கமல்ஹாஸன் – எதிர்வினைகள்

by Karundhel Rajesh September 11, 2010   Copies

கமல்ஹாசன் : நிகழ மறுத்த அற்புதமா? என்ற எனது கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக்கவும். இந்தக் கட்டுரை, கமலின் சில படங்களைப் பற்றியும் அவற்றின் ஆங்கில மூலங்களைப் பற்றியும் அலசுகிறது.[divider]

சென்ற பதிவில் கமல் அடித்த ஈயடிச்சாங்காப்பிகளைப் பற்றி எழுதினாலும் எழுதினேன், அதற்குப் பதில் சொல்லவேண்டும் என்று நண்பர்கள் பலரும் ஒவ்வொரு பதிவு எழுதி, கமல் ஒரு கலைத்தெய்வம் என்ற விஷயத்தை (கஷ்டப்பட்டு) நிரூபிக்க முயற்சி செய்துள்ளனர். அவற்றைப் படித்த பின் தான், அவர்கள் அதில் போட்டிருக்கும் விஷயங்களைப் பற்றி ஒரு பதிவு எழுதினால் என்ன என்று தோன்றியது. உண்மையை வெளிப்படையாகச் சொல்லவேண்டும் என்றால் , அவர்கள் கொடுத்திருக்கும் விஷயங்கள் – Totally illogical to the core என்று சொல்லலாம். அவற்றின் இணைப்புகளை இங்கே கொடுத்திருக்கிறேன். படித்துப் பாருங்கள். இதோ அவற்றில் விவாதிக்கப்பட்டிருக்கும் விஷயங்களுக்கு எனது பதில்.

மயில்ராவணன் – இப்பதிவைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும் ;-). யாரோ கோகுல் என்ற நபர், எனது கட்டுரையைப் படித்து, ரத்தக்கொதிப்பில் அவசர அவரசமாக எழுதிக்கொடுக்க, அதனை நண்பர் மயில்ராவணன் தனது தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் நான் சில கேள்விகளைப் பின்னூட்டத்தின் வாயிலாகக் கேட்டிருந்தேன். அவைகளுக்கு இன்று வரை பதிலில்லை. அந்த கோகுல் என்னும் நபர், ஏதோ நாவல் படித்துக்கொண்டிருக்கிறாராம். முடித்து விட்டு, ‘நேரமிருந்தால்’ வந்து பதில் சொல்கிறேன் என்று மறைந்து விட்டார். என் பதிவைப் படித்து, அவசரமாக ஒரு பதிவு எழுதிக்கொடுக்க நேரமிருக்கையில், கேள்வி கேட்டால் பதில் சொல்ல நேரமில்லை என்று அவர் சொல்லிவிட்டு மறந்து போனது, ஒரு நல்ல நகைச்சுவை சம்பவம்.

மோகன் – எனது பதிவுக்கு வந்த முதல் பதில் பதிவு இதுதான்.

நாஞ்சில் பிரதாப் – இதுவும் ஒரு பதில் பதிவுதான்.

ஜாக்கி சேகர் – இப்பதிவை, இன்று காலை பார்த்தேன்.

சரி. இப்பொழுது, இவர்கள் பதிவுகளில், எனது பதிவில் நான் சொல்லியிருந்த (கமல் ஈயடிச்சாங்காப்பி அடித்தது தவறு) விஷயங்களுக்கு, இவர்கள் என்ன பதில் சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்போம். அதன்பின், எனது கருத்தைச் சொல்கிறேன்.

1. ஒரு ஹோட்டலில் உள்ள உணவை, இன்னொரு ஹோட்டல்காரன் செய்துவிட்டு, இது அதன் காப்பி என்று நாம் வாதம் செய்தால் சரியா? அதனை எல்லாரும் ஒத்துக்கொள்வார்களா? ஒரு கட்டிடத்தைப் போல் இன்னொரு கட்டிடம் கட்டிவிட்டு, இது அதன் காப்பி என்று சொன்னால் சரியா? பரிட்சையில் புத்தகத்தில் உள்ளதை மனப்பாடம் செய்து வாந்தியெடுத்தால் தான் அதிக மதிப்பெண் கிடைக்கிறது. ஒரு பாடலை எப்படியே பாடிக்காண்பிப்பவர் தான் சிறந்த பாடகர். இப்பெடியெல்லம் இருக்கையில், சினிமாவில் மட்டும் காப்பியடித்தால் அதனை ஏன் எதிர்க்கிறாய்? எனவே, கமல் செய்தது தப்பு இல்லை.

பதில் – இவையெல்லாம் லாஜிகல் உதாரணங்கள் தானா? Copyright என்று ஒரு விஷயம் இருப்பது உங்களுக்குத் தெரியவே தெரியாதா? எந்தத் துறையில் ஈயடிச்சாங்காப்பிக்கு மரியாதை இருக்கிறது? உணவை ஒரே மாதிரி செய்வதுதான் முறை. பொங்கலில் இனிப்பு கலந்து சாப்பிடுவீர்களா? அய்யா புத்திசாலிகளே – உணவையும் கலைத்திருட்டையும் ஒப்பிடுவதே கோமாளித்தனம் இல்லையா? அதே போல் இந்த பரிட்சை உதாரணம். இதெல்லாம் ஒரு உதாரணமா? பரிட்சையில் எல்லாக் கேள்விகளுக்கும் புத்தகத்தில் உள்ளதற்கு மாறாக ‘பிம்பிளிக்கி பிளாப்பி’ என்று எழுதித்தான் பாருங்களேன் :-). இதைப்போன்றதே தான் அந்தப் பாடகரின் உதாரணமும் ? .

ஒரு நிகழ்ச்சி, கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நடந்தது நாமெல்லாருக்கும் நினைவிருக்கலாம். நண்பர் ஜாக்கி சேகரின் சில கட்டுரைகள், வேறு ஒருவரின் பெயரில் பாக்யா பத்திரிக்கையில் வெளிவந்தன. உடனே ஜாக்கி என்ன செய்தார் என்பதை யோசியுங்கள். அவர், ‘ஆஹா.. நாம் சமைத்த அதே உணவு பாக்யாவில் வந்திருக்கிறதே ! என்ன ஒரு ஆச்சரியம் ! எனக்கு மெத்த மகிழ்ச்சி. நான் இதைக்குறித்துப் புளகாங்கிதம் அடைந்து விட்டேன். அந்த நண்பருக்கு வாழ்த்துகள்’ என்றா எழுதினார்? அப்பட்டமான கலைத்திருட்டு இது என்று வன்மையாக இதை அவர் கண்டிக்கவில்லையா? பாக்யாவுக்கே தொடர்பு கொண்டு, இதனைப்பற்றி அவர் எடுத்துரைக்கவில்லையா? நாம் யாராக இருந்தாலும் இதைத்தான் செய்திருப்போம் அல்லவா? அதுதான் சரியும் கூட.

சில நாட்களுக்கு முன்னர், தனது பதிவு காப்பியடிக்கப்பட்டதை வன்மையாக எதிர்த்த அதே ஜாக்கி தான், இன்று கமல் காப்பியடித்தது தவறில்லை என்று பதிவும் எழுதியிருக்கிறார். அதாவது, ஜாக்கிக்கு நேரும் அநீதி, தவறு. ஆனால், அதுவே ‘ஒலக நாயகன்’ மற்றொருவருக்குச் செய்யும்போது, அது முற்றிலும் சரி !

இது என்ன வகை நடுநிலைமையைச் சேர்ந்தது என்று நண்பர்கள் யாராவது எனக்குத் தெரிவியுங்கள் .

ஜாக்கியின் பதிவில், இதைப்போன்ற மொண்ணையான உதாரணங்களே நிறைந்துள்ளன. சில உதாரணங்கள் இங்கே.

”காமெரா ஆங்கிள்கள் கூட, ஒரே போன்ற ஆங்கிள்கள்தான் வைக்கின்றனர். நெருப்பைக் கண்டுபிடித்தவன் ஒருவன் தான். ஆனால், அதில் இருந்து விதவிதமான உணவு வகைகளைச் சமைக்கிறோம். ஆதாம் ஏவாள் ஒருவர்தான். அவரில் இருந்து தோன்றிய காப்பிகள் தான் நாமும் இத்யாதி இத்யாதி..” – அடக்கொடுமையே! :-). copyright வாங்கிவைத்திருக்கும் ஒரு விஷயத்தை, இவைகளைப் போன்ற, யாரும் செய்யக்கூடிய ஒரு சாதாரண விஷயத்தோடு ஒப்பிடுவது லாஜிகலே இல்லை என்று ஜாக்கிக்குத் தெரியவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.

2. சுட்டு எடுத்தால் என்ன சுடாமல் எடுத்தால் என்ன? ருசியாக இருந்தால் மட்டும் போதும். அந்தவகையில் கமல் ஒரு சகாப்தம்தான்

பதில் – மேலே ஜாக்கிக்குக் கொடுத்த அதே உதாரணம் தான் இங்கும். இப்படி எழுதும் உங்களின் பதிவை, யாராவது சுட்டால், இதே போல் எழுதுவீர்களா? அந்தச் சமயத்தில் ‘வீறுகொண்டு’ எழ மாட்டீர்கள்? ?

3. சில இடங்களில், காப்பியடித்ததற்கு நன்றி கூறி க்ரெடிட் கொடுப்பது தேவையற்ற ஒன்றாகிறது. உழைப்பு என்ற ஒன்றுக்கு அங்கீகாரம் வேண்டுமெனில் அங்கு தன்பெயர் அவசியமாகிறது

பதில் – உழைப்புக்கு அங்கீகாரம் எல்லாம் சரிதான். ஆனால், அதற்கு, சொந்தமாகப் படம் எடுத்துவிட்டுப் போகலாமே. அதற்கு ஈயடிச்சாங்காப்பி அடித்து, அதற்குத் தனது பெயரைப் போடவேண்டும் என்பதுதான் அடிப்படைக் கேள்வியே.

4. கமல் , காப்பியடித்த படங்களுக்குக் கிரெடிட் போடாதது ஏனெனில், இந்தியா முழுவதும் இப்படித்தான் காப்பியடிப்பது நடந்து கொண்டிருக்கிறது. எனவே, கமல் செய்தது சரி.

பதில் – ஓஹோ ? . நான் கேட்பது என்னவெனில், விஜய், ராமநாராயணன், பேரரசு போன்றவர்கள் எடுக்கும் படங்களைப் பற்றி நாம் விவாதிப்பதில்லையே. ’ஒலகநாயகன்’ என்ற ஒரு பெயரால் விளிக்கப்பெறும் ஒரு ஆள், ‘ஆஸ்கர் வந்து விட்டது’, ‘எனது படங்கள் நல்ல படங்கள்’ போன்ற மாயைகளை மக்களுக்கு மத்தியில் பரப்பிக்கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில், நைஸாகப் பல படங்களில் இருந்து ஈயடிச்சாங்காப்பி அடித்து மக்களை ஏமாற்றிக்கொண்டிருப்பதைப் புரிவிக்க வேண்டும் என்பதனாலேயே எனது பதிவை எழுதினேன். அப்படி இருக்க, அவர் காப்பியடித்ததில் தவறில்லை என்று வாதிட்டால், எனது பதில் – ஒரு சிரிப்பு மட்டுமே ;-).

இதைத்தவிர, மேலே பதிவு எழுதியிருக்கும் நண்பர்கள் எல்லாமே, காட்ஃபாதர் படத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, ’அது கமலே சொல்லிவிட்டுச் செய்த ஒன்றுதான். அதில் தப்பில்லை’ என்று மட்டுமே எழுதியிருக்கின்றனர். நான் குறிப்பிட்டிருக்கும் மற்ற ஈயடிச்சாங்காப்பிப் படங்களைப் பற்றிப் பேச்சு மூச்சே காணவில்லை.

மட்டுமல்லாமல், இன்னொரு விஷயமும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, ’கமல் கொஞ்சமாகத்தான் ஈயடிச்சாங்காப்பி அடித்தார். மற்றதெல்லாம் அவரது சொந்தச் சரக்கு’ என்று எழுதியிருக்கின்றனர். இவற்றையெல்லாம் ஒரு பதில் என்றே கூறமுடியுமா? ? கண்டபடி காப்பியடித்திருக்கும் கமல், இடையிடையே சொந்தச் சரக்கு வைக்காமல் இருந்திருந்தால், ஃபீல்டை விட்டே ஓரம்கட்டப்பட்டிருப்பார். அது அவரது குயுக்தி.

அதே போல், இன்னொரு விஷயம் என்னவெனில், நல்ல படம் என்று எடுத்து, எங்களைப்போன்றவர்களின் ரசனையை மாற்றிய கமலுக்கு நன்றிகள் ஆயிரம், பத்தாயிரம், லட்சம், கோடி என்ற ஒரு விஷயத்தையும் பார்த்தேன்.

அது என்னங்க அது? கமல் படம் பார்க்கவில்லையெனில், நீங்கள் மாறியே இருக்கமாட்டீர்களா? நீங்கள்தான் உலகப்படங்களைப் பற்றிப் பலருக்கும் எழுதிப் புரியவைத்துக்கொண்டிருக்கிறீர்களே? கமல் படங்களைப் பார்க்காமல் இருந்திருந்தாலும், நீங்கள் இப்படித்தான் உலகப்படங்களைப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள் என்பதே உண்மை. மட்டுமல்லாமல், மிக மிக எளிதாக இப்போதெல்லாம் உலகப்படங்கள் கிடைக்கின்றன. எனவே, அவைகளைப் பார்க்கப் பொறுமை இல்லை என்பதே தகுந்த காரணமாக இருக்க முடியுமே தவிர, வேறு எதுவும் இல்லை. ஒருவேளை, கமல் அடித்த காப்பிகளைப் பார்த்து, நெட்டில் தேடினால், அவைகளின் ஒரிஜினல் படங்கள் கிடைத்து, அதன் மூலம் உலக சினிமா அறிவை விருத்தி செய்துகொண்டிருந்தால், அப்போது அதிக உலகப்படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் :-).

என்னுடைய வாதம் ஒன்றே ஒன்று தான். இவ்வளவு படங்களை ஈயடிச்சாங்காப்பி அடித்துக் கொண்டிருக்கும் கமல் ஹாசன் என்ற நடிகர், உங்களை ஏமாற்றிக்கொண்டிருந்தார் என்பதே தெரியாமல், இப்பொழுது தெரிந்த பின்னும், முரட்டுத்தனமாக (எந்த சாரமான காரணமும் இல்லாமல்) வக்காலத்து வாங்கும் மக்களைப் பார்க்கையில், வெட்டுவதற்கு அழைத்துச் செல்லப்படும் பலியாடுகளைப் பற்றிய சிந்தனை ஏனோ என் மனதில் எழுகிறது.

ஆயிரம் நல்ல இயக்குநர்கள், நடிகர்கள் உலகில் உண்டு. வெளியே வாருங்கள் நண்பர்களே. உங்களது வீட்டு வாசலிலேயே உலகின் சிறந்த படங்கள் கிடைக்கின்றன. அவைகளை எந்தத் தடையுமில்லாமல் உங்களால் பார்க்க முடியும். எனவே, அதை விட்டுவிட்டு, காப்பிகளை அடித்து, போலிப்புகழைச் சம்பாதித்துக்கொண்டிருக்கும் ஒரு நடிகரின் பின்னால் சென்று, அதனை நியாயப்படுத்தும் வேலை எதற்கு?

பி.கு – எனது தளத்தில் நான் எழுதிவரும் கட்டுரைகள், எந்தச் சார்பு நிலையும் இல்லாமல், நடுநிலையாகவே வந்துகொண்டிருப்பது நண்பர்களுக்குத் தெரியும். இனியும் அப்படித்தான். எந்தச் சாதி மற்றும் மதச் சாயமும் அவைகளுக்கு இருக்கப்போவது இல்லை. எனவே, எனது விவாதத்தை, ஆரோக்கியமான ஒன்றாகப் பாவிக்குமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஜாக்கி, நாஞ்சில் பிரதாப், மயில்ராவணன், மோகன் மற்றும் பலரும் எனது நண்பர்களே

  Comments

167 Comments

  1. Me The First…….:)

    Reply
  2. கருந்தேள் இந்த பதிவிற்கு எதிர் பதிவு போடுறேன்ன்னு Quantam Of Physics பத்தினா விளக்கம் கொடுக்க போறாங்க,
    ஆணா நீங்க கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் வரும்ன்னு நம்பிக்கை இல்லை,

    Reply
  3. உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு….. 🙂

    Reply
  4. hmm..good..

    //எனவே, எனது விவாதத்தை, ஆரோக்கியமான ஒன்றாகப் பாவிக்குமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்//

    lets see… 🙂

    Reply
  5. This comment has been removed by the author.

    Reply
  6. என்னுடைய கருத்துக்கள் பல அப்படியே இதில் இருக்கிறது.நம்மால் இதுவரை கேட்கப்பட்ட கேள்விகள் (உங்கள் பதிவிலும்,கமெண்ட் மூலமும்) இன்னும் சரியான பதிலை எதிர்கொள்ளவே இல்லை. உப்புச்சப்பில்லாத பதிலே வந்து கொண்டு இருக்கிறது.

    பார்ப்போம்,நமது கேள்விகளுக்கு ஏதேனும் உருப்படியான பதில் வருகிறதா என்று.

    Reply
  7. கமலஹாசன் இவளவு நாள் எமற்றிகொண்டிருந்தார் என்று தெரியாமல், இப்பொது தெரிந்த பின்பு கூட நம்ப மறுக்கும் அவரது ரசிகர்களை ஒன்றும் செய்ய முடியாது. தங்களின் முயற்சி வீண் என்றே சொல்ல வேண்டும். 5 வருடங்களாக தங்களை நன்றாக ஏமாற்றிவிட்டு பின்பு தேர்தல் நேரத்தில் மட்டும் பல போலி பிரச்சாரங்களோடு வரும் அரசியல்வாதிகளையே நொடியில் மறந்துவிடும் நம் மக்கள், உலக நாயகனின் திருட்டுத்தனங்களையா புரிந்து கொள்ள போகிறார்கள். வேண்டுமஎன்றல் பாருங்கள் உலக நாயகனின் அடுத்த படத்திற்கான கட்-அவுட் வைப்பதிலும், பாலாபிஷேகம் செய்வதிலும் மும்முரமாக இருப்பார்கள். இவர்களை திருத்தவே முடியாது. வேற நல்ல வேலை இருந்த பொய் பாருங்கள்

    Reply
    • venkatesh

      kamal hassan cinema neraiya parthirukiren matrum avar english movie”lerunthu edutha( thankal paasaiel thirudiya)katchikalaium parthirukiaren. example : “Avvai shanmughi-mrs doubtfire”,
      aalavanthan’il kathi’il bouble gum’ai otti athil kannadi thundai otti theevera vathiyai paarkum kaatchi-saving private ryan”.kamal veru mozhi cinema’il irundhu edupathai mattum thozhilaga kollavillai.avar 1 sirantha nadigar,producer,director,etc…avar edutha cinemavil avarai badhitha kaatchikalum irundhana.athu thavira cinamavai pozhuthupokkaha karuthuvorthan athikam.unkalai pol,ennai pol paarvaiyalarhal kuraivu.avarhal pira mozhi padankal parpathu kuraivu,athai inku maatri kaatuvathu thavarillai(athu eamatruvathum ellai).neenkal tharchamayam padipathu,eluthuvathu ellam matrvar solli athai paarthudan atharkaha neenkal eamatrubavar,thirudubavar endruaahividumaaa?
      ippadi cinemavil copy adipathai sollikondu ponal urupadiyaka oruvarum mincha mattarhal.
      oru nalla nadiharai,kalaignanai mathikka kattrukollunkal nanbarey…
      nankal already thirunthidan ullom.avar rasihar aagiya enkalai thankal ethuvum seiyavum vendam,ethuvum seiyavum mudiyathu.etha vida nalla velai irundhal poi parunka boss…

      Reply
  8. Integrity and truth form the core of a creator. without that s/he would simply be a mortal and not a creator. so kamal, without any of those to his credit, is just like all other people we see in our cinema industry. [ithukku per kooda copy adichu thaan vakkanumaa! calling it as kollywood, bollywood etc etc.. oru per kooda original kidayathu!!] rules are made to be broken – thats our philosophy!! Well done Karundhel. Can’t understand how our people still support a cheat even when it is proved beyond a doubt.

    Reply
  9. நண்பா,
    கொடைக்கானல்லேர்ந்து வந்தாச்சா?
    செம கேள்விகள்,நண்பர்கள் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்,நம் அமீரக நண்பர் செந்தில்வேலனையும் ஆட்டிக்கு சேர்த்துகோங்க.
    அவரின் பதிவு இதோ:-

    http://senthilinpakkangal.blogspot.com/2010/09/blog-post_11.html

    நான் ஏன் கமல் ரசிகனாக இருக்கிறேன்?

    Reply
  10. ராஜேஷ் எனக்கு ஒன்னு புரியல,

    லண்டன்ல ஷாப்பிங் பண்ணுறவனுக்கும், கடலூர்ல ஷாப்பிங் பண்ணுறவனுக்கும் தான் நீங்க சொல்லுற வித்தியாசம்..எனக்கு தெரியுது நீங்க வாங்குறவங்கள குத்தம் சொல்லலைன்னு..கடைக்காரன் அதே ஸ்டைல்ல கடைய விரிச்சலும் வாங்குறவனுக்கு சந்தோசம் தான் அவன் எதை காப்பி அடிச்சாங்கறது அவன் கவலை இல்லை..கிட்டதட்ட இதே மாதிரி தான்..பதிவுலகம் வருகிற வரை எனக்கு உலக சினிமான என்னனே தெரியாது..என்ன மாதிரி தான் பல பேரும்..நான் கமல் ரசிகன் இல்லை..கமல் பேட்டி எனக்கு அறவே பிடிக்காது..தசவதாரம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை..ஆனால் உன்னைப்போல் ஒருவன் வெகுவாக ரசித்தேன்..அதுக்கு முன்னாடி பலமுறை Wednesday பார்த்து இருந்தும்..எனக்கு நஸ்ருதீன் ஷா எப்படி நடித்து இருந்தாலும் பிரச்சனேயே இல்லை..’தமிழ்’லில் நன்றாகவே இருந்தது.
    கமல் ஒரு நடிகர் மட்டும் தான் அவர் சமூகத்தை திருத்த வந்த காவலர் இல்லை..அவர் எதை பார்த்து காப்பி அடித்தார் என்ற கவலையும் இல்லை..காப்பி அடிப்பது தான் பிரச்னை என்றால் சினிமாவுலகம் மட்டும் அல்ல நம் போடும் சட்டையில் கூட இதுக்கு மூலக்கூறு இங்கே இருந்து தான் வந்தது என்று போட வரும்..

    கருத்து மட்டும் தான் கோபம் இல்லை ..
    வினோத் கெளதம்.

    Reply
  11. நண்பா,
    நம்ம வினோத்துக்கும் காபிரைட் பத்தி கவலையில்லையாம்,ரொம்ப அருமையான கருத்து தான்:))

    Reply
  12. நான் ஜாக்கி பதிவு இப்பொழுது தான் படித்தேன்..கிட்டதட்ட நான் சொன்னதும் அதே தான் ..

    Reply
  13. @ கீதப்ரியன் – நண்பா.. கொடைக்கானலில் தான் இன்னமும் இருக்கிறேன் ;-). செந்தில்வேலனின் பதிவைப்பற்றியே எனக்குத் தெரியாது ;-). உங்கள் லின்க்கைப் பிடித்துப் போயிப் பார்த்ததில், தலைவரும் நான் மேலே குறிப்பிட்டுள்ள அதே ஸ்டைலில் தான் எழுதியிருக்கிறார்.. அவருக்குத் தனியாக பதில் தேவையில்லை. மேலே குறிப்பிட்டுள்ள பதில்களே போதும் என்று நினைக்கிறேன் 😉

    Reply
  14. @ keanu – எந்தக் கேள்விக்கும் நேரடிப் பதில் வரவே வராது.. அது உறுதி 😉 .. முழுப்பூசணிக்காயை எப்புடிங்க சோத்துல மறைக்க முடியும் 😉 நன்றி

    @ கௌதமன் – நன்றி நண்பா..

    @ பாரதி வடிவேல் – yes.. let’s wait n c 😉 நன்றி

    @ இலுமி – கேள்விகளுக்குப் பதில் வரும்.. எப்படித் தெரியுமா? “ஆதாம் ஏவாள் ஒன்றுதான். நாமே அவர்களின் காப்பி தான்’.. அல்லது ‘ஒரு ஹோட்டலில் உள்ல உணவுதான் இன்னொரு ஹோட்டலிலும் உள்ளது” வகையறா… 😉 வேறு சாரமான, லாஜிகலான பதில் கட்டாயம் வரப்போவதில்லை 😉 உங்களது பல கருத்துக்கள், என்னுடைய வாதத்துக்கு வலு சேர்க்கின்றன. உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

    @ MCA – //வேண்டுமஎன்றல் பாருங்கள் உலக நாயகனின் அடுத்த படத்திற்கான கட்-அவுட் வைப்பதிலும், பாலாபிஷேகம் செய்வதிலும் மும்முரமாக இருப்பார்கள். இவர்களை திருத்தவே முடியாது. வேற நல்ல வேலை இருந்த பொய் பாருங்கள்//

    நச் !! இதற்கு மேல் உண்மையை யாரும் கூறிவிட முடியாது நண்பரே.. நன்றி

    @ Cinna – உங்கள் கருத்தே தான் எனது கருத்தும். மிக்க நன்றி நண்பா

    @ வினோத் கௌதம் – நண்பா.. உன்னைப்போல் ஒருவன், wednesday யை விட நல்ல படம்னு நீங்க சொன்னா, அது ஒரு அபாண்டம்னு நான் சொல்லுவேன். உன்னைப்போல் ஒருவனில் வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் விரோதக் கருத்துக்களை நீங்கள் அறிவீர்களா? முஸ்லிம்களின் இருதாரத் திருமணத்தைப் பற்றிக் கேலி செய்து சிரிக்கும் அரக்கத்தனம் அப்படத்தில் உண்டு. மற்றும், குண்டுவெடிப்புகளைப் பற்றி , வலிந்து வரவழைத்துக்கொண்ட பரிதாப உணர்ச்சியோடு கமலின் பாத்திரம் பேசும்போது, அவரது நிறவெறி உங்களுக்குப் புரியும். இல்லையெனில், இப்போது இன்னொரு முறை பாருங்கள்.

    மற்றபடி, காப்பிரைட் பற்றி உங்களுக்குக் கவலை இல்லை என்று நீங்கள் கூறும் கருத்துக்கு உடன்பட மறுக்கிறேன். நன்றி

    Reply
  15. அய்யோ அதான் பிரச்சினையே நீங்க சொல்லுற வரை அதை நான் கவனித்ததே இல்லை..எனக்கு அது படம் மட்டும் தான்..எத்தனை பேர் உங்களைப்போல் கூர்ந்து நோக்குவார்கள்..
    நான் சொன்னதை நீங்க கவனிச்சாங்களா அது நல்ல படமா கெட்ட படமா என்பது என் பிரச்னை இல்லை..அந்த படத்தை நான் ரசித்தேன் அவ்வளோ தான் ..

    Reply
  16. ம்ம்… என்னமோ போங்க.. சொன்னா யாரு கேக்கறா… இந்தியன் படத்தில் தாத்தா கமலை கிழட்டுக் கூ….என்று சொல்லும்போது ஒரு எக்ஸ்பிரஸ்ஸன் குளோஸ் அப் ஷாட்டில் காட்டுவார்கள். அந்த ஷாட் அப்படியே நம்ம சிவாஜியிடம் இருந்து சுட்டது. அதே போல வாயை வைத்திருப்பார். சரி முகத் தசை மாற்றம் எல்லோருக்கும் பொது என்று இதைக் கூட ஏற்கலாம். ஆனால் கதையையும், மேனரிஸத்தையும் காப்பி அடிப்பதை திருட்டு என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது. காப்பரைட் வாங்கி எடுத்தாலும் அது காப்பி தானே.

    http://www.youtube.com/watch?v=RwkgbZEMOyo&feature=related

    இந்த சுட்டியில் சென்று பாருங்கள். ரஸல் குரோ virtuosity படத்தில் சாப்பிடும் போது செய்யும் பாவனையும், நடிப்பும், மற்றும் பிற நிர்வாணமாகத் தோன்றும் சீன்களில் தலையை ஆட்டுவதும் அப்படியே ஆளவந்தான் மொட்டைக் கமல்தான். இந்தப் படம் 1995ல் வந்தது.

    Reply
  17. பொழுது போக்கை சீரியஸாக்கி அதுக்கு இவ்வளவ்வு பதிவுகள் தேவைதானா தேள்… நீங்க எவ்வளவ்வு கத்தினாலும் எதுவும் நடந்திருமா.. அவரு ஆமாங்க நான் காப்பிதான் அடிச்சேன்னு உங்க கிட்ட வந்து சொல்லனுமா தேள்.. அப்படி சொன்னா அவர மன்னிச்சு விட்ருவீங்களா.. நம்ம நம்ம வேலைய பார்ப்போம் தேள்.. நாலு படத்த பார்த்தோமா அத சிலாகிச்சு எழுதினோமா.. அது போதுமே தேள்.. இதெல்லாம் பேசி நமக்கு என்ன கிடைக்க போது.. நான் சொல்றேனேன்னு கோபப் படாதிங்க.. இது அமெரிக்கா ஈராக் போர்ல நடந்துகிட்டத எதிர்த்து தமிழ்நாட்டுல ஏதோ ஒரு மூலைல இருக்கற ஏதோ ஒரு பட்டில ஒரு மூணு பேரு சேர்ந்து கோஷம் போட்டு எதிர்ப்ப காமிக்கற மாதிரி இருக்கு எனக்கு.. கமான் தேள் கம் அவுட் ஆப் திஸ்..

    இப்படிக்கு,

    இன்னும் நிரைய உலக படங்கள பத்தின பதிவுகள உங்க கிட்டு இருந்து எதிர்பார்க்கும் ஒரு கடைக்கோடி சினிமா ரசிகன்,

    இராமசாமி கண்ணண்.

    Reply
  18. நீங்கள் காலணா பெறாத ஒரு விஷயத்தை பதிவாகப் போட்டு இருக்கிறீர்கள். இது தேவை இல்லை எனபது எனது கருத்து. அதுவும் நீங்கள் எழுதி உள்ளீர்கள். இப்படி “ஜாக்கி, நாஞ்சில் பிரதாப், மயில்ராவணன், மோகன் மற்றும் பலரும் எனது நண்பர்களே.” என்று…

    ஜக்கி சேகர் செந்தில் குமார் விஷயத்தில் ஆடிய நடனம் கேள்விப்பட்டால் சிவபெருமானே அளவுக்கு மீறி வெட்கப்படுவார்! அப்படி ஒரு நடனம் ஆடினார். அது போகட்டும்…

    ஜாக்கி சேகர் எழுதின பதிவில் மனசாட்சியை அடகு வைத்து கமலுக்கு ஆதரவா எழுதி இருந்தார் எனபது எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் நான் ஜக்கி சேகர் பிளாக்கில் ஒரு பின்னோட்டம் இடவில்லை. தூங்கற மாதிரரி நடிப்பவர்களை எழுப்ப முடியாது! அதனால் ஒரு பின்னோட்டம் இடவில்லை.

    அனாலும் ஜக்கி முன்னுக்கு வர ஆசைப்பட்டு கமலுக்கு PRO வர தகுதியை வளர்த்துக்கொண்டு இருக்கிறார். யாருக்கு தெரியும் இது கமலின் PRO ஆகவேண்டிய அச்சாரம் ஆக இருக்கலாம். அது தவறே இல்லை.

    ஏன்? என்னை மாதிரி ஒரு கருப்பன் முன்னுக்கு வருவதை நான் வரவேற்கிறேன்…நாம இப்படிதான் முன்னுக்கு வரவேண்டும். ஆகவே ஜக்கி செய்தது சரி! நீங்கள் முன்னுக்கு வந்தா நான் முன்னுக்கு வந்தா மாதிரி.

    அதே சமயம் செந்தில் குமார் மாதிரி ஆளுங்கள் செயும் தவறை கமல் செய்த தவறுகள் மாதிரி நியாப் படுத்ந்த்களேன்! மன்னிக்கவாவது செய்வீகளா? அதையும் செயுங்கள். அப்படியே கமலுக்கும் கூஜா தூக்குங்கள். அதில் தவறில்லை.

    கூஜா தூக்குவது நம்ம பரம்பரை தொழில் தானே? நான் என்னை சொன்னேன்…

    ஜக்கியை சொல்லவில்லை! மறுபடியும் நான் ஜக்கியை சொல்லவில்லை!!!!

    Reply
  19. தலைவா அப்புடியே நம்ப சூப்பரா ஸ்டார் ரஜினி பத்தி பதிவு போடு தலைவா .ஆன்மிகமா வியாபாரமா இத பத்தி பதிவு போடு தலைவா.

    Reply
  20. தலைவா அப்புடியே நம்ப சூப்பரா ஸ்டார் ரஜினி பத்தி பதிவு போடு தலைவா .ஆன்மிகமா வியாபாரமா இத பத்தி பதிவு போடு தலைவா.

    Reply
  21. தேளு இத வச்சு 4 பதிவை ஓட்டி விடலாம் நினைக்கிறயா????

    செல்லாது,செல்லாது, உடனடியாக அடுத்த படத்தை பற்றி விமர்சனம் எழுதவும்.
    எங்களுக்கு இந்த மாதிரி ‘அழுகுன’ பழம் வேணாம் நைனா,

    இல்லையென்றால் bangalore-ல் எங்கிருந்தாலும் தேடி வந்து உங்க வீட்டு வாசல் முன்பு பொரண்டு,பொரண்டு அழுவேன் 🙂

    be careful!!!!!!!1

    Reply
  22. படைப்புகளைத் திருடுவது ஒரு மானங்கெட்ட செயல். அப்படி திருபவர்களை போற்றவும் ஒரு மிகப் பெரும் ரசிகர் கூட்டம் இருப்பதை எண்ணி நாம் மனம் நோக வேண்டியுள்ளது. சிறந்த படைப்புகளை பிரதி எடுக்கலாம், ஆனால் அவை ஒரிஜினல் படைப்புகளுக்கு புகழ் சேர்க்க கூடிய வகையிலும் அதை விட உருவாக்கத்தில் சிறப்பானதாயும் இருக்க வேண்டும். மிகச் சிறந்த உதாரணம் Martin Scorsese இன் The Departed. ஹாங்காங்கின் Infernal Affairs படத்தை தழுவி (காப்பி இல்லை, ரீ மேக்) எடுக்கப் பட்டது. இரண்டு படங்களையும் பார்த்தவர்களுக்கு Martin Scorsese ஏன் சிறந்த கலைஞனாக மதிக்கப் படுகிறான் என்பது விளங்கும். கமலிடம் அந்த அளவுக்கு திறமை இல்லாவிட்டாலும், குறைந்த பட்ச நேர்மை கூட இல்லாமல் போனது துரதிர்ஷ்டமே.

    Reply
  23. சில பேர் எண்பதுகளில் ரஜினி படங்கள் இந்தியில் அமிதாப் படங்களிலிருந்து காப்பி அடிக்கப்பட்டவை என்று சொல்லியிருந்தார்கள் – பில்லா, தீ, மாவீரன் போன்ற படங்கள். அவையெல்லாம் ரீ-மேக் உரிமை பெறப்பட்டு எடுக்கப்பட்டவை என்று நம்புகிறேன். உண்மையா?

    Reply
  24. எனக்குக் கமல் மீது ஒரு கோபம் தான்.

    ஆரம்பத்தில் கமல் படங்களை – ராஜ பார்வை, நாயகன், தேவர்மகன், தெனாலி – பார்த்து வியந்திருக்கிறேன். எப்படியெல்லாம் கதை எழுதுகிறார் என்று. பின்னாளில் உலக சினிமாக்கள் அறிமுகமான பிறகு இப்படியெல்லாம் காப்பி அடித்துத்தான் படம் எடுத்துள்ளார் என்று தெரிந்தது என் உணர்வு இப்படித்தான் இருந்தது…

    – ஒருவர் என்றும் பரிட்சையில் முதல் மதிப்பெண் எடுப்பவராகத் திகழ்கிறார். கல்லூரியே அவரை தலைசிறந்த புத்திசாலி என்று தலையில் தூக்கி வைத்து ஆடுகிறது. கடைசியில் பார்த்தால் அவர் பிட்டடித்துத்தான் அந்த மதிப்பெண்கள் எடுக்கிறார் என்பது தெரியவருகிறது? எப்படியிருக்கும் அப்போது? – இதே உணர்வுதான் எனக்கிருந்தது.

    அதனாலே கோபமும் வருகிறது. என்னத்தச் சொல்ல.

    Reply
  25. @ வினோத் கௌதம் – உங்க பாயிண்ட் புரியுது தல.. ஆனா இப்பல்லாம், படத்த ரசிச்சா மட்டும் பத்தாது… அதுல சொல்ல வர்ரது என்னன்னு நாம தெரிஞ்சிக்கணும் இல்லையா? இப்ப, படம் ஒரு தீவிர மதவாத சாயம் பூசப்பட்டிருந்தா, அதை சப்போர்ட் பண்ணுற நாமும் மதவாதி ஆயிருவோமே.. இதுல நாம கேர்ஃபுல்லா இருக்கணும் இல்லையா?

    @ ரகுநாதன் – கமல் காப்பியடித்தவை, கடலளவு… நாம் இங்கே பார்த்திருப்பது கைமண்ணளவே ;-).. அவர் ஒரு காப்பி சமுத்திரம் நண்பா… உங்க உதாரணம் டாப் டக்கர் ! நன்றி 😉

    @ இராமசாமி கண்ணன் – உண்மையைச் சொல்லி விடுகிறேன். என்னைப்பொறுத்தவரையில், பொழுதுபோக்கு என்பது, திரைப்படங்கள் கிடையாது. திரைப்படங்களை ஸ்டடி செய்துகொண்டிருக்கும் ஒரு மாணவன் நான் என்று சொல்லிக்கொள்ளவே விரும்புகிறேன். அப்படி இருக்கையில், அவற்றில் இப்படிப் பித்தலாட்டங்கள் நடப்பதை, சொல்லாமல் என்னால் இருக்க இயலாது நண்பா.. அதுதான் இப்பதிவுகளுக்குக் காரணம். கமல் வந்து என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது போன்ற அசிங்கமான ஆசைகள் எதுவும் எனக்குக் கிடையாது. நடந்துகொண்டிருப்பதை வெளியே சொன்னேன். அவ்வளவே..

    சொல்லிவிட்டீர்கள் இல்லையா? இதோ அடுத்த விமர்சனம் ரெடியாகிக்கொண்டிருக்கிறது. விரைவில் வரும் 😉 .. நன்றி..

    @ ஆட்டையாம்பட்டி அம்பி – நீங்கள் ஜாக்கிக்கு எதிராக வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் மிகக்கடுமையாக இருக்கிறதே.. இவற்றைப்பற்றி ஜாக்கியே பதில் சொல்வார் என்று நினைக்கிறேன். நன்றி.

    @ Dinacaty – ரஜினி பத்திதானே? போட்ருவோம்.. கண்டிப்பா..

    @ சரவணக்குமார் – ஆஹா 😉 ..அய்யய்யோ வேணாம்.. நீங்க அழுதா, எம்மனசு தாங்குமா? தாங்காது.. அதுனால, அடுத்த பதிவு ரெடி பண்ணிரலாம் 😉 நன்றி

    @ Ben – கமல், ஒரு தேர்ந்த சினிமா வியாபாரி மட்டுமே. அவருக்கு, எந்தச் சரக்கு எங்கே விலைபோகும் என்ற விஷயம் நன்றாகத் தெரியும். அவரது பாலிஸி இதுதான் – ‘காப்பியடிப்பது எனது பிறப்புரிமை. நான் பாட்டுக்கு, ஒரு அறிவுஜீவி ரேஞ்சில் மக்களை ஏமாற்றிக்கொண்டு தான் இருப்பேன். நீங்களெல்லாம், எனக்கு விருதுகளைத் தந்து, எனது காப்பியடித்தலை official ஆக்கிவிடுங்கள். மக்கள் கூட்டம் ஒரு ஆட்டுமந்தை. அவர்கள் என் பின்னாலேயே வருவார்கள். ஸோ, அடியுங்கள் காப்பி’.. இதுதான்… 😉 உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா..

    @ முகிலன் – எண்பதுகளில் வெளிவந்த ரஜினியின் பிரபல ஹிட்டுகளான பில்லா, வேலைக்காரன், பணக்காரன், சிவா, தர்மத்தின் தலைவன், பாஷா, படிக்காதவன், நான் சிகப்பு மனிதன் ஆகிய பல படங்கள், அப்படியே அமிதாப்பின் மற்றும் சில ஆங்கிலப்படங்களின் ஈயடிச்சாங்காப்பி தான்… அது இன்னொரு காப்பி சமுத்திரம்… காப்பியடிப்பதில் கமல், ரஜினி இருவருமே ஒன்றுதான் என்பது எனது கருத்து. ரீமேக் உரிமையா? கிலோ என்ன விலை?

    மற்றபடி, //ஒருவர் என்றும் பரிட்சையில் முதல் மதிப்பெண் எடுப்பவராகத் திகழ்கிறார். கல்லூரியே அவரை தலைசிறந்த புத்திசாலி என்று தலையில் தூக்கி வைத்து ஆடுகிறது. கடைசியில் பார்த்தால் அவர் பிட்டடித்துத்தான் அந்த மதிப்பெண்கள் எடுக்கிறார் என்பது தெரியவருகிறது? எப்படியிருக்கும் அப்போது? – இதே உணர்வுதான் எனக்கிருந்தது//

    உங்களின் இக்கருத்தை முழுதும் ஆமோதிக்கிறேன்.

    Reply
  26. ///@ ஆட்டையாம்பட்டி அம்பி – நீங்கள் ஜாக்கிக்கு எதிராக வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் மிகக்கடுமையாக இருக்கிறதே.. இவற்றைப்பற்றி ஜாக்கியே பதில் சொல்வார் என்று நினைக்கிறேன். நன்றி.///

    உண்மை சுடும்..அப்போ அதன் பெயர் கடுமையா?

    //ஜாக்கிக்கு எதிராக வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் //

    எந்த குற்றச்சாட்டை நான் வைத்தேன். சொல்லுங்களேன். பதில் அளிக்கிறேன்.

    ///ஜக்கி சேகர் செந்தில் குமார் விஷயத்தில் ஆடிய நடனம் கேள்விப்பட்டால் தில்லை நடராசனே அளவுக்கு மீறி வெட்கப்படுவார்! அப்படி ஒரு நடனம் ஆடினார்.///

    இது குற்றச்சாட்டு அல்ல. இது அவருடைய நடனத்திற்கு கிடைத்த அங்க்கீகாரம். அவரை பெருமைப் பட சொல்லுங்கள்…

    ///அனாலும் ஜக்கி முன்னுக்கு வர ஆசைப்பட்டு கமலுக்கு PRO வர தகுதியை வளர்த்துக்கொண்டு இருக்கிறார். யாருக்கு தெரியும் இது கமலின் PRO ஆகவேண்டிய அச்சாரம் ஆக இருக்கலாம். அது தவறே இல்லை.///

    இது படிப்ப்பவர்களின் ஊகம. ஏன் அப்படி. நான் நினைத்தது தப்பா? காப்பி அடிச்சதை காப்பி அடித்துவிட்டு அதை காப்பி அடித்தவனை (செந்தில்குமார்) அப்படி கஞ்சி காசும் போது நானும் அவரை காந்தியின் தம்பி என்று தான் நினைத்தேன்…அப்புறம் இதைப் படித்தவுடன் தான் அவரும் ஒரு ஜுஜுபி என்று தெரிந்தது.

    இப்பதான் தெரியும் ஏன் அப்படி செய்கிறார் என்று. நீங்களே சொல்லுங்கள் இந்த ஒரு பதினைந்து நாளில் குரங்குகளே வெட்கப்படும் அளவுக்கு அடித்த அந்தர் பல்டிக்கு காரணம் என்ன? ஏன் இப்படி?

    அதே சமயம் செந்தில் குமார் மாதிரி ஆளுங்கள் செயும் தவறை கமல் செய்த தவறுகள் மாதிரி நியாப் படுத்ந்த்களேன். அதை செய்ய சொல்லுன்கள். அப்படி அவர் செய்யாவிட்டால் இந்த குரங்கு பல்டி(அவரது கொள்கையில்) சுய நலம் தான்.

    அனாலும் எனக்கு ஜக்கி மெது ஒரு பரிவு உண்டு….இப்படி குரங்கு பல்டி அடிக்காமல் அவாளுக்கு சொம்பு தூக்காமல வாழ்கையில் முன்னுக்க்கு வர முடியாது என்று எனக்கும் தெரியும்.

    அதனால் ஜாக்கி செய்தது சரி தான்…

    Reply
  27. தேளு உங்க ஆதங்கம் புரிகிறது……………….
    நம்ம பிரதம மந்திரி மன்மோகன் சிங்க்கு தெரியும் யார், யார் எவ்வளவு ஊழல் செய்கிறார்கள் என்று, ஆனா சாக்கடையை சுத்தம் செய்கிறாற ???இல்லையே!!!!
    அவர் தான் பேரன், பேத்திகளுக்கு பதவி இருக்கும் வரை எந்த அளவிற்கு சேர்த்து வைக்க முடியுமோ அந்த அளவுக்கு சேர்த்து வக்கிறார்.
    அவர் மட்டும் இல்ல எல்லா அரசியல்வாதிகளும்,அரசாங்க ஊழியர்களும் ‘be practical’ இருந்து நல்ல ‘துட்டு’ சேர்த்து வக்கிறாங்க!
    அவ்வளவு ஏன், இந்தியாவில் உள்ள எல்லா directors and cine field people க்கு தெரியும் கமல் ஈயடிச்சாங்காப்பி அடிக்கிறார் என்று, இருந்தாலும் கமல் மேடை ஏறும் போது கைதட்டவில்லையா??

    கமல்,ரஜினி மற்ற எல்லாரும் பணம், புகழ் சேர்க்க தெரிந்த very good ‘business men’ .

    தேளு நீங்க ரத்த மையினால் எழுதினாலும் கூட ‘இவர்கள்’ தங்கள business-யை தொடருவார்கள்.

    எல்லாரும் ‘கோவணம்’ கட்டுற ஊர்ல நீங்க மட்டும் paint shirt போட்ட எல்லாரும் சிரிப்பார்கள்.

    தேளு ,இதல்லாம் விட்டு சாக்கடையை சுத்தம் செய்கிறேன் என்று உள்ள இறங்கி………………………

    Reply
  28. Mr.Kamal told yesterday in Jaya TV program that he is an Artist not a Businessman. It was not true. All Cine artists are behind money & fame. In this Mr.Kamal and Mr.Rajni are having mask of Artist & Devotee. Go thro Mr.R.P.Rajanayam blog old entries it was so good. nowadyas he stopped posting

    Reply
  29. hi,
    seems the same thought as charu says and thinks about kamal and tamil cinema.

    Reply
  30. இங்கு பின்னூட்டம் இட்ட கமல் ரசிகர்கள் பலர் முன்வைத்த வாதம் என்னவெனில் ரஜினி படம் காப்பி இல்லையா?விஜய் படம் காப்பி இல்லையா?என்பதுதான்..
    இவர்களை பற்றி விவாதிக்க தேவையில்லை..ஏனெனில் இவர்கள் ஆஸ்கார் இதோ வருது அதோ வருது என கூறியதில்லை..மேலும் இவர்களின் படங்களை ஒரு பொருட்டாக(பொழுது போக்கிற்கு தவிர்த்து)யாரும் பார்ப்பதில்லை.ஆனால் கமல் படங்களை வெறும் பொழுதுபோக்கிற்காக யாரும் எதிர்பார்ப்பதில்லை.ஏனென்றால் கமல் அவர்களே தான் தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லவும் ரசிகர்களின் ரசனையை மேன்மைபடுதுவதர்காகவும் தான் படம் எடுப்பதாக பல பேட்டிகளில் கூறியுள்ளார்.அத்தகைய ஒருவருக்கு உள்ள பொறுப்பை உணர்த்துவதற்காகவே பலரது விமர்சனங்கள் வருகின்றன..குறிப்பாக அவரின் படங்களை மட்டும் முன்வைத்து..
    இதை ஒரு ரஜினி-கமல் மோதலாக தேவையில்லாமல் திசை திருப்பாமல் அவரின் படங்கள் பற்றிய விமர்சனமாகத்தான் நாம் பார்க்க வேண்டும்.அதுவே ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு வழி வகுக்கும் என்பது என் கருத்து.

    Reply
  31. கருந்தேள், கீதப்பிரியன்,

    எனக்கும் பதில் எழுதியமைக்கு நன்றி.

    நீங்கள் கூறுவது போல அவை யாவும் அப்பட்டமான காப்பி என்று என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. கதைக்கருவை, காட்சியமைப்புகளை நம் மக்களுக்காகப் போதிய மாற்றங்களுடன் திரைக்கதை அமைக்கப்பட்டு வந்த படங்களே. இதை நீங்கள் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. நானும் நீங்கள் சொல்வதைப் போல “ஈயடிச்சான் காப்பி” என்பதை ஒப்புக்கொள்ளப் போவதில்லை. இருக்கட்டும்.

    o

    நீங்கள் கேட்கும் கேள்வி “காப்பிரைட்டை ஏன் வாங்கவில்லை?” என்பது.

    ஹாலிவுட் மற்றும் உலகப்படங்களுள் முக்கியமாகக் கருதப்படுவவை திரைக்கதை மற்றும் ஸ்டோரிபோர்ட் தான். இதை நான் சொல்லத்தேவையில்லை.

    ஹாலிவுட் படங்கள் எடுக்கப்படும் பட்ஜட் என்ன? குறைந்தது ஒரு 1000 கோடி வரை பட்ஜட் செல்கிறது. அப்படி எடுக்கப்படும் படத்தின் காப்பிரைட்டை என்ன விலைக்குத் தருவார்கள்? ஒரு 5% என்று வைத்துக்கொண்டாலும் 50 கோடி. மசாலா இல்லாத தமிழ்ப்படங்களின் வர்த்தகம் எந்த அளவிற்குச் செல்லும்?

    படம் மிகப்பெரிய வெற்றியடையும் பட்சத்தில் 30 கோடி? மீறிப்போனால் 50 கோடி? நல்ல தரமான படங்கள் 20 கோடியை வசூல் செய்வதே கடினம். இதில் எப்படி 50 கோடிக்கு காப்பிரைட் வாங்குவீர்கள்?

    யோசித்துப்பாருங்கள். நடக்கற விசயத்தைக் கூறுங்கள்.

    இல்லையில்லை காட்பாதர் எல்லாம் வந்து பல வருடங்கள் ஆகின்றன. அதனால் கம்மியான விலைக்குக் கிடைக்கும் என்று கூறுவீர்கள். ஐயா, பிரபலமான கலைப்பொருட்களுக்கு நாளாக நாளாகத் தான் மதிப்பு அதிகம். அது கார்பாதருக்கும் பொருந்தும்.

    வேண்டுமானால் ஒன்று செய்யலாம் 50 கோடிக்கு காப்பிரைட் வாங்கி 5 சண்டைகள் வைத்து 3 குலுக்கல் நடனம் வைத்தால் நன்றாக விற்பனையாகும், அதுவும் ரஜினியை நடித்து சன் பிக்சர்ஸ் வெளியிட்டால்…. அப்பொழுதும் உலகப்பட ரசிகர்கள் என்ன சொல்வார்கள்?

    “படமாடா எடுத்திருக்காங்க?”

    “சரி பரவாயில்லை. குறைந்தது படத்தின் கடைசியில் இப்படம் இந்தப்படத்தில் இருந்து “இந்தந்த காட்சிகளைக் காப்பியடித்தோம்… என்று பட்டியலிட்டால் என்ன?’ ” என்று கேட்பீர்கள்.

    காப்பிரைட் வாங்காமல் இப்படி போடுவதை விட காமெடி ஒன்றுமில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

    நடக்கற விசயத்தைக் கூறுங்கள்.

    o

    மேலே குறிப்பிட்ட விளக்கங்கள் மூலம் சப்பைக்கட்டு கட்டுவாதாக எண்ண வேண்டாம். இன்னும் கூறுகிறேன் கமல் தந்திருப்பது கருவில் இருந்து போதிய மாற்றங்களுடன் எடுக்கப்பட்ட தரமான படங்களே.. அதுவும் நம் ரசிகர்களின் USER EXPERIENCEஐ அதிகரிப்பதற்காக 🙂

    Reply
  32. Hello mr கருங் காக்கா கண்ணாயிரம் முதல்ல இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்ப்பம்? 70,80 களில் சிவாஜி, எம்.ஜி.ஆர். ரஜினி(கமல் உள்பட) இந்தியில் திலீப்குமார், ராஜேஷ் கண்ணா, தர்மேந்திரா, அமிதாப் இவர்கள் என்னசெய்தார்கள்? அங்கு வெற்றியாகும் படங்களை இங்கும், இங்கு வெற்றியாகும் படங்களை அங்கும் என மாறி மாறி ஒரே கதைகள் நையப்புடைக்கப்பட்டன.

    Reply
  33. அண்ணே ! உங்களது படைப்புகளை தொடர்ந்து படித்து வருகிறேன். நான் ஒரு கொடைக்கானல்வாசி, free-யா இருந்தா கூப்பிடுங்களேன், ஒரு cofee சாப்பிடலாம்! @ 9344959955

    Reply
  34. நண்பரே மகாராஜன்.. நீங்கள் கேட்டிருப்பது எனது பதிவில் நான்எழுதிய ஒருபத்தியை பற்றி அந்த உரிமையில் சொல்கிறேன்… கேட்பதை நாகரிகமாக கேட்கவும் அவர் புனைப்பெயர் கருங்காக்கா அல்ல கருந்தேள் என்பது உங்களுக்கு தெரியாதா??

    Reply
  35. நண்பர்களே,

    கமல்ஹாசன் தன்னை “எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்” என்று நினைத்துக்கொண்டு ஆடும் கூத்துக்களே இந்த “கலை” திருட்டுக்கு காரணம். ஏதோ வந்தமா, நடித்தோமா, கல்லாவை கட்டுனோமா என்று இருக்காமல். இவர்களை ஏதோ சமூகத்தினை திருத்த வந்தவர் போல இடம் கொடுக்கும் மூட மக்கள் இருக்கும் வரை இவர்களைப் போல் உள்ளவர்களது ஆட்டம்/கொட்டம் அடங்காது.

    கமல்ஹாசன் (மற்றும் சில நடிகர்கள், விவேக், ரொம்ப…) தோலைக்காட்சி பேட்டிகளைப் பார்த்தால் தெரியும். ஏதோ, ஒரு அறிவியல் மேதை, தன் கண்டு பிடிப்பை பற்றி மக்களுக்கு விளக்கம் கொடுப்பதை விட மிஞ்சும் அளவிற்கு பேட்டி கொடுப்பார்கள். கொடுமையடா சாமி.

    இவன்கள் வாயை தைத்து விட்டாலே, நாட்டில் பாதி பேர் அவரவர் வேலையை ஒழுங்கா செய்வார்கள்.

    சங்கர நா தியாகராஜன்
    நெதர்லாண்ட்ஸ் – கோயம்பத்தூர்.

    Reply
  36. கருந்தேள்,

    மேலே சொன்னது ரஜினிகாந்திற்கும் (கருத்து கந்தசாமி!) பொருந்தும், நீங்கள் ரஜினி ரசிகர் என்றாலும்!!!..

    சங்கர நா தியாகராஜன்
    நெதர்லாண்ட்ஸ் – கோயம்பத்தூர்.

    Reply
  37. தேள்… வரும்வாரம் கமல் வாரம் போலயிருக்கே 🙂

    Reply
  38. தேள்.. உணர்ச்சிகரமான சில விஷயங்களைத் தள்ளிவிட்டு படித்தால்.. வாதங்கள், பிரதிவாதங்கள் என்று இந்த மாதிரி விவாதங்கள் படிக்க சுவாரசியமாகவே இருக்கிறது.

    கமல் விவாதம் நல்ல முறையில் முடிவடையும் என்று நம்புகிறேன்.

    Reply
  39. Nanbare,
    Kodaikanalil irunthum kobam kuraiyavillaya?
    Enjoy d climate 🙂

    Charu websitela vantha araathu vimarsantha thodama vituteengale.

    Remember to visit Guna-Caves!
    🙂

    Natpudan
    Gokul

    Reply
  40. ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said…

    //படம் மிகப்பெரிய வெற்றியடையும் பட்சத்தில் 30 கோடி? மீறிப்போனால் 50 கோடி? நல்ல தரமான படங்கள் 20 கோடியை வசூல் செய்வதே கடினம். இதில் எப்படி 50 கோடிக்கு காப்பிரைட் வாங்குவீர்கள்?

    யோசித்துப்பாருங்கள். நடக்கற விசயத்தைக் கூறுங்கள்.
    //

    கொடுமைடா சாமீஈஈஈ!!!!!

    5% மக்கள் தொகை கொண்ட அமெரிக்கா, 20% உற்பத்தியை உபயோகிக்கிறது -ன்னு வேற ரொம்ப கவலைப் பட்டீங்களே தல??

    http://senthilinpakkangal.blogspot.com/2010/02/blog-post_19.html?showComment=1266639872988#c2326826466111950463

    ஒருவேளை, இப்படி கமல்(லும்) ஓசில காப்பியடிச்சி அந்த 20%-ஐ சரிகட்ட பார்க்கிறாரோ தல?!!!

    என்னைக்காவது, அமெரிக்க ப்ரொடீயூஸர்கள் இவங்க டவுசரை உருவினா அன்னிக்குத் தெரியும்.

    உங்களுக்கில்லை. காப்பியடிக்கிறவங்களுக்கு.

    ——-

    நான் போடும் கடைசி கமெண்ட் (அட்லீஸ்ட் இந்தப் பெயரில்) இது என்பதால், இந்த உலகப் பெருமை வாய்ந்த நிகழ்வு, கருந்தேள் ப்லாகில் நிகழ்வதை பெருமையாகக் கருதுகிறேன்.

    வாழ்க தமிழ்ப்பதிவுலகம்!!!!!!!!!

    Reply
  41. நாஞ்சில் பிரதாப் ….
    பாலா தான் இடையில் புகுந்து விளையாடுகிறார்.Profile Not Available எல்லமே பாலா-வின் திருவிளையாடல்கள்.
    சிவபெருமானின் திருவிளையாடல்கள் போல பாலாவும் திருவிளையாடல்களை அரங்கேற்றம் செய்து கொண்டுஇருக்கிறார்.

    Reply
  42. @ ஹாலிவுட் பாலா,

    நண்பரே,

    நான் கேட்ட கேள்விக்கு பதிலைக் கூறவும்.

    o

    நீங்கள் இங்கே சுட்டியை அளித்துள்ள இடுகை..

    நம் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுவரும் மாற்றமே அந்த இடுகையின் சாராம்சம். அங்கே நான் கொடுத்துள்ள புள்ளியியல் உண்மை தான் என்பது உங்களுக்கும் தெரியும்.

    o

    கமல் நீங்கள் சொல்வதைப் போல காப்பியடிச்சே கல்லாகட்ட முடியாத சூழ்நிலையில.. எங்க போய் காப்பிரைட் வாங்கி படமெடுப்பீங்க?

    Reply
  43. அதல்லாம் சரி , நாம சொந்தமா யோசிச்சி எப்ப பதிவ போட போறோம் ?

    Reply
  44. காப்பிரைட்ஸ் வங்க அவசியமும்தான் என்ன. கமல் ஆங்கிலப்படத்தை அப்படியே தமிழில் டப்பிங் பண்ணி வெளியிட்டாரா? இல்லை வெள்ளைக்காரன்கிட்டருந்து ஸ்கிரிப்ட் நோட்டை சுட்டு சீன் பை சீன் அப்படியே எடுத்தாரா? ஒரு கதைக்கருவை சுட்டு எடுப்பதில் என்ன தப்பு இருக்கிறது என்றுதான் தெரியல. அதற்கெல்லாம் காப்பி ரைட்ஸ் வாங்கனும்னா கிளம்புனா… பல மொழிகளில் பாதிக்கும்மேல் படங்கள் வெளிவந்திருக்கவே செய்யாது.

    கமல் சுட்ட எந்த ஆங்கிலப்படத்தின் இயக்குனரும் கமல் படத்தை சப்டைட்டிலோடு பார்த்தால் அவருக்கு அது புது அனுபவமாகவே இருக்கும். காரணம் அதில் கொடுக்கப்படும் உழைப்பு.

    ஒரு கதையை மையமாக வைத்த ராமாயணமே தினுசு தினுசாக எழுதப்பட்டுள்ளது. கமல் ஒருதன்னை ஒரு அறிவுஜிவின்னு சொல்றாருன்னு இவர்களே கற்பனை பண்ணிக்கொண்டால் அதுவும் அவர் தப்பா—??? என்னக்கொடுமை சாமி இது…

    Reply
  45. ஐயா மஹாராஜா,

    “Hello mr கருங் காக்கா கண்ணாயிரம் முதல்ல இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்ப்பம்? 70,80 களில் சிவாஜி, எம்.ஜி.ஆர். ரஜினி(கமல் உள்பட) இந்தியில் திலீப்குமார், ராஜேஷ் கண்ணா, தர்மேந்திரா, அமிதாப் இவர்கள் என்னசெய்தார்கள்? அங்கு வெற்றியாகும் படங்களை இங்கும், இங்கு வெற்றியாகும் படங்களை அங்கும் என மாறி மாறி ஒரே கதைகள் நையப்புடைக்கப்பட்டன”

    70, 80 களில் எந்த நடிகரும், “ஒலக நாயகன்னு” கூச்ச நாச்சமில்லாமல் போட்டுகிட்டு திரியலே. இப்போமாதிரி, ஆங்கில படத்தினை மிரட்டும் படம் எங்க படம்னு டமாரம் கொட்டலை. இதோ அடுத்த “ஆஸ்கார்” எங்க “ஒலக நாயகனுக்கு” தான் ஏமாத்தலை.

    AR Rahman “ஆஸ்கார்” வாங்கினால், “சீ சீ, இந்த பழம் புளிக்கும்” கதை தான் உங்காளிடம்!.

    சங்கர நா. தியாகராஜன்
    நெதர்லாண்ட்ஸ் – கோயம்பத்தூர்

    Reply
  46. அய்யா திரு TSHANKAR அவர்களே உங்கள் புரிதலை கண்டு உடம்பே புல்லரிக்குது. ஒரு படம் ரிலிஸ் ஆகும் முன்பு அதன் கலைஞர்களிடம் பேட்டி கண்டால் யாராவது இது அந்த படத்தின் தழுவல், இது மாதிரி நிறைய படம் வந்திருக்கு, பத்தோடு பதிணொண்ணு, இப்படில்லாம் பேட்டி கொடுத்து பார்த்திருக்கீங்களா?

    கமல், விவேக் என்றில்லை. எந்த ஒரு கலைஞரும் தன் உழைப்பை பற்றி, தன் சினிமாவைப்பற்றி உயர்வாகவே கூறுவான். அதை எடுத்துக்கொள்ளும் விதத்தில் உள்ளது. நீங்க அவர்களைப்பற்றி தப்பாக புரிந்துக்கொண்டதற்கும் அவர்களா பொறுப்பு.

    படு மொக்கையான தொட்டி ஜெயா படம் வரும்போது சிம்பு கொடுத்த அலம்பலையெல்லாம் எந்த வகையில் சேர்ப்பது, அட்டர் பிளாப் கஜேந்திரா படம் வந்தபோது சுரேஜ்கிருஷ்ணா பண்ணி அலப்ப்றையை எந்தவகையில் சேர்ப்பது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்… எல்லாரும் அப்படித்தான் இதில் கமலை மட்டும் குற்றம் சொல்வது ஒருவகையான பொறாமையின் வெளிப்பாடாகவே இருக்கிறது.

    Reply
  47. Have you produced anything that is destroyed?
    Whatever you have gained, you have taken from here.
    Whatever you gave, you have given here.
    Whatever belongs to you today, yesterday belonged to someone.
    It may belong to someone day after.

    —- kamal may quote as a theist like above

    (pls translate in tamil which will give you a apt meaning)

    Reply
  48. எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான் கமல் ஹாலிவுட் படங்கள் காபி

    அடித்தது பத்திரிகை வாயிலாக அல்லது ஆங்கில படங்கள் பார்த்தது முலம்

    நமக்கே தெரிந்தது தானே ,ரைட்ஸ் வாங்கி ,கிரெடிட் போட்டால் யாருக்கு வெளி

    நாட்டுக்கு லாபம் ,அந்த கமல் கொடுக்கும் பிச்சை காசினால் தான் பிழைக்க முடியுமா ஆங்கில படத்தை ஆங்கில மொழியிலேயே சம்பாரித்த பிறகு

    எதற்கு கமலிடம் பிச்சை எடுக்க வேண்டும் காசு கேட்டு

    அதற்க்கு எதாற்கு சாருவும் கருந்தேள் கண்ணயிரமும் ஏஜன்டுகளா

    ஆங்கில கல்வி முறை இல்லாத பொது நாற்பது ஐம்பது வருடம்

    முன்னர் தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகமாக ஆங்கில படத்தை மிக

    பெரிய அளவில் ஆதரவு கொடுத்தனர்

    இப்போ ஆங்கில கல்வி பயின்றும் ஆங்கில படம்

    சினிமா திரை அரங்குகளில் பார்க்கும் எண்ணிக்கை மிகவும்

    குறைந்து விட்டது ,அது கமலின் தவறு கிடையாது

    அதை மக்கள் நிராகரித்து இறுக்க வேண்டும்

    அடிப்படையில் மக்கள் அறியாமையில் தான் வென்றது

    என்று சொன்னால் அது மிகை ஆகாது

    இவ்வளவு உலக சினிமா பார்த்து ஒரு பொது உடைமை கருத்து

    கூட இல்லாமல் அவன் காபி அடிதான் இவன் காபி அடிதான்
    என்று சொல்ல வெள்ளைக்காரன் மேலும் கொள்ளைக்காரன் ஆக்க
    இதற்க்கு உலக சினிமா

    உங்களுக்கு எதுவும் பொது உடைமை கருத்து சொல்லி தரல

    che போன்ற படங்களில் பார்த்து கூட காபிரைட்ஸ்

    பற்றி பேசினால் வெளி நாடு கை கூலி ,அதிகார அடி வருடி

    என்று உங்களை நான் ஏன் சொல்ல கூடாது

    rich becomes richer

    richest becomes more richest

    உங்கள் வாதம்

    companies are becoming multi national companies

    and more companies merging and becoming mega
    conglomerates to loot all businesses adhu pola

    உங்கள் வாதம்

    அதை நியாயபடுத்த உங்கள் வாதம்

    copy right kidaiyadhu copy left thaan podhu udaimai

    நீங்கள் ஏதோ ஹாலிவுட் பிரதிநிதி போல பேசாதீர்கள்

    உங்கள் கதையை திருடி உங்களுக்கு வர வேண்டிய காசு

    வடை போச்சே என்பது போல எண்ணம் வேண்டாம்

    காபிரைட்ஸ் என்பதே சர்வாதிகாரம்

    பாபா படம் டி ஷர்ட் காபி ரைட்ஸ் நினைவு படுதிகுறேன்

    நாங்கள் மட்டும் தான் உபயோக படுத்துவோம் அய்ம்பது ரூபா டி ஷர்ட்

    நூறு ரூபா நாங்கள் மட்டும் தான் விற்போம் என்று சொன்னது லோடுஸ்

    கம்பினேஷ்

    modern pirates
    காபி அடிப்பது
    காபி லெப்ட் தான் பொது உடைமை அதிகார வர்கத்திற்க்கு காலம்

    காலமாய் எடுத்து வரும் உலக சினிமாக்கள் இதற்க்கு சாட்சி

    Reply
  49. பொது உடைமை சமூகத்தில், தனி உடைமை (சொத்துரிமை) அறவே ஒழிக்கப்படும். பொதுவுடமை என்பது பரவலாகப் பயன்படும் சொல். இங்கே தத்துவம் என்ற அடைமொழி சேர்க்க வேண்டியதில்லை. பொதுவுடமைத் தத்துவம் என்பது Philosophy of Communism என்ற பொருளில் வரும். Socialism என்பதற்கு சமூகவுடமை என்ற சொல் பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனாலும் பத்திரிகைகள் முதலியவற்றில் பெரும்பாலும் சோசலிஷம் என்றே எழுதுகிறார்கள்.

    Reply
  50. நாஞ்சில் ப்ரதாப்,

    “அய்யா திரு TSHANKAR அவர்களே உங்கள் புரிதலை கண்டு உடம்பே புல்லரிக்குது. ஒரு படம் ரிலிஸ் ஆகும் முன்பு அதன் கலைஞர்களிடம் பேட்டி கண்டால் யாராவது இது அந்த படத்தின் தழுவல், இது மாதிரி நிறைய படம் வந்திருக்கு, பத்தோடு பதிணொண்ணு, இப்படில்லாம் பேட்டி கொடுத்து பார்த்திருக்கீங்களா”

    உங்கள் பதிலை பார்த்த பின் எனக்கு தான் உடம்பு புல்லரிக்குது!! புல்லரிப்பது போகட்டும்!! நான் பேட்டியே ஒரு குப்பை என்கிறேன். நீங்கள் அவர்களை பேட்டி கண்டால் …என இழுக்கிறீர்கள். .

    “படு மொக்கையான தொட்டி ஜெயா படம் வரும்போது சிம்பு கொடுத்த அலம்பலையெல்லாம் எந்த வகையில் சேர்ப்பது, அட்டர் பிளாப் கஜேந்திரா படம் வந்தபோது சுரேஜ்கிருஷ்ணா பண்ணி அலப்ப்றையை எந்தவகையில் சேர்ப்பது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்… எல்லாரும் அப்படித்தான் இதில் கமலை மட்டும் குற்றம் சொல்வது ஒருவகையான பொறாமையின் வெளிப்பாடாகவே இருக்கிறது”
    நான் கமல் , விவேக் செய்வது தப்பு என்றால், நீங்கள் சிம்பு , சுரேஷ் கிருஷ்ணா என இவர்களின் எண்ணிக்கையை கூட்டுகிறீர்கள்.

    இயல்பான, தரமான கலைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே.. ஆனால் உங்கள் “கமலோ அல்லது விவேக்கோ” அந்த பிரிவில் இல்லை.

    சங்கர நா. தியாகராஜன்
    நெதர்லாண்ட்ஸ் – கோயம்பத்தூர்

    Reply
  51. //கமல் , விவேக் செய்வது தப்பு என்றால், நீங்கள் சிம்பு , சுரேஷ் கிருஷ்ணா என இவர்களின் எண்ணிக்கையை கூட்டுகிறீர்கள்//

    திரும்பவும் புல்லரிக்குது… இந்த எண்ணிக்கை ஒரு முடிவிலி. அதில் உங்கள் கண்ணுக்கு கமலும், விவேக்கும் மட்டும் தெரிவதுதான் ஆச்சர்யம். எப்படி சார் இது…நீங்க எப்பவுமே இப்படித்தானோ???

    Reply
  52. கமல் வெளி நாட்டு அள்ள கையாக இருந்து இருந்தால் எப்போதோ

    ஹாலிவுட் நடிகர் ஆகி இருப்பார்
    ,இந்த விவாதத்துக்கே இடம் இருந்து இருக்காது ,
    நம்மை ஆண்ட
    பிரித்தானியா குஈன் எலிசபெத் மகாராணி

    முன்னாலேயே விடுதலை முழக்கம் போட்டவர்

    மருதநாயகம் பூஜையில்

    Reply
  53. நாஞ்சில் ப்ரதாப்,

    தசாவதாரம்னு ஒரு குப்பைக்கு அடித்த லூட்டி இன்னும் மறக்கவில்லை, உன்னை போல் ஒருவன் படத்திற்கான பேட்டியில் சக நடிகனான மோகன்லால் நடிப்பிற்கான ஒரு இம்மி அளவு கூட பாராட்ட மனமில்லாத ஆளுதான், உங்க ஆளு.

    ஆனால் சிம்பு நாளைக்கே “ஆஸ்கார்” பரிசு வாங்கப்போற மாதிரி பேட்டியோ, சுரேஷ் கிருஷ்ணா ஒரு “ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்” மாதிரி பேட்டியோ கொடுக்க வில்லை. உங்காளுதான் உலகத்தில் உள்ள அத்தனை படங்களயும் சுட்டு அந்த நடிப்பை தானே “கண்டு” பிடிச்ச மாதிரி “பேட்டி” கொடுக்கிறாரே, அதை சொன்னால் ஏன் கோபம் வருது உங்களுக்கு?.

    நாஞ்சில், சற்று கோபப்படாமல், மற்ற மொழி படங்களையும் பாருங்கள். உங்களுக்கு புரியும், கமலின் நடிப்பின் தரம் எந்த அளவு என்று புரியும். என்னை “நீங்க எப்பவுமே இப்படித்தானோ???” என்று கேள்வி கேட்பதை விட்டுவிட்டு இதற்கான முயற்சியில் இறங்கினால் உண்மையை தெரிந்து கொள்வீர்கள். இல்லா விட்டால் எல்லோரையும் கேள்வி கேட்டுகொண்டே இருப்பீர்கள்.

    சங்கர நா. தியாகராஜன்
    தெதர்லாண்ட்ஸ்-கோயம்பத்தூர்.

    Reply
  54. எனக்கு கமல் மேல் ரொம்ப காலமாய் ஒரு பெரிய குறை உண்டு. திரையில் கதா பாத்திரமாக ஒன்றாமல், கமல் கமலாகவே வலம்வருவது. கமல் கமலாகவே வலம்வருவது என்றால் அவருக்கு நடிக்க தெரியாது, இத்யாதி, இத்யாதி என்ற ரீதியில் இல்லை.

    தேவைபடாத இடத்தில் ஒரு படத்தின் கதா பாத்திர தன்மைகளை மீறி அவர் ஆளுமையாய் முந்தைய / பிந்தைய படங்களில் கட்டி எழுப்பட்ட வணிக பிம்பத்தை தொடரும்போது, எரிச்சலே மிஞ்சுகிறது. அவர் நடிப்பை வெளிப்படுத்தலாம. அது பார்ப்பவனை அந்த கதா பாத்திரத்தின் தன்மையில் சென்றடையாதவரை, அது நடிகரின் மற்றும் இயக்குனரின் தோல்விதான். இதனை ரசிக்கவும், போற்றவும் செய்தால் அவர் நல்ல படங்களை தருவதாக நினைத்து கொண்டு, மிக சராசரியான படங்களை தருகிறார்.

    காப்பி அடித்தாலும், அடிக்காவிட்டாலும் ஒரு முழுமையான படைப்பை அவர் தந்தது மிக சில படங்களில் தாம். இதை தாண்டிதான் அவரை “காப்பி” விஷயத்தில் யோசிக்க தொடருகிறது. கமல் எடுத்தாளும் மூல படைப்புகளுக்கு உரிய ஆக்கங்கள் தராதது அவரின் முதிர்வின்மையையே காட்டுகிறது. காப்பி அடித்து எடுத்த படைப்புக்கு எப்படி அறிவு ஜீவி அங்கீகாரம் பெற மனம் வருகிறது?

    கமலை மட்டும் ஏன்?: மேலுள்ள விமர்சனத்திற்கும் மற்றும் பலர் கேள்விகளில் இருக்கும் “அவன் செய்தான் – இவன் செய்கிறான் ” என்ற சாக்கு போக்குகளுக்கும் ஒரே பதில்தான். – அது நீங்களே விரித்த வலை. இன்னு சரியாக சொன்னால் எனக்கு தெரியும், முடியும் என்ற எதிர் பார்ப்பை உண்டு செய்ததுதான். உங்கள் அளவுகோலைத்தான் உங்களை அளக்க பயன்படுத்துகிறார்கள்.

    Reply
  55. மக்களுக்கு விவரம் புரியாத காலகட்டத்துல..கமலுக்கு கிடைத்த வசதிகளை கொண்டு, பார்த்த உலக சினிமாக்களை கொண்டு.. தன்னை அந்த சூழலில் வித்தியாசப்படுத்தி காட்டி கொள்ள அவர் எடுத்த திரைப்படங்கள் தான் கருந்தேள் குறிப்பிட்டுள்ளது.அதில் ராஜபார்வை,குணா,தெனாலி,இவை மூன்றும் அதிர்ச்சி அளித்த.. பட்டியல்.நான் எதிர்பார்க்காதது.
    கமல் இதை திறம்பட செய்வதற்க்கு அமைக்கும் கூட்டனி அலாதியானது..(சிங்கிதம்,சந்தானபாரதி,அனந்து..இன்னும் பலர்).
    என்ன ஒண்னு இப்படியெல்லாம் நெட் வரும்..காமிக்ஸ் மட்டும் படித்த கருந்தேளுல்லாம் பின்னாடி உலக படம் பார்த்து நம்மள கிழிப்பாய்ங்கனு எதிர்பார்த்து இருக்க மாட்டார்.
    காப்பி ரைட்ஸ் டீ ரைட்ஸெல்லாம் இருந்தாலும்.. அப்பப்ப தருகின்ற பேட்டிகளில்.. நேர்மையாக ஆதாரப்படங்களை பற்றி சொல்லி இருந்தால்.. இந்த விவாதமே தேவை இல்லாமல் போய் இருக்கும். முடிவில்..கருந்தேள் சொல்லிய திரைப்படம் வேறு கமல் படம் வேறு என்று வாதம் செய்ய முடிந்தால்.. அது சரி.. இல்லையெனில் உண்மையை ஒத்து கொள்ளத்தான் வேண்டும்.(கருந்தேளுக்கு..அது சரி நம்ம நாட்டு சினிமா காப்பி அடித்து யாரச்சும் ஒலக படம் எடுத்த விவரம் ஏதும் இருக்க.. ?)

    Reply
  56. ஒலக நாயகனும் உங்க ஒலக பார்வையும்

    பிரபாகரன் அவர்கள் நமக்கு ஹீரோ

    ஒலக பார்வையில் தீவிரவாதி ராஜீவ் காந்தி கொலைக்கு பிறகு

    வீரப்பன் நமக்கு ஹீரோ ஆனால் கர்நாடகவுக்கு அவர் தீவிரவாதி

    அதே போல உங்கள் பார்வையில் கமல் கிரிமினல்

    அப்படி ஒலக படத்தை திருடி ஒலக சினிமா எடுக்க விட்டடாலும்

    ஒரு கிரிமினல் வக்கீலாகி அவர் குடும்பத்தில் எல்லாம் வக்கீல்கள்

    அண்ணன் அப்பா போல இவரும் கிரிமினல் வக்கீலாகி

    தன்னிடம் வரும் கிரிமினல்களை தன் வாத திறமையால்

    விடுதலை வாங்கி கொடுத்து மேலும் கிரிமினல் ஆகி இருப்பார்

    வக்கீல்கள் இருந்ததால் தான் என்னமோ அந்த ஹாலிவுட் படங்களை

    சுட்டார் ,

    சொல்வது சுலபம்

    ஆங்கில சினிமா போல எடுப்பது கஷ்டம்

    முழு நீள நகைச்சுவை புடம் தமிழில் யாரால் செய்ய முடியும்

    அது ஆங்கில பட உத்தி தானே

    முழு நீள நகைச்சுவை படம் யார் எடுத்தாலும் யார் நடித்தாலும்

    நான் கண்டிப்பாக பார்ப்பேன்

    கர்ரி ஒன செரீஸ் ச்ரழி பாய்ஸ் கோட்ஸ் முச்ட் பே ச்ரழி

    crazy boys ,carry on series,gods must be crazy

    பார்த்த அனுபவம்

    சந்திரமுகி போல சிவாஜி போல பாதி காமெடி பாதி சீரியஸ்

    அப்படி எல்லாரும் ஜெயிக்க முடிந்ததா

    அஜித் படம் ராஜா பாதி காமெடி பாதி சீரியஸ்

    முதல் நாள் ரசிகர்கள் சினிமா தியேட்டரின் கண்ணாடிகளை

    உடைத்து ரத்த களறி ஆச்சு

    ஒரு பகுதி நல்ல இர்ருக்கு இன்னொரு பகுதி நல்லா இல்லை படம்

    கண்டிப்பாக பிளாப்

    அந்த ஸ்க்ரீன் ப்ளே ரஜினிக்கு மட்டுமே கை கொடுத்தது
    இப்போ நான் மகான் அல்ல படத்திற்கு ஒரு பகுதி காமெடி

    ஒரு பகுதி சீரியஸ் அடி தடி

    படம் வெற்றி

    Reply
  57. வரி வட்டி கிஸ்தி யாரை கேட்கிறாய் மானம்கெட்டவனே

    என்று வீர பாண்டிய கட்ட பொம்மன் படத்தில் சிவாஜி பேசிய டயலாக்

    மீண்டும் ஒலித்தால் அது ஆச்சர்ய படுவதிற்கு இல்லை

    எந்த பணத்தால் அவர்கள் சினிமா கொம்பனி நடத்துகிறார்கள்
    டிவி சேனல்கள் நடத்துகிறார்கள்

    மக்களை கொள்ளை அடித்து மக்கள் வரி பணத்தை கொள்ளை அடித்து
    வருமான வரி ஏய்ப்பு செய்து கணக்கில் காட்டாமல்
    வந்த பணம் தான் சினிமாவில் சுழல்கின்றது

    அது நியாயமான வழியில் என்றால் நீங்க சொல்வது நியாயம்

    காபி அடிதான் என்பது

    இப்படி கோப்பி ரைட்ஸ் காபி ரைட்ஸ் என்று உரிமை கொண்டாடி

    வெறும் படத்தின் முன்னோட்ட காட்சியை கூட ஏதோ பெரிதா சாதித்தது போல

    வேறு எந்த தமிழ் சேனல்களுக்கும் கொடுக்காமல் இதை விட மஹா கொடுமை

    உலகத்தில் இனி மேல நடக்க வாய்ப்பில்லை

    நடக்கவும் போவதில்லை

    தமிழ் சினிமா சரித்திரத்தில் ,

    இதை விட வெட்க கேடான விஷயம்

    மன கேடான விசையம் நிறைய நடக்கும்

    கோபிரைட்ஸ் என்னும் பெயரில்

    இவ்வளவு நாள் யாரும் படம் எடுக்கலைய

    யாரும் எந்த சேனலுக்கும் கொடுக்காமல் இருக்கலைய?

    இதை இன்டர்நெட் என்னும் மாபெரும் பைரசி சக்தி

    எப்படி ஆப்பு வைக்க போகுது என்று பொறுத்து இருந்து பாருங்கள்

    நீங்க எவ்வளவவு தான் அதை கண்ட்ரோல் செய்ய நினைத்தாலும்

    அது மீண்டு விஸ்வரூபம் எடுக்கும்

    when u suppress something u repress the same thing

    Reply
  58. மக்களுக்கு விவரம் தெரிந்து தான் என்ன புண்ணியம்

    கல்வி அறிவு இருந்து ஆங்கில அறிவு இருந்து

    பேச் ஆடம்ஸ் patch adams

    ஸ்டார் மூவீஸ் star movies
    தொலைகாட்சியில் எத்தனை

    முறை

    திரும்ப திரும்ப போட்டார்கள் பார்க்க சொன்னால் யாரும் பார்க்கல

    நம்ம வீடு வரவேற்பறையில்

    வந்து கூட பார்க்க சொன்னாலும் யாரும்

    பார்க்கல

    ஆடல் பாடல் உடன் பார்த்து பழகிய கண்களுக்கு அது பிடிக்கல

    அது கமல் பண்ணிய வசூல் ராஜா படம் பார்த்தனர்

    என்ன வென்று சொல்ல மக்களின் அறியாமையை

    சீனா தானா பாட்டு வேற கண்ராவி

    திரு எல்.வி பிரசாத் அவர்கள் கமலை
    ஹிந்திக்கு அழைத்து சென்றார்

    ஏக் துஜே கேலியே முலமாக

    அப்புறம் ராஜா பார்வை நடித்து கொடுத்து படம் வெளி வர பெரிதும்

    உதவினார் .இது நடந்தது எப்போதோ

    அப்புறம் பிரசாத் அவர்கள் பேரன்கள் ரீமேக் ரைட்ஸ் வாங்கினார்கள்

    முன்னபாய் படத்திற்கு

    ஏற்கனவே டாக்டர்களை தாக்கிய படம் தெனாலி
    மற்றும் பம்மல் சம்பந்தம்
    அந்த மெட்ராஸ் பாசை

    என்ன வித்தாயசம் வித்தியாசம் காட்ட முடியும் கமலால்

    இருந்தும் அதை ஏற்று கொண்டார் ஏன் என்றால்

    பிரசாத் அவர்கள் பேரன்களுக்கு நான் கால் சீட் இல்லை என்று
    சொன்னால் நடித்து கொடுக்கவில்லை என்றால் அவர்களின்
    தாத்தா ஆவி கூட என்னை மன்னிக்காது என்று சொல்லி தனக்கு
    உடன் பாடு இல்லை என்றாலும் நடித்து கொடுத்தார் அந்த

    நல்ல மனதை புரிந்து கொள்ளாமல்
    தமிழனுக்கு தமிழன் தான் எதிரி என்பது போல தேள் கொட்டி கொண்டே

    இறுக்கே காபி காபி அடிதான் என்று

    வீட்டுக்கு வரும் ஸ்டார் மூவீஸ் கூட பார்க்காத தமிழர்களை

    பற்றி விமர்சனம் செய்யாமல்

    அதாவது ஸ்பூனில் ஊட்டி விட்டால் கூட சாப்பிட மாட்டேன் என்று
    அடம் பிடிக்கும் தமிழ் பட ரசிகர்கள் இருக்கும் வரை கமல் செய்வது

    தவறு இல்லை

    நெற்றி கண் திறந்தாலும் குற்றம் குற்றமில்லை

    கலைக்காக கலை திருட்டு தப்பில்லை

    Reply
  59. RED ALERT : “access” is a mental.so all stay away from him 😉

    Reply
  60. Mr. Karundhel……….
    Just tell me one thing… will you write another review after “ENDHIRAN” release that it is a copy of “IROBOT” , “TERMINATOR” , “MATRIX” movies and shankar&rajini should have taken copyrights from them….

    or..

    will you just say “TAMILIL INTHA ALAVU MUYARCHI EDUPPATHARKU SHAKARUM RAJINIYUM VENDUM”nu…

    BE HONEST…

    Reply
  61. Though Shankar directs rubbish movies, the ones he produced are all very decent and good. So, in that way, Shankar has atleast done something towards bringing quality movies to tamil cenima. But I guess, nobody in tamil cenima claimed as much as kamal that they are creating something thats original and creative and world-class.. (lets leave all the ‘intha kathai pudhusu’ speach that everybody gives which is meaningless). Thats the deceiving part.. not copyright or a piece of paper saying he is authorized to do it. He willfully misled us, the fans and the people in general, about his movies.. I still remember the days when I used wish for oscars thru kamal and the day I got to know that it was only for hollywood films.. And then I told myself he must have meant the foreign films category.. Still kamal was insisting on oscars and then I thought he might probably make some english movies. It took him some time to openly say that oscar is for english movies (Rahman had to get it twice, for kamal to say it aloud). It seems funny now. but thats that day my eyes started to open up towards kamal’s duplicity. It is really shocking that kamal didnt know the age-old saying in tamil (Pala naal thirdan oru naal agapaduvaan) and he makes movies in tamil.

    Reply
  62. I don’t think people will declare that they will stop going to kamal movies and start watching the “source” world movies after reading your blog posts 🙂 I am not a fan of Kamal but I still like movies “Mahanadhi” “Anbe Sivam” “Pammal K Sambandham”. Who cares whether it is a copy or original. Why don’t you guys mail to the “original” film makers about this issue so that they can sue kamal for that?! 🙂

    Reply
  63. Mr. Karundhel……….
    Just tell me one thing… will you write another review after “ENDHIRAN” release that it is a copy of “IROBOT” , “TERMINATOR” , “MATRIX” movies and shankar&rajini should have taken copyrights from them….

    or..

    will you just say “TAMILIL INTHA ALAVU MUYARCHI EDUPPATHARKU SHAKARUM RAJINIYUM VENDUM”nu…

    BE HONEST…

    ANSWER……………………………..

    Reply
  64. I hear many people here say ‘who cares?’ I think it is mainly bcoz we lack the creativity. Leveaving it asde, we should all care. We should have integrity in our personal life and expect that from the others. Being true and saying what you mean are basic human qualities. How can we ignore that? How can we ignore that from a person who claimed to bring world-class movies to tamil?
    This is not surprising though.. Kamal is one of us and he is just like the people who dont care. He is the reflection of many of us who tolerates and agree with plagiarism and deception. (aanaa, namma create panninathai mathavanga thirudum pothu thaan vali theriyum)

    Reply
  65. rahman won oscars only by the backing of twentieth century fox

    otherwise indian content or indian films

    it may have taken a life time to reach oscars n grammy

    it is only a marketing gimmick to make slum dog millionaire

    a success in india ,but it failed to live up to its expectations.

    some body should make a spoof of this in indian cinema

    to rip the western vested interests to loot money in india

    by this cheap tricks.

    same way like miss world miss universe

    once all the countries realised they r not getting their

    due recognition in that competition they wanted to
    stop participating

    all of a sudden after sen rai and lara dutta

    india stopped getting the coveted title

    poor Parvathy Omanakuttan Nair

    Miss World Runner Up MIss India 2008

    unable to snatch one more miss world title for india again

    Reply
  66. சந்திரமுகி க(வ)லையா ? – அறியா விஷயம் ஆயிரம் புரியும்

    http://www.thinnai.com/?module=displaystory&story_id=60504221&format=print&edition_id=20050422

    to read more pl visit the link
    உன்னை போல் ஒருவன் கமலை கிழித்தவர்கள்
    ,ஹிந்துவாக ரஜினி என்ன செய்து இர்ருகிறார் பாருங்க ,அதிகமா போஸ்ட் பண்ண முடியல

    சோ இந்த சைட் லிங்க் பாருங்க

    முன்னேற்பாடு, மணிசித்திர தாழ்ப்பாள் திறந்த பார்வை,
    போஸ்ட் மார்ட்டம் புலனாய்வு எல்லாம் இல்லாமல்
    ரஜினியின் ரசிகனாக பார்க்கிறவர்கள் மெய்மறந்து
    ரசிக்கிறார்கள். கமல் ?ாஸனுக்கு நன்றியுடன் ஆரம்பிக்கிறது டைட்டில்

    துர்கா என்னும் தெளிய பெயரை வேண்டுமென்றே ‘தர்கா ‘
    என்று மாற்றி உச்சரிக்கிறார். படம் நெடுக இந்த
    வெறுப்பேற்றல் தொடர்கிறது. பத்து தடவைக்கு மேல்,
    கால் விரல்களையும் சேர்த்துக் கொண்டு எண்ணுமளவு
    தர்கா… ஸாரி… துர்கா-வால் திருத்தப்பட்டபிறகும்,
    இந்தப் பழக்கம் மாறவில்லை.

    துர்கை கோவில்கள் தர்காக்கள் ஆகிவிட்டன என்கிறாரா ?
    எல்லா தர்காக்களையும் துர்கா ஆலயங்களாக
    மாற்ற அறைகூவல் விடுப்பது போல் இந்த பெயர்
    திரிப்பு இருக்கிறது. துளிக் கூட சிரிப்பும் வரவில்லை;
    வேறு எழவும் வரவில்லை. மற்றபடி கடினமானத்
    தமிழைக் கூடத் தெளிவாகப் பேசும்
    அமெரிக்கவாசி சரவணன், வேண்டுமென்றே
    இவ்வாறு உச்சரிப்பது ஏன் ? (சத்தியமாக
    கண்டிக்கவேண்டிய காட்சியமைப்பு இது.
    தேவையில்லாத பெயர்க் குழப்பம் எதற்கோ ?

    உருது எழுத்துக்கள் கலைந்து திரிந்து ‘சந்திரமுகி ‘யின்
    டைட்டிலாகின்றது. உருதுவை அழித்து நிலாவை
    தலைப்பில் தரிக்க வைக்கிறார்கள். சந்திரனை தலையில்
    சூடியவர் சிவன். சந்திராஷ்டம் நாள், இருபத்தியேழு
    மனைவிகளைக் கொண்ட சந்திரன், ராகு/கேது போன்ற
    அரக்கர்களை விரும்பாத சந்திரன் என்று இதைக்
    கொள்ளலாம். சந்திரமுகியின் அறை வாயிலில் சூலம்.
    இந்துத்வா பிரச்சாரத்தின் மற்றொரு வீச்சாகவே
    இந்த தலைப்புத் தோற்றத்தைக் கண்ணுறுகிறேன்.
    (ஆங்காங்கே வரும் ‘ ?ரீம்; க்லிம் ‘,
    முந்தைய புள்ளி எல்லாவற்றையும்
    சேர்த்து ரஜினியின் பாஜக ஆதரவு நிலையாக
    நிலை நிறுத்தலாம்.)

    சபரி மலை பக்தர்களை ரஜினி புண்படுத்துகிறார்.
    மண்டல விரதம் இல்லாமல் மலைக்கு செல்வது
    என்பது சரியே என்னும் குணத்தை விதைக்க நினைக்கிறார்.
    காலணி அணிவது, வீட்டில் இருக்கும்போது கூட
    காவி அல்லது கருப்பு வேட்டி அணியாதது, சவரம்
    செய்வது, பிறன்மனை நோக்குவது, காதலியுடன்
    மாஞ்சா போடுவது, ஆகியவற்றை அரங்கேற்றிய
    சூட்டோடு சபரி அய்யன் அய்யப்பனின் தரிசனம்
    செய்து திரும்புவதாக சொல்வது உண்மையான
    ஐயப்ப சாமிமார்களை வேதனைக்கும் நகைப்புக்கும்
    உள்ளாக்குகிறது. (கோவில் குருக்களின் பேச்சை
    அலட்சியப் படுத்துவது, ே ?ாமம் நிகழ்த்துபவர்களை
    மாயாவியாக சித்தரிப்பது, இறைவன் அடியார்களை
    திரை மறைவில் விலை கொடுத்து வாங்குவது என்று பிட்டு பிட்டாக்கிடலாம்.

    கற்றது கை byte அளவு; கல்லாதது internet அளவு
    என்பது போல் இன்னும் நான் கண்டுபிடிக்காத
    ஃபீலிங் எவ்வளவு சந்திரமுகியில் புதைந்து
    கிடக்கிறதோ…. வாருங்கள்… துழாவுவோம். நிச்சயம் ஏதாவது கிடைக்கும்

    – பாஸ்டன் பாலாஜி

    Reply
  67. பி.கு – எனது தளத்தில் நான் எழுதிவரும் கட்டுரைகள், எந்தச் சார்பு நிலையும் இல்லாமல், நடுநிலையாகவே வந்துகொண்டிருப்பது நண்பர்களுக்குத் தெரியும். இனியும் அப்படித்தான். எந்தச் சாதி மற்றும் மதச் சாயமும் அவைகளுக்கு இருக்கப்போவது இல்லை. எனவே, எனது விவாதத்தை, ஆரோக்கியமான ஒன்றாகப் பாவிக்குமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். என்று எழுதி விட்டீர். பிறகு

    ஆதாம் ஏவாள் ஒருவர்தான். அவரில் இருந்து தோன்றிய காப்பிகள் தான் நாமும் இத்யாதி இத்யாதி..” என்றும் எழுதினீர். அதாம் ஏவாள் உண்மையில் கட்டுக்கதை. அது ஒரு மதத்தின் நம்பிக்கை சார்ந்தது. உலகில் முதல் மனிதன் ஆப்ரிக்காவில் தான் பிறந்தான்.

    எனக்குள் ஒருவன் படத்தின் டைரக்டர் பாலச்சந்தர் அல்ல எஸ் பி முத்துராமன்.

    Reply
  68. நீங்கள் குறிப்பிட்ட திரைப்படங்கள் அனைத்தும் தமிழில் இருப்பதுபோல ஒவ்வொரு காட்சியும் இருக்கிறதா அல்லது அந்த மூலக்கதை வைத்து எடுத்தா. அல்லது எப்படி இரண்டும் ஒற்று போகிறது என்று எழுதினால் மிகவும் நன்றாக இருக்கும். ஏனென்றால் ” ரோசமான் ” படத்துக்கு பிறகு அதைபோல் கான்செப்ட் அனால் களம் மாற்றி உலகெங்கும் எத்தனையோ படம் வந்தது. இங்கே ஆயுத எழுத்து , விருமாண்டி போன்று. இதற்க்கு காபி என்று பெயர் இல்லை. இதுபோல் நீங்கள் விவரமாக எழுதினால் நன்றாக இருக்கும்.

    Reply
  69. கமல் ஆஸ்கார் கண்டிப்பாக வாங்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒவ்வொரு வருடமும் சபதம் செய்வது போல சில கமல் எதிர்ப்பாளர்கள் ஒரு வதந்தியை பரப்பி விட்டிருக்கிறார்கள். உண்மையில் கமல் ஒரு பெட்டியில் சொன்னது.

    ” ஆஸ்கார் நாம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அது அமெரிக்காவின் விருது. நமக்கு தேசிய விருது போல. அவ்வளவு தான். இன்னொன்று சிறந்த நடிகர் ஆஸ்கார் விருது வாங்கவேண்டும் என்றால் ஹாலிவுட் தயாரிப்பாளர் தயாரித்து நாம் ஆங்கிலத்தில் நடித்து தான் வாங்க முடியும். தமிழில் நடித்து வாங்க இயலாது. ஒரே ஒரு விருது தான் வெளிநாட்டவருக்கு. அது சிறந்த வெளிநாட்டு படம். அவ்வளவுதான். “

    இப்படி கமல் அடிக்கடி சொல்கிறார். ஆனால் கமல் எதிர்ப்பாளர்களுக்கு அப்பொழுதெல்லாம் காது கேக்காது. கருந்தேளுக்கும் தெரியும்.

    Reply
  70. @ rajendran – ஹாஹ்ஹா 😉 .. உங்கள் கமெண்ட் படித்து சிப்பு வந்திருச்சி ;-)… இந்த் ப்ளாக்ல இண்னிக்கி வரைக்கும் வந்துருக்குற எல்லா விமர்சனத்தையும் எடுத்துப் பாருங்க.. அவை எல்லாமே பக்கா நடுநிலைன்னு புரிஞ்சிக்குவீங்க.. 😉

    எந்திரன் மட்டுமில்ல.. இன்னும் வரப்போற எந்தப் படமா இருந்தாலும், காப்பின்னா, அது காப்பின்னு தெளிவா எழுதுற மிகச்சில தளங்களில் நமது தளமும் ஒன்று. யாருக்கும் ஜால்ராவோ சொம்போ தூக்க வேண்டிய அவசியம் இங்கே இல்லை 😉 .. ரைட்டா? இதுக்குப்போயி கமெண்ட்டை கேப்ஸ்ல வேற.. அதுவும் ரெண்டு தடவ போடுறீங்களே 😉 .. ஹாஹ்ஹா..

    Reply
  71. @ கிறுக்கன் – ஆதாம் ஏவாளைப் பத்தி எழுதினது நானில்லை 😉 .. அது, என் கட்டுரையைப் பார்த்துவிட்டு, எரிச்சலில் எழுதிய சிலரின் தளத்தில் அவர்கள் கொடுத்திருக்கும் உதாரணம்.. 😉 அதைத் தவறு என்று தான் நான் எழுதினேன்.. 😉

    எனக்குள் ஒருவன் இயக்குநர் முத்துராமன் தான். ஆனால் அது தயாரித்தது பாலசந்தர் என்று மட்டும் தான் எழுதினேன்.. இன்னொரு முறை தெளிவாகப் படித்துவிட்டு, இங்கே வரவும் 😉

    இங்கே வந்த (ஆய்)த எழுத்து, Amores Perros படத்தின் ஈயடிச்சாங்காப்பி என்று அறிவீர்களா? அது ரோஷோமானின் இன்ஸ்பிரேஷன் அல்ல. மற்ற படங்களைப் பற்றி முடிந்தவரை எழுதியிருக்கிறேன்.

    அதே போல், கமல் மேலே ஆஸ்கரைப் பற்றிப் புலம்ப்பியது, எப்போது தெரியுமா? ரஹ்மான் ஆஸ்கர் வாங்கியவுடன் 😉 .. பக்கா வயிற்றெரிச்சல் அய்யா அது ! இது உங்களுக்குத் தெரியவில்லையா என்ன ? 🙂

    Reply
  72. நீர் அப்போதுதான் பார்த்தீர் என்று சொல்லவும். அதற்க்கு ஓர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இதை அவர் சொல்லி விட்டார். இதையும் நீர் ஏற்றுக்கொள்ள மாட்டீர். முடிந்தாள் விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டு பாருங்கள். சாருவுக்கும் இது தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. அவரும் அதைதான் சொன்னார். ரகுமான் வாங்கிய கடுப்பில் சொன்னார் என்று. கமல் ஆஸ்கார் பற்றி எப்போதோ சொன்னார் என்று உமக்கு தெரியும் ….அனால் ஒப்புக்கொள்ள மாட்டீர்.

    Reply
  73. கருந்தேள் கண்ணாயிரம் அவர்களே இதுவே ஒரு தமிழ் படத்தின் பெயர் தானே ஐயா. உமக்கு சொந்தமாக ஒரு பெயர் வைக்க தெரியாதா. அதையும் திருடி வைத்து கொண்டு நீங்கள் செய்யும் அலப்பறை தாங்களை.

    கமல் நடித்த நீங்கள் குறிப்பிட்ட அணைத்து படங்களும் ஆங்கில படங்களின் இன்ஷ்பிரஷன் என்று நாங்கள் ஒற்றுக்கொல்கிறோம். ஆனால் ஈ அடிச்சான் காபி அல்ல. அதை நீங்கள் ஒற்றுக்கொல்லுங்கள்.

    என்னமோ நோபல் பரிசுக்காக பெரிய கண்டுபிடிப்பு பண்ணிட்ட மாதிரி சீன் போட வேண்டாம என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அதை நிரூபிப்பதற்காக மண்டை பிதுக்கொள்ளவேண்டம். இந்த விஷயம் யாரோ எப்பவோ சொன்னது. எங்களுக்கும் தெரியும். நீர் கண்டுபிடித்தார் போல் சீன் போட வேண்டாம்.

    கருந்தேள் அவர்களே உமக்கு திக்குவாய் இருக்கும் போல…அது உலக நாயகன்….ஒலக நாயகன் அல்ல…

    தப்பை குறிப்பிடுங்கள்…விவாதம் செய்யுங்கள்…அனால் யாரையும் அவமான படுத்தாதீர் கருந்தேள்…

    Reply
  74. நண்பரே,

    நீங்கள் கூறியது போல உலக சினிமாக்கள் இன்று இண்டர்நெட்டிலும், டிவியிலும் நமக்கு கிடைக்கிறது, ஆனால் என்னை போன்ற பாமர மக்களுக்கு படத்தின் கீழே காண்பிக்கும் சப்டைட்டில் பார்த்து, அர்த்தம் புரிவதற்குள் காட்சிகள் மாறிவிடுகிறது. விஷயம் இப்படி இருக்க , 75% தமிழ் சினிமா ரசிகர்கள் கமல் படங்கள் மூலமாகவே நல்ல திரைபடங்களை பார்கிறார்கள்.
    நீங்கள் சொன்னது போல உலக படங்களை நாம் landmark, spencer plazaவில் 300, 500 என்று காசு கொடுத்து பார்க்கிறோமா என்ன? யாரோ, எவரோ நெட்டில் ஏற்றியதை திருட்டுத்தனமாக டோரண்ட் மூலமாக பதிவிறக்கி பார்க்கிறோம், அப்போ நாமளும் கலை திருட்டு செய்பவர்கள்தானே?
    ஒரு ஓவியனாக சொல்கிறேன், மோனலிசா ஓவியத்தை நானும் வரையலாம், வண்ணங்கள் மாற்றலாம், நல்ல ஓவியனய்யா நீ என்று பேர் வாங்கலாம், விற்கலாம், தப்பில்லை. ஆனால் அது டாவின்சியின் ஓவியம் என்று விற்றால்தன் தப்பு. அது மாதிரிதானே கமலும் நமக்கு படங்களை தருகிறார். அவர் உலகப்படங்களை அச்சுஅசலாக அப்படியே கொடுத்து இது என் சொந்த உருவாக்க்ம் என்று சொன்னால்தான் தப்பு.

    Reply
  75. http://pitchaipathiram.blogspot.com/2010/09/blog-post_13.html
    தமிழ் சினிமா: அசலும் நகல்களும்

    Posted by சுரேஷ் கண்ணன்
    Monday, September 13, 2010

    please please c this ,thank u.

    சாமுவேல் ஜாக்சனின் ONE EIGHT SEVEN என்கிற திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது அதிர்ச்சி. அது பெரும்பாலும் கமலின் ‘நம்மவரின்’ காட்சிகளை ஒத்திருந்தது. ஆஹா! கமல் இதையும் உருவி விட்டார் போலிருக்கிறதே என்று நினைத்தேன்.

    ஆனால் விவரங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது நம்மவர் 1995-ம் ஆண்டும் ONE EIGHT SEVEN 1997-ம் ஆண்டும் வெளிவந்திருக்கின்றன. நம்மவரின் இன்ஸ்பிரேஷன், Sidney Poitier நடித்து வெளிவந்த 1967-ல் வெளிவந்த To Sir, with Love ஆக இருக்கலாம். ஆனால் ONE EIGHT SEVEN ‘நம்மவரில்’ இருந்து நகலெடுக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் (கமலுக்கும் – கரணிற்கும் கழிவறைக்குள் நிகழும் அந்த ஈகோ மோதல் உட்பட) அந்தப் படத்திலிலேயே உள்ளன. ஆனால் நம்மவரை விட ஆங்கிலப்படமே சிறப்பாகவும் யதார்ததமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் சொல்லி விடுகிறேன். சாமுவேல் ஜாக்சன், கமல் போல் ‘பிளேடு பக்கிரி’ சண்டையெல்லாம் போடுவதில்லை.

    Reply
  76. குமுதத்தின் சொதப்பல் பட்டியல்
    5.8.2009 தேதியிட்ட குமுதத்தில் விக்ரமுடன் மோதும் ஜீவன் என்று ஒரு கட்டுரை வெளியானது அதில் விக்ரம் நடித்து வெளிவரும் கந்தசாமியும் ஜீவனின் கிருஷ்ணா லீலையும் ஒரே ஒன்லைனை அடிபடையாக கொண்டு வெளிவருவதாக கூறுகிறது அந்த கட்டுரை, இந்த இரு படங்களின் கதைகளும் ஒன்றா இல்லையா என்று படம் வந்ததும் நாம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த கட்டுரையில் அவர்கள் தமிழ் திரையுலகில் கதை பஞ்சம் என்றும் அதனால் பல ஹிட்டான ஹாலிவுட் படங்களின் கதைகளை சுட்டு நம் இயக்குனர்கள் படம் எடுகின்றனர் என்றும் கூறுகிறது. இது வரை எந்த பிரச்சனையும் இல்லை, இந்த கட்டுரையின் ஒரு பகுதியாக ஒரு பட்டியலை வெளியிடிருகிறார்கள் அது எந்த ஹாலிவுட் படத்தை சுட்டு என்ன தமிழ் படம் வந்திருக்கிறது என்று, பிரச்சனை இதுதான்.இந்த பட்டியலில் 17 படங்கள் இடம்பெற்றிருகின்றன “இது ஒரு சாம்பிள் தான், பட்டியல் இன்னும் நீளம்” என்ற குறிப்புடன்.

    ஹாலிவுட் படங்களின் கதைகளை அப்படியே தழுவியோ அல்லது அதை ஒரு Inspiration ஆக வைத்தோ பல படங்கள் வந்திருகின்றன வருகின்றன அதை மறுப்பதற்கு இல்லை. இவர்கள் வெளியிட்டிருக்கும் பட்டியல் எந்த அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. அந்த பட்டியலில் ஹாலிவுட் படங்களை ஒரிஜினல் என்றும் அத்துடன் ஒப்பிடப்படிருக்கும் தமிழ் படத்தை சுட்டவை என்றும் குறிப்பிடிருகின்றனர். ஆக அவர்கள் அந்த பட்டியலில் குறிப்பிடிருக்கும் அணைத்து தமிழ் படங்களும் ஏதோ ஒரு ஹாலிவுட் படத்தை பார்த்து எடுக்கப்பட்டிருக்கிறது என்கின்றனர். இதில் எனக்கு உடன்பாடில்லை (அது யாருக்கு வேண்டும் என்கிறீர்களா?). இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் சில படங்களை பற்றி கிழே.

    மகாநதி:Hardcore
    மகாநதி கமல் ஹாசனின் ஒரு முக்கியமான படம். அது ஒரு வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தை பற்றிய கதை. கிராமத்தில் வசதியாக வாழும் கமலை ஹனீபா தான் நடத்தும் சிட்பண்டு தொழில் சேர்த்து கொண்டு அவரை ஏமாற்றிவிடுகிறார். அதனால் ஜெயிலில் அடைக்கப்படும் கமல் பிறகு வெளியே வரும்போது தன் சிதறிய குடும்பத்தை ஒன்று சேர்க்கிறார். தன் மகளை ஒரு விபச்சார விடுதியில் கண்டுபிடித்து மீட்கிறார். பிறகு இந்த நிலைக்கு காரணமானவர்களை கொன்று விட்டு மீண்டும் ஜெயிலுக்கு போகிறார். இந்த படத்தை இயகியிருப்பவர் சந்தான பாரதி.

    Hardcore என்ற ஆங்கிலப்படத்தின் கதை, ஒரு தொழிலதிபர் காணமல் போன தன்னுடைய மகளை தேடுகிறார். தேடல்களுக்கு பிறகு அவர் மகளை ஒரு ஆபாச படமெடுக்கும் கும்பலிடமிருந்து மீட்கிறார்.எந்த வகையில் இந்தப்படத்தை பார்த்து மகாநதி எடுத்திருப்பார்கள் என்று குமுதம் தான் விளக்க வேண்டும். இந்த இரு படங்களுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை இந்த கதை நாயகர்களின் மகள்கள் ஆபாசமான தவறான செயலுக்குள் தள்ளப்படுகின்றனர் என்பது மட்டுமே, இதை மட்டும் வைத்துக்கொண்டு மகாநதி Hardcore என்ற படத்தை சுட்டு எடுத்தது என்றால் மடத்தனம்.

    Reply
  77. விருமாண்டி:Life of David Gale
    Life of David Gale இந்த படத்தின் நாயகன் மரண தண்டனைக்கு எதிராக போராடுகிறார், ஆனால் அவரே ஒரு கொலை குற்றத்தில் மாட்டி மரண தண்டனை விதிக்கப்படுகிறார். அவரை மரண தண்டனைக்கு சில நாள் முன் பேட்டி எடுக்க ஒரு பத்திரிகையாளர் (Kate Winslet) வருகிறார் அவருக்கு சில ஆதாரங்கள் கிடைக்க அவர் மேலும் துப்பறிந்து நாயகனை நிரபராதி என்று நிருபித்து விடுதலை செய்கிறார்.

    விருமாண்டியில் ஒரு கிராமத்தில் நடந்த படுகொலையில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் மரண தண்டனைக்கு எதிராக போராடும் ஒரு பத்திரிக்கையாளரிடம் நடந்ததை அவரவர் பார்வையில் கூறுகின்றனர். இந்த படத்தில் முதன்மையாக கூறப்பட்டிருப்பது விருமாண்டி, கொத்தாளன் மற்றும் நாய்கர் இடையே நடக்கும் சண்டையும் சூதும் தான், இந்த படத்தின் ஆரம்பத்திலும் முடுவிலும் மட்டுமே மரணதண்டனைக்கு எதிராக பேசுகிறார்கள். இது மட்டும் தன் இந்த படத்துக்கும் Life of David Gale படத்துக்கும் இருக்கும் ஒரே சம்பந்தம் அதற்காக விருமாண்டியை இந்த படத்தை பார்த்து கமல் எடுத்தார் என்பதெல்லாம் ஒத்துகொள்ள முடியவில்லை.

    இந்த மாதிரி இரு படத்திற்கும் சிறு ஒற்றுமையை வைத்துக்கொண்டு இந்த படத்தை பார்த்து அந்த படம் எடுக்கபட்டது என்பது ஏற்புடையதல்ல. அப்படி பார்த்தால் இப்போது வரும் படங்களில் எதாவது ஒரு காட்சியோ இல்லை எதாவது ஒன்றோ வேறேதோ படத்தில் இருக்க வாய்ப்புகள் ரொம்ப அதிகம் நம் பட்டியலில் எல்லாம் இடம் பத்தாது.

    இந்த மாதிரி சின்ன ஒற்றுமைகள் (தமிழ் படத்தில் இருப்பவை) ஆங்கில படத்திலும் இருக்கும். உதாரணமாக உலகமே போற்றிய Titanic படத்தில் ஒரு ஏழை நாயகனுக்கும் பணக்கார நாயகிக்கும் காதல் வருவதும் பின்னர் அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் காட்டப்பட்டிருக்கிறது. நம் தமிழ் சினிமாவில் இதை அடிப்படியாக கொண்டு பல படங்கள் வந்துவிட்டன, அதனால் Titanic படத்தை தமிழ் படத்தை பார்த்து எடுத்தனர் என்று சொல்லலாமா என்ன? இது மாதிரி பல உதாரணங்கள் கிடைக்கும்.

    Reply
  78. எல்லா மொழிகளிலும் வேறொரு மொழிப்படத்தை தழுவியோ அல்லது Inspiration ஆக கொண்டோ படங்கள் வந்து கொண்டுதான் இருகின்றன, அப்படி எடுக்கப்படும் படங்கள் பார்பவர்களுக்கு எதாவது ஒரு செய்தியோ மகிழ்ச்சியோ தரும் வரைக்கும், அவர்கள் எடுக்கும் படத்தை சொதப்பாத வரைக்கும் எந்த தவறும் இல்லை (நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல).

    குமுதம் போன்ற பலமான வாசகர் வட்டம் உள்ள ஏடுகளில் எந்த ஆராய்ச்சியும் ஆதாரமும் இல்லாமல் போகிற போக்கில் ஒரு பட்டியலை வெளியிடுவது அழகில்லை. இதை படிப்பவர்களுக்கு நம் படைப்பாளிகள் மேல இருக்கும் நம்பிக்கையை குறைத்துவிடும். முடிந்தால் பல விசயங்களை ஆராய்ந்து ஒரு தரமான பட்டியலை வெளியிடலாம் இல்லையேல் அந்த பக்கத்தில் ஒரு கவர்ச்சி படம் போட்டு நிரப்பி விடுங்கள் யாருக்கும் தொல்லையில்லை

    thanks to this link
    http://manipuram.blogspot.com/2009/08/blog-post_07.html

    Reply
  79. haha… i am waiting for your review about endhiran.. don’t forget.

    let everybody see… i don’t judge people by their saying but by their action. so i’ll wait.

    just like the above gentleman said are you watching all your world movies by original dvd??(one million dollar question)and i really admire you if you watched all these movies by original and reviewed.

    pirated vcd is wrong but downloading via torrent is gud ah? mmhmm.

    just one final thing..why have you started with kamalhaasan(for the hype or to show you are smarter than kamal or everybody else coz you watched so much of world movies)…but dont answer. coz everyone here knows it. when you throw shit on someone the same shit will hit you even harder..nothing personal..keep going.

    i really liked your blog for sometime.. i really cannot see any “pakka nadunilai” in this.. so i’ll surely read only your movie reviews from now on.

    all the best. i expect no answer or reaction for this.

    p.s: no caps..happy

    Reply
  80. ஏற்கனவே இங்கு இந்த மண்சார்ந்த படைப்புகள் கிடையாது.
    இதில் வெளிநாட்டு நிறுவனங்கள் வேறு வந்தால்
    அவங்களுக்கான படைப்புகள் எடுக்க நாம நிர்ப்பந்திக்கப்படுவோம். விதையைக் கொடுத்து விளைய வைச்சி எடுத்துட்டுப்
    போறமாதிரி தான் இது. வியாபாரத்திற்காக அவன்
    இந்த ஊடகத்தை பயன்படுத்துவான்.
    இங்க அடிமை ஆயிடுவோம்.
    விவசாயக் கூலி மாதிரி திரைப்படக் கூலி

    Reply
  81. குமுதம், ஆனந்த விகடன் மாதிரி இந்தியாடுடேயில் துணுக்குகள் அல்லது நகைச்சுவைகள் வராது என்ற குறையை இது போன்ற கட்டுரைகள் கொடுத்து நிவர்த்தி செய்கிறார்கள் போலும்….

    கமல் என்ற ஒரு கலைஞன் எந்த இடத்தில் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பார்வையுடன் வந்திருந்தால் பராவாயில்லை…ஆனால் முழுக்க முழுக்க தன் அதிமேதாவித் தனத்தை(?) வெளிப்படுத்த, கமலை மட்டந்தட்டி ஒரு கட்டுரையை வடித்திருக்கிறார்…..

    இந்தியாடுடே பத்திரிக்கையில் வெளிவந்திருந்த கட்டுரையைப் படித்து மகிழ்ந்த எனக்கு, மீண்டுமொரு முறை அந்த நகைச்சுவையை ரசிக்க வைத்ததற்கு நன்றி லக்கி!!!!

    Reply
  82. விபச்சாரிக்கு பிறந்ததால் தன் உடம்பையே அழுக்காக நினைப்பவனின் மனநிலை எப்படி சிதைவுறுகிறது (குணா), குழந்தைகள் செக்ஸ் தொழிலாளிகளாக ஆக்கப்படும் கொடுமையின் ஆணிவேர் எங்கிருக்கிறது(மஹா நதி), சித்தியால் கொடுமைப்படுத்தப்பட்டவனின் மனம் எப்படி உடைகிறது (ஆளவந்தான்), ஜாதி வெறியின் மறுபக்கம்/முடிவு என்ன (தேவர் மகன், விருமாண்டி)…

    கமலும் நல்ல படங்கள் செய்திருக்கிறார்….ஆனால், கமல்ஹாசனின் ஆளுமையும் வீச்சும் மிகப்பிரமாண்டமானது….அதனால் கதாபாத்திரங்கள் மறைந்து கமல்ஹாசனையே நாம் பார்க்க முடிகிறது….இந்த வீச்சு இல்லாத புதுமுகம் நடித்ததாலேயே பருத்தி வீரனை பருத்தி வீரனாக பார்க்க முடிகிறது….

    எம்.ஜி.ஆர், சிவாஜியில் ஆரம்பித்து நாம் கதாநாயகர்களையே பார்த்து பழக்கப்பட்டிருக்கிறோம்…கதாபாத்திரங்களை அல்ல…இது நம் தவறா இல்லை கமல் தவறா??

    கமலின் லெகஸி LEGACY என்பது கமல் பற்றி அதிகம் தெரியாத அடுத்த தலைமுறை வரும்போது தெரியும்….அப்பொழுது நாயகனின் வீச்சும், குணாவின் சிக்கலும் அவர்களால் புரிந்துக் கொள்ளப்படும்..

    Reply
  83. உலகப் புகழ் பெற்ற டைம் பத்திரிகை, இதுவரை உலகில் வெளியான
    திரைப்படங்களில் 100 படங்களை என்றென்றும் சிறந்தவை எனத் தேர்ந்தெடுத்துப்
    பட்டியலிட்டிருக்கிறது. அதில் ஒரே ஒரு தமிழ்ப்படம்தான் இடம்
    பெற்றிருக்கிறது. அது நாயகன்.

    இது ஒரு வாழ்க்கை சரிதப் படம் (Biography)
    சிறுவன், இளைஞன், மனிதன், தலைவன், தகப்பன்,
    என ஒரு மனிதனின் வாழ்க்கைப்
    பருவங்களை சித்தரிக்கும் கதை என்பதை கமல்
    மிகச் சரியாகப் புரிந்து
    கொண்டு நடித்துக் கொடுத்தார் என்றும் தெரிவித்திருந்தார். ஒரு வாரப்பத்திரிகை இது தொடர்பாக மணிரத்தினத்தைப் பேட்டி எடுத்துப்
    போட்டிருந்தது

    Reply
  84. கமலின் படங்கள் ஏன் நமக்கு மிகவும் பிடித்துப் போகின்றன என்று யோசித்தபோது, இரண்டு மூன்று விஷயங்கள் தோன்றுகின்றன. முக்கியமானது, உணர்ச்சிகளைப் பொழியும் அவரது முகம். பேசும் முகம் என்று சொன்னால், அது கமலுடையதுதான். சின்ன சின்ன அசைவுகளில் கூட, வித்தியாசத்தைக் கூட்டக் கூடியவர் கமல். அதுவும் அவரது பலம், உணர்ச்சிகளைப் பொழியும் காட்சிகள்தான். எண்ணற்ற படங்களில், கமல் சோக உணர்ச்சிகளைக் கையாளும் லாவகம் யாருக்கும் வராது. ஒரு மகாநதி ஆகட்டும், அபூர்வ சகோதர்களின் குள்ளப் பாத்திரத்தின் தோல்வி ஆகட்டும், நம்மவர் படத்தின் மிகைப்படுத்தப்படாத சோகம், இன்னும் வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம். இன்றைய வசூல்ராஜாவில் கூட, சோகத்தில் சட்டென மிளர்வது அவரது நடிப்புத்தான். அதுதான் அவருடைய Forte.

    இன்றைய தேதியில், கமல் படத்தைத் தவிர, எந்தப் படத்திலும் நடிப்புக்கும், அழுவதற்கும் வாய்ப்பே இல்லை. எல்லாரும் வந்து திரையில் ஒரே குதியாட்டம் போடுகிறார்கள். இல்லை அடித்து துவம்சம் பண்ணுகிறார்கள். நமது சினிமா இந்த உணர்ச்சிக்கான தருணங்களை இழந்துவிட்டது. இயல்பான உறவுகளைச் சித்திரிக்கவோ, அதற்குள் இருக்கும் பிணைப்¨ப் பற்றிப் பேசவோ இப்போது அதற்கு நேரமில்லை.

    Reply
  85. @ Rajendran – //haha… i am waiting for your review about endhiran.. don’t forget.

    let everybody see… i don’t judge people by their saying but by their action. so i’ll wait.

    just like the above gentleman said are you watching all your world movies by original dvd??(one million dollar question)and i really admire you if you watched all these movies by original and reviewed.

    pirated vcd is wrong but downloading via torrent is gud ah? mmhmm.

    just one final thing..why have you started with kamalhaasan(for the hype or to show you are smarter than kamal or everybody else coz you watched so much of world movies)…but dont answer. coz everyone here knows it. when you throw shit on someone the same shit will hit you even harder..nothing personal..keep going.

    i really liked your blog for sometime.. i really cannot see any “pakka nadunilai” in this.. so i’ll surely read only your movie reviews from now on.

    all the best. i expect no answer or reaction for this.

    p.s: no caps..happy//

    😉 Again and again, u r making me to laugh ;-)..

    Okays.. If u think that I am a Rajni fan, tht’s ur problem ;-).. Not mine.. 😉

    Till date, I have seen all my movies thru original DVDs ! I rent movies in Bigflix all the time 😉 .. I can see the same shit U tried to throw on me, dripping in ur face now 😉

    And, I didn’t start with kamal. I hv already blasted Balachandar and Manirathnam here 😉 .. If u haven’t read them, again, that’s not my prob dude 😉

    If u can’t see unbiased views here, don’t visit this blog 😉 .. There are a lot of சொம்புதூக்கிகள் in the net.. go catch them 😉 ..

    that’s all.. 😉

    Reply
  86. @ கிறுக்கன் – இன்னமும் எனது பதிவுகள் நிறைய உள்ளன.. அவைகள் அத்தனையிலும் உங்களது இந்த ‘தஞ்சாவூர் கல்வெட்டில்’ பொறித்து வைக்கக்கூடிய கமெண்ட்டைப் போயிப் போடலாம் 😉 .. பல இடங்களில் ஏற்கெனவே நீங்கள் போட்டது போல 😉 .. ஹாஹ்ஹா 😉 .. கேரி ஆன் 😉

    Reply
  87. http://www.geetham.net/forums/archive/index.php/t-211.html

    இந்த லிங்கில் கமல் ஆஸ்கார் பற்றி சொல்லி இருக்கிறார். இது விருமாண்டி வந்த சமயத்தில் சொன்னது. வீடியோ கூடிய விரைவில் அனுப்பி வைக்கிறேன். தசவதாரம் வந்த சமயத்தில் கூட கலைஞர் தொலைகாட்சியில் ஆஸ்கார் பற்றி சொல்லி இருக்கிறார்.

    ” இன்னமும் எனது பதிவுகள் நிறைய உள்ளன.. அவைகள் அத்தனையிலும் உங்களது இந்த ‘தஞ்சாவூர் கல்வெட்டில்’ பொறித்து வைக்கக்கூடிய கமெண்ட்டைப் போயிப் போடலாம் 😉 .. பல இடங்களில் ஏற்கெனவே நீங்கள் போட்டது போல 😉 .. ஹாஹ்ஹா 😉 .. கேரி ஆன் 😉 “

    தஞ்சாவூர் கல்வெட்டில் பொரிக்கபடவேண்டியது உமது படைப்புகள் முடிந்தாள் அருகிலேயே அமர்ந்து கொள்ளவும். ஏனென்றால் தமிழ் நாட்டின் அணைத்து மக்களின் அறிவு கண்ணை டார்ச் போட்டு திறந்த அறிவு ஜீவி ஆயிற்றே….நான் கிறுக்கன் தானே…..

    Reply
  88. கங்க்சட்டர் மூவீஸ் ஹாலிவுட் முவீசுக்கு மாட்டும் காப்புரிமை

    அது நாயகன் வேலு நாயக்கர் கதை வர்தா என்னும் வாழ்ந்த பாத்திரம்

    மும்பை பகுதியில் நேற்று சென்ற இளைஞன் ஒருவன் கூட

    நாள் பூராவும் வர்தா கதை பேசினான் என்றால் அந்த மனிதன்

    வாழ்ந்த அடையாளம் அல்லது சுவடுகள் மறையவில்லை

    ஒரு வாழ்ந்த மனிதர் வர்தா அவருக்கு வெற்றி

    அவர் எப்படி வேஷ்டி கட்டுவார் எப்படி தலை சீவுவார்
    எப்படி வெற்றிலை பாக்கு போட்டு கொள்வது என்று

    அவருடைய எல்ல yella mannerism

    நீங்கள் ஹாலிவுட் படம் சுட்டார்கள் என்று

    சொன்னதால் மீண்டும் சொல்கிறேன் தமிழனுக்கு தமிழன் தான்
    எதிரி என்பது போல வர்தாவையும் வேலு நாயக்கரையும் தமிழ்

    சினிமாவையும் கேவல படுத்தி விட்டீர்கள்

    கமலை மட்டும் அல்ல

    கங்க்சட்டர் மொவயே gangster movies அது கனக்ஸ் ஒப் நியூயார்க் gangs of newyork என்றால் என்ன
    Don Vito “Godfather” Andolini Corleone இத்தாலி என்றால் என்ன மும்பை வர்தா என்றால் என்ன
    எல்லாம் ஒன்று தான்

    தேவர் மகன் நில பிரச்னை தேவர்களுக்கு மட்டும் சொந்தமா
    கோவை மாவட்டம் கவுண்டர் அல்லது நாயக்கர் அல்லது ரெட்டியார்
    பிரச்னை கூட அது தான்

    Reply
  89. ஒருவன் காபி அடித்ததினால் பாபுலர் ஆனான்
    சிந்திக்க தெரியாத மக்களிடம் ,
    அவனை போட்டு கொடுத்து குட்டு வைத்து உங்க அறிவு ஜீவி
    தனத்தை கொண்டு நாரடிப்பது நல்ல இர்ருக்கு

    சினிமா என்பது தனி மனித கலை இல்லை பல பேரின்
    கூட்டு முயற்சி

    உங்களுக்கு வரலாறு நினைவு படுத்துகிறேன்
    நாடகங்களில் நடித்த சிவாஜி பராசக்தி ஷூட்டிங்
    எவ்வளவவு கட் சொன்னாலும் அவர் தொடர்ந்து நடித்து
    கொண்டு இருந்தார்
    அப்புறம் கட் சொல்வது பழகிய பின்பே
    அவர் தன நடிப்பை நிறுத்தி நிறுத்தி செய்தார்
    சிவாஜி அவர்களின் முழு வீச்சு நடிப்பை பார்க்க நாம்
    கொடுத்து வைக்க வில்லை அது அந்த கல நாடகங்கள்
    பார்த்த கொடுத்து வைத்தவர்கள் பாக்கியம்

    இப்படி சிவாஜி நடிப்பு போன்ற பல திறமைகள்
    மழுங்க அடித்து தான் சினிமா உருவானது
    ஆட தெரியாத பாட தெரியாத சண்டை போட தெரியாத
    நடிக்க தெரியாத மேலும் நடிக்க தெரியாதவர்கள்
    கூட பல டேக் வாங்கி அல்லது சண்டை காட்சியில்
    டுப் போட்டு ,டப்பிங் குரல் கொடுத்து யாரோ டப்பிங்
    பேசி மக்களை எப்படி முட்டாள் ஆகுவது தான்
    சினிமா என்னும் கலை
    டுபாகூர் கலை ,அழகு இல்லாதவர்களை அழக்காக
    காட்டுவது ,வீரம் இல்லாதவனை வீரனாக காட்டுவது

    இதில் வேறு அவன் காபி அடிதான் இவன் காபி அடிதான்
    என்று .வெறும் வியாபாரம் தான் சினிமா ஒன்றும் இல்லாததை
    வைத்து

    Reply
  90. காபி அடிப்பதை சினிமா வட்டாரத்தில் REFERENCE என்ற பெயர்

    நீங்க இன்ஜினியரிங் அல்லது எந்த துறையாக இருந்தாலும்

    உங்களுக்கு REFERENCE தேவை அது போல பல பேருடைய

    உழைப்பு சினிமா வீண் பண்ண கூடாது செட்டில் எல்லாம் தயார்

    என்று இர்ருக்கும் REFERENCE நேரம் வீண் ஆகாமல்

    REFERENCE பெரிதும் உதவுகிறது

    இந்த REFERENCE கூட இல்லாமல் பண்ணுவதற்கு நீங்க ஒன்னும்

    எடிசன் கிடையாது, நீங்களாக தனியா எதுவும்
    கண்டு பிடிக்கல
    கண்டு பிடிக்க போவதில்லை என்பது தான் உண்மை

    என் நண்பர்கள் மிகவும் கேவலமா சொல்வார்கள் இசை அமைப்பாளர்

    தேவா பற்றி அவர் என்ன மியூசிக் போடறார் இங்கிலீஷ் பாப் ஆல்பம் போல

    சுடரார் என்று ,பாவம் தேவா என்ன செய்வார் சினிமா டைரக்டர்

    ஆங்கில பட மற்றும் பாப் இசை தட்டுக்களை கொண்டு வந்து

    இது போல வேண்டும் என்று கேட்டால் அவர் அது போல தான் போட்டு

    தருவார் ,

    தேவா அவர்கள் செயல் நியாய படுத்தவில்லை நான்
    இருக்கும் நேர அவகாசத்தில்
    கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் தயாரிக்கும் சிறிய பட்ஜெட்

    படம் எப்படி காபிரைட்ஸ் வாங்க முடியும்

    பக்தி பாடல்களை சினிமா பாடல்கள் போல மாற்றி
    வெகு ஜன ரசனைக்கு மாற்றும் வித்தை தேவா அவர்களயே
    சாரும்

    பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் தமிழில் ஒலித்தால் எப்படி இருக்கும்
    அது தான் தேவா இசை

    பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் கேட்காத தமிழ் சமூகதிருக்கு

    தான் அவர் இசை போடுகிறார்

    அதற்கும் திறமை வேண்டும்

    ஹோல்ல்ய்வூடில் இருந்து அவருக்கு நோட்ஸ் வரவில்லை

    அங்கே இருக்கும் ஆள் இல்லாத கச்சேரி வாத்திய கருவிகள்
    சத்தம் மென் பொருள் இங்கும் இருக்கு

    அதை உபயோகபடுத்தி காசு பண்ண தெரிய வில்லை என்றால்
    அந்த இசை கருவிகள் வாங்க யார் காசு கொடுப்பார்கள்
    மேடை கச்சேரி மட்டும் போதுமானதாக இருபதில்லை

    Reply
  91. Dear Sir

    Your views are absoluteness correct. Ithil Kodumai ennavendral kappi adippatharklu, ivargalukku kodi kodiyai kottikoduppathu than.

    It is shameful to make money on somebody’s brain and efforts.

    With regards
    SS

    Reply
  92. it is not shameful to make money

    life will be much more shameful when u dont have money

    because no one is for charity

    that says it all.

    Reply
  93. rich dad poor dad quote i remind u

    rich dad says lack of money is the root of all evil

    poor dad says money is the root of all evil

    anyways both agree money is evil with r without it

    Reply
  94. http://en.wikipedia.org/wiki/Plagiarism

    Plagiarism is defined in dictionaries as “the wrongful appropriation, close imitation, or purloining and publication,
    of another author’s language, thoughts, ideas, or
    expressions, and the representation of them as one’s
    own original work.”[1][2] The modern concept of
    plagiarism as immoral and originality as an ideal
    emerged in Europe only in the 18th century,
    while in the previous centuries authors and artists
    were encouraged to “copy the masters as closely
    as possible” and avoid “unnecessary invention.”[3][4][5][6][7]

    The 18th century new morals have been institutionalized
    and enforced prominently in the sectors of academia
    and journalism, where plagiarism is now considered
    academic dishonesty and a breach of journalistic
    ethics, subject to sanctions like expulsion and
    other severe career damage. Not so in the arts,
    which have resisted in their long-established
    tradition of copying as a fundamental
    practice of the creative process, with plagiarism
    being still hugely tolerated by 21st century artists.[8][9]

    Plagiarism is not a crime but is disapproved
    more on the grounds of moral offence.[3][10]
    It may be a case for civil law if it is
    sufficiently substantial to constitute copyright infringement

    read these lines clearly

    just like civilisation or art emerges

    it follows copycats or spreads all across the

    country and throughout the world

    Not so in the arts, which have resisted
    in their long-established tradition of
    copying as a fundamental practice of
    the creative process, with plagiarism
    being still hugely tolerated
    by 21st century artists.[8][9]

    Reply
  95. The arts
    From Wikipedia, the free encyclopedia

    This article is about Arts as a group of disciplines. For the philosophical concept of art, see Art. For other uses, see Art (disambiguation).
    The arts are a broad subdivision of culture,
    composed of many creative endeavors and disciplines.
    It is a broader term than “art,” which as a description
    of a field usually means only the visual arts.
    [1][non-primary source needed] The arts encompasses
    visual arts, literature and the performing
    arts – music, drama, dance and film,
    among others.[2] This list is by no means
    comprehensive, but only meant to introduce
    the concept of the arts

    Reply
  96. survival theory convince or confuse

    u can convince n confuse thats also possible

    to survive

    anyways u survive on OPM Other Person’s Money

    r

    OPB Other Person’s Brain (maybe from yester years also)

    Reply
  97. Bollywood movies are often targeted for copying from Hollywood movies. Forget the music, even the scripts and screenplay of most Bollywood movies are copied from Hollywood movies. Directors like Sanjay Gupta and Vikram Bhatt are called DVD directors.
    Though there have been smart Bollywood lifts
    like Aradhna(1969), Sholay(1975) Raaz(2000),
    Baazigar(1993), Munnabhai MBBS(2003)
    Rang De Basanti(2006) and Race(2008),
    some Hollywood movies copy Hollywood movies
    scene by scene.
    Here is a list of Bollywood movies lifted,
    inspired or copied from Hollywood films.

    Reply
  98. Aradhana 1969 To Each His Own 1946

    Abhimaan 1973 A Star Is Born 1954

    Khotey Sikkay 1973 The Magnificent Seven 1960

    Dharmatma 1975 The Godfather 1972

    Rafoo Chakkar 1975 Some Like It Hot 1959

    Sholay 1975 The Magnificent Seven 1960

    Karz 1980 The Reincarnation of Peter Proud 1975

    The Burning Train 1980 Shinkansen Daibakuha 1975

    Shaukeen 1981 Boys’ Night Out 1962

    Janbaaz=Duel in the Sun (1946)

    Satte Pe Satta 1982 Seven Brides For Seven Brothers 1954

    Ek Ruka Hua Faisla 1986 12 Angry Men 1957

    Khoon Bhari Maang 1988 Return to Eden 1983

    Tezaab 1988 Streets of fire 1984

    Agneepath 1990 Scarface 1983

    Dil Hai Ke Manta Nahin 1991 It Happened One Night 1934

    Jo Jeeta Wohi Sikandar 1992 Breaking Away 1979

    Chamatkar 1992 Blackbeard’s Ghost 1968

    Ek Ladka Ek Ladki 1992 Overboard 1987

    Baazigar 1993 A Kiss Before Dying 1991

    Khal-Naaikaa 1993 The Hand That Rocks The Cradle 1992

    Yeh Dillagi 1994 Sabrina 1954

    Main Khiladi Tu Anari 1994 The Hard Way 1991

    Akele Hum Akele Tum 1995 Kramer vs. Kramer 1979

    Yaraana 1995 Sleeping with the Enemy 1991

    Criminal 1995 The Fugitive 1993

    Rangeela- Win a Date with Tadf Hamilton

    Daraar 1996 Sleeping with the Enemy 1991

    Agni Sakshi 1996 Sleeping with the Enemy 1991

    Papi Gudia 1996 Child’s Play 1988

    Deewana Mastana 1997 What About Bob? 1991

    Reply
  99. Judwaa 1997 Twin Dragons 1992

    Chor machaye shor(1997).. Blue Streak

    Chachi 420 1998 Mrs. Doubtfire 1993

    Ghulam 1998 On the Waterfront 1954

    Pyar To Hona Hi Tha 1998 French Kiss 1995

    Dushman 1998 Eye for an Eye 1996

    Sangharsh 1999 The Silence of the Lambs 1991

    Mohabbatein 2000 Dead Poets Society 1989

    Josh 2000 West Side Story 1961

    Bichhoo 2000 Leon: The Professional 1994

    Har Dil Jo Pyar Karega 2000 While You Were Sleeping 1995

    Dhaai Akshar Prem Ke 2000 A Walk in the Clouds 1995

    Kahin Pyaar Na Ho Jaaye 2000 The Wedding Singer 1998

    Ajnabee 2001 Consenting Adults 1992

    Pyaar Tune Kya Kiya 2001 Fatal Attraction 1987

    Kyo Kii… Main Jhuth Nahin Bolta 2001 Liar Liar 1997

    Kasoor 2001 Jagged Edge 1985

    Awara Paagal Deewana 2002 The Whole Nine Yards 2000

    Humraaz 2002 A Perfect Murder 1998

    Kaante 2002 Reservoir Dogs 1992

    Hum Kisi Se Kum Nahin 2002 Analyze This 1999

    Chor Machaaye Shor 2002 Blue Streak 1999

    Baadshah(SRK starrer) = Nick Of Time, The Mask, Rush Hour, Mr. Nice Guy

    Fareb = Unlawful Entry (1992)

    Sauda –> Indecent Proposal (1993) ,The Deal (2005)

    Hum Hain Kamaal Ke= See No Evil, Hear No Evil (1989).

    Deewangee 2002 Primal Fear 1996

    Mere Yaar Ki Shaadi Hai 2002 My Best Friend’s Wedding 1997

    Raaz 2002 What Lies Beneath 2000

    Ek Chhoti Si Love Story 2002 A Short Film About Love 1998

    Footpath 2003 State of Grace 1990

    3 Deewarein = The Shawshank Redemption (1994)

    Inteha 2003 Fear 1996

    Reply
  100. Dhoom(2003): The Fast and the Furious (2001) &Ocean’s Eleven (2001)

    Jism 2003 Body Heat 1981

    Koi Mil Gaya 2003 E.T. the Extra-Terrestrial 1982

    Kucch To Hai 2003 I Know What You Did Last Summer 1997

    Qayamat: City Under Threat 2003 The Rock 1996

    Aetbaar 2004 Fear 1996

    Plan 2004 Suicide Kings 1997

    Saaya 2003 Dragonfly 2002

    Shukriya: Till Death Do Us Apart 2004 Meet Joe Black 1998

    Hum Tum 2004 When Harry Met Sally 1989

    Munnabhai MBBS(2003)..Patch Adams(1998)

    Murder 2004 Unfaithful 2002

    Aitraaz 2004 Disclosure 1994

    Musafir 2004 U-Turn 1997

    Phir Milenge 2004 Philadelphia 1993

    Salaam Namaste…Nine Months

    Paap 2004 The Witness 1969

    Black 2005 The Miracle Worker 1962

    Bunty Aur Babli 2005 Bonnie & Clyde 1967

    Chocolate: Deep Dark Secrets 2005 The Usual Suspects 1995

    Sarkar 2005 The Godfather 1972

    Deewane Huye Pagal 2005 There’s Something About Mary 1998

    Ek Ajnabee 2005 Man on Fire 2004

    Reply
  101. Ek Khiladi Ek Haseena 2005 Confidence 2003

    Garam Masala 2005 Boeing Boeing 1965

    Kyun Ki 2005 One Flew Over the Cuckoo’s Nest 1975

    Main Aisa Hi Hoon 2005 I am Sam 2001

    Maine Pyar Kyun Kiya? 2005 Cactus Flower 1969

    Naina 2005 The Eye 2002

    Zeher 2005 Out of Time 2003

    Jurm 2005 Double Jeopardy 1999

    Humko Deewana Kar Gaye 2006 Notting Hill 1999

    Zinda 2006 Oldboy 2003

    Bas Ek Pal 2006 Carne Trémula 1997

    Rang De Basanti: All My Sons (1948) & Jesus of Montreal.

    Naksha 2006 The Rundown 2003

    Phir Hera Pheri 2006 Lock, Stock and Two Smoking Barrels 1998

    Alag 2006 Powder 1995

    I See You 2006 Just Like Heaven 2005

    Tathastu 2006 John Q 2002

    Malamaal Weekly 2006 Waking Ned 1998

    Aap Ki Khatir 2006 The Wedding Date 2003

    Taxi No. 9211 2006 Changing Lanes 2002

    The Killer 2006 Collateral 2004

    Ek Ajnabee –> Man On Fire (2004)

    Reply
  102. Krrish 2006 Paycheck

    Zinda –> Oldboy (Korean Movie)

    Nishabd 2007 Lolita 1962

    Awarapan 2007 A Bittersweet Life 2005

    Chak De India 2007 Miracle 2004

    Dhamaal 2007 It’s a Mad, Mad, Mad, Mad World. 1963

    Bheja Fry 2007 Diner de cons 1998

    Naqaab 2007 Dot the I 2003

    Speed 2007 Cellular 2004

    Salaam-e-Ishq copied from Love Actually

    Ta Ra Rum Pum 2007 Days of Thunder 1990

    Life In A… Metro 2007 The Apartment 1960

    Fool n Final 2007 Snatch 2000

    Heyy Babyy 2007 Three Men and a Baby 1987

    Partner 2007 Hitch 2005

    The Train 2007 Derailed 2005

    Manorama Six Feet Under 2007 Chinatown 1974

    Welcome 2007 Mickey Blue Eyes 1999

    Race 2008 Goodbye Lover 1998

    u me aur hum(2008) –> the notebook and A Moment To Remember (korean)

    Ugly Aur Pagli 2008 My Sassy Girl 2001

    Singh Is Kinng 2008 Miracles 1989

    Shaurya 2008 A Few Good Men 1992

    God Tussi Great Ho 2008 Bruce Almighty 2003

    Dostana 2008 I Now Pronounce You Chuck & Larry 2007

    Dasvidaniya(2008): Bucket list

    Yuvvraaj 2008 Rain Man 1988

    Dil Bole Hadippa(2009) She’s the Man

    Reply
  103. @access
    அடங்கப்பா போதும்டா சாமி..
    இந்த பதிவிற்கு அதிகமான பின்னூட்டம் இட்டதற்காக அவார்டு ஒன்னியும் கிடைக்காது .
    dasavatharam Fletcher getup = Sin City 2005 Marv character getup .
    அப்புறம் தசவதாரம் படத்தில் Butterfly effect மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மூளை.
    ஆனால் படத்தின் தலைப்பில் ஒரு இடத்தில கூட அவரின் பெயர் இடம்பெற வில்லை.
    கமல் தனது பெயரை மட்டும் போட்டு கொண்டார்.
    அப்புறம் இந்த முஸ்லிம் விரோத படமான உன்னைப்போல் ஒருவன் படத்தில் பாடல் எழுதிய மனுஷ்ய புத்திரன் பெயரும் படம் முடிந்து எல்லோரும் எழுந்து செல்லும் நேரத்தில் போடப்பட்டது.இதுதான் அவர் கலைஞ்சன்ர்களுக்கு செய்யும் மருவாதையா?
    அப்புறம் நீ பெரிய பெரிய பட்டியல் போட்டு வருகிறாய்.இந்த படம் அந்த காப்பி அந்த படம் இந்த காபி என்று…
    அப்போ கமல் தனித்துவம் வாய்ந்தவர் என்ற நோக்கில் தான் எழுதப்பட்டது.அவர் தனது திறமைகளை முழுமையாக பயன்படுத்தி கொள்ளவில்லை என கூறுவதே இதன் நோக்கம் .
    ஆனால் நீயோ அவன் காபி அடிக்கவில்லையா இவன் செய்யவில்லையா என கேட்பது அரசியல்வாதிகள் மேல் ஊழல் குற்றசாட்டு கூறும்போது அதை மறைக்க எதிர்கட்சி செய்த ஊழாலை ஊதி பெரிதாக்குவதுபோல் உள்ளது.
    **
    பி கு:access:தயவு செய்து பின்னூட்டம் இடுவதை நிறுத்தவும்.(அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன் என காட்பாதர் சாரி நாயகன் போல் வாதாட வேண்டாம்)

    Reply
  104. http://en.wikipedia.org/wiki/Dharmathin_Thalaivan

    A 1988 Indian Tamil language film starring Rajnikant, Prabhu Ganesan, Charlie, Nassar, Captain Raaj, Kushboo, Suhasini.The film is a remake of the 1978 Hindi film Kasme Vaade starring Amitabh Bachchan,Randhir Kapoor,Rakhee, Neetu Singh, and Amjad Khan.

    Reply
  105. ஆஹா அருமையான கண்டுபிடுப்பு ஐயா சுஜாதா கண்டுபிடிதாரம்
    butterfly effect பின்னோட்டம் என்ன முன்னோடோம் கூட போடுவோம்

    ஜன நாயக உரிமை பண நாயக உரிமை இல்லை

    உலக சினிமா திருட்டு DVD
    தனமாக பார்த்து விமர்சனம் பண்றது நல்ல இர்ருக்கு

    நாங்க சொல்லறது நல்லா இல்லை

    அங்க சுட்டான் இங்க சுட்டான் என்று
    ஏன்யா டைம் வேஸ்ட் பண்ணறீங்க

    உங்கள எவன் கமல் படம் பர்ர்க்க சொன்னான்

    புடிக்கலைய பார்கதீங்க ,உங்களுக்கு எவன் படம் ஒசதியோ
    அவனையோ வைச்சு குதாடுங்க தலை மேல வைசுகிட்டு
    என்னக்கு என்ன போச்சு

    ALL MUSLIMS ARE NOT TERRORISTS

    BUT ALL TERRORISTS ARE MUSLIMS

    எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதி கிடையாது ,

    ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்கள் தான்

    இது நான் சொல்லலை உலகமே சொல்லுது

    Reply
  106. MR SARAN

    C THIS LIST

    panakkaran lawaris

    maaveeran mardh

    velaikaran namaklal

    BILLA don

    paavam amitabh films all copied and spoiled by rajini

    kodi parakkuthu கொடி பறக்குது

    idhu amitabin shahenshah

    அமிதாபின் ஷாஹென்ஷா ரீமேக் பண்ணியும் மாவீரன் போல ப்ளாப்
    director manmohan desai continuously giving hit films with
    amitabh

    when manmohan passed away

    amitabh stopped giving hit films

    and our rajini sir stopped acting after HUM remake bashaa

    for 4 years

    as no amitabh films to be copied

    வெறும் அமிதாப் அவர்கள் நடித்த படங்களை மட்டும்
    கொடுத்து கொண்டு இருந்த ரஜினி சார் ,
    அமிதாப் அவர்கள் படங்கள் கொடுக்க நிறுத்தியதால்
    ரஜினி அவர்களும் படம் பண்ணுவதை நிறுத்தி விட்டார்
    கதை இல்லை என்ற காரணத்தால்

    அதன் தொடர்ச்சி தெலுங்கு படங்களை மட்டும் நம்பி ரீமேக் செய்யும்

    விஜய் அவர்கள் ,தெலுங்கு படத்தை ரீமேக் செய்யவில்லை என்றால்

    அவர் படம் ப்ளாப்,ஆதி கூட தெலுகு ரீமேக் பண்ணியும் ப்ளாப்

    கோட்பாதர் நாயகன் கமல் மட்டும் காபி அடிக்கலை
    ரஜினி கூட ஹிந்தியில

    ஆமிர் கான் கூட பண்ணி ப்ளாப்

    Aamir in line to pay tribute to
    Godfather. So, he acted his part in Atank Hi Atank
    which released in
    1995. He played the role of Michael, which
    Al Pacino had played. In
    fact, it was quite fascinating to see Aamir
    with a moustache and his
    wet-hair all combed back, he looked like
    he meant business. This movie
    had Rajnikanth playing Sonny, I think the only
    time that Aamir and
    Rajni have ever worked together. But none
    of this could save the movie
    at the box-office.

    http://en.wikipedia.org/wiki/Aatank_Hi_Aatank

    Aatank Hi Aatank is a 1995 Bollywood movie.
    The movie is highly inspired by
    The Godfather and stars Aamir Khan,
    Rajinikanth, Juhi Chawla and Pooja Bedi
    in the lead. In 2000, the film was dubbed
    into Tamil as Aandavan but flopped.

    ஓஹோ இது தான் டேமில் நாட்டை இந்த ஆண்டவன் வந்த கூட

    காப்பாத்த முடியாது என்று சொன்னார் ரஜினி

    Reply
  107. நான் ஹிந்து முஸ்லிம் பற்றி பேச வரலை சினிமா பற்றி பேச வருகிறேன் இந்த

    பின்னோட்டத்தில் எனக்கு தெரிந்தது நீங்கள் மறந்தது
    நினைவு படுத்த கடமை பட்டு உள்ளேன் சினிமா ரசிகனாக

    Reply
  108. ஐயா, தீவிரவாதிகள் அனைவருமே முஸ்லிம்களாக இருப்பது ஏன்?
    http://www.satyamargam.com/1118

    காஷ்மீரில் என்ன குறை இருந்தது செல்லம் கொடுத்து கொடுத்து
    பல ஆண்டு காலமாக
    ஊட்டி ஊட்டி வளர்த்து கெடுத்து விட்டனர்

    Reply
  109. எந்திரனின் ஏகபோக பகல் கொள்ளை !
    read more in this link good research

    http://www.vinavu.com/2010/09/17/boycott-endhiran/

    ஏற்கனவே புதிய திரைப்படங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணம் வைத்துக் கொள்ளலாம் என்று சட்டபூர்வ அனுமதி இருப்பதால் சட்டபூர்வமாகவே கொள்ளையடிப்பதில் பிரச்சினையில்லை. எந்திரனின் முதல் வாரத்தில் ஒரு டிக்கெட்டின் விலை ஆயிரமா, இரண்டாயிரமா என்று தெரியவில்லை. படத்தின் மேனியாவுக்கேற்ப இது கூடத்தான் செய்யுமே அன்றி குறையப் போவதில்லை. இப்படி ஓரிரு வாரத்தில் அவர்கள் அள்ளப்போகும் பணம்தான் அவர்களது மூலதனத்தை சில மடங்காக அள்ளிக் கொடுக்க போகிறது.

    சமீபத்திய செய்தியின் படி எந்திரனது இந்தி மற்றும் தமிழ் மொழி படப்பிரதிகளுக்காக சுமார் 2000 பிரதிகள் திரையிட இருக்கிறார்களாம். இதில் தமிழில் சுமார் ஐநூறு முதல் ஆயிரம் வரை இருக்கலாம். இதை நாம் 500 திரையரங்குகளில் வெளியிடுவதாக வைத்து ஒரு திரையரங்கிற்கு தலா 500 இருக்கைகள் என்று கொண்டால் மொத்தம் 2,50,000. ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் என்றால் மொத்தம் பத்து இலட்சம் பேர் பார்ப்பார்கள். முதல் ஒரு வாரத்திற்கு ரூ.500 என்று ஒரு டிக்கெட்டின் விலையை வைத்தால் ஒரு நாள் வசூல் 50,00,00,000. அதாவது ஐம்பது கோடி ரூபாய். டிக்கெட்டின் விலை சராசரியாக 300 என்று வைத்தாலும் கூட ஒரு நாள் வசூல் முப்பது கோடி ரூபாய். ஒரு நாளில் ஐந்து இலட்சம் பேர்தான் பார்க்கிறார்கள் என்று வைத்தாலும் ஒருநாளின் வசூல் 15 கோடி ரூபாய்.

    இதில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் முதல் சில நாட்களில் டிக்கெட்டின் விலை ஆயிரத்திற்கும் மேலேயே கூட இருக்கும். இரசிகர் மன்றங்களுக்கான காட்சிகள் ஒட்டு மொத்தமாக விற்கப்படும் போது அதன் விலை இன்னும் அதிகம். மொத்தத்தில் எந்திரன் படம் சுமார் ஒரு மாதம் ஓடினால் கூட அது குறைந்த பட்சம் முன்னூறு கோடி ரூபாயை வசூலிப்பது உறுதி.

    எனில் இந்த சட்டபூர்வ கொள்ளை இல்லாமல் ரஜினியின் பல கோடி சம்பளம் இல்லை. திரையரங்குகளின் உரிய கட்டணத்தில் எந்திரன் நூறூ நாள் ஓடினால் ரஜினிக்கு சம்பளத்தை சில இலட்சங்களை தாண்டமுடியாது. கோடிக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.

    இந்த ஒருமாதம் நீங்கள் விரும்பினாலும் வேறு படங்களை பார்க்க முடியாது. தமிழகத்தின் எல்லா திரையரங்குகளிலும் எந்திரன் படத்தை வெளியிட இருக்கிறார்கள். சென்னை நகரத்தில் உள்ள முப்பது திரையரங்குகள், புற நகரில் உள்ள நாற்பது திரையரங்குகளில் எந்திரன் படம் வெளியாக இருக்கிறது. ஆக இந்த எழுபது திரையரங்குகளில் முதல் ஒரு மாதத்தில் எந்திரன் மட்டுமே ஓடும். வாரம் ஒரு முறை படம் பார்ப்பவர்கள், மாதம் ஒரு முறை படம் பார்ப்பவர்கள் அனைவரும் எந்திரனைத் தவிர வேறுபடத்தை பார்க்க முடியாது.

    Reply
  110. எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது!

    இதைத்தான் எந்திரனின் ஆக்கிரமிப்பு போர் என்று சொல்கிறோம். தமிழர்களின் வாழ்வில் சினிமா பார்க்க முடியாமல் பொழுது போக்கு இல்லை என்றான பிறகு அந்த சினிமாவில் எந்திரனைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றாக்கிவிட்டால் அது ஆக்கிரமிப்பு இல்லாமல் வேறு என்ன? மேலும் எந்திரனின் முதல் நான்கைந்து வாரங்களில் எந்த படங்களும் வெளிவராமல் சன் குழுமம் பார்த்துக் கொள்கிறது. தமிழக திரைப்படங்களை யார் தயாரித்தாலும் அவர்கள் தமது படங்களை கருணாநிதி குடும்பத்தினருக்குத்தான் விற்க முடியும் என்றான பிறகு சன் குழுமத்தின் எந்திர ஆதிக்கத்தினை யார் கேட்க முடியும்? அழகிரியின் மகன் தயாநிதி எந்திரனின் தமிழ்நாட்டு உரிமையை சுமார் 100 கோடிக்கு கேட்டு பேரம் படியவில்லை என்பதற்காக சன் குழுமத்தின் சக்சேனாவை ஒரு அடிதடி வழக்கில் சிக்கவைக்க முயன்றார் என்பதுதான் இருந்த ஒரே கேள்வி. அதைக்கூட ஏதோ இரகசிய ஒப்பந்தம் போட்டு சரிக்கட்டிவிட்டார்கள். எனவே இனி எந்திரனின் போரை ஆண்டவனே வந்தாலும் தடுக்க முடியாது.

    தமிழ்நாட்டிலேயே முழு செலவையும் தாண்டி இலாபம் பார்க்க முடியும் என்ற பிறகு கேரள உரிமை பத்து கோடி, ஆந்திர உரிமை முப்பது கோடி, கர்நாடக உரிமை பத்து கோடி, இந்திக்கு எத்தனை என்று தெரியவில்லை என்றாலும் தமிழை விட அதிகமாகவே இருக்கும், பிறகு சர்வதேச உரிமை என்று மொத்தமாக கூட்டிக்கழித்தால் எப்படியும் சுமார் ஐநூறு கோடியை சுருட்டி விடுவார்கள். இதற்கு மேல் எந்திரன் தொடர்பான பல்வேறு தொடர் நிகழ்வுகள் – பாடல் அறிமுகம், டிரைலர் அறிமுகம், தயாரித்த விதம், என்று பல புராணங்கள் சன் தொலைக்காட்சியில் ஓடும்போது அதற்குண்டான விளம்பர வருமானம் . ஆடியோ ரைட்ஸ், ஓவர்சீஸ் ரைட்ஸ் எல்லாம் கூடுதல் போனஸ். இறுதியாக உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக வரும் வைபவத்தில் வரும் விளம்பர வருமானம் என்ற சூப்பர் போனஸ். சூரியன் வானொலியின் எந்திரன் சிறப்பு ஒலிபரப்பு, சன் டைரெக்ட் வீடியோ ஆன் டிமேன்ட், தனது இருபத்தி சொச்சம் சேனலில் மீண்டும் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்து ஆயுசுக்கும் விளம்பரத்தினால் கட்டும் கல்லா….

    இவை அத்தனையும் ஒரு பெரிய அலை போல குறுகிய நேரத்தில் தாக்கினால்தான் விழுங்க முடியும் என்பதால் அந்த அலையின் வீச்சை காண்பிப்பதற்காக சன் குழுமம் விளம்பரங்கள் மற்றும் ஏனைய ஊடக கவரேஜ் மூலம் பிரம்மாண்டமாக காண்பித்து வருகின்றது. இந்த பிரச்சாரத்தில் விழாதவர் யாருமில்லை. ஆக எந்திரனை பார்ப்பது என்பது உங்களது விருப்பமோ, உரிமையோ, தெரிவோ அல்ல. அது நீங்கள் பார்த்தே ஆகவேண்டிய கட்டாயம். அந்த கட்டாயத்தை தவிர்த்துவிட்டு வேறு ஒரு சினிமாவை பார்க்க விரும்பினால் அதற்கு வாய்ப்புமில்லை, வழியுமில்லை.

    அடுத்து குறுகிய நாட்களில் ஒரு பேச்சை செயற்கையாக உருவாக்கிவிட்டு, அதனைப்பற்றிய மக்களின் மவுத் டாக் ஒரு கருத்தாக உருவெடுப்பதற்கு முன்னர் எந்திரன் தனது இலாபத்தை பார்த்துவிட்டு ஒதுங்கிவிடும். மக்களெல்லாம் சாகவாசமாக படத்தை அசை போட்டு நிராகரிக்க விரும்பினாலும் இந்த படம் வசூலில் தோற்கவே முடியாது. ஒரு படம் வெற்றியடைவதோ இல்லை தோல்வியடைவதோ மக்களின் கையில் என்ற ஜனநாயகமெல்லாம் எந்திரனது ஏகபோகத்திடம் எடுபடாது. ஆகவே இந்த வகையிலும் இது மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர் என்பதே உண்மை

    Reply
  111. தமிழ் சினிமா ஒரு கால கட்டத்தில் நேரடி போட்டி ஆங்கில ஹிந்தி மலையாளம் மற்றும்

    தெலுங்கு டப்பிங் படங்கள் மற்றும் சீன படங்கள் ஆங்கிலத்தில் டப்பிங் செய்து

    வெளியானது ,ஏதோ ஒரு பாலச்சந்தர் ஒரு பாரதிராஜா ஒரு பாக்யராஜ் ஒரு

    விசு ஒரு பாலு மகேந்திரா தான் இருந்தனர் ,

    தமிழ் சினிமா என்னும் பெயரை காப்பாற்ற

    ,அப்புறம் தொழில்நுட்பத்தில் ஆங்கில படங்களுக்கு இணையாக

    மணி ரத்னம் மற்றும் கமல் படங்கள்

    உங்கள் பாஷையில் காபி அடித்தனர்

    அதனால் தான் தமிழ் சினிமா இன்று உயிருடன் இருக்கு
    மணி ரத்னம் கமல் போன்றவர்களின் அடுத்த கட்டம் தான்]
    சங்கர்

    கலைக்காக விஞ்ஞானம? அல்லது விஞ்ஞான் திற்காக கலையா

    இதை விட மான கேடு என்ன இருக்க முடியும்

    நல்ல கதை சொல்ல தெரியனும்
    ஆனால் நல்லா விஞ்ஞானம் பயன் படுத்தனும்

    நல்லா பிரமாண்டம் எற்படதணும்
    வெறும் மார்க்கெட்டிங் பிழைப்பு
    சக மனிதர்கள் சக நடிகர்கள்
    சக தயாரிபாளர்களை வாழ விடாமல் பிச்சை எடுக்க
    வைக்க வேண்டும்
    குறைந்தது ஐம்பது படங்கள் தமிழ் சினிமாவில்
    முடித்த பிறகும் அதை வெளி இட ஆள் இல்லை
    பாவம் தயாரிபளர்கள் சொந்த காசை போட்டு
    வட்டி மேல மேல வட்டி கட்டி இன்னும் காசை கண்ணில் பார்க்க
    முடியல

    இப்போ ஒரு மனிதரின் இண்டஸ்ட்ரி

    அது ரஜினி தான்
    இப்போ தமிழ் சினிமா மானம் எங்கே போயிற்று
    படத்தின் முன்னோட்ட காட்சி கூட காசு கொடுத்து பார்க்க வேண்டும்

    அப்புறம் ஒரு குடும்ப இண்டஸ்ட்ரி
    தயாநிதி கலாநிதி உதயநிதி
    நம்மக்கு எல்லாம் பெருமை

    விசில் அடிப்பதில்
    ஜோராக விசில் அடிங்க இந்த பதிவை படித்து
    எந்திரன் போஸ்டர் வெளியீட்டு விழா

    http://shilppakumar.blogspot.com/2010/09/blog-post_17.html

    Reply
  112. This Rajini starrer film – is a clean xerox copy
    of Charles bronson film Death Wish 2

    Paul kersy – as Charles bronson as vigilantte –
    after his daughter is raped and killed by thugs,
    tries to track down the thugs and renting a room
    near the outskirts, he patrols the street in night
    and track the thugs one by one and kills them.
    Final thug, get admitted to hosipital to
    escape from him.

    That night, Paul uses his altered doctor ID to
    gain access to the hospital and confronts Wilson.
    They have a violent fight and Kersey is stabbed
    repeatedly by Wilson with a scalpel. But when
    Wilson slams Kersey up against an electrical device,
    Kersey ducks the oncoming punch. Wilson’s hand smashes
    through the machine and Kersey turns the power up,
    electrocuting Wilson. Donald Kay (Charles Cyphers),
    the head orderly on duty, witnesses Wilson’s death,
    but sympathizes with Kersey and gives him three
    minutes to escape from the hospital before
    sounding the alarm.

    In the Tamil film you can seen SA chandrasekaran
    at the end of the movie,
    speaking the exact dialouge of Death wish 2.

    did rajini r SAC gave credit to death wish as u wished

    Reply
  113. This film, again is a clear lift from
    English Movie “Sliding Doors”

    The film follows Helen Quilley (Gwyneth Paltrow),
    who has just been fired from her public
    relations job. The plot splits into two
    parallel universes, based on the two paths
    her life could take depending on whether
    she catches a London Underground train or not.

    This is told in two parts –

    1. In the time line in which she makes the train
    2. In the time line in which she misses the train

    The concept is a clear lift…….In Tamil,
    instead of Train it is a Bus…
    But that does not condone the copy.

    it is rajini film kalugu

    Manichitrathazhu, malayalam film, all
    knows it is a block buster and prompted
    to remake chandramukhi.

    Even Rajini harps it is a remake of Apthamithra,
    the fact is it has originated from Manichitrathazhu.

    Now when you see the plot of Vertigo (1958) –
    A phsyhchological thriller by Afred Hitchcock,
    we can clearly see the main plot of Manichitrathazhu.

    When Chandramukhi was a frame by frame copy
    of Manichitrathazhu, it also includes
    lots of copy cat (cut and paste scenes
    from Malayalam block buster
    Aaran Thamburan – Mohanlal/Manju warrier starrer)

    Watch this, which is already spotted and in Youtube.
    Aaram Thamburan-scene copy in Chandramukhi-1.wmv
    http://www.youtube.com/watch?v=pGt5hgiUkSQ

    Aaram Thamburan-scene copy in Chandramukhi-2.wmv
    http://www.youtube.com/watch?v=_d41hmShuHw

    This clearly shows, are we really lacking originality.

    And also P.Vasu is a director without any
    Originality and always thrive on copy cats.

    Nowadays, a decent word for copy cat is
    the word “Inspiration”!!!!!!!

    திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

    அது கருந்தேள் கொட்டினாலும் சரி நெற்றிக்கண் திறந்தாலும் சரி

    purpose of posting this is only kamal can give

    desi or indian version of hollywood movie
    he is a master in that
    afterall
    rajini can give a tamil version of a malayalam movie
    and made hell lot of money than kamal
    so 1st culprit is rajini as he is role model
    kamal does what is he is best at copying.

    நானும் கூட ஏமாந்து போனேன் சந்திரமுகி கதை வாசு சொன்னது

    போல ஏற்கனவே தமிழில் வந்த ஆயிரம் ஜென்மங்கள் பேய் கதை
    அதில் கூட ரஜினி நண்பராக வருவார் சந்திரமுகி போல

    அந்த கதை தான் இது என்று சொன்னார்

    now only i got the video evidence of copying two

    malayalam films sorry cut n paste of two films

    aaram thambiran and manichitratazhulu

    Reply
  114. sorry 12B typing mistake in tamil they used bus in hollywood they used

    train the sliding door

    Reply
  115. Lawaris – Amitabh/Amjed khan/Rakhee

    Panakkaran – Rajini/Vijayakumar/Sumitra

    http://www.youtube.com/watch?v=lM3l1duDPmg
    Block buster hit song sung by Amitabh

    http://www.youtube.com/watch?v=T6IWIJSnotg
    Tamil equivivalent……….But could not
    create the magic of Amitabh.

    P.Vasu directed, and what was a super hit in Hindi,
    he made it average grosser in Tamil…
    Such great director!!!

    Kasme Vade – Amitabh/Rakhee/Randhir kapoor.

    Copy cat – Dharmathin Thalaivan – Rajini/Suhasini/Prabhu

    http://www.youtube.com/watch?v=JU-XB0WbnH0
    Kasme Vade

    http://www.youtube.com/watch?v=ASfPljoJMD4&feature=related
    Kasme vade

    http://www.youtube.com/watch?v=fCETINlK91Y
    Dharmathin thalaivan

    http://www.youtube.com/watch?v=6b2QAlmxkVg
    Dharmathin thalaivan

    Luckily Ilayaraja gave us his original compositions.

    Reply
  116. நீ ஏண்டா காப்பி அடிச்ச

    ஏன் என்னோட பக்கத்து பெஞ்ச்ல இருக்கறவன் கூடத்தான் காப்பி அடிச்சான்..

    சரிடா… நீ காப்பி அடிச்சு பாஸ் பண்ணிட்டு என்னவோ நீயே எழுதின மாதிரி எல்லார் கிட்டயும் சொன்னியேடா …..

    ஓஹோ… கண்டுபிடிச்சுட்டீங்களா?

    சரி…. லேட் ஆவுது…. வெனிஸ் ஒலகப்பட விழாவுக்கு போயிட்டு வந்து பதில் சொல்றேன்….

    Reply
  117. ஒலக திரைப்பட விழாவில் போய் மனிதம் படிக்க வேண்டிய தலை எழுத்து

    யர்ருக்கும் இல்லை ,அவர்களுடைய முயற்சிகள் நமக்கு ஒரு தூண்டுகோல்

    அது பேசும் படம் எடுத்த துணிவு

    காது மற்றும் வாய் பேசாதோர் பார்த்த ரசித்த படம் புஷ்பக் என்னும் பேசும்
    படம் வியாபார நிர்பந்தனை எதுவும் இல்லாமல் எடுத்த படம்

    நான் திரைஅரங்கில் மாற்று திறனளிகளால் ரசிக்க பட்ட ஒரே படம்
    எனக்கு தெரிந்து சப் தைத்லஸ் sub titles இல்லாத கால கட்டத்தில்
    japanese
    பாசையில் கார் என்றாலே போர்டோ fordo

    ford is american car manufacturer name

    japanese name for car is fordo

    உங்க பாசையில் சொன்னால் காபி அடித்து தான் கார் பண்ணவே பழகிய ஜப்பான்

    அது போல சினிமா என்னும் வார்த்தையே வெள்ளைக்காரன் சொல்லி கொடுத்தது
    தான் நாம் காபி அடிக்கிறோம் அதற்க்கு ஒலக சினிமாவை பார்த்து காபி அடித்து
    எடுக்க வேண்டும்

    Reply
  118. Exemplary vintage vehicles:

    1922–1939 Austin 7 — the Austin Seven was one
    of the most widely copied vehicles ever,
    serving as a template for cars around the world,
    from BMW to Nissan.
    http://en.wikipedia.org/wiki/History_of_the_automobile

    dont buy any car from BMW to nissan

    buy only original

    dont watch kamal films

    watch original adam and eve films

    made by adam and eve-the human

    Reply
  119. யாருப்பா இது access போட்டு தாக்குறாரு. கருந்தேள் பேச்சே இல்லை.

    Reply
  120. “ஒரு ஹீரோ கஷ்ட‌ப‌ட்டு கிழவ‌னா ந‌டிச்சா அது இந்திய‌ன்.

    ஒரு கிழவ‌ன் கஷ்ட‌ப‌ட்டு ஹிரோவா ந‌டிச்சா அது எந்திர‌ன்”

    kamal rocks as indian
    rajini sucks as enthiran

    half of the money spent in enthiran is to make look good

    sorry look young sorry horrible enthiran robot

    robot is indias answer to irobot
    super man bat man spider man and all remake kitchadi of
    idiotic hollywood films

    rest is salary to top people

    Reply
  121. நையாண்டி நாரதரின் கேள்விகள்.

    1.சிவாஜி படத்துல கறுப்பு பணத்துக்கு எதிரான கருத்தை
    சொன்ன நீங்க எந்திரன் ல அதை ஏன் ஃபாலோ பண்ணலை?

    2.ரஜினி தன் மகளோட கல்யாணத்துக்கு ரசிகர்கள் யாரும் வரவேண்டாம்,கூட்ட நெரிசலால் அவதி ஏற்படும்னு சொன்னாரே,எந்திரன் பட ரிலீஸ்க்கும் கூட்ட நெரிசல் அதை விட 4 மடங்கு அதிகமா இருக்கும்.ரசிகர்கள் யாரும் ஒரு வாரத்துக்கு தியேட்டர் பக்கமே வராதீங்கனு சொல்லலையே ,ஏன்?

    3.ஈரோட்ல 6 தியேட்டர்ல படம் ரிலீஸ் ஆகுது.விடிகாலை 4-30 மணிக்கு முத ஷோ,மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தறதுனா இப்படித்தானா?

    4.டிக்கட் விலை ரூ 250,ரூ 300.நார்மல் டிக்கட்டைப்போல் 23 மடங்கு அதிகம்.இது ரசிகர்களை ஏமாற்றிப்பணம் பறிப்பது ஆகாதா?

    5.ஒரு தியேட்டரில் ஒரு ஷோவுக்கு 1200 பேர் பார்ர்க்கிறார்கள்.6 ஷோ ஒரு நாளுக்கு 6 தியேட்டர் 6*6*1200=
    43,200 மக்கள் ஒரு நாளில் படம் பார்க்கிறார்கள்.முதல் 10 நாட்களில் கிட்டத்தட்ட நாலரை லட்சம் பேர் படத்தை பார்த்து விடுவார்கள்.படம் நல்லாருக்கோ,இல்லையோ,டப்பாவோ ரிசல்ட் கேட்காமலேயே இத்தனை பேர் பார்க்கறதால புரொடியூசரான சன் டிவிக்கு ஏகப்பட்ட லாபம்.ரசிகனுக்கு?

    6.இந்தப்படத்தைப்பார்க்கலைன்னா அது ஏதோ தெய்வக்குத்தம் மாதிரி ஒரு இமேஜை சன் டி வி கிளப்பிட்டிருக்கு,அது ஏன்?

    7.இத்தனை பிரம்மாண்டங்களுக்கு நடுவிலும் வரிவிலக்குக்கு ஆசைப்பட்டு ரோபோ டைட்டிலை தமிழ்ல மாத்தி இருக்கீங்க,ஏன்?(வரி விலக்குஎன்பது சின்ன பட்ஜட் படங்களுக்கு அரசு மக்கள் வரிப்பணத்துல இருந்து தர்றது)

    பாபா படத்தில் பணம் திருப்பி கொடுத்தார்
    குசேலன் படத்தில் திருப்பி கொடுக்கலை
    கருப்பு பணத்தில் கருப்பு டிக்கெட் விற்றே கோடிஸ்வரர் ஆன
    என்னும் சமுக ஆர்வலர்கள் குற்றசாட்டு

    ரஜினி இதை மீண்டும் மீண்டும் நிருபணம் ஆனது

    மக்களை ஏமாற்றி பணம் பறிக்கலாம் ,வரி சலுகை பெற மக்களை
    ஏமாற்றலாம்
    ,கமல் ஹாலிவுட் படம் காபி அடித்தால் உங்களுக்கு நோகுது

    அதற்க்கு தான் உள்ளூர் திருடன் ரஜினி மற்றும் சன் பிச்சர்ஸ்
    அதை கண்டு கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்
    வீட்டை திருத்துங்கள் அப்புறம் தானாக திருந்தும் நாடு

    Reply
  122. @ rasu – நம்ம access மட்டும் இதையெல்லாம் வெச்சி ஒரு புக்கு போட்ருந்தாரு… சும்மா ஆயிரம் பக்கம் வரும் !! 😉 அவரை தனியா ஒரு ப்ளாக் ஆரம்பிச்சி இதையெல்லாம் எழுதுங்கன்னு சொன்னா, அன்புத்தொல்லை பண்றாரு 😉 .. அவரு தனியா இதையெல்லாம் எழுதினா இன்னும் நிறைய பேரு படிக்கலாம் பாருங்க .. அதான் ..

    Reply
  123. அதேபோல, நான் ரஜினி ரசிகன்னும் access னினைச்சிகினு இருக்காரு.. எனக்குக் கமலை எவ்வளவு பிடிக்காதோ, அதைவிட அதிகமா ரஜினியையும் பிடிக்காது.. access .. இந்த இன்ஃபர்மேஷன் உங்களுக்குத்தான் 😉

    Reply
  124. அப்போ உங்களையே உங்களுக்கு பிடிக்காது என்று சொல்லுங்கள்
    தெலுகு ரத்தம் சிரஞ்சீவி படம் தான் முதல் அடி ,மலையாளம் மம்மூட்டி
    மோகன்லால் படங்கள் தான் முதல் அடி வாங்கும் , கிங் கான் ஹிந்தி ஷாருக் கான் முதல் அடி ,அது போல தமிழ் சினிமாவும் விலக்கல்ல

    Reply
  125. ராப்பின் வில்லியம்ஸ் நடித்த படத்தில்
    மாறு வேஷத்தில் பெண்ணாக வீட்டில்
    robbin பாத்ரூம் போகும் காட்சி

    அவருடைய பெண் பாத்ரூம் கதவை திறந்து
    அப்பா என்று கண்டு பிடிப்பார்

    பிஸ் அடித்து கொண்டு கதவை தாள் போடாமல்

    குழந்தை கண்டு பிடிக்கிறது தன்னுடைய அப்பா என்று

    வாட் எ சாமே

    அந்த காட்சி கமல் அவ்வை ஷன்முக்ஹியில் avvai shanmukhi
    தன பெண் அவரை பெர்புமே perfume வாசனையில் கண்டு பிடித்து
    காள மாடு என்று சொல்லும் காட்சி

    நாம் ஆங்கில படத்தை விட சிறப்பாக செய்ய முடியும் என்பதற்கு
    சாட்சி

    Reply
  126. i watched mrs doubt fire so many times in star movies
    the bathroom scene that robbin goes as a lady and his
    kid identifying him as lady is so ridiculous

    they shouldve thought of different idea

    kamal did that better inspite of the fact many people accuse
    him as kamal always shows toilet in his films and his trousers

    same kamal did that scene better in avvai shanmukhi
    kid identifies him as his father by the perfume he uses
    kids have that sense that kamal used it effectively

    Reply
  127. இதே போல கமல் ஹாலிவுட் பிளம்சை விட பெட்டெர் ஆக பண்ணியது

    ஏன் உங்கள் கண்ணில் படல

    கமல் எனும் சமுத்திரம்…சில துளிகள்!

    கமலஹாசன்….. சினிமாவுக்கென்றே பிறந்த, பிறந்ததிலிருந்தே சினிமாவில் இருக்கும் ஒரு மகா கலைஞன். இந்த பதிவு கமல் எனும் சுயம்புவை பற்றிய ஒரு சிறு தொகுப்பு.

    கமலின் தாய் ராஜலக்ஷ்மி கமலிடம் சொன்னது “நீ எந்த தொழில் செய்தாலும் எனக்கு கவலை இல்லை. ஆனால்.. குப்பை அள்ளுபவனாக இருந்தால் கூட அதில் நீதான் மிகவும் தேர்ந்தவனாக இருக்க வேண்டும்”

    சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கேட்ட கேள்வி “சிவாஜி, எம்.ஜி.ஆர்., சாவித்திரி போன்ற பெரும் கலைஞர்களுடன் சிறு வயதில் நடித்தீர்கள்..அவர்கள் செய்த சாதனைகளை உங்களால் சாதிக்க முடிந்ததென எண்ணுகிறீர்களா?” கமலின் பதில் “அவர்களின் தோள் மீது அமர்ந்து சினிமாவை பார்த்து இருக்கிறேன். எனவே அவர்கள் பார்த்த பார்வையை விட என் பார்வை உயர்ந்தே இருக்கும்”. என்ன ஒரு யதார்த்தம் கலந்த பதில்.

    ஒருமுறை வேட்டையாடு விளையாடு படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் கமலை பற்றி கூறியது “கமல் சாரிடம் நான் ஒரு காட்சிக்கு உபயோகப்படுத்த போகும் நிறத்தை பற்றி பேச தொடங்கினேன். ஆனால் அவர் அந்த நிறத்தை பற்றி மட்டும் மணிக்கணக்கில் என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார். நான் மலைத்து போய் விட்டேன்”.

    Reply
  128. ஜெயா டி.வி.யில் சவால் நிகழ்ச்சி நடத்தும் பப்லு சொன்னது “ஒரு முறை கமல் அவர்களை காண அவரின் வீட்டிற்கு சென்று இருந்தேன், என் மன நலம் குன்றிய மகனுடன். அவருடைய அறைக்குள் நுழைந்தேன். நூற்றுக்கணக்கான புத்தகங்களின் நடுவே அமர்ந்து இருந்த கமல் என்னை அழைத்து என் மகனின் உடல் கோளாறு பற்றி கேட்டார். பிறகு அந்த வியாதியை பற்றி மட்டும் அணு அணுவாக பேசிக்கொண்டே இருந்தார். அதன் ஆரம்பம், அதனால் இன்றுவரை உலகில் பாதிக்கப்பட்டவர்கள், சரியான சிகிச்சை அளிக்கும் இடம்.. என அடுக்கிகொண்டே போனார் கமல்”.

    இளையராஜா கமலை பற்றி கூறுகையில் “அந்த மனிதனுக்கு ஆழ்வார் பாசுரம் முதல் பல ஆன்மீக விஷயங்கள் அத்துப்படி”.

    இயக்குனர் ஷங்கர் கமல் பற்றி பகிர்ந்து கொண்ட விஷயம் “ஒரு முறை அமெரிக்கா சென்று இருந்தேன். அங்கு நகரத்தின் ஒதுக்குபுறத்தில் இருந்த சிறு ஊருக்கு கேமரா பற்றிய புத்தகம் வாங்க ஒரு கடையில் நுழைந்தேன். கடைக்காரர் ஒரு அமெரிக்கர். அவர் என்னிடம் “நீங்கள் எந்த தேசத்தை சேர்ந்தவர்” என்று கேட்டார். “நான் இந்தியன்” என்றேன். அடுத்து அவர் கேட்டது “உங்கள் தேசத்தின் சிறந்த நடிகர் கமல் எப்படி இருக்கிறார்?”. எனக்கு சற்று வியப்பு. அமெரிக்காவின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் கடைக்காரருக்கு கமலை பற்றி எப்படி தெரியும். அவரிடமே கேட்டேன். அவர் சொன்ன பதில் “கமல் எங்கள் கடையின் நிரந்தர வாடிக்கையாளர்”. உலகின் எந்த மூலையிலும் புதிதாக ஒரு கேமரா அறிமுகப்படுத்தபட்டாலும், அந்த தகவல் கமலுக்கு உடனே தெரிவிக்கப்படுகின்றது.

    பொது சபையில் எப்படி பேசுவது, எதை பேசுவது என்பதற்கு இலக்கணம் கமல். அது தமிழ், ஆங்கிலம், மலையாளம் எந்த மொழியாக இருப்பினும்.. தெளிவான உச்சரிப்பும், தேர்ந்த எண்ணங்களும் அருவியாக கொட்டுகின்றன இந்த மனிதனிடம் இருந்து. இன்றைய கால கட்டத்தில் தன் தாய் மொழியாம் தமிழை கமலை போல தெள்ள தெளிவாக..இரத்தின சுருக்கமாக.. இடம் பொருள் ஏவல் அறிந்து பேசக்கூடிய நடிகன் கமலை தவிர எவருமில்லை என்பது என் கருத்து.. நான் பார்த்த வரை. எத்தனை மணி நேரம் பேசினாலும் கேட்டுக்கொண்டே இருக்க தோன்றும் அவருடைய சொல்லாற்றல், தொலைநோக்கு பார்வை…சகலகலா வல்லவன் என்ற சொல் சாலப்பொருந்தும்.

    இந்த பதிவின் முக்கிய நோக்கமே கமலின் துதி பாடுதல் அல்ல. மட்டரக சினிமா, கிரிக்கெட், மது பழக்கம், வெட்டி நண்பர்களுடன் அரட்டை என பொழுதை வீணாக்கும் சில(?) நண்பர்களே…. வாழ்வின் உயர்ந்த நிலையை அடைய நமக்கு ஒரு நல்ல வழிகாட்டி இல்லை, பெற்றோர் துணை இல்லை, உயர்ந்த எண்ணங்களுடைய நண்பர்கள் அமையவில்லை என சொல்லிக்கொண்டு இருப்பதை விட, நம்மை நாமே செதுக்கி கொள்ள பல வாய்ப்புகள் உள்ளதென்பதை ஆராய்ந்து சிந்தனையை உயர்த்திக்கொள்வதே சிறந்த வழி என்பதை உங்களிடம் பகிரவே இந்த பக்கம். நல்ல பத்திரிக்கைகள், டிஸ்கவரி போன்ற அற்புதமான சேனல்கள், நம் சக நண்பர்கள் எழுதும் சீரிய சிந்தனைகள் கொண்ட BLOG பக்கங்கள்…இப்படி இன்னும் பல…கமலை போல ஒரு சுயம்புவாக உருவாக உங்களை வாழ்த்தி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

    குறிப்பு: எம் தாய் மொழியாம் தமிழை மேடையில் இலக்கணப்பிழை இன்றி பேசி அதன் புகழினை உயர்த்தி பிடிக்கும் கமலுக்கு நெஞ்சார்ந்த நன்றி. வெல்க தமிழ்!

    Reply
  129. கமல் வியாபாரி கிடையாது கலைக்காக எதுவும் செய்பவர்
    வியாபாரியை தான் நீங்க விமர்சனம் பண்ணனும்
    கலை என்பது உங்க வாழ்க்கையை விமர்சனம் பண்ணும் ஒரு
    துறை ,அது தான் கமலை பெரு வாரியான மக்களுக்கு படிக்கமாட்டேன்
    என்கிறது

    சுட்டி காடும் குறைகள் கொட்டி கொடுக்கும் பரிசு

    நீங்கள் ஆன்மிக வடியாக vaddiyaga இருந்தால் கமல்
    விமர்சனம் செய்வார்,athigara
    அடிவருடிய இருந்தாலும் விமர்சனம் செய்வார்
    அது தான் கலை

    ஒரு வியாபாரியின் வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள் மீடியா
    ஒரு கலைஞனின் உண்மையான விமர்சனத்தை கூட தாங்க முடியாது

    நீங்க சொல்ல்வது போல கமல் ஒன்னும் ஈ அடிச்சான் காபி பண்ணுவது
    கிடையாது

    கமலின் ஒரு துளி

    போர் நிறுத்தம் என்று சொல்ல எல்ல உலக குடிமகன்களுக்கும்
    உரிமை உண்டு
    என்று சொன்னார் இலங்கை போரின் பொது

    அது தான் உலக நாயகன்

    போர் நிறுத்தம் கேட்டல் நான் தமிழ் தீவிரவாதி கிடையாது
    மனிதாபி மானம் ஏன் நான்காம் உலக போர் நடக்கல என்று
    யோசித்து பார்த்தால் தெரியும்
    நாம் யாரும் இங்கு இருக்க மாட்டோம் பூமியில்

    இலங்கை போர் நிறுத்தம் பற்றி கமல் சொன்னதை
    சீமான் அவர்கள் கூட சொன்னார் கமல் சொல்லியது என்று
    உலக நாயகன் வெறும் சினிமா நாயகன் மட்டும் அல்ல
    நிஜத்தில் கூட தான்
    பேசும் படம் ஒரு உலக சினிமா விசுஅல் மீடியம்
    அதை எல்லா பாஷை தெரிந்தவர்களும் பார்க்கலாம்
    புஷ்பக் அல்லது பேசும் படம் ஒரு உலக சினிமா ]
    அதனால் உலக நாயகன்

    சத்யஜித் ரே படங்கள் நடிக்காத குறையை
    கமல் தீர்த்து விட்டார் ஒரு படத்தில் அது தான் பேசும் படம்
    படங்கள் பேசணும் சமுதைய கருத்துகள் பேசணும்
    மாற்றங்கள் நடக்கணும்

    சினிமாவில் கமலை பார்கவில்லை என்றாலும்
    உலக தொலை காட்சியில்
    கமலை பர்ர்க்க வேண்டிய கட்டாயம்
    ,காலத்தின் கட்டாயம்

    Reply
  130. kamal is to chennai
    as woody allen is to newyork

    forget cinema
    the passion he showed towards the place he lives in

    whether for book collection drive

    or some other cause he goes there

    2.52 lakh books collected in the five-day drive

    http://www.thehindu.com/news/cities/Chennai/article614147.ece

    Kamal does it again
    IndiaGlitz [Tuesday, September 28, 2010]

    Kamal Haasan’s social responsibility is an open secret. Only a couple of weeks ago, the actor launched a book donation drive, urging everyone to do their bit to benefit the society.

    On Monday, Kamal launched a children’s cancer relief fund and presented roses to children with cancer at Sri Ramachandra University at Porur on the outskirts of Chennai.

    Taking part at the Rose Day celebrations organised by the department of pediatrics and pediatric hematology oncology services at Sri Ramachandra University, he said he and some of his colleagues from the film industry were willing to provide a little bit of happiness to the cancer affected people.

    The ‘Ulaga Nayagan’ said had he known about the mission, he would have asked his ‘Rasigar Narpani Mandram’ to reach out these children much earlier. “I understand the pain of cancer patients and their kith and kin as I had lost quite a few of my close ones and have a few cancer survivors in my close circle”.

    http://www.indiaglitz.com/channels/tamil/article/60382.html

    life is not just cinema

    cinema is afterall for few hours

    art imitates life

    life imitates art

    Reply
  131. கமல் கலை கொள்ளையன் நன்றி ,ஆங்கில படங்கள் ஏன் அவர் மேல கேஸ்
    போடல அதை நாம் கோர்ட்டில் சந்திப்போம் இல்லை என்றால் அவுட் ஒப் கோர்ட் செட்டில் பண்ணுவோம் ,யார் ஜெயிக்க போவது எனபது அல்ல

    யார் ஒரிஜினல் என்று தெரியும் அவர்களும் எங்கிருந்தோ சுட்டனர்
    என்று

    கலையை வைத்து மிக அதித கொள்ளை ,பகல் கொள்ளை
    ஜன நாயக நாட்டில் பண நாயகம் தான் விளையாட வேண்டும் என்று
    அவசியம் இல்லை

    கொள்ளை என்று ஆகி விட்டது ஆடு கமலின் கலை கொள்ளை அல்லது
    ரஜினியின் பகல் கொள்ளை
    ஆறு மாதமாக எல்ல திரை அரங்குகளையும் மிரட்டி
    எல்லா புது பட தயாரிபளர்களை மிரட்டி கொள்ளை அடிக்கலாம்
    உலக சினிமா பார்க்கும் உங்களை போல ஓலக அறிவு உள்ளவர்கள்
    கூட கலை கொள்ளையை விட பகல் கொள்ளை அடிக்கும் இந்திரன் பற்றி
    தனி பதிவு கூட போடலாம் அல்லவே
    அப்படி போடா விட்டால் உங்களுக்கு உலக சினிமா எந்த சமத்துவத்தையும்
    சொல்லவில்லை சொல்லி கொடுக்கவில்லை வெறும் கானல் நீர் தான்

    எந்திரன் பகல் கொள்ளை மட்டுமல்ல ,robocop ,terminator,irobot
    ,spider man,inspector gadget etc etc
    ஆங்கில படங்களின் காபி தான்
    கலை கொள்ளை கூட உங்கள் பாசையில்

    Reply
  132. Yeah I agree totally with you guys that this kamal
    is copy cat he does copy all movies from hollywood.
    He doesn t have brain like what rajni does like copy indian movies for films like badshah, veera, muthu, velaikaran, maveeran, billa, panakaran, arunachalam, dalapathi ( mahabarathathai kooda vidamatingala 🙂 kashtam da sami) etc.,
    Poor kamal doesn t know these things.

    Reply
  133. Hollywood has been an influence even in the 1940s.

    Mehboob Khan’s 1940 movie ‘Aurat’ that he
    remade 17 years later into ‘Mother India’
    was inspired from Hollywood flick ‘The Good Earth’ (1937).

    http://www.imdb.com/title/tt0028944/

    mother india

    US-based Indian origin Hollywood filmmaker Nagendra Karri
    said: “It’s the lack of scripts and proper writers
    that is making Indian filmmakers copy Hollywood.
    In fact that is one of the reasons Kamal Haasan
    used to get his scripts written by French writers
    and then adapt them to make classics,”
    Karri told us during a recent trip to India

    “There is no dearth of content here. It’s only a
    question of shortcut that the filmmakers take
    because they want a ready script. We’ve always
    been inspired from the west… Lifting has been
    here since the 1940s

    Reply
  134. kamal learnt his trade in malayalam i mean how to inspire
    or copy from english films here is a list of malayalam films

    copied recently

    Manju Poloru Penkutty (2004) copied from Crime and Punishment in Suburbia (2000)

    Malootty (1992) copied from Everybody’s Baby (1989)

    Mookkilla Rajyathu (1991) copied from The Dream Team (1989)

    Balu Mahendra’s Olangal (1982) copied from Man, Woman and Child (1980) (novel by Erich Segal)

    Oru Maravathoor Kanavu (1998) partially inspired from Jean de Florette (1986)

    Nadiya Kollappetta Rathri (2007) inspired (Kavya’s murder) from Agatha Christie’s Elephants Can Remember (1972)

    Nirnayam (1995) copied from The Fugitive (1993)

    Bhargava Charitham Moonam Khandam (2006) copied from Analyse This (1999)

    Police (2005) copied from Tango & Cash (1989)

    Thooval Sparsham (1990) copied from Three Men and a Baby (1987)

    James Bond (1999) copied from Baby’s Day Out (1994)

    Thalavattom (1986) copied from One Flew Over the Cuckoo’s Nest (1975)

    Pachakuthira (2006) copied from Rain Man (1988)

    Vadakkumnathan (2006) partly inspired from A Beautiful Mind (2001)

    Cheppu (1987) copied from Class of 1984 (1982)

    Akashadoothu (1993) copied from Who Will Love My Children? (1983)

    Hridayathil Sookshikkan (2005) copied from Meet The Parents (2000)

    Kakkakuyil (2001) copied from A Fish Called Wanda (1988)

    Kaliyattom (1997) inspired from Shakespeare’s Othello

    Vettom (2004) copied from French Kiss (1995)

    Ee Shabdam innathe Shabdam (1985) copied from Death Wish (1974)

    Yodha (1992) copied from Golden Child (1986)

    Olympiyan Anthony Adam (1999) copied from Kindergarten Cop (1990)

    Pattabhishekam (1999) copied from Larger Than Life (1996)

    Padayottam (1982) copied from Alexander Dumas’s epic novel The Count of Monte Cristo

    New Delhi (1987) inspired from Irving Wallace’s novel The Almighty

    Rajavinte Makan (1986) inspired from Sidney Sheldon’s novel Rage of Angels

    Ramji Rao Speaking (1989) copied from See the Man Run (1971)

    Hello My Dear Wrong Number (1986) copied from North by Northwest (1959)

    Mannar Mathai Speaking (1995) copied from Vertigo (1958)

    Vyooham (1990) copied from Lethal Weapon (1987)

    Kauthuka Varthakal (1990) copied from Worth Winning (1989)

    Meghamalhar (2001) copied from Brief Encounter (1945)

    Reply
  135. Story…….Copy
    Screen Play…. Copy
    BGM……..Copy
    Music… kekkave vendam ..copy..
    Make up—–Copy
    Costumes……..Copy
    Cinema Thalaipu…. copy

    Aanal… Kootam pottal… microphone kidaicha ..pechu mattum “PIRATED copy pakkatheenga..Internet la dowload pannadheenga”…
    edukara padathula… Hardwork, Originalty, Creativity… irukka?
    Edhuvum..illai..

    Nammala vechi nalla comedy pandrangapa…

    Reply
  136. SUN TV an example for a dangerous media tactics

    We all know about SUN TV marketing technics,specialy
    when they start to promote their distribution and release
    of some below average movies.Their adds are often and repeatedly said those movies are super hit movies,a marketing technic.
    But for their first own production ENTHIRAN,their marketing
    adds are agly and even Rajinikanth may not like it.they shows
    the the audio releases,trailer releases and even ticket
    reservations in the SUN TV news.These events are that
    important to show in NEWS?! They shows also shows
    people’s milk,beer abishagam
    on Rajnikanth cut-outs.what they are trying to say?
    They want to do everything for the sucess of this
    movie,becoz of 200 crore budget?!
    It’s an small example only.

    In a free democratic nation like India,these type
    of media always like a time-bomb even worst than
    terrorist attacks.Media always have the responsibility
    and freedom

    மக்களுடைய நலன் பின்னுக்கு தள்ளி தங்களுடைய நலன் மட்டும்
    தான் முக்கியம் என்னும் பகல் கொள்ளை
    கலை கொள்ளையை விட கொடுமை

    armtwisting the entire economy with media monopoly

    tamilian is only a victim

    this is just a beginning

    cut all the songs in robot and release it in hollywood
    sun pictures can do that

    because of copycat of hollywood films

    they didnt do that it seems.

    to reach people,they should mind it.

    like any product it is just marketing gimmicks rules
    lie,big lies n hype

    Reply
  137. enthiran no copy of any hollywood film?
    just c all goddamn monster films
    graphics makers
    creature features worked on this
    sorry re creating it again and again

    Because there are almost a hundred Rajnikanths eating up helicopters, smashing cars, battering planet earth and creating havoc, like never before. If you thought Terminator, Matrix, Godzilla was fun, then we guarantee you’ll fall off your chair with glee as our desi T2-meets-Blade Runner-meets Neo-meets-Godzilla sets the screen on fire in a crazy, vengeance bid. Spoofy, yes. But super fun too.

    The high point of Robot are the super quality special effects. All the Spiderman, Batman and Superhero antics of Rajnikanth have been done with exquisite elan by the Stan Winston Studio which reportedly provided the animatrics for films like Jurassic Park and Avatar. And all the stunts have been choreographed by Yuen Woo Ping, the Hong Kong based action director who created the high-adrenalin stunts of classics like Kill Bill and Matrix. Almost 40 per cent of the film’s colossal budget (Rs 160 crores) has been spent on special effects, which, at the end of the day, seems all worthwhile.
    For watching Rajnikanth running horizontal on a speeding train, clambering across burning buildings like
    Spiderman or mutating into gargantuan
    monsters does manage to shock and awe
    the viewer who’s out there to have big time fun.

    இந்த திரைப்படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் படத்திற்கு இணையான தரத்துடன் பிரம்மிக்க வைக்கின்றன.கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகளிலும் ரயிலில் ரஜினி போடும் சண்டைகாட்சிகளிலும் ஒரே மாதிரியான பல ரோபோ ரஜினி டான்ஸ் அண்ட் சண்டையிடும் காட்சிகளுக்கு மட்டுமே நாம் வாங்கிய டிக்கெட் சரியாப்போச்சு…

    Endhiran.Co.In || Alex Martin Endhiran Stunt Shooting Exclusive Video

    http://www.youtube.com/watch?v=zi0sfRQ9Bx0

    idthellam dupe

    enjoy this original stunt by alex martin

    copycart of hollywood films gets all the praise c

    mr karundhel not our indian style black money
    film all sun group and other black money became
    white problem solved
    no more black money issue
    no more copycat hollywood issue

    ஆளாளுக்கு படக்குழுவினரோ சொல்லிட்டாங்க, “இது தமிழ்ல ஒரு ஹாலிவூட் படம்” என்று. பிறகு படத்தில போய் ‘முட்டையில மயிர் பிடுங்கிற மாதிரி’… அது சரி வராது, சாத்தியமில்லை என்ற விமர்சனங்களை முன்வைப்பது தேவையற்ற ஒன்று. எப்பிடி ஒரு அவதார், ஸ்பைடர்மான், சுப்பர்மான், ஹல்க் போன்றவற்றை பார்த்து வியந்தீங்களோ! அப்பிடி எந்திரன் படக்குழுவினரையும் பாராட்டுங்க. ஒவ்வொரு நடிகர்களோடையும், தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுடையது இரண்டு வருச உழைப்பு நிச்சயம் பாராட்டுக்குரியது.

    எந்திரன் – தமிழில் ஒரு ஹாலிவூட் (வேற என்னத்த சொல்ல)
    watch hollywood films only why waste time watching
    tamil film

    கதையைப் பற்றி பெரிதாகப் பேச எதுவுமில்லை. சொல்லப்போனால் கதையைப் பற்றி பேசினால் சலிப்புதான் வருகிறது

    Reply
  138. enthiran no copy of any hollywood film?
    just c all goddamn monster films
    graphics makers
    creature features worked on this
    sorry re creating it again and again

    Because there are almost a hundred Rajnikanths eating up helicopters, smashing cars, battering planet earth and creating havoc, like never before. If you thought Terminator, Matrix, Godzilla was fun, then we guarantee you’ll fall off your chair with glee as our desi T2-meets-Blade Runner-meets Neo-meets-Godzilla sets the screen on fire in a crazy, vengeance bid. Spoofy, yes. But super fun too.

    The high point of Robot are the super quality special effects. All the Spiderman, Batman and Superhero antics of Rajnikanth have been done with exquisite elan by the Stan Winston Studio which reportedly provided the animatrics for films like Jurassic Park and Avatar. And all the stunts have been choreographed by Yuen Woo Ping, the Hong Kong based action director who created the high-adrenalin stunts of classics like Kill Bill and Matrix. Almost 40 per cent of the film’s colossal budget (Rs 160 crores) has been spent on special effects, which, at the end of the day, seems all worthwhile.
    For watching Rajnikanth running horizontal on a speeding train, clambering across burning buildings like
    Spiderman or mutating into gargantuan
    monsters does manage to shock and awe
    the viewer who’s out there to have big time fun.

    இந்த திரைப்படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் படத்திற்கு இணையான தரத்துடன் பிரம்மிக்க வைக்கின்றன.கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகளிலும் ரயிலில் ரஜினி போடும் சண்டைகாட்சிகளிலும் ஒரே மாதிரியான பல ரோபோ ரஜினி டான்ஸ் அண்ட் சண்டையிடும் காட்சிகளுக்கு மட்டுமே நாம் வாங்கிய டிக்கெட் சரியாப்போச்சு…

    Endhiran.Co.In || Alex Martin Endhiran Stunt Shooting Exclusive Video

    http://www.youtube.com/watch?v=zi0sfRQ9Bx0

    idthellam dupe

    enjoy this original stunt by alex martin

    copycart of hollywood films gets all the praise c

    mr karundhel not our indian style black money
    film all sun group and other black money became
    white problem solved
    no more black money issue
    no more copycat hollywood issue

    ஆளாளுக்கு படக்குழுவினரோ சொல்லிட்டாங்க, “இது தமிழ்ல ஒரு ஹாலிவூட் படம்” என்று. பிறகு படத்தில போய் ‘முட்டையில மயிர் பிடுங்கிற மாதிரி’… அது சரி வராது, சாத்தியமில்லை என்ற விமர்சனங்களை முன்வைப்பது தேவையற்ற ஒன்று. எப்பிடி ஒரு அவதார், ஸ்பைடர்மான், சுப்பர்மான், ஹல்க் போன்றவற்றை பார்த்து வியந்தீங்களோ! அப்பிடி எந்திரன் படக்குழுவினரையும் பாராட்டுங்க. ஒவ்வொரு நடிகர்களோடையும், தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுடையது இரண்டு வருச உழைப்பு நிச்சயம் பாராட்டுக்குரியது.

    எந்திரன் – தமிழில் ஒரு ஹாலிவூட் (வேற என்னத்த சொல்ல)
    watch hollywood films only why waste time watching
    tamil film

    கதையைப் பற்றி பெரிதாகப் பேச எதுவுமில்லை. சொல்லப்போனால் கதையைப் பற்றி பேசினால் சலிப்புதான் வருகிறது

    Reply
  139. ENTHIRAN
    படத்தின் ஒருவரி கதை ஒரு எந்திரம் உருவாக்கி,
    அதற்கு மனிதனைப் போல உணர்வுகளை கொண்டு வந்தால்,
    என்ன ஆகும் என்பதே,

    LIFTED FROM HOLLYWOOD FILMS

    IROBOT,INSPECTOR GADGET,SPIDER MAN

    ROBOCOP ETC ETC

    Artificial Intelligence: AI (2001)
    http://www.imdb.com/title/tt0212720/

    A highly advanced robotic boy longs to become
    “real” so that he can regain the love of his human mother

    Bicentennial Man (1999)

    http://www.imdb.com/title/tt0182789/

    An android endeavors to become human as he gradually
    acquires emotions.

    PLEASE C ENTHIRAN CLIMAX COPY OF D WAR
    RUDRA NAGAM

    New!! D-War trailer (2007/ 7/ 2)
    http://www.youtube.com/watch?v=XfRb8LagLuQ

    Godzilla

    CLIMAX OF ENTHIRAN

    http://www.tamilkey.com/watch-endhiran-un-believable-climax-scene-online.html

    ENDHIRAN UN BELIEVABLE CLIMAX SCENE
    SORRY VIDEO QUALITY IS POOR
    AS IT IS CAMERA PRINT
    1st video 14 minutes
    http://www.youtube.com/watch?v=BbQE6rOSNwY&feature=player_embedded#!

    2ND VIDEO 8 MINUTES
    http://www.youtube.com/watch?v=oFqzQXb1IJw&feature=player_embedded

    ALAVANDHAN IS BETTER THAN

    ENTHIRAN IN TERMS OF TECHNICAL FEATURES

    Aalavandhan is an extraordinarily entertaining film that
    is quite unlike anything else in the world of cinema.
    It’s true that there’s nothing particularly new here –
    a psychopathic killer, mistaken identities, computer
    graphics – but rather like the uncategorisable Korean film Save The Green Planet, it’s in the way that the film draws together disparate elements and incompatible genres to create something quite original and surprising. Watching Kamal Hassan’s films reminds me
    of the freshness that was once there in Hong Kong movies
    and John Woo action films – a striking and fresh outlook
    on genre filmmaking filtered through the sensibilities
    of an extraordinary talent that creates its own rules
    about what can and can’t be done in a film.

    Reply
  140. u can fool some of the people some of the time

    all of the people some of the time

    not ALL OF THE PEOPLE ALL OF THE TIME

    luckily kamal never did this robot

    as planned earlier.

    Enthiran, the worst start for a Rajini movie ever in TN state

    We have never seen such empty second week for Rajinikanth
    movies before. But this is a huge disappointment and as a
    matter of fact when we were checking out the advance
    booking results for Kuselan last time, we atleast saw a
    full week of houseful shows but then drastically
    dropped to about 10% or so… In this case it
    is surprisingly the 4th day itself has dropped so badly.

    http://img108.imagevenue.com/img.php?image=16565_ganga1_122_224lo.JPG

    http://img11.imagevenue.com/img.php?image=16566_dindigul_122_18lo.JPG

    Dindugal district

    http://img272.imagevenue.com/img.php?image=16567_vellore_122_91lo.JPG

    Vellore district

    http://img279.imagevenue.com/img.php?image=16568_rohini_122_136lo.JPG

    Rohini Koyambedu, Chennai

    http://img273.imagevenue.com/img.php?image=16568_rakki_122_525lo.JPG

    Raakhi theater Ambathore, Chennai

    http://img186.imagevenue.com/img.php?image=17599_kanchipuram_122_523lo .JPG

    Kancheepuram

    http://img202.imagevenue.com/img.php?image=17400_karaikudi_122_135lo.J PG

    Kaaraikudi

    chek out chennai theaters

    http://www.agscinemas.com/tickets.aspx?filmid=001FM00000117

    http://www.ticketnew.com/OnlineTheatre/Theatre/dashboardonline.aspx?VenueID=MjM%3d-XVCxL7cqliY%3d&ReqDate=MjAxMC0xMC01-r1TK1IV2T1k%3d&SiteInfo=MQ%3d%3d-9ua1LJKgM64%3d

    http://www.ticketnew.com/OnlineTheatre/Theatre/dashboardonline.aspx?VenueID=MQ%3d%3d-9ua1LJKgM64%3d&ReqDate=MjAxMC0xMC00-wLnylqqkuZg%3d&SiteInfo=MQ%3d%3d-9ua1LJKgM64%3d

    http://movie-ticket-abirami.com/index.aspx?sitefrom=Abirami.in

    http://www.mayajaal.com/
    sat and sunday oct 3 most shows are available

    Theaters are empty, so much for Rajini fanboys,
    political propoganda and Shankar’s fans hype created
    for 2 years. Has any Rajini movies faced this kind of
    poor opening in the past. Just one movie
    I can think of – Baba.

    Reply
  141. i dont know why i am postng these enthiran tickets stauts

    charu shouldve seen enthiran at mayajaal as the latenite shows where available
    on sat or sun oct 2nd or 3rd or somebody shouldve sponsored the ticket
    to review the film

    எந்திரன் டிக்கட்!

    http://charuonline.com/blog/?p=1027

    உலகம் பூராவும் இந்திரன் பார்க்க சாருவுக்கு
    மட்டும் டிக்கெட் கிடைக்கல
    பாவம்
    ஏன் என்றால் காபி அடிதான் காபி அடிதான்
    என்று கமல் மேல அவதூறு

    பேசினார்
    அதனால் தான்

    எந்திரன் பார்த்ததை விட எந்திரன் பார்க்காதது தான்
    மிக பெரிய தண்டனை

    போரில் சாவதை விட உயிரோடு இருப்பது
    தான் மிகவும் கொடுமை

    அதே போல இந்திரன் பார்க்காமல் இருப்பது
    எவ்வளவு பெரிய கொடுமை
    பார்த்து விட்டால் கனவு நிறைவேறி இறுக்கும்
    இல்லா விட்டால் தண்டனை தான்

    பாவம் சாரு

    Reply
  142. கோபமான இரண்டு பேர்…
    October 4th, 2010
    http://charuonline.com/blog/?p=1037

    ரத்த அழுத்தத்தை சோதிப்பதற்கு ஒரு கருவி இருக்கிறதல்லவா,

    அதைப் போல் கோபத்தை அளப்பதற்கும் ஒரு கருவி இருந்தால்

    இப்போது தமிழ்நாட்டிலேயே அதிக கோபத்துடன் இருக்கும்

    இரண்டு நபர்களை நீங்கள் சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம்.

    ஒருவர், கமல்ஹாசன். காரணம், தன் போட்டியாளரான

    ரஜினியின் ஆக மோசமான ஒரு படத்திற்குக் கிடைத்திருக்கும்

    வானளாவிய புகழ். இரண்டாவது, சாரு நிவேதிதா.

    அடியேனின் கோபத்திற்குக் காரணம், எந்திரன் என்னை

    ஒரு தேசத் துரோகியாக மாற்றி விட்டது…

    (எந்திரன் படத்திற்கு நான் எழுதிய விமர்சனத்தின் ஆரம்பப்பகுதி இது. மீதியை நவம்பர் உயிர்மை இதழில் காண்க)

    4.10.2010.

    1.50 p.m.
    pl read this if u get enough time to kill or use
    left to u

    தமிழ் சினிமாவில் கலை: மிகை

    http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3431

    Reply
  143. ஜேம்ஸ் கேமரூன் போல இயக்குனர் சங்கர் இந்தப் படத்தைப் பற்றி 10 வருடங்கள் கனாக்கண்டதாக ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார், இப்படி காப்பியடித்து படம் செய்வதற்காகவா 10 ஆண்டுகள் காத்திருந்தீர்கள் எனக்கேட்கத் தோன்றுகிறது.

    மேலும் 150 கோடியில் படம் எடுப்பதெல்லாம் இன்றைக்கு தமிழில் சாத்தியமாகியிருக்கிறது என்று பெருமையாய் சொல்லிக்கொண்டாலும், அந்தப்பணம் எப்படி வந்திருக்கும் என்பதெல்லாம் ஊரறிந்த ரகசியம்

    ஹாலிவுட் திரைப்படத்திற்கு இணையான திரைப்படம் எனச் சொல்கிறார்கள். நிச்சயம் ஹாலிவுட் அளவு உழைத்துவிட்டு, வழக்கமாக தமிழ் டைரக்டர்கள் செய்யும் காப்பியைத்தான் இதிலும் செய்திருக்கிறார்கள். இவ்வளவு உழைத்த இந்தக் குழு கொஞ்சம் யோசித்திருந்தால் காப்பியேதும் அடிக்காமலேயே ரஜினிக்கு ஆவதுபோல் கதை செய்திருக்க முடியும். பிரம்மாண்டத்திற்கு மெனக்கெட்ட இந்தக் குழு கொஞ்சமாவது கதைக்காகவும் சிந்தித்திருக்கலாம். ஆனால், பிரம்மாண்டத்தைக் காட்டியே மிரட்டும் சங்கர் இந்தப் படத்திலும் அதே ஃபார்முலாவை செய்திருக்கிறார். படம் வெற்றியா, தோல்வியா என்பதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. ஆனால் இவ்வளவு திறமையான குழு இருந்தும் இன்னும் ஆங்கிலத் திரைப்படங்களைக் காப்பியடித்து சீன்கள் சேர்க்க வேண்டுமா என்பதுதான் ரஜினி மற்றும் சங்கர் திரைஇப்படங்களின் ரசிகர்களின் ஆதங்கமாய் இருக்க முடியும்.

    எல்லாவற்றையும் போட்டு உடைப்பதற்காக 150 கோடி செலவு செய்திருக்கிறர்கள். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை உடைத்துக் கொண்டே இருக்கிறார்கள். டீ.வியில் ஆரம்பிக்கிறது இவர்களின் உடைப்பு அட்டகாசம்.. அப்படியே நீண்டு கிட்டத்தட்ட கண்ணில் படும் எல்லாவற்றையும் உடைத்துவிட்டு பிரம்மாண்டம் எனச் சொல்லி விடுகிறார்கள்

    இந்த நல்ல கதையை இதைவிட எளிமையாய், காப்பியடித்தல் ஏதுமின்றி செய்திருந்தால் ரஜினிக்கும், ஷங்கருக்கும், தமிழ்த் திரையுலகுக்கும் ஒரு மைல்கல் படமாக இருந்திருக்கும். இவர்கள் செலவு செய்த சிலநூறுகோடிகளுக்கும் அர்த்தம் இருந்திருக்கும்.

    படத்தில் மாரியம்மன் கோவில் மைக்செட் தேர்வுக்கு படிப்பவர்களுக்கு தொந்தரவு தருவதாக காண்பிக்கிறார்கள். அப்படியே ஐந்துவேளை காதுக்கு அருகில் அலறும் பாங்கு ஓதுவதையும், ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச்சுகளில் இருந்து வெளியாகும் அல்லேலூயாக்களையும் கான்பித்து மதச்சார்பின்மையை நிரூபித்திருக்கலாம். ஆனால் வழக்கம்போல இந்துக் கோவில் பண்டிகையை மட்டும் சமூகத்திற்கு தொந்தரவு என காட்டி தங்களது போலி மத்ச்சார்பின்மையை நிரூபித்திருக்கின்றனர்.

    படத்தின் மிகப்பெரிய பலம்

    குழந்தைகளுக்கு இப்படம் மிகவும் பிடித்திருக்கிறது. ரயிலில் நடக்கும் சண்டைகள், வில்லன் ரோபோக்கள் செய்யும் கிராஃபிக்ஸ் காட்சிகள், அது பேசும் கம்ப்யூட்டர் குரல் எல்லாவற்ற்றையும் குழந்தைகள் மிகவும் ரசிக்கின்றன், கூடவே நாமும்.

    அதே சமயம், கலைஞர் குடும்பமும், மாறன் குடும்பம் மட்டுமே தமிழ் சினிமா, என்ற நிலையை நோக்கி தமிழ் சினிமா செல்வது அதன் வளர்ச்சிக்கு நல்லதல்ல.

    Reply
  144. sorry charu seen enthiran and sent his review in very short words
    on oct 1st itself 1st day last show?

    http://twitter.com/charunivedita

    எந்திரன்: இது போன்ற குப்பையை தமிழ் சினிமா சரித்திரத்திலேயே பார்த்ததில்லை. தமிழ் சினிமாவின் நிரந்தர அவமானம்.
    2:19 AM Oct 2nd via web

    ரத்த அழுத்தத்தை சோதிப்பதற்கு ஒரு கருவி இருக்கிறதல்லவா,

    அதைப் போல் கோபத்தை அளப்பதற்கும் ஒரு கருவி இருந்தால்

    இப்போது தமிழ்நாட்டிலேயே அதிக கோபத்துடன் இருக்கும்

    இரண்டு நபர்களை நீங்கள் சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம்.

    ஒருவர், கமல்ஹாசன். காரணம், தன் போட்டியாளரான

    ரஜினியின் ஆக மோசமான ஒரு படத்திற்குக் கிடைத்திருக்கும்

    வானளாவிய புகழ். இரண்டாவது, சாரு நிவேதிதா.

    அடியேனின் கோபத்திற்குக் காரணம், எந்திரன் என்னை

    ஒரு தேசத் துரோகியாக மாற்றி விட்டது…

    (எந்திரன் படத்திற்கு நான் எழுதிய விமர்சனத்தின் ஆரம்பப்பகுதி இது. மீதியை நவம்பர் உயிர்மை இதழில் காண்க)

    i am also a தேசத் துரோகி because i am against enthiran

    1st half is good the second half is graphics graphics graphics

    கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே
    hollywood Artificial intelligenc and Bicentennial man
    were flop because there were not much graphics or monster
    creature feature pure men and machines relationship
    shown beautifully

    ஹாலிவுட் இந்த மாதிரி கீழ்த்தரமான வேலை செய்யவில்லை
    அதனால் ஹாலிவுட் கூட இந்திரன் பற்றி கம்பர் பண்ண கூடாது

    ஏன் நண்பர் சினிமா துறையில் இருப்பவர் அவரிடம் ஒருவர்
    எந்திரன் ஹாலிவுட் படம் போல இருக்கு என்று சொல்லிய போது
    சாரு சொல்லியது போல குப்பை என்று சொல்ல முடியாமல்
    ஹாலிவுட் படங்களை விட இந்திரன் படம் நல்ல இருக்கு என்று
    சொல்லி சமாளித்தார் மனதில் திட்டி கொண்டு

    here the masala became spider man 2nd part professor character
    good becomes evil idea copy robo rajini

    எந்திரன்: இது போன்ற குப்பையை தமிழ் சினிமா
    சரித்திரத்திலேயே பார்த்ததில்லை. தமிழ் சினிமாவின்
    நிரந்தர அவமானம்.

    கோடியில் ஒருவர் சொல்லிய வரிகள்
    என்றென்றும் நன்றியுடன்
    நன்றி திரு சாரு அவர்களுக்கு

    Reply
  145. ஒலக சினிமா பார்த்தே உங்களால் உலக நாயகனை பாராட்ட முடியல
    அப்புறம் எப்படி கமலின் சினிமா பாமர மகளுக்கு புரியும்
    மனிதனை உசிப்பி விட்டால் அன்பே சிவம் என்று புரியல
    ரயில் இப்லேன் ஆடோமொபிலேஸ் என்று armchair அறிவிஜீவி தனம் தான்
    மிச்சம் யாருக்கு என்ன லாபம் கமலை குறை கூறி

    மன்மதனை உசிப்பி விட்டு அரக்கனை உசிப்பி விட்டால்
    விசில் அடித்து பாக்க முடியுது

    ரோபோட் கூட பெண்ணை நம்பினால் அதற்கும் சங்கு தான்டா
    வாட் எ மெசேஜ்

    தன்னை தானே பிச்சு கொண்டு உயிர் விடும் ரோபோட்

    அரக்கனை மாறும் ரோபோட்
    இதை தான் ரசிக்க முடியும்

    அஞ்சலி படத்தில் மன நலம் குன்றிய குழந்தை எப்படி நம்மை எல்லாம்
    கலங்க வைத்தது

    எக்ஸ்ட்ரா டேறேச்டேரியால் ஈ டி ஆங்கில படம் பிரெண்ட்லி ஏலியன்
    எங்க ஜுராசிக் பார்க் மன்ச்ட்டர் எங்க
    அஞ்சலி காட்டிய மணி ரத்னம் வன்முறை என்னும் வலையில் விழுந்து
    மீண்டு எழ பல கலாம் ஆனது அலை பாயுதே படத்தில்

    அதே போல ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் கூட ஈ டி E T பண்ணியவர்
    ஜுராசிக் பார்க் என்னும் கிராபிக்ஸ் மன்ச்ட்டர் MOSTER வலையில் மாடி MAATI கொண்டு
    ஆர்டிபிசியல் இண்டெலிஜென்ஸ் ARTIFICIAL INTELLIGENCE ஹாலிவுட் கூட மக்கள் ஆதரவு கொடுக்கல

    தவறான பாதையில் மக்களை அழைத்து சென்று தாங்களும் அந்த
    விஞான குப்பையில் மாட்டி கொண்டு மணி ரத்னம் ,ஸ்பீல்பெர்க் ,மற்றும்
    சங்கர் அவர் மாட்டிய வலையில் அவரே மாட்டி கொண்டார்
    பிரமாண்டமான மசாலாவில் ஜெயித்தாலும் அவர் தயாரிப்பான இரண்டு
    படங்கள் தோல்வி அதுவும் புது புது இயக்குனர்களை அறிமுக படுத்தி
    அந்த முயற்சியும் வியாபார வெற்றி பெறாத படங்களால் உதாரணம்
    அனந்தபுரத்து வீடு மற்றும் ரெட்டை சுழி ,தயாரிப்பு நிறுத்தி விட்டார்

    ORU NALLA THARIPPU NIRUVANAM PALA PUTHIYA DIRECTORS
    KANAVU MEI PADA SEITHADHU IPPO PRODUCTION STOP
    THANKS TO FANS FOR NOT ENCOURAGING RETTAI SUZHI AND ANANTHAPURATHU VEEDU
    NAILED THE S PICTURES BANNER

    மனிதனை உசிப்பி விடாமல் மன்மதனை மட்டும் அரக்கனை மட்டும்
    உசிப்பி விட்டால் அவருக்கே தான்

    அன்பே சிவம் என்று சொல்லிய கமல் எங்கே அந்நியன் என்னும் அரக்கனை
    கதையில் எழுதிய சுஜாதா அந்நியனையும் அரக்க ரோபோவையும் படத்தில் காட்டிய சங்கர் எங்கே
    அந்த அடி .

    பத்து ஆயிரம் பக்கங்கள் ஒரு லட்சம் பதிவுகள் PALA கோடி புத்தகங்கள் பத்தாது
    இதை விளக்க

    Reply
  146. மகாபாரதம் மற்றும் ராமாயணம் வெறும் குட் வ/ச ஈவில்
    good v/s evil films thaan

    பார்த்து கேட்டு பழகிய ரத்தத்தில் ஊறிய விசயங்களால்
    மனிதம் பழக தெரியாது அரக்கனை வலி பட தெரியும்
    இதி இதிகாச மோசடி
    சரித்திர மோசடி இல்லை இதிகாச மோசடி

    எல்லா எந்திரர்களும் எந்திரன் பார்த்தாச்சு
    அதனால் தான் இதை சொல்ல வந்தேன்
    அன்பே சிவம்

    வெறும் எந்திரங்கள் கிடையாது வாழ்கை
    வெறும்
    trains planes automobiles computers mobiles televisions etc etc

    அன்பே சிவம் தான் வாழ்க்கை

    இயந்திரங்களுக்கே emotional intelligence உணர்ச்சிகள்
    தேவை படுகிறது அனால் உணர்ச்சிகள் இல்லா
    மனிதன் எந்திரனாக மாறி வருகிறான்

    CNN news feedback from a viewer or comment by the network itself
    US has the right to bomb iraq or afghanistan
    why dont they do food bombing at somalia
    where hundreds and thousands are dying without food
    இது தான் மனித நேயம்
    மிக பெரிய அமெரிக்க ராணுவத்திற்கு வைத்த குட்டு
    from cnn network

    thanks a lot for reading this
    and spending your precious time.

    Reply
  147. எந்திரன் – கமல் நடித்திருந்தால்?
    ஷங்கர் ‘ரோபோ’ கதையை முதலில் சொன்னது கமலிடம் என்பதை நாமறிவோம். ஒருவேளை கமலே நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

    1) ரோபோ மாதிரியே இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரு இயந்திரத்தனமான அசைவை படம் முழுக்க முகத்தில் காட்டிக்கொண்டே இருந்திருப்பார். அவர் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி நடிக்க, இவ்ளோ வேலை செய்கிற ரோபோ இதை மட்டும் ஏன் இப்படி செய்கிறது? என்று நாம் விமர்சித்திருப்போம். உ.தா. அன்பே சிவம் – வெட்டுப்பட்ட மீசை.

    2) ரோபோ நாயகியிடம் முத்தம் கேட்கும் காட்சியில், லிப் கிஸ் தான் வேண்டும் என்று அடம் பிடித்திருக்கும்.

    3) ரோபோ அறிமுகக்காட்சியில், ”கடவுள் இருக்காரா? இல்லையா?” என்ற கேள்விக்கு “இல்லைன்னு சொல்ல மாட்டேன். இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்” என்று பதில் சொல்லி குழப்பியிருக்கும்.

    4) வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக,
    ரோபோ வேடத்திற்கு குரல் கொடுக்கும்போது ஒரு தகர வாய்ஸ் கொடுத்திருப்பார்.

    5) நடனக்காட்சிக்கும், சண்டைக்காட்சிக்கும்
    டூப் போடவோ, மாஸ்க் போடவோ, கிராபிக்ஸ்
    செய்யவோ மறுத்து, இதற்காக பிரத்யேகமாக
    பயிற்சி எடுத்து அவரே செய்திருப்பார்.

    6) இப்ப ரோபோவை இயந்திரமாக காட்டும்போது,
    கிராபிக்ஸில் காட்டியுள்ளார்கள். கமல் நடித்திருந்தால்,
    கிராபிக்ஸ் வேண்டாம் என்று சொல்லிவிட்டு,
    மேலே மெட்டாலிக் தகடு பதித்துக்கொண்டு
    உள்ளூக்குள் இருந்துகொண்டு அவரே
    இயந்திரமாகவும் நடித்திருப்பார்.

    7) ரோபோவை வெட்டிப்போடும் காட்சியில்,
    விஞ்ஞானியாகவும், துண்டாக கிடைக்கும்
    எந்திரனாகவும் கமல் நடித்திருக்கும் நடிப்பைப்
    பார்த்து, தியேட்டரே கண்ணீரில் மிதந்திருக்கும்.

    8) இறுதிக்காட்சியில் எதிர்ப்பவர்களை எல்லாம்
    சுட்டுக்கொல்வது ‘பாசிசமாக இருக்கிறதே?’
    என்று இயக்குனரிடம் விவாதித்திருப்பார். நன்றி – இந்த பேட்டி.

    9) டைட்டிலில் வசனம் என்று அவருடைய
    பெயரும் வந்திருக்கும்.

    10) டைட்டிலில் பானு பெயர் வந்த இடத்தில்
    கௌதமி பெயர் வந்திருக்கும்.

    11) சிட்டி வெர்ஷன் 2.0 கேரக்டருக்காக,
    பத்து மணி நேர மேக்கப்பில் அடையாளம்
    தெரியாதபடி மாறியிருப்பார்.

    12) விக் வைத்து நடிக்காமல், முடியை குறைத்து,
    பிறகு வளர்த்து வித்தியாசம் காட்டி நடித்திருப்பார்.
    இதனால், படத்தை முடிக்க இன்னும்
    ஒரு வருடம் அதிகமாயிருக்கும்.

    13) கலாநிதி மாறனே தயாரித்து, படத்தின்
    கிளிப்பிங்ஸ் கிடைக்காவிட்டாலும், ஜெயா டிவியில்
    சுஹாசினியும், விஜய் டிவியில் அனுஹாசனும்
    படத்தை புகழ்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள்.

    14) படம் நன்றாக வந்திருக்கும்பட்சத்தில்,
    விமர்சகர்கள் அனைவரும் ஷங்கரைவிட
    கமலை புகழ்ந்திருப்பார்கள். ”கமலை விட்டா
    , இந்த படத்தில் நடிக்க ஆளே இல்லை!” என்று சொல்லியிருப்பார்கள்.

    15) கமர்ஷியல் எண்டர்டெயினராக இல்லாமல்,
    உன்னத கலைப் படைப்பாக இப்படம் பார்க்கப்படும்.

    என்ன அப்படித்தானே?

    அடுத்தது, அஜித் நடித்திருந்தால்?
    யாராவது சொல்லுங்களேன்.

    Reply
  148. ஷங்கர், “த்ரீ இடியட்ஸின்” பிரசவக் காட்சியை சுட்டு எந்திரனில்
    வைத்திருக்கிறாரே? தன் அடுத்த படமான த்ரீ இடியட்ஸ்
    தமிழ் ரீமேக்கில் அந்தக் காட்சியை என்ன செய்வார்?

    எந்திரன் – சில (பல) கேள்விகள்
    (ஐ… ஜாலி… ஜாலி… எந்திரன் பாத்தாச்சே…..)

    http://yeskha.blogspot.com/2010/10/blog-post.html

    Reply
  149. எந்திரன் – வெறும் ஆட்டுக்கல்.

    எந்திரன்
    திங்கள், 4 அக்டோபர் 2010( 20:03 IST
    http://tamil.webdunia.com/entertainment/film/review/1010/04/1101004053_2.htm

    வசீகரன் (ர‌ஜினி) பத்து வருடங்கள் இந்த மனித ரோபோவை உருவாக்க கஷ்டப்பட்டதாக சொல்கிறார்கள். இதற்கு காட்சி எதுவும் வைக்கவில்லை. வசீகரனே இந்த‌த் தகவலை சொல்கிறார். பத்து வருஷம் கஷ்டப்பட்டதை காட்ட இயக்குனர் தனது கற்பனையிலிருந்து செலவழித்தது வசீகரனின் ஒட்டுத் தாடியும் நீண்ட தலைமுடியும்

    இந்த பத்து வருட இடைவெளியில் இவர் ஐஸ்வர்யா ராயையும் காதலிக்கிறார். காதலிக்கு நேரம் செலவழிக்காததை காட்ட ஒரு காட்சியும் அதனைத் தொடர்ந்து ஒரு டூயட்டும் படத்தில் உள்ளது. ஒட்டுமொத்த படத்தைப் பார்க்கும் போது காதலிக்கு நேரம் செலவழிக்காததை காட்ட அல்ல, டூயட்டுக்காகவே இந்த காட்சி வைக்கப்பட்டுள்ளது என்பதை ஒருவர் உணர முடியும்

    எந்திரனின் கொட்டத்தை அடக்க வசீகரன் பல விஷயங்கள் சொல்கிறார். மியூட் செய்யப்பட்ட இந்தக் காட்சியை பார்க்கும் போது ஒருவர் பெ‌ரிதாக எதிர்பார்ப்பது தவறல்ல. ஆனால் வசீகரன் சிட்டியின் மின்சார சப்ளையை கட் செய்ய‌ச் சொல்வதும், எந்திரனைப் போலவே இருக்கும் நூற்றுக் கணக்கான எந்திரன்கள் கார் பேட்ட‌ரியிலிருந்து ‌‌ரீசார்‌‌ஜ் செய்துக் கொள்வதும் குழந்தைகளை குதூகலிக்கச் செய்யும் சமாச்சாரங்கள். இறுதியில் எந்திரன்கள் பந்தாகவும், பாம்பாகவும், ராட்சஸ மனிதனாகவும் மாறி அட்டகாசம் செய்யும் காட்சிகள் ராம.நாரயணனின் ‌‌ரீவை‌ண்ட் எபிசோடுகள். கொட்டாவி விடாமலிருப்பவர்களுக்கு ப‌ரிசு அறிவிக்கலாம்.

    எந்திரன் – வெறும் ஆட்டுக்கல்.

    பின் குறிப்பு – ஹாலிவுட் போன்ற ஒரு படத்தை தமிழில் எடுத்திருக்கிறார்கள். அதைப்போய் குறை சொல்கிறார்களே என்று சில மேதாவிகள் கோபப்படக் கூடும். அவர்களுக்கு நம் பதில், ஒன்றரை கோடி கொடுத்தால் ஒரு ஹம்மர் காரை இறக்குமதி செய்ய முடியும். கோடிகள் இருந்தால் அதை ஷங்கரும் செய்யலாம், ராம.நாராயணனும் செய்யலாம்

    Reply
  150. http://mathavaraj.blogspot.com/2010/10/blog-post_03.html

    ஜெயகாந்தனின் ‘யந்திரம்’ சிறுகதையும் இங்கே குறிப்பிட வேண்டியதே. குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆயாவாக வரும் முத்தம்மா, அந்த மழலைகளின் அற்புதம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆடு மாடுகளை மேய்ப்பது போல தினமும் கான்வெண்ட்டுக்கு அழைத்துச் செல்வார். ஒரு குழந்தைக்கு உடல்நிலை சரியில்லையென அந்த வீட்டில் சொல்வார்கள். ‘குழந்தைக்கு என்ன’ என்று கூட விசாரிக்காமல் அடுத்த குழந்தையை அழைக்கச் செல்வார். எந்திரத்தனமான அவள், எந்திரமல்ல என்று சொல்ல வருவதுதான் கதை. ஜெயகாந்தனின் ‘டிரெடில்’கதையையும் இங்கே சேர்த்துக் கொள்ள முடியும். புதுமைப்பித்தனின் ‘மனித யந்திரம்’ சிறுகதையும் இந்த வகைதான். இன்னும் யார் யாரெல்லாம் இந்த ரீதியில் எழுதி இருக்கிறார்களெனத் தெரியவில்லை.

    மனிதர்கள் ‘எந்திரன்களாகி’ வருவதைக் சுட்டிக்காட்டுவதும், அவர்களுக்குள் இருக்கிற மனிதர்களை காட்டுவதுமாக இந்தக் கதைகள் இருக்கின்றன. எந்திரன் படம் பார்க்கக் காட்டும் ஆர்வத்தில், கோடியில் ஒரு பங்காவது இந்தக்கதைகளைப் படிப்பதில் காட்டுவார்களானால் புண்ணியமாய்ப் போகும்

    காதலன்’ படத்துக்குப் பிறகு ஷங்கரின் படங்களை பார்க்க வேண்டியதில்லை எனத் தெரிந்து போனது. விக்ரமுக்காக ‘அந்நியன்’ பார்த்து வெறுப்பு மேலும் மண்டியது. அத்தோடு ‘ஷங்கர் படம் ஒரு போதும் விளங்காது’ என்று தீர்மானமானது. படம் பார்க்காவிட்டாலும், ‘சிவாஜி’படத்தை ஓடவைப்பதற்கு செய்த அழிச்சாட்டியங்களே அருவருப்பாய் இருந்தது. இப்போது எந்திரனுக்கு எல்லாம் எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது. தியேட்டர்களுக்கு வெளியே நடக்கும் பைத்தியக்காரத்தனங்களும், வெறிக்கூச்சல்களும் பெருங்கொடுமையாய் இருக்கின்றன. இவையனைத்தும் இடைவிடாத, தாறுமாறான விளம்பரங்களால் ரசிக மண்டைகளுக்குள் உற்பத்தி செய்யப்பட்டவை. அங்கிங்கெனாதபடிக்கு எங்கும் மிருகத்தனமாக ‘எந்திரன்’, ‘எந்திரன்’ என்னும் குரல்கள் வந்து முட்டி மோதுகின்றன. முடுக்கிவிடப்பட்ட எந்திரன்களாய் ரசிகக்கண்மனிகள் தியேட்டர்களை நோக்கி படையெடுக்கின்றனர். ஊடகம், அரசியல் இரண்டையும் கையில் வைத்துக்கொண்டு மக்களின் மனங்களை எப்படியெல்லாம் தகவமைக்க முடிகிறது!
    ‘எந்திரனுக்கு கூட்டிட்டுப் போங்க’ என்று சில நாட்களாய் மகன் சொல்லிப்பார்த்து அடங்கிவிட்டான். சன். டிவியில் வரும் விளம்பரத்தை ஏக்கத்தோடு பார்க்கிறான். கல்லூரி படிக்கும் மகளோ ‘எந்திரன் படம் சூப்பர் ஹிட்’ என்று வேண்டுமென்றே எஸ்.எம்.எஸ்களை ஃபார்வர்ட் செய்கிறாள். இன்றைய தலைமுறையும் இப்படி இருக்கின்றனரே என்று சங்கடப்பட்டேன். நேற்று தங்கை அம்பிகாவின் மகன் மனோதீப் போன் செய்தான். சென்னையில் பி.இ படித்துக்கொண்டு இருக்கும் ரஜினிகாந்த்தின் தீவீர ரசிகனான அவன் முதல்நாளே படம் பார்த்துவிட்டான். “நிறைய அனிமெஷன். புதுசா ஒண்ணுமில்ல. எதுக்கு இவ்வளவு செலவுன்னும் தெரியல. ரஜினிக்காகக்கூட பாக்கமுடியாது. வெளம்பரத்துலத்தான் ஓடும்” என்றான். அதுதான் தெரியுமே

    Reply
  151. எந்திரன் வெற்றி இன்னும் ஒபாமா தான் பாராட்டல மற்ற எல்லாரும்
    பதிவுலக நண்பர்கள் படையெடுத்து பார்த்து வந்து விமர்சனம் எழுதி னார்கள்
    சாரு சொன்னது போல கமல் கோபமாக இருக்க மாட்டார் ஏன் என்றால்
    கமலினால் தான் எந்திரன் ரஜினிக்கு போனது ,அதாவுது கமல் பண்ணாததால்
    தான் ரஜினி பண்ணியது
    ரோபோட் போல வந்தாலும் கூலிங் கிளாஸ் வேற கண்ணாடி
    அப்புறம் குரல் ரோபோட் குரல் கிடையாது ,பரட்டை தலை
    ராணுவ வீரனாக ரஜினி வந்தாலும் பரட்டை தலை தான்

    இந்த வெற்றி முழுவதும் கமலுக்கு தான் சேரனும்

    ஏன் என்றால் படையப்பா வெள்ளி விழாவில் கமல் கலந்து கொண்டது
    அவ்வளவ்வு ரஜினி ரசிகர்கள் மத்தியில்
    அப்புறம் ரஜினி கலந்து கொண்ட கமல் ஐம்பது நிகழ்ச்சி

    ரஜினி அவர்கள் கதை இல்லை என்று சில காலம் ஹிந்தி படங்களில் நடிக்க
    தொடங்கினார் நாட்டமை பெத்த ராயுடு ரீமேக் அப்புறம் அமீர் கான் கூட
    அதன்க் கி அதன்க்

    நண்பருக்கு கமல் பண்ணிய அட்வைஸ் ரஜினி நீங்க சின்ன சின்ன ரோல் பண்ணாதீங்க படம் பூரா என்னும் அட்வைஸ்
    சந்திரமுகியில் ரஜினி பாத்திரம் படம் முழுக்க வருவது போல பண்ணினார்கள்
    இப்போ ரோபோட்ல படம் முழுக்க ரஜினி அந்த வில்லன் வெள்ளைக்கார நாசகார
    ரோபோட் கூட ரஜினி தான்
    ஆகவே நண்பர்களே எந்திரன் வெற்றி கமல் அவர்களையே சாரும்
    வேண்டும் என்றால் கமல் நண்பர்கள் சிலரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்

    Reply
  152. Rajnikanth can do anything!

    ரஜினி பண்ணினால் எல்லாம் சரி

    கமல் பண்ணினால் ஆயிரம் குத்தம்
    குறை காபியாடிசான் என்று

    எந்திரன் வரும் முன்னரே முன்னோட்டமாக வந்த இந்த மெயில்
    என்திரன் வெற்றிக்கு உதவியது என்று சொன்னால் அது மிகை இல்லை

    1. Rajinikanth killed the Dead Sea.
    2. When Rajinikanth does push-ups, he isn’t lifting himself up. …He is pushing the earth down.
    3. There is no such thing as evolution, it’s just a list of creatures that Rajinikanth allowed to live.
    4. Rajinikanth gave Mona Lisa that smile.
    5 .Rajnikanth can divide by zero.
    6. Rajinikanth can judge a book by it’s cover.
    7. Rajinikanth can drown a fish.
    8. Rajinikanth can delete the Recycle Bin.
    9. Rajinikanth once got into a fight with a VCR player. Now it plays DVDs.
    10. Rajinikanth can slam a revolving door.
    11. Rajinikanth once kicked a horse in the chin. Its descendants are today called giraffes.
    12. Rajinikanth once ordered a plate of idli in McDonald’s, and got it.
    13. Rajinikanth can win at Solitaire with only 18 cards.
    14. The Bermuda Triangle used to be the Bermuda Square, until Rajinikanth kicked one of the corners off.
    15. Rajinikanth can build a snowman out of rain.
    16. Rajinikanth can strangle you with a cordless phone.
    17. Rajinikanth can make onions cry.
    18. Rajinikanth destroyed the periodic table, because he only recognizes the element of surprise.
    19. Rajinikanth can watch the show 60 minutes in 20 minutes.
    20. Rajinikanth has counted to infinity, twice.

    Reply
  153. 21. Rajinikanth will attain separate statehood in 2013.
    22. Rajinikanth did in fact, build Rome in a day.
    23. Rajinikanth once got into a knife-fight. The knife lost.
    24. Rajinikanth can play the violin with a piano.
    25. Rajinikanth never wet his bed as a child. The bed wet itself in fear.
    26. The only man who ever outsmarted Rajinikanth was Stephen Hawking, and he got what he deserved.
    27. Rajinikanth can talk about Fight Club.
    28. Rajinikanth doesn’t breathe. Air hides in his lungs for protection.
    29. There are no weapons of mass destruction in Iraq. Rajinikanth lives in Chennai.
    30. Rajinikanth kills Harry Potter in the eighth book.
    31. Rajinikanth does not own a stove, oven, or microwave, because revenge is a dish best served cold.
    32. Rajinikanth has already been to Mars, that’s why there are no signs of life there.
    33. Rajinikanth doesn’t move at the speed of light. Light moves at the speed of Rajinikanth.
    34. Rajinikanth knows Victoria’s secret.
    35. Water boils faster when Rajinikanth stares at it.
    36. Rajinikanth can throw the Thackerays out of Mumbai.
    37. Rajinikanth kills two stones with one bird.
    38. Google won’t find Rajinikanth because you don’t find Rajinikanth; Rajinikanth finds you.
    39. Rajinikanth gave the Joker those scars.
    40. Rajinikanth leaves messages before the beep.
    41. Rajinikanth once warned a young girl to be good “or else”. The result? Mother Teresa.
    42. Rajinikant electrocuted Iron Man.
    43. Rajinikanth killed Spiderman using Baygon Anti Bug Spray.
    44. Rajinikanth can make PCs better than the Mac.
    45. Rajinikanth puts the ‘laughter’ in manslaughter.
    46. Rajinikanth goes to court and sentences the judge.
    47. Rajinikanth can handle the truth.
    48. Rajinikanth can speak Braille.
    49. Rajinikanth can dodge Chuck Norris’ roundhouse kicks.
    50. Rajinikanth can teach an old dog new tricks.
    51. Rajinikanth calls Voldemort by his name.

    Reply
  154. 52. Who do you think taught Voldemort Parseltongue? Rajinikanth did.
    53. Chuck Norris once met Rajinikanth. The result – He was reduced to a joke on the internet.
    54. Rajinikanth got small pox when he was a kid. As a result small pox is now eradicated.
    55. Rajinikanth’s calendar goes straight from March 31st to April 2nd, no one fools Rajanikanth.
    56. Rajinikanth grinds his coffee with his teeth and boils the water with his own rage.
    57. The last time Rajinikanth killed someone, he slapped himself to do it. The other guy just disintegrated. Resonance.
    58. Rajinikanth once had a heart attack. His heart lost.
    59. Rajinikant is so fast, he can run around the world and punch himself in the back of the head.
    60. Rajinikanth can run at speed of light around a tree and screw himself.
    61.Rajinikant can lick his elbows.
    62. Rajinikant once ate an entire bottle of sleeping pills. They made him blink.
    63. Rajinikant does not get frostbite. Rajnikant bites frost.
    64. Rajinikant doesn’t wear a watch. He decides what time it is.
    65. Rajinikant got his drivers license at the age of 16 seconds.
    66. When you say “no one is perfect”, Rajinikant takes this as a personal insult.
    67. In an average living room there are 1,242 objects Rajinikanth could use to kill you, including the room itself.
    68. Words like awesomeness, brilliance, legendary etc. were added to the dictionary in the year 1949. That was the year Rajinikanth was born.
    69. The statement “nobody can cheat death”, is a personal insult to Rajnikanth. Rajni cheats and fools death everyday.
    70. When Rajnikanth is asked to kill some one he doesn’t know, he shoots the bullet and directs it the day he finds out.

    Reply
  155. 71. Rajinikant can give pain to Painkillers and headache to Anacin.
    72. Rajinikanth knows what women really want.
    73. Time and tide wait for Rajinikanth.
    74. Rajinikanth sneezed only once in his entire life, that’s when the tsunami occurred in the Indian ocean.
    75. As a child when Rajinikanth had dyslexia, he simply re-scripted the alphabet.
    76. Rajinikanth collects Honey from his private Moon – HoneyMoon.
    77. Rajinikanth can answer a missed call.
    78. Rajinikanth doesn’t need a visa to travel abroad, he just jumps from the tallest building in Chennai and holds himself in the air while the earth rotates.
    79. Rajinikanth’s brain works faster than Chacha Chaudhury’s.
    80. Rajinikanth doesn’t shower. He only takes blood baths.
    81. To be or not to be? That is the question. The answer? Rajinikanth.
    82. The quickest way to a man’s heart is with Rajinikanth’s fist.
    83. Where there is a will, there is a way. Where there is Rajinikanth, there is no other way.
    84. Rajinikanth’s every step creates a mini whirlwind. Hurricane Katrina was the result of a morning jog.
    85. Rajinikant doesn’t bowl strikes, he just knocks down one pin and the other nine faint out of fear.
    86. Archaeologists unearthed an old English dictionary dating back to the year 1236. It defined “victim” as “one who has encountered Rajinikant”.
    87. There is no such thing as global warming. Rajinikanth was feeling cold, so brought the sun closer to heat the earth up.
    88. Once a cobra bit Rajinikanth’ leg. After five days of excruciating pain, the cobra died.
    89. Rajinikanth is a champion in the game “Hide n’ seek”, as no one can hide from Rajinikanth.
    90. Rajinikant proves Newton wrong all the time. Every time he performs an action, he simply eliminates anything and everything that can provide the reaction.
    91. Rajinikant is a weapon created by God to use on doomsday to end the world.
    92. Aliens do indeed exist. They just know better than to visit a planet that Rajinikanth is on.
    93. We live in an expanding universe. All of it is trying to get away from Rajinikanth.
    94. If at first you don’t succeed, you’re not Rajinikanth.
    95. Rajinikanth’s first job was as a bus conductor. There were no survivors.
    96. Rajinikanth does not style his hair. It lays perfectly in place out of sheer terror.
    97. When Rajinikanth plays Monopoly, it affects the actual world economy.
    98. Rajinikanth is the only man to ever defeat a brick wall in a game of tennis.
    99. Rajinikanth’s house has no doors, only walls that he walks through.
    100. Rajnikanth doesn’t answer nature’s call nature answers Rajnikanth’s call.
    101. Rajnikanth can double click 2 icons at the same time.

    Reply
  156. thaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaank uuuuuuuuuuuuuuuuuuuu
    கருட புராணம் மற்றும் ரோபோ ராமாயணம் இதிகாச மோசடி இப்போ சுஜாதா இல்லை அடுத்த படம் சங்கர் எப்படி செய்வார்,பார்க்கலாம் ,இறக்கம் இல்ல மனிதன் அரக்கன் ,அந்த அரக்கனை உருvவாகிய வசிகீரனும் அரக்கன் தான் மனிதன் இல்லை ,வசீகரன் தன காதலியை எந்திரனுக்கு விட்டு கொடுத்து இருக்கலாம் அல்லது இரும்பில் இதையம் முளைத்த எந்திரன் தன்னை படைத்த கடவுளுக்காக விட்டு கொடுத்து இருக்கலாம்

    வசீகரன் இரக்கம் இல்லாதவன் என்பதற்கு சாட்சி

    கிளைமேக்ஸ் கோர்ட் சீன் – ஒரு 1000 போலீசாரைக் கொன்ற இயந்திரன், தான் ஒரு இயந்திரம் அதனால் தன்னை தண்டிக்க முடியாது என்று வாதாடும் போது, சயின்டிஸ்ட் ரஜினி புன்முறுவல் செய்கிறார். சமூக நலன் மிகுந்த ஒரு சயின்டிஸ்ட் 1000 மக்களைக் கொன்ற வருத்தம் இல்லாமல் எப்படி அந்தமாதிரி ஒரு ரியாக்‌ஷன் தரமுடியும் ?. எடிட்டர் எப்படி விட்டார் ?.

    எல்லா கலைகளும் தெரிந்தவன் எல்லா பாஷைகளும் தெரிந்தவன்
    இந்த எந்திரன் என்ற வெறும் ஆணவம் மட்டும் மிஞ்சியது
    ஒரு தியாகம் இல்லை விட்டு கொடுத்தல் இல்லை இரக்கம் இல்லை
    இதயம் முளைத்ததாக கட்டு கதை சிந்திக்க தெரிந்ததாக கட்டு கதை

    மனிதனாக அடிபடையில் தேவை இரக்கம் அது கூட வசீகரன் சொல்லி தரவில்லை தெரிந்தால் தானே சொல்லி தருவார் , இயந்திர அரக்கனை பார்க்க எல்லா மனித அரக்கர்களும் படை எடுப்பு வெள்ளி திரை நோக்கி வேறு என்னத்தை சொல்ல
    வசீகரன் ஆராய்ச்சியே மூழ்கி இருபதால் எந்திரன் கள்ள காதல் வைத்து
    இருக்கலாம் சனா கூட ,இந்த மெகா சீரியல் உலகத்தில் மேலும் பல லட்சம் கோடிகள்
    சம்பாரித்து கொடுத்து இருப்பான் இந்த எந்திரன்
    அன்பே சிவம் rocks

    எந்திரன் sucks

    sorry compassion is dead
    passion rocks
    all passionate arrakargal endorse enthiran in big way

    யாருமே கமலை நெருங்க முடியாது அன்பே சிவம் என்று சொன்னதை சுஜாதா ஆகட்டும் சங்கர் ஆகட்டும் ரஜினி ஆகட்டும்
    வெறும் மசாலா மாமனார்கள்
    அரக்கனை காட்டி கல்லா கட்டுபவர்கள்

    ஒரு நல்ல மனிதன் மற்றும் எந்திர உறவை சித்தரிக்காமல் வெறும் அரக்க குணத்தை
    மட்டும் காட்டி மக்களை முட்டாளாக்கி பல கோடிகள் சம்பாரித்து தான் மிச்சம்

    Reply
  157. இயக்குனர் ராஜா ரீமேக் rights வாங்கி பண்ணும்போதே அவர கிண்டல் பண்றாங்க. இங்க எந்த rights ம் வாங்காம எண்ணம், எழுத்து எல்லாம் நான்தான் போட்டுகிட்டதினால் வந்தது இந்த பகுதி.
    //என்னுடைய வாதம் ஒன்றே ஒன்று தான். இவ்வளவு படங்களை ஈயடிச்சாங்காப்பி அடித்துக் கொண்டிருக்கும் கமல் ஹாசன் என்ற நடிகர், உங்களை ஏமாற்றிக்கொண்டிருந்தார் என்பதே தெரியாமல், இப்பொழுது தெரிந்த பின்னும், முரட்டுத்தனமாக (எந்த சாரமான காரணமும் இல்லாமல்) வக்காலத்து வாங்கும் மக்களைப் பார்க்கையில், வெட்டுவதற்கு அழைத்துச் செல்லப்படும் பலியாடுகளைப் பற்றிய சிந்தனை ஏனோ என் மனதில் எழுகிறது.//
    இப்ப தெரியுதா நம்ம அரசியல் வாதிகள் எப்படி பொழப்ப நடத்துறாங்கன்னு

    Reply
    • Rajesh Da Scorp

      I just read it boss. His arguments are too weak. He has never mentioned anything about Scene by scene copies Kamal had done. I do not agree with his post at all 🙂 .

      Reply
      • sankaran kumaran

        Some of the scenes in Quentin Tarantino’s Kill Bill movie are inspired by Kamal Hasaan’s Aalavandhan tamil movie’s animated violence sequences. Do you say Quentin Tarantino is a bad screen writer?

        Reply
  158. Fareez

    Thank you for your post and I appreciate your honesty. This will teach a lesson to all who cheat the people under the guise of art and earn millions for their own benefit. Kamalahasan is not a good actor at all and I never liked him. I knew from the beginning that he was stealing the other people’s ideas. He is not ‘Olaga Nayakan’ but an ‘Ootha Naai Makan’.

    Reply

Join the conversation