த காலகட்டத்தில் கமல் காப்பி அடித்தது பற்றி எவருக்கும் தெரியவில்லை. எனவே அவர் சிறந்த நடிகராக முன்நிறுத்தப்பட்டார். ஆனால், இன்றைய காலத்தில், அவர் சுட்ட படங்களே இணையத்தில் தாராளமாகக் கிடைக்கின்றன. இருந்தாலும் மறுபடியும் அவரது அடுத்த காப்பி வெளியாகியுள்ளது. இப்போதும் வெறித்தனமாக அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆட நம்மால் எப்படி முடிகிறது?

சரி. படம் எப்படி? வழக்கமாகக் கமலின் காமெடிப் படங்கள் எப்படி இருக்குமோ, அதே பாணியில்தான் மன்மதன் அம்பும் இருக்கிறது. பிராமண குலத்தைச் சேர்ந்த முக்கிய கதாபாத்திரங்கள், இவர்களுக்குள் நிகழும் குழப்பங்கள், இறுதியில் சுபம்.

இப்போது, படத்தைச் சற்றே அலசலாம்.

படம் ஆரம்பித்ததும், த்ரிஷாவின் கதாபாத்திரமான அம்புஜவல்லியின் அறிமுகம். நடிகர் சூர்யாவோடு ஒரு படப்பிடிப்பில் பாடல் காட்சி. அதனைப் பார்க்க, அம்புஜத்தைத் திருமணம் செய்துகொள்ள இருக்கும் தொழிலதிபர் மதனகோபாலும் அவரது பெற்றோர்களும் வருகை. அங்கே, ‘கௌரவமான’ குடும்பமாகத் தங்கள் குடும்பம் இருப்பதால், அம்புஜம் ஆடுவதைப் பார்க்க சகிக்காமல் மதனின் தாய் சென்றுவிட, மதனுக்கும் அம்புஜத்தின் மேல் சந்தேகம் துளிர்க்கிறது. இதன்பின் அம்புஜம் & மதனகோபாலுக்குக் கடும் வாக்குவாதம்.

சில வருடங்கள் கழித்து, ஐரோப்பாவில் சுற்றுலா மேற்கொள்கிறாள் அம்புஜம். கூடவே, அவளது விவாகரத்தான தோழி. இவர்களைப் பின்னாலேயே கண்காணிக்கும் ராஜமன்னார். அவ்வப்போது தனது முதலாளியான மதனகோபாலுக்கு ரிப்போர்ட் செய்கிறார். இதிலிருந்து இந்தக் கதாபாத்திரங்களுக்குள் நிகழும் அறிமுகங்கள், அவர்களிடையே நிலவும் குழப்பங்கள் என்று கதை பயணித்து, இறுதியில் அந்தக் குழப்பங்கள் நீங்கியதும் சுபமாக முடிகிறது. படத்தின் முதல் பாதி, மிகவும் மெதுவாகச் செல்கிறது. இரண்டாம் பாதி, சற்றே வேகம் பிடிப்பதால், சுவாரஸ்யம் கொஞ்சம் அதிகரிக்கிறது.

படத்தில் வரும் ராஜமன்னாரின் ஃப்ளேஷ்பேக், எங்களுக்குப் பிடித்தது. குறிப்பாக, ‘நீல வானம்’ பாடல். இப்பாடல், ஒரு புதிய முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த உத்தியின் துணுக்குகளை ஏற்கனவே பல படங்களில் பார்த்திருந்தாலும் (உன்னால் முடியும் தம்பி – இதழில் கதை எழுதும் நேரமிது பாடலில், மரத்தடியில் சைக்கிள் விழுவது ஒரு உதாரணம்), பாடல் முழுவதுமே இப்படிப் படமாக்கப்பட்டிருப்பது நன்றாக இருந்தது. வித்தியாசமான சிந்தனை. பாடலில் வரும் காட்சிகளும், நான்கே நிமிடங்களில் கதாபாத்திரங்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை நமக்குக் காட்டிவிடுகின்றன. இம்முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

அதேபோல், இப்படத்தின் இன்னொரு சிறப்பம்சம், மாதவனின் கதாபாத்திரம். எப்பொழுது பார்த்தாலும் அம்புஜத்தைச் சந்தேகித்துக் கொண்டே இருக்கும் மதனகோபால். முக்கால்வாசி நேரம் சரக்கிலேயே இருந்துகொண்டு, தனது வாழ்வை எண்ணி வருந்தும் இந்தக் கதாபாத்திரத்தை, மாதவன் சிறப்பாகச் செய்திருக்கிறார். படத்தின் சிறந்த நடிப்பு இவருடையதே. குறிப்பாக, க்ளைமேக்ஸுக்குச் சற்று முன்னிருந்து, இறுதிவரை, படுஜாலியான நடிப்பு. வெல்டன் மாதவன்.

ராஜமன்னாராக வரும் கமல், வழக்கமான நடிப்பையே நல்கியிருக்கிறார். இதற்குமுன் கிட்டத்தட்ட நூறு படங்களில் அவர் செய்திருக்கும் அதே மேனரிசங்கள், இதிலும் வருகின்றன. குறிப்பாக, அவரது விரலாட்டல் மற்றும் அண்ணாத்தே ஆடுறாரில் அவர் அறிமுகப்படுத்திய நடனம் (கேமராவின் இடது பக்கத்திலிருந்து ஆடியபடியே வலது பக்கத்துக்குச் செல்வது). இன்னும் எத்தனை படங்களில் இதைப் பார்க்க வேண்டியிருக்குமோ? மற்றபடி, குறைந்த பட்சம் இரண்டு காட்சிகளிலாவது அழுதுகொண்டே வசனம் பேசுதல், பேச வந்த வசனத்தை அப்படியே விழுங்கிவிட்டு, டக்கென்று மாற்றி எதையாவது பேசுதல், வானத்தைப் பார்த்துக் கதறுவது, வாயைக் குவித்தபடியே வைத்துக்கொண்டு, தனது வசனத்துக்காகக் காத்திருத்தல் ஆகிய எதுவுமே இப்படத்தில் மாறவில்லை. அதே விதமான பாவங்கள் (அதேபோல், கமல் வேகமாக நடக்கும்போது ஆளவந்தானைப் போல் துள்ளித்துள்ளி நடப்பதை இனிமேல் நிறுத்தினால் பரவாயில்லை என்று தோன்றுகிறது).

த்ரிஷா? இது அவரது சொந்தக்குரலா? அப்படி இருந்தால், தயவுசெய்து டப்பிங் குரலையே இனி வைத்துவிடுங்கள் சாமிகளா. ப்ளீஸ். அவர் என்றுமே இதுவரை நடித்ததில்லை என்பதால், இதில் அவரைப் பற்றிச் சொல்லக் குறிப்பாக எதுவுமில்லை. அதே போல், சங்கீதா. க்ளைமேக்ஸில் நன்றாக நடித்திருக்கும் இவர், மற்ற காட்சிகளில் ஏதோ வந்து போகிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது (இப்படத்தில் கொஞ்சம் வெயிட் போட்டுவிட்டாற் போல் தோன்றியது).

படத்தின் பல இடங்களில் லைவ் சௌண்ட் உபயோகித்திருப்பதாகத் தோன்றியது. அப்படி இருந்தால், அம்முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

படத்தில் வரும் ஊர்வசி மற்றும் ரமேஷ் அரவிந்தின் கதாபாத்திரங்கள், படத் துவக்கத்தில் சற்றே நன்றாக இருந்தாலும், போகப்போக அலுக்க ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக, எப்போது பார்த்தாலும் ஃபோனில் அழும் ஊர்வசி. கொஞ்சம் ஓவராகவே அவரது கதாபாத்திரம் படத்தில் காட்டப்பட்டு விட்டது.

இன்னொரு விஷயம் – படத்தின் பல உரையாடல் காட்சிகள், நாடகம் பார்க்கும் உணர்வினைத் தந்தன. அதேபோல், திடீரென்று கப்பலுக்குக் கதை தாவுவது, சரியாக அமைக்கப்படவில்லை. ஒருவேளை ஆங்கில மூலத்தில் கப்பல் வருவதால், தமிழிலும் திடும் என்று கப்பலைக் காட்டிவிட்டார்களோ என்று தோன்றியது . அதேபோல், கமலின் வசனங்கள். பெரும்பாலும் இப்படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் பேசும் பல வசனங்கள், கமலே பேசுவது போலவே ஒலித்தன. குரலில் அல்ல. சொல்ல வரும் விஷயத்தில். கமல், தனது சொந்த விறுப்பு வெறுப்புகளை, வசனத்தில் புகுத்தி, அவற்றை அந்தக் கதாபாத்திரங்கள் வாயிலாக வெளிக்கொணர்ந்திருப்பது நன்றாகத் தெரிகிறது.

மொத்தத்தில், மன்மதன் அம்பு – வழக்கமான கமல் காமெடி. இரண்டாம் பாதிக்காகப் பார்க்கலாம்.

பாகம் இரண்டு

இப்போது, சில கருத்துக்களை, இக்கட்டுரையைப் படிக்கும் நண்பர்களுடன் பகிர வேண்டும் என்று தோன்றியதால், அவைகளை இங்கே தந்திருக்கிறேன். உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.

முதலாவது விஷயம் – இப்படத்தின் ஒரு பாடலைப் பற்றியது. ’கண்ணோடு கண்ணைக் கலந்தாள் என்றால்’ என்று தொடங்கும் அப்பாடலைப் பற்றிச் சில எண்ணங்கள் தோன்றின.

இந்தப் பாடலிலேயே, ‘இது, பெண்ணைக் கடவுளுடன் ஒப்பிடத் தோன்றும் தோத்திரப் பாடல்’ என்று கமலின் குரல் ஒலிக்கிறது. சரி.. அப்படி என்ன தோத்திரம் இதில் உள்ளது என்று கவனித்தால், இதோ இந்த வரிகள் தென்படுகின்றன.

’காமக் கழிவுகள் கழுவும் வேளையும் கூட நின்றவன் உதவிட வேண்டும்’
’வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும்’

இதையெல்லாம் கேகும் பெண், முடிவில் தனக்கு வரம் தரக்கூடிய வரலட்சுமி என்ற கடவுளிடம் இப்படிக் கேட்கிறாள்..

’வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது? உறங்கிக்கொண்டே இருக்கும் உந்தன்
அரங்கநாதன் ஆள் எப்படி?
பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும் வாஸ்தவமாக நடப்பது உண்டோ?
அதுவும் உதுவும் இதுவும் செய்யும் இனிய கணவர் யார்க்குமுண்டோ?
உனக்கேனுமது அமையப் பெற்றால் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்
நீ அதுபோல எனக்கும் அமையச் செய்யேன் ஸ்ரீ வரலட்சுமி நமோஸ்துதே’

எல்லாம் சரிதான். தனது அத்தனை படங்களிலும், தனது சொந்த நாத்திக வாதத்தை வலுக்கட்டாயமாகத் திணிப்பது கமலின் வழக்கம். அதில் தவறும் இல்லை. ஒருவர், தான் மேற்கொள்ளும் வழக்கத்தை சமூகத்துக்குச் சொல்வது எவ்விதத்தில் தவறாகும்? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

ஆனால், அப்படி நாத்திகவாதத்தைப் பற்றிய தனது கருத்துகளை வலிந்து படங்களில் திணிக்கும் கமல் தான், தனது படங்களில் வரும் முக்கியக் கதாபாத்திரங்கள், பிராமண குலத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார். அதேபோல், தீவிரமாக முஸ்லிம் எதிர்ப்பையும் தனது படங்களில் பதிவு செய்துகொண்டே இருக்கிறார். கமலின் கடந்த பல படங்களைத் திறந்த மனதுடன் ஆய்வு செய்யும் ஒரு நபர், கட்டாயம் இந்த முடிவுக்குத்தான் வரமுடியும். அந்த அளவுக்கு அவரது படங்களிலேயே ஆதாரங்கள் இருக்கின்றன (உன்னைப்போல் ஒருவன் படத்தில் வரும் வசனம் – ஒரு முஸ்லிமிடம், ‘ஒரு மனைவி செத்துட்டா என்ன? உனக்குத்தான் பாக்கி ரெண்டு பேர் இருக்காங்கல்ல’ என்று கேலியாக மற்றொரு கதாபாத்திரம் கேட்கும் வசனம் ஒன்றே போதும்). தனக்குத் தெரியாமல் இவ்வசனங்கள் படங்களில் இடம்பெற்றுவிட்டன என்று அவர் தப்பிக்க முடியாது.

எனவே, சொல்வது ஒன்று செய்வது மற்றொன்று என்றுஓரு hypocrite ஆக அவர் இருக்கும்போது, இந்தப் பாடல் வரிகளை எழுதி, அதனைப் படத்தில் புகுத்தியிருப்பதுதான் தவறு என்பது என் வாதம்.

இப்போது பாடலைப் படத்தில் இருந்து நீக்கிவிட்டனர். அதைக்குறித்த கமலின் அறிக்கையை இங்கே காணலாம். இந்த அறிக்கையில் அவர் சொல்வதைக் கேளுங்கள்.

’மன்மதன் அம்பு வியாபாரம். அதுவும் மற்றவர் செய்யும் வியாபாரம். இதில் நான் கலை ஊழியன் மட்டுமே. அரசியல்வாதிகளின் இடையூறுகள் எனக்குப் புதிதல்ல. மதமும் அரசியலும் கலந்த இந்தச் சிக்கலில் நல் ரசனை பலியாகாதிருக்கவும் அனைவரும் கண்டு ரசிக்கவும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது. மற்றபடி பகுத்தறியும் பாதையில் என் தேடல் தொடரும். அதில் மக்கள் அன்பிற்கு நிறைய இடமுண்டு…’

இது ஒரு தோத்திரம் என்று சொல்லிவிட்டு, ஒரு குறிப்பிட்ட மதத்தினர் வழிபடும் ஒரு கடவுளை நோக்கி, ‘உன் கணவரும் உனது அந்தரங்க உறுப்பைக் கழுவித்தான் விடுகிறாரா?’ என்று கேட்பது, நல் ரசனை ! எனது கேள்வி என்னவென்றால் (முஸ்லிம், கிருஸ்துவ, பௌத்த, சமண சகோதரர்கள் கோபித்துக்கொள்ளக்கூடாது), இதே கேள்வியை, கதாநாயகியை ஒரு கிறிஸ்துவ அல்லது முஸ்லிம் பெண்ணாக சித்தரித்து, அவர்களது கடவுள்களை நோக்கிக் கமல் கேட்பாரா? நாத்திகவாதம் என்றாலே, எல்லா மதங்களுக்கும் எதிரானதுதானே? அல்லது, ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் எதிர் என்பதுதான் நாத்திகவாதமா? நண்பர்கள் தெளிவு படுத்துங்கள்.

’நான் ஒரு கலை ஊழியன் மட்டுமே’ என்றெல்லாம் அறிக்கை விட்டுக்கொண்டே இந்தக் கில்லாடி வள்ளல் வேலையைக் கமலால் செய்ய முடிகிறது. இவர் மட்டுமல்ல. கமல் ’வழிபடும்’ கடவுளான கருணாநிதியுமே இப்படித்தான் செய்து வருகிறார். தொடர்ந்து இந்து மதத்தினரைப் புண்படுத்துவது – அதே சமயம், குல்லாய் அணிந்துகொண்டு நோம்பிக் கஞ்சி குடிப்பது. இது எந்த வகை நாத்திகவாதம் என்பதை இதுவரை அவர் சொன்னதில்லை. இதையே தான் கமலும் இப்போது செய்துவருகிறார். ஆகவே தான் கமலை Hypocrite என்று சொல்கிறேன்.

சொல்லவந்த இன்னொரு விஷயம், மேலே முதல் பாகத்திலேயே கொடுத்துவிட்டேன். அவர் அடிக்கும் காப்பிகள் பற்றிய விஷயம். இதைப்பற்றிச் சொல்லும்போது, எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. ஆனந்த விகடனில், சமீபத்தில், கமலிடம் எப்படிப்பட்ட கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவரிடம், அவர் அடித்த காப்பிகள் பற்றிய கேள்விகளை எழுப்பி, அதற்குக் கமலின் உண்மையான பதிலைக் கேட்க வேண்டும் என்பது எனது அவா. ஆனால், அக்கேள்விகள் கட்டாயமாக விகடனில் வராது என்பதும் எனக்குத் தெரியும். எனவே, அக்கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு எனது கேள்விகளை அனுப்பாமலேயே இருந்துவிட்டேன்.

அவ்வளவே. அடுத்த கட்டுரையில், ஒரு அருமையான புத்தகத்தைப் பற்றிய எனது கருத்தை எழுதுகிறேன்.

பி.கு 1 – Romance on The high seas பற்றித் தகவல் அளித்த நண்பர் இலுமினாட்டிக்கு நன்றி

பி.கு 2 – இது, நண்பர் access சம்மந்தப்பட்டது. இந்தக் கட்டுரையைப் பார்த்ததுமே, தடதடவென்று வலைமனைகளில் உள்ள பல பதிவுகளை இங்கே காப்பி பேஸ்ட் செய்தால், உடனே அந்தப் பின்னூட்டங்கள் அழிக்கப்படும். உங்கள் கருத்துகளை தெளிவாக, சுருக்கமாகத் தெரியப்படுத்துங்கள் (access பெயரைப் பார்த்தாலே, டைனோசாரைப் பார்த்து சிதறுண்டு ஓடும் சிறுவர்களைப் போல் தெறிக்க வேண்டியிருக்கிறது). ?

  Comments

83 Comments

  1. நண்பரே,

    சொன்னபடியே உங்கள் பதிவை வழங்கி விட்டீர்கள். சூடு சற்று குறைவானாலும் உங்கள் கருத்துக்களை தெளிவாக பதிந்திருக்கிறீர்கள் 🙂 திரிஷாவின் குரல் குறித்த வரிகள் மனதை நோகடித்ததால் பதிவை விட்டு வெளியேறும் மன்மதன் 🙂

    Reply
  2. ஏனோ தெரியலை இந்த படத்த பார்கனுன்னு தோனலை தேள் 🙂

    Reply
  3. இதுக்கு பதில் மலையாளத்துல ஒரு நாள் வரும் அப்படின்னு ஒரு படம் வந்த்ருக்கு.. மோகன்லால், சீனிவாசன் நடிச்சது.. அத பாக்கபோறேன் 🙂

    Reply
  4. //தமிழிலேயே, பசுபதி போன்ற, கமலையும் விஞ்சும் திறமைபடைத்தவர்கள் பலர் உள்ளனர்.//

    சத்தியமான உண்மை. ரசிகனுக்கு இவர் நடிக்கிறார் எனத் தெரியாமல் நடிப்பது தான் சிறந்த நடிப்பு.அது கமலிடம் இப்போது கிடையாது.முன்னே இருந்ததா என்றால்,மிகச் சில படங்களில்…

    நீல வானம் பாடல் நான் கேள்விப்பட்டேன்.ஆனால் இது புதிய யுக்தி என்று தோன்ற வில்லை.
    சித்திரம் பேசுதடி படத்தில் “இடம் பொருள் பார்த்து” பாடல் முழுதுமே இப்படி தான்.பாடலை பார்த்தவர்கள் சொல்லவும்.

    //த்ரிஷா? இது அவரது சொந்தக்குரலா? அப்படி இருந்தால், தயவுசெய்து டப்பிங் குரலையே இனி வைத்துவிடுங்கள் சாமிகளா. ப்ளீஸ்.//

    ஹாஹா…

    நாத்திகம் பற்றி…
    ஹிந்துக்களை மட்டும் பழித்து, சிறுபான்மையினரை அரவணைத்து செல்வதே நாத்திகம் என்பது இந்தியக் கொள்கை!

    Romance on The high seas பற்றி..
    நெட்டில் நான் கண்டதை உங்களுக்கு சொன்னேன்.அவ்வளவே!

    Reply
  5. கிரிராஜன்:சூபர்,தமிழ் நாட்டில் நிறைய அறிவாளிகள் இருக்கிறார்கள்.அவர்களை சினிமாக்காரர்களும்,அரசியல்வாதிகளும் நன்றாக பயன்படுத்திக்கொல்லுகிரார்கள்.இதில் படித்த அறிவாளிகளும் உண்டு.ம்ம்ம்ம்..நாடு முன்னேற மிக சமீபத்தில்(நம் காலத்திற்குள்)வாய்ப்பு இல்லை.பதிவிற்கும் தகவலுக்கும் நன்றிகள் பல.தொடருங்கள் உங்கள் பணியை.

    Reply
  6. படம் ரிலீஸாகி 2 நாளாச்சேன்னு பார்த்தேன் 🙂 குறைந்த பட்சம், சராசரி தழுவலாகவாவது இப்படம் அமைந்துள்ளதே! மன்னிச்சிருலாம் ராஜேஷ்…

    Reply
  7. மறுபடியும் முதலேருந்தா……? :))
    டிக்கெட்டி போட்டேன் அடுத்தவாரம்….”ஒலகநாயகன்” படத்தை நான் மிஸ் பண்றதே இல்ல ஸ்கோர்ப்….:)))))))))))))))

    Reply
  8. //தகவலுக்கு நன்றி //

    மிஸ்டர் ராகவன் அவரு என்ன இன்பார்மரா….தகவலுக்கு நன்றின்று சொல்றதுக்கு…..தேளு யாரு யாரு ஒரு டிரான்ஸ்பார்மர்….:))))

    Reply
  9. //ஏனோ தெரியலை இந்த படத்த பார்கனுன்னு தோனலை தேள் //

    த்தோ டகால்டி வேலைத்தானே வேண்டாங்கறது…ராம்சாமி…நேத்து சாட் பண்ணும்போது டிக்கெட் போட்டாச்சுன்னு சொன்னது என்ன ஷகீலா படத்துக்கா…..:))

    Reply
  10. //இதுக்கு பதில் மலையாளத்துல ஒரு நாள் வரும் அப்படின்னு ஒரு படம் வந்த்ருக்கு.. மோகன்லால், சீனிவாசன் நடிச்சது.. அத பாக்கபோறேன் //

    மாம்ஸ் அது ப்ளாப்பு படமாச்சே…..அதுக்கு நம்ம “ஒலகநாயகன்” படத்தை பார்க்கவேண்டியதான….

    Reply
  11. அன்புள்ள ராஜேஷ்..
    என்ன தெளிவான தைரியமான வார்த்தைகள். கமல் பற்றிய ‘மாயை’ யை கடுமையாக உடைத்துப்போடும் உங்களை மனமார பாராட்டுகிறேன். கமல் எந்த காலத்திலும் ‘சொந்த படைப்பொன்றை’ தரப்போவதில்லை. கமல் மட்டுமல்ல. இந்திய சினிமாவே காப்பி மாயம் என்பதால் இவர் இங்கு ‘ஜீனியஸ்’. சமீபத்தில் வெளியான அக்ஷன் ரீப்ளே என்ற ஹிந்தி படம் அப்படியே ‘Back to the future’ இன் காப்பி. நம்மையெல்லாம் என்ன என்று தான் நினைக்கிறார்களோ தெரியவில்லை.
    மற்றபடி கமல் இப்படி தான் எப்பொழுதும் ஓவர் ஆக்டிங், குறிப்பாக வாயை குவித்து வைப்பதன் மூலம் ‘இளைஞனாக’ காட்சி தர முயல்வது என்று படுத்துகிறார்.
    அதே போல் திரிஷா ..அவரை ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகள் புகழ்ந்து எழுதும்போது எரிச்சலாக இருக்கும். அவர் எப்படி வடிவேலுவே(!) ஆசைப்படும் அளவுக்கு பேரழகியானார் என்பதும் ஒரு பெரும் மர்மம் தான். 🙂
    கமலின் புரட்சி பாடலை ‘படித்தேன்’..(கேட்கும் அளவுக்கு பொறுமை இல்லை.) வித்தியாசமாக எதையாவது செய்து தன்னை முன்னிறுத்தும் பார்த்திபன் போல் ஆகி விட்டார்.அவ்வளவு தான். இதே பாடலை வேறொரு கவிஞரோ அல்லது பெரும் நடிகரோ எழுதியிருந்தால் என்னென்ன விளைவுகள் ஆகியிருக்கும். கமலுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை. அவரது பெண்ணிய சிந்தனையோ, பெரியார் சிந்தனையோ எல்லாமே வெளிவேஷம் தான் என்பதை நம்மவர்கள் எப்போது புரிந்துகொள்ளப்போகிறார்கள்?

    Reply
  12. In Romance on the High Seas, the wife suspects her husband as well and tries to spy on his activities by staying behind, instead of going on the ship. There are many other differences as well. Why can’t you dismiss Kamal’s films based on its own merits, instead of simply dismissing them as copies when you haven’t even seen the original yourself. May be this is your way of saying “Naanum Puthisaali!”

    Reply
  13. ///பிராமண குலத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார் ///

    நிச்சயமான உண்மை

    Reply
  14. ஏன் இப்படி கூச்சப்படாமல் காப்பி அடிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. நியூட்டனின் முன்றாம் விதி என்ற ஒரு படத்தை டிவியில் பார்த்தேன். Shoot ’em Up ன் இறுதிக் காட்சியை அப்படியே பிரதி அடித்திருக்கிறார்கள். 2011 ல் இருந்து தமிழ்ப்படங்களைப் பார்ப்பதை கைவிட திட்டம்.

    Reply
  15. கமல் சந்தேகமில்லாமல் ஒரு நல்ல நடிகர். (But, i am unable understand the why he is called “உலக நாயகன்”)

    ஆனால் இன்று அவரைப் பற்றி அவராலும், பத்திரிகைகளாலும் உருவாகப் படும் “அறிவு ஜீவி” “பகுத்தறிவு”
    பிம்பம் மிகவும் தவறானதாக இருக்கிறது.

    உங்கள் தளம் நல்ல பல கேள்விகளை முன்வைக்கிறது. வாழ்த்துக்கள்.

    Reply
  16. மிஸ்டர் கருந்தேள்….
    /////அதேபோல், தீவிரமாக முஸ்லிம் எதிர்ப்பையும் தனது படங்களில் பதிவு செய்துகொண்டே இருக்கிறார். கமலின் கடந்த பல படங்களைத் திறந்த மனதுடன் ஆய்வு செய்யும் ஒரு நபர், கட்டாயம் இந்த முடிவுக்குத்தான் வரமுடியும். அந்த அளவுக்கு அவரது படங்களிலேயே ஆதாரங்கள் இருக்கின்றன (உன்னைப்போல் ஒருவன் படத்தில் வரும் வசனம் – ஒரு முஸ்லிமிடம், ‘ஒரு மனைவி செத்துட்டா என்ன? உனக்குத்தான் பாக்கி ரெண்டு பேர் இருக்காங்கல்ல’ என்று கேலியாக மற்றொரு கதாபாத்திரம் கேட்கும் வசனம் ஒன்றே போதும்)./////—இதை சொன்ன நீங்கள்தான்…

    //////இதே கேள்வியை, கதாநாயகியை ஒரு கிறிஸ்துவ அல்லது முஸ்லிம் பெண்ணாக சித்தரித்து, அவர்களது கடவுள்களை நோக்கிக் கமல் கேட்பாரா? /////—என்று கேட்டு அவர்களையும் கேளுங்களேன் கமல் என்று சொல்லாமல் சொல்லி உங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகிறீர்கள்.

    ஆனால், கேடுகெட்ட சினிமாக்காரன் என்ற வகையில் கமல் என்ற ஒரு உயிரினம்… தமிழ் சமுதாயத்துக்கு பயனற்ற நசுக்கி புதைக்கப்படவேண்டிய ஒரு மூட்டைப்பூச்சி என்றாலும்… அது உங்கள் அளவுக்கு மற்ற மதங்கள் பற்றி கிஞ்சித்தும் அறிவு அற்ற முட்டாள் ஜந்து அல்ல.

    இவ்வளவு நாள் வீணாய்ப்போனாலும்… இனியாவது பிறமதங்கள் பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ளுங்கள்:

    1–இஸ்லாமிய சித்தாந்தப்படி கடவுளுக்கு பாலினம் இல்லை. ஆண்பால், பெண்பால், போல “கடவுற்பால்” என்ற தனி கேட்டகிரியை கடவுளுக்கு இஸ்லாம் அளித்துள்ளது. கடவுள் பிறக்கவும் இல்லை… இறக்கவும் போவதில்லை. உணவு, தூக்கம், தாம்பத்திய சிற்றின்பம் போன்ற எத்தேவையுமற்ற கடவுள்… இஸ்லாமிய கடவுள்.

    2–கிருஸ்துவ சித்தாந்தப்படி இயேசுநாதர் கிருஸ்துவர்களுக்கு ஒரு கடவுள் என்றாலும் அவர் திருமணமாகாதவர். இன்னொரு கடவுளான அன்னை மேரிக்கு கணவன் கிடையாது. இவர்கள் இருவரும் அழைத்து வண்கிய ரியல் கடவுளான பரலோகத்தில் உள்ள பரமபிதாவிற்கு கிட்டத்தட்ட இஸ்லாமிய கடவுள் கேரக்டர்தான்…(மகன் உண்டு என்பதை தவிர)

    இப்போது… சொல்லுங்கள்… கமல் எப்படி மேற்படி பாட்டை மற்ற மதக்கடவுள்களுக்கு எழுதி உங்கள் ஆசையை பூர்த்தி செய்ய முடியும்?

    Reply
  17. இதுக்குதான் தல வேணும்கிறது படத்துக்கு போறதுக்கு முன்னாடி இது எந்த படத்த காப்பி அடிச்சதுன்னு விமர்சனம் பாத்துட்டு போகலாம் தமிழ் சினிமா கதைகளின் மூலத்தை துப்பறியும் வாழும் ஷெர்லக் அண்ணன் கருந்தேள் வாழ்க

    Reply
  18. எந்தப் படத்தில் இருந்து சுட்டார்கள் என்ற செய்தி சுவாரஸ்யமாக உள்ளது. கலக்கல்.

    பாகம் 1ஐ ரசித்தேன். பாகம் 2ல் உள்ள சில வாதங்களில் உடன்பாடு இல்லை.

    Reply
  19. Hi Thel,
    Nice to see a review on MMA, good job….keep rocking …

    Reply
  20. been following ur reviews for quite sometime.. all is well except your prejudice on kamalhassan… i m yet to comprehend what s your point… to make good reviews of excellent movies or to expose some skillful adaptations? as far as i am concerned, the very idea of reviewing world movies is not original.. its only your view on that particular creation…. it holds good for kamal too or anybody for that matter.. and most of his adaptations are better than the inspirations( i ve watched them all).

    Reply
  21. அடேங்கப்பா 1946ல் வெளிவந்த படமா… அந்தப் படத்தில் சொகுசுக் கப்பலை எப்படி காட்டியிருந்தார்கள்… அப்போ தொழில்நுட்பம் அவ்வளவு வளர்ந்திருந்ததா… ஆச்சர்யமாக இருக்கிறது…

    // அம்புஜவல்லி //
    அம்புஜாஸ்ரீ

    // தசாவதாரம் (Outbreak) என்று தொடர்ந்து //
    இப்பொழுதுதான் தெரிந்துக்கொண்டேன்… கதை மட்டும்தான் காப்பியா… பத்து பாத்திரங்களும் காப்பியா…

    இந்த இரண்டாவது பாக விளையாட்டுக்கு நான் வரலை…

    Reply
  22. அன்பின் கருந்தேள்,
    நல்லதொரு விமர்சனம்.படங்களைப் போலவே சில பெரிய எழுத்தாளர்கல் எழுதும் நாவல்கள்,சிறுகதைகள் அப்புறம் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் இதெல்லாமும் எங்கேந்து யாரு யாரு சுட்டாங்கன்னு சொல்லிட்டீங்கன்னா ஒபாமாகிட்டயும் மன்மோகன்கிட்டயும் பேசி உங்களுக்கு ஒரு விருது வாங்கித் தரலாம்னு இருக்கேன் :))))))))))

    ஜோக்ஸ் அபார்ட்- நல்ல அலசல் வழமைபோல.என்ன நானெல்லாம் ஒரு படம் காப்பின்னு தெரிஞ்சா பாக்கமாட்டேன், இப்படி அவதி அவதியா முதல் வாரத்துலயே பாத்திட்டு அது நொள்ளை இது நொட்டைனு புலம்ப வேணாமுல்ல.என்ன நான் சொல்றது? பகிர்வுக்கு நன்னி.

    Reply
  23. மைக்கேல் கர்டிஷ்க்கு கே.எஸ்.ரவிக்குமாரோட ட்ரிப்யூட்ணே இந்த படம்.அது புரியாம :))))))))))

    Reply
  24. //நல்லதொரு விமர்சனம்.படங்களைப் போலவே சில பெரிய எழுத்தாளர்கல் எழுதும் நாவல்கள்,சிறுகதைகள் //

    ஹஹஹஹஹ…. மரா…. செம உள்குத்துய்யா……:)))

    Reply
  25. தேள்,

    த்ரிஷாவின் ‘நெக்லைன்’ அத‌ல‌பாத‌ள‌த்துக்கு போன‌துக்கு ம‌த்தியில் இம்மாதிரியான‌ விஷ‌ய‌ங்க‌ள் தெரிய‌வில்லை. காப்பி அடிக்கிற‌துன்னு முடிவாகிருச்சு அடிச்சிட்டுத்தான் போக‌ட்டுமே..

    Reply
  26. பின்னி பெடல் எடுத்துட்டீங்க…… நல்ல விரிவான அலசல்……

    //அஹமது இர்ஷாத் said: //

    //த்ரிஷாவின் ‘நெக்லைன்’ அத‌ல‌பாத‌ள‌த்துக்கு போன‌துக்கு ம‌த்தியில் இம்மாதிரியான‌ விஷ‌ய‌ங்க‌ள் தெரிய‌வில்லை. //

    என்னது அதல பாளமா அப்ப சீக்கிரம் பாத்துடுறேன்… இந்த கருந்தேள் கிடக்குறாரு… அவரு எப்பொழுதும் இப்படி தான்….

    Reply
  27. வர வர கமலும் ,’சாரு’ மாதிரி காமெடி பீஸ் ஆகிருவார் போல…

    Reply
  28. டாக்டர் கருந்தேள் சார் கவனிச்சீங்களா இந்த படத்துல குழந்தை ‘குவா குவா’ னு அழுகுறமாதிரி ஒரு காட்சி 1966 ல வெளியான ‘டோமர்’ படத்துல இருந்து சுட்டது…அதையும் சேத்துக்கோங்க…
    ” It is impossible to convince a man whose mind is already made up “

    Reply
  29. I think u don’nt have any work other than criticising kamal

    Reply
  30. நாசர் கூட கமலை பல படங்களில் அநாயசியமாக தூக்கி சாப்பிட்டிருப்பார். அவ்வை சண்முகி – எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல – குருதிப்புனல் – பல படங்கள்…

    Reply
  31. //படத்தில் வரும் ராஜமன்னாரின் ஃப்ளேஷ்பேக், எங்களுக்குப் பிடித்தது. குறிப்பாக, ‘நீல வானம்’ பாடல். இப்பாடல், ஒரு புதிய முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த உத்தியின் துணுக்குகளை ஏற்கனவே பல படங்களில் பார்த்திருந்தாலும் (உன்னால் முடியும் தம்பி – இதழில் கதை எழுதும் நேரமிது பாடலில், மரத்தடியில் சைக்கிள் விழுவது ஒரு உதாரணம்), பாடல் முழுவதுமே இப்படிப் படமாக்கப்பட்டிருப்பது நன்றாக இருந்தது. வித்தியாசமான சிந்தனை. பாடலில் வரும் காட்சிகளும், நான்கே நிமிடங்களில் கதாபாத்திரங்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை நமக்குக் காட்டிவிடுகின்றன. இம்முயற்சிக்குப் பாராட்டுக்கள்//

    இதுவும் காப்பி தான் தலைவா….

    http://www.youtube.com/watch?v=Fwt9uhlMCZ0&feature=related

    Reply
  32. அந்த பாடல் நான் இன்னும் பார்க்கவில்லை…. Reverse Chronology சொன்னவுடன் எனக்கு வேற ஒரு பாடலே ஞாபகம் வந்தது…பேர் சரியா strike ஆகல…

    நண்பர் புகழேந்திக்கு நன்றி – ஞாபகமுட்டியதற்கு

    Reply
  33. நல்ல பதிவு. வழக்கமான நேர்த்தியுடன் வந்திருக்கிறது.

    சமீப காலங்களில் எங்குமே மைனஸ் ஓட்டுக்களைப் பார்க்க முடியவில்லை. இங்கே மைனஸைப் பார்த்ததுமே நமது ராஜேஷ் பெரிய ஆள் தான் என நினைத்துக்கொண்டேன்.

    அசராம அடிச்சி ஆடுங்க நண்பா.

    Reply
  34. antha karuntheL punniyavanoda velaye, kamal oru plot paathu inspire aanaa, udane, antha motha padamum copy nnu propaganda panrathu thaan! avar solrathai bible maathri euthuttu kamali thittavum oru ‘koottam’ readyyaa irukku!

    whatever it is, daanks to them for the publikutty

    கருந்தேள் என்ற வலைப்பக்கத்திற்கு சென்றேன். நீங்க சொல்வது போலவே விமர்சனம் இந்து, முஸ்லீம், கிறித்துவம் என கூரைய கிழிச்சிகிட்டு ஜெட் வேகத்துல போனதப் பார்த்து பயந்து கீழே குதிச்சிட்டேன். கமலை விமர்சனம் செய்யவேண்டியதுதான். ஆனால் அப்படி தொடர்ந்து செய்கிறேன் என தங்களுக்குள் இருக்கும் Elastic தன்மையை இழந்து நிற்கிறார்கள். அதாவது அவர்கள் திரும்பி வருவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லைவேயில்லை.

    Reply
  35. honest review ripped apart manmadan ambu

    http://www.athishaonline.com/2010/12/blog-post_24.html

    one advice for them dont watch films watch life

    or mind your own business
    why the hell u defame others
    let courts or lawsuits decide on copyrights

    let people’s verdict in box office be the final
    answer.

    waste of time to comment on blogs. avanga ellorukkum
    பதிவர்களின் முகத்திரைகளை, நேர்மைகளை வெளியோர்க்கு எடுத்துக்காட்டும் உரைகல்லாக இருக்கிறது மன்மதன் அம்பு. செம்மறி ஆட்டுக்கூட்டம் போல, வரிசையா குதிக்கிறார்கள்

    kamalai eppadiyaachim defame pannanum. athaan kurikkoL. athuku moola kaaraNam, 5 minits fame la aarambichi hindutuva, competition varaikkum poguthu!

    but as u said, the whole lot is well exposed now, thanks to MMA

    Some of these bloggers seriously demean the world of blogging with their ‘reviews’

    Seriously this time , these bloggers going overboard with their review

    TAKE IT OR LEAVE IT OR DELETE IT

    Reply
  36. For ppl saying that neelavanam concept is ‘lifted’ from coldplay, i wud like to say

    rewind teknik is as old as video camera! 1990s song “Enigma” from album “Return to Innocence” here – http://video.google.com/videoplay?docid=-6715751701457579931#
    http://en.wikipedia.org/wiki/Return_to_Innocence

    The music video for the song was filmed in Andalucia, Spain, where Cretu also lives. Julien Temple directed. The video shows a man’s life going in reverse, starting with him dying (the scene was probably influenced by the 1930 Alexander Dovzhenko film Earth[4]) and ending with his birth, where he returns back to innocence (see here).

    Reply
  37. sorry for long post!

    இந்த ரெண்டு நாட்களில் பதிவுலகில் வந்த விமர்சனகள் ஒரு விஷயத்தை சொல்லாமல் ( ஆனால் அடித்துச்)சொல்கின்றன. எந்த ஒரு விமர்சனமும் ஒத்துப்போகவில்லை.

    இதை நியாயப்படுத்த இரண்டு விஷயங்கள் உள்ளன: –

    ஒன்று, கமல் படங்களில் வேறெங்கும் காணாத ஆழமும், விஷயமும் ஒரே விஷயத்தை பலவிதங்களில் அணுகுவதும், ஒரே சமயத்தில் பல விஷயங்கள் சொல்வதுமாக சற்று சிக்கலாகவே இருக்கும். நல்லதோ கேட்டதோ, சரியோ தவறோ, பிடிக்குதோ பிடிக்கலையோ, ஜெயிக்குதோ தோற்குதோ, எப்படி இருந்தாலும், சிந்திக்க மலையளவு தீனி இருக்கும்.

    இரண்டு , தனிநபர் விருப்புவெறுப்புகள் மலையளவு வேறுபடும்

    எனவே கருத்துக்கள் வேறுபடுவது சகஜம் தான். பிரச்னை வருவது எப்போதென்றால், ஒரே விஷயத்தை யாராவது ரெண்டு வெவ்வேறு பதிவர்கள், இருவரும் சொல்லி, ஒருவர் அதை மறுக்கின்றார் இன்னொருவர் அதை ஆதரிக்கின்றார். உதாரணம் கமல் தன் படங்களில் தானே ஆதிக்கம் செலுத்துவார் என்ற (ஓரளவு தவறான) கருத்து. இந்த படத்தில் தலைப்பே மூன்று பேருக்கு கமல் பங்கு போட்டு விட்டார். படத்திலும் மன் மட்டுமில்லாமல் மதன், அம்புவிற்கும் நிறைய ஸ்கோப் உள்ளது. ஒரு பக்கம் சிலர் இதை வரவேற்கின்றனர். தட்ஸ்தமிழ் விமர்சனம் “வழக்கமாக கமல் படத்தின் கதை, அவர் மீதே பயணிக்கும். ஆனால் இந்தப் படத்தில் கமல், த்ரிஷா, மாதவன் என அலைபாய்கிறது.” என்கிறது. இங்கே நாம் தட்ஸ்தமிழின் தரம், அதற்குள் போக வேண்டாம்.

    விஷயம் ஒன்று தான், மூன்று பேரின் மீதே சமமாக கதை செல்கிறது. இது சிலருக்கு பிடிக்கவில்லை, சிலருக்கு இதுவே பிரச்னை. இது ஒரு உதாரணம் தான். இதுபோல், கே.எஸ். ரவிக்குமார் சிலருக்கு இந்த படத்திலும் டைம்மியாகவும், சிலர், டைரெக்டர் டச் அங்கங்கே தெரிகிறது என்றும்,

    இதே போல் கமலின் அறிமுகம், பின் வரும் சண்டை, இதையும் விதவிதமாக ரக ரகமாக விமர்சிக்கிறார்கள். இப்படி பல “ஒரே விஷயங்களுக்”கும் வெவ்வேறு விதமான விமர்சனங்கள்.

    ஒரு எந்திரன், அல்லது நந்தலாலா போன்ற பட விமர்சனகளுக்கு இது ஏற்படவில்லை. பல விமர்சனகள், பெருவாரியான அளவில், பல விஷயங்கள் ஒத்துப்போனது. ஆனால் தசாவதாரம் முதல், கமல் படங்களுக்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக பாராட்டுகிறார்கள், அல்லது நாறடிக்கிறார்கள். யோசித்து பார்த்தால் ஒன்று புரிகிறது. மற்ற படங்களை பாராட்டும் கூட்டம் ஒரே விதமாகவும், திட்டுகிற கூட்டமும் ஒரே விஷயத்தை திட்டுவதும் என்று உள்ளனர். ஆனால் கமல் படம் என்று வந்தாலே இவர்கள் பல விதமாக பிரிந்து விடுநின்றனர், இப்படியாக :-

    இந்து மதப்பிரியர்
    ரஜினி ரசிகர்
    விஜய் ரசிகர்
    இஸ்லாம்
    இறைமறுப்பு/நாத்திகம்
    பகுத்தறிவுவாதி
    அறிவுஜீவி/கலாரசிகர்
    விசிலடிச்சான் குஞ்சு/வசூல் பிரியர்
    மேல்சொன்ன ரெண்டின் கலவை
    போலி அறிவுஜீவி(சாரு)
    வட இந்தியர்
    காப்பி/இன்ஸ்பிரேஷன் ஆதரவு/எதிர்ப்பு
    வேற்று மாநில தென்னிந்தியர்
    வெளிநாடுவாழ் தமிழர்/இந்தியர்
    பதிவர்/பத்திரிக்கையாளர்

    மேல் சொன்னதன் கலவைகள்.

    இப்படி பலவாறாக பிரிந்து விடுகின்றனர். கருத்துக்களும் பலவாறாக பிரிந்து விடுகின்றன. எவை சரி தவறு என்பதன் அளவுகோல் பலவிதங்களில் மாறுபடுகிறது.

    ஆனால் இதே கூட்டம், மற்ற படங்களுக்கு இவ்வளவு வேற்றுமை காட்டுவதே கிடையாது. கமலின் ஹிந்து துவேஷத்தை ஆதரிக்கும் ஹிந்துக்கள் உள்ளனர், எதிர்க்கும் ஹிந்துக்களும் உள்ளனர். கமலின் இஸ்லாம் துவேஷத்தை எதிர்க்கும் ஹிந்துக்கள் கூட உள்ளனர், ஹிந்து துவேஷத்தை எதிர்க்கும் இஸ்லாமியர் இருக்கிறாரா தெரியாது! ( இங்கு நானும் ஒரு கருத்தை பொடி வைக்கிறேன்!)

    உதாரணம், இட்லிவடையில் எழுதும் ஹரன்பிரசன்னா ஒரு ஹிந்து

    Reply
  38. இப்போதான் ஒரு நெருங்கிய நண்பர் ஒருவரிடம் ம.அம்பு சார்பா பேசிட்டு வந்தேன். படத்தை பார்ப்பதற்கு முன்னாடி ஆயிரத்தெட்டு கேள்விகள் அவருக்கு. படம் நல்லாயில்லன்னு சொல்றாங்க, க்ளைமாக்ஸ் சொதப்பல்னு சொல்றாங்க, ஒண்ணுமே புரியலன்னு சொல்றாங்க..இப்படி ஆயிரத்தெட்டு அபிப்ராயங்களை அவரின் மற்ற நண்பர்கள் சொல்லிருக்காங்க. ஒரளவுக்கு மேல எனக்கு பொறுமையில்ல. அவரிடமே கேட்டுவிட்டேன். நீ இதுவரை எந்தெந்த தமிழ் படங்களுக்கு குடும்பத்தோடு தியேட்டருக்கு போயிருக்க என. சில படங்களை சொன்னதும், ரத்த ஓட்டம் பீறிகிட்டு ஓடியது. டேய்! இந்த குப்பை படங்களையெல்லாம் நீ யாரிடமும் படம் எப்படி இருக்குன்னு கேட்காமலேயே போயிருப்பியே! ஆனா இந்தப் படத்திற்கு முனைவர் பட்டம் வாங்கும் அளவிற்கு ஆராய்ச்சி வேற! இருபது நிமிட தொலைபேசி உரையாடலுக்கு பிறகு, சரி நான் போறேன்! எனச் சொல்கிறார். பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லைன்னு சொல்வாங்க. ஆனா இப்படி ஏடாகூடமா ஏதாவது வில்லங்கம் வந்தால் விளம்பரம் ரொம்ப அவசியமா படுது. இதுல என்னக் கொடுமை என்னவென்றால், “எங்களுக்கு இப்படி சொன்னதே ஒரு தீவிர கமல் ரசிகர்தான்” என்றெல்லாம் சொல்கிறார்கள்.

    Reply
  39. Just wondering if “ramvenkatesan” is another Access!! 🙂

    Reply
  40. @ இராமசாமி கண்ணன் – ஆஹா… இப்ப நீங்க படத்தைப் பார்க்கப்போவதில்லைன்னு சொன்னதுமே, இந்த பதிவர்கள் எழுதுற விமர்சனத்துனால தமிழ்நாட்டுல படமே ஓடுறதில்லைன்னு ஜல்லியடிச்சிகினு இருக்குற ஒரு காமெடி கும்பல் வீறுகொண்டு எழுந்துறப்போவுது 🙂 .. படத்தைப் பார்த்துருங்க தலைவா 🙂

    @ காதலரே – ஹாஹ்ஹா 🙂 . . த்ரிஷா குரலை மட்டும் படத்தில் கேளுங்கள்.. அப்புறம் தெரியும்.. இருந்தாலும் சொந்தக் குரலில் பேச வந்த அவருக்குப் பாராட்டைத்தான்
    தெரிவிக்க வேண்டும் 🙂 .. பேசாமல் ரேப் டிராகன் இரண்டில், மன்மதன் என்றே ஒரு கதாபாத்திரம் அமைத்து விடலாமே 🙂

    @ இலுமி – யெஸ். பழைய கமல் ஓகே.. எனக்கும் பழைய கமலைப் பிடிக்கும். அதாவது, மசாலாப்படங்களில் நடித்த கமலை. அவர் அப்படியே இருந்துவிட்டிருக்கலாம் ..

    ஹூம்ம். உங்கள் கருத்துகளை முழுமையாக ஆமோதிக்கிறேன்.. நன்றி

    @ thamizhan – உங்கள் கருத்துக்கு நன்றி.. தமிழ்நாட்டின் தலைவிதி இப்போதைக்கு மாறாது நண்பரே 🙁

    @ துரோணா – 🙂 மன்னிச்சிரலாம்னு சொல்றீங்க 🙂 .. சரி விடுங்க.. படம் பார்த்துட்டு சொல்லுங்க

    @ நாஞ்சில் பிரதாப் – படம் பார்க்கவே கூடாதுன்னு நான் சொல்லவே இல்லையே 🙂 .. கட்டாயம் பாருங்க.. அப்புறம், உங்க துப்பறியும் கேள்விகளுக்கு நம்ம இராகவன் ஐபிஎஸ்
    பதிலே சொல்லலியே.. 🙂 அது இன்னாது… ட்ரான்ஸ்ஃபார்மரா 🙂 ஹீஹ்ஹீ

    @ சந்திரமோகன் – மிக்க நன்றி.. உங்கள் இந்த வரிகள் தான் எத்தனை உண்மை – //கமல் மட்டுமல்ல. இந்திய சினிமாவே காப்பி மாயம் என்பதால் இவர் இங்கு ‘ஜீனியஸ்’//
    இதுதான் தமிழ்சினிமாவின் இன்றைய நிலை..
    உங்களது கருத்துக்கு மனமார்ந்த நன்றி நண்பரே ..

    @ புகழேந்தி – கோல்ட்ப்ளே பாடல் லின்க்குக்கு மிக்க நன்றி..
    பாடலைப் பார்த்தேன்.. எனக்கு மிகவும் பிடித்தது ..

    @ பன்னிக்குட்டி ராம்சாமி – சாயம் வெளுத்தது உண்மைதான். ஆனா, கீழயே பாருங்க.. ramvenkatesan அப்புடீன்னு ஒருத்தர், நான் எவ்வளவு சொல்லியும் கேட்காம, மய்யம்னு
    ஒரு சைட்ல அவர் எடுத்த வாந்தியை கட் காப்பி பேஸ்ட் பண்ணி இங்கயும் உளறிருக்காரு.. இந்த மாதிரி வெறியர் கும்பல் அடங்க மாட்டேன்னுதே 🙂

    @ Suresh – நீங்க சொல்லிருக்குற மேட்டரை, பதிவுலயே நான் போட்டாச்சு.. கமல் காப்பியடிச்சது உண்மை. அது ஏன் உங்களால ஏத்துக்க முடியலை? இதுகு பதில் சொல்லுங்க..

    @ லக்கி லிமட் – மிக்க நன்றி தல

    @ Ben – வாங்க பாஸ் 🙂 .. //2011 ல் இருந்து தமிழ்ப்படங்களைப் பார்ப்பதை கைவிட திட்டம்// – மே ஐ கம் இன் ப்ளீஸ் 🙂 .. இந்தக் காப்பிகளையெல்லாம் பார்த்து
    ரத்தக்கொதிப்பு வந்ததுதான் மிச்சம்

    @ வேழமுகன் – உலக நாயகன் பட்டம் ஏன்
    அவருக்குக் குடுத்தாங்கன்னா, அவரு உலகப் படங்கள்ல இருந்து சுடுறாரில்ல.. அதான் 🙂 .. அது ஆக்சுவலா ஒரு உள்குத்து பாஸ் 🙂 .. //இன்று அவரைப் பற்றி அவராலும், பத்திரிகைகளாலும் உருவாகப் படும் “அறிவு ஜீவி” “பகுத்தறிவு” பிம்பம் மிகவும் தவறானதாக இருக்கிறது// – மிக்க உண்மை. மிக்க நன்றி

    Reply
  41. @ The UFO – எனது உள்ளக்கிடக்கை, கமல் முஸ்லிம்களை நோக்கி இதே கேள்விகளைக் கேட்கவேண்டும் என்பதில்லை. அவரது முஸ்லிம் எதிர்ப்பையும் இந்துத்துவ ஆதரவையும்
    பற்றிச் சொல்வதே நோக்கம். மற்றபடி, இந்தக் கேள்விகளை அவர் எவரையும் நோக்கிக் கேட்கவேண்டாம் என்பதே என் உள்ளக்கிடக்கை. இது தெளிவாகப் புரியும் வகையில் தான்
    எழுதியிருக்கிறேன். உங்கள் பிறமதங்களைப் பற்றிய விளக்கங்களை, அந்த மதத்தினர் தான் சரியா தவறா என்று சொல்லவேண்டும். நன்றி

    @ செந்திலான் – நல்லாப் புடிச்சி ஓட்டிபுட்டீங்க 🙂 ஹீஹ்ஹீ

    @ ச. செந்தில்வேலன் – உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே. ஒரு விஷயம் என்றால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கத்தான் செய்யும். அதில் தவறே
    இல்லை.. நன்றி

    @ Shivam – உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி நண்பரே.. கண்டிப்பாக 🙂

    @ prakash – எனக்குக் கமல் மேல் எந்த prejudice உம் இல்லவே இல்லை. கமலைப் பற்றி அவதூறு கிளப்ப நான் யார்? ஆனால், அவர் செய்யும் கிருத்ரிமங்களைப் பற்றியே
    எனது கருத்துக்கள் இருக்கின்றன. அவர் செய்யும் இந்த வேலைகளை இல்லையென்று மறுக்கவே இயலாது. அதே போல், உங்களது இந்த வரிகளை நான் அடியோடு மறுக்கிறேன் –
    //most of his adaptations are better than the inspirations( i ve watched them all)// – கமலின் காப்பிகள், கண்டிப்பாக ஒரிஜினல் அளவு
    இல்லை . நான் இப்படங்களைப் பார்த்த உரிமையில் சொல்கிறேன். ஒரிஜினலின் பக்கலில் கூட இந்தக் காப்பிகள் நிற்க இயலாது.

    @ philosophy prabakaran – தசாவதாரத்தில், கதை மட்டுமே காப்பி. பத்து கேரக்டர்கள் காப்பி இல்லை. அதனால் தான் அந்தக் கேரக்டர்கள் பல, நமக்குப் பயமூட்டும் வகையில் மேக்கப் செய்யப்பட்டு சொதப்பலாக உருவாக்கப்பட்டிருந்தன 🙂 ..

    இரண்டாவது பாக விளையாட்டு – 🙂 .. பரவாயில்லை.. அப்புறமா வாங்க பாஸ் 🙂

    அஹமது இர்ஷாத் – ஹாஹ்ஹா 🙂 .. நெக்லைன் என்னமோ உண்மை.. 🙂 .. அப்புறம், //காப்பி அடிக்கிற‌துன்னு முடிவாகிருச்சு அடிச்சிட்டுத்தான் போக‌ட்டுமே.// –

    இதுதான் மேட்டரு 🙂 .. அதுதான் தொடர்ந்து நடக்குது 🙂

    @ denim – ஹீஹ்ஹீ.. ரொம்ப நெக்லைனை எதிர்பார்த்து போனீங்கன்னா, நொந்துடுவீங்க 🙂 ..

    கொழந்த – //நாசர் கூட கமலை பல படங்களில் அநாயசியமாக தூக்கி சாப்பிட்டிருப்பார். அவ்வை சண்முகி – எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல – குருதிப்புனல் – பல படங்கள்..// –

    நாசர் ஒரு அருமையான நடிகர். யெஸ். உண்மைதான். மிக்க நன்றி நண்பா

    @ கௌதமன் – கோல்ட்ப்ளே லின்க் குடுத்ததுக்கு நன்றி. மேலேயும் புகழேந்தி இந்த லின்க்கைக் குடுத்துருக்காரு.. அந்தப் பாட்டு எனக்குப் புடிச்சது..

    @ செ. சரவணக்குமார் – நீங்க சொன்னப்புறம்தான் எதிர் ஓட்டுகளைப் போய்ப் பார்த்தேன் :).. அது யாரோ கமல் ஜால்ராங்க வயித்தெரிச்சல்ல போட்டது 🙂 .. அதைக் கண்டுக்கவே வாணாம்னு இருக்கேன்.. ஏன்னா, ”நான் கலை ஊழியன் மட்டுமே. இந்த அரசியல்வாதிகளின் இடையூறுகள் எனக்குப் புதிதல்ல.மற்றபடி பகுத்தறியும் பாதையில் என் தேடல் தொடரும். அதில் மக்கள் அன்பிற்கு நிறைய இடமுண்டு..”.. 🙂 .. ஹாஹ்ஹா 😉 .. உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா

    Reply
  42. @ அன்பின் மயில்ராவணன் – காப்பிகள் எதுல இருந்தா என்ன? காப்பின்னா எல்லாம் காப்பிதானே 🙂 .. அப்புறம் எதுக்கு இந்தப் பீடிகை – //படங்களைப் போலவே சில பெரிய
    எழுத்தாளர்கல் எழுதும் நாவல்கள்,சிறுகதைகள் // 🙂 .. எங்க இருந்தாலும் காப்பின்னா தப்புதான் மக்கா 🙂 .. அப்புறம், இதுக்கெல்லாம் எதுக்கு ஓபாமா? லூசுமோகன்
    கோச்சிக்கப்போறாரு 🙂 . . கமலைப் பத்தி உண்மைய சொன்னா உங்களுக்கெல்லாம் எங்க இருந்து கோவம் வருது? 🙂 இந்த வாட்டி கோகுலை வெச்சி எதுவும் பதிவு போடலையா? 🙂

    Reply
  43. @ இவன் சிவன் – //டாக்டர் கருந்தேள் சார் கவனிச்சீங்களா இந்த படத்துல குழந்தை ‘குவா குவா’ னு அழுகுறமாதிரி ஒரு காட்சி 1966 ல வெளியான ‘டோமர்’ படத்துல இருந்து
    சுட்டது…அதையும் சேத்துக்கோங்க…
    ” It is impossible to convince a man whose mind is already made up “//

    ஓ .. மிகப்பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திட்டீங்களே 🙂 .. வெரிகுட்.. நீங்க மேலே சொன்ன இந்த வாக்கியத்த, தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுல எழுதிட்டு, பக்கத்துலயே
    உக்காந்துக்குங்க.. பின்னால வர்ர சந்ததிகள், அதைப் பார்த்துப் படிச்சிப் பயனடைஞ்சிக்குவாங்க 🙂

    உங்கள மாதிரி கமல் ஜால்ராக்களுக்கெல்லாம் எவ்வளவுதான் படிச்சிப் படிச்சி சொன்னாலும், எங்க ஏறப்போவுது? 🙂 .. கொடுமை இதுதான் 🙂 .. ஜிங்சக் ஜிங்சக் 🙂

    Reply
  44. @ ramvenkatesan – யோவ் access… உனக்கு அறிவே இல்லையா.. மண்டைல இருக்குறது களிமண்ணா? மவனே என்னமோ நீ போட்ருக்குற கருத்தெல்லாம் பெர்ரீய ஒரிஜினல் மாதிரில்ல இங்க ஒளறிருக்க.. .. எல்லா கருத்துமே, கமலின் ஜால்ராக்கள் நடத்தும் ஒரு விவாதத்திலிருந்து, காப்பி பேஸ்ட் செய்யப்பட்டவை தானே 🙂 .. இதோ லின்க்..

    http://mayyam.com/hub/viewtopic.php?p=2325871, http://mayyam.com/hub/viewtopic.php?p=2325751 மற்றும் http://mayyam.com/hub/viewtopic.php?p=2325434.

    கொய்யால இனிமே இப்புடி இங்க வந்து வாந்தி எடுத்தால், உன்னோட அத்தனை பின்னூட்டத்தையும் அழிப்பேன். வேற வேலையே இல்லையா உனக்கெல்லாம்.. அடி செருப்பால கஸ்மாலம்

    Reply
  45. @ sinna – இந்த ramvenkatesan வேற யாருமில்லை. accessஏ தான்.. மேல அவனோட பேரைப் போட்டு நான் பதிவுல எழுதிருக்குறதுனால, இங்கே வேற பேர்ல வந்து உளறி வாந்தியெடுக்குறான். அவன் போட்ட கருத்துகளும் மய்யம்ல இருந்து அவன் சுட்டதுதான். இவனுக்கெல்லாம் சுட்டுப் போட்டாலும் அறிவே வராது.. ஃப்ரீயா உடுங்க.. இனி இவன் போடுற கருத்து எதுவா இருந்தாலும் அழிப்பேன் 🙂

    Reply
  46. Hi Karundhel..

    Great review! I personally expect more reviews on tamil movies from you. How abt yestryear classics? All hope is not lost in Tamil cinema. Creative and bold efforts are starting to emerge occasionally too. Very eagerly awaiting more reviews on tamil movies…especially Mynaa and Angaadi theru!

    Reply
  47. வந்துட்டாரு ஒலகப் பட வாத்தியார் கருந்தேள் ‘குச்சியோட’…

    கருந்தேள் : “டாய், யார் டா காப்பி அடிக்கறது , யார் டா பிட்டு அடிக்கறது, யார்டா ஒலகப் படத்த ஒளிஞ்சி பாக்கறது, எல்லாரும் ஓடுங்கடா …”

    குமல், சனிரத்னம், டுஷ்க்கின், கே.எஸ்.பவிக்குமார், கருகதாஸ், etc அலறியடித்து புதருக்குள் ஓடி மறைகிறார்கள் …. 🙂

    Reply
  48. @ jahaber – thanx a lot.. Definitely I will review them too, but after a short while .. I will try to write more on tamil movies.. thanx.. (a li’l prob with NHM.. so typing in eng)..

    @ senthilkumarblog – ha ha ha ha 🙂 .. I liked it very much 🙂 .. Super … 🙂 especially the names.. Dushkin, karugadoss, pavikumar, sanirathnam, kumal… ware wah !! Very funny indeed 🙂

    Reply
  49. கண்டிப்பாக கமல் ஒரு HYPOCRITE என்பதில் ஒரு சந்தேஹம் இல்லை .

    உங்கள் கறுத்து நான் கூற விழைத்தை 100 சதவீதம் ஆணி தரமாக எடுத்துரைத்தல் இங்கு நான் கூற ஒன்றுமில்லை .

    இந்த படத்தை பற்றியோ ,கமலுக்கு கொடுக்கப்படும் அதிகபடியான விளம்பரத்தை பற்றி கூறுவது வீண் ,குறிப்பாக VIJAY டிவி கமலுக்கு ஆரத்தி எடுத்து மகுடம் சூட்டும் விசயத்தில் யாரும் மிஞ்ச முடியாது .

    உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்; குறிப்பாக சொல் பிரயோகம் அசத்தல்.

    கமல் அபிமானிகள் யாரவது இந்த பதிவை “உலக நாயகன் ” என்று தம்பட்டம் அடித்து கொள்ளும்,/ பிறர் கூறுவதில் மகிழ்ச்சி அடைபவருக்கு காண்பியுங்களேன் .

    Reply
  50. தமக்கு தாமே பாராட்டு விழா ஏற்பாடு செய்வதிலும் , அதில் மகிழ்ச்சி அடைவதிலும் “கலைஞருக்கு” இணை இந்த கலைஞன் தான் .

    Reply
  51. Karundhel,
    Awesome review. In spite of being a copycat, kamal is still perceived as a legend as well as a class performer.
    This post deserves a place in main stream media but Kamal’s shrewd PR skills with media is blocker for such an enlightenment.

    Reply
  52. ஏன்டா அடுத்தவன் கழிவறை யை எட்டி பார்கறீங்க.. உங்களுக்கு எல்லாம் வெட்கமே இல்லையா ??
    வெளிநாட்டு காரனுக்கு சொம்பு தூக்கி தானே உங்க வயித்த கழுவறிங்க ??
    அவரது பரவால, அடுத்தவன் செய்த படைப்புகளை மையமாக வைத்து தன் சொந்த முயற்சியால் படைப்புகளை படைக்கிறான்..
    இஷ்டம் இருந்தால் பார்த்து ரசியுங்கள், இல்லையேல் வெளிநாட்டு காரனுக்கு சொம்பு தூக்க போங்க,, யார் உங்களை தடுப்பது.

    வெள்ளையனுக்கு சொம்பு தூக்குவதை விட , நம்மவர்க்கு சொம்பு தூக்குவது எந்த வகையிலும் குறைவு இல்லை…

    Reply
  53. நண்பா
    அப்படியா சங்கதி?
    இது கிரேசி மோகன் நாடகம் போல இருந்தது என்று என் நண்பர்கள் சொன்னதால் ஒரு முறை பார்க்க இருந்தேன்,இனி டிவிடி ரிப் தான்.

    Reply
  54. marunthu kutikkarathukku mun kurankai ninaikkaatha kathaiyaai, kamal padam appadinaale valakkampola kurai solla vaithudaraiye dhel. nalla visayaththaiyum konjam paaraattunga

    Reply
  55. கமல் தன்னை ஒரு நாத்திகவாதி என்று கூறிக்கொண்டாலும், அவரது பல படங்களில் வைணவ சார்பும், சைவ துவேசமும் இருப்பதாக எனது நண்பர் சங்கர சரவணன் கூறுகிறார்.
    (௧). அன்பே சிவத்தில் “தென்னனுடைய சிவனே போற்றி” என்று கூறும் பழுத்த சைவர் படு மோசமான வில்லனாக உலா வருகிறார்.
    (௨). பம்மல் சம்மந்தம் படத்தில் கமலே சிவன் வேடத்தில் வந்து சிவனை காமெடியன் ஆக்குகிறார்.
    (௩). 90 க்கு பின் வந்த கமல் படங்களில் பத்திர நிர்பந்தம் இல்லாத சமயங்களில் எல்லாம், கதாநாயகன் பெயர் வைணவப் பெயராகவே இருந்துள்ளது.
    (௪). மகாநதி படத்தில் ஸ்ரீ ரங்கநாதரின் புகழ் பாடும் பாடல் இடம் பெற்றுள்ளது.
    இதுபோல பல கருத்துக்களைப் பட்டியல் இட்டுக்கொண்டு இருந்தால், நமக்கு நேரமும் இடமும் பத்தாது என்கிறார்.

    ஆனால் மொத்தத்தில், கடவுள் என்பதே கேள்விக்குறியாக இருக்கும் பட்சத்தில், இந்த கடவுள்களுக்கு நடுவே, மன்னிக்கவும், கடவுள் பக்தர்களிடம் நடக்கும் சண்டை எனக்கு ஒரு ஆச்சரியக் குறியாகவே உள்ளது…..!

    Reply
  56. உங்க புகழ் thats tamil ல கூட பரவ ஆரம்பிச்சுருச்சு …

    பதிவு செய்தவர்: உண்மை
    பதிவு செய்தது: 28 Dec 2010 4:49 pm
    கமல் எவ்வளவு பெ ரி ய அ றி வு ஜீ வி ( அதாவது H O L L Y W O O D படத்தில் இருந்து c o p y அடித்து அதை தமிழ் சினமாவிற்கு தருவதில் ) என்பதை அறிய கருந்தேள் டாட் காம் போய் படியுங்கள் . பிறகு அறிந்து கொள்ளுங்கள் கடந்த 25 வருடங்களாக கமல் எத்தனை படங்களை தி ரு டி அவர் பெயரில் தமிழில் தந்துள்ளார் என்பதை

    லிங்க் :: http://thatstamil.oneindia.in/comment/2010/12/111027.html

    Reply
  57. NEEGA CHARU VODA KALA NAKKARATHU ILLIYA everyone who are reading ur blog knows u r a jalra to charu nivedhitha first u write ur own thoughts dont try to reflect charu’s thoughts

    Reply
  58. இந்து மதத்தை பற்றி கவிதை எழுதினா, ஏன் போய் கிறிஸ்துவ, முஸ்லிம் சாமிய போய் கிண்டல் பண்ணி பாருடா அப்படிங்கறது..

    முஸ்லிம் ஒருத்தன் மூணு பொண்டாட்டி வச்சு இருக்கான்னு கிண்டல் பண்ணினா, நீ ஒரு இந்துத்துவாவாதி.. அப்படிங்கறது..

    இங்க யாரு hypocrite?

    ஆனால், கமல் காபி அடிப்பது உண்மையாக இருக்கலாம். மாற்று கருத்து இல்லை. ஆனால், நீங்கள் கமல் பற்றிய விருப்பு வெறுப்பை துறந்து அவரை அணுகினால், நன்றாக இருக்கும். இனி அது உங்களுக்கு சாத்தியம் இல்லை என உங்கள் எழுத்து சொல்கிறது.

    உங்கள் உலக சினிமா பற்றி பல பதிவுகள் உதவியாக இருந்தன. நன்றி.

    Reply
  59. என்னமோ இவன்தான் ஒலக நாயகனாம்.இவன உளுந்துர்பேட்டைய தாண்டுனாலே யாருன்னு பாதி பேருக்கு தெரியாது.கொடுமைடா.12 Monkeys பட காட்சிகளா சுட்டு ஆளவந்தான் எடுத்தான்.Sin city Marv getup எ சுட்டு டசாபதாரம் ப்லேட்சேர் கதாபாத்திரம்.அப்புறம் நாயகன பத்தி சொல்லவேண்டியதே இல்ல.அட்ரா அட்ரா அட்ரா காப்பி.

    Reply
  60. //1–இஸ்லாமிய சித்தாந்தப்படி கடவுளுக்கு பாலினம் இல்லை. ஆண்பால், பெண்பால், போல “கடவுற்பால்” என்ற தனி கேட்டகிரியை கடவுளுக்கு இஸ்லாம் அளித்துள்ளது. கடவுள் பிறக்கவும் இல்லை… இறக்கவும் போவதில்லை. உணவு, தூக்கம், தாம்பத்திய சிற்றின்பம் போன்ற எத்தேவையுமற்ற கடவுள்… இஸ்லாமிய கடவுள்.

    நான் சொல்ல வந்ததை சரியாக சொன்னீர்கள்.

    பின்னூட்டம் இடும் சகோதரர்கள் மற்றவர் மனம் அல்லது மதம் புண்படும் படி எழுத வேண்டாம்.

    தன்மானமே தமிழர்களின் உயர்ந்த சொத்து. யாரும் யாருடைய காலையும் பிடித்து வாழ வேண்டிய அவசியமில்லை. நாம் அனைவரும் சகோதரர்களே,விமர்சனம் ஆரோக்கியமாக இருக்கட்டும்

    Reply
  61. சகோதரர் ராஜேஸ் அவர்களுக்கு,
    நான் திரைப்படங்களை(தமிழ் திரைப்படம் உள்பட) பார்பதை நிறுத்தி முன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் யாரெல்லாம் சிறந்த திரைப்படக் இயக்குனர்கள்,உலகநாயகன்கள் என்று நினைத்து கொண்டிருந்தேனோ அவர்கள் எல்லாம் வெறும் குப்பைகள் என்று உங்களின் எழுத்து முலமாகவும் மற்றும் சாரு அவர்களின் எழுத்து முலமாகவும் தெரிந்து கொண்ட பின் இனி தமிழ் திரைப்படங்களை ஒருபோதும் பார்க்க முயற்ச்சி செய்ய வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

    அடித்துபிடித்து திரைக்கு வந்த முதல் நாள்,முதல் காட்சி அன்றே ரஜினி படங்களை பார்க்கும் ரஜினி தீவிரவாதியாக இருந்த நான் சற்று அதில் இருந்து விடுபட்டு கமல் படங்களை பார்க்கவும்,ரசிக்கவும் செய்தேன் கமலின் ஹே ராம் படத்தை பார்க்கும் வரை. ஹே ராம் படத்தில் முஸ்லிம்களை மிகவும் கொடுரமாக சித்தரித்து ஒரு தலைபட்சமாக சொல்லியிருப்பார்.

    இஸ்லாமியர்களை தீவிரவாதியாகவும்,அரேபியர்களை முட்டாள்களாகவும் சித்தரித்து இதுவரை ஆயிரத்துக்கு அதிகமான திரைப்படங்களும்,60 ஆயிரத்துக்கு அதிகமான புத்தகங்களும் வெளிவந்துவிட்டன. இருந்தபோதிலும்,இன்று உலகத்தில் மிக வேகமாக வளரும் மார்க்கம்(இஸ்லாம் என்பது மதமல்ல அது மார்க்கம்-வழி) இஸ்லாம்.

    இறைவனைப்பற்றி மட்டும் பேசினால் அது மதம். இஸ்லாம் என்பது மார்ர்கம் அது இறைவனை பற்றி பேசுகிறது,மனிதர்களை பற்றி பேசுகிறது மற்றும் தேனீ,ஒட்டகம்,எறும்பு,மாடு,ஒழுக்கம்(ஆண்,பெண் இருவருக்கும் சேர்த்து),ஒற்றுமை,நன்மை,தீமை,விபச்சாரம்,வட்டி,வியாபாரம்,மது,கொலை, திருட்டு,கொடுக்கல்,வாங்கல்,கடன்,சொத்து,பாகபிரிவினை,தண்டனை,கடமைகள்,மனிதநேயம்,தியாகம்…. ஆகியவற்றைப்பற்றி பேசுகிறது.

    ஒன்றைபற்றி விமர்சனம் செய்யும்முன் அதை பற்றி படித்து அல்லது பார்த்து தெரிந்து கொண்டபின் ஆதாரங்களுடன் அதை விமர்சனம் செய்தால் அந்த விமர்சனம் வலுபெறும் அல்லது வெற்றிபெறும். தமிழ் திரைப்படங்களின் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை பற்றிய ஆதாரங்களுடன் கூடிய உங்களுடைய விமர்சனம் வெற்றிபெற்றதாக தான் நான் நினைகிறேன். வாழ்த்துக்கள்.

    Reply
  62. சகோதரர் ராஜேஸ் அவர்களுக்கு,
    ஒன்றைபற்றி விமர்சனம் செய்யும்முன் அதை பற்றி படித்து அல்லது பார்த்து தெரிந்து கொண்டபின் ஆதாரங்களுடன்
    அதை விமர்சனம் செய்தால் அந்த விமர்சனம் வலுபெறும் அல்லது வெற்றிபெறும். தமிழ் திரைப்படங்களின்
    இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை பற்றிய
    ஆதாரங்களுடன் கூடிய உங்களுடைய விமர்சனம் வெற்றிபெற்றதாக தான் நான் நினைகிறேன்.
    வாழ்த்துக்கள்

    Reply
  63. access முட்டாள்தனமாக உளறிய கமெண்டுகள் டிலீட் செய்யப்படுகின்றன. இனி அந்த முட்டாள் எழுதும் எந்தக் கமெண்ட்டானாலும் அழிப்பேன்.

    Reply
  64. சாருவின் ‘சரசம் சல்லாபம் சாமியார்’ புத்தகம் தடை செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, இதுவரை படிக்காதவர்கள், அதனை வாங்கிப் படித்து, நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள். ஏனெனில், தடை செய்யப்பட்டு விட்டால், அப்புத்தகம் இனி கிடைக்காது.

    ////

    SORRY NAAN SEX BOOK PADIKIRATHU ILLA………

    Reply
  65. சாருவின் ‘சரசம் சல்லாபம் சாமியார்’ புத்தகம் தடை செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, இதுவரை படிக்காதவர்கள், அதனை வாங்கிப் படித்து, நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள். ஏனெனில், தடை செய்யப்பட்டு விட்டால், அப்புத்தகம் இனி கிடைக்காது.

    ////

    SORRY NAAN SEX BOOK PADIKIRATHU ILLA………

    Reply
  66. //SORRY NAAN SEX BOOK PADIKIRATHU ILLA………//

    அடடே.. இதைப்பாருங்கய்யா… யாரோ ஒரு அறிவாளி . . வாங்கண்ணே வாங்க.. 🙂 சரசம் சல்லாபம் சாமியார் ஒரு செக்ஸ் புக்குன்னு கண்டுபுடிச்சி சொன்ன உங்க அறிவுக்கு, இதை நீங்க போத்தனூர் ரயில்வே ஸ்டேஷன்ல ஒரு கல்வெட்டுல எழுதி வெச்சி, பக்கத்துலயே உக்காந்துக்கங்க.. உங்க சந்ததிகளுக்கு, இப்புடி ஒரு புத்திசாலிய பத்தி தெரிய ஒரு வாய்ப்பா அமையும்.. 🙂 வந்துட்டானுங்க ஆட்டிக்கினு 🙂

    Reply
  67. //SORRY NAAN SEX BOOK PADIKIRATHU ILLA………//

    அடடே.. இதைப்பாருங்கய்யா… யாரோ ஒரு அறிவாளி . . வாங்கண்ணே வாங்க.. 🙂 சரசம் சல்லாபம் சாமியார் ஒரு செக்ஸ் புக்குன்னு கண்டுபுடிச்சி சொன்ன உங்க அறிவுக்கு, இதை நீங்க போத்தனூர் ரயில்வே ஸ்டேஷன்ல ஒரு கல்வெட்டுல எழுதி வெச்சி, பக்கத்துலயே உக்காந்துக்கங்க.. உங்க சந்ததிகளுக்கு, இப்புடி ஒரு புத்திசாலிய பத்தி தெரிய ஒரு வாய்ப்பா அமையும்.. 🙂 வந்துட்டானுங்க ஆட்டிக்கினு 🙂
    ////

    ohhh am sorry sir…..

    athu sex book eluthuvare charu … avaru book nu ninaichuden…

    ithu vera charuvaa???!?!??!

    Reply
  68. மேல சொன்ன அதே பதில், இதுக்கும் பொருந்தும் 🙂 .. சாரு செக்ஸ் புக் எழுதுரார்னு சொல்றதுல இருந்தே, அவரு புக் எதுவுமே இன்னும் நீங்க படிக்கவே இல்லைன்னு தெரியுது.. 🙂 . . போன கமெண்ட் கடைசி ரெண்டு வார்த்தைகளை மறுபடி படித்துக் கொள்ளவும் 🙂

    Reply
  69. ஓ அப்புடியா …

    நீங்க சொல்லுற சாறு வேறயா இருக்கும்
    நான் படிச்சா சாரு செக்ஸ் எழுத்தாளர்தான் …

    சரி விடுங்க …

    அப்புறம் எங்க ஊர் ல ரயிவே ஸ்டேஷன் இல்ல , அaனாலும் பஸ் ச்டபுல சாறு போடவோட நிங்க உட்காந்த நல்ல collection கிடைக்கும் …

    Reply
  70. தமிழே எழுதத் தெரியாதவனெல்லாம் பின்னூட்டம் போட வந்தா இப்புடித்தான் இருக்கும். தம்பி.. போயி மொதல்ல எழுத்துப் பிழை இல்லாம தமிழ் டைப் பண்ண கத்துக்க.. அப்புறம் பின்னூட்டம் போடலாம். ஒரு குண்ணையும் புரியல 🙂 .. எதுக்கு இங்க வந்து வாந்தி எடுக்கணும்? எதுக்கு வாங்கி கட்டிக்கணும்? 🙂 போ போ .. சூ சூ .. 🙂

    Reply
  71. என்னாது கோபமா? 🙂 சொறி நாய்களுக்கு ரொம்ப மரியாதை கொடுத்தோம்னு வெச்சிக்கவேன் . .அது, நீ வந்து பேண்டு வெச்ச மாதிரித்தான் பேளும்க . . என்னிக்கோ நான் எழுதின ஒரு போஸ்ட்ல , இன்னிக்கி வந்து பேண்டு வெச்சே இல்லியா? அப்புடி. . அதுனால, உன்ன மாதிரி பேண்டு வெக்குற ஆளுங்களை, இப்புடி ரெண்டு வார்த்தை சொல்லி திட்டுறது என்னோட வழக்கம். அப்பதான் இனி இந்தப் பக்கம் வராதுங்க இந்த சொறி நாய்க 🙂 .. அதான்.. வாங்கி கட்டிக்கிறது உனக்கு புடிக்கும்னு வெச்சிக்கவேன் . அப்ப நீ அடிக்கடி இங்க வந்து பேளலாம் . . 🙂

    Reply
  72. @UFO கவிதை எழுத முடியாதுன்னெல்லாம் கிடையாது… கொஞ்சம் முயற்ச்சித்தால் எல்லாம் முடியும்.

    கன்னி மேரி கலவியில்லாமல் கர்பமானது எப்படி.
    காற்றாய் கடவுள் காமம் கலந்து கலவி செய்தது வாஸ்தவமா
    அப்படி கலவி வேண்டுமென்று கன்னி மேரி காத்திருந்தாயா
    கடவுளின் சேட்டை கணவனை விடவும் சுகமாய் அமைந்ததா அப்படி?
    பைபிள் சொல்லும் அத்தனை சேட்டையும் வாஸ்தவமாக நடப்பது உண்டோ?
    ஆதாமும் ஏவாளும் முன்பு செய்த அத்தனை சேட்டையும் இங்குமுண்டோ?
    உனக்கேனுமது அமையப்பெற்றதால் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான் நீ

    கன்னிமேரி நமோஸ்த்துதே!

    சத்தியமாக யார் மனதையும் புண்படுத்த வேண்டுமென்று இதை எழுதவில்லை. இப்படியெல்லாம் எழுத அறிவு ஜீவித்துவம் தேவையில்லை, நாலு மஞ்சள் பத்திரிக்கை ஏதோ ஒரு மதத்தை பற்றிய அரை குறை ஞானம் போதும். மற்ற மதத்த்தை பற்றி தவறாக எழுதும் எண்ணம் என்க்கு இல்லை ஒரு பின்னூட்டத்திற்க்கு பதிலளிக்கிறேன் அவ்வளவுதான்.

    Reply
  73. Romance on the High Seas என்பது படத்தின் பெயர். வெளிவந்த ஆண்டு – 1946.///
    .
    .
    தவறான தகவல் அது 1948.கண்ணாடிய சரி பண்ணுங்க அப்பு!

    Reply
  74. கமல் ஒரு இந்துமத வாதி,நாத்திகம் என்பதை ஊறுகாய் போல தொட்டுக் கொள்ளும் ஒரு போலி பகுத்தறிவுவாதி எனபது எல்லாம் பழைய கதை. அவர் ஒரு ஐயங்கார் வகுப்பை தூக்கி பிடிக்கும் ஒரு சராசரி மனிதன். அவரது கூட்டணி அனைத்துமே வைணவ பிரிவை சேர்ந்தவர்கள். அவர் படத்தில் வரும் பாத்திரங்கள்,அதை தாங்கும் நடிகர்கள், கதை களம் இதை பார்த்தாலே உங்களுக்கு புரியும். விஜய் டிவி ஒரு நிகழ்ச்சியை தசாவதாரம் பட வெளியீடு சமயத்தில் ஒளி பரப்பியது. அதில் இயக்குனர் சேரன், நடிகர் சண்முகராஜன்,பேராசிரியர் ஞானசம்பந்தன் மற்றும் பல முன்னணி நடிகர்,இயக்குனர்கள் கலந்து கொண்டனர். அனைவருமே தசாவதாரம் ஆகச் சிறந்த படம் என்றும், மிக உயரிய யாரும் எட்டாத முயற்சி என்றும் வழி மொழிந்தனர். கமல் தான் எதிர்பார்க்கும் பெர்பெக்ட்னசை கொண்டு வர, அவர் எவளவு மெனக்கெடுவார் என்றும் காட்சிக்குத் தேவையான பொருள்களில் மிகவும் சிரத்தை எடுத்து கொள்வார் என்றும் இயக்குனர் சேரன் கூறினார். இப்படியாகப்பட்ட கமல் தனது தசாவதாரத்தில் சோழ மன்னன் வைணவ அடியாரை கட்டாய மத மாற்றம் செய்ய துணிவது போலவும் நண்பனே ஆனாலும் அந்த வைணவ அடியாரை கொன்று விட உத்தரவு போடும் கொடியவன் போலவும் காட்டியிருப்பது அவர் வைணவத்துக்கு எந்த அளவு கொடிபிடிக்கிறார் என்பதற்கு நல்ல உதாரணம். அவர் தன்னை உலக நாயகனாக காட்டிக் கொண்டாலும் ஆஸ்கார் நாயகனாக காட்டிக் கொண்டாலும் உண்மையில் அவர் என்னவோ ஐயங்கார் ஆத்து நாயகன் தான் எனபது விஷயமறிந்த ரசிகர்களுக்கு தெரியும். மருத்துவர். துரை. இராஜ சேகரன் அவர்கள் சொன்னது முழுவதும் நிஜம். கமல் தன்னை பலமுகங்கள் உள்ள ஆளுமை போல் காட்டி கொள்ளும் ஒரு போலி. திடீர் என்று நாத்திக மேடையில் தோன்றுவார் நான் முதலில் இருந்தே நாத்திகன் தான் என்பார். பின்பு தான் ஒரு கவிஞர் என்பார் “காமக் கழிவுகளை”, “பீ அள்ளும் தாயம்மா” போன்ற கவிதைகளை எழுதித் தள்ளுவார். மேற்கத்திய படங்களை தழுவி எடுத்த ஆளவந்தான் பிரபல பட அதிபர் தாணுவு போண்டி ஆக்கியது. ஆளவந்தானை தன்னுடைய ” தாயம் 1 ” என்ற தொடர்கதையின் தழுவல் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அப்படியென்றால் இவருடைய “தாயம் 1 ” கதையை படித்துவிட்டுத்தான் இங்க்லீஷ் படங்கள் எடுத்தாங்களோ என்னவோ? கமல் அவப்போது எதை படிக்கிறாரோ அல்லது பார்க்கிறாரோ அதுவாகவே மாறிவிடுகிற சந்திரமுகி கேரக்டர் எனபது ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை அவர் கொடுத்த பேட்டிகளை பார்த்தாலே நமக்கு புரியும். திடீரென்று மேக் அப் மேன் ஆகிவிடுவார்
    சில நேரம் கதாசிரியர், சில நேரம் வசனகர்த்த சில நேரம் இயக்குனர் என்று ( இன்னும் என்னனவோ) ஆகி விடுவது அவரது வழக்கமான பாணி. அவர் ஒரு போலியான ஆளுமை என்பதாலேயே அவரால் ஆஸ்கார் விருது வாங்க முடியவில்லை. வாங்கிய ரகுமானையும் மனதார வாழ்த்த முடியவில்லை. அதுவரை ஆஸ்கர். ஆஸ்கர் என்று கூவிக்கொண்டிருந்தவர் ரகுமான் அதை வாங்கிய பின்பு அவ்விருது ஒன்றும் உயரிய விருதல்ல அது ஒரு அமெரிக்கத் தரம் அவ்வளவே என்று டைவ் அடித்தார். அதனால் வாசக பெருமக்களே இத்தகைய போலி கலைகொல்லிகளிடம் இருந்து தமில் திரைப்பட உலகத்தை காக்க போராடுவோமாக.

    Reply
  75. மன்மதன் அம்பு ஒரு அறைவேக்காட்டுதனம் # சாரு #
    விமர்சனம் முடிஞ்சு போச்சு.
    ஆனால் அடியேன்! கமலின் தீவிர விசிறி.

    Reply
  76. goooko

    Kids discusiing on a lengend .. Grow up kiddos .. The is asshole who wrote the blog is a third rated “*” ..

    Reply
    • //asshole// …….//third rated “*” // —–> Thanks for introducing your name Gookoo 🙂 ..Can understand ur frustration, as your so called ‘idol’ is getting ripped off here. Try to spell your words correct before you start commenting. It’s not a lengend. It’s called ‘Legend’ 🙂 🙂 🙂 ….Get a life.

      Reply

Join the conversation